என் மலர்
பெண்கள் உலகம்
- கால நிலை மாறுபாடுகளுக்கு ஏற்ப சருமத்தின் தன்மையும் மாறுபடும்.
- எந்த காலநிலை மாற்றமாக இருந்தாலும் சன்ஸ்கிரீன் பயன்படுத்த மறக்காதீர்கள்.
சருமம் பொலிவுடன் மிளிர வேண்டும் என்பதுதான் பெண்களின் விருப்பமாக இருக்கும். கால நிலை மாறுபாடுகளுக்கு ஏற்ப சருமத்தின் தன்மையும் மாறுபடும். வறண்ட, ஈரப்பதமான தன்மையை கொண்டிருக்கும். அதனை சீராக பராமரித்து ஒளிரும் வகையில் காட்சி அளிக்க உதவும் பொருட்கள் பற்றி பார்ப்போம்.

சன்ஸ்கிரீன்
15 அல்லது அதற்கு மேற்பட்ட எஸ்.பி.எப் கொண்ட சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள். அது தோல் புற்றுநோயை தடுக்க உதவிடும். தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்களிடம் இருந்தும் காக்கும். சருமம் விரைவில் வயதாகும் தன்மையை கட்டுப்படுத்தும். கடும் வெப்பமாக இருந்தாலும், குளிர்ச்சி தரும் பனிப்பொழிவாக இருந்தாலும், மழைக்காலமாக இருந்தாலும் சன்ஸ்கிரீன் பயன்படுத்த மறக்காதீர்கள்.
சூடான நீர்
மிதமான வெப்பம் கொண்ட வெதுவெதுப்பான நீர் சருமத்துளைகளில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவும். ஆனால் அதனை அடிக்கடி பயன்படுத்துவது, அதிக சூடாக இருப்பது சருமத்தில் இருக்கும் எண்ணெய் தன்மையை அகற்றி சோர்வாகவும், மந்தமாகவும் உணர வைத்துவிடும். அதனால் மிதமான அளவில் உபயோகிப்பது நல்லது.

முகம் கழுவுதல்
தினமும் முகம் கழுவுவது புத்துணர்ச்சியை கொடுக்கும். ஆனால் அடிக்கடி கழுவுவது நல்லதல்ல. காலையில் எழுந்ததும் முகம் கழுவும் வழக்கத்தை தவறாமல் கடைப்பிடிப்பது போல கடுமையான வேலைப்பளுவின்போது சோர்வாக உணர்ந்தால் அப்போதும் குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவலாம். அதன் பிறகு இரவில் தூங்க செல்வதற்கு முன்பு முகத்தை சுத்தப்படுத்துவது நல்லது.
புகைப்பழக்கம்
புகைப்பிடிப்பது, புகையிலைப்பொருட்கள் பயன்படுத்துவது சருமத்திற்கும் தீங்கு விளைவிக்கும். அதில் இருக்கும் ரசாயனங்கள் சரும செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முன்கூட்டியே வயதாகும் செயல்முறைக்கு வித்திடும். புகைப்பிடிக்க தோன்றும் சமயங்களில் எல்லாம் அதற்கு மாற்றாக தண்ணீர் பருகும் வழக்கத்தை பின்பற்றுங்கள். அது சருமத்திற்கு பொலிவு சேர்க்கும்.

தேங்காய்எண்ணெய்
இது சரும அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டது. எனினும் எல்லா வகையான சருமத்திற்கும் தேங்காய் எண்ணெய் ஒத்துக்கொள்ளாது. அதிலும் தேங்காய் சார்ந்த ஒவ்வாமை பாதிப்பு கொண்டவர்கள் இந்த எண்ணெய்யை பயன்படுத்த வேண்டாம். தேங்காய் எண்ணெய் ஒத்துக்கொண்டால் அதனை பல வகைகளிலும் பயன்படுத்தலாம்.
தேங்காய் எண்ணெய் சிறந்த மாய்ஸ்சுரைசராக செயல்படும். முகத்தில் சிறிதளவு அந்த எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்யலாம். சிறிது நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு கழுவிவிடலாம்.
குடிநீர்
தண்ணீருக்கும், ஆரோக்கியமான சருமத்திற்கும் வலுவான தொடர்பு இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீர் பருகுவது நல்லது.

மாய்ஸ்சுரைசர்
தினமும் முகத்தை கழுவிவிட்டு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தலாம். இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு இளமை தோற்றப்பொலிவையும் கொடுக்கும். எந்த காலநிலையாக இருந்தாலும் சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது நல்லது.

காய்கறிகள்-பழங்கள்
பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளும் வழக்கத்தை தொடர்வது உடலில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகளின் செயல்பாட்டை அதிகரிக்கும். மீன் எண்ணெய்கள் போன்ற ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை சாப்பிடுவதும், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து விலகி இருப்பதும் பொலிவான சருமத்திற்கு வித்திடும்.
புரோபயாடிக் பொருட்கள்
யோகார்ட் போன்ற புரோபயாடிக் உணவுகளில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் சரும ஆரோக்கியத்திற்கு பலம் சேர்க்கும். கூடுதல் பொலிவுக்கும் வித்திடும். முகத்தில் தயிர் பூசியும் பொலிவு சேர்க்கலாம்.

