என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
குழந்தையின்மைக்கும் தைராய்டு காரணமாக சொல்லப்படுகிறது. எனினும் தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம்.
உடல் பருமன் என்ற சொல், நம் உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்புச் சத்து சேர்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேர்வதற்கு சோம்பல், தவறான உணவுப் பழக்கம், உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. அதே நேரத்தில் தைராய்டு பிரச்சினையும் ஒரு காரணம் என்று பரவலாக சொல்லப்படுகிறது. உண்மையில் தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது இல்லை. ஆனால், நீர் அதிகமாகச் சேர்கிறது. அந்த நீர்தான் உடலை பருமனானதுபோல் காட்டுகிறது.
தைராய்டு பிரச்சினைக்காக தைராக்சின் சிகிச்சையைத் தொடங்கியதும், உடலில் இருந்து நீர் வேகமாக வெளியேறும். சராசரியாக 10 லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டால், உடல் எடையில் 10 கிலோ அளவுக்கு குறையும். எனவே, உடல் பருமனுக்கு தைராய்டு மட்டுமே காரணம் என்று நினைப்பது தவறு.
அதே நேரத்தில் கொழுப்புச் சத்துக் காரணமாக உடல் பருமன் ஏற்பட்டவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருக்கும். அவர்களுக்கு தைராய்டு உள்ளதாக நினைத்து தைராக்சின் உட்பட மருந்துகளை கொடுத்து உடல் எடையைக் குறைக்க முயல்வது தவறான மருத்துவ முறையாகும்.
அதேபோல் குழந்தையின்மைக்கும் தைராய்டு காரணமாக சொல்லப்படுகிறது. சில பெண்களுக்கு குழந்தையின்மை என்பது இயல்பானதாக இருக்கும். எனினும் தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம். தைராய்டு மிகுதியாகவோ, குறைவாகவோ அல்லது தைராய்டு எதிர் அணுக்களால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கி இந்தப் பிரச்சினையை சரிசெய்து விடலாம். அவர்கள் தாய்மை அடையவும் முடியும்.
இதற்கு மாறாக சில பெண்களுக்கு உடல்நலக் குறைப்பாட்டால் மகப்பேறின்மை பிரச்சினை இருக்கும். இதுபோன்ற பெண்களுக்கு தைராய்டு சிகிச்சை செய்வதில் பலனில்லை என்கிறார்கள், மருத்துவர்கள்.
தைராய்டு பிரச்சினைக்காக தைராக்சின் சிகிச்சையைத் தொடங்கியதும், உடலில் இருந்து நீர் வேகமாக வெளியேறும். சராசரியாக 10 லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டால், உடல் எடையில் 10 கிலோ அளவுக்கு குறையும். எனவே, உடல் பருமனுக்கு தைராய்டு மட்டுமே காரணம் என்று நினைப்பது தவறு.
அதே நேரத்தில் கொழுப்புச் சத்துக் காரணமாக உடல் பருமன் ஏற்பட்டவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருக்கும். அவர்களுக்கு தைராய்டு உள்ளதாக நினைத்து தைராக்சின் உட்பட மருந்துகளை கொடுத்து உடல் எடையைக் குறைக்க முயல்வது தவறான மருத்துவ முறையாகும்.
அதேபோல் குழந்தையின்மைக்கும் தைராய்டு காரணமாக சொல்லப்படுகிறது. சில பெண்களுக்கு குழந்தையின்மை என்பது இயல்பானதாக இருக்கும். எனினும் தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம். தைராய்டு மிகுதியாகவோ, குறைவாகவோ அல்லது தைராய்டு எதிர் அணுக்களால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கி இந்தப் பிரச்சினையை சரிசெய்து விடலாம். அவர்கள் தாய்மை அடையவும் முடியும்.
இதற்கு மாறாக சில பெண்களுக்கு உடல்நலக் குறைப்பாட்டால் மகப்பேறின்மை பிரச்சினை இருக்கும். இதுபோன்ற பெண்களுக்கு தைராய்டு சிகிச்சை செய்வதில் பலனில்லை என்கிறார்கள், மருத்துவர்கள்.
காலையில் சீக்கிரமா சமைக்கணும். சுலபமாவும் இருக்கணும் என்று நினைப்பவர்களுக்கான ரெசிபி இது. இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பிரெட் - 6 துண்டுகள்
புளிக்காத கெட்டித் தயிர் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 1
குடைமிளகாய் - பாதி
கேரட் - சிறியது 1
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லி, குடைமிளகாய், கேரட், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பிரெட் துண்டுகளின் ஓரங்களை எல்லாம் கட் செய்து நீக்கிவிடவும்.
ஒரு மெல்லிய துணியில் தயிரை போட்டு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கொள்ளவும்.
வடிகட்டிய தயிரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், கேரட், தக்காளி, கொத்தமல்லி, பச்சைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
இக்கலவையை சிறிதளவு எடுத்து ஒரு பிரெட் துண்டின் மேல் பரப்பிவிட்டு மற்றொரு பிரெட் துண்டை அதன் மேல் வைக்கவும்.
பின்னர் முக்கோணம், சதுரம் என விருப்பப்பட்ட வடிவில் இரண்டு பிரெட் துண்டுகளையும் சேர்த்து வைத்து கட் செய்து கொள்ளவும்.
குறிப்பு:
* விருப்பப்பட்டால் பிரெட் துண்டுகளை டோஸ்ட் செய்தும் உபயோகிக்கலாம்.
பிரெட் - 6 துண்டுகள்
புளிக்காத கெட்டித் தயிர் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 1
குடைமிளகாய் - பாதி
கேரட் - சிறியது 1
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லி, குடைமிளகாய், கேரட், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பிரெட் துண்டுகளின் ஓரங்களை எல்லாம் கட் செய்து நீக்கிவிடவும்.
ஒரு மெல்லிய துணியில் தயிரை போட்டு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கொள்ளவும்.
வடிகட்டிய தயிரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், கேரட், தக்காளி, கொத்தமல்லி, பச்சைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
இக்கலவையை சிறிதளவு எடுத்து ஒரு பிரெட் துண்டின் மேல் பரப்பிவிட்டு மற்றொரு பிரெட் துண்டை அதன் மேல் வைக்கவும்.
பின்னர் முக்கோணம், சதுரம் என விருப்பப்பட்ட வடிவில் இரண்டு பிரெட் துண்டுகளையும் சேர்த்து வைத்து கட் செய்து கொள்ளவும்.
குறிப்பு:
* விருப்பப்பட்டால் பிரெட் துண்டுகளை டோஸ்ட் செய்தும் உபயோகிக்கலாம்.
* தயாரித்து நீண்ட நேரம் கழித்து சாப்பிட்டால் தயிர் பிரெட்டுடன் நன்கு ஊறிவிடும் என்பதால், பரிமாறுவதற்கு சற்று நேரம் முன்பாக தயிர் சாண்ட்விச்சைத் தயாரிக்கவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கோடை விடுமுறையில் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியோடு எங்கேனும் சென்றுவர வேண்டும் என்றும் நினைப்பீர்கள் அல்லவா! அதற்கான திட்டமிடலில் நீங்கள் அவசியம் செய்யக்கூடாதவை பற்றிப் பார்ப்போம்.
கோடை விடுமுறையில் ஒரு வாரமோ, இரு வாரங்களோ பிள்ளைகளுடன் மகிழ்ச்சியோடு எங்கேனும் சென்றுவர வேண்டும் என்றும் நினைப்பீர்கள் அல்லவா! அதற்கான திட்டமிடலில் நீங்கள் அவசியம் செய்யக்கூடாதவை பற்றிப் பார்ப்போம்.
1. முதலில் திட்டமிடுவது பெற்றோரான உங்களின் வேலை மட்டும்தான் எனும் நினைப்பிலிருந்து வெளியே வாருங்கள். ஏனெனில், இந்தக் கோடை விடுமுறை உங்களின் பிள்ளைகளுக்கானது. எனவே, அவர்கள் எவ்வாறு செலவழிக்க விரும்புகிறார்கள் என்பதை அறிந்துகொள்வது மிகவும் அவசியம். பின்பு, குடும்பத்தினர் அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து ஆலோசித்து விடுமுறைக்கான திட்டமிடலை முடிவுசெய்யுங்கள்.
2. ஆலோசனை செய்கிறேன் என்று அங்கு உங்களின் கருத்தைக் கடுமையாக வற்புறுத்தாதீர்கள். குடும்பத் தலைவர் எனும் முறையில் உங்கள்மீது மதிப்பும் சிறு அச்சமும் பிள்ளைகளுக்கு இருக்கக்கூடும். அதனால், நீங்கள் சொல்வதை மறுத்துப்பேச முடியாத நிலையில் இருக்கலாம். அவ்விதம் நிகழாத வண்ணம் நெகிழ்வான உரையாடலாக அமையட்டும்.
3. வெளியூர் செல்வது என முடிவெடுத்துவிட்டீர்கள் எனில், அங்கும் பாடப் புத்தகங்களை எடுத்துவர வேண்டும் என்ற விதியை உருவாக்காதீர்கள். அது, சுற்றுலா செல்லும் மனநிலையைக் கெடுத்துவிடலாம். சுற்றுலாவுக்கு வரவில்லை என்றும்கூட பிள்ளைகள் கூறிவிடலாம். ஒருவேளை, பிள்ளைகள் தாங்களாகவே பாடப் புத்தகங்களை எடுத்துவந்தால் அதற்கும் தடை போட வேண்டும்.
4. வெளியூர் செல்வதற்குத் தேர்ந்தெடுக்கும் இடம், உறவினர் வீடாகவோ அதன் அருகே இருக்கும் சுற்றுலா தளமாகவோ இருக்க வேண்டும் என்று அடம்பிடிக்காதீர்கள். பிள்ளைகள் பார்ப்பதற்கு விரும்பும் இடங்களாகத் தேர்வு செய்வதே நல்லது. அப்போதே, சுற்றுலா மகிழ்ச்சியோடு அமையும்.
