என் மலர்
குழந்தை பராமரிப்பு
நாம் அன்றாடம் பயன்படுத்தும் சுண்ணாம்பு, அறைகளைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் அமிலங்களே குழந்தைகளின் பார்வையைப் பறித்துவிடுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
`குழந்தைகளின் கண் பார்வையைப் பாதிப்பதில், ரசாயனப் பொருள்களுக்கு அதிக பங்கு இருக்கிறது' என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். நாம் அன்றாடம் பயன்படுத்தும் சுண்ணாம்பு, அறைகளைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் அமிலங்களே குழந்தைகளின் பார்வையைப் பறித்துவிடுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். சிறு கவனமின்மை கூட குழந்தைகளின் பார்வைத்திறனை பறித்துவிடும் ஆபத்து இருக்கிறது என்றும் எச்சரிக்கிறார்கள் அவர்கள்.
``ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தாம் ரசாயனங்களால் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவர்கள்மீது பெற்றோர் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் தனிமையில் இருக்கும் நேரங்களில்தாம் அதிக பாதிப்பு ஏற்படும். உதாரணமாக, விளையாடும்போது கண்களில் குத்திக்கொள்வது, அதிகமாகக் கசக்குவது, தூசு இருக்கும் பொருளைத் தொட்டுவிட்டு அப்படியே கண்களைத் தொடுவது, ஏதேனும் திரவத்தை கண்களில் ஊற்றிக்கொள்வது, குச்சிகளைக் கண்களுக்குள் விட்டு விழித்திரையில் குத்திக்கொள்வது போன்ற செயல்களில் தனிமையான நேரங்களில்தாம் குழந்தைகள் செய்வார்கள்.
சுண்ணாம்பு, கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்திருக்கும் அமிலங்கள் அல்லது கிளீனர்கள், ப்ளீச்சிங் பவுடர், குளிர்பானங்கள் போன்றவற்றை எப்போதும் குழந்தைகளின் கைக்கெட்டாதவாறு வைக்கவேண்டும். மிகவும் ஆபத்தான பொருள் சுண்ணாம்புதான். காரணம், அதிலுள்ள ஆசிட் மற்றும் அல்கலி (Alkali) என்ற ரசாயனப்பொருள்.
கண்களின் விழித்திரையில் ஆசிட்டோ, அல்கலியோ படும்பட்சத்தில், கருவிழிகளுக்குள் அவை ஊடுருவத் தொடங்கிவிடும். உடனடியாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் ரசாயனங்கள் கண்களுக்குள் தங்கி அழற்சிப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். கண்களில் வறட்சி ஏற்படுவது, சிவந்து போவது, அரிப்பு ஏற்படுவது போன்றவை அழற்சிக்கான அறிகுறிகளாகும். இதனால் கருவிழிகள் கடுமையாகப் பாதிக்கப்படும்.
இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமலிருக்க, கண்களில் ரசாயனம் பட்டவுடன் தொடர்ச்சியாக அரைமணி நேரம் கண்களை நன்றாகக் கழுவவேண்டும். முதல் 30 நிமிடங்களில் என்ன செய்கிறோம் என்பதுதான் பாதிப்பின் தன்மையைத் தீர்மானிக்கும். எனவே, கப் நிறையத் தண்ணீர் எடுத்து அதில் கண்களைத் திறந்தபடி வைத்து சுத்தம் செய்ய வேண்டும். குளிர்ந்த நீராக இருந்தால், நல்லது. இமையை முடிந்தவரை திறந்து கண்களுக்குள் நீர் செல்லும்படிச் செய்யவேண்டும். கண்களுக்குள் செல்லும் நீர், சுண்ணாம்புப் பவுடரை கரைத்து வெளியே தள்ளிவிடும். சுண்ணாம்பிலுள்ள பெரிய பகுதிகள் இமைகளுக்கு அடியில் தங்கிவிடும் என்பதால், அரைமணி நேரம் கண்களை சுத்தப்படுத்திய பிறகு மருத்துவரிடம் செல்லவேண்டும்.
கண் பார்வையில் குறைபாடுகள் எதுவும் இருந்தால், ஆறு மாதத்துக்கு ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில், வருடத்துக்கு ஒருமுறை பரிசோதிக்க வேண்டும்.
கண்களில் படும் ரசாயனத்தை (Chemical Burns) கவனிக்காமல் விட்டுவிடக் கூடாது. முதல் நிலையிலேயே சரிசெய்யாவிட்டால், வாழ்நாள் பாதிப்புகள்கூட ஏற்படலாம்.
குழந்தைகளை, பெற்றோர் மின்திரைகளுக்கு அடிமையாக்கிவிட வேண்டாம். இது அவர்களுக்குப் பார்வை தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
``ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தாம் ரசாயனங்களால் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவர்கள்மீது பெற்றோர் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் தனிமையில் இருக்கும் நேரங்களில்தாம் அதிக பாதிப்பு ஏற்படும். உதாரணமாக, விளையாடும்போது கண்களில் குத்திக்கொள்வது, அதிகமாகக் கசக்குவது, தூசு இருக்கும் பொருளைத் தொட்டுவிட்டு அப்படியே கண்களைத் தொடுவது, ஏதேனும் திரவத்தை கண்களில் ஊற்றிக்கொள்வது, குச்சிகளைக் கண்களுக்குள் விட்டு விழித்திரையில் குத்திக்கொள்வது போன்ற செயல்களில் தனிமையான நேரங்களில்தாம் குழந்தைகள் செய்வார்கள்.
சுண்ணாம்பு, கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்திருக்கும் அமிலங்கள் அல்லது கிளீனர்கள், ப்ளீச்சிங் பவுடர், குளிர்பானங்கள் போன்றவற்றை எப்போதும் குழந்தைகளின் கைக்கெட்டாதவாறு வைக்கவேண்டும். மிகவும் ஆபத்தான பொருள் சுண்ணாம்புதான். காரணம், அதிலுள்ள ஆசிட் மற்றும் அல்கலி (Alkali) என்ற ரசாயனப்பொருள்.
கண்களின் விழித்திரையில் ஆசிட்டோ, அல்கலியோ படும்பட்சத்தில், கருவிழிகளுக்குள் அவை ஊடுருவத் தொடங்கிவிடும். உடனடியாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் ரசாயனங்கள் கண்களுக்குள் தங்கி அழற்சிப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். கண்களில் வறட்சி ஏற்படுவது, சிவந்து போவது, அரிப்பு ஏற்படுவது போன்றவை அழற்சிக்கான அறிகுறிகளாகும். இதனால் கருவிழிகள் கடுமையாகப் பாதிக்கப்படும்.
இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமலிருக்க, கண்களில் ரசாயனம் பட்டவுடன் தொடர்ச்சியாக அரைமணி நேரம் கண்களை நன்றாகக் கழுவவேண்டும். முதல் 30 நிமிடங்களில் என்ன செய்கிறோம் என்பதுதான் பாதிப்பின் தன்மையைத் தீர்மானிக்கும். எனவே, கப் நிறையத் தண்ணீர் எடுத்து அதில் கண்களைத் திறந்தபடி வைத்து சுத்தம் செய்ய வேண்டும். குளிர்ந்த நீராக இருந்தால், நல்லது. இமையை முடிந்தவரை திறந்து கண்களுக்குள் நீர் செல்லும்படிச் செய்யவேண்டும். கண்களுக்குள் செல்லும் நீர், சுண்ணாம்புப் பவுடரை கரைத்து வெளியே தள்ளிவிடும். சுண்ணாம்பிலுள்ள பெரிய பகுதிகள் இமைகளுக்கு அடியில் தங்கிவிடும் என்பதால், அரைமணி நேரம் கண்களை சுத்தப்படுத்திய பிறகு மருத்துவரிடம் செல்லவேண்டும்.
கண் பார்வையில் குறைபாடுகள் எதுவும் இருந்தால், ஆறு மாதத்துக்கு ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில், வருடத்துக்கு ஒருமுறை பரிசோதிக்க வேண்டும்.
கண்களில் படும் ரசாயனத்தை (Chemical Burns) கவனிக்காமல் விட்டுவிடக் கூடாது. முதல் நிலையிலேயே சரிசெய்யாவிட்டால், வாழ்நாள் பாதிப்புகள்கூட ஏற்படலாம்.
குழந்தைகளை, பெற்றோர் மின்திரைகளுக்கு அடிமையாக்கிவிட வேண்டாம். இது அவர்களுக்குப் பார்வை தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
பச்சைப்பயறு வைத்து செய்யும் பெசரட்டு சத்து நிறைந்தது. இந்த சந்து நிறைந்த இந்த பெசரட்டுடன் மசாலா சேர்த்து செய்து எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
பச்சைப் பயறு - 1 கப்
பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)\
வெங்காயம் - 1 (விரும்பினால்)
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம்
தாளிக்க:
எண்ணெய், சீரகம்.
காய்கறி :
வெங்காயம்,
கேரட்,
குடைமிளகாய்,
கறிவேப்பிலை,
கொத்தமல்லித் தழை.

செய்முறை :
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சைப் பயறு, பச்சரிசியை குறைந்தது 8 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
இரண்டும் நன்றாக ஊறியதும் அதனுடன் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து நன்கு நைசாக தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு டீஸ்பூன் எண்ணெயில் சீரகம் தாளித்துக் கலந்துகொள்ளவும்.
மீண்டும் ஒரு டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெயைச் சூடாக்கி, அதில் மிகப் பொடியாக அரிந்த வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், துருவிய கேரட், கறிவேப்பிலை சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வதக்கி, நறுக்கிய கொத்தமல்லித் தழை கலந்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கி, நிதானமான சூட்டில் ஒரு கரண்டி மாவை நடுவில் விட்டு, வழக்கமாக தோசைவார்ப்பது போல் வட்டமாக இழுத்து மிக மெலிதாகப் பரத்தவும்.
மேலே காய்கறிக் கலவையை சிறிது பரவலாகத் தூவவும், தோசைத் திருப்பியால் லேசாக ஒட்டிக்கொள்ளுமாறு அழுத்தவும்.
சுற்றி எண்ணெய் விட்டு முறுகலாக வேகவைக்கவும்.
திருப்பிப் போட்டு, மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
சூப்பரான மசாலா பெசரட்டு ரெடி.
பச்சைப் பயறு - 1 கப்
பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)\
வெங்காயம் - 1 (விரும்பினால்)
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம்
தாளிக்க:
எண்ணெய், சீரகம்.
காய்கறி :
வெங்காயம்,
கேரட்,
குடைமிளகாய்,
கறிவேப்பிலை,
கொத்தமல்லித் தழை.

செய்முறை :
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சைப் பயறு, பச்சரிசியை குறைந்தது 8 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
இரண்டும் நன்றாக ஊறியதும் அதனுடன் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து நன்கு நைசாக தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு டீஸ்பூன் எண்ணெயில் சீரகம் தாளித்துக் கலந்துகொள்ளவும்.
