என் மலர்
ஆரோக்கியம்
கடுகு கீரை தொக்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா மற்றும் தொண்டை சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். எலும்புகளும், இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
கடுகு கீரை - 2 கட்டு
பாலக்கீரை - 1 கட்டு
வெந்தயக்கீரை - 1 கட்டு
நறுக்கிய சிறிய வெங்காயம் - அரை கப்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)
இஞ்சி, பூண்டு - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரக தூள் - அரை டீஸ்பூன்
கடுகு எண்ணெய் - 3 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடுகு கீரை, பாலக்கீரை, வெந்தய கீரை ஆகியவற்றை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.
அதனுடன் மிளகாய், இஞ்சி, உப்பு, போதுமான நீர் சேர்த்து அரை மணி நேரம் வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரக தூள், பூண்டு, வெங்காயம், மிளகாய் தூள் ஆகியவற்றை கொட்டி பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அதனை வேகவைத்த கீரை வகைகளுடன் சேர்த்து கொதிக்கவைத்து 10 நிமிடம் கழித்து இறக்கவும்.
சாப்பிடும்போது இந்த தொக்குடன் வெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம்.
குறிப்பு: பச்சையாக கடுகு கீரை கிடைக்கவில்லை என்றால் பதப்படுத்தப்பட்ட டின் கீரையை வாங்கி பயன்படுத்தலாம். ஏனெனில் கடுகு கீரை வருடத்தில் 4 மாதங்கள் மட்டும்தான் கிடைக்கும்.
ஆரோக்கிய பலன்: கடுகு கீரை தொக்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா மற்றும் தொண்டை சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். எலும்புகளும், இதயமும் ஆரோக்கியமாக இருக்கும். புற்றுநோய் வராமலும் தடுக்கும்.
கடுகு கீரை - 2 கட்டு
பாலக்கீரை - 1 கட்டு
வெந்தயக்கீரை - 1 கட்டு
நறுக்கிய சிறிய வெங்காயம் - அரை கப்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)
இஞ்சி, பூண்டு - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரக தூள் - அரை டீஸ்பூன்
கடுகு எண்ணெய் - 3 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடுகு கீரை, பாலக்கீரை, வெந்தய கீரை ஆகியவற்றை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.
அதனுடன் மிளகாய், இஞ்சி, உப்பு, போதுமான நீர் சேர்த்து அரை மணி நேரம் வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரக தூள், பூண்டு, வெங்காயம், மிளகாய் தூள் ஆகியவற்றை கொட்டி பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அதனை வேகவைத்த கீரை வகைகளுடன் சேர்த்து கொதிக்கவைத்து 10 நிமிடம் கழித்து இறக்கவும்.
சாப்பிடும்போது இந்த தொக்குடன் வெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம்.
குறிப்பு: பச்சையாக கடுகு கீரை கிடைக்கவில்லை என்றால் பதப்படுத்தப்பட்ட டின் கீரையை வாங்கி பயன்படுத்தலாம். ஏனெனில் கடுகு கீரை வருடத்தில் 4 மாதங்கள் மட்டும்தான் கிடைக்கும்.
ஆரோக்கிய பலன்: கடுகு கீரை தொக்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா மற்றும் தொண்டை சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். எலும்புகளும், இதயமும் ஆரோக்கியமாக இருக்கும். புற்றுநோய் வராமலும் தடுக்கும்.
இளஞ் சிறார்கள் தங்கள் வயதுக்கேற்ப பல விளையாட்டுகளிலும், உடற்பயிற்சிகளிலும் ஈடுபடுதல் அவர்களது உடல் வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் அவசியமாகும்.
விளையாட்டு‘ஓடி விளையாடு பாப்பா-நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா’
என்று சின்னஞ் சிறுவர்களை பார்த்து கூறுகிறார் பாட்டுக் கொரு புலவரான பாரதியார். உடல் நலம் பெற வேண்டுமானால் நாம் ஓடி விளையாட வேண்டும். அப்போது தான், ரத்த ஓட்டம் சீராக அமையும். உடல் உறுதி பெறும். ஆரோக்கிய வாழ்வுக்கு இது வகை செய்யும். ‘ஆரோக்கியம் உள்ள உடலிற்றான் ஆரோக்கியமான மனநலம்‘ இருக்கும் என்பர். குழந்தை பருவத்தில் இருந்தே விளையாட்டுகளில் பயிற்சி கொடுக்கிறார்கள் சீனர்கள். தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொடுக்கிறார்கள்.
இதனால் தான், அந்த குழந்தைகள் வளர்ந்த பிறகு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவிக்கிறார்கள். ஆனால், நம் நாட்டில் அப்படி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். குறைந்த பட்சம் 1-ம் வகுப்பு பள்ளியில் சேர்த்த பிறகாவது குழந்தைகளுக்கு விளையாட்டுகளில் பங்கேற்கும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும். இளஞ் சிறார்கள் தங்கள் வயதுக்கேற்ப பல விளையாட்டுகளிலும், உடல் பயிற்சிகளிலும் ஈடுபடுதல் அவர்களது உடல் வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் அவசியமாகும். விளையாட வேண்டிய நேரத்தில் விளையாட வேண்டும். படிக்க வேண்டிய நேரத்தில் படிக்க வேண்டும். பெற்றோர்களுடன் இணைந்து அவர்களுக்கு சிறு சிறு உதவிகளையும் மாணவர்கள் செய்ய வேண்டும்.
கல்லூரிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களிலும், நமது கிராமங்களில் உள்ள திறந்த வெளி மைதானங்களிலும் நாம் விளையாடலாம். தெரு வீதிகளில், சாலைகளில் கண்டிப்பாக விளையாடக் கூடாது. அவ்வாறு விளையாடுவது ஆபத்தானது. விளையாட்டுகளில் ஈடுபடும் போது கட்டுப்பாட்டுடனும், ஒழுங்குடனும் நடந்து கொள்ளுதல் வேண்டும். நடுவர் கூறும் தீர்ப்பை மதித்து நடத்தல் வேண்டும்.
ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதியாரின் வாக்குக்கிணங்க மாணவ-மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்துவது மட்டுமின்றி விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும்.
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா’
என்று சின்னஞ் சிறுவர்களை பார்த்து கூறுகிறார் பாட்டுக் கொரு புலவரான பாரதியார். உடல் நலம் பெற வேண்டுமானால் நாம் ஓடி விளையாட வேண்டும். அப்போது தான், ரத்த ஓட்டம் சீராக அமையும். உடல் உறுதி பெறும். ஆரோக்கிய வாழ்வுக்கு இது வகை செய்யும். ‘ஆரோக்கியம் உள்ள உடலிற்றான் ஆரோக்கியமான மனநலம்‘ இருக்கும் என்பர். குழந்தை பருவத்தில் இருந்தே விளையாட்டுகளில் பயிற்சி கொடுக்கிறார்கள் சீனர்கள். தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொடுக்கிறார்கள்.
இதனால் தான், அந்த குழந்தைகள் வளர்ந்த பிறகு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவிக்கிறார்கள். ஆனால், நம் நாட்டில் அப்படி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். குறைந்த பட்சம் 1-ம் வகுப்பு பள்ளியில் சேர்த்த பிறகாவது குழந்தைகளுக்கு விளையாட்டுகளில் பங்கேற்கும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும். இளஞ் சிறார்கள் தங்கள் வயதுக்கேற்ப பல விளையாட்டுகளிலும், உடல் பயிற்சிகளிலும் ஈடுபடுதல் அவர்களது உடல் வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் அவசியமாகும். விளையாட வேண்டிய நேரத்தில் விளையாட வேண்டும். படிக்க வேண்டிய நேரத்தில் படிக்க வேண்டும். பெற்றோர்களுடன் இணைந்து அவர்களுக்கு சிறு சிறு உதவிகளையும் மாணவர்கள் செய்ய வேண்டும்.
கல்லூரிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களிலும், நமது கிராமங்களில் உள்ள திறந்த வெளி மைதானங்களிலும் நாம் விளையாடலாம். தெரு வீதிகளில், சாலைகளில் கண்டிப்பாக விளையாடக் கூடாது. அவ்வாறு விளையாடுவது ஆபத்தானது. விளையாட்டுகளில் ஈடுபடும் போது கட்டுப்பாட்டுடனும், ஒழுங்குடனும் நடந்து கொள்ளுதல் வேண்டும். நடுவர் கூறும் தீர்ப்பை மதித்து நடத்தல் வேண்டும்.
ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதியாரின் வாக்குக்கிணங்க மாணவ-மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்துவது மட்டுமின்றி விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும்.
தூக்கம் வரவில்லை என்றால் அந்த நேரத்தில் தனக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யலாம். இசை கேட்பது, நகைச்சுவை நிகழ்ச்சிகளை ரசிப்பது, புத்தகங்கள் வாசிப்பது என இவற்றில் எதையாவது செய்யலாம்.
பிரசவத்திற்கு பிறகு சில பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. எப்போதும் பதற்றத்துடனும் பயத்துடனும் இருப்பது, தூக்கமின்மை அல்லது அதீத தூக்கம், தூக்கத்தில் மிரண்டு எழுந்திருப்பது. குழந்தையைப் பற்றி அளவுக்கு அதிகமாகக் கவலைப்படுதல், குழந்தையைப் பார்த்துக்கொள்ள முடியுமா? என்கிற பயம். வீட்டில் தனியே இருக்கவும், வெளியே செல்லவும் பயப்படுதல், அழுகை, கோபம், யாரைப் பார்த்தாலும் எரிச்சல், தலைவலி, டென்ஷன், பசியின்மை, எந்த வேலையிலும் ஆர்வமின்மை.
இந்த அறிகுறிகள் 2 வாரங்களுக்கும் மேலாகத் தொடரும் பட்சத்தில் தாய்மார்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். உடனடியாக டாக்டரை சந்திக்க வேண்டும். உளவியல் நிபுணரிடமும் ஆலோசனை பெறலாம்.
டாக்டர்கள் அல்லது மனநல ஆலோசகர்களால் மட்டுமே இந்த அறிகுறிகளை மிகச்சரியாக இனம் காண முடியும். அவர்களிடம் இந்தப் பிரச்சினையைக் கண்டறிவதற்கு என கேள்விகள் அடங்கிய பட்டியல் இருக்கும். அந்தப் பட்டியலில் உள்ள கேள்விகளுக்கு இளம் தாய்மார்கள் எப்படி பதில் அளிக்கிறார்கள் என்பதை வைத்து பிரச்சினையை உறுதி செய்வார்கள்.