கற்றாழை
சருமத்தை வலுவாக வைத்திருக்க கற்றாழை பயன்படுத்தலாம். புதிய உயிரணு வளர்ச்சியைத் தூண்டும் தன்மை கொண்டது. சரும துளைகளை அடைக்காமல் ஈரப்பதமாக வைத்திருக்கவும் உதவும். தினமும் சருமத்திற்கு கூடுதல் பளபளப்பை கொடுக்கும். சிலருக்கு கற்றாழை ஒவ்வாமையை ஏற்படுத்தும். கையில் சிறிதளவு தடவி பரிசோதிக்கலாம். 24 மணி நேரம் வரை எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றால் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
- மூத்திரப்பைக்கும் ஆணுறுப்புக்கும் இடையில் அமைந்துள்ளது.
- ப்ராஸ்டேட் சுரப்பி சிலபேருக்கு வீங்கி பெரிதாவதுண்டு.
ஆண்களுக்கு மட்டுமே உள்ள கிளாண்ட் (சுரப்பி) 'ப்ராஸ்டேட்' ஆகும். இதை தமிழில் 'சுக்கிலச் சுரப்பி' என்றும் அழைப்பதுண்டு. ஒரு பாதாம் கொட்டையின் அளவுள்ள இந்தச் சுரப்பி, ஆண்களின் அடிவயிற்றில் மூத்திரப்பைக்கும் ஆணுறுப்புக்கும் இடையில் அமைந்துள்ளது.
எப்படி வயதானால் தலை முடி நரைக்க ஆரம்பிக்கிறதோ, அதுபோல ஆண்களுக்கு வயது ஆக ஆக இந்த ப்ராஸ்டேட் சுரப்பி சிலபேருக்கு வீங்கி பெரிதாவதுண்டு.

இளம் வயதில் சிலபேருக்கு இந்த சுரப்பி வீங்கி வலியை உண்டு பண்ணும். இது பெரும்பாலும் சிறுநீர்ப்பை நோய் தொற்றால் ஏற்படுவதாகும். தகுந்த சிகிச்சை எடுத்தால் சரியாகிவிடும்.
நடுத்தர வயதுக்காரர்கள் சிலபேருக்கு சுரப்பி சற்று பெரிதாகி வீங்குவதுண்டு. இதற்கும் தகுந்த சிகிச்சை எடுத்தால் குணமாகிவிடும்.
வயதான காலத்தில் தான் ப்ராஸ்டேட் சுரப்பி வீங்கினால் பிரச்சினைகள் அதிகமாகி, அதிக தொந்தரவைக் கொடுப்பதுண்டு. உடனே கவனித்து தகுந்த சிகிச்சை எடுக்காவிட்டால் சில சமயங்களில் சிலபேருக்கு புற்றுநோயில் கூட கொண்டுபோய் விடுவதுண்டு.
உங்களுக்கு ப்ராஸ்டேட் இருக்கிறதா இல்லையா என்று எப்படி தெரிந்து கொள்வது? முதலில் சிறுநீர் கழிப்பதில் தான் பிரச்சினையே ஆரம்பிக்கும். சிறுநீர் வெளியே வர சில நிமிடங்கள் ஆகும். அடிக்கடி பல முறை சிறுநீர் கழிக்க வேண்டிய பிரச்சினை வரும்.

சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்தவுடனே டாய்லெட்டுக்கு போவதற்குள்ளாகவே சில நொடிகளில் சிறுநீர் வெளியே வந்து ஆடையெல்லாம் நனைந்துவிடும். சிறுநீர் கழித்துவிட்டு வந்தபின்பும் மறுபடியும் போக வேண்டும் என்ற உணர்வு தோன்றும்.
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் ஆணுறுப்பில் வலி ஏற்படுதல், சிறுநீரில் ரத்தம் கலந்து வருதல், சிறுநீர் கழித்துவிட்டு வந்த பின்னரும் அடிவயிற்றில் இன்னும் நிறைய சிறுநீர் இருக்கிறது போன்ற உணர்வு, தாம்பத்ய உறவில் திருப்தியின்மை, விரைவில் விந்து வெளியேறுதல், விறைப்பு குறைபாடு போன்ற பிரச்சினைகள் காணப்படும்.

மேற்கூறியவைகளில் நிறைய பிரச்சனை யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். நோயின் தீவிரத்தைப் பொறுத்து மருத்துவச் சிகிச்சையா அல்லது அறுவை சிகிச்சையா என்பதை யூராலஜிஸ்ட் நிபுணர் ஆலோசனையின்படி செய்வது சிறந்தது.
நன்கு காயவைத்த பூசணி விதைகள் சுமார் 30 தினமும் சாப்பிட்டு வந்தால் ப்ராஸ்டேட் பிரச்சினை ஓரளவு குறையும் என்று சிலர் சொல்வதுண்டு.
- சமநிலை மாறும்போது, இளநரை பிரச்சனைகள் தலை தூக்கும்.
- வைட்டமின்களைப் போல், உணவில் உள்ள உணவுச் சத்துகளை ஆற்றலாக மாற்றித் தருவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.
தலைக்கு அழகு சேர்ப்பது முடிதான். அந்த முடி கருகருவென இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லைதான். இந்த எண்ணம் நிறைவேற வேண்டுமானால் நம் உடலில் வைட்டமின் பி-5 சரியான அளவில் இருக்க வேண்டும். இதன் சமநிலை மாறும்போது, இளநரை பிரச்சனைகள் தலை தூக்கும்.
'வைட்டமின் பி5'-யின் மற்றொரு பெயர், பென்டோதெனிக் அமிலம். இது எல்லா இயற்கை உணவுகளிலும் நிறைந்துள்ளது. அரிசி, கோதுமை, பயறுகள், பருப்புகள், எண்ணெய் வித்துகள், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, பால், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பீன்ஸ், தக்காளி, சோயா பீன்ஸ், நிலக்கடலை, பட்டாணி, பரங்கிக்காய் மற்றும் பச்சைநிறக் காய்கறிகளில் இது அதிகமாக உள்ளது. இவை தவிர கைக்குத்தல் அரிசி, தீட்டப்படாத கோதுமை, கீரைகள், காளான், கேரட், காலி பிளவர், தக்காளி, உருளைக்கிழங்கு, ஓட்ஸ், பேரீச்சை, ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் போன்றவற்றிலும், ஆட்டு இறைச்சி, ஈரல், முட்டை, மீன் முதலிய அசைவ உணவுகளிலும் அதிகமுள்ளது.