மீண்டும் ஒரு டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெயைச் சூடாக்கி, அதில் மிகப் பொடியாக அரிந்த வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், துருவிய கேரட், கறிவேப்பிலை சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வதக்கி, நறுக்கிய கொத்தமல்லித் தழை கலந்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கி, நிதானமான சூட்டில் ஒரு கரண்டி மாவை நடுவில் விட்டு, வழக்கமாக தோசைவார்ப்பது போல் வட்டமாக இழுத்து மிக மெலிதாகப் பரத்தவும்.
மேலே காய்கறிக் கலவையை சிறிது பரவலாகத் தூவவும், தோசைத் திருப்பியால் லேசாக ஒட்டிக்கொள்ளுமாறு அழுத்தவும்.
சுற்றி எண்ணெய் விட்டு முறுகலாக வேகவைக்கவும்.
திருப்பிப் போட்டு, மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
சூப்பரான மசாலா பெசரட்டு ரெடி.
அடுத்தடுத்த தோசை வார்ப்பதற்கு முன் கல்லில் சிறிது நீர் தெளித்துக் கொள்ளவும். அப்பொழுதுதான் தோசை சிரமமில்லாமல் மெலிதாக இழுத்து வார்க்க முடியும். காய்கறிக் கலவை மேலே தூவி தயாரிக்க சிரமப்படும் புதிதானவர்கள், மாவுக் கலவையிலேயே இந்த வதக்கிய கலவையைக் கலந்து செய்யலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெரும்பாலான பெற்றோர்கள் தாங்கள் வாங்கிக் கொடுக்கும் நொறுக்குத்தீனிகளால் குழந்தைக்கு புற்றுநோய் ஏற்படும் என்பதை அறியாமலேயே வாங்கிக்கொடுக்கின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு உணவு உண்ணும் ஆர்வம் குறைந்து, நொறுக்குத்தீனிகளை எந்நேரம் பார்த்தாலும் அரைத்துக் கொண்டே இருக்கும் பழக்கம் வந்துவிட்டது; பெற்றோர்களும் குழந்தை உணவை தான் சாப்பிடுவதில்லை இதையாவது சாப்பிடட்டும் என்று குழந்தையின் தேவைக்கு அதிகமாக நொறுக்குத்தீனிகளை வாங்கி குவித்து விடுகின்றனர்..! பெற்றோர் செயலில் மனம் மகிழ்ந்த குழந்தைகளும், அவற்றை தின்று வயிற்றை நிரப்பிக்கொண்டே, கூடவே உடல் எடையையும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றனர்.
ஆனால், பெரும்பாலான பெற்றோர்கள் தாங்கள் வாங்கிக் கொடுக்கும் நொறுக்குத்தீனிகளால் குழந்தைக்கு புற்றுநோய் ஏற்படும் என்பதை அறியாமலேயே வாங்கிக்கொடுக்கின்றனர்.! அப்படி குழந்தைகளுக்கு புற்றுநோய் அளிக்கும் நொறுக்குத்தீனிகள் எவை என்று பார்க்கலாம்..!

* உருளைக்கிழங்கு சிப்ஸ்களை அதிக வெப்பநிலையில் பொரித்து எடுப்பதால், அவற்றில் காரசினோஜெனிக் எனும் புற்றுநோய் உருவாக்கும் காரணி தோன்றிவிடுகிறது; இதை அக்ரிலாமைட் என்றும் அழைப்பர். மேலும் இதில் அதிக உப்பு சேர்ப்பதும் குழந்தைகளின் உடல் நலத்தை மிகவும் பாதிக்கும்..!
* தற்போதுள்ள வெளிநாட்டு குளிர்பானங்கள் குழந்தைகளின் உடல் நலத்தைக் குதறும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டவையே! இவற்றைப் பருகுவதால், குழந்தைகளுக்கு pancreatic, colon and rectal cancer போன்ற புரியாத பல நோய்களும், பற்சிதைவு, குண்டாதல், சர்க்கரை நோய் போன்றவையும் ஏற்படுகின்றன. இந்த மாதிரியான பானங்களில் அத்தனித்த சுவையை கொண்டு வருவதற்காக சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள், குழந்தைகளுக்கு இருதய நோய், புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
* பிரட்டுகளை தயாரிக்க சேர்க்கப்படும் வேதி ஈஸ்டுகள், செயற்கை சர்க்கரை போன்றவை குழந்தைகளில் புற்றுநோய் மற்றும் அவர்களின் உடற்செயலிய மாற்றத்தைக் ஏற்படுத்தி, அவர்களை குண்டாக்கி குழந்தைகளின் உடலை நிலைகுலைய செய்கின்றன..
* குழந்தைகளுக்கு நலம் பயக்கும் என பெற்றோர்கள் அளிக்கும் செயற்கை தானிய உணவுகள், குழந்தைகளின் உடல் நலத்தை முற்றிலுமாக கெடுத்துவிடுகின்றன. இந்த தானிய உணவுகளில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரை, நிறங்கள் மேலும் பல வேதிப்பொருட்கள் போன்றவை குழந்தைகளுக்கு அதிக தீங்கினை விளைவிக்கின்றன.
ஆனால், பெரும்பாலான பெற்றோர்கள் தாங்கள் வாங்கிக் கொடுக்கும் நொறுக்குத்தீனிகளால் குழந்தைக்கு புற்றுநோய் ஏற்படும் என்பதை அறியாமலேயே வாங்கிக்கொடுக்கின்றனர்.! அப்படி குழந்தைகளுக்கு புற்றுநோய் அளிக்கும் நொறுக்குத்தீனிகள் எவை என்று பார்க்கலாம்..!
* PFOA (perfluorooctanoic acid), diacetyl and propyl gallate போன்ற வேதிப்பொருட்கள் இன்றைய எண்ணெயில்லாத பாப்கார்னை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. இதில் PFOA எனும் அமிலம் நச்சுத்தன்மை வாய்ந்தது; ஆனால் இதையெல்லாம் அறியாமல் பாப்கார்ன் குழந்தைகளின் உடலுக்கு நல்லது என்று பெற்றோர் வாங்கிக் கொடுக்கின்றனர்.

* உருளைக்கிழங்கு சிப்ஸ்களை அதிக வெப்பநிலையில் பொரித்து எடுப்பதால், அவற்றில் காரசினோஜெனிக் எனும் புற்றுநோய் உருவாக்கும் காரணி தோன்றிவிடுகிறது; இதை அக்ரிலாமைட் என்றும் அழைப்பர். மேலும் இதில் அதிக உப்பு சேர்ப்பதும் குழந்தைகளின் உடல் நலத்தை மிகவும் பாதிக்கும்..!
* தற்போதுள்ள வெளிநாட்டு குளிர்பானங்கள் குழந்தைகளின் உடல் நலத்தைக் குதறும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டவையே! இவற்றைப் பருகுவதால், குழந்தைகளுக்கு pancreatic, colon and rectal cancer போன்ற புரியாத பல நோய்களும், பற்சிதைவு, குண்டாதல், சர்க்கரை நோய் போன்றவையும் ஏற்படுகின்றன. இந்த மாதிரியான பானங்களில் அத்தனித்த சுவையை கொண்டு வருவதற்காக சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள், குழந்தைகளுக்கு இருதய நோய், புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
* பிரட்டுகளை தயாரிக்க சேர்க்கப்படும் வேதி ஈஸ்டுகள், செயற்கை சர்க்கரை போன்றவை குழந்தைகளில் புற்றுநோய் மற்றும் அவர்களின் உடற்செயலிய மாற்றத்தைக் ஏற்படுத்தி, அவர்களை குண்டாக்கி குழந்தைகளின் உடலை நிலைகுலைய செய்கின்றன..
* குழந்தைகளுக்கு நலம் பயக்கும் என பெற்றோர்கள் அளிக்கும் செயற்கை தானிய உணவுகள், குழந்தைகளின் உடல் நலத்தை முற்றிலுமாக கெடுத்துவிடுகின்றன. இந்த தானிய உணவுகளில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரை, நிறங்கள் மேலும் பல வேதிப்பொருட்கள் போன்றவை குழந்தைகளுக்கு அதிக தீங்கினை விளைவிக்கின்றன.
குழந்தைகள் மீது பெற்றோர் திணிக்கும் இத்தகைய கட்டாயக்கல்வி முறை எந்த வகையிலும் குழந்தைகளை சிந்தனையாளர்களாகவோ அல்லது சாதனையாளர்களாகவோ ஆக்காது என்பது வரலாறு உணர்த்தும் பாடம்.
இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது பெரிய ஆளாக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. குழந்தை பிறந்ததும், கலெக்டர், டாக்டர், என்ஜினீயர், ஆசிரியர், வக்கீல் என்று தாமே குழந்தை என்னவாக வேண்டும் என்பதை தீர்மானிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.
இன்னும் சிலர், ‘நான் டாக்டராக ஆசைப்பட்டு முடியாமல் போய்விட்டது. எனவே என் மகனை எப்படியாவது டாக்டர் ஆக்கியே தீருவேன்’ என்று சபதம் ஏற்கிறார்கள். உண்மையிலேயே அந்த குழந்தைக்குள் ஒரு நல்லாசிரியர் உறங்கிக்கொண்டு இருக்கலாம். அதற்கு முரணாக நீங்கள் அவர்களை டாக்டராக்க நினைப்பது தவறு. அதாவது, பிள்ளைகள் என்னவாக வேண்டும் என்பதை பெற்றோர் தீர்மானம் செய்வது சரியான போக்கு அல்ல. இது மேம்பட்ட சமூகம் மலர்வதற்கு தடையாகிப்போகும்.
குழந்தையின் எதிர்காலத்தை சிறப்பானதாக்க விரும்பி தங்களின் ஆசையை திணிக்கும் பெற்றோருக்கு அதிக ஆர்வம் இருக்கிறதே தவிர தங்களின் விருப்பத்தை குழந்தைகள் உள்வாங்குகிறார்களா? அதில் அவர்களுக்கும் விருப்பம் இருக்கிறதா? என்பதையெல்லாம் சிந்திக்கும் எண்ணம் இல்லை. குழந்தை என்னவாகப் போகிறது என்பதை அந்த குழந்தையையே தீர்மானிக்க விட வேண்டும்.
கண்டிப்பு கலந்த வளர்ப்பு முறை இன்றைய குழந்தைக்கு அவசியம்தான். ஆனால் எந்த அளவுக்கு குழந்தைக்கு சுதந்திரம் கொடுக்கிறோம் என்பதையும் அளவிட வேண்டும். ஒரு குழந்தை வெற்றிப்பாதையில் பயணிக்க அகச்சுதந்திரம் அவசியம் என்பதை பெற்றோர் மறந்துவிடக்கூடாது.
பிள்ளைக்கு வரலாற்றுப் பாடம் பிடிக்கிறது. கணக்குப் பாடத்தில் ஆர்வம் இல்லை என்றால், பெற்றோர் அந்த பிள்ளையை தொழில்நுட்ப நிபுணராக ஆக்க விரும்புவது அர்த்தமற்றது. இன்னும் சில பெற்றோர், தங்கள் பணிபுரியும் துறையிலேயே குழந்தையை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, அந்த பாதையில் குழந்தையை பயணிக்கவைப்பதும் அதிகமாகி வருகிறது. இதுவும் மடமையே.