முதல் கட்டமாக கவுன்சலிங் அளிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மட்டுமன்றி, அவரின் குடும்பத்தாருக்கும் ஆலோசனைகள் வழங்கப்படும். “உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம். பயப்படாதே” என மன தைரியம் கொடுப்பதுதான் முக்கியமான சிகிச்சை. இதில் கணவரின் பங்கு மிக முக்கியமானது.
சில குழந்தைகள் இரவு முழுவதும் அழுதுகொண்டே இருப்பார்கள். உதவிக்கு ஆட்கள் இல்லாதநிலையில் தூக்கமின்றி, குழந்தையைப் பார்த்துக்கொள்வது இளம் தாய்மார்களுக்கு கடுமையான மன அழுத்தத்தை உருவாக்கும். இது அதிகரித்தால் மன அழுத்த நோயாக உருவெடுக்கலாம்.
எனவே, மனைவியைச் சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு, கணவர் அந்த நேரத்தில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளலாம். குழந்தை அழுதால் சமாதானப்படுத்துவது, டயப்பர் மாற்றுவது போன்ற சின்னச் சின்ன வேலைகளைச் செய்யலாம்.
மன அழுத்தத்தில் இருக்கும் இளம் தாய்மார்கள் தனிமையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். நேர்மறையான மனப்பான்மை கொண்ட நபர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். குழந்தை தூங்கும்போது குட்டித்தூக்கம் போடலாம்.
தூக்கம் வரவில்லை என்றால் அந்த நேரத்தில் தனக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யலாம். இசை கேட்பது, நகைச்சுவை நிகழ்ச்சிகளை ரசிப்பது, புத்தகங்கள் வாசிப்பது என இவற்றில் எதையாவது செய்யலாம்.
இந்த அறிகுறிகள் 2 வாரங்களுக்கும் மேலாகத் தொடரும் பட்சத்தில் தாய்மார்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். உடனடியாக டாக்டரை சந்திக்க வேண்டும். உளவியல் நிபுணரிடமும் ஆலோசனை பெறலாம்.
டாக்டர்கள் அல்லது மனநல ஆலோசகர்களால் மட்டுமே இந்த அறிகுறிகளை மிகச்சரியாக இனம் காண முடியும். அவர்களிடம் இந்தப் பிரச்சினையைக் கண்டறிவதற்கு என கேள்விகள் அடங்கிய பட்டியல் இருக்கும். அந்தப் பட்டியலில் உள்ள கேள்விகளுக்கு இளம் தாய்மார்கள் எப்படி பதில் அளிக்கிறார்கள் என்பதை வைத்து பிரச்சினையை உறுதி செய்வார்கள்.
முதல் கட்டமாக கவுன்சலிங் அளிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மட்டுமன்றி, அவரின் குடும்பத்தாருக்கும் ஆலோசனைகள் வழங்கப்படும். “உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம். பயப்படாதே” என மன தைரியம் கொடுப்பதுதான் முக்கியமான சிகிச்சை. இதில் கணவரின் பங்கு மிக முக்கியமானது.
சில குழந்தைகள் இரவு முழுவதும் அழுதுகொண்டே இருப்பார்கள். உதவிக்கு ஆட்கள் இல்லாதநிலையில் தூக்கமின்றி, குழந்தையைப் பார்த்துக்கொள்வது இளம் தாய்மார்களுக்கு கடுமையான மன அழுத்தத்தை உருவாக்கும். இது அதிகரித்தால் மன அழுத்த நோயாக உருவெடுக்கலாம்.
எனவே, மனைவியைச் சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு, கணவர் அந்த நேரத்தில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளலாம். குழந்தை அழுதால் சமாதானப்படுத்துவது, டயப்பர் மாற்றுவது போன்ற சின்னச் சின்ன வேலைகளைச் செய்யலாம்.
மன அழுத்தத்தில் இருக்கும் இளம் தாய்மார்கள் தனிமையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். நேர்மறையான மனப்பான்மை கொண்ட நபர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். குழந்தை தூங்கும்போது குட்டித்தூக்கம் போடலாம்.
தூக்கம் வரவில்லை என்றால் அந்த நேரத்தில் தனக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யலாம். இசை கேட்பது, நகைச்சுவை நிகழ்ச்சிகளை ரசிப்பது, புத்தகங்கள் வாசிப்பது என இவற்றில் எதையாவது செய்யலாம்.
மாதவிலக்கு நாட்களில் நன்றாக ஓய்வெடுத்தல், வயிற்றிலும், முதுகிலும் சூடான ஒத்தடம் கொடுத்தல், வலி நிவாரண கிரீமை வெளிப் பகுதியில் பயன்படுத்துதல் போன்றவையும் நிவாரணம் தரும்.
பெண்களுக்கு மட்டும் இயற்கை குறிப்பிட்ட இனப்பெருக்க உறுப்புகளை படைத்திருக்கிறது. அது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாகவும் இருக்கிறது. அதையே தகர்க்கின்ற வகையில் மாதவிடாய் கால வலி, மார்பக புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய் போன்றவைகள் ஏற்படுகின்றன. பெண்களை மட்டுமே தாக்கும் இது போன்ற நோய்களை எப்படி எதிர்கொள்ளவேண்டும்?
மாதவிடாய் கால வலி இரண்டு வகை
மாதவிடாய் காலத்தில் 50 சதவீத பெண்கள் அடிவயிற்று வலியால் அவதிப்படுகிறார்கள். இதனை `டிஸ்மெனோரியா' என்று அழைக்கிறார்கள். இதில் பிரைமரி, செகண்டரி என்ற இருவகை உள்ளது. வேறு நோய்கள் எதுவும் இல்லாத நிலையிலும், மாதவிடாயோடு தொடர்புடைய உறுப்புகளில் எந்த காயங்களும் இல்லாத நிலையிலும், மாதவிலக்கு நாட்களில் வலி ஏற்பட்டால் அதை பிரைமரி டிஸ்மெனோரியா என்கிறார்கள். கருப்பையில் இருக்கும் பைபிராய்டுகள் மற்றும் கருப்பையின் உள்ளே தோன்றும் என்டோமெட்ரியத்தில் உருவாகும் என்டோமெட்ரியோசிஸ் போன்ற கருப்பை பாதிப்புகளால் உருவாகும் வலியை செகண்டரி டிஸ்மெனோரியா என்கிறார்கள்.
மாதவிலக்குக்கு முன்போ- அதன் பிறகோ வலி எதுவும் இல்லாமல் இருக்கும்போது, மாதவிலக்கின்போது மட்டும் ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை ஏற்படும் வலியை பிரைமரியாக எடுத்துக்கொள்ளலாம். பெண் உறுப்பு பகுதியிலும், அடிவயிற்றிலும், முதுகிலும் வலி ஏற்படுவது- வலி தொடைப் பகுதிகளுக்கு பரவுவது- வாந்தி- சிறி தளவு பிசிறாக மலம் வெளியேறுதல்- தலைவலி- ஒற்றை தலைவலி போன்றவை அதன் அறிகுறி. காய்ச்சல் இல்லாவிட்டாலும், அது இருப்பது போன்ற அவஸ்தைகளும் ஏற்படலாம்.
இறுக்கிப் பிடித்துவிட்டு விடுவதுபோன்று இந்த வலி தோன்றும். ரத்த அழுத்தம் சீராகவே இருக்கும். இவர்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் கோளாறு ஏற்படுவதில்லை. கருமுட்டையின் செயல்பாடுகளால் உருவாகும் புரோஜஸ்டிரான் ஹார்மோன் தான் மாதவிலக்கு கால வலிக்கு காரணம். 40 வயதை எட்டும்போது சில பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தி குறையும்போது தற்காலிகமாக வலி குறையவும் செய்யும். வயதுக்கு வந்த காலகட்டத்தில் இருந்து முதல் மூன்று வருடங்கள் வரை பிரைமரி டிஸ்மெனோரியா தொந்தரவு ஏற்படாது.
செகண்டரி டிஸ்மெனோரியா பாதிப்பு கொண்ட பெண்களுக்கு மாதவிலக்குக்கு சில நாட்களுக்கு முன்பே வலி தொடங்கிவிடும். மாதவிலக்கு நின்ற பிறகும் சில நாட்கள் நீடிக்கும். மாதவிலக்கு நாட்களில் வலி அதிகரிக்கும். திடீரென்று வலி நின்றுபோகவும் செய்யும். இது போன்ற அறிகுறிகள் செகண்டரியின் வெளிப்பாடாகும். இந்த தாக்கம் கொண்ட பெண்களுக்கு தாம்பத்ய தொடர்புகொள்ளும் நேரத்திலும் வலி ஏற்படக்கூடும். என்டோமெட்ரியோசிஸ், பைபிராய்டு, அடினோமயோசிஸ் மற்றும் இடுப்பு எலும்பான பெல்விக்கில் ஏற்படும் பாதிப்புகள் போன்றவைகளாலும், கருத் தடைக்காக பொருத்தப்படும் காப்பர்-டியாலும் செகண்டரி டிஸ்மெனோரியா ஏற்படும்.
தடுக்கும் வழி
தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்துவந்தால் பிரைமரி டிஸ்மெனோரியாவால் ஏற்படும் வலியை குறைக்கலாம். மாதவிலக்கு நாட்களில் நன்றாக ஓய்வெடுத்தல், வயிற்றிலும், முதுகிலும் சூடான ஒத்தடம் கொடுத்தல், வலி நிவாரண கிரீமை வெளிப் பகுதியில் பயன்படுத்துதல் போன்றவையும் நிவாரணம் தரும். செகண்டரி டிஸ்மெனோரியா என்றால் விரைவாக அதனை கண்டறிந்து, உடனடியாக சிகிச்சை பெறவேண்டும்.
சிகிச்சை
வலியை தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், டாக்டரின் ஆலோசனைப்படி வீரியம் குறைந்த வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்தலாம். டாக்டரின் ஆலோசனையின்றி மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவது ஆபத்தானது. முறைப்படி மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டும் வலி குறையாவிட்டால் ஹார்மோன் சிகிச்சை தேவைப்படும். நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை முறைகள் மாறும்.