இது செய்யும் அடிப்படை வேலை, நமது இயல்பான உடல் வளர்ச்சிக்குத் துணைபுரிவது. மற்ற வைட்டமின்களைப் போல், உணவில் உள்ள உணவுச் சத்துகளை ஆற்றலாக மாற்றித் தருவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. பென்டோதெனிக் அமிலம் கால்சியத்துடன் இணைந்து 'கால்சியம் பென்டோதினேட்' எனும் வேதிப்பொருளாக மாறிவிடும். இது முடியின் வளர்ச்சியைத் தூண்டியும் முடியின் நிறத்துக்குத் தேவையான நிறமிகளைத் தந்தும் முடி கருமையாக வளர்வதற்கு உதவுகிறது. இதனால், இளமையிலேயே தலைமுடி நரைப்பது தடுக்கப்படுகிறது.
- பேரிக்காயானது 100 கிராமுக்கு 56 கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது.
- பேரிக்காய் பழம் அதிகமான அளவில் நீரால் ஆனது.
பேரிக்காய் ஒரு பருவ மழைக்கால பழமாகும். இது பொட்டாசியம், பெக்டின் மற்றும் டானின்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. மேலும் யூரிக் அமிலத்தை கரைத்து அதன் மூலம் வாத நோய்களை குணப்படுத்துகிறது. அதில் இருக்கும் மற்ற சத்து விவரங்களையும் தெரிந்து கொள்வோம்...

நார்ச்சத்து நிறைந்தது
அனைத்து ஊட்டச்சத்துக்களும் தினமும் நமக்கு குறிப்பிட்ட அளவில் தேவைப்படுகிறது. ஒரு ஊட்டச்சத்து நிறுவனமானது பேரிக்காய் குறித்து கூறும்போது ஒரு நடுத்தர பேரிக்காயானது ஆறு கிராம் நார்ச்சத்தை கொண்டுள்ளதாகவும், பெண்களின் தினசரி தேவையான நார்ச்சத்து அளவில் 24 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது எனவும் கூறுகிறது. நார்ச்சத்து நமது வயிறை முழுமையாக்குகிறது. பசி எடுப்பதும் குறைகிறது.
குறைந்த கலோரி
உடல் எடையை குறைப்பதற்கு முக்கிய ஆதாரமாக கலோரிகள் உள்ளன. நமது உடலில் கலோரிகளை குறைப்பதன் மூலம் நம்மால் உடல் எடையையும் குறைக்க முடியும். எனவே நாம் குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். பேரிக்காயானது 100 கிராமுக்கு 56 கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது. எனவே உடல் எடையை குறைப்பதில் இது நன்மை பயக்கிறது.

அதிக நீர்ச்சத்து கொண்டது
பேரிக்காய் பழம் அதிகமான அளவில் நீரால் ஆனது. கிட்டத்தட்ட இது 84 சதவீதம் நீர் உள்ளது. அதிகமான அளவில் நீர்ச்சத்தை கொண்டிருந்தாலும் கூட இது குறைவான அளவில் கலோரிகளை உள்ளடக்கியது. எனவே எடை இழப்பிற்கு மட்டுமின்றி உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளவும் இது உதவுகிறது.
செரிமானத்திற்கு உதவுகிறது
பேரிக்காய் நமது செரிமான ஆரோக்கியத்திற்கும், மலச்சிக்கலை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. இதில் அதிக நீர் உள்ளடக்கம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்திற்கும் எடை இழப்பிற்கும் வித்திடும். ஆரோக்கியமான குடல் மற்றும் நல்ல செரிமான அமைப்பு இவை இரண்டுமே எடை இழப்பிற்கு உதவும் காரணிகளாக உள்ளன.
- வெந்நீரில் முகம் கழுவக் கூடாது.
- ஒருநாளைக்கு அதிக முறை முகத்தை சுத்தம் செய்யக் கூடாது.
சருமத்தில் துளைகள் ஏற்பட காரணம்:
சருமத்தில் உள்ள எண்ணெய் மற்றும் வியர்வை காரணமாக இந்த துளைகள் ஏற்படுகின்றன, இதன் காரணமாக சருமம் உயிரற்றதாக தோன்றுகிறது.
திறந்த துளைகள் தோற்றத்தைக் கெடுப்பது மட்டுமல்லாமல், தூசி மற்றும் பாக்டீரியாக்களும் இந்த துளையில் எளிதில் குவிந்துவிடும். இது பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் பிற தோல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இது தவிர, திறந்த துளைகள் காரணமாக, தோல் வயதான அறிகுறிகளும் விரைவாக தோன்றத் தொடங்குகின்றன.
நீங்கள் முகம் மற்றும் மூக்கில் திறந்த துளைகளின் பிரச்சனையுடன் போராடுகிறீர்கள் என்றால், இது ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பதை அறிவது மிகவும் முக்கியம்.

செய்யக்கூடாதவை:
வெந்நீரில் முகம் கழுவக் கூடாது
வெந்நீரில் முகத்தைக் கழுவுவதால், சருமத்தின் திறந்த துளைகள் பிரச்சனை அதிகரிக்கிறது. எனவே, எப்போதும் உங்கள் முகத்தை வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் கழுவவும்.
அதீத மேக்-அப் போட வேண்டாம்
கனமான அல்லது அதீதமாக மேக்-அப் போடுவதால் சருமத்துளைகளில் மேக்கப் தேங்கி, சுத்தம் செய்வதில் சிரமம் ஏற்படும். சில பொருட்கள் துளைகளில் தேங்கி அது பாதிப்பை அதிகமாக்கக்கூடும். நீங்கள் மேக்கப் அணிய வேண்டியிருந்தால், துளைகளை அடைக்காத லேசான ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்துங்கள்.