குழந்தைகள் மீது பெற்றோர் திணிக்கும் இத்தகைய கட்டாயக்கல்வி முறை எந்த வகையிலும் குழந்தைகளை சிந்தனையாளர்களாகவோ அல்லது சாதனையாளர்களாகவோ ஆக்காது என்பது வரலாறு உணர்த்தும் பாடம்.
நம் முகக்கண்ணாடியை தன் பிள்ளைகள் முகத்தில் மாட்டி விட்டால் பார்வை சரியாகிவிடுமா? அது மேலும் சிக்கல்களை ஏற்படுத்தி கண் பார்வையை சின்னாபின்னமாக்காதா? இதை சிந்திக்க வேண்டாமா?

பள்ளிப் பருவ மாணவனிடத்தில் இலக்கை நிர்ணயிக்கும் திறனோ, அதனைப்பற்றிய திட்டமிடலுக்கான பயிற்சியோ இல்லாதபோது, எப்படி முழு சுதந்திரத்தையும் கொடுப்பது? என பெற்றோர் நினைக்கலாம். அப்படி இருக்கும் சூழலில் பெற்றோர்கள் ஒரு சில வழிமுறைகளைக் கையாளலாம். தங்கள் பிள்ளைகள் எதைக்கற்றுக்கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகிறார்களோ அதையும் அதனால் அவனுக்கு ஏற்படும் எதிர்கால நன்மை, தீமைகளையும் விளக்கிக் கூறலாம்.
படிக்க முடியவில்லையே என்று கவலையோடு தன் வாழ்க்கையில் போராடியவர் மலாலா. ஆனால் அவளது தந்தை எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லித்தேற்றினார். ‘உன் சுதந்திரத்தை நான் பாதுகாப்பேன். உன் கனவை நிறைவேற்ற முயற்சி செய்’ என்றார் மலாலாவின் தந்தை. இலக்கை திட்டமிட்டு தன் லட்சியப்பாதையை வகுத்தாள்.
கல்வி என்பது எனக்கு மட்டுமல்ல பெண்ணினத்துக்கே அவசியம் என்று தன் வாழ்வால் உலகறியச் செய்தாள். சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்குத்தான் அடிமையின் வாழ்க்கை பிடித்துப்போகும் அல்லது பழகிப்போகும் என்று கோஷமிட்டாள். அவளது வீரதீரச் செயல்பாட்டுச் சாதனைக்கும் எழுச்சிமிகு சிந்தனைக்கும் 17-வது வயதிலே அவளுக்கு கிடைத்த பரிசுதான் அமைதிக்கான நோபல் பரிசு. இதில் நாம் பார்க்க வேண்டியது அவளது சுதந்திரம் காக்கப்பட்டது. அவள் ஒரு சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்றாள்.
காந்தியடிகளின் கூற்றுப்படி, வாழ்க்கையின் மிகப்பெரிய பாடங்களை அறியாமை நிறைந்தவர்கள் என்று கருதப் பெறும் சிறு குழந்தைகளிடமே கற்றுக் கொள்ள முடியும்.
இன்றைய பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு அன்பு, பாசம், நேர்மை, உண்மை என்று நல்லதைச் சொல்வது அவசியம்தான். ஆனால் அதோடு குழந்தைகளின் உருவாக்கப்பயிற்சியில் லட்சியத்தை நிர்ணயித்தல், அவற்றுக்காக திட்டமிடல், திட்டமிட்டதை செயல்படுத்துதல் என்பதில் அவர்களின் சுயசுதந்திரம் பறிக்கப்படாமல் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
முக்காலமும் புகழும் பெருந்தலைவரான கர்மவீரர் காமராஜர் தன் சுதந்திரப் பார்வையில் வளர்ந்ததால்தான் முதல்-அமைச்சராக உயர்ந்தார். அகச்சுதந்திரத்தில் வாழ்பவனுக்கு ஏற்றமிக்க எண்ணம்தான் எல்லாமுமாக இருக்கிறது. அவன் எண்ணத்தில் தெளிவுடன் இருப்பதால் அவன் என்னவாக மாற வேண்டும் என்பதில் தெளிவுடன் இருப்பான். சுதந்திரக்காற்றை சுவாசிப்பவனுக்கு அவனது எண்ணம் உயர ஏற உதவும் ஏணியாகும்.
இன்றைக்கு இருக்கும் சமூக கலாசார நிகழ்வுகள் நம்மை அச்சப்படுத்தினாலும், குழந்தைகள் சுதந்திர காற்றை சுவாசிக்க அனுமதிப்பதும் காலத்தின் தேவை தான். ஆனால், அதை உங்களின் கண்காணிப்பில் மேற்கொள்ளுங்கள். அவர்களின் லட்சியத்தை கேட்டறிந்து, அதை அடைய துணை நில்லுங்கள். குழந்தைகள் நிச்சயம் லட்சியப் பாதையை அடைந்து ஜொலிப்பார்கள்.
பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர்
இன்னும் சிலர், ‘நான் டாக்டராக ஆசைப்பட்டு முடியாமல் போய்விட்டது. எனவே என் மகனை எப்படியாவது டாக்டர் ஆக்கியே தீருவேன்’ என்று சபதம் ஏற்கிறார்கள். உண்மையிலேயே அந்த குழந்தைக்குள் ஒரு நல்லாசிரியர் உறங்கிக்கொண்டு இருக்கலாம். அதற்கு முரணாக நீங்கள் அவர்களை டாக்டராக்க நினைப்பது தவறு. அதாவது, பிள்ளைகள் என்னவாக வேண்டும் என்பதை பெற்றோர் தீர்மானம் செய்வது சரியான போக்கு அல்ல. இது மேம்பட்ட சமூகம் மலர்வதற்கு தடையாகிப்போகும்.
குழந்தையின் எதிர்காலத்தை சிறப்பானதாக்க விரும்பி தங்களின் ஆசையை திணிக்கும் பெற்றோருக்கு அதிக ஆர்வம் இருக்கிறதே தவிர தங்களின் விருப்பத்தை குழந்தைகள் உள்வாங்குகிறார்களா? அதில் அவர்களுக்கும் விருப்பம் இருக்கிறதா? என்பதையெல்லாம் சிந்திக்கும் எண்ணம் இல்லை. குழந்தை என்னவாகப் போகிறது என்பதை அந்த குழந்தையையே தீர்மானிக்க விட வேண்டும்.
கண்டிப்பு கலந்த வளர்ப்பு முறை இன்றைய குழந்தைக்கு அவசியம்தான். ஆனால் எந்த அளவுக்கு குழந்தைக்கு சுதந்திரம் கொடுக்கிறோம் என்பதையும் அளவிட வேண்டும். ஒரு குழந்தை வெற்றிப்பாதையில் பயணிக்க அகச்சுதந்திரம் அவசியம் என்பதை பெற்றோர் மறந்துவிடக்கூடாது.
பிள்ளைக்கு வரலாற்றுப் பாடம் பிடிக்கிறது. கணக்குப் பாடத்தில் ஆர்வம் இல்லை என்றால், பெற்றோர் அந்த பிள்ளையை தொழில்நுட்ப நிபுணராக ஆக்க விரும்புவது அர்த்தமற்றது. இன்னும் சில பெற்றோர், தங்கள் பணிபுரியும் துறையிலேயே குழந்தையை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, அந்த பாதையில் குழந்தையை பயணிக்கவைப்பதும் அதிகமாகி வருகிறது. இதுவும் மடமையே.
குழந்தைகள் மீது பெற்றோர் திணிக்கும் இத்தகைய கட்டாயக்கல்வி முறை எந்த வகையிலும் குழந்தைகளை சிந்தனையாளர்களாகவோ அல்லது சாதனையாளர்களாகவோ ஆக்காது என்பது வரலாறு உணர்த்தும் பாடம்.
நம் முகக்கண்ணாடியை தன் பிள்ளைகள் முகத்தில் மாட்டி விட்டால் பார்வை சரியாகிவிடுமா? அது மேலும் சிக்கல்களை ஏற்படுத்தி கண் பார்வையை சின்னாபின்னமாக்காதா? இதை சிந்திக்க வேண்டாமா?
அறிஞர்களில் ஜிப்ரான் சொல்வது போல, ‘நீ குழந்தைகளைப் போலவே இருக்க பாடுபடு. ஆனால் உன்னைப் போல அவர் களை ஆக்க முயலாதே’ என்பார்.

படிக்க முடியவில்லையே என்று கவலையோடு தன் வாழ்க்கையில் போராடியவர் மலாலா. ஆனால் அவளது தந்தை எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லித்தேற்றினார். ‘உன் சுதந்திரத்தை நான் பாதுகாப்பேன். உன் கனவை நிறைவேற்ற முயற்சி செய்’ என்றார் மலாலாவின் தந்தை. இலக்கை திட்டமிட்டு தன் லட்சியப்பாதையை வகுத்தாள்.
கல்வி என்பது எனக்கு மட்டுமல்ல பெண்ணினத்துக்கே அவசியம் என்று தன் வாழ்வால் உலகறியச் செய்தாள். சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்குத்தான் அடிமையின் வாழ்க்கை பிடித்துப்போகும் அல்லது பழகிப்போகும் என்று கோஷமிட்டாள். அவளது வீரதீரச் செயல்பாட்டுச் சாதனைக்கும் எழுச்சிமிகு சிந்தனைக்கும் 17-வது வயதிலே அவளுக்கு கிடைத்த பரிசுதான் அமைதிக்கான நோபல் பரிசு. இதில் நாம் பார்க்க வேண்டியது அவளது சுதந்திரம் காக்கப்பட்டது. அவள் ஒரு சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்றாள்.
காந்தியடிகளின் கூற்றுப்படி, வாழ்க்கையின் மிகப்பெரிய பாடங்களை அறியாமை நிறைந்தவர்கள் என்று கருதப் பெறும் சிறு குழந்தைகளிடமே கற்றுக் கொள்ள முடியும்.
இன்றைய பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு அன்பு, பாசம், நேர்மை, உண்மை என்று நல்லதைச் சொல்வது அவசியம்தான். ஆனால் அதோடு குழந்தைகளின் உருவாக்கப்பயிற்சியில் லட்சியத்தை நிர்ணயித்தல், அவற்றுக்காக திட்டமிடல், திட்டமிட்டதை செயல்படுத்துதல் என்பதில் அவர்களின் சுயசுதந்திரம் பறிக்கப்படாமல் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
முக்காலமும் புகழும் பெருந்தலைவரான கர்மவீரர் காமராஜர் தன் சுதந்திரப் பார்வையில் வளர்ந்ததால்தான் முதல்-அமைச்சராக உயர்ந்தார். அகச்சுதந்திரத்தில் வாழ்பவனுக்கு ஏற்றமிக்க எண்ணம்தான் எல்லாமுமாக இருக்கிறது. அவன் எண்ணத்தில் தெளிவுடன் இருப்பதால் அவன் என்னவாக மாற வேண்டும் என்பதில் தெளிவுடன் இருப்பான். சுதந்திரக்காற்றை சுவாசிப்பவனுக்கு அவனது எண்ணம் உயர ஏற உதவும் ஏணியாகும்.