மாதவிடாய் கால வலி இரண்டு வகை
மாதவிடாய் காலத்தில் 50 சதவீத பெண்கள் அடிவயிற்று வலியால் அவதிப்படுகிறார்கள். இதனை `டிஸ்மெனோரியா' என்று அழைக்கிறார்கள். இதில் பிரைமரி, செகண்டரி என்ற இருவகை உள்ளது. வேறு நோய்கள் எதுவும் இல்லாத நிலையிலும், மாதவிடாயோடு தொடர்புடைய உறுப்புகளில் எந்த காயங்களும் இல்லாத நிலையிலும், மாதவிலக்கு நாட்களில் வலி ஏற்பட்டால் அதை பிரைமரி டிஸ்மெனோரியா என்கிறார்கள். கருப்பையில் இருக்கும் பைபிராய்டுகள் மற்றும் கருப்பையின் உள்ளே தோன்றும் என்டோமெட்ரியத்தில் உருவாகும் என்டோமெட்ரியோசிஸ் போன்ற கருப்பை பாதிப்புகளால் உருவாகும் வலியை செகண்டரி டிஸ்மெனோரியா என்கிறார்கள்.
மாதவிலக்குக்கு முன்போ- அதன் பிறகோ வலி எதுவும் இல்லாமல் இருக்கும்போது, மாதவிலக்கின்போது மட்டும் ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை ஏற்படும் வலியை பிரைமரியாக எடுத்துக்கொள்ளலாம். பெண் உறுப்பு பகுதியிலும், அடிவயிற்றிலும், முதுகிலும் வலி ஏற்படுவது- வலி தொடைப் பகுதிகளுக்கு பரவுவது- வாந்தி- சிறி தளவு பிசிறாக மலம் வெளியேறுதல்- தலைவலி- ஒற்றை தலைவலி போன்றவை அதன் அறிகுறி. காய்ச்சல் இல்லாவிட்டாலும், அது இருப்பது போன்ற அவஸ்தைகளும் ஏற்படலாம்.
இறுக்கிப் பிடித்துவிட்டு விடுவதுபோன்று இந்த வலி தோன்றும். ரத்த அழுத்தம் சீராகவே இருக்கும். இவர்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் கோளாறு ஏற்படுவதில்லை. கருமுட்டையின் செயல்பாடுகளால் உருவாகும் புரோஜஸ்டிரான் ஹார்மோன் தான் மாதவிலக்கு கால வலிக்கு காரணம். 40 வயதை எட்டும்போது சில பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தி குறையும்போது தற்காலிகமாக வலி குறையவும் செய்யும். வயதுக்கு வந்த காலகட்டத்தில் இருந்து முதல் மூன்று வருடங்கள் வரை பிரைமரி டிஸ்மெனோரியா தொந்தரவு ஏற்படாது.
செகண்டரி டிஸ்மெனோரியா பாதிப்பு கொண்ட பெண்களுக்கு மாதவிலக்குக்கு சில நாட்களுக்கு முன்பே வலி தொடங்கிவிடும். மாதவிலக்கு நின்ற பிறகும் சில நாட்கள் நீடிக்கும். மாதவிலக்கு நாட்களில் வலி அதிகரிக்கும். திடீரென்று வலி நின்றுபோகவும் செய்யும். இது போன்ற அறிகுறிகள் செகண்டரியின் வெளிப்பாடாகும். இந்த தாக்கம் கொண்ட பெண்களுக்கு தாம்பத்ய தொடர்புகொள்ளும் நேரத்திலும் வலி ஏற்படக்கூடும். என்டோமெட்ரியோசிஸ், பைபிராய்டு, அடினோமயோசிஸ் மற்றும் இடுப்பு எலும்பான பெல்விக்கில் ஏற்படும் பாதிப்புகள் போன்றவைகளாலும், கருத் தடைக்காக பொருத்தப்படும் காப்பர்-டியாலும் செகண்டரி டிஸ்மெனோரியா ஏற்படும்.
தடுக்கும் வழி
தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்துவந்தால் பிரைமரி டிஸ்மெனோரியாவால் ஏற்படும் வலியை குறைக்கலாம். மாதவிலக்கு நாட்களில் நன்றாக ஓய்வெடுத்தல், வயிற்றிலும், முதுகிலும் சூடான ஒத்தடம் கொடுத்தல், வலி நிவாரண கிரீமை வெளிப் பகுதியில் பயன்படுத்துதல் போன்றவையும் நிவாரணம் தரும். செகண்டரி டிஸ்மெனோரியா என்றால் விரைவாக அதனை கண்டறிந்து, உடனடியாக சிகிச்சை பெறவேண்டும்.
சிகிச்சை
வலியை தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், டாக்டரின் ஆலோசனைப்படி வீரியம் குறைந்த வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்தலாம். டாக்டரின் ஆலோசனையின்றி மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவது ஆபத்தானது. முறைப்படி மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டும் வலி குறையாவிட்டால் ஹார்மோன் சிகிச்சை தேவைப்படும். நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை முறைகள் மாறும்.
நிறைய பேர் உடல் சூடு பிரச்சினையால் அவதிப்படுவார்கள். உடல் வெப்பத்தை தணித்து, உடல் சூட்டை விரட்டியடிக்கும் பானங்கள் குறித்து பார்ப்போம்.
மாறிவரும் சீதோஷண நிலை காரணமாக நிறைய பேர் உடல் சூடு பிரச்சினையால் அவதிப்படுவார்கள். வயிற்று வலி, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், உஷ்ணம் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்வார்கள். உடல் வெப்பத்தை தணித்து, உடல் சூட்டை விரட்டியடிக்கும் பானங்கள் குறித்து பார்ப்போம்.
எள்: இது உடல் எடையை சீராக பராமரிக்கும் தன்மை கொண்டது. தினமும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு ஒரு டேபிள்ஸ்பூன் எள்ளை அப்படியே மென்று சாப்பிடலாம். இதனை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.
மாதுளை: மாதுளம் பழத்தை கோடை காலத்தில் சாப்பிடுவது அவசியமானது. ஜூஸாகவும் பருகலாம். தினமும் காலையில் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் பருகி வரலாம். அதனுடன் இரண்டு துளிகள் பாதாம் எண்ணெய்யும் கலந்து கொள்ளலாம். இது உடல் வெப்பத்தை குறைக்க உதவும்.
தண்ணீர்: உடலை குளிர்ச்சி படுத்துவதில் தண்ணீருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. கோடை காலத்தில் தண்ணீர் அதிகம் பருகுவது நீரிழப்பை தடுக்க உதவும்.
வெந்தயம்: காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டேபிள்ஸ்பூன் வெந்தயத்தை வாயில் போட்டு மென்று, தண்ணீர் பருக வேண்டும். கோடையில் இந்த பழக்கத்தை தவறாமல் பின்பற்றி வந்தால் உடல் வெப்பம் தணிந்து விடும்.
சோம்பு: இரண்டு டேபிள்ஸ்பூன் சோம்பை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்துவிட்டு, காலையில் அந்த நீரை வடிகட்டி குடித்து வரலாம். இது உடல் வெப்பத்தை குறைக்கும் தன்மை கொண்டது.
சந்தனம்: குளிர்ந்த நீர் அல்லது குளிர்ந்த பாலில் சந்தனத்தை போட்டு குழப்பி நெற்றி, தாடை, முகத்தில் தடவிவிட்டு உலர்ந்ததும் கழுவி விடலாம். உடல் சூடு குறைந்துவிடும். மேலும் சந்தனப்பொடியுடன் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்தும் முகத்தில் உபயோகிக்கலாம். இதுவும் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி கொடுக்கும்.
பால்: பாலுடன் தேன் கலந்து பருகி வருவதும் உடல் வெப்பத்தை தணிக்க உதவும்.
இளநீர்: கோடையில் உடல் வறட்சி ஏற்படாமல் தடுத்து, குளிர்ச்சியை தக்கவைக்கும் தன்மை கொண்டது இளநீர். அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற பானமாகவும் இது விளங்குகிறது.
வைட்டமின் சி: ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்ற வைட்டமின் சி சத்து கொண்டவற்றை சாப்பிடுவது உடல் வெப்பத்தை குறைக்க உதவும். கோடை கால சீசனில் கிடைக்கும் பழங்கள் அனைத்தையும் சாப்பிடலாம். இவைகளை ஜூஸ் தயாரித்தும் பருகி வரலாம்.
கற்றாழை ஜூஸ்: கற்றாழையின் சதைப்பகுதியை முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு அரை மணி நேரம் கழித்து கழுவிவிடலாம். அது முகத்திற்கு மட்டுமின்றி உடலுக்கும் குளுமை சேர்க்கும். மேலும் கற்றாழையின் சதை பகுதியுடன் சிறிதளவு தேன், தண்ணீர் கலந்து பருகிவந்தால் உடல் சூடு தணியும்.
புதினா டீ: ஒரு கைப்பிடி அளவு புதினாவை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து பருகி வரலாம். புதினா குளிர்ச்சி தன்மை கொண்டது என்பதால் உடல் சூடு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வளிக்கும்.
வெண்ணெய்: ஒரு டம்ளர் பாலில் இரண்டு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் கலந்து பருகி வருவதன் மூலமும், உடல் வெப்பத்தை குறைக்கலாம். உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகம் இருப்பவர்கள் இதனை தவிர்த்துவிடலாம்.
மோர்: இது உடலை குளிர்ச்சியுடன் வைத்துக்கொள்ளக்கூடியது. மோரில் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் சத்துக்கள் அனைத்தும் இருக்கின்றன.
எள்: இது உடல் எடையை சீராக பராமரிக்கும் தன்மை கொண்டது. தினமும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு ஒரு டேபிள்ஸ்பூன் எள்ளை அப்படியே மென்று சாப்பிடலாம். இதனை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.
மாதுளை: மாதுளம் பழத்தை கோடை காலத்தில் சாப்பிடுவது அவசியமானது. ஜூஸாகவும் பருகலாம். தினமும் காலையில் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் பருகி வரலாம். அதனுடன் இரண்டு துளிகள் பாதாம் எண்ணெய்யும் கலந்து கொள்ளலாம். இது உடல் வெப்பத்தை குறைக்க உதவும்.
தண்ணீர்: உடலை குளிர்ச்சி படுத்துவதில் தண்ணீருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. கோடை காலத்தில் தண்ணீர் அதிகம் பருகுவது நீரிழப்பை தடுக்க உதவும்.
வெந்தயம்: காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டேபிள்ஸ்பூன் வெந்தயத்தை வாயில் போட்டு மென்று, தண்ணீர் பருக வேண்டும். கோடையில் இந்த பழக்கத்தை தவறாமல் பின்பற்றி வந்தால் உடல் வெப்பம் தணிந்து விடும்.