5. கோடை விடுமுறையைக் கழிக்க வெளியூர் செல்வதுதான் ஒரே வழி என்று நினைத்துவிடவும் வேண்டாம். பிள்ளைகள் வீட்டிலிருந்து கொண்டே நண்பர்களோடு புதிதாக ஏதேனும் செய்ய விரும்பினால், மறுக்காமல் சம்மதம் சொல்லுங்கள். உள்ளூரில் பார்க்க வேண்டிய இடங்கள் எனப் பிள்ளைகள் கூறினால், அங்கும் அழைத்துச் செல்வதற்குத் தயக்கம் காட்டாதீர்கள்.
இவை தவிர, சுற்றுலா செல்லும்போது தன் நண்பர் யாரையாவது அழைத்துவருவதாக உங்கள் பிள்ளை சொன்னால், குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தான் எனக் கறார்தனம் காட்டாதீர்கள். பிள்ளையின் நண்பரின் பெற்றோரோடு பேசி, அவரை அழைத்துச் செல்ல அனுமதிபெறுங்கள். முடிந்தால் இரு குடும்பங்களும் இணைந்து செல்வது இன்னும் சிறப்பானது. சுற்றுலா சென்றதுக்கான நினைவுகளை ஏந்தி வருவதற்கு தயாராகச் செல்லுங்கள்.
1. முதலில் திட்டமிடுவது பெற்றோரான உங்களின் வேலை மட்டும்தான் எனும் நினைப்பிலிருந்து வெளியே வாருங்கள். ஏனெனில், இந்தக் கோடை விடுமுறை உங்களின் பிள்ளைகளுக்கானது. எனவே, அவர்கள் எவ்வாறு செலவழிக்க விரும்புகிறார்கள் என்பதை அறிந்துகொள்வது மிகவும் அவசியம். பின்பு, குடும்பத்தினர் அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து ஆலோசித்து விடுமுறைக்கான திட்டமிடலை முடிவுசெய்யுங்கள்.
2. ஆலோசனை செய்கிறேன் என்று அங்கு உங்களின் கருத்தைக் கடுமையாக வற்புறுத்தாதீர்கள். குடும்பத் தலைவர் எனும் முறையில் உங்கள்மீது மதிப்பும் சிறு அச்சமும் பிள்ளைகளுக்கு இருக்கக்கூடும். அதனால், நீங்கள் சொல்வதை மறுத்துப்பேச முடியாத நிலையில் இருக்கலாம். அவ்விதம் நிகழாத வண்ணம் நெகிழ்வான உரையாடலாக அமையட்டும்.
3. வெளியூர் செல்வது என முடிவெடுத்துவிட்டீர்கள் எனில், அங்கும் பாடப் புத்தகங்களை எடுத்துவர வேண்டும் என்ற விதியை உருவாக்காதீர்கள். அது, சுற்றுலா செல்லும் மனநிலையைக் கெடுத்துவிடலாம். சுற்றுலாவுக்கு வரவில்லை என்றும்கூட பிள்ளைகள் கூறிவிடலாம். ஒருவேளை, பிள்ளைகள் தாங்களாகவே பாடப் புத்தகங்களை எடுத்துவந்தால் அதற்கும் தடை போட வேண்டும்.
4. வெளியூர் செல்வதற்குத் தேர்ந்தெடுக்கும் இடம், உறவினர் வீடாகவோ அதன் அருகே இருக்கும் சுற்றுலா தளமாகவோ இருக்க வேண்டும் என்று அடம்பிடிக்காதீர்கள். பிள்ளைகள் பார்ப்பதற்கு விரும்பும் இடங்களாகத் தேர்வு செய்வதே நல்லது. அப்போதே, சுற்றுலா மகிழ்ச்சியோடு அமையும்.
5. கோடை விடுமுறையைக் கழிக்க வெளியூர் செல்வதுதான் ஒரே வழி என்று நினைத்துவிடவும் வேண்டாம். பிள்ளைகள் வீட்டிலிருந்து கொண்டே நண்பர்களோடு புதிதாக ஏதேனும் செய்ய விரும்பினால், மறுக்காமல் சம்மதம் சொல்லுங்கள். உள்ளூரில் பார்க்க வேண்டிய இடங்கள் எனப் பிள்ளைகள் கூறினால், அங்கும் அழைத்துச் செல்வதற்குத் தயக்கம் காட்டாதீர்கள்.
இவை தவிர, சுற்றுலா செல்லும்போது தன் நண்பர் யாரையாவது அழைத்துவருவதாக உங்கள் பிள்ளை சொன்னால், குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தான் எனக் கறார்தனம் காட்டாதீர்கள். பிள்ளையின் நண்பரின் பெற்றோரோடு பேசி, அவரை அழைத்துச் செல்ல அனுமதிபெறுங்கள். முடிந்தால் இரு குடும்பங்களும் இணைந்து செல்வது இன்னும் சிறப்பானது. சுற்றுலா சென்றதுக்கான நினைவுகளை ஏந்தி வருவதற்கு தயாராகச் செல்லுங்கள்.
தீர்க்கமுடியாத பிரச்சனை என்றால் அது மாமியார் மருமகள் சண்டைதான். முறையான புரிதல் இல்லாத மாமியார் மருமகள் பிரச்சனைகளுக்கு உளவியல் ரீதியில் எப்படித் தீர்வு காண்பது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
வெவ்வேறுவிதமான பழக்கவழக்கங்களில் வளர்ந்த இரண்டு நபர் திருமணத்தில் இணையும்போது ஏற்படும் அனுசரணை இல்லாத நிலைதான் ஒட்டுமொத்த குடும்பத்திலும் சச்சரவுகளை ஏற்படுத்துகிறது. முறையற்ற தொடர்புகள், பொருளாதாரச் சிக்கல் போன்றவையும் பிரச்னைகளுக்குக் காரணமாக அமைகின்றன.
குறிப்பிட்ட கலாசாரம், பழக்கவழக்கங்களைப் பின்பற்றி வளர்ந்த பெண்கள் திருமணமாகி வேறொரு கலாசாரத்துக்குள் செல்லும்போது அதைக் கையாளத் தெரியாமல் தடுமாறுகின்றனர். அந்தத் தடுமாற்றம் அவர்களது கணவன்மாரிடம் நேரடியாக வெளிப்படுகிறது. பெற்றோர் மனைவி இருவரையும் சமாளிக்க வேண்டிய பொறுப்பு புது மாப்பிள்ளைகளுக்கு மட்டுமே உரியது.
திருமணமான பின்பு கணவன் மனைவிக்குத் தேவையான உதவிகளைச் செய்யலாம். ஆனால் அதற்கும் ஓர் அளவுகோல் உண்டு. திருமணத்துக்கு முன்புவரை சாப்பாடு ஊட்டிவிட்டு, தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு... என மகனை அரவணைத்த அம்மாவுக்கும் சகோதரிகளுக்கும், திருமணத்துக்குப் பிறகு அவன் மனைவிக்குச் செய்யும் அதீத பணிவிடைகள் வலியை ஏற்படுத்தும். இதை ஆண்கள் உணர வேண்டும்.
மாமியார் என்பவர் குனியக் குனியக் கொட்டுபவர், மகனை தன் கையில் வைத்துக்கொள்வார்' என்று மகள்களுக்குப் பல அம்மாக்கள் 'அட்வைஸ்' பண்ணிப் புகுந்த வீட்டுக்கு அனுப்புவதுண்டு. அதே மனப்பான்மையில் புகுந்தவீட்டுக்குள் வரும் பெண்ணுக்கு மாமியார் சாந்த சொரூபியாக இருந்தாலும் பத்ரகாளியாகவே தெரிவார். அதனால் திருமணமான புதிதில் மனைவியிடம் அம்மாவைப் பற்றிய மனத்தாங்கல்களை ஆண்கள் கூறக்கூடாது.
'மாமியார் என்னும் கேரக்டரையே எனக்குப் பிடிக்காது' என்றுகூறும் மனைவிகளுக்கு, 'உன்னுடைய அம்மாவும் மாமியார் ஸ்தானத்தில் இருப்பவர்தான்' என்பதைக் கணவன் நாசூக்காக எடுத்துக்கூற வேண்டும். 'உன்னை எப்படி உன் அம்மா அப்பா செல்லமாக வளர்த்தார்களோ... அதே போலத்தான் என்னையும் என் அம்மா, அப்பா வளர்த்தார்கள்' என்று தங்கள் பெற்றோரைப் பற்றி மனைவியிடம் கூறவேண்டும்.
தான் நினைத்ததெல்லாம் நடக்காவிட்டால் தனிக்குடித்தனம் செல்ல அடம்பிடிக்கும் மனைவியிடம், 'என் அம்மா, அப்பா இல்லாம நான் இல்ல. அவங்க என்னை அம்போன்னு விட்டிருந்தா நீ எனக்கு கிடைச்சிருக்க மாட்ட' என்று சாதுவாக சொன்னால் போதும், மனைவி அப்படியே 'இம்ப்ரஸ்' ஆகிவிடுவார்.
'உன் மனைவிக்கு நான் இருக்கிறது பிடிக்கவில்லையா' என்று கேட்கும் அம்மாக்களிடம், 'அப்படியில்லம்மா, அவக்கிட்ட பேசி புரிய வைக்கலாம், நான் பேசி சரி பண்றேன்' என்று நிதானமாக எடுத்துக் கூறினால் எந்த அம்மாவும் ஏற்றுக் கொள்வார்.