அழுத்தமாக சுத்தம் செய்யக் கூடாது
ஒருநாளைக்கு அதிக முறை முகத்தை சுத்தம் செய்யக் கூடாது. இது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை இழந்து, துளைகள் இன்னும் பெரிதாகிவிடும்.
திறந்த துளைகளை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
முகத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். திறந்த துளைகளின் சிக்கலைத் தவிர்க்க, உங்கள் முகத்தை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். உங்கள் முகத்தின் தோலின் வகைக்கு ஏற்ப ஒரு க்ளென்சரை வாங்கி, அதைக் கொண்டு ஒரு நாளைக்கு இரண்டு முறை உங்கள் முகத்தை நன்கு கழுவுங்கள். இது உங்கள் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்கும்.

எக்ஸ்ஃபோலியேட்
திறந்த துளைகளின் சிக்கலைத் தவிர்க்க, வாரத்திற்கு 1-2 முறை உரித்தல் செயல்முறை செய்ய வேண்டும். இது திறந்த துளைகளின் அளவைக் குறைக்கிறது. அதேபோல் துளைகளுக்குள் தேங்கியிருக்கும் அழுக்குகளை வெளியேற்ற இது உதவும்.

டோனர் பயன்படுத்தவும்
டோனர் துளைகளை இறுகச் செய்கிறது. மூக்கின் மேற்புறத்தில் இருக்கும் எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்கி துளைகளை மூட உதவியாக இருக்கும்.
உங்கள் சருமத்தின் வகைக்கு ஏற்ப நல்ல டோனரை தேர்வு செய்யவும், இது உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்காமல் துளைகளை குறைக்க உதவுகிறது.
முகத்தை ஈரப்பதமாக்குங்கள்
எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு மாய்ஸ்சரைசர் தேவையில்லை என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் இது தவறு. சரியான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, துளைகளை மூட உதவியாக இருக்கும்.
உங்கள் சருமம் எண்ணெய் நிறைந்ததாக இருந்தால், லேசான மற்றும் எண்ணெய் இல்லாத மாய்ஸ்சரைசரை பயன்படுத்தவும்.
- நீளமான முடி வளர்ச்சியை விரும்பாதவர்கள் யாரும் இல்லை.
- முடியின் வேர்க்கால்களை உறுதியாக்கி தலைமுடி உதிர்வைத் தடுக்கிறது.
ஆரோக்கியமான, நீளமான முடி வளர்ச்சியை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. ஆனால், மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். இதனால் முடி உதிர்வு, வறட்சியான முடி மற்றும் இன்னும் பிற பிரச்சனைகளைச் சந்திக்கலாம்.
இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட சிலர் ரசாயனங்கள் நிறைந்த முடி பராமரிப்புப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இது சில சமயங்களில் பிரச்சனையை அதிகரிக்கலாம்.

முடி சார்ந்த பராமரிப்புக்கு சில இயற்கையான வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் முடி ஆரோக்கியத்தைப் பராமரிக்கலாம். அதன் படி, முடி ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், முடி சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் வேம்பாளம் பட்டை ஒரு சிறந்த தேர்வாகும்.
இந்த வேம்பாளம் பட்டை ஒரு வகை மரத்தின் பட்டை ஆகும். இது உடல் ஆரோக்கியம் முதல் அழகு சார்ந்த பிரச்சனை அனைத்திற்கும் தீர்வு தரக்கூடிய சிறந்த மற்றும் அற்புதமான மூலிகையாகும்.
முடி உதிர்தல், உடைதல், இளநரை, பொடுகு, பேன் தொல்லை மற்றும் அரிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு வேம்பாளம் பட்டை சிறந்த தீர்வாகும்.

வேம்பாளம் பட்டை எண்ணெய் செய்முறை:
பாத்திரம் ஒன்றில் தேங்காய் எண்ணெயை ஊற்றி டபுள் பாயிலிங் முறையில் சூடு செய்ய வேண்டும். டபுள் பாயிலிங் என்பது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதற்கு மேல் இந்த எண்ணெய் உள்ள பாத்திரத்தை சூடாக்க வேண்டும்.
இந்த எண்ணெயில், எடுத்து வைத்த வேம்பாளம்பட்டையைச் சேர்த்து சூடு செய்யலாம். இதில் எண்ணெய் சூடாக சூடாக, பட்டையிலுள்ள நிறம் முழுவதும் எண்ணெயில் இறங்கும். இந்த எண்ணெய் நன்கு சூடானதும் அடுப்பை அணைத்துவிட்டு எண்ணெயை ஒரு ஓரமாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது பட்டையை வெளியே எடுத்து விடலாம் அல்லது பட்டை எண்ணெய்க்குள் ஊறிக் கொண்டு இருந்தாலும் பிரச்சனை எதுவும் இல்லை. இப்போது வேம்பாளம்பட்டை எண்ணெய் தயாராகி விட்டது.
பிறகு, இந்த எண்ணெயைத் தொடர்ந்து 3 நாட்கள் நல்ல சூரிய வெளிச்சத்தில் வைத்து எடுத்துக் கொள்ளலாம். அதன் பின், தலைமுடிக்கு இதை பயன்படுத்தி வரலாம்.
வழக்கமாக எண்ணெய் தேய்ப்பது போல வேம்பாளம்பட்டை எண்ணெயை தினமும் தேய்க்கலாம்.
குறிப்பாக, தலைக்கு குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக தேய்த்து, முடியின் வேர்க்கால்களிலும் நன்கு மசாஜ் செய்துவிட்டு பிறகு குளிக்கலாம்.