சோம்பு: இரண்டு டேபிள்ஸ்பூன் சோம்பை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்துவிட்டு, காலையில் அந்த நீரை வடிகட்டி குடித்து வரலாம். இது உடல் வெப்பத்தை குறைக்கும் தன்மை கொண்டது.
சந்தனம்: குளிர்ந்த நீர் அல்லது குளிர்ந்த பாலில் சந்தனத்தை போட்டு குழப்பி நெற்றி, தாடை, முகத்தில் தடவிவிட்டு உலர்ந்ததும் கழுவி விடலாம். உடல் சூடு குறைந்துவிடும். மேலும் சந்தனப்பொடியுடன் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்தும் முகத்தில் உபயோகிக்கலாம். இதுவும் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி கொடுக்கும்.
பால்: பாலுடன் தேன் கலந்து பருகி வருவதும் உடல் வெப்பத்தை தணிக்க உதவும்.
இளநீர்: கோடையில் உடல் வறட்சி ஏற்படாமல் தடுத்து, குளிர்ச்சியை தக்கவைக்கும் தன்மை கொண்டது இளநீர். அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற பானமாகவும் இது விளங்குகிறது.
வைட்டமின் சி: ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்ற வைட்டமின் சி சத்து கொண்டவற்றை சாப்பிடுவது உடல் வெப்பத்தை குறைக்க உதவும். கோடை கால சீசனில் கிடைக்கும் பழங்கள் அனைத்தையும் சாப்பிடலாம். இவைகளை ஜூஸ் தயாரித்தும் பருகி வரலாம்.
கற்றாழை ஜூஸ்: கற்றாழையின் சதைப்பகுதியை முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு அரை மணி நேரம் கழித்து கழுவிவிடலாம். அது முகத்திற்கு மட்டுமின்றி உடலுக்கும் குளுமை சேர்க்கும். மேலும் கற்றாழையின் சதை பகுதியுடன் சிறிதளவு தேன், தண்ணீர் கலந்து பருகிவந்தால் உடல் சூடு தணியும்.
புதினா டீ: ஒரு கைப்பிடி அளவு புதினாவை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து பருகி வரலாம். புதினா குளிர்ச்சி தன்மை கொண்டது என்பதால் உடல் சூடு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வளிக்கும்.
வெண்ணெய்: ஒரு டம்ளர் பாலில் இரண்டு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் கலந்து பருகி வருவதன் மூலமும், உடல் வெப்பத்தை குறைக்கலாம். உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகம் இருப்பவர்கள் இதனை தவிர்த்துவிடலாம்.
மோர்: இது உடலை குளிர்ச்சியுடன் வைத்துக்கொள்ளக்கூடியது. மோரில் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் சத்துக்கள் அனைத்தும் இருக்கின்றன.
சில குழந்தைகள் பேசத்தெரியாமலேயே உம்மென்று இருப்பார்கள். ஒருசிலரோ பேசுவதற்கு பயந்துபோய் வார்த்தைகளை உச்சரிக்க முன்வர மாட்டார்கள்.
குழந்தைகளின் மழலை மொழியை ரசிக்காதவர்கள் எவருமில்லை. தங்கள் குழந்தைகளின் கீச்சுக்குரலை சீக்கிரமாகவே கேட்பதற்கு அனைத்து தாய்மார்களும் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் சில குழந்தைகள் பேசுவதற்கு தாமதமாகும். ஓரிரு வார்த்தைகளை கூட உச்சரிக்க தடுமாறுவார்கள். இரண்டு வயதை கடந்த பிறகும் கூட பேசுவதற்கு தடுமாறும் குழந்தைகளும் இருக்கிறார்கள். அத்தகைய குழந்தைகளை குழந்தை நல நிபுணரிடம் அழைத்து சென்று பரிசோதிப்பதுதான் சரியானது. அவர் குழந்தைகளை பேச வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வார். ஒருசில பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் பெற்றோருக்கு வழங்குவார். அவற்றை பின்பற்றுவதுடன் குழந்தைகளை விரைவாக பேச வைப்பதற்கான முயற்சிகளில் பெற்றோர் ஈடுபடலாம். அத்தகைய எளிய வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.
குழந்தைகள் இரண்டு வயதை கடந்த பிறகும் பேசுவதற்கு ஆயத்தமாகவில்லை என்றால் அவர்களுக்கு எழுத்துக்கள் சரியாக புரியவில்லை என்று அர்த்தம். சில குழந்தைகள் பேசத்தெரியாமலேயே உம்மென்று இருப்பார்கள். ஒருசிலரோ பேசுவதற்கு பயந்துபோய் வார்த்தைகளை உச்சரிக்க முன்வர மாட்டார்கள். ஆனால் பெற்றோர் என்ன பேசுகிறார்களோ அதை அப்படியே உள்வாங்கி நினைவில் வைத்துக்கொள்ளும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை எளிதாக பேச வைத்துவிடலாம். பெற்றோர் அவர்களிடம் நன்றாக பேசி பழகினாலே போதுமானது. தங்கள் மீது இருக்கும் பயமும், தயக்கமும்தான் பேசுவதற்கு தடையாக இருப்பதை பெற்றோர் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அவர்கள் பேச முற்படும்போதெல்லாம் பெற்றோர் உற்சாகப்படுத்தி பேச வைக்க வேண்டும்.
ஏதேனும் ஒரு பொருளின் பெயரையோ, இடத்தையோ உச்சரிக்க சொல்லிக்கொடுக்கும்போது அதனை போட்டோவில் காண்பிப்பதை தவிர்க்க வேண்டும். கூடுமான வரையில் அந்த பொருளை நேரில் காண்பித்து சொல்லிக்கொடுப்பதுதான் சிறந்தது. அத்துடன் அந்த பொருளின் சிறப்பியல்புகள் என்னென்ன? அது எதற்கு உதவுகிறது என்பதையும் விளக்கி கூறலாம்.
பேசுவதற்கு எந்தவித ஆர்வமும் இல்லாமல் இருந்தால் தினமும் ஒரு பொருளின் பெயரை மட்டும் உச்சரிப்பதற்கு பழக்கலாம். அதே பெயரை திரும்ப திரும்ப சொல்லும்போது மனதில் எளிதாக உள்வாங்கிக்கொள்வார்கள். அப்படி மனதில் ஆழமாக பதிந்துவிட்டால் பயமும், தயக்கமும் இன்றி பேசுவதற்கு முயற்சிப்பார்கள்.
ஒருசில வார்த்தைகளை குழந்தைகள் உச்சரிக்க பழகியதும் புகைப்பட வடிவில் இருக்கும் புத்தகத்தில் இருக்கும் பெயரை படங்களுடன் விளக்கி புரியவைக்கலாம். தினமும் காலையில் கற்றுக்கொடுக்கும் விஷயத்தை மாலையில் மீண்டும் சொல்லிக்கொடுக்கலாம். அது சட்டென்று அவர்கள் மனதில் பதிந்து விடும். மேலும் ஒரே வார்த்தையை திரும்ப, திரும்ப சொல்லியபடி பயிற்சி பெறும்போது எளிதில் மறக்காது. நன்றாக நினைவில் நிலைத்திருக்கும்.
பேச தயங்கும் குழந்தைகளிடத்தில் பாடல் வடிவில் பேச்சுத்திறனை வளர்க்கலாம். பாடல் வரிகளை ராகத்துடன் சொல்லிக்கொடுக்கும்போது ஆர்வமாக வார்த்தைகளை உச்சரிப் பதற்கு பழகிவிடுவார்கள். பாடும்போது உடல் மொழிகளை வெளிப்படுத்தும் விதமும் குழந்தைகளை ரசிக்க வைக்கும் விதமாக இருக்க வேண்டும். அதே பாவனையில் தாங்களும் உடல் அசைவுகளை வெளிப்படுத்துவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். பாடல் வரிகள் எளிதில் மனதில் பதிந்துவிடும் என்பதால் பேசுவதும் எளிதாகிவிடும்.
சில குழந்தைகள் பேசுவதற்கு வெட்கப்படுவார்கள். குடும்பத்தினர் தவிர மற்றவர்கள் முன்னால் வாயை திறக்கமாட்டார்கள். அவர்களை பேச வைப்பதற்கு எவ்வளவுதான் முயற்சித்தாலும் இசைந்து கொடுக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளை பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் விளையாட விடலாம். வெளி இடங்களுக்கு அழைத்து சென்று வரலாம். அங்கு சந்திக்கும் நபர்களிடம் பேச வைக்கலாம். அல்லது அவர்கள் பேசுவதை உன்னிப்பாக கவனிக்க வைக்கலாம்.
இப்போதெல்லாம் பச்சிளம் குழந்தைகள் கூட ஸ்மார்ட்போனுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்கிறது. அப்படி பிஞ்சு வயதிலேயே ஸ்மார்ட்போனுடன் தொடர்பில் இருக்கும் குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும்போது தாமதமாகவே பேச தொடங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற தொலை தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டை பெற்றோர் குறைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை தவிர்த்து குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது அவர்களின் உடல், தகவல்தொடர்பு திறன், அறிவாற்றல் திறனை மேம்படுத்தும்.
குழந்தைகளுடன் இணக்கத்தை வளர்க்கும் விளையாட்டுகளில் ஈடுபடலாம். கதை சொல்லும் வழக்கத்தை பின்பற்றலாம். அவை குழந்தைகளின் கற்றல் திறனை அதிகரிக்க செய்யும்.
குழந்தைகள் புதிய சொற்களை கற்கும்போது, ஒவ்வொரு முறையும் அவர்களின் உச்சரிப்பில் திருப்தி இல்லாத மன நிலையை வெளிப் படுத்த வேண்டும். அப்போதுதான் மீண்டும் மீண்டும் தங்களுக்குள்ளாகவே அதே வார்த்தையை உச்சரிக்க பழகுவார்கள். பின்பு சரியாக உச்சரிக்க தொடங்கிவிடுவார்கள்.