திருமணத்துக்கு முன்பு ஒரு ஆண் எப்படி இருந்தாலும் திருமணத்துக்குப் பிறகு அம்மா அப்பாவிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டியது தலையாய கடமை. அம்மாவிடமும் சரி, மனைவியிடமும் சரி, நடந்து முடிந்த எதிர்மறையான நிகழ்வுகளைக் கூறி எந்த இடத்திலும் ஒப்பிட்டுப் பேசக்கூடாது.
உலகத்திலேயே ஒருவருக்குத் துரோகம் நினைக்காதது அம்மா, அப்பா மட்டும்தான் என்பதை ஒருபோதும் மறக்கக்கூடாது. உங்களை நம்பி வரும் மனைவியையும் ஒருபோதும் உதாசீனம் செய்யாதீர்கள்.
குறிப்பிட்ட கலாசாரம், பழக்கவழக்கங்களைப் பின்பற்றி வளர்ந்த பெண்கள் திருமணமாகி வேறொரு கலாசாரத்துக்குள் செல்லும்போது அதைக் கையாளத் தெரியாமல் தடுமாறுகின்றனர். அந்தத் தடுமாற்றம் அவர்களது கணவன்மாரிடம் நேரடியாக வெளிப்படுகிறது. பெற்றோர் மனைவி இருவரையும் சமாளிக்க வேண்டிய பொறுப்பு புது மாப்பிள்ளைகளுக்கு மட்டுமே உரியது.
திருமணமான பின்பு கணவன் மனைவிக்குத் தேவையான உதவிகளைச் செய்யலாம். ஆனால் அதற்கும் ஓர் அளவுகோல் உண்டு. திருமணத்துக்கு முன்புவரை சாப்பாடு ஊட்டிவிட்டு, தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு... என மகனை அரவணைத்த அம்மாவுக்கும் சகோதரிகளுக்கும், திருமணத்துக்குப் பிறகு அவன் மனைவிக்குச் செய்யும் அதீத பணிவிடைகள் வலியை ஏற்படுத்தும். இதை ஆண்கள் உணர வேண்டும்.
மாமியார் என்பவர் குனியக் குனியக் கொட்டுபவர், மகனை தன் கையில் வைத்துக்கொள்வார்' என்று மகள்களுக்குப் பல அம்மாக்கள் 'அட்வைஸ்' பண்ணிப் புகுந்த வீட்டுக்கு அனுப்புவதுண்டு. அதே மனப்பான்மையில் புகுந்தவீட்டுக்குள் வரும் பெண்ணுக்கு மாமியார் சாந்த சொரூபியாக இருந்தாலும் பத்ரகாளியாகவே தெரிவார். அதனால் திருமணமான புதிதில் மனைவியிடம் அம்மாவைப் பற்றிய மனத்தாங்கல்களை ஆண்கள் கூறக்கூடாது.
'மாமியார் என்னும் கேரக்டரையே எனக்குப் பிடிக்காது' என்றுகூறும் மனைவிகளுக்கு, 'உன்னுடைய அம்மாவும் மாமியார் ஸ்தானத்தில் இருப்பவர்தான்' என்பதைக் கணவன் நாசூக்காக எடுத்துக்கூற வேண்டும். 'உன்னை எப்படி உன் அம்மா அப்பா செல்லமாக வளர்த்தார்களோ... அதே போலத்தான் என்னையும் என் அம்மா, அப்பா வளர்த்தார்கள்' என்று தங்கள் பெற்றோரைப் பற்றி மனைவியிடம் கூறவேண்டும்.
தான் நினைத்ததெல்லாம் நடக்காவிட்டால் தனிக்குடித்தனம் செல்ல அடம்பிடிக்கும் மனைவியிடம், 'என் அம்மா, அப்பா இல்லாம நான் இல்ல. அவங்க என்னை அம்போன்னு விட்டிருந்தா நீ எனக்கு கிடைச்சிருக்க மாட்ட' என்று சாதுவாக சொன்னால் போதும், மனைவி அப்படியே 'இம்ப்ரஸ்' ஆகிவிடுவார்.
'உன் மனைவிக்கு நான் இருக்கிறது பிடிக்கவில்லையா' என்று கேட்கும் அம்மாக்களிடம், 'அப்படியில்லம்மா, அவக்கிட்ட பேசி புரிய வைக்கலாம், நான் பேசி சரி பண்றேன்' என்று நிதானமாக எடுத்துக் கூறினால் எந்த அம்மாவும் ஏற்றுக் கொள்வார்.
திருமணத்துக்கு முன்பு ஒரு ஆண் எப்படி இருந்தாலும் திருமணத்துக்குப் பிறகு அம்மா அப்பாவிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டியது தலையாய கடமை. அம்மாவிடமும் சரி, மனைவியிடமும் சரி, நடந்து முடிந்த எதிர்மறையான நிகழ்வுகளைக் கூறி எந்த இடத்திலும் ஒப்பிட்டுப் பேசக்கூடாது.
உலகத்திலேயே ஒருவருக்குத் துரோகம் நினைக்காதது அம்மா, அப்பா மட்டும்தான் என்பதை ஒருபோதும் மறக்கக்கூடாது. உங்களை நம்பி வரும் மனைவியையும் ஒருபோதும் உதாசீனம் செய்யாதீர்கள்.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையை இயற்கை வழியில் விளக்கெண்ணெய் மூலமாகவே சரி செய்துவிடலாம்.
விளக்கெண்ணெய் நல்ல மலமிளக்கி. அதனால், வாரத்துக்கு மூன்று நாள் உணவில் கால் டீஸ்பூன் அளவுக்குச் சேர்த்துக்கொண்டால், மலச்சிக்கல் இல்லாமல் நிம்மதியாக வாழலாம். மலச்சிக்கல்தான் பல ஆரோக்கிய சிக்கல்களுக்கு ஆரம்பம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். விளக்கெண்ணெய்க்கு பித்தத்தைத் தணிக்கிற இயல்பு இருப்பதால், பித்த உடம்புக்காரர்கள் இதை நான் மேலே சொன்ன அளவில் சாப்பிடுவது நல்லதுதான்.
சிலருக்கு, வெயில் காலங்களில் நெஞ்சுக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் எரிச்சல் இருக்கும். குழந்தைகள் உள்பட எல்லோருக்கும் ஜீரணமாவதில் சிக்கல் ஏற்படும். அவர்கள் இரவுகளில் மிதமான சூடுள்ள நீரில் விளக்கெண்ணெய் சேர்த்துக் குடித்தால், அந்தப் பிரச்னைகள் சரியாகும். அளவைப் பொறுத்தவரை பெரியவர்கள் என்றால், கால் டீஸ்பூனும் 3-ல் இருந்து 5 வயது வரையான குழந்தைகள் என்றால் நாலைந்து சொட்டு அளவும் விளக்கெண்ணெய் எடுத்துக்கொள்ளலாம். பத்து வயதுக்கு மேல் கால் டீஸ்பூன் கொடுக்கலாம். நாள் கணக்கைப் பொறுத்தவரை பெரியவர்களுக்கு வாரத்துக்கு இரண்டு நாள், குழந்தைகளுக்கு வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் இப்படிக் கொடுத்தால் போதுமானது.

கர்ப்பிணிகளுக்கும் மலச்சிக்கல் பிரச்சனை அதிகமாக இருக்கும். இதற்காக, மாத்திரை எடுத்துக்கொள்கிற கர்ப்பிணிப் பெண்கள் பலரையும் பார்த்திருக்கிறேன். இதை இயற்கை வழியில் விளக்கெண்ணெய் மூலமாகவே சரி செய்துவிடலாம். வாரத்துக்கு இரண்டு நாள் மட்டும் கால் டீஸ்பூன் விளக்கெண்ணெய்யை வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
பலருக்கும் விளக்கெண்ணெயின் குளிர்ச்சித் தன்மை குறித்த பயம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள், தொப்புளில் உச்சந்தலையில், இரவுகளில் உள்ளங்கால்களில் தடவிக் கொள்ளலாம். நல்லெண்ணெய் போலவே விளக்கெண்ணெய் குளியலும் எடுக்கலாம். உடல்சூட்டை நன்கு தணிக்கும்.
விளக்கெண்ணெயின் நம்பகத்தன்மைக் குறித்துச் சந்தேகப்படுபவர்கள், ஆமணக்கு விதையை வாங்கி, செக்கில் கொடுத்து ஆட்டிப் பயன்படுத்தலாம்.
சிலருக்கு, வெயில் காலங்களில் நெஞ்சுக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் எரிச்சல் இருக்கும். குழந்தைகள் உள்பட எல்லோருக்கும் ஜீரணமாவதில் சிக்கல் ஏற்படும். அவர்கள் இரவுகளில் மிதமான சூடுள்ள நீரில் விளக்கெண்ணெய் சேர்த்துக் குடித்தால், அந்தப் பிரச்னைகள் சரியாகும். அளவைப் பொறுத்தவரை பெரியவர்கள் என்றால், கால் டீஸ்பூனும் 3-ல் இருந்து 5 வயது வரையான குழந்தைகள் என்றால் நாலைந்து சொட்டு அளவும் விளக்கெண்ணெய் எடுத்துக்கொள்ளலாம். பத்து வயதுக்கு மேல் கால் டீஸ்பூன் கொடுக்கலாம். நாள் கணக்கைப் பொறுத்தவரை பெரியவர்களுக்கு வாரத்துக்கு இரண்டு நாள், குழந்தைகளுக்கு வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் இப்படிக் கொடுத்தால் போதுமானது.
இன்றைக்குப் பல பெண்கள் நீண்ட நேரம் உட்கார்ந்தவண்ணம்தான் வேலைப் பார்க்கிறார்கள். அதிலும், குறிப்பாக குஷன் நாற்காலிகளில் உட்கார்ந்து வேலைப் பார்க்கிற பெண்களுக்கு மூலச்சூடு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். வராமல் தடுக்க, உணவில் சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். வந்துவிட்டால், இரவுகளில் நான் மேலே சொன்னபடி, விளக்கெண்ணெய் கலந்த வெந்நீர் குடிக்கலாம்.