இன்றைக்கு இருக்கும் சமூக கலாசார நிகழ்வுகள் நம்மை அச்சப்படுத்தினாலும், குழந்தைகள் சுதந்திர காற்றை சுவாசிக்க அனுமதிப்பதும் காலத்தின் தேவை தான். ஆனால், அதை உங்களின் கண்காணிப்பில் மேற்கொள்ளுங்கள். அவர்களின் லட்சியத்தை கேட்டறிந்து, அதை அடைய துணை நில்லுங்கள். குழந்தைகள் நிச்சயம் லட்சியப் பாதையை அடைந்து ஜொலிப்பார்கள்.
பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர்
ஒவ்வொரு குழந்தைக்கும் ஆசை, கனவு இருக்கும். அதை கண்டறிந்து மெருகூட்டுவதுதானே பெற்றோர்களின் கடமை.
பெற்றோர்-பிள்ளை உறவுதான் இன்றைக்கு தடம் மாறி செல்லும் முக்கியப் பிரச்சனையாக இருக்கிறது. அதீத கண்டிப்பு, அதீத கண்டிப்பின்மை இரண்டுமே தவறானதுதான்.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஆசை, கனவு இருக்கும். அதை கண்டறிந்து மெருகூட்டுவதுதானே பெற்றோர்களின் கடமை. அதைவிடுத்து இதற்கு மாறான பல செயல்பாடுகளை இன்றைக்கு பெற்றோர்களாகிய நாம் செய்துவருகிறோம். குழந்தைகள் கண்ணாடியைப் போன்றவர்கள். நாம் அன்பைக் காட்டினாலும், தவறைக் காட்டினாலும் அதனை அச்சுப்பிசராமல் அப்படியே செய்வார்கள்.
பிள்ளை என்னவாக ஆகவேண்டும் என்பதை பெற்றோர் முடிவுசெய்வது, அதற்காக பிள்ளைகளுக்கு அதிக நேரம் படிப்பை சுமையாக சுமத்துவது, மற்றொரு பிள்ளையோடு ஒப்பீடு செய்வது, பொருளாதார வசதி இருக்கிறது என்பதற்காக பிள்ளைகளைக் கண்டுக்கொள்ளாமலேயே பணத்தை மட்டும் கொடுத்து நல்வழிப்படுத்தாதது போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத்தான் அனைத்து பெற்றோர்களும் செய்துவருகிறோம்.
இதுவரை தெரிந்தோ, தெரியாமலோ செய்தது போதும். இனியாவது குழந்தைகளின் நலனில் உண்மையான அக்கறையுள்ள பெற்றோராக நடந்துகொள்வோம்.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஆசை, கனவு இருக்கும். அதை கண்டறிந்து மெருகூட்டுவதுதானே பெற்றோர்களின் கடமை. அதைவிடுத்து இதற்கு மாறான பல செயல்பாடுகளை இன்றைக்கு பெற்றோர்களாகிய நாம் செய்துவருகிறோம். குழந்தைகள் கண்ணாடியைப் போன்றவர்கள். நாம் அன்பைக் காட்டினாலும், தவறைக் காட்டினாலும் அதனை அச்சுப்பிசராமல் அப்படியே செய்வார்கள்.
பிள்ளை என்னவாக ஆகவேண்டும் என்பதை பெற்றோர் முடிவுசெய்வது, அதற்காக பிள்ளைகளுக்கு அதிக நேரம் படிப்பை சுமையாக சுமத்துவது, மற்றொரு பிள்ளையோடு ஒப்பீடு செய்வது, பொருளாதார வசதி இருக்கிறது என்பதற்காக பிள்ளைகளைக் கண்டுக்கொள்ளாமலேயே பணத்தை மட்டும் கொடுத்து நல்வழிப்படுத்தாதது போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத்தான் அனைத்து பெற்றோர்களும் செய்துவருகிறோம்.
இதுவரை தெரிந்தோ, தெரியாமலோ செய்தது போதும். இனியாவது குழந்தைகளின் நலனில் உண்மையான அக்கறையுள்ள பெற்றோராக நடந்துகொள்வோம்.
உலகின் பாதி பள்ளிக்கூடங்கள் சுகாதாரமற்று உள்ளதாகவும் இதனால் குழந்தைகள் நோய்வாய்ப்படும் அபாயம் உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகின் பாதி பள்ளிக்கூடங்கள் சுகாதாரமற்று உள்ளதாகவும் இதனால் குழந்தைகள் நோய்வாய்ப்படும் அபாயம் உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட பாதி பள்ளிக்கூடங்களில் தண்ணீர், கழிவறை, கை கழுவும் இடம் ஆகியவை சுத்தமாக இல்லை என்கிறது உலக சுகாதார மையத்தின் யுனிசெப் ஆய்வு. ‘‘இந்த அடிப்படை சுகாதார வசதிகூட இல்லாததால் பள்ளி செல்லும் சுமார் 90 கோடி குழந்தைகளின் உடல்நலம் கேள்விக்குறியாகி உள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், தரமான கல்விச் சூழலை உருவாக்கமுடியாது’’ என்கிறார், இந்த ஆய்வை வழிநடத்திய உலக சுகாதார அமைப்பின் ரிக் ஜான்ஸ்டன்.
உலகில் சுமார் 20 சதவீத பள்ளிகளில் சுத்தமான தண்ணீர் இல்லை. மூன்றில் ஒரு பங்கு பள்ளிகள் சுகாதாரமற்ற கழிவறைகளைக் கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
நோய்த் தொற்று பரவ வாய்ப்பு உள்ள கை கழுவும் இடம், பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுத்தமாக இல்லை என்றும் கூறுகிறது அந்த ஆய்வு. சகாரா பாலைவனத்தின் தெற்கே உள்ள ஆப்பிரிக்கா, கிழக்காசியா, தென்கிழக்காசிய நாடுகளில் உள்ள பள்ளிகள் சுகாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
பெரும்பாலான குழந்தைகள், கல்வி கற்பதற்காக எச்சூழ்நிலையிலும் பள்ளிக்குச் செல்கின்றனர். ஆனால் சில குழந்தைகள், சுகாதாரமற்ற கழிவறைகளால் பள்ளிக்குச் செல்வதைக்கூட தவிர்க்க நேரிடலாம் என்கிறது உலக சுகாதார அமைப்பு.
தரமான கல்வியை மட்டுமல்ல, சுகாதாரமான பள்ளிச் சூழலையும் உருவாக்க வேண்டியது உலக நாடுகளின் பொறுப்பு.
கிட்டத்தட்ட பாதி பள்ளிக்கூடங்களில் தண்ணீர், கழிவறை, கை கழுவும் இடம் ஆகியவை சுத்தமாக இல்லை என்கிறது உலக சுகாதார மையத்தின் யுனிசெப் ஆய்வு. ‘‘இந்த அடிப்படை சுகாதார வசதிகூட இல்லாததால் பள்ளி செல்லும் சுமார் 90 கோடி குழந்தைகளின் உடல்நலம் கேள்விக்குறியாகி உள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், தரமான கல்விச் சூழலை உருவாக்கமுடியாது’’ என்கிறார், இந்த ஆய்வை வழிநடத்திய உலக சுகாதார அமைப்பின் ரிக் ஜான்ஸ்டன்.
உலகில் சுமார் 20 சதவீத பள்ளிகளில் சுத்தமான தண்ணீர் இல்லை. மூன்றில் ஒரு பங்கு பள்ளிகள் சுகாதாரமற்ற கழிவறைகளைக் கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
நோய்த் தொற்று பரவ வாய்ப்பு உள்ள கை கழுவும் இடம், பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுத்தமாக இல்லை என்றும் கூறுகிறது அந்த ஆய்வு. சகாரா பாலைவனத்தின் தெற்கே உள்ள ஆப்பிரிக்கா, கிழக்காசியா, தென்கிழக்காசிய நாடுகளில் உள்ள பள்ளிகள் சுகாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
பெரும்பாலான குழந்தைகள், கல்வி கற்பதற்காக எச்சூழ்நிலையிலும் பள்ளிக்குச் செல்கின்றனர். ஆனால் சில குழந்தைகள், சுகாதாரமற்ற கழிவறைகளால் பள்ளிக்குச் செல்வதைக்கூட தவிர்க்க நேரிடலாம் என்கிறது உலக சுகாதார அமைப்பு.
தரமான கல்வியை மட்டுமல்ல, சுகாதாரமான பள்ளிச் சூழலையும் உருவாக்க வேண்டியது உலக நாடுகளின் பொறுப்பு.
அடிக்கடி டையபர்களை பயன்படுத்தும் குழந்தைகளிடம் அரிப்புகளை காண முடியும். இயற்கையான நிவாரணிகளைப் பயன்படுத்தி டையபர் அரிப்புக்கு சிகிச்சை அளிக்கலாம்.
பெரும்பாலான பெற்றோர்கள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய டையபர்களை பயன்படுத்துவதை எளிதாக கருதுகிறார்கள். வெளியே செல்லும் போதும், குழந்தைகளை இரவில் தூங்க வைக்கும் போதும் அதிகளவு தண்ணீரை உறிஞ்சும் டையபர்கள் வசதியாக உள்ளன. ஆனால், இந்த நற்பலன்களுடன், சில பக்க விளைவுகளையும் பெற்றோர்களும் குழந்தைகளும் எதிர்கொள்கிறார்கள்.
மிகவும் அதிகளவில் தண்ணீரை உறிஞ்சும் டையபர்களை தங்களுடைய குழந்தைகளிடம் பயன்படுத்தும் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் மிகவும் சாதாரணமான ஆனால் அதிகளவில் இருக்கும் பிரச்சனையாக டையபர் அரிப்பு உள்ளது. அடிக்கடி டையபர்களை பயன்படுத்தும் குழந்தைகளிடம் இந்த வகை அரிப்புகளை காண முடியும்.
இயற்கையான நிவாரணிகளைப் பயன்படுத்தி டையபர் அரிப்புகளை கவனிப்பது தான் சிறந்த சிகிச்சையாக இருக்கும். ஆரம்ப கட்டத்திலேயே இந்த அரிப்புகளை கவனித்தால் தான் பின்நாட்களில் தொற்றுகளும், எரிச்சலும் வருவதை தவிர்த்திட முடியும். சிறுநீர் மற்றும் மலம் ஆகியவை தொடர்ந்து டையபர்களில் படுவதால் சூழ்நிலை மிகவும் மோசமாகி விடும்.
டையபர் அரிப்புகளை தீர்க்கும் நிவாரண வழிகள் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிப்ஸ்களைப் பயன்படுத்தி எந்தவொரு அரிப்பு புண்களையும் சரி செய்யுங்கள் மற்றும் அரிப்புகள் வராமல் தடுக்கவும் செய்யுங்கள்.

இயற்கையான கிருமிநாசினியான தேங்காய் எண்ணெயில் உள்ள மூலப்பொருட்கள் டையபர் அரிப்புகளையும் சரி செய்து விடுகின்றன. உங்கள் குழந்தையின் கீழ் பகுதியில் மெலிதாக தேங்காய் எண்ணெயை தடவி விடுங்கள் மற்றும் கை, கால் மடங்கும் இடங்களிலும் மற்றும் பிளவுகளிலும் விரலை வைத்து இதமாக மசாஜ் செய்து விடுங்கள்.