குழந்தைகள் இரண்டு வயதை கடந்த பிறகும் பேசுவதற்கு ஆயத்தமாகவில்லை என்றால் அவர்களுக்கு எழுத்துக்கள் சரியாக புரியவில்லை என்று அர்த்தம். சில குழந்தைகள் பேசத்தெரியாமலேயே உம்மென்று இருப்பார்கள். ஒருசிலரோ பேசுவதற்கு பயந்துபோய் வார்த்தைகளை உச்சரிக்க முன்வர மாட்டார்கள். ஆனால் பெற்றோர் என்ன பேசுகிறார்களோ அதை அப்படியே உள்வாங்கி நினைவில் வைத்துக்கொள்ளும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை எளிதாக பேச வைத்துவிடலாம். பெற்றோர் அவர்களிடம் நன்றாக பேசி பழகினாலே போதுமானது. தங்கள் மீது இருக்கும் பயமும், தயக்கமும்தான் பேசுவதற்கு தடையாக இருப்பதை பெற்றோர் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அவர்கள் பேச முற்படும்போதெல்லாம் பெற்றோர் உற்சாகப்படுத்தி பேச வைக்க வேண்டும்.
ஏதேனும் ஒரு பொருளின் பெயரையோ, இடத்தையோ உச்சரிக்க சொல்லிக்கொடுக்கும்போது அதனை போட்டோவில் காண்பிப்பதை தவிர்க்க வேண்டும். கூடுமான வரையில் அந்த பொருளை நேரில் காண்பித்து சொல்லிக்கொடுப்பதுதான் சிறந்தது. அத்துடன் அந்த பொருளின் சிறப்பியல்புகள் என்னென்ன? அது எதற்கு உதவுகிறது என்பதையும் விளக்கி கூறலாம்.
பேசுவதற்கு எந்தவித ஆர்வமும் இல்லாமல் இருந்தால் தினமும் ஒரு பொருளின் பெயரை மட்டும் உச்சரிப்பதற்கு பழக்கலாம். அதே பெயரை திரும்ப திரும்ப சொல்லும்போது மனதில் எளிதாக உள்வாங்கிக்கொள்வார்கள். அப்படி மனதில் ஆழமாக பதிந்துவிட்டால் பயமும், தயக்கமும் இன்றி பேசுவதற்கு முயற்சிப்பார்கள்.
ஒருசில வார்த்தைகளை குழந்தைகள் உச்சரிக்க பழகியதும் புகைப்பட வடிவில் இருக்கும் புத்தகத்தில் இருக்கும் பெயரை படங்களுடன் விளக்கி புரியவைக்கலாம். தினமும் காலையில் கற்றுக்கொடுக்கும் விஷயத்தை மாலையில் மீண்டும் சொல்லிக்கொடுக்கலாம். அது சட்டென்று அவர்கள் மனதில் பதிந்து விடும். மேலும் ஒரே வார்த்தையை திரும்ப, திரும்ப சொல்லியபடி பயிற்சி பெறும்போது எளிதில் மறக்காது. நன்றாக நினைவில் நிலைத்திருக்கும்.
பேச தயங்கும் குழந்தைகளிடத்தில் பாடல் வடிவில் பேச்சுத்திறனை வளர்க்கலாம். பாடல் வரிகளை ராகத்துடன் சொல்லிக்கொடுக்கும்போது ஆர்வமாக வார்த்தைகளை உச்சரிப் பதற்கு பழகிவிடுவார்கள். பாடும்போது உடல் மொழிகளை வெளிப்படுத்தும் விதமும் குழந்தைகளை ரசிக்க வைக்கும் விதமாக இருக்க வேண்டும். அதே பாவனையில் தாங்களும் உடல் அசைவுகளை வெளிப்படுத்துவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். பாடல் வரிகள் எளிதில் மனதில் பதிந்துவிடும் என்பதால் பேசுவதும் எளிதாகிவிடும்.
சில குழந்தைகள் பேசுவதற்கு வெட்கப்படுவார்கள். குடும்பத்தினர் தவிர மற்றவர்கள் முன்னால் வாயை திறக்கமாட்டார்கள். அவர்களை பேச வைப்பதற்கு எவ்வளவுதான் முயற்சித்தாலும் இசைந்து கொடுக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளை பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் விளையாட விடலாம். வெளி இடங்களுக்கு அழைத்து சென்று வரலாம். அங்கு சந்திக்கும் நபர்களிடம் பேச வைக்கலாம். அல்லது அவர்கள் பேசுவதை உன்னிப்பாக கவனிக்க வைக்கலாம்.
இப்போதெல்லாம் பச்சிளம் குழந்தைகள் கூட ஸ்மார்ட்போனுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்கிறது. அப்படி பிஞ்சு வயதிலேயே ஸ்மார்ட்போனுடன் தொடர்பில் இருக்கும் குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும்போது தாமதமாகவே பேச தொடங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற தொலை தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டை பெற்றோர் குறைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை தவிர்த்து குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது அவர்களின் உடல், தகவல்தொடர்பு திறன், அறிவாற்றல் திறனை மேம்படுத்தும்.
குழந்தைகளுடன் இணக்கத்தை வளர்க்கும் விளையாட்டுகளில் ஈடுபடலாம். கதை சொல்லும் வழக்கத்தை பின்பற்றலாம். அவை குழந்தைகளின் கற்றல் திறனை அதிகரிக்க செய்யும்.
குழந்தைகள் புதிய சொற்களை கற்கும்போது, ஒவ்வொரு முறையும் அவர்களின் உச்சரிப்பில் திருப்தி இல்லாத மன நிலையை வெளிப் படுத்த வேண்டும். அப்போதுதான் மீண்டும் மீண்டும் தங்களுக்குள்ளாகவே அதே வார்த்தையை உச்சரிக்க பழகுவார்கள். பின்பு சரியாக உச்சரிக்க தொடங்கிவிடுவார்கள்.
சப்ஜா விதையில் நார்சத்து அதிகமாக இருப்பதினால் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுவிக்கும். செரிமான பிரச்சனை, நெஞ்செரிச்சல், குடலில் புண் போன்ற அனைத்திற்கும் தீர்வாக சப்ஜா விதைகள் இருக்கிறது.
தேவையான பொருட்கள் :
தர்பூசணி - 1
சப்ஜா விதை - 2 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்
புதினா இலை - சிறிதளவு
தேன் - தேவைக்கு
செய்முறை:
சப்ஜா விதையை வெந்நீரில் அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
தர்பூசணி பழத்தின் விதைகளை நீக்கி, துண்டுகளாக வெட்டி மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் தர்பூசணி ஜுஸ் உடன் சப்ஜா விதை, தேன், எலுமிச்சை சாறு, புதினா இலை சேர்த்து கலக்கவும்.
அதனை சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்துவிட்டு சுவைக்கவும்.
தர்பூசணி - 1
சப்ஜா விதை - 2 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்
புதினா இலை - சிறிதளவு
தேன் - தேவைக்கு
செய்முறை:
சப்ஜா விதையை வெந்நீரில் அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
தர்பூசணி பழத்தின் விதைகளை நீக்கி, துண்டுகளாக வெட்டி மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் தர்பூசணி ஜுஸ் உடன் சப்ஜா விதை, தேன், எலுமிச்சை சாறு, புதினா இலை சேர்த்து கலக்கவும்.
அதனை சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்துவிட்டு சுவைக்கவும்.
இன்றைய மனிதனின் பெரும்பாலான நேரத்தை செல்போன்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. செல்போனில் மூழ்கியபடியே நிறைய பேர் பொழுதை போக்குகிறார்கள்.
இன்றைய மனித வாழ்க்கை அவசரத்தோடு இணைந்து விட்டது. ஒரு வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்போது அவசரம் தொற்றிக்கொள்கிறது. இந்த அவசரம், அதனால் ஏற்படும் பின் விளைவுகளை பற்றி சற்றும் சிந்திக்க இடம் கொடுக்காது.
பயணத்தின்போது பெரும்பாலானோர் அவசரம் கொள்வார்கள்: குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டிய இடத்திற்கு எப்படியாவது போய் சேர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அந்த சமயத்தில் மனதில் நிலைத்திருக்கும். அப்படி அவசரப் படுபவர்கள் முன்கூட்டியே திட்டமிட்ட நேரத்திற்குள் புறப்படமாட்டார்கள். அதுதான் அவசரத்திற்கு அடிப்படை காரணமாக அமைந்துவிடுகிறது. எங்கு செல்ல இருந்தாலும் சென்றடையும் இடத்திற்கு இடையேயான பயண நேரத்தை கவனத்தில் கொண்டு புறப்பட வேண்டும். வீட்டில் இருந்து புறப் படுவதற்கு திட்டமிட்டிருக்கும் நேரத்துக்கு கால் மணி அல்லது அரை மணி நேரத்திற்கு முன்பாகவே கிளம்புவதுதான் சரியானது. அது அவசரத்தையும், வீண் டென்ஷனையும் தவிர்க்கும்.
சிந்தனையை முற்றிலும் ஆக்கிரமித்துக்கொள்ளும் இந்த அவசரம், தினம் தினம் ஆபத்தை நோக்கித்தான் பயணிக்க செய்யும். அவசரம் எந்த அளவுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை கண் கூடாகவே உணரலாம். ரெயிலில் வெளி மாநிலத்திற்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்த இளைஞர் ஒருவர், வீட்டில் இருந்து அவசரம் அவசரமாக புறப்பட்டு ரெயில் நிலையம் வந்தடைந்தார். காலதாமதமாகவே பிளாட்பாரத்திற்குள் நுழைந்ததால் ரெயில் புறப்பட தயாரானது. அவசர அவசரமாக ரெயிலை நோக்கி ஓடினார். அதற்குள் ரெயில் கிளம்பிவிட்டது. ஏதாவதொரு பெட்டியில் ஏறிவிடலாம் என்று அவசரம் அவசரமாக ஓடோடி சென்று ரெயில் பெட்டியின் கதவோரம் இருக்கும் கம்பியை பிடித்து ஏறிவிட்டார்.