கர்ப்பிணிகளுக்கும் மலச்சிக்கல் பிரச்சனை அதிகமாக இருக்கும். இதற்காக, மாத்திரை எடுத்துக்கொள்கிற கர்ப்பிணிப் பெண்கள் பலரையும் பார்த்திருக்கிறேன். இதை இயற்கை வழியில் விளக்கெண்ணெய் மூலமாகவே சரி செய்துவிடலாம். வாரத்துக்கு இரண்டு நாள் மட்டும் கால் டீஸ்பூன் விளக்கெண்ணெய்யை வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
பலருக்கும் விளக்கெண்ணெயின் குளிர்ச்சித் தன்மை குறித்த பயம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள், தொப்புளில் உச்சந்தலையில், இரவுகளில் உள்ளங்கால்களில் தடவிக் கொள்ளலாம். நல்லெண்ணெய் போலவே விளக்கெண்ணெய் குளியலும் எடுக்கலாம். உடல்சூட்டை நன்கு தணிக்கும்.
விளக்கெண்ணெயின் நம்பகத்தன்மைக் குறித்துச் சந்தேகப்படுபவர்கள், ஆமணக்கு விதையை வாங்கி, செக்கில் கொடுத்து ஆட்டிப் பயன்படுத்தலாம்.
நெல்லிக்காய் விட்டமின்-சி நிறைந்தது. நோய் எதிர்ப்புச் சக்தியை தரவல்லது. இன்று நெல்லிக்காயில் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பெரிய நெல்லிக்காய் - 5,
பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
துவரம்பருப்பு வேகவைத்த நீர் - ஒரு கப்
பொடி செய்ய:
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு,
தனியா - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
நெய் - சிறிதளவு.
தாளிக்க:

செய்முறை:
பொடி செய்யக் கொடுத்துள்ளவற்றை, சிறிதளவு நெய்யில் வறுத்து ஆறவைத்து பொடித்து கொள்ளவும்.
நெல்லிக்காயை கொட்டை நீக்கி துருவிக்கொள்ளவும்.
துருவிய நெல்லிக்காயுடன் நறுக்கிய இஞ்சியை சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்த பின்னர் பருப்பு வேகவைத்த நீர் விட்டு… வறுத்து அரைத்த பொடி, நெல்லி - இஞ்சி விழுது சேர்த்து, உப்பு போட்டு ஒரு கொதிவிட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும் (விருப்பப்பட்டால், இறக்கிய பிறகு எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன் சேர்க்கலாம்.)
பெரிய நெல்லிக்காய் - 5,
பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
துவரம்பருப்பு வேகவைத்த நீர் - ஒரு கப்
பொடி செய்ய:
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு,
தனியா - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
நெய் - சிறிதளவு.
தாளிக்க:
எண்ணெய், கடுகு - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
பொடி செய்யக் கொடுத்துள்ளவற்றை, சிறிதளவு நெய்யில் வறுத்து ஆறவைத்து பொடித்து கொள்ளவும்.
நெல்லிக்காயை கொட்டை நீக்கி துருவிக்கொள்ளவும்.
துருவிய நெல்லிக்காயுடன் நறுக்கிய இஞ்சியை சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்த பின்னர் பருப்பு வேகவைத்த நீர் விட்டு… வறுத்து அரைத்த பொடி, நெல்லி - இஞ்சி விழுது சேர்த்து, உப்பு போட்டு ஒரு கொதிவிட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும் (விருப்பப்பட்டால், இறக்கிய பிறகு எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன் சேர்க்கலாம்.)
சத்தான நெல்லிக்காய் பருப்பு ரசம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தியானத்தினால் வரும் பயன்கள் என்ன? தியானத்தை ஒருவர் தொடர்ந்து செய்யும்போது அவர் சந்திக்கும் தடைகள் என்ன? அவற்றை எப்படி சரிசெய்வது என்பது பற்றி இங்கு நாம் காண்போம்.
தியானம் செய்முறை
தியானத்தின் நோக்கம் தியானிக்கப்படும் பொருளின் தன்மையை அறிந்து கொள்ளுல் ஆகும். அதற்கு மனம் ஒரு கருவியாக பயன்படுகிறது.
தியானத்தில் 2 நிலைகள் உள்ளன.
1. நம் மனதில் ஏதாவது ஒரு உருவத்தை குறித்தோ அல்லது ஒரு கருத்தை குறித்தோ தொடர்ந்து சிந்தனை செய்வது. மனதில் இருந்து எல்லாவிதமான எண்ணங்களையும் அகற்றிவிடுதல். முதல் நிலையில் ஏதாவது ஒரு பொருளின் மீது அல்லது குரு புகட்டிய ஒரு மந்திரத்தை உச்சரிக்க தொடங்குகிறோம். அப்போது நமக்கு ஒரு புதுமையான அனுபவம் உண்டாகும். இதுவரை நம் மனதில் புதைந்து உறங்கி கிடந்த நூற்றுக்கணக்கான நினைவுகள் நம் கண்முன்னே தோன்றும். நமக்கு இது சிக்கலாக கூட இருக்கும். அதற்கும் வழி இருக்கிறது. நாம் உச்சரிக்கும் மந்திரத்தை அதன் பொருள் உணர்ந்து அப்பொருளின் பாவத்துடன் நம்மை அதில் பிணைத்து கொண்டால், நாம் தியான நிலையை அடையமுடியும். மற்ற நினைவுகள் மறந்து போகும்.
இரண்டாம் நிலையில், எவ்வித இடர்பாடுகளும் இல்லாமல், அமைதியாக உட்கார்ந்து கொள்ள வேண்டும். கண்களை மூடிக்கொள்ளவேண்டும். கால் முதல் தலை வரை எல்லா உறுப்புகளும் ஓய்வில் இருக்க வேண்டும். காதுகள் திறந்திருந்தால், வெளிச்சத்தங்கள் இடையூறு செய்யும். மனதிலிருந்தும் பல எண்ணங்கள் எழும். நாம் அதை பொருட்படுத்த தேவையில்லை. வேடிக்கை பார்ப்பவரை போல நாம் ஒதுங்கி நிற்க வேண்டும். அப்போது நம் காதுகள் திறந்திருந்தாலும் எவ்வித இடர்பாடுகளும் இருக்காது. தியானம் செய்தவன் மூலம் நம்மை நாம் உணர முடியும்.
தியானத்தின் பலன்கள்
மனஅமைதி கிடைக்கும்.
படபடப்பு குறையும்
நினைவாற்றல் அதிகரிக்கும்.
நல்ல ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தும்.
வேலை செய்யும் ஆற்றல் அதிகமாகும்.
ரத்த அழுத்தம் குறையும்.
ஆஸ்துமா குணமாகும்.
அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும்
ஆயுள் அதிகரிக்கும்.
தியானத்தின் நோக்கம் தியானிக்கப்படும் பொருளின் தன்மையை அறிந்து கொள்ளுல் ஆகும். அதற்கு மனம் ஒரு கருவியாக பயன்படுகிறது.
தியானத்தில் 2 நிலைகள் உள்ளன.
1. நம் மனதில் ஏதாவது ஒரு உருவத்தை குறித்தோ அல்லது ஒரு கருத்தை குறித்தோ தொடர்ந்து சிந்தனை செய்வது. மனதில் இருந்து எல்லாவிதமான எண்ணங்களையும் அகற்றிவிடுதல். முதல் நிலையில் ஏதாவது ஒரு பொருளின் மீது அல்லது குரு புகட்டிய ஒரு மந்திரத்தை உச்சரிக்க தொடங்குகிறோம். அப்போது நமக்கு ஒரு புதுமையான அனுபவம் உண்டாகும். இதுவரை நம் மனதில் புதைந்து உறங்கி கிடந்த நூற்றுக்கணக்கான நினைவுகள் நம் கண்முன்னே தோன்றும். நமக்கு இது சிக்கலாக கூட இருக்கும். அதற்கும் வழி இருக்கிறது. நாம் உச்சரிக்கும் மந்திரத்தை அதன் பொருள் உணர்ந்து அப்பொருளின் பாவத்துடன் நம்மை அதில் பிணைத்து கொண்டால், நாம் தியான நிலையை அடையமுடியும். மற்ற நினைவுகள் மறந்து போகும்.
இரண்டாம் நிலையில், எவ்வித இடர்பாடுகளும் இல்லாமல், அமைதியாக உட்கார்ந்து கொள்ள வேண்டும். கண்களை மூடிக்கொள்ளவேண்டும். கால் முதல் தலை வரை எல்லா உறுப்புகளும் ஓய்வில் இருக்க வேண்டும். காதுகள் திறந்திருந்தால், வெளிச்சத்தங்கள் இடையூறு செய்யும். மனதிலிருந்தும் பல எண்ணங்கள் எழும். நாம் அதை பொருட்படுத்த தேவையில்லை. வேடிக்கை பார்ப்பவரை போல நாம் ஒதுங்கி நிற்க வேண்டும். அப்போது நம் காதுகள் திறந்திருந்தாலும் எவ்வித இடர்பாடுகளும் இருக்காது. தியானம் செய்தவன் மூலம் நம்மை நாம் உணர முடியும்.
தியானத்தின் பலன்கள்
மனஅமைதி கிடைக்கும்.
படபடப்பு குறையும்
நினைவாற்றல் அதிகரிக்கும்.
நல்ல ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தும்.
வேலை செய்யும் ஆற்றல் அதிகமாகும்.
ரத்த அழுத்தம் குறையும்.
ஆஸ்துமா குணமாகும்.
அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும்
ஆயுள் அதிகரிக்கும்.