மிகவும் அதிகமாக உறிஞ்சும் தன்மை கொண்ட ஜெல் டையபர்களை பயன்படுத்தினால் அரிப்புகள் வரும். எனவே மென்மையான துணிகளை பயன்படுத்தி செய்யப்பட்ட டையபர்களை பயன்படுத்தி ஈரப்பதத்தை உறிஞ்சி எடுக்க முயற்சி செய்யுங்கள். இந்த துணி டையபர்கள் உங்கள் குழந்தைக்கு இதமூட்டி அழகிய சருமத்தை பாதுகாக்கின்றன.
டையபர் அரிப்பு உள்ள இடங்களில் ஆலிவ் எண்ணெய் தடவுவதன் மூலம் அந்த இடங்களை சரி செய்ய முடியும். ஆலிவ் எண்ணெயை பயன்படுத்துவதால் சருமத்தின் ஈரப்பதத்தையும் பாதுகாக்க முடியும். பாதிக்கப்பட்ட இடத்தை காய வைத்து விட்டு, அதன் பின்னர் ஆலிவ் எண்ணெயை தடவுங்கள். நீங்கள் தடவி விட்ட ஆலிவ் எண்ணெய் ஒரு அடுக்கு போல செயல்பட்டு, தண்ணீர்; சருமத்தை ஊடுருவாமல் பார்த்துக் கொள்ளும்.
உங்கள் குழந்தை சில மணி நேரங்கள் டையபர் இல்லாமல் இருக்கச் செய்யுங்கள். இதன் மூலம் சருமத்திற்கு காற்றுடன் நேரடியான தொடர்பு ஏற்படும். டையபர் அரிப்புகளை சரி செய்ய முயற்சிக்க வேண்டிய மிகச்சிறந்த இயற்கையான வழிமுறைகளில் இதுவும் சிறந்த வழிமுறையாகும்.
மிகவும் அதிகளவில் தண்ணீரை உறிஞ்சும் டையபர்களை தங்களுடைய குழந்தைகளிடம் பயன்படுத்தும் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் மிகவும் சாதாரணமான ஆனால் அதிகளவில் இருக்கும் பிரச்சனையாக டையபர் அரிப்பு உள்ளது. அடிக்கடி டையபர்களை பயன்படுத்தும் குழந்தைகளிடம் இந்த வகை அரிப்புகளை காண முடியும்.
இயற்கையான நிவாரணிகளைப் பயன்படுத்தி டையபர் அரிப்புகளை கவனிப்பது தான் சிறந்த சிகிச்சையாக இருக்கும். ஆரம்ப கட்டத்திலேயே இந்த அரிப்புகளை கவனித்தால் தான் பின்நாட்களில் தொற்றுகளும், எரிச்சலும் வருவதை தவிர்த்திட முடியும். சிறுநீர் மற்றும் மலம் ஆகியவை தொடர்ந்து டையபர்களில் படுவதால் சூழ்நிலை மிகவும் மோசமாகி விடும்.
டையபர் அரிப்புகளை தீர்க்கும் நிவாரண வழிகள் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிப்ஸ்களைப் பயன்படுத்தி எந்தவொரு அரிப்பு புண்களையும் சரி செய்யுங்கள் மற்றும் அரிப்புகள் வராமல் தடுக்கவும் செய்யுங்கள்.

இயற்கையான கிருமிநாசினியான தேங்காய் எண்ணெயில் உள்ள மூலப்பொருட்கள் டையபர் அரிப்புகளையும் சரி செய்து விடுகின்றன. உங்கள் குழந்தையின் கீழ் பகுதியில் மெலிதாக தேங்காய் எண்ணெயை தடவி விடுங்கள் மற்றும் கை, கால் மடங்கும் இடங்களிலும் மற்றும் பிளவுகளிலும் விரலை வைத்து இதமாக மசாஜ் செய்து விடுங்கள்.
மிகவும் அதிகமாக உறிஞ்சும் தன்மை கொண்ட ஜெல் டையபர்களை பயன்படுத்தினால் அரிப்புகள் வரும். எனவே மென்மையான துணிகளை பயன்படுத்தி செய்யப்பட்ட டையபர்களை பயன்படுத்தி ஈரப்பதத்தை உறிஞ்சி எடுக்க முயற்சி செய்யுங்கள். இந்த துணி டையபர்கள் உங்கள் குழந்தைக்கு இதமூட்டி அழகிய சருமத்தை பாதுகாக்கின்றன.
டையபர் அரிப்பு உள்ள இடங்களில் ஆலிவ் எண்ணெய் தடவுவதன் மூலம் அந்த இடங்களை சரி செய்ய முடியும். ஆலிவ் எண்ணெயை பயன்படுத்துவதால் சருமத்தின் ஈரப்பதத்தையும் பாதுகாக்க முடியும். பாதிக்கப்பட்ட இடத்தை காய வைத்து விட்டு, அதன் பின்னர் ஆலிவ் எண்ணெயை தடவுங்கள். நீங்கள் தடவி விட்ட ஆலிவ் எண்ணெய் ஒரு அடுக்கு போல செயல்பட்டு, தண்ணீர்; சருமத்தை ஊடுருவாமல் பார்த்துக் கொள்ளும்.
உங்கள் குழந்தை சில மணி நேரங்கள் டையபர் இல்லாமல் இருக்கச் செய்யுங்கள். இதன் மூலம் சருமத்திற்கு காற்றுடன் நேரடியான தொடர்பு ஏற்படும். டையபர் அரிப்புகளை சரி செய்ய முயற்சிக்க வேண்டிய மிகச்சிறந்த இயற்கையான வழிமுறைகளில் இதுவும் சிறந்த வழிமுறையாகும்.
குழந்தைகள் நன்றாக படிக்க, அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது.
ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே. அதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாதநிலை ஏற்படுகிறது.
கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும். அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும்.
கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை மற்றும் கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.
மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ஒமேகா-3 மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம். பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடு மற்றும் மூளை செல்களை நன்கு செயல்பட வைக்கிறது.
மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களின் முக்கியமானது தான் கோலைன் சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது. இதில் உள்ள வைட்டமின் டி அறிவுத்திறனை அதிகரிக்கும்.
வைட்டமின் பி மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் சாப்பிட்டால், மூளையானது ஆரோக்கியமாக இருக்கும். நமது உடலுக்கு தினமும் ஏதேனும் ஒரு தானியத்தை சேர்த்தால் நல்லது.
பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும். அதிலும் பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும். அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும்.
கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை மற்றும் கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.
மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ஒமேகா-3 மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம். பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடு மற்றும் மூளை செல்களை நன்கு செயல்பட வைக்கிறது.
மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களின் முக்கியமானது தான் கோலைன் சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது. இதில் உள்ள வைட்டமின் டி அறிவுத்திறனை அதிகரிக்கும்.
வைட்டமின் பி மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் சாப்பிட்டால், மூளையானது ஆரோக்கியமாக இருக்கும். நமது உடலுக்கு தினமும் ஏதேனும் ஒரு தானியத்தை சேர்த்தால் நல்லது.
பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும். அதிலும் பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
சிறுவர்களுக்கு கண் பார்வை சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அது கவனிக்கப்படாமல் இருந்தால் நிரந்தர பார்வை இழப்புக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறார்கள் கண் மருத்துவர்கள்.
நீண்ட நேரம் படிப்பது, சிறு வயதிலேயே மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது போன்றவற்றால் கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கின்றனர். இதனால் சிறுவர்களுக்கு கண் பார்வை சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அது கவனிக்கப்படாமல் இருந்தால் நிரந்தர பார்வை இழப்புக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறார்கள் கண் மருத்துவர்கள்.
எந்தப் பள்ளிக்குச் சென்றாலும் பெரும்பாலான மாணவர்கள் கண்ணாடி அணிந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. பல மாணவர்கள், தங்களுக்குப் பார்வைக்குறைபாடு இருப்பதையே அறியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களும் இந்த விஷயத்தில் போதிய விழிப்பு உணர்வு இல்லை.
இன்றைய சிறுவர்கள் கண்களுக்கு அதிகப்படியாக வேலைக் கொடுக்கிறார்கள். முக்கியமாக, நீண்ட நேரம் படிப்பது, சிறு வயதிலேயே மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது போன்றவற்றால் கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கின்றனர். இதனால் இயல்பாகவே, இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு பார்வைக் குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. தற்போது உலகளவில் சுமார் 3 கோடியே 9 லட்சம் பார்வையற்றவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் சுமார் ஒரு கோடியே 20 லட்சம் பேர் பார்வையிழந்து தவிக்கிறார்கள். இது உலகின் மொத்த பார்வையற்றவர்கள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகும்.
ஒரு மனிதனுக்குத் தனது வாழ்நாளில் எந்த வயதிலும் பார்வையிழப்பு ஏற்படலாம். குறிப்பாக, சிறுவர்களுக்கு கண் பார்வை சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அது கவனிக்கப்படாமல் இருந்தால் நிரந்தர பார்வை இழப்புக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறார்கள் கண் மருத்துவர்கள்.
முக்கியமாக சிறுவர்களின் முதல் 8 வருடங்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஏனெனில் அவர்களது மூளையும் கண்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பார்வைத்திறனை அதிகரிக்கும் காலகட்டம் அது. இந்த தருணத்தில்தான் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். ஏனெனில் கண்பார்வை தொடர்பான அறிகுறிகள் அப்போதுதான் தெரியவரும்.
ஒவ்வொரு 5 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. பெரும்பாலும் தங்களுக்கு பார்வைக் குறைபாடு இருப்பதை அறியாமலேயே அவர்கள் வளர்கிறார்கள். இதனால், ஆரம்பத்திலேயே குறைபாட்டைக் கண்டறிய முடியாமல் போய்விடுகிறது.
எந்தப் பள்ளிக்குச் சென்றாலும் பெரும்பாலான மாணவர்கள் கண்ணாடி அணிந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. பல மாணவர்கள், தங்களுக்குப் பார்வைக்குறைபாடு இருப்பதையே அறியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களும் இந்த விஷயத்தில் போதிய விழிப்பு உணர்வு இல்லை.
இன்றைய சிறுவர்கள் கண்களுக்கு அதிகப்படியாக வேலைக் கொடுக்கிறார்கள். முக்கியமாக, நீண்ட நேரம் படிப்பது, சிறு வயதிலேயே மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது போன்றவற்றால் கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கின்றனர். இதனால் இயல்பாகவே, இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு பார்வைக் குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. தற்போது உலகளவில் சுமார் 3 கோடியே 9 லட்சம் பார்வையற்றவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் சுமார் ஒரு கோடியே 20 லட்சம் பேர் பார்வையிழந்து தவிக்கிறார்கள். இது உலகின் மொத்த பார்வையற்றவர்கள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகும்.