வேம்பாளம்பட்டை எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளது. இது தலைமுடிக்குப் போதிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன், மாய்ஸ்சரைசரையும் தருகிறது. இதன் மூலம் போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதால், இது முடியின் வேர்க்கால்களை உறுதியாக்கி தலைமுடி உதிர்வைத் தடுக்கிறது.
மேலும் இது உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. தலைமுடி மற்றும் வேர்க்கால்களுக்குப் போதிய அளவு நீர்ச்சத்துக்களை அளித்து முடியைப் பலப்படுத்த உதவுகிறது.
குறிப்பாக, முடியின் வேர்க்கால்கள் முதல் நுனிப்பகுதி வரை முடியை உறுதியாக்கி தலைமுடி உடைவதைத் தடுக்கிறது. மேலும் இது முடியின் வளர்ச்சியையும் வேகமாகத் தூண்டுகிறது.
- உருளைக்கிழங்கு சாறு கருவளையங்களை நீக்கவும் உதவும்.
- ரோஸ் வாட்டர் கருவளையங்களை நீக்க பெரிதும் உதவுகிறது.
டார்க் சர்க்கிள் பிரச்சனை தற்போதுள்ள நாட்களில் சர்வ சாதாரணமாகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் திரையின் முன் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பது, தூக்கமின்மை போன்றவை. இது தவிர, பல காரணங்களால் கருவளையம் பிரச்சனை தொடங்குகிறது. உண்மையில், மக்கள் கருவளையங்களை மறைக்க பல மருந்துகளை பயன்படுத்துகின்றனர்.
கன்சீலர் முதல் மேக்கப் வரை, இந்த விஷயங்கள் உங்கள் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை மறைக்க உதவினாலும், அது நிரந்தரமான சிகிச்சையல்ல. வீட்டில் உள்ள சில பொருட்களை கொண்டே கருவளையத்தை அகற்றலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.? ஆம். அந்த பொருட்கள் என்னவென்று இங்கே விரிவாக காண்போம்.
கருவளையம் ஏற்பட காரணம்:
* போதுமான தூக்கமின்மை
* தவறான உணவுப் பழக்கம்
* ஒழுங்கற்ற வழக்கம்
* இரவில் தாமதமாக திரைகளைப் பார்ப்பது
* சோர்வு
* மன அழுத்தம்
* உலர் கண்கள்
* கண் ஒவ்வாமை
* நீரிழப்பு
* உடலில் நீர் பற்றாக்குறை
* சூரிய ஒளி மற்றும் மாசுபாடு போன்றவற்றின் நீண்டகால வெளிப்பாடு

ரோஸ் வாட்டர் மற்றும் பால்:
பால் மற்றும் ரோஸ் வாட்டர் கருவளையங்களை நீக்க பெரிதும் உதவுகிறது. இதற்கு ரோஸ் வாட்டர் மற்றும் பால் ஆகியவற்றை சம அளவு எடுத்து பருத்தி பஞ்சின் உதவியுடன் கருவளையங்கள் உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் வைக்கவும். அதன் பிறகு காட்டன் பேடை அகற்றி, பின்னர் தண்ணீரில் முகத்தை கழுவவும்.

தேன், பால் மற்றும் எலுமிச்சை:
தேன், பால் மற்றும் எலுமிச்சை ஆகியவை கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதற்கு ஒரு ஸ்பூன் பாலில் அரை ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கண்களைச் சுற்றி மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் கருவளையங்களை போக்கலாம்.

உருளைக்கிழங்கு சாறு:
உருளைக்கிழங்கு சாறு கருவளையங்களை நீக்கவும் உதவும். இதற்கு முதலில் உருளைக்கிழங்கை அரைக்கவும். அதன்பிறகு, அதன்சாறு எடுத்து, பஞ்சில் தோய்த்து கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் விட்டு விடுங்கள். அதன் பிறகு கண்களை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். இப்படி சில நாட்கள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தக்காளி
தக்காளி ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை நீக்க, முதலில் 2 ஸ்பூன் தக்காளி சாற்றில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட்டை உருவாக்க வேண்டும். இப்போது இந்த பேஸ்ட்டை கண்களின் கீழ் 10 நிமிடங்கள் தடவவும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவவும். இவ்வாறு செய்வதன் மூலம் கருவளையம் பிரச்சனை நீங்கும்.

வெள்ளரிக்காய்
இதற்கு முதலில் வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்க வேண்டும். அதன் பிறகு, 10 நிமிடங்கள் கண்களில் வைத்திருக்க வேண்டும். இதனால் கருவளையம் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
- உறைந்த உணவுகள், மூளை ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- கீரைகளில் வைட்டமின் கே மற்றும் ஃபோலேட் நிரம்பியுள்ளது.
சில உறைந்த உணவுகள், மூளை ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.? உறைந்த உணவுகள் எவ்வாறு ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதைப் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சில உறைந்த உணவுகள், மூளை ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உறைந்த உணவுகள் சத்தானவை, சில சமயங்களில் அவற்றின் புதிய சகாக்களை விட சிறந்தவை. ஏனென்றால், இவை ஊட்டச்சத்துக்களை பூட்டுகிறது. மூளை ஆரோக்கியத்திற்கான உறைந்த உணவுகள் என்னவென்று இங்கே காண்போம்.

ஸ்ட்ராபெர்ரிகள்
உறைந்த ஸ்ட்ராபெர்ரிகள் அல்லது எந்த வகையான பெர்ரிகளும் உங்கள் மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது. அவை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள், குறிப்பாக அந்தோசயினின்கள் ஆகியவற்றில் நிறைந்துள்ளன. அவை மேம்பட்ட நினைவகம் மற்றும் கவனத்துடன் தொடர்புடையவை.
பெர்ரிகளை வழக்கமாக உட்கொள்வது அறிவாற்றல் முதுமையை 2.5 ஆண்டுகள் வரை குறைக்கலாம். இதேபோல், காட்டு அவுரிநெல்லிகள் மூளை ஆரோக்கியத்திற்கும், செயலாக்க வேகத்தை மேம்படுத்துவதற்கும், அறிவாற்றல் சோர்வைக் குறைப்பதற்கும் நன்மை பயக்கும்.