வெப்பத்தின் காரணமாக தோலில் அதிக பாதிப்புகள் உருவாகும். இத்தகைய பாதிப்புகளில் இருந்து நம்மை தற்காத்து கொள்வது எப்படி? என பார்ப்போம்.
கோடை காலம் தொடங்கி விட்டது. கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் உக்கிரம் அடைவதற்கு முன்பே வெயில் நம்மை வறுத்தெடுக்கிறது. பொதுவாக கோடையில் இந்தியாவில் வெயிலின் அதிகமாக இருக்கும். குறிப்பாக தென் இந்தியாவில் அதன் தாக்கம் கடுமையாக இருக்கும்.
வெப்பத்தின் காரணமாக உடலில் சோர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படும். குறிப்பாக தோலில் அதிக பாதிப்புகள் உருவாகும். அரிப்பு, வியர்வை, கொப்பளங்கள் மற்றும் தொற்று நோய்கள் ஏற்படும். இத்தகைய பாதிப்புகளில் இருந்து நம்மை தற்காத்து கொள்வது எப்படி? என பார்ப்போம்.
வியர்க்குரு
கோடை காலத்தில் வெப்ப நிலை சாதாரணமாக 40-ல் இருந்து 45 டிகிரியை தொடுகிறது. ஆனால் மனித உடலில் இயல்பான வெப்ப நிலை 37 டிகிரி செல்சியல். எனவே உடலை குளிர்விக்க அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. எனவே உடலை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
அவ்வாறு பராமரிக்காவிட்டால் தோலில் உள்ள வியர்வை சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக் கொள்ளும். இதனால் வியர்க்குரு வரும். எனவே வெயில் காலத்தில் தினமும் 2 தடவை குளிர்ந்த நீரில் குளித்தால் வியர்க்குரு வராது.
வியர்வையை உடம்பில் தங்க விடாமல் முகத்தை வெறும் நீரால் கழுவுவது, உடம்பை ஈரமான துணியால் துடைத்துக் கொள்வது நல்லது. காலமின் லோஷனை பூசினால் அரிப்பு குறையும். அதன் விலை குறைவு.
வேனல் கட்டிகள்
தோலின் மூலம் வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை சரியாக வெளியேற முடியாமல் அழுக்கு போல் தங்கி விடும். அப்போது அங்கு பாக்டீரியா தொற்றிக் கொள்ள அந்த இடம் வீங்கி புண்ணாகி விடும். இது வேனல் கட்டி என்று அழைக்கப்படுகிறது. இதற்கு ஆண்டிபயாடிக் மருந்துகள், வலி நிவாரணிகள், வெளிப்பூச்சு களிம்புகள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். வெயிலில் அலைவதை தவிர்க்க வேண்டும். கட்டிகள் சீழ்பிடிக்கும் அளவுக்கு பெரியதாக இருந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டும். இந்த கட்டிகளை கையால் தொடவோ, கிள்ளவோ கூடாது. இதன் சீர் மற்ற இடங்களில் பட்டால் அங்கேயும் கட்டிகள் தோன்ற அதிக வாய்ப்புகள் உள்ளன.
படை - தேமல்
உடலில் ஈரமுள்ள பகுதிகளில் பூஞ்சை கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்ளும். குறிப்பாக வியர்க்குருவில் இந்த தொற்றும் சேர்ந்து கொண்டால் அரிப்புடன் கூடிய படை, தேமல் தோன்றும். அதை குணப்படுத்த களிம்பு அல்லது பவுடரை தடவ வேண்டும். அவற்றை நேரடியாக மருந்து கடைகளில் வாங்க வேண்டாம். தோல் சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற்று அவரது அறிவுறுத்தலின்படி பயன்படுத்தலாம். உள்ளாடைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் பூஞ்சை, படை வருவதை தடுக்கலாம்.
கோடை காலத்தில் சிறுநீர் கடுப்பு அதிக தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுவதாலும், தேவையான அளவு தண்ணீர் குடிக்காததும் இதற்கு முக்கிய காரணமாகும். நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் நீர்க்கடுப்பு பிரச்சினை தீரும்.
தொற்று நோய்கள்
வெயில் காலத்தில் சமைத்த உணவு வகைகள் விரைவில் கெட்டுவிடும். அவற்றில் நோய் கிருமிகள் அதிக அளவில் பெருகும். இந்த உணவுகளை சாப்பிடு வதால் வாந்தி, வயிற்றுப்போக்கு, சீதபதி, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வரும். ஆகவே வெயில் காலத்தில் சமைத்த உணவுகளை உடனுக்குடன் பயன்படுத்த வேண்டும். உணவு மீது ஈக்கள் மொய்க்காமல் மூடி பாதுகாக்க வேண்டியது அவசியம். தண் ணீரை கொதிக்க காய்ச்சிஆற வைத்து குடியுங்கள்.
எண்ணெய் சேர்ந்த உணவுகள் மற்றும் அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ஆவியில் வேக வைத்த காய்கறிகள், இயற்கையிலேயே குளிர்ச்சியான உணவுகள், பழங்கள், மோர், இளநீர், தண்ணீர் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
சரும நோய்கள்
இறுக்கமான ஆடைகள் மற்றும் உள்ளாடைகளால் சருமத்தில் வியர்வை தேங்கி படர்தாமரை, அரிப்பு, தோல் வீங்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். அதிக தூசு, வெப்பம் கலந்த காற்று காரணமாகவும் சருமத்தில் அலர்ஜி ஏற்படும். உடலை மறைக்கும் தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது, தோல் வீங்கிய பகுதிகளை கையால் தொந்தரவு செய்யாமல் இருப்பது, முடிந்தவரை உடலை தூய்மையாக வைத்திருப்பது, படர்தாமரைக்காக கிரீம்களை மருத்துவர் ஆலோசனையோடு தடவுவது போன்றவற்றை மேற்கொண்டாலே பிரச்சினை தீர உதவும்.
குளிக்கும்போது மிகவும் மிருதுவான (மைல்ட்) சோப்பை பயன்படுத்துவது நல்லது.கடுமையான வெப்பத்தால் சருமம் பாதிக்கப்படுகிறது. அதற்கு காரணம் சூரிய ஒளியில் உள்ள ‘அல்ட்ராவைலட்’ ஒளியே காரணம். அதுவே தோல் வறண்டு போக காரணமாகிறது. எனவே ‘பிரெஷ்’ ஆன பழச்சாறு, காய்கறி சாறு போன்றவற்றை பருகுங்கள். இது உடலின் ஈரப்பசையை காக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.
அது தவிர தினமும் 8 டம்ளர் தண்ணீர் பருகலாம். அதுவும் உடலின் ஈரத்தன்மையை பாதுகாக்கும். கோடை காலத்தில் காபி, தேநீர் குடிப்பதை குறைத்து கொள்ள வேண்டும். வாயு நிரப்பப்பட்ட செயற்கை மென்பானங்கள் மற்றும் குளிர்பானங்களை அருந்த வேண்டாம்.
அதற்கு பதிலாக இளநீர், மோர், சர்பத், பதநீர் போன்றவற்றை அதிக அளவில் குடிக்கலாம். எலுமிச்சை பழ சாற்றில் சமையல் உப்பு அல்லது சர்க்கரை கலந்து குடிப்பதும் உடல்நலத்துக்கு சிறந்தது.
தர்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, பலாப்பழம், அன்னாசி, கிர்ணி, நுங்கு போன்ற நீர்ச்சத்து மிகுந்த பழங்கள் சாப்பிடலாம் அல்லது இவற்றை சாறு எடுத்தும் பருகலாம்.
தொடர்ந்து வெயிலில் இருப்பதை தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. அப்படி வெளியே செல்ல வேண்டுமென்றால் குடையை எடுத்து கொள்ளலாம். இதுபோன்ற சில எளிய முன்எச்சரிக்கை நடவடிக்கைககளை மேற்கொண்டால் கோடையை வெகுவாக அனுபவிக்கலாம்.
docmurli@gmail.com
வெப்பத்தின் காரணமாக உடலில் சோர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படும். குறிப்பாக தோலில் அதிக பாதிப்புகள் உருவாகும். அரிப்பு, வியர்வை, கொப்பளங்கள் மற்றும் தொற்று நோய்கள் ஏற்படும். இத்தகைய பாதிப்புகளில் இருந்து நம்மை தற்காத்து கொள்வது எப்படி? என பார்ப்போம்.
வியர்க்குரு
கோடை காலத்தில் வெப்ப நிலை சாதாரணமாக 40-ல் இருந்து 45 டிகிரியை தொடுகிறது. ஆனால் மனித உடலில் இயல்பான வெப்ப நிலை 37 டிகிரி செல்சியல். எனவே உடலை குளிர்விக்க அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. எனவே உடலை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
அவ்வாறு பராமரிக்காவிட்டால் தோலில் உள்ள வியர்வை சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக் கொள்ளும். இதனால் வியர்க்குரு வரும். எனவே வெயில் காலத்தில் தினமும் 2 தடவை குளிர்ந்த நீரில் குளித்தால் வியர்க்குரு வராது.
வியர்வையை உடம்பில் தங்க விடாமல் முகத்தை வெறும் நீரால் கழுவுவது, உடம்பை ஈரமான துணியால் துடைத்துக் கொள்வது நல்லது. காலமின் லோஷனை பூசினால் அரிப்பு குறையும். அதன் விலை குறைவு.