ஆனால் துரதிருஷ்டமாக அந்த பெட்டியின் கதவு பூட்டியே இருந்திருக்கிறது. அதனால் கதவை திறந்து உள்ளே செல்ல முடியவில்லை. கம்பியை பிடித்தபடி படிக்கட்டில் தொங்கிக்கொண்டே பயணித்தார். சிறிது நேரத்திற்குள் யாராவது கதவை திறந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால் அந்த பெட்டியில் யாரும் இல்லை. அது ஒரு ஏ.சி. பெட்டி என்பதால் உள் கதவும் பூட்டிய நிலையிலேயே இருந்தது. ரெயில் நிலையத்தில் நின்றிருந்தவர்கள் அவசர அவசரமாக ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் ரெயில் வெகு தூரம் சென்று விட்டது. அடுத்த ஸ்டேஷனுக்கு அவசரமாக தகவல் கொடுக்கப்பட்டது. அதற்குள் ரெயிலின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அந்த இளைஞர் கீழே விழுந்து ரெயில் சக்கரத்தில் சிக்கி இறந்துவிட்டார். அந்த இளைஞர் தனியார் நிறுவனம் ஒன்றில் உயர்ந்த பதவியில் இருந்தவர். எப்படியாவது ரெயிலை பிடித்துவிட வேண்டும் என்ற உந்துதலில் அவசரப்பட்டு ஏறி உயிரை பறிகொடுத்துவிட்டார். இது ஒரு உதாரணம்தான். இதுபோல அவசர கதியில் தினம் தினம் பல விஷயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இப்படி அவசர கதியில் இயங்கு பவர்கள் மத்தியில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வித்தியாசம் இருப்பதில்லை.
இன்றைய மனிதனின் பெரும்பாலான நேரத்தை செல்போன்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. செல்போனில் மூழ்கியபடியே நிறைய பேர் பொழுதை போக்குகிறார்கள். ஊரடங்கு காலகட்டமும் அந்த சந்தர்ப்பத்தை அமைத்து கொடுத்திருக்கிறது. செல்போனில் எதிர் முனையில் இருப்பவர்களிடம் பேசியபடியே கண் எதிரில் நிற்கும் மற்றவர்களின் கேள்விக்கு பதில் சொல்பவர்களும் இருக்கிறார்கள். அவர் யாரிடம் பேசுகிறார் என்று கேட்பவர்கள் இருவருமே குழம்பி போய்விடுவார்கள். எதிரில் நிற்பவரின் கேள்விக்கு பதில் சொல்லியபடியே அவசரம் அவசரமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடுவார்கள். செல்போனிலேயே மூழ்கி கிடப்பது நரம்பு மண்டலத்தை பாதித்து அமைதி இழக்க செய்து விடும். தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்களும் அதிக நேரத்தை அபகரித்துக் கொள்கின்றன. அவற்றுடன் நேரத்தை செலவிட்ட பிறகுதான் மீதமுள்ள நேரத்தில் மற்ற அன்றாட வேலைகளை செய்யும் நிலைக்கும் சிலர் தள்ளப்படுகிறார்கள்.
குறுகிய நேரத்திற்குள் வேலைகளை அவசரம் அவசரமாக செய்து முடிப்பதற்கு ஆர்வம் காட்டுவார்கள். அது முடியாத பட்சத்தில் மன அழுத்தம் ஆக்கிரமித்துக்கொள்ளும். அது ஏற்படுத்தும் ஆபத்தை உணராமல் எல்லாவற்றிலும் அவசரம் காட்டிக்கொண்டே இருப்பார்கள். ஒவ்வொரு வேலைக்கும் போதுமான நேரம் ஒதுக்கினால் அவசரப்பட வேண்டியதில்லை. நிதானமாகவும், அமைதியாகவும் அந்த வேலைகளை செய்து முடிக் கலாம். எந்த வேலையாக இருந்தாலும் அதற்கு நேரத்தை நிர்ணயித்து செலவிட பழக வேண்டும். உணவு அருந்துவதிலும் அவசரம் கூடாது. நிதானம் தேவை. குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றலாம். அது அவசரமாக சாப்பிடும் வழக்கத்தை மறக்கடித்துவிடும். நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். எழுதுவதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். எழுத்தும், வாசிப்பும் மனதை அமைதிப்படுத்தும். அவசர மனநிலைக்கு கடிவாளமிடும்.
எந்த வேலையையும் அவசரமாக செய்வதற்கு முயற்சிக்காதீர்கள். டிக்கெட் வாங்குமிடத்தில் அவ சரம், ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்கு அவசரம், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அவசரம், சிக்னல் விழுவதற்குள் அவசரம். இப்படி நாள் முழுவதும் எல்லாவற்றிற்கும் அவசரம் காட்டி என்ன சாதிக்கப்போகிறோம் என்பதை யோசித்து பாருங்கள். அவசர அவசரமாக செயல்படும்போது மறதியும் தொற்றிக்கொள்ளும். அவசரமாக சென்று பணம் எடுக்கும்போது ஏ.டி.எம். கார்டை தவற விட்டிருப்போம், வண்டி சாவியை தொலைத்திருப்போம். இப்படி பல மடங்கு டென்ஷனைத்தான் அனுபவிக்க வேண்டியிருக்கும். திட்டமிட்டு வேலைகளை செய்து பழகுங்கள். அப்படி செயல்பட்டாலே அவசரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.
பயணத்தின்போது பெரும்பாலானோர் அவசரம் கொள்வார்கள்: குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டிய இடத்திற்கு எப்படியாவது போய் சேர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அந்த சமயத்தில் மனதில் நிலைத்திருக்கும். அப்படி அவசரப் படுபவர்கள் முன்கூட்டியே திட்டமிட்ட நேரத்திற்குள் புறப்படமாட்டார்கள். அதுதான் அவசரத்திற்கு அடிப்படை காரணமாக அமைந்துவிடுகிறது. எங்கு செல்ல இருந்தாலும் சென்றடையும் இடத்திற்கு இடையேயான பயண நேரத்தை கவனத்தில் கொண்டு புறப்பட வேண்டும். வீட்டில் இருந்து புறப் படுவதற்கு திட்டமிட்டிருக்கும் நேரத்துக்கு கால் மணி அல்லது அரை மணி நேரத்திற்கு முன்பாகவே கிளம்புவதுதான் சரியானது. அது அவசரத்தையும், வீண் டென்ஷனையும் தவிர்க்கும்.
சிந்தனையை முற்றிலும் ஆக்கிரமித்துக்கொள்ளும் இந்த அவசரம், தினம் தினம் ஆபத்தை நோக்கித்தான் பயணிக்க செய்யும். அவசரம் எந்த அளவுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை கண் கூடாகவே உணரலாம். ரெயிலில் வெளி மாநிலத்திற்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்த இளைஞர் ஒருவர், வீட்டில் இருந்து அவசரம் அவசரமாக புறப்பட்டு ரெயில் நிலையம் வந்தடைந்தார். காலதாமதமாகவே பிளாட்பாரத்திற்குள் நுழைந்ததால் ரெயில் புறப்பட தயாரானது. அவசர அவசரமாக ரெயிலை நோக்கி ஓடினார். அதற்குள் ரெயில் கிளம்பிவிட்டது. ஏதாவதொரு பெட்டியில் ஏறிவிடலாம் என்று அவசரம் அவசரமாக ஓடோடி சென்று ரெயில் பெட்டியின் கதவோரம் இருக்கும் கம்பியை பிடித்து ஏறிவிட்டார்.
ஆனால் துரதிருஷ்டமாக அந்த பெட்டியின் கதவு பூட்டியே இருந்திருக்கிறது. அதனால் கதவை திறந்து உள்ளே செல்ல முடியவில்லை. கம்பியை பிடித்தபடி படிக்கட்டில் தொங்கிக்கொண்டே பயணித்தார். சிறிது நேரத்திற்குள் யாராவது கதவை திறந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால் அந்த பெட்டியில் யாரும் இல்லை. அது ஒரு ஏ.சி. பெட்டி என்பதால் உள் கதவும் பூட்டிய நிலையிலேயே இருந்தது. ரெயில் நிலையத்தில் நின்றிருந்தவர்கள் அவசர அவசரமாக ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் ரெயில் வெகு தூரம் சென்று விட்டது. அடுத்த ஸ்டேஷனுக்கு அவசரமாக தகவல் கொடுக்கப்பட்டது. அதற்குள் ரெயிலின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அந்த இளைஞர் கீழே விழுந்து ரெயில் சக்கரத்தில் சிக்கி இறந்துவிட்டார். அந்த இளைஞர் தனியார் நிறுவனம் ஒன்றில் உயர்ந்த பதவியில் இருந்தவர். எப்படியாவது ரெயிலை பிடித்துவிட வேண்டும் என்ற உந்துதலில் அவசரப்பட்டு ஏறி உயிரை பறிகொடுத்துவிட்டார். இது ஒரு உதாரணம்தான். இதுபோல அவசர கதியில் தினம் தினம் பல விஷயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இப்படி அவசர கதியில் இயங்கு பவர்கள் மத்தியில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வித்தியாசம் இருப்பதில்லை.
இன்றைய மனிதனின் பெரும்பாலான நேரத்தை செல்போன்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. செல்போனில் மூழ்கியபடியே நிறைய பேர் பொழுதை போக்குகிறார்கள். ஊரடங்கு காலகட்டமும் அந்த சந்தர்ப்பத்தை அமைத்து கொடுத்திருக்கிறது. செல்போனில் எதிர் முனையில் இருப்பவர்களிடம் பேசியபடியே கண் எதிரில் நிற்கும் மற்றவர்களின் கேள்விக்கு பதில் சொல்பவர்களும் இருக்கிறார்கள். அவர் யாரிடம் பேசுகிறார் என்று கேட்பவர்கள் இருவருமே குழம்பி போய்விடுவார்கள். எதிரில் நிற்பவரின் கேள்விக்கு பதில் சொல்லியபடியே அவசரம் அவசரமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடுவார்கள். செல்போனிலேயே மூழ்கி கிடப்பது நரம்பு மண்டலத்தை பாதித்து அமைதி இழக்க செய்து விடும். தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்களும் அதிக நேரத்தை அபகரித்துக் கொள்கின்றன. அவற்றுடன் நேரத்தை செலவிட்ட பிறகுதான் மீதமுள்ள நேரத்தில் மற்ற அன்றாட வேலைகளை செய்யும் நிலைக்கும் சிலர் தள்ளப்படுகிறார்கள்.
குறுகிய நேரத்திற்குள் வேலைகளை அவசரம் அவசரமாக செய்து முடிப்பதற்கு ஆர்வம் காட்டுவார்கள். அது முடியாத பட்சத்தில் மன அழுத்தம் ஆக்கிரமித்துக்கொள்ளும். அது ஏற்படுத்தும் ஆபத்தை உணராமல் எல்லாவற்றிலும் அவசரம் காட்டிக்கொண்டே இருப்பார்கள். ஒவ்வொரு வேலைக்கும் போதுமான நேரம் ஒதுக்கினால் அவசரப்பட வேண்டியதில்லை. நிதானமாகவும், அமைதியாகவும் அந்த வேலைகளை செய்து முடிக் கலாம். எந்த வேலையாக இருந்தாலும் அதற்கு நேரத்தை நிர்ணயித்து செலவிட பழக வேண்டும். உணவு அருந்துவதிலும் அவசரம் கூடாது. நிதானம் தேவை. குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றலாம். அது அவசரமாக சாப்பிடும் வழக்கத்தை மறக்கடித்துவிடும். நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். எழுதுவதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். எழுத்தும், வாசிப்பும் மனதை அமைதிப்படுத்தும். அவசர மனநிலைக்கு கடிவாளமிடும்.