ஒரு மனிதனுக்குத் தனது வாழ்நாளில் எந்த வயதிலும் பார்வையிழப்பு ஏற்படலாம். குறிப்பாக, சிறுவர்களுக்கு கண் பார்வை சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அது கவனிக்கப்படாமல் இருந்தால் நிரந்தர பார்வை இழப்புக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறார்கள் கண் மருத்துவர்கள்.
முக்கியமாக சிறுவர்களின் முதல் 8 வருடங்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஏனெனில் அவர்களது மூளையும் கண்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பார்வைத்திறனை அதிகரிக்கும் காலகட்டம் அது. இந்த தருணத்தில்தான் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். ஏனெனில் கண்பார்வை தொடர்பான அறிகுறிகள் அப்போதுதான் தெரியவரும்.
ஒவ்வொரு 5 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. பெரும்பாலும் தங்களுக்கு பார்வைக் குறைபாடு இருப்பதை அறியாமலேயே அவர்கள் வளர்கிறார்கள். இதனால், ஆரம்பத்திலேயே குறைபாட்டைக் கண்டறிய முடியாமல் போய்விடுகிறது.
மாணவர்கள் தங்களது செயல்பாடுகளில் சின்னச்சின்ன மாற்றங்களை செய்துகொண்டால் முன்னேற்றங்களும் விரைவில் வரும், சாதனைகளையும் நிகழ்த்தலாம்.
முன்னேற்றங்கள் எப்போதுமே உடனே சாத்தியப்படுவதில்லை. வழக்கமான செயல்பாடுகள் வெற்றியைத் தர தாமதமாகலாம். நமது செயல்பாடுகளில் சின்னச்சின்ன மாற்றங்களை செய்துகொண்டால் முன்னேற்றங்களும் விரைவில் வரும், சாதனைகளையும் நிகழ்த்தலாம். மாணவர்கள் எதிர்கால சாதனையாளராக உயர இந்த உத்திகள் ரொம்பவே பயன் தரும். மாற்றங்களை காண்போமா...
வழக்கத்தை கணித்தல்
மாணவர்கள் முதலில் தங்கள் கல்வித் திட்டத்தை நன்கு வகுக்க வேண்டும். நாம் எந்த இலக்கை நோக்கி படிக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இடைப் பருவ தேர்வுகளில் நாம் திட்டமிட்டபடி மதிப்பெண் பெறுகிறோமா? ஆசிரியர்களின் பாராட்டை பெறுகிறோமா? என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
அதற்காக தங்களது அன்றாட செயல்களை முதலில் பட்டியலிட வேண்டும். எத்தனை மணிக்கு எழுந்திருக்கிறோம். பள்ளி புறப்பாடு மற்றும் அன்றாட பழக்கவழக்கங்களுக்காக எவ்வளவு நேரம் செலவிடுகிறோம். ஒவ்வொரு பாடத்திற்கும் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம், எவ்வளவு நேரத்தை ஓய்வாக கழிக்கிறோம் என்பதையெல்லாம் பட்டியலிட வேண்டும். முடிந்தால் நான்கைந்து நண்பர்களாக கூட்டு சேர்ந்து கொண்டு கல்வித்திட்டம் வகுத்து செயல்படுத்தினால் சிறப்பான முன்னேற்றத்தை அடையலாம்.
மாற்றத்தின் முதல் விதி
இப்போது அன்றாட வழக்கத்தில் சின்னச்சின்ன மாற்றங்களை செய்வது பற்றி யோசிக்க வேண்டும். அதாவது சிறப்பாக படிக்க என்ன தேவை? என்ன குறைபாடு இருக்கிறது, அதை தீர்க்கும் வழிகள் என்ன? என்பது பற்றி யோசிப்பதுதான் மாற்றத்திற்கான அடிப்படை.
எனவே நமக்கு எந்தப்பாடம் நன்றாக வருகிறது, எந்தப் பாடத்தில் மதிப்பெண் குறைவாக பெறுகிறோம்? அதற்கு காரணம் என்ன? மதிப்பெண்களை அதிகமாக்க வழிகள் என்ன? கூடுதல் நேரம் படிக்க வேண்டுமா? விளையாட்டை குறைக்க வேண்டுமா? வேடிக்கை அரட்டையை கட்டுப்படுத்த வேண்டுமா? என்பது பற்றி யோசியுங்கள். குழுவாக செயல்பட்டால் தங்களுக்குள் கருத்துகளை பகிர்ந்து கொண்டு திட்டம் தீட்ட வேண்டும். பின்னர் மாற்றத்தின் அடுத்த விதியை செயல்படுத்தலாம்.
தீர்வை பரிசோதித்தல்
இப்போது பிரச்சினைகள், தீர்வுகள் அடங்கிய பட்டியல் உங்களிடம் தயாராக இருக்கும். அடுத்தகட்டமாக திட்டமிட்டபடி அதை செயல்படுத்த வேண்டும். நன்றாக படிக்கும் மாணவர், தனக்குத் தெரிந்த பாடத்தை மற்றவர்க்கு கற்றுத் தரலாம். மதிப்பெண் குறைவாக உள்ள பாடத்திற்கு முன்னுரிமை தந்து அதில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்படலாம்.

காலையில் தாமதமாக எழுவதும், மாலையில் நீண்ட நேரம் பொழுதுபோக்குவதும் படிப்புக்கு இடையூறாக இருந்தால் அதை சரி செய்யலாம். பள்ளியில் சக மாணவர்கள் படிப்பதற்கு இடையூறாக செயல்பட்டால், வீட்டின் பொருளாதார வசதி மற்றும் தேவையான உபகரணங்கள் இன்மை கல்விக்கு தடையாக இருந்தால் அதை சீர் செய்வதற்காக பெற்றோர், ஆசிரியர் உதவியை நாடலாம்.
புரியாத பாடங்களை புரிந்து கொள்ளவும், குறிப்பிட்ட பாடங்களில் அதிக மதிப்பெண் பெறவும் பல வழிகள் உள்ளன. பாடங்களை மனதில் பதிய வைக்க திரும்பத் திரும்ப படித்தல், எழுதிப் பார்த்தல், வீடியோ நிகழ்வாக பாடத்தை மனதிற்குள் ஓட்டிப் பார்த்தல், அல்லது வீடியோ வழியாகவே பாடம் படித்தல், நண்பனிடம் ஒப்பித்தல் என வெற்றிக்கான திட்டத்தை செயல்படுத்திப் பார்க்க வேண்டும்.
முடிவை ஆராய்தல்
அடுத்த கட்ட மாற்றமாக முயற்சிகளின் பலன்களை ஆராய வேண்டும். அதாவது நமது திட்டம் பலன் தந்திருக்கிறதா? என பார்க்க வேண்டும். அடுத்த பருவத் தேர்வில் உங்கள் திட்டம் பலன் தந்திருக்கிறதா? கூடுதல் மதிப்பெண் பெற்றிருக் கிறோமா? என சோதித்துப் பார்க்க வேண்டும். இப்படியாக கல்விக்கு இடையூறாக இருக்கும் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக தீர்க்க வேண்டும். தேவையற்ற பழக்க வழக்கங்களை மாற்ற வேண்டும். உங்கள் குழுவில் அனைவருக்கும் மதிப்பெண்களில் முன்னேற்றம் கிடைத்தால் நீங்கள் ஒரு வெற்றிக் கூட்டணி.
அடுத்த செயல்திட்டத்திற்கு தயாராதல்
நன்றாகப் படிக்கவும், மதிப்பெண் உயரவும் பாடுபட்ட உங்கள் கூட்டணி, அடுத்து மற்றொரு செயல்திட்டத்தைத் தீட்டலாம். அது பள்ளியில் முதலிடம் பெறுவது, மாவட்டத்தில் முதலிடம் பெறுவது, மாநில அளவில் சிறப்பிடம் பெறுவது என உயர்ந்த லட்சியமாக இருக்கலாம். அதை அடைவதற்கான திட்டத்தில் ஆசிரியர் மற்றும் பெற்றோரையும் தங்களுடன் கூட்டுசேர்த்துக் கொள்ளலாம். அவர்கள் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும், வழிநடத்தவும் பெரிதும் துணை நிற்பார்கள். இத்தகைய திட்டமும், தொடர்முயற்சியும் பெருவெற்றிகளைத் தரும்.
பள்ளிப் பாடத்திட்டம் என்றில்லை, பள்ளியின் தரத்தை உயர்த்துதல், ஒரு கிராமத்தின் தரத்தை உயர்த்துதல், பொதுத் தொண்டு செய்தல் என எல்லா திட்டங்களிலும் இதுபோல கூட்டு முயற்சியும், சின்னச்சின்ன மாற்றங்களால் ஆன தொடர் முயற்சியும் வெற்றியை சாத்தியமாக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் நீங்களும் நாளைய தலைவர்களாகலாம், எதிலும் வெற்றியை குவிக்கலாம்!
வழக்கத்தை கணித்தல்
மாணவர்கள் முதலில் தங்கள் கல்வித் திட்டத்தை நன்கு வகுக்க வேண்டும். நாம் எந்த இலக்கை நோக்கி படிக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இடைப் பருவ தேர்வுகளில் நாம் திட்டமிட்டபடி மதிப்பெண் பெறுகிறோமா? ஆசிரியர்களின் பாராட்டை பெறுகிறோமா? என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
அதற்காக தங்களது அன்றாட செயல்களை முதலில் பட்டியலிட வேண்டும். எத்தனை மணிக்கு எழுந்திருக்கிறோம். பள்ளி புறப்பாடு மற்றும் அன்றாட பழக்கவழக்கங்களுக்காக எவ்வளவு நேரம் செலவிடுகிறோம். ஒவ்வொரு பாடத்திற்கும் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம், எவ்வளவு நேரத்தை ஓய்வாக கழிக்கிறோம் என்பதையெல்லாம் பட்டியலிட வேண்டும். முடிந்தால் நான்கைந்து நண்பர்களாக கூட்டு சேர்ந்து கொண்டு கல்வித்திட்டம் வகுத்து செயல்படுத்தினால் சிறப்பான முன்னேற்றத்தை அடையலாம்.
மாற்றத்தின் முதல் விதி
இப்போது அன்றாட வழக்கத்தில் சின்னச்சின்ன மாற்றங்களை செய்வது பற்றி யோசிக்க வேண்டும். அதாவது சிறப்பாக படிக்க என்ன தேவை? என்ன குறைபாடு இருக்கிறது, அதை தீர்க்கும் வழிகள் என்ன? என்பது பற்றி யோசிப்பதுதான் மாற்றத்திற்கான அடிப்படை.
எனவே நமக்கு எந்தப்பாடம் நன்றாக வருகிறது, எந்தப் பாடத்தில் மதிப்பெண் குறைவாக பெறுகிறோம்? அதற்கு காரணம் என்ன? மதிப்பெண்களை அதிகமாக்க வழிகள் என்ன? கூடுதல் நேரம் படிக்க வேண்டுமா? விளையாட்டை குறைக்க வேண்டுமா? வேடிக்கை அரட்டையை கட்டுப்படுத்த வேண்டுமா? என்பது பற்றி யோசியுங்கள். குழுவாக செயல்பட்டால் தங்களுக்குள் கருத்துகளை பகிர்ந்து கொண்டு திட்டம் தீட்ட வேண்டும். பின்னர் மாற்றத்தின் அடுத்த விதியை செயல்படுத்தலாம்.