வேனல் கட்டிகள்
தோலின் மூலம் வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை சரியாக வெளியேற முடியாமல் அழுக்கு போல் தங்கி விடும். அப்போது அங்கு பாக்டீரியா தொற்றிக் கொள்ள அந்த இடம் வீங்கி புண்ணாகி விடும். இது வேனல் கட்டி என்று அழைக்கப்படுகிறது. இதற்கு ஆண்டிபயாடிக் மருந்துகள், வலி நிவாரணிகள், வெளிப்பூச்சு களிம்புகள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். வெயிலில் அலைவதை தவிர்க்க வேண்டும். கட்டிகள் சீழ்பிடிக்கும் அளவுக்கு பெரியதாக இருந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டும். இந்த கட்டிகளை கையால் தொடவோ, கிள்ளவோ கூடாது. இதன் சீர் மற்ற இடங்களில் பட்டால் அங்கேயும் கட்டிகள் தோன்ற அதிக வாய்ப்புகள் உள்ளன.
படை - தேமல்
உடலில் ஈரமுள்ள பகுதிகளில் பூஞ்சை கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்ளும். குறிப்பாக வியர்க்குருவில் இந்த தொற்றும் சேர்ந்து கொண்டால் அரிப்புடன் கூடிய படை, தேமல் தோன்றும். அதை குணப்படுத்த களிம்பு அல்லது பவுடரை தடவ வேண்டும். அவற்றை நேரடியாக மருந்து கடைகளில் வாங்க வேண்டாம். தோல் சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற்று அவரது அறிவுறுத்தலின்படி பயன்படுத்தலாம். உள்ளாடைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் பூஞ்சை, படை வருவதை தடுக்கலாம்.
கோடை காலத்தில் சிறுநீர் கடுப்பு அதிக தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுவதாலும், தேவையான அளவு தண்ணீர் குடிக்காததும் இதற்கு முக்கிய காரணமாகும். நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் நீர்க்கடுப்பு பிரச்சினை தீரும்.
தொற்று நோய்கள்
வெயில் காலத்தில் சமைத்த உணவு வகைகள் விரைவில் கெட்டுவிடும். அவற்றில் நோய் கிருமிகள் அதிக அளவில் பெருகும். இந்த உணவுகளை சாப்பிடு வதால் வாந்தி, வயிற்றுப்போக்கு, சீதபதி, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வரும். ஆகவே வெயில் காலத்தில் சமைத்த உணவுகளை உடனுக்குடன் பயன்படுத்த வேண்டும். உணவு மீது ஈக்கள் மொய்க்காமல் மூடி பாதுகாக்க வேண்டியது அவசியம். தண் ணீரை கொதிக்க காய்ச்சிஆற வைத்து குடியுங்கள்.
எண்ணெய் சேர்ந்த உணவுகள் மற்றும் அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ஆவியில் வேக வைத்த காய்கறிகள், இயற்கையிலேயே குளிர்ச்சியான உணவுகள், பழங்கள், மோர், இளநீர், தண்ணீர் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
சரும நோய்கள்
இறுக்கமான ஆடைகள் மற்றும் உள்ளாடைகளால் சருமத்தில் வியர்வை தேங்கி படர்தாமரை, அரிப்பு, தோல் வீங்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். அதிக தூசு, வெப்பம் கலந்த காற்று காரணமாகவும் சருமத்தில் அலர்ஜி ஏற்படும். உடலை மறைக்கும் தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது, தோல் வீங்கிய பகுதிகளை கையால் தொந்தரவு செய்யாமல் இருப்பது, முடிந்தவரை உடலை தூய்மையாக வைத்திருப்பது, படர்தாமரைக்காக கிரீம்களை மருத்துவர் ஆலோசனையோடு தடவுவது போன்றவற்றை மேற்கொண்டாலே பிரச்சினை தீர உதவும்.
குளிக்கும்போது மிகவும் மிருதுவான (மைல்ட்) சோப்பை பயன்படுத்துவது நல்லது.கடுமையான வெப்பத்தால் சருமம் பாதிக்கப்படுகிறது. அதற்கு காரணம் சூரிய ஒளியில் உள்ள ‘அல்ட்ராவைலட்’ ஒளியே காரணம். அதுவே தோல் வறண்டு போக காரணமாகிறது. எனவே ‘பிரெஷ்’ ஆன பழச்சாறு, காய்கறி சாறு போன்றவற்றை பருகுங்கள். இது உடலின் ஈரப்பசையை காக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.
அது தவிர தினமும் 8 டம்ளர் தண்ணீர் பருகலாம். அதுவும் உடலின் ஈரத்தன்மையை பாதுகாக்கும். கோடை காலத்தில் காபி, தேநீர் குடிப்பதை குறைத்து கொள்ள வேண்டும். வாயு நிரப்பப்பட்ட செயற்கை மென்பானங்கள் மற்றும் குளிர்பானங்களை அருந்த வேண்டாம்.
அதற்கு பதிலாக இளநீர், மோர், சர்பத், பதநீர் போன்றவற்றை அதிக அளவில் குடிக்கலாம். எலுமிச்சை பழ சாற்றில் சமையல் உப்பு அல்லது சர்க்கரை கலந்து குடிப்பதும் உடல்நலத்துக்கு சிறந்தது.
தர்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, பலாப்பழம், அன்னாசி, கிர்ணி, நுங்கு போன்ற நீர்ச்சத்து மிகுந்த பழங்கள் சாப்பிடலாம் அல்லது இவற்றை சாறு எடுத்தும் பருகலாம்.
தொடர்ந்து வெயிலில் இருப்பதை தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. அப்படி வெளியே செல்ல வேண்டுமென்றால் குடையை எடுத்து கொள்ளலாம். இதுபோன்ற சில எளிய முன்எச்சரிக்கை நடவடிக்கைககளை மேற்கொண்டால் கோடையை வெகுவாக அனுபவிக்கலாம்.
docmurli@gmail.com
தமிழ்நாட்டின் அனைத்து பகுதியிலும் இந்த அற்புத துத்திக்கீரை படர்ந்து கிடைக்கிறது. இயற்கை மருத்துவர்களின் ஆலோசனையுடன் பயன்படுத்தி பயன் அடையுங்கள்.
கொடி துத்தி, ஒட்ட துத்தி, எலிச் செவிதுத்தி, கருந்துத்தி, பசுந்துத்தி,சிறு துத்தி, பெருந்துத்தி, நிலத்துத்தி, கண்டு துத்தி, ஐஇதழ் துத்தி பனியாரத்துத்தி, காட்டு துத்தி, பொட்டக துத்தி, என பல பெயர்கள் இந்த கீரைக்கு உண்டு. வேர், பூ, இலை மட்டை என அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் கொண்ட செடியாகும்.
மற்ற கீரைகளை போன்று இதை சமையலுக்கு யாரும் பயன்படுத்து வதில்லை, சமைத்து அளவாக சாப்பிடலாம் மலத்தை இளக்கி வெளியேற்றவும், உடல் புண்ணை குணமாக்கவும் உடலை தேற்றவும் இயற்கை மருத்துவத்தில் பெரும் பயன் அளிக்கிறது. துத்தி இலைகளை விளக்கெண்ணையுடன் மண் பாத்திரத்தில் வதக்கி வாழை இலை அல்லது வெற்றிலையில் வைத்து டயாப்பர் (கோவனம்) போன்று கட்டி கொண்டால் ரத்த மூலம், கீழ் மூலம், வலி, குத்தல், எரிச்சல், மூலவீக்கம், அனைத்தும் சரியாகி நலம் உண்டாகும்.
துத்தி வேர் பவுடர், திரிபலா, இந்துப்பு, லவங்கபட்டை பொடிகளுடன் தண்ணீரில் கலந்து நன்றாக வாய் கொப்பளித்தால் பல் ஈறுகளில் ரத்த கசிவு குணமாகும். துத்தி இலையை பருப்புடன் சேர்த்து சாப்பிட்டால் மூலச்சூடு நீங்கும். ஆசனவாய் கடுப்பு, சூடு நீங்க துத்தி இலை பொடியை நாட்டு பசும்பால், நாட்டு சக்கரையுடன் கலந்து சாப்பிட முற்றிலும் குணமாகும்.
அரிசி மாவுடன் துத்தி இலை சாற்றையும் கலந்து கிண்டி, கட்டிகள் மீது பூசினால் பழுத்து உடைந்து குணமாகும். துத்தி பூ சூரணத்தை நாட்டுச் சர்க்கரை, நாட்டு மாட்டு பாலில் கலந்து முறையாக சாப்பிட்டால் ரத்த கெந்தி, நுரையீரல் கபம், இருமல், காசநோய், இரைப்பு போன்ற குறைகள் முற்றிலும் குணமாகும்.?துத்தி விதைகளை பொடிசெய்து கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து 200 முதல் 400 மில்லி கிராம் அளவு சாப்பிட்டு வந்தால், சரும நோய்கள், உடல்சூடு, தொழு நோய், கருமேக, வென்மேக நோய், மேக அனல் முதலியவை கட்டுப்படுகிறது.
குடிநீரில் விதையின் பொடி சிறிது கலந்து குடித்தால் பெண்களுக்கு வெள்ளைபடுதல் நோய் குணமாகும். துத்திக்கீரையை பொறியல் செய்து சாப்பிட்டால் வயிற்றுப்புழுக்கள் வெளியேறும். வாயு சம்மந்தப்பட்ட வியாதிகளும் குணமாகும். முறிந்த எலும்பை சரியாக கட்டி இலையை அரைத்து கனமாக பூசி துணியைச்சுற்றி அசையாமல் வைத்து இருந்தால் விரைவாக எலும்பு கூடி குணமாகும். குடல்புண், தொண்டை கம்மல், சொரிசிரங்குகளையும் இதன் இலை கசாயம் குணமாக்கும்.
தமிழ்நாட்டின் அனைத்து பகுதியிலும் இந்த அற்புத துத்திக்கீரை படர்ந்து கிடைக்கிறது. இயற்கை மருத்துவர்களின் ஆலோசனையுடன் பயன்படுத்தி பயன் அடையுங்கள்.