கீரைகள்
இலை கீரைகளில் வைட்டமின் கே மற்றும் ஃபோலேட் நிரம்பியுள்ளது. வைட்டமின் கே நினைவகத்தை ஆதரிக்கிறது. மேலும் ஃபோலேட் குறைந்த டிமென்ஷியா அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, உறைந்த கீரைகளை பயன்படுத்தலாம்.
பசலைக்கீரை கேல் சத்துக்கள் நிறைந்தவை. ஒரு கப் நறுக்கிய உறைந்த கீரை, வைட்டமின் கே-க்கான தினசரி மதிப்பை கிட்டத்தட்ட ஐந்து மடங்குக்கு மேல் உங்களுக்குக் கொடுக்கும்.

சிலுவை காய்கறிகள்
உறைந்த சிலுவை காய்கறிகளான ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் பிரஸ்ஸல்ஸ் முளைகள் பெரும்பாலும் மலிவு விலையில் கிடைக்கும். இந்த காய்கறிகள் அறிவாற்றல் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை.
வைட்டமின் கே, பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் சல்போராபேன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள இந்த காய்கறிகள் மூளை செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்திலிருந்து பாதுகாக்கின்றன, இது வயதானதை தாமதப்படுத்துகிறது.

கொழுப்பு நிறைந்த மீன்கள்
சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் ஹெர்ரிங் போன்ற மீன்கள் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த ஆதாரங்களாகும், அவை மூளையின் செல் அமைப்பு, திரவத்தன்மை மற்றும் ரத்த ஓட்டத்திற்கு முக்கியமானவை.
இந்த உறைந்த கொழுப்பு மீன்கள் புதிய மீன்களின் விலையில் ஒரு பகுதியிலேயே வருகின்றன. இவற்றை இணைத்துக்கொள்வது உங்கள் அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்க உதவும்.
- இன்றைய காலகட்டத்தில் மாத்திரைகள் சாப்பிடாதவர்களே இல்லை.
- மாத்திரைகளை எடுத்துக்கொள்ள தண்ணீர்தான் சிறந்த வழி.
இன்றைய காலகட்டத்தில் மாத்திரைகள் சாப்பிடாதவர்களே இல்லை என்று சொன்னால் அது மிகையாகாது. சிறிய தலைவலி முதல் பெரிய நோய்கள் வரை, கிட்டத்தட்ட அனைவரும் காலை, மதியம் மற்றும் மாலை வேளைகளில் ஒரு கைப்பிடி மாத்திரைகளை எடுத்துக்கொள்றார்கள்.
மற்றவர்கள் சிறிய நோய்களுக்குக் கூட தேவையில்லாமல் மாத்திரைகளை உட்கொண்டு, தேவையற்ற நோயை ஏற்படுத்துகிறார்கள். மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியவை மற்றும் எடுத்துக்கொள்ளக்கூடாதவை சில உள்ளன. எந்தெந்த பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

தவிர்க்க வேண்டியவை:
மது:
மது மாத்திரைகளின் செயல்திறனில் தலையிடுகிறது மற்றும் பக்க விளைவுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. சில சந்தர்ப்பங்களில், அது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம். எனவே மதுவை தவிர்ப்பது நல்லது. இது பல சிக்கல்களையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

திராட்சைப்பழ ஜூஸ்:
திராட்சைப்பழச்சாற்றில் உள்ள சில பொருட்கள் சில வகையான மாத்திரைகளின் செயல்திறனைப் பாதித்து, அவற்றை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பயனுள்ளதாக மாற்றும். உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

பால்:
பால் சில வகையான மாத்திரைகளின் உறிஞ்சுதலைக் குறைத்து, அவற்றின் செயல்திறனைக் குறைக்கும். குறிப்பாக கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், சில வகையான மாத்திரைகளின் உறிஞ்சுதலைக் குறைக்கும்.

மற்ற மாத்திரைகள்:
டாக்டர் மாத்திரைகளை பரிந்துரைக்கும் போது, அவர்கள் ஏற்கனவே எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளைப் பற்றி டாக்டரிடம் சொல்வது மிகவும் முக்கியம், ஏனெனில் சில சேர்க்கைகள் ஆபத்தானவை. மருந்துகளை எடுத்துக்கொள்வது குறித்து டாக்டரிடம் நிச்சயமாக ஆலோசனை கேட்க வேண்டும்.

எதை எடுத்துக்கொள்ளலாம்:
தண்ணீர்:
மாத்திரைகளை எடுத்துக்கொள்ள தண்ணீர்தான் சிறந்த வழி. இது மாத்திரைகளை விழுங்குவதை எளிதாக்கி வயிற்றில் கரைய உதவுகிறது.

உணவு:
டாக்டர் உணவுடன் சில மாத்திரைகளை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறார். இது வயிற்று எரிச்சலைத் தடுக்க உதவுகிறது.
பானங்கள்:
சில வகையான மாத்திரைகளை சாறு அல்லது பாலுடன் எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுநர்களுடன் பேசிய பிறகு இது குறித்து முடிவு செய்யப்பட வேண்டும்.
சில மாத்திரைகளை உணவுடன் அல்லது உணவுக்குப் பிறகு உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது வயிற்று எரிச்சலைத் தடுக்கவும், மாத்திரையை உறிஞ்சுவதை மேம்படுத்தவும் உதவுகிறது.
சில மாத்திரைகளை உணவுக்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்போ அல்லது இரண்டு மணி நேரத்திற்குப் பின்னரோ எடுக்க வேண்டும். இது மாத்திரையின் உறிஞ்சுதலை அதிகரிக்க உதவுகிறது.
- சில தவறான பழக்கங்கள் ‘ஸ்லோ பாய்சன்’ எனப்படும்.
- தினமும் மன அழுத்த சூழலிலேயே வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருப்பது நல்லதல்ல.
அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ளும் சில தவறான பழக்கங்கள் 'ஸ்லோ பாய்சன்' எனப்படும் மெதுவாக கொல்லும் விஷம் போல செயல்பட்டு படிப்படியாக உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அத்தகைய பழக்க வழக்கங்கள் பற்றியும், அவற்றை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணம் பற்றியும் பார்ப்போம்.