தீர்வை பரிசோதித்தல்
இப்போது பிரச்சினைகள், தீர்வுகள் அடங்கிய பட்டியல் உங்களிடம் தயாராக இருக்கும். அடுத்தகட்டமாக திட்டமிட்டபடி அதை செயல்படுத்த வேண்டும். நன்றாக படிக்கும் மாணவர், தனக்குத் தெரிந்த பாடத்தை மற்றவர்க்கு கற்றுத் தரலாம். மதிப்பெண் குறைவாக உள்ள பாடத்திற்கு முன்னுரிமை தந்து அதில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்படலாம்.

காலையில் தாமதமாக எழுவதும், மாலையில் நீண்ட நேரம் பொழுதுபோக்குவதும் படிப்புக்கு இடையூறாக இருந்தால் அதை சரி செய்யலாம். பள்ளியில் சக மாணவர்கள் படிப்பதற்கு இடையூறாக செயல்பட்டால், வீட்டின் பொருளாதார வசதி மற்றும் தேவையான உபகரணங்கள் இன்மை கல்விக்கு தடையாக இருந்தால் அதை சீர் செய்வதற்காக பெற்றோர், ஆசிரியர் உதவியை நாடலாம்.
புரியாத பாடங்களை புரிந்து கொள்ளவும், குறிப்பிட்ட பாடங்களில் அதிக மதிப்பெண் பெறவும் பல வழிகள் உள்ளன. பாடங்களை மனதில் பதிய வைக்க திரும்பத் திரும்ப படித்தல், எழுதிப் பார்த்தல், வீடியோ நிகழ்வாக பாடத்தை மனதிற்குள் ஓட்டிப் பார்த்தல், அல்லது வீடியோ வழியாகவே பாடம் படித்தல், நண்பனிடம் ஒப்பித்தல் என வெற்றிக்கான திட்டத்தை செயல்படுத்திப் பார்க்க வேண்டும்.
முடிவை ஆராய்தல்
அடுத்த கட்ட மாற்றமாக முயற்சிகளின் பலன்களை ஆராய வேண்டும். அதாவது நமது திட்டம் பலன் தந்திருக்கிறதா? என பார்க்க வேண்டும். அடுத்த பருவத் தேர்வில் உங்கள் திட்டம் பலன் தந்திருக்கிறதா? கூடுதல் மதிப்பெண் பெற்றிருக் கிறோமா? என சோதித்துப் பார்க்க வேண்டும். இப்படியாக கல்விக்கு இடையூறாக இருக்கும் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக தீர்க்க வேண்டும். தேவையற்ற பழக்க வழக்கங்களை மாற்ற வேண்டும். உங்கள் குழுவில் அனைவருக்கும் மதிப்பெண்களில் முன்னேற்றம் கிடைத்தால் நீங்கள் ஒரு வெற்றிக் கூட்டணி.
அடுத்த செயல்திட்டத்திற்கு தயாராதல்
நன்றாகப் படிக்கவும், மதிப்பெண் உயரவும் பாடுபட்ட உங்கள் கூட்டணி, அடுத்து மற்றொரு செயல்திட்டத்தைத் தீட்டலாம். அது பள்ளியில் முதலிடம் பெறுவது, மாவட்டத்தில் முதலிடம் பெறுவது, மாநில அளவில் சிறப்பிடம் பெறுவது என உயர்ந்த லட்சியமாக இருக்கலாம். அதை அடைவதற்கான திட்டத்தில் ஆசிரியர் மற்றும் பெற்றோரையும் தங்களுடன் கூட்டுசேர்த்துக் கொள்ளலாம். அவர்கள் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும், வழிநடத்தவும் பெரிதும் துணை நிற்பார்கள். இத்தகைய திட்டமும், தொடர்முயற்சியும் பெருவெற்றிகளைத் தரும்.
பள்ளிப் பாடத்திட்டம் என்றில்லை, பள்ளியின் தரத்தை உயர்த்துதல், ஒரு கிராமத்தின் தரத்தை உயர்த்துதல், பொதுத் தொண்டு செய்தல் என எல்லா திட்டங்களிலும் இதுபோல கூட்டு முயற்சியும், சின்னச்சின்ன மாற்றங்களால் ஆன தொடர் முயற்சியும் வெற்றியை சாத்தியமாக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் நீங்களும் நாளைய தலைவர்களாகலாம், எதிலும் வெற்றியை குவிக்கலாம்!
குழந்தைகளை கண்டிக்காமல், அவர்களின் போக்கில்விட்டு, மெதுவாக படிப்பின் பக்கமாக கவனத்தை திருப்ப வைப்பது அவர்களை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும்.
தங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும் என எல்லா பெற்றோரும் நினைக்கிறார்கள். ஆனால் அதற்காக வழிநடத்துவதில்தான் பெரும்பாலான பெற்றோர் கோட்டைவிட்டுவிடுகிறார்கள். ‘படி...படியென்று பாடாய் படுத்துவது’, ‘சின்னச்சின்ன தவறுகளை பெரிதுபடுத்துவது’, ‘குழந்தையின் செயல்களுக்கு தடைபோடுவது’ என பெற்றோர் செய்யும் தவறுகள் ஏராளம். குழந்தைகளை கண்டிக்காமல், அவர்களின் போக்கில்விட்டு, மெதுவாக படிப்பின் பக்கமாக கவனத்தை திருப்ப வைப்பது அவர்களை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும். அதற்கான சில வழிகள்...
முன்மாதிரியாக இருங்கள் : குழந்தைகள் பெற்றோரிடம் இருந்தே எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறார்கள். குழந்தைகளை படிக்கச் சொல்லிவிட்டு பெற்றோர் டி.வி. பார்ப்பதும், தாங்கள் அதிகமாக செல்போனை பயன்படுத்திக் கொண்டு, குழந்தைகளை போனை தொடக்கூடாது என்பதும் முரண்பட்ட முன்னுதாரணமாகும். குழந்தைகள் படிக்க வேண்டுமானால் நீங்கள் அவர்களுடன் படியுங்கள், குழந்தைகள் கண்டதையும் விளையாடக்கூடாது என்றால் நீங்கள் அவர்களுடன் விளையாடுங்கள். அவர்கள் தவறாகப் பேசக்கூடாது என்றால், நீங்கள் அவர்களுக்கு முன்பு அப்படி பேசாதீர்கள்.
தடை செய்யாதீர்கள் : குழந்தைகளின் செயல்களை தடை செய்யாதீர்கள். டம்ளரை தரையில்தட்டி விளையாடுவதை, பொம்மைகளை பிரித்துப் பார்க்கும் குழந்தைகளை, கோபம் கொந்தளிக்க கண்டிக்கக் கூடாது. டம்ளரின் ஓசையை ரசிக்கும் குழந்தை இசைப்பிரியராகவும், இசை மேதையாகவும் வளரலாம். பொம்மைகளைப் பிய்த்துப் போடுவது அவர்களின் பொறியாளர் எண்ணத்தை காண்பிப்பதாக இருக்கலாம். குழந்தைகள் பிரித்து, உடைத்து, எறிந்து விளையாடுவார்கள் என்பதை அறிந்த நீங்கள், பிரித்துப் பொருத்தும் விளையாட்டுப் பொருட்களையோ, உடையாத தரமான விளையாட்டுப் பொருட்களையோ வாங்கிக் கொடுத்து உற்சாகப்படுத்துங்கள். அவர்களின் தவறும், குறைந்து போகும், அறிவும் விருத்தியாகும்.

பாராட்டுதான் விமர்சனம் : உங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். ‘அவனைப்பாரு, அவளைப்பாரு எப்படி படிச்சிருக்காங்க, நீயும் இருக்கியே...’ என்பதுபோல பேச வேண்டாம். மற்றவர்கள் மட்டம் தட்டினாலும், பெற்றோர்தான் தங்கள் குழந்தைகளை ஊக்குவித்து வளர்க்க வேண்டும். பாடத்தில் ஏதாவது கோட்டைவிட்டால், ‘நீங்க சமர்த்து அடுத்த முறை நிறைய மார்க் வாங்க வேண்டும், உங்களால முடியுமில்ல’ என்று இதமாகச் சொல்லிவிட்டு வேறுவிஷயத்திற்கு சென்றுவிட வேண்டும். அதையே மீண்டும் மீண்டும் காயப்படுத்தும்விதமாக பலமுறை நினைவூட்டி பேசி குழந்தைகளை மட்டம் தட்டக் கூடாது.
படிக்க வேண்டுமா? : குழந்தைகளுக்கு படிப்பின் மீது விருப்பம் வர வேண்டுமானால், அவர்களுக்கு புத்தகத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். புத்தகத்தை கிழிக்கிறாயா, இதை தொடக்கூடாது என்று பிடுங்கி வைக்க வேண்டாம். சிறுவயது முதலே, கிழித்தாலும் பரவாயில்லை என்று பழைய புத்தகங்களை கொடுத்துப் பழக்குங்கள், அவர்கள் புத்தகத்தை புரட்டட்டும், கிழிக்கட்டும். இப்போதெல்லாம் குழந்தை களால் கிழிக்க முடியாத புத்தகங்கள் விற்பனைக்கு கிடைக்கிறது என்பது நல்லவிஷயம். சிறிதுகாலம் புத்தகத்துடன் அப்படி உறவு வளர்க்கும் குழந்தைகள் வளர வளர பெரிய புத்தக ரசிகனாகவும், புத்திசாலி குழந்தையாகவும் வளர்ந்துவிடும் கவலை வேண்டாம்.
கதைகளால் வழிநடத்துங்கள் : குழந்தைகளின் தவறுகளை திருத்தவும், அவர்களை மேதைகளாக்கவும், கண்டிப்பதும், அடித்து உதைப்பதும் சிறந்த வழியல்ல. கதை சொல்வதுதான் அதற்கு சரியானது. “ஒரு ஊர்ல ஒரு கெட்ட பையன் இருந்தானாம். அவன் நிறைய சாக்லெட் சாப்பிட்டானாம், பல் எல்லாம் சொத்தையா போச்சாம்...” என்று சொல்லும் கதைகள், நீங்கள் அடித்து திருத்துவதைவிட ஆயிரம் மடங்கு குழந்தைகளின் மனதில் படிப்பினையை ஏற்படுத்தும். ஆனால் கதையை அவர்கள் தவறு செய்யும்போது கூறாமல், அவர்கள் விருப்பமாக உங்களுடன் பேசும்போது கூறுங்கள். இது உங்கள் உறவையும் வளர்க்கும், குழந்தையின் அறிவையும் பெருக்கும்.
முன்மாதிரியாக இருங்கள் : குழந்தைகள் பெற்றோரிடம் இருந்தே எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறார்கள். குழந்தைகளை படிக்கச் சொல்லிவிட்டு பெற்றோர் டி.வி. பார்ப்பதும், தாங்கள் அதிகமாக செல்போனை பயன்படுத்திக் கொண்டு, குழந்தைகளை போனை தொடக்கூடாது என்பதும் முரண்பட்ட முன்னுதாரணமாகும். குழந்தைகள் படிக்க வேண்டுமானால் நீங்கள் அவர்களுடன் படியுங்கள், குழந்தைகள் கண்டதையும் விளையாடக்கூடாது என்றால் நீங்கள் அவர்களுடன் விளையாடுங்கள். அவர்கள் தவறாகப் பேசக்கூடாது என்றால், நீங்கள் அவர்களுக்கு முன்பு அப்படி பேசாதீர்கள்.