மற்ற கீரைகளை போன்று இதை சமையலுக்கு யாரும் பயன்படுத்து வதில்லை, சமைத்து அளவாக சாப்பிடலாம் மலத்தை இளக்கி வெளியேற்றவும், உடல் புண்ணை குணமாக்கவும் உடலை தேற்றவும் இயற்கை மருத்துவத்தில் பெரும் பயன் அளிக்கிறது. துத்தி இலைகளை விளக்கெண்ணையுடன் மண் பாத்திரத்தில் வதக்கி வாழை இலை அல்லது வெற்றிலையில் வைத்து டயாப்பர் (கோவனம்) போன்று கட்டி கொண்டால் ரத்த மூலம், கீழ் மூலம், வலி, குத்தல், எரிச்சல், மூலவீக்கம், அனைத்தும் சரியாகி நலம் உண்டாகும்.
துத்தி வேர் பவுடர், திரிபலா, இந்துப்பு, லவங்கபட்டை பொடிகளுடன் தண்ணீரில் கலந்து நன்றாக வாய் கொப்பளித்தால் பல் ஈறுகளில் ரத்த கசிவு குணமாகும். துத்தி இலையை பருப்புடன் சேர்த்து சாப்பிட்டால் மூலச்சூடு நீங்கும். ஆசனவாய் கடுப்பு, சூடு நீங்க துத்தி இலை பொடியை நாட்டு பசும்பால், நாட்டு சக்கரையுடன் கலந்து சாப்பிட முற்றிலும் குணமாகும்.
அரிசி மாவுடன் துத்தி இலை சாற்றையும் கலந்து கிண்டி, கட்டிகள் மீது பூசினால் பழுத்து உடைந்து குணமாகும். துத்தி பூ சூரணத்தை நாட்டுச் சர்க்கரை, நாட்டு மாட்டு பாலில் கலந்து முறையாக சாப்பிட்டால் ரத்த கெந்தி, நுரையீரல் கபம், இருமல், காசநோய், இரைப்பு போன்ற குறைகள் முற்றிலும் குணமாகும்.?துத்தி விதைகளை பொடிசெய்து கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து 200 முதல் 400 மில்லி கிராம் அளவு சாப்பிட்டு வந்தால், சரும நோய்கள், உடல்சூடு, தொழு நோய், கருமேக, வென்மேக நோய், மேக அனல் முதலியவை கட்டுப்படுகிறது.
குடிநீரில் விதையின் பொடி சிறிது கலந்து குடித்தால் பெண்களுக்கு வெள்ளைபடுதல் நோய் குணமாகும். துத்திக்கீரையை பொறியல் செய்து சாப்பிட்டால் வயிற்றுப்புழுக்கள் வெளியேறும். வாயு சம்மந்தப்பட்ட வியாதிகளும் குணமாகும். முறிந்த எலும்பை சரியாக கட்டி இலையை அரைத்து கனமாக பூசி துணியைச்சுற்றி அசையாமல் வைத்து இருந்தால் விரைவாக எலும்பு கூடி குணமாகும். குடல்புண், தொண்டை கம்மல், சொரிசிரங்குகளையும் இதன் இலை கசாயம் குணமாக்கும்.
தமிழ்நாட்டின் அனைத்து பகுதியிலும் இந்த அற்புத துத்திக்கீரை படர்ந்து கிடைக்கிறது. இயற்கை மருத்துவர்களின் ஆலோசனையுடன் பயன்படுத்தி பயன் அடையுங்கள்.
ஒரு குறிப்பிட்ட ஆப்பை உருவாக்குபவர் தவறாக பயன்படுத்தினால், உங்களது அந்தரங்க தகவல்களின் நிலை என்னவாகும் என்று கொஞ்சம் நினைத்து பாருங்கள்.
வெறும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் என்பதை தாண்டி வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் பயன்படக்கூடிய அத்தியாவசியமான ஒன்றாக கைபேசிகள் உருவெடுத்துள்ள அதே வேளையில், இதுவரை நாம் அறியாத பிரச்சனைகளின் பிறப்பிடமாகவும் கைபேசிகள் உள்ளன.
குறிப்பாக, உங்களது கைபேசியில் எந்த ஒரு செயல்பாட்டையும் மேற்கொள்வதற்கு ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிளின் ஆஃப் ஸ்டோருக்கோ சென்று செயலிகளை பதிவிறக்கம் செய்கிறீர்கள் தானே? என்றாவது நீங்கள் பயன்படுத்தும் செயலியை இன்ஸ்டால் செய்வதற்கு முன் அது கேட்கும் அனுமதிகளை பார்த்தீர்களானால் அதிர்ச்சியடைய நேரிடும்.
உதாரணமாக, புகைப்படத்தை எடிட் செய்யும் ஒரு பிரபல செயலியை நீங்கள் இன்ஸ்டால் செய்வதாக வைத்துக்கொள்வோம். அப்போது,, கேமரா, தொடர்பு எண்கள், லொகேஷன், ஸ்டோரேஜ், போன்ற பலவற்றிற்கு அனுமதியளித்தால்தான் அந்த செயலியை செயல்படுத்த முடியும் என்கிறது. ஆனால், இந்த இடத்தில் கூர்ந்து கவனித்தீர்களானால், புகைப்படத்தை எடிட் செய்யும் இந்த செயலிக்கு, புகைப்படம், தொடர்பு எண்கள், ஸ்டோரேஜ் ஆகியவை அவசியம்தான். ஆனால், முற்றிலும் தேவையற்ற லொகேஷன், உங்களது இருப்பிடத்தை கண்டறிந்து அதன் மூலம் மிகச் சரியான விளம்பரங்களை உங்களது கைபேசிக்கு அனுப்பி பணம் சம்பாதிப்பதற்காக அனுமதி கேட்கப்படுகிறது.
இதேபோன்று, பல்வேறு செயலிகளில், முற்றிலும் சம்பந்தமேயில்லாத தகவல்கள் கேட்கப்படுகின்றன. கண்மூடித்தனமாக செயலிகளை இன்ஸ்டால் செய்பவர்கள், அதிலுள்ள ஆபத்தை உணராமல் ஜிபிஎஸ், நெட்ஒர்க் செயல்பாடு, வைஃபை, மற்ற ஆஃப்களின் செயல்பாட்டை கண்காணித்தல் & முடக்குதல், ஐஎம்இஐ எண், கைபேசியை அணையாமல் இருக்க செய்தல், தகவல்களை மாற்ற/ நீக்க அனுமதி போன்ற பல்வேறு தகவல்களுக்கு ஒப்புதல் கொடுத்து செயலியோடு பிரச்சனையையும் இலவசமாக வாங்கி கொள்கின்றனர்.
உங்களது கைபேசியில் இருக்கும் புகைப்படங்கள், காணொளிகள், ஆவணங்கள் போன்றவற்றை உங்களுக்கு தெரியாமலேயே அந்த செயலிகள் தனது சர்வர்களில் பதிவேற்றம் செய்துகொள்வதற்கு வாய்ப்புள்ளது. இதன் மூலம் உங்களது கைபேசியில் இருக்கும் புகைப்படங்கள், காணொளிகள், ஆவணங்கள் போன்றவற்றை உங்களுக்கு தெரியாமலேயே அந்த செயலிகள் தனது சர்வர்களில் பதிவேற்றம் செய்துகொள்வதற்கு வாய்ப்புள்ளது.
கைபேசி செயலிகளை போன்றே ஃபேஸ்புக்கை முதலாக கொண்டு ஒரு இணையதளத்தில் கணக்கை ஆரம்பிக்கும்போதோ அல்லது கேம் விளையாடும்போது நீங்கள் அந்தரங்கமாக வைத்திருக்கும் தகவல்கள், பதிவுகள், நண்பர்களின் தகவல்கள், உங்களது நடவடிக்கைகள் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு ஏதோவொரு செயலின் வடிவமைப்பாளருக்கு அதிலுள்ள ஆபத்து தெரியாமல் பலரும் அனுமதி தருகிறார்கள்.
இதுபோன்ற செயலிகள், சில நேரங்களில் உங்களது கணக்கை பயன்படுத்தி உங்களது நண்பர்களுக்கு நீங்கள் அனுப்பியதாக தவறான காணொளிகள்/ புகைப்படங்கள்/ இணையதள இணைப்புகளை பகிரும் சம்பவங்கள் பரவலாக நடந்து வருகின்றன.
ஒரு செயலியையோ, மென்பொருளையோ, இணையதள கணக்கையோ முதன் முதலாக பயன்படுத்துவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான பக்கங்களை கொண்ட விதிமுறைகளை படிக்காமல், அனைத்திற்கும் ‘அக்சஃப்ட்’ கொடுப்பவர்களுக்கு என்றாவது ஒருநாள் தங்களது அந்தரங்க தகவல்களுக்கு பாதிப்பு ஏற்படும்போதுதான் அதன் வீரியம் புரிகிறது.
மேற்கண்ட தகவல்களை ஒரு குறிப்பிட்ட ஆப்பை உருவாக்குபவர் தவறாக பயன்படுத்தினால், உங்களது அந்தரங்க தகவல்களின் நிலை என்னவாகும் என்று கொஞ்சம் நினைத்து பாருங்கள்.
குறிப்பாக, உங்களது கைபேசியில் எந்த ஒரு செயல்பாட்டையும் மேற்கொள்வதற்கு ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிளின் ஆஃப் ஸ்டோருக்கோ சென்று செயலிகளை பதிவிறக்கம் செய்கிறீர்கள் தானே? என்றாவது நீங்கள் பயன்படுத்தும் செயலியை இன்ஸ்டால் செய்வதற்கு முன் அது கேட்கும் அனுமதிகளை பார்த்தீர்களானால் அதிர்ச்சியடைய நேரிடும்.