மன அழுத்தம்
எப்போதாவது மன அழுத்தத்திற்கு ஆளாவது பிரச்சனையில்லை. ஆனால் தினமும் மன அழுத்த சூழலிலேயே வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருப்பது நல்லதல்ல. அது நாள்பட்ட மன அழுத்தமாக மாறினால் ஆபத்தானது. ஏனெனில் நாள்பட்ட மன அழுத்தம் 'சைலண்ட் கில்லர்' எனப்படும் அமைதியான கொலையாளியோடு தொடர்புடையது.

உடலையும், மனதையும் படிப்படியாக சோர்வடையச் செய்துவிடும். நாளடைவில் மன அழுத்தம் நிரந்தரமாக குடிகொண்டுவிட்டால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைவது உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.

நலம் விரும்பிகள் இல்லாத நிலை
நம் நலனில் அக்கறை கொள்பவர்களும் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறார்கள். எதிர்மறையான விஷயங்கள், கருத்துக்களை பேசுபவர்களுடன் பழகுவதோ, அவர்களுடைய ஆலோசனையை கேட்டறிவதோ நம்மை பலவீனமாக்கும்.
குறிப்பாக உங்கள் திறமையை குறைத்து மதிப்பிடுபவர்கள், உங்கள் சாதனைகளை அங்கீகரிக்க மனமில்லாதவர்கள், தேவையற்ற எண்ணங்களை உங்களிடத்தில் விதைப்பவர்கள், எதிர்மறை எண்ணங்களை கொண்டிருப்பவர்களுடன் தொடர்பில் இருப்பது மன ஆரோக்கியத்துக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

துரித உணவு
துரித உணவுகள் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். ஆனால் தொடர்ந்து அதனை உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில் இந்த உணவுகளில் பெரும்பாலும் கொழுப்புகள், சோடியம், சர்க்கரை அதிகமாக இருக்கும். அவை மெல்ல கொல்லும் விஷமாக மாறி உடல் பருமன், இதய நோய், நீரிழிவு நோய்க்கு வித்திடும்.

வேலையில் நாட்டமின்மை
எந்த வேலையையும் ஈடுபாட்டோடு செய்ய வேண்டும். வேலையை வெறுப்பது, விருப்பமின்றி செய்வது உடல் நலத்துக்கும், மன நலத்துக்கும் கேடு விளைவிக்கும். அதிருப்தி, தலைவலி, தூக்கமின்மை, செரிமான கோளாறு உள்ளிட்ட அறிகுறிகள் வெளிப்படும். நாளடைவில் மெதுவாக கொல்லும் விஷமாக மாறும்.

உணர்ச்சிகளை அடக்குதல்
நம் நலனில் அக்கறை கொண்டவர்கள் திடீரென்று எதிர்மறையாக நடந்து கொள்ளும்போது கடும் அதிருப்தி உண்டாகும். அந்த சமயத்தில் உணர்ச்சிகளை அடக்கிக்கொள்வது மோதலை தவிர்ப்பதற்கான வழிமுறையாக தோன்றலாம்.
ஆனால் தொடர்ந்து உணர்ச்சிகளை அடக்குவது, மனதில் பதிந்திருக்கும் ஆழ் மனக்கவலைகளை வெளிக்காட்டாமல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். காலப்போக்கில் உடலையும், மனதையும் பாதிக்கும் நோயாக மாறிவிடும். எனவே உணர்வுகளை ஆரோக்கியமாக வெளிப்படுத்துவது முக்கியம்.

தொடர்ந்து கவலையாக இருத்தல்
தொடர்ந்து கவலையாகவோ, பதற்றமாக இருப்பது ஆரோக்கியத்தை பாதிக்கும். தொடர்ந்து கவலைப்படுவது மன அழுத்தத்தை தூண்டிவிடும். அதனால் கார்டிசோல் ஹார்மோனின் அளவு உயர்வதற்கு வழிவகுக்கும்.
நாளடைவில் கார்டிசோல் ஹார்மோன் அதிகரிப்பு மெல்ல கொல்லும் விஷமாக மாறி உடல் எடை அதிகரிப்புக்கும், நோய் எதிர்ப்பு தன்மை பலவீனமடைவதற்கும், ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கும் காரணமாகிவிடும்.

சோர்வாக காட்சி அளித்தல்
உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, தொடர்ந்து சோர்வுக்கு ஆளாகுவது மனச்சோர்வு, நாள்பட்ட சோர்வு மற்றும் இதய பிரச்சனைகள் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
இதற்கு இடம் கொடுக்காமல் உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொள்ள வேண்டும். சின்ன விஷயமாக இருந்தாலும் அதனை சிறப்பாக செய்து முடித்தால் உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ள வேண்டும். அந்த மகிழ்ச்சியான மன நிலையை உங்கள் நலம் விரும்பிகளுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
காலை உணவைத் தவிர்த்தல்
காலை உணவுதான் அன்றைய நாளின் மிக முக்கியமான உணவாகக் கருதப்படுகிறது. அதனை தவிர்ப்பது உடல் எடை அதிகரிப்பு, வளர்சிதை மாற்றத்தில் மாறுபாடு, அறிவாற்றல் குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
- உள்மூல பாதிப்புகளில் வலி பெரியளவில் இருக்காது.
- வெளிமூல நோயில் வலி அதிகம் இருக்கும்.
மூலநோய் உள்மூலம், வெளிமூலம் என இரு வகைப்படுகிறது. சித்த மருத்துவத்தில் 21 வகை மூல நோய்கள் பற்றி சித்தர்களால் கூறப்பட்டுள்ளது.

'அனில பித்த தொந்த மலாது மூலம் வராது' என்று சித்தர் தேரையரின் பாடல் கூறுகின்றது. அதிகரித்த நாள்பட்ட அபான வாயுவின் அழுத்தம், உடல் சூடு, நாள்பட்ட மலச்சிக்கல், உடல் பருமன், பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் வயிற்றின் அழுத்தம், நாள்பட்ட கல்லீரல் நோய்கள், ஆசனவாய் அருகிலுள்ள தசைகளில் ஏற்படும் பலகீனம், தண்ணீர் குறைவாக குடிப்பது, எப்போதும் இருக்கையில் அமர்ந்து இருப்பது போன்ற காரணங்களினால் மூலநோய் ஏற்படுகின்றது.