எந்த வேலையையும் அவசரமாக செய்வதற்கு முயற்சிக்காதீர்கள். டிக்கெட் வாங்குமிடத்தில் அவ சரம், ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்கு அவசரம், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அவசரம், சிக்னல் விழுவதற்குள் அவசரம். இப்படி நாள் முழுவதும் எல்லாவற்றிற்கும் அவசரம் காட்டி என்ன சாதிக்கப்போகிறோம் என்பதை யோசித்து பாருங்கள். அவசர அவசரமாக செயல்படும்போது மறதியும் தொற்றிக்கொள்ளும். அவசரமாக சென்று பணம் எடுக்கும்போது ஏ.டி.எம். கார்டை தவற விட்டிருப்போம், வண்டி சாவியை தொலைத்திருப்போம். இப்படி பல மடங்கு டென்ஷனைத்தான் அனுபவிக்க வேண்டியிருக்கும். திட்டமிட்டு வேலைகளை செய்து பழகுங்கள். அப்படி செயல்பட்டாலே அவசரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.
அழகை பராமரிக்காவிட்டாலும்கூட அழகை பாழ்படுத்தும் பழக்கவழக்கங்களை பின்பற்றும் ஆண்களும் இருக்கிறார்கள். அவர்கள் அசட்டையாக செய்யும் தவறுகள் அழகை கெடுத்துவிடும்.
பெண்களை போல் ஆண்கள் அழகை பராமரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். மன அழுத்தம், வேலைப்பளு, குடும்ப சுமை, பொருளாதார நிலைமை, நேரமின்மை, சருமத்தை பராமரிப்பதில் அக்கறையின்மை போன்ற காரணங்கள் அழகு விஷயத்தில் ஆண்களை பின் தங்க வைத்திருக்கிறது. அழகை பராமரிக்காவிட்டாலும்கூட அழகை பாழ்படுத்தும் பழக்கவழக்கங்களை பின்பற்றும் ஆண்களும் இருக்கிறார்கள். அவர்கள் அசட்டையாக செய்யும் தவறுகள் அழகை கெடுத்துவிடும். அத்தகைய பழக்கவழக்கங்கள் என்னவென்று பார்ப்போம்.
புகைப்பழக்கம்: புகைப்பிடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல் சரும அழகுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. புகைப்பொருட்களில் இருந்து வெளியாகும் புகையில் கார்பன் மோனாக்சைடு உள்ளது. அது சருமத்தில் ஆக்சிஜன் அளவை குறைத்துவிடக்கூடும். மேலும் புகையிலையில் கலந்திருக்கும் நிக்கோட்டின் ரத்த ஓட்டத்தை குறைக்கக்கூடியது. இதனால் சரும வறட்சி, நிறமாற்றம் போன்ற பிரச்சினைகள் உண்டாகும். அதிகமாக புகைக்கும்போது வாய்ப்பகுதியை சுற்றி சுருக்கங்கள் ஏற்படத்தொடங்கி விடும்.
பொடுகு: பெண்களை விட ஆண்கள் பொடுகு பிரச்சினையை அதிகம் எதிர்கொள்வார்கள். முடி பராமரிப்பில் போதிய கவனம் செலுத்தாததே அதற்கு காரணம். பொடுகு பிரச்சினையால் சரும பாதிப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும். அடிக்கடி ஷாம்பு அல்லது சிகைக்காய் போன்ற பொருட்களை பயன்படுத்தி தலைமுடியை சுத்தமாக பராமரித்து வருவது அவசியமானது. சில ஆண்கள் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதற்கு ஆர்வம் காண்பிக்கமாட்டார்கள். அதுவும் தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.
எண்ணெய்: எண்ணெய் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது முகப்பரு பிரச்சினைக்கு வழிவகுக்கும். சரும துளைகளில் அடைப்பையும் ஏற்படுத்திவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
குளியல் சோப்: சில ஆண்கள் அழகு சாதனப் பொருட்களுக்கு மாற்றாக குளியல் சோப்பை பயன்படுத்துவார்கள். குளிக்கும்போதும், கை, கால்களை கழுவும்போதும் சோப்பை கொண்டு முகத்தை நன்றாக கழுவுவார்கள். அப்படி எப்போதும் சோப் பயன்படுத்துவதன் மூலம் சருமம் வறட்சியடையும். நாளடைவில் சுருக்கங்களும் எட்டிப்பார்க்கத்தொடங்கி விடும். சோப்புக்கு பதிலாக பேஸ் வாஷ் பயன்படுத்துவது நல்லது.
சன்ஸ்கிரீன்: ஆண்கள் வெளி இடங்களுக்கு செல்லும்போது பெண்களை போல சன்ஸ்கிரீன் பூசிக்கொள்வது நல்லது. அது சூரியக்கதிர் வீச்சில் இருந்து சருமத்திற்கு பாதுகாப்பு தரும். ஆனால் ஆண்கள் பலரும் சன்ஸ்கிரீன் உபயோகிக்கும் விஷயத்தில் ஆர்வம் கொள்வதில்லை. பெண்களை விட ஆண்கள்தான் வெளி இடங்களுக்கு அதிகம் செல்வதால் சூரியக்கதிர் வீச்சு மூலம் சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சரும சுருக்கமும் உண்டாகும்.
மாய்ஸ்சுரைசர்: இது சருமத்திற்கு மென்மை தரக்கூடியது. பெரும்பாலும் ஆண்கள் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவதற்கு விரும்பமாட்டார்கள். சருமத்தை பராமரிப்பதற்கும் அக்கறை கொள்ளமாட்டார்கள். அதனால் சருமம் மென்மை தன்மையை இழந்துவிடும். வறட்சியும் குடிகொண்டுவிடும். தினமும் ஒருமுறையாவது சருமத்திற்கு பொருத்தமான மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது நல்லது.
சுடுநீர்: சூடான நீரில் முகத்தை சுத்தப்படுத்தினால் சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகள் அனைத்தும் நீங்கிவிடும் என்று சிலர் கருதுகிறார்கள். அப்படி சூடான நீரில் முகத்தை கழுவுவது, குளிப்பது சருமத்தில் உள்ள அனைத்து எண்ணெய்களையும் நீக்கிவிடும். அதன் விளைவாக சருமம் இயற்கையான ஈரப்பதத்தை இழந்துவிடும்.
தூக்கம்: தூங்கும்போது முகத்திற்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. தலையணையில் முகத்தை அழுத்தமாக பதித்தபடி தூங்கும் வழக்கத்தை நிறையபேர் பின்பற்றுகிறார்கள். அப்படி நீண்ட நேரம் தூங்கும்போது சருமத்துளைகள் சுவாசிக்க முடியாமல் சிரமப்படக்கூடும். குப்புறப்படுத்து தூங்குவது, தலையணையின் பக்கவாட்டில் தலையை சாய்த்துவைத்தபடி தூங்குவது என முகத்திற்கு அழுத்தம் கொடுக்காமல் இருப்பது நல்லது.
மொபைல்போன்: இன்றைய யுகத்தில் தவிர்க்கமுடியாத சாதனமாக விளங்கும் மொபைல்போன், பாக்டீரியாக்கள் குடியிருக்கும் இடமாகவும் அமைந்திருக்கிறது. பலரும் மொபைல்போனை தூய்மையாக இருக்கும்படி பராமரிப்பதில்லை. அதனால் அதில் எளிதில் அழுக்குகள் படிந்து, பாக்டீரியாக்கள் வளர ஆரம்பித்துவிடக்கூடும். அதனை கவனிக்காமல் காதுக்கு அருகில் வைத்து பேசும்போது பாக்டீரியாக்கள் சருமத்தில் படர்ந்து கரும்புள்ளிகள், முகப்பருக்கள் மற்றும் பல நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடும்.
புகைப்பழக்கம்: புகைப்பிடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல் சரும அழகுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. புகைப்பொருட்களில் இருந்து வெளியாகும் புகையில் கார்பன் மோனாக்சைடு உள்ளது. அது சருமத்தில் ஆக்சிஜன் அளவை குறைத்துவிடக்கூடும். மேலும் புகையிலையில் கலந்திருக்கும் நிக்கோட்டின் ரத்த ஓட்டத்தை குறைக்கக்கூடியது. இதனால் சரும வறட்சி, நிறமாற்றம் போன்ற பிரச்சினைகள் உண்டாகும். அதிகமாக புகைக்கும்போது வாய்ப்பகுதியை சுற்றி சுருக்கங்கள் ஏற்படத்தொடங்கி விடும்.
பொடுகு: பெண்களை விட ஆண்கள் பொடுகு பிரச்சினையை அதிகம் எதிர்கொள்வார்கள். முடி பராமரிப்பில் போதிய கவனம் செலுத்தாததே அதற்கு காரணம். பொடுகு பிரச்சினையால் சரும பாதிப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும். அடிக்கடி ஷாம்பு அல்லது சிகைக்காய் போன்ற பொருட்களை பயன்படுத்தி தலைமுடியை சுத்தமாக பராமரித்து வருவது அவசியமானது. சில ஆண்கள் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதற்கு ஆர்வம் காண்பிக்கமாட்டார்கள். அதுவும் தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.
எண்ணெய்: எண்ணெய் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது முகப்பரு பிரச்சினைக்கு வழிவகுக்கும். சரும துளைகளில் அடைப்பையும் ஏற்படுத்திவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
குளியல் சோப்: சில ஆண்கள் அழகு சாதனப் பொருட்களுக்கு மாற்றாக குளியல் சோப்பை பயன்படுத்துவார்கள். குளிக்கும்போதும், கை, கால்களை கழுவும்போதும் சோப்பை கொண்டு முகத்தை நன்றாக கழுவுவார்கள். அப்படி எப்போதும் சோப் பயன்படுத்துவதன் மூலம் சருமம் வறட்சியடையும். நாளடைவில் சுருக்கங்களும் எட்டிப்பார்க்கத்தொடங்கி விடும். சோப்புக்கு பதிலாக பேஸ் வாஷ் பயன்படுத்துவது நல்லது.