உதாரணமாக, புகைப்படத்தை எடிட் செய்யும் ஒரு பிரபல செயலியை நீங்கள் இன்ஸ்டால் செய்வதாக வைத்துக்கொள்வோம். அப்போது,, கேமரா, தொடர்பு எண்கள், லொகேஷன், ஸ்டோரேஜ், போன்ற பலவற்றிற்கு அனுமதியளித்தால்தான் அந்த செயலியை செயல்படுத்த முடியும் என்கிறது. ஆனால், இந்த இடத்தில் கூர்ந்து கவனித்தீர்களானால், புகைப்படத்தை எடிட் செய்யும் இந்த செயலிக்கு, புகைப்படம், தொடர்பு எண்கள், ஸ்டோரேஜ் ஆகியவை அவசியம்தான். ஆனால், முற்றிலும் தேவையற்ற லொகேஷன், உங்களது இருப்பிடத்தை கண்டறிந்து அதன் மூலம் மிகச் சரியான விளம்பரங்களை உங்களது கைபேசிக்கு அனுப்பி பணம் சம்பாதிப்பதற்காக அனுமதி கேட்கப்படுகிறது.
இதேபோன்று, பல்வேறு செயலிகளில், முற்றிலும் சம்பந்தமேயில்லாத தகவல்கள் கேட்கப்படுகின்றன. கண்மூடித்தனமாக செயலிகளை இன்ஸ்டால் செய்பவர்கள், அதிலுள்ள ஆபத்தை உணராமல் ஜிபிஎஸ், நெட்ஒர்க் செயல்பாடு, வைஃபை, மற்ற ஆஃப்களின் செயல்பாட்டை கண்காணித்தல் & முடக்குதல், ஐஎம்இஐ எண், கைபேசியை அணையாமல் இருக்க செய்தல், தகவல்களை மாற்ற/ நீக்க அனுமதி போன்ற பல்வேறு தகவல்களுக்கு ஒப்புதல் கொடுத்து செயலியோடு பிரச்சனையையும் இலவசமாக வாங்கி கொள்கின்றனர்.
உங்களது கைபேசியில் இருக்கும் புகைப்படங்கள், காணொளிகள், ஆவணங்கள் போன்றவற்றை உங்களுக்கு தெரியாமலேயே அந்த செயலிகள் தனது சர்வர்களில் பதிவேற்றம் செய்துகொள்வதற்கு வாய்ப்புள்ளது. இதன் மூலம் உங்களது கைபேசியில் இருக்கும் புகைப்படங்கள், காணொளிகள், ஆவணங்கள் போன்றவற்றை உங்களுக்கு தெரியாமலேயே அந்த செயலிகள் தனது சர்வர்களில் பதிவேற்றம் செய்துகொள்வதற்கு வாய்ப்புள்ளது.
கைபேசி செயலிகளை போன்றே ஃபேஸ்புக்கை முதலாக கொண்டு ஒரு இணையதளத்தில் கணக்கை ஆரம்பிக்கும்போதோ அல்லது கேம் விளையாடும்போது நீங்கள் அந்தரங்கமாக வைத்திருக்கும் தகவல்கள், பதிவுகள், நண்பர்களின் தகவல்கள், உங்களது நடவடிக்கைகள் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு ஏதோவொரு செயலின் வடிவமைப்பாளருக்கு அதிலுள்ள ஆபத்து தெரியாமல் பலரும் அனுமதி தருகிறார்கள்.
இதுபோன்ற செயலிகள், சில நேரங்களில் உங்களது கணக்கை பயன்படுத்தி உங்களது நண்பர்களுக்கு நீங்கள் அனுப்பியதாக தவறான காணொளிகள்/ புகைப்படங்கள்/ இணையதள இணைப்புகளை பகிரும் சம்பவங்கள் பரவலாக நடந்து வருகின்றன.
ஒரு செயலியையோ, மென்பொருளையோ, இணையதள கணக்கையோ முதன் முதலாக பயன்படுத்துவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான பக்கங்களை கொண்ட விதிமுறைகளை படிக்காமல், அனைத்திற்கும் ‘அக்சஃப்ட்’ கொடுப்பவர்களுக்கு என்றாவது ஒருநாள் தங்களது அந்தரங்க தகவல்களுக்கு பாதிப்பு ஏற்படும்போதுதான் அதன் வீரியம் புரிகிறது.
மேற்கண்ட தகவல்களை ஒரு குறிப்பிட்ட ஆப்பை உருவாக்குபவர் தவறாக பயன்படுத்தினால், உங்களது அந்தரங்க தகவல்களின் நிலை என்னவாகும் என்று கொஞ்சம் நினைத்து பாருங்கள்.
நெஞ்செரிச்சலுக்கு சில பொதுவான அறிகுறிகள் உள்ளன. ஆனால் சில சமயங்களில் வேறு சில அறிகுறிகள் கூட இருக்கலாம். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
நெஞ்செரிச்சல்: இதனை கூறுபவர் அநேகர். வயிறு, நெஞ்சு, தொண்டை இவற்றில் சங்கடமான உணர்வு இருக்கும். வயிற்றுப் பிரட்டல், வாந்தி கூட இருக்கும். இது பொதுவான அறிகுறிகள். ஆனால் சில சமயங்களில் வேறு சில அறிகுறிகள் கூட இருக்கலாம். அவை
அடிக்கடி சிலர் தொண்டையில் சற்று கனைத்துக்கொண்டே இருப்பர். சிலர் எச்சிலை வெளியில் துப்புவர். வயிற்றில் ஏற்படும் ஆசிட் தொண்டையில் கிசுகிசுப்பு உணர்வினை ஏற்படுத்தும். இது நெஞ்செரிச்சலின் அமைதி வெளிப்பாடு.
* இருமல் ஏற்பட்டால் அது மூன்று வாரங்களுக்கு மேல் தொடர்ந்தால் உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதில் நெஞ்செரிச்சலும் ஒரு காரணமாக இருக்கலாம்.
* விழுங்குவதில் சிரமம் இருந்தாலும் அது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
* தொண்டைவலி தொடர்ந்து இருந்தால் வயிற்றில் ஆசிட் அதிகம் சுரக்கின்றதா என கவனிக்க வேண்டும்.
* வாயில் அதிக எச்சில் சுரப்பது ஆசிட் தொந்தரவு காரணமாக இருக்கலாம்.
* புளித்த, கசப்பு உணர்வுகள் வாயில் ஏற்பட்டால் ஆசிட் தொந்தரவு காரணமாக இருக்கலாம்.
பொதுவான காரணங்கள்:
* இரவு படுக்கப்போகும் முன் உண்ணக்கூடாது.
* அதிக பால் சார்ந்த உணவு கூடாது.
* ஒரே நேரத்தில் அதிக அளவு உண்ணக் கூடாது.
* புகை பிடித்தல்
* அதிக மது
* இவை நெஞ்செரிச்சலுக்கான பொதுவான காரணங்கள் ஆகும்.
அடிக்கடி சிலர் தொண்டையில் சற்று கனைத்துக்கொண்டே இருப்பர். சிலர் எச்சிலை வெளியில் துப்புவர். வயிற்றில் ஏற்படும் ஆசிட் தொண்டையில் கிசுகிசுப்பு உணர்வினை ஏற்படுத்தும். இது நெஞ்செரிச்சலின் அமைதி வெளிப்பாடு.
* இருமல் ஏற்பட்டால் அது மூன்று வாரங்களுக்கு மேல் தொடர்ந்தால் உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதில் நெஞ்செரிச்சலும் ஒரு காரணமாக இருக்கலாம்.
* விழுங்குவதில் சிரமம் இருந்தாலும் அது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
* தொண்டைவலி தொடர்ந்து இருந்தால் வயிற்றில் ஆசிட் அதிகம் சுரக்கின்றதா என கவனிக்க வேண்டும்.
* வாயில் அதிக எச்சில் சுரப்பது ஆசிட் தொந்தரவு காரணமாக இருக்கலாம்.
* புளித்த, கசப்பு உணர்வுகள் வாயில் ஏற்பட்டால் ஆசிட் தொந்தரவு காரணமாக இருக்கலாம்.
பொதுவான காரணங்கள்:
* இரவு படுக்கப்போகும் முன் உண்ணக்கூடாது.
* அதிக பால் சார்ந்த உணவு கூடாது.
* ஒரே நேரத்தில் அதிக அளவு உண்ணக் கூடாது.
* புகை பிடித்தல்
* அதிக மது
* இவை நெஞ்செரிச்சலுக்கான பொதுவான காரணங்கள் ஆகும்.
சப்பாத்தி, நாண், சூடான சாதத்துடன் சாப்பிட முள்ளங்கி பருப்புப் பச்சடி அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முள்ளங்கி - 2
துவரம்பருப்பு - 100 கிராம்
தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று
சீரகம் - ஒரு டீஸ்பூன்
சாம்பார் பொடி - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
மஞ்சள்தூள் - சிறிதளவு
எண்ணெய் - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
முள்ளங்கியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிகொள்ளவும்.
தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் துவரம்பருப்புடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி, இரண்டு விசில்விட்டு இறக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, சீரகம் தாளிக்கவும்.
அதனுடன் முள்ளங்கி, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்.
பிறகு வேகவைத்த பருப்பு, சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு வேகவிட்டு இறக்கவும்.
முள்ளங்கி - 2
துவரம்பருப்பு - 100 கிராம்
தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று
சீரகம் - ஒரு டீஸ்பூன்
சாம்பார் பொடி - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
மஞ்சள்தூள் - சிறிதளவு
எண்ணெய் - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
முள்ளங்கியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிகொள்ளவும்.
தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் துவரம்பருப்புடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி, இரண்டு விசில்விட்டு இறக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, சீரகம் தாளிக்கவும்.
அதனுடன் முள்ளங்கி, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்.
பிறகு வேகவைத்த பருப்பு, சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு வேகவிட்டு இறக்கவும்.
சூப்பரான முள்ளங்கி பருப்புப் பச்சடி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