மூல நோய் 4 நிலைகள் கொண்டிருக்கும். உள்மூல பாதிப்புகளில் வலி பெரியளவில் இருக்காது. மலம் முக்கி வெளியே போகும் போது ரத்தம் வடிதல் காணப்படும். ஆனால், வெளிமூல நோயில் வலி இருக்கும். ஆசனவாயில் இருந்து அடிக்கடி ரத்தம் வடிதல், உடல் எடை மெலிதல் போன்றவை ஏற்பட்டால், அவற்றை லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

உணவுப்பழக்கம்:
* துத்திக் கீரையுடன், சின்ன வெங்காயம் சேர்த்து சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு மசியவைத்து உண்ணலாம்.
* கருணைக் கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி, புளி சேர்த்து குழம்பாக வாரம் இருமுறை பயன்படுத்தி வரலாம்.
* பிரண்டைத் தண்டை துவையல், சூப்பாக செய்து பயன்படுத்தலாம்.
* முள்ளங்கிக்காய், வாழைத்தண்டு, சுரைக்காய், பீர்க்கங்காய், அவரை, பீன்ஸ், கீரைகள், கோவைக்காய் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* கிழங்கு வகைகள், காரமான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

* உடல்சூடு குறைய நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
* தினமும் 6-7 மணிநேரம் தொடர்ச்சியாக தூங்க வேண்டும்.
* வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும்.
* கோழிக்கறி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
* இளநீர், தர்பூசணி சாறு, முலாம் பழச்சாறு, மோர் இவைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைந்த ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யாப் பழம் மற்றும் வாழைப்பழம் உண்ண வேண்டும்.
* காலையில் நடைப்பயிற்சி, ஆசனவாய் தசைகளை உறுதிபடுத்தும் பயிற்சிகள் செய்ய வேண்டும். நேரம் தவறாமல், சரியான முறையில் உணவு உண்ண வேண்டும்.

வயிற்றில் வாயு உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* சீரகம், கொத்தமல்லி, ஓமம் இவைகளை சிறிதளவு எடுத்து கொதிக்க வைத்த தண்ணீரை காலை, இரவு குடித்து வர வேண்டும்.
- அதிநவீன லேசர் முறையிலும் கண்புரையை அகற்றலாம்.
- அதிநவீன லேசர் முறையிலும் கண்புரையை அகற்றலாம்.
கண் புரை என்பது கண்களில் உள்ள லென்சில் ஏற்படும் மாற்றத்தால் ஒளியின் ஊடுருவல் தன்மை குறைவதால், விழித்திரை மீது விழும் ஒளியின் அளவு குறையக்கூடிய ஒரு நிலையாகும். இது பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு கண் புரை ஏற்படக்கூடிய வாய்ப்பு மற்றவர்களை விட ஐந்து மடங்கு அதிகம். சர்க்கரை நோயாளிகளுக்கு கண் புரை ஏற்பட கீழ்க்கண்டவை முக்கிய காரணங்களாகும்.
ரத்த சர்க்கரை அதிகமாகும் போது கண்களில் உள்ள சிறிய ரத்த நாளங்களில் ஏற்படக்கூடிய பாதிப்பு. அக்யூஸ் ஹ்யூமரில் உள்ள அதிக அளவு குளுக்கோஸ் லென்ஸ் புரத மூலக்கூறில் கோவலெண்ட் இணைப்பை ஏற்படுத்தி லென்சில் ஒளிபுகாநிலையை உருவாக்குகிறது.
அக்யூஸ் ஹ்யூமர் என்பது கண்களில் உள்ள திரவ பிளாஸ்மாவின் வகையாகும். இது லென்சுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜனை வழங்குகிறது.
ரத்த சர்க்கரை அதிகமாகும்போது லென்சில் சேரும் கிளைக்கேஷன் முடிவு பொருட்கள் அதனை வீக்கமடைய செய்து பார்வையை குறைக்கிறது.

கட்டுப்பாடற்ற ரத்த சர்க்கரை உள்ள நிலையில் லென்சில் உள்ள என்சைம் (நொதி) குளுக்கோஸை சார்பிட்டாலாக மாற்றி கண் புரைக்கு வழி வகுக்கிறது.
ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது லென்சில் ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தம், எதிர்வினை ஆக்சிஜன் இனங்கள் மற்றும் ப்ரீரேடிக்கல்ஸ் கண்புரை சீக்கிரம் உருவாகச் செய்கிறது.
கூடுதலாக உள்ள நீரிழிவு ரெட்டினோபதி மற்றும் மாகுலர் எடிமா போன்றவை கண் புரையின் தாக்கத்தை அதிகரிக்கலாம். உயர் ரத்த சர்க்கரை அளவு லென்சில் உள்ள மென்மையான திரவ சமநிலையை சீர்குலைத்து கண் புரை ஏற்படுவதை துரிதப்படுத்தும்.

நீரிழிவு நோய் மட்டுமின்றி, உடல் பருமன், புகை பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், நெடுநாள் ஸ்டீராய்டு மருந்து உபயோகித்தல், நேரடி சூரிய வெளிச்சத்தில் அதிக நேரம் பணிபுரிதல் ஆகிய காரணிகளும் இளம் வயதிலேயே கண் புரையை ஏற்படுத்தக்கூடும்.
இதற்கு தீர்வாக அறுவை சிகிச்சை மூலம் கண்களில் புரை அகற்றப்பட்டு, செயற்கை லென்ஸ் பொருத்தப்படுகிறது. அதிநவீன லேசர் முறையிலும் கண்புரையை அகற்றலாம்.