தடை செய்யாதீர்கள் : குழந்தைகளின் செயல்களை தடை செய்யாதீர்கள். டம்ளரை தரையில்தட்டி விளையாடுவதை, பொம்மைகளை பிரித்துப் பார்க்கும் குழந்தைகளை, கோபம் கொந்தளிக்க கண்டிக்கக் கூடாது. டம்ளரின் ஓசையை ரசிக்கும் குழந்தை இசைப்பிரியராகவும், இசை மேதையாகவும் வளரலாம். பொம்மைகளைப் பிய்த்துப் போடுவது அவர்களின் பொறியாளர் எண்ணத்தை காண்பிப்பதாக இருக்கலாம். குழந்தைகள் பிரித்து, உடைத்து, எறிந்து விளையாடுவார்கள் என்பதை அறிந்த நீங்கள், பிரித்துப் பொருத்தும் விளையாட்டுப் பொருட்களையோ, உடையாத தரமான விளையாட்டுப் பொருட்களையோ வாங்கிக் கொடுத்து உற்சாகப்படுத்துங்கள். அவர்களின் தவறும், குறைந்து போகும், அறிவும் விருத்தியாகும்.

பாராட்டுதான் விமர்சனம் : உங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். ‘அவனைப்பாரு, அவளைப்பாரு எப்படி படிச்சிருக்காங்க, நீயும் இருக்கியே...’ என்பதுபோல பேச வேண்டாம். மற்றவர்கள் மட்டம் தட்டினாலும், பெற்றோர்தான் தங்கள் குழந்தைகளை ஊக்குவித்து வளர்க்க வேண்டும். பாடத்தில் ஏதாவது கோட்டைவிட்டால், ‘நீங்க சமர்த்து அடுத்த முறை நிறைய மார்க் வாங்க வேண்டும், உங்களால முடியுமில்ல’ என்று இதமாகச் சொல்லிவிட்டு வேறுவிஷயத்திற்கு சென்றுவிட வேண்டும். அதையே மீண்டும் மீண்டும் காயப்படுத்தும்விதமாக பலமுறை நினைவூட்டி பேசி குழந்தைகளை மட்டம் தட்டக் கூடாது.
படிக்க வேண்டுமா? : குழந்தைகளுக்கு படிப்பின் மீது விருப்பம் வர வேண்டுமானால், அவர்களுக்கு புத்தகத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். புத்தகத்தை கிழிக்கிறாயா, இதை தொடக்கூடாது என்று பிடுங்கி வைக்க வேண்டாம். சிறுவயது முதலே, கிழித்தாலும் பரவாயில்லை என்று பழைய புத்தகங்களை கொடுத்துப் பழக்குங்கள், அவர்கள் புத்தகத்தை புரட்டட்டும், கிழிக்கட்டும். இப்போதெல்லாம் குழந்தை களால் கிழிக்க முடியாத புத்தகங்கள் விற்பனைக்கு கிடைக்கிறது என்பது நல்லவிஷயம். சிறிதுகாலம் புத்தகத்துடன் அப்படி உறவு வளர்க்கும் குழந்தைகள் வளர வளர பெரிய புத்தக ரசிகனாகவும், புத்திசாலி குழந்தையாகவும் வளர்ந்துவிடும் கவலை வேண்டாம்.
கதைகளால் வழிநடத்துங்கள் : குழந்தைகளின் தவறுகளை திருத்தவும், அவர்களை மேதைகளாக்கவும், கண்டிப்பதும், அடித்து உதைப்பதும் சிறந்த வழியல்ல. கதை சொல்வதுதான் அதற்கு சரியானது. “ஒரு ஊர்ல ஒரு கெட்ட பையன் இருந்தானாம். அவன் நிறைய சாக்லெட் சாப்பிட்டானாம், பல் எல்லாம் சொத்தையா போச்சாம்...” என்று சொல்லும் கதைகள், நீங்கள் அடித்து திருத்துவதைவிட ஆயிரம் மடங்கு குழந்தைகளின் மனதில் படிப்பினையை ஏற்படுத்தும். ஆனால் கதையை அவர்கள் தவறு செய்யும்போது கூறாமல், அவர்கள் விருப்பமாக உங்களுடன் பேசும்போது கூறுங்கள். இது உங்கள் உறவையும் வளர்க்கும், குழந்தையின் அறிவையும் பெருக்கும்.
பெரியவர்களைவிட குழந்தைகள் தான் ஈயத்தின் பாதிப்புக்கு எளிதாகவும், தீவிரமாகவும் ஆளாகிறார்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
நமது உடலில் 100 மி.லி. லிட்டர் ரத்தத்தில் 10 மைக்ரோகிராம் அளவு ஈயம் இருந்தாலே நம் உடல் ஆபத்துக்கு ஆட்பட்டுவிட்டது என்று அர்த்தம். இன்று உலகில் 12 கோடி மக்கள் இந்த ஆபத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் 90 சதவீதத்துக்கு மேல் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வாழ்கிறார்கள்.
பெரியவர்களைவிட குழந்தைகள் தான் ஈயத்தின் பாதிப்புக்கு எளிதாகவும், தீவிரமாகவும் ஆளாகிறார்கள். பெரியவர்களின் உடலில் சேரும் ஈயத்தில் 20 முதல் 30 சதவீதம் வரை ஜீரண மண்டலம் மூலம் உடலில் சேர்கின்றன. ஆனால், குழந்தைகளின் உடலில் சேரும் ஈயத்தில் 50 சதவீதத்தை, அவர்கள் உடல் அப்படியே ஈர்த்துக்கொள்கிறது. குழந்தைகளுக்குள் வேதி மாசுகள் அதிகமாக சேரும் வாய்ப்பு உள்ளன. இதனால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அவர்களுடைய நுண்ணறிவுத் திறன், பேச்சுத் திறன், கல்வித் திறன் போன்றவற்றில் குறைபாடு ஏற்படுகிறது.

தாயின் ரத்தம் ஈயத்தால் மாசடைந்து இருந்தால், தொப்புள் கொடி வழியாக அது கருப்பையில் வளரும் குழந்தையைச் சென்றடைகிறது. இதனால் குறைப்பிரசவம், எடை குறைவாகப் பிறப்பது, திறன் குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகள் பிறப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இந்திய அளவில் ஈயப் பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய ஆதாரமாக, ஈயம் கலந்த பெயிண்ட்கள் உள்ளன. வாழிடங்களிலும், பணியிடங்களிலும் சுவர்கள், பர்னிச்சர் பொருட்களில் பூசப்பட்ட பெயிண்ட்களில் இருந்து பெரியவர்களையும், குழந்தைகளையும் ஈயம் வந்தடைகிறது.
சுவர்களில் உரிந்த பெயிண்ட்களை வாயில் போட்டு மெல்லும் பழக்கம் குழந்தைகளுக்கும் இருக்கும். இது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அத்துடன், பெண்கள் நெற்றியிலும் தலை வகிட்டிலும் இட்டுக்கொள்ளும் குங்குமத்தில் நிறமியாக ஈயம் சேர்க்கப்படுகிறது. செப்புப் பாத்திரங்களில் ஈய முலாம் பூசி, சமையலுக்குப் பயன்படுத்தும் பழக்கம் இன்றும் பரவலாக உள்ளது. இது போன்ற காரணங்களாலும் உடலுக்கு ஈயத்தால் பாதிப்பு வரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
பெரியவர்களைவிட குழந்தைகள் தான் ஈயத்தின் பாதிப்புக்கு எளிதாகவும், தீவிரமாகவும் ஆளாகிறார்கள். பெரியவர்களின் உடலில் சேரும் ஈயத்தில் 20 முதல் 30 சதவீதம் வரை ஜீரண மண்டலம் மூலம் உடலில் சேர்கின்றன. ஆனால், குழந்தைகளின் உடலில் சேரும் ஈயத்தில் 50 சதவீதத்தை, அவர்கள் உடல் அப்படியே ஈர்த்துக்கொள்கிறது. குழந்தைகளுக்குள் வேதி மாசுகள் அதிகமாக சேரும் வாய்ப்பு உள்ளன. இதனால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அவர்களுடைய நுண்ணறிவுத் திறன், பேச்சுத் திறன், கல்வித் திறன் போன்றவற்றில் குறைபாடு ஏற்படுகிறது.
பொதுவாக நமது உடலில் வெளியில் இருந்து அந்நிய நச்சுப் பொருட்கள் நுழையும்போது, ரத்தத்தில் கலந்து எல்லாப் பாகங்களுக்கும் பரவும். மூளைக்கும் தண்டுவடத்துக்கும் போகும் ரத்தம் நச்சுப் பொருட்களைக்கொண்டு செல்லாமல், நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கிறது. இதனை மூளை ரத்த நஞ்சுத்தடை (பிளட் பிரைன் பேரியர்) என்பர். ஆனால், குழந்தைகளிடம் இந்தப் பிளட் பிரைன் பேரியர் அமைப்பு வளர்ச்சியடைந்திருக்காது. எனவே, அவர்கள் உடலைச் சென்றடையும் ஈயம் போன்ற வேதி நஞ்சுகள் மூளைக்கு எளிதில் பரவி நரம்புமண்டலத்தில் கடும் பாதிப்புகளை உருவாக்குகின்றன.

தாயின் ரத்தம் ஈயத்தால் மாசடைந்து இருந்தால், தொப்புள் கொடி வழியாக அது கருப்பையில் வளரும் குழந்தையைச் சென்றடைகிறது. இதனால் குறைப்பிரசவம், எடை குறைவாகப் பிறப்பது, திறன் குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகள் பிறப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இந்திய அளவில் ஈயப் பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய ஆதாரமாக, ஈயம் கலந்த பெயிண்ட்கள் உள்ளன. வாழிடங்களிலும், பணியிடங்களிலும் சுவர்கள், பர்னிச்சர் பொருட்களில் பூசப்பட்ட பெயிண்ட்களில் இருந்து பெரியவர்களையும், குழந்தைகளையும் ஈயம் வந்தடைகிறது.
சுவர்களில் உரிந்த பெயிண்ட்களை வாயில் போட்டு மெல்லும் பழக்கம் குழந்தைகளுக்கும் இருக்கும். இது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அத்துடன், பெண்கள் நெற்றியிலும் தலை வகிட்டிலும் இட்டுக்கொள்ளும் குங்குமத்தில் நிறமியாக ஈயம் சேர்க்கப்படுகிறது. செப்புப் பாத்திரங்களில் ஈய முலாம் பூசி, சமையலுக்குப் பயன்படுத்தும் பழக்கம் இன்றும் பரவலாக உள்ளது. இது போன்ற காரணங்களாலும் உடலுக்கு ஈயத்தால் பாதிப்பு வரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.