சன்ஸ்கிரீன்: ஆண்கள் வெளி இடங்களுக்கு செல்லும்போது பெண்களை போல சன்ஸ்கிரீன் பூசிக்கொள்வது நல்லது. அது சூரியக்கதிர் வீச்சில் இருந்து சருமத்திற்கு பாதுகாப்பு தரும். ஆனால் ஆண்கள் பலரும் சன்ஸ்கிரீன் உபயோகிக்கும் விஷயத்தில் ஆர்வம் கொள்வதில்லை. பெண்களை விட ஆண்கள்தான் வெளி இடங்களுக்கு அதிகம் செல்வதால் சூரியக்கதிர் வீச்சு மூலம் சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சரும சுருக்கமும் உண்டாகும்.
மாய்ஸ்சுரைசர்: இது சருமத்திற்கு மென்மை தரக்கூடியது. பெரும்பாலும் ஆண்கள் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவதற்கு விரும்பமாட்டார்கள். சருமத்தை பராமரிப்பதற்கும் அக்கறை கொள்ளமாட்டார்கள். அதனால் சருமம் மென்மை தன்மையை இழந்துவிடும். வறட்சியும் குடிகொண்டுவிடும். தினமும் ஒருமுறையாவது சருமத்திற்கு பொருத்தமான மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது நல்லது.
சுடுநீர்: சூடான நீரில் முகத்தை சுத்தப்படுத்தினால் சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகள் அனைத்தும் நீங்கிவிடும் என்று சிலர் கருதுகிறார்கள். அப்படி சூடான நீரில் முகத்தை கழுவுவது, குளிப்பது சருமத்தில் உள்ள அனைத்து எண்ணெய்களையும் நீக்கிவிடும். அதன் விளைவாக சருமம் இயற்கையான ஈரப்பதத்தை இழந்துவிடும்.
தூக்கம்: தூங்கும்போது முகத்திற்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. தலையணையில் முகத்தை அழுத்தமாக பதித்தபடி தூங்கும் வழக்கத்தை நிறையபேர் பின்பற்றுகிறார்கள். அப்படி நீண்ட நேரம் தூங்கும்போது சருமத்துளைகள் சுவாசிக்க முடியாமல் சிரமப்படக்கூடும். குப்புறப்படுத்து தூங்குவது, தலையணையின் பக்கவாட்டில் தலையை சாய்த்துவைத்தபடி தூங்குவது என முகத்திற்கு அழுத்தம் கொடுக்காமல் இருப்பது நல்லது.
மொபைல்போன்: இன்றைய யுகத்தில் தவிர்க்கமுடியாத சாதனமாக விளங்கும் மொபைல்போன், பாக்டீரியாக்கள் குடியிருக்கும் இடமாகவும் அமைந்திருக்கிறது. பலரும் மொபைல்போனை தூய்மையாக இருக்கும்படி பராமரிப்பதில்லை. அதனால் அதில் எளிதில் அழுக்குகள் படிந்து, பாக்டீரியாக்கள் வளர ஆரம்பித்துவிடக்கூடும். அதனை கவனிக்காமல் காதுக்கு அருகில் வைத்து பேசும்போது பாக்டீரியாக்கள் சருமத்தில் படர்ந்து கரும்புள்ளிகள், முகப்பருக்கள் மற்றும் பல நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடும்.
தனியார் மருத்துவமனைகளில், பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை சேமித்து வைப்பதற்காக அந்தக் குழந்தையின் பெற்றோர்களிடம் அனுமதி கேட்கப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தை முதல் பெரியவர்கள் வரை, கழுத்து, கை, இடுப்பு பகுதியில் கறுப்பு கயிற்றில் தாயத்து கட்டியிருப்பார்கள். அந்த நடைமுறை காலப்போக்கில் பழமை, மூடநம்பிக்கை என்ற அடிப்படையில் தூக்கி எறியப்பட்டு விட்டது. மிகவும் சிலரே இப்போதும் தாயத்து கட்டுகிறார்கள். அதுவும் வெத்து தாயத்துதான்.
அப்படியானால் முன்காலத்தில் அந்த தாயத்தில் என்ன இருந்தது? என்கிறீர்களா..
குழந்தை பிறந்ததும், அதன் தாயோடு இணைந்த தொப்புள் கொடி துண்டிக்கப்படும். குழந்தையின் வயிற்றில் சிறிதளவு தொப்புள் கொடி இருக்கவே செய்யும். அதுவும் காலப்போக்கில் காய்ந்து விழுந்து விடும். அந்த காய்ந்த தொப்புள் கொடியைத்தான், தாயத்துக்குள் வைத்து அந்தக் குழந்தைகளின் கழுத்திலோ, கையிலோ, இடுப்பிலோ அந்த காலத்தில் கட்டிவிடுவார்கள்.
சிலர் தொப்புள் கொடியை காயவைத்து அரைத்து பொடியாக்கியும் தாயத்துக்குள் வைப்பார்கள்.அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவனானதும், ஏதாவது கொடிய நோய் ஏற்பட்டால் அவற்றில் இருந்து காப்பாற்ற, தாயத்துக்குள் இருக்கும் தொப்புள் கொடி பவுடரை, நீரில் கரைத்து கொடுப்பார்கள். அதன் மூலம் நோய் அகன்றுவிடும் அதிசயம் நிகழ்ந்தது. அதைத்தான் மூடநம்பிக்கை என்று நாம் ஒதுக்கிவிட்டோம்.
இந்த நேரத்தில் இங்கே ஒரு மருத்துவ ஆராய்ச்சியைப் பற்றி சொல்லியாக வேண்டும். தனியார் மருத்துவமனைகளில், பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை சேமித்து வைப்பதற்காக அந்தக் குழந்தையின் பெற்றோர்களிடம் அனுமதி கேட்கப்படுகிறதாம். அதற்காக அவர்களுக்கு பெரிய அளவில் தொகையும் கொடுக்கப்படுகிறது.
வெறும் தொப்புள்கொடிக்கு எதற்கு பணம் கொடுத்து சேமிக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பின்னால் இருப்பதுதான் மருத்துவம். குழந்தைகள் வளர்ந்து அவர்கள் பெரியவர்களானதும், கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால், தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயையும் குணப்படுத்திவிடலாம் என்கிறது மருத்துவ உலகம்.
அப்படியானால் முன்காலத்தில் அந்த தாயத்தில் என்ன இருந்தது? என்கிறீர்களா..
குழந்தை பிறந்ததும், அதன் தாயோடு இணைந்த தொப்புள் கொடி துண்டிக்கப்படும். குழந்தையின் வயிற்றில் சிறிதளவு தொப்புள் கொடி இருக்கவே செய்யும். அதுவும் காலப்போக்கில் காய்ந்து விழுந்து விடும். அந்த காய்ந்த தொப்புள் கொடியைத்தான், தாயத்துக்குள் வைத்து அந்தக் குழந்தைகளின் கழுத்திலோ, கையிலோ, இடுப்பிலோ அந்த காலத்தில் கட்டிவிடுவார்கள்.
சிலர் தொப்புள் கொடியை காயவைத்து அரைத்து பொடியாக்கியும் தாயத்துக்குள் வைப்பார்கள்.அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவனானதும், ஏதாவது கொடிய நோய் ஏற்பட்டால் அவற்றில் இருந்து காப்பாற்ற, தாயத்துக்குள் இருக்கும் தொப்புள் கொடி பவுடரை, நீரில் கரைத்து கொடுப்பார்கள். அதன் மூலம் நோய் அகன்றுவிடும் அதிசயம் நிகழ்ந்தது. அதைத்தான் மூடநம்பிக்கை என்று நாம் ஒதுக்கிவிட்டோம்.
இந்த நேரத்தில் இங்கே ஒரு மருத்துவ ஆராய்ச்சியைப் பற்றி சொல்லியாக வேண்டும். தனியார் மருத்துவமனைகளில், பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை சேமித்து வைப்பதற்காக அந்தக் குழந்தையின் பெற்றோர்களிடம் அனுமதி கேட்கப்படுகிறதாம். அதற்காக அவர்களுக்கு பெரிய அளவில் தொகையும் கொடுக்கப்படுகிறது.
வெறும் தொப்புள்கொடிக்கு எதற்கு பணம் கொடுத்து சேமிக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பின்னால் இருப்பதுதான் மருத்துவம். குழந்தைகள் வளர்ந்து அவர்கள் பெரியவர்களானதும், கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால், தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயையும் குணப்படுத்திவிடலாம் என்கிறது மருத்துவ உலகம்.
கோபத்திற்கு இடம் கொடுத்தால் ‘பாசிடிவ் பீலிங்’ அனைத்தும் `நெகடிவ்’ ஆக மாறி மனதிற்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். மன்னிக்க பழகிவிட்டால் மற்றவர்கள் மத்தியில் உங்கள் மதிப்பும் உயரும்.
சிலருக்கு கோபம் வந்தால் உடனே ஆக்ரோஷமாகிவிடுவார்கள். நிதானத்தையும், பொறுமையையும் இழந்து கத்தத் தொடங்கிவிடுவார்கள். வாய்க்கு வந்தபடி வார்த்தைகளை கொட்டிவிடுவார்கள். அவை மற்றவர் மனதை காயப்படுத்தக்கூடியதாகவும், காது கொடுத்து கேட்க முடியாததாகவும் இருக்கும். தனக்கு நெருக்கமானவர்கள் தவறு செய்திருந்தாலும் கோபத்தில் கடுமையான சொற்களை பயன்படுத்திவிடுவார்கள்.
சம்பந்தப்பட்டவர் தான் செய்தது தவறு என்று மன்னிப்பு கேட்டாலும் அதை காது கொடுத்து கேட்கவே மாட்டார்கள். அப்படிப்பட்ட கட்டுப்பாடில்லாத கோபம், அவர்களுக்குத்தான் பாதகத்தை உண்டாக்கும். கோபத்தை கட்டுப்படுத்தி சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பாவிட்டால், சிலருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு உண்டாகிவிடும். அதுவே தொடரும்போது பல்வேறு நோய் பாதிப்புகளால் அவதிப்பட நேரிடும். உடல் நலத்தை கெடுக்கும் கோபத்தை கட்டுப்படுத்துவதற்கு எளிமையான வழிகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றுள் அனைவரும் பின்பற்றத்தக்க எளிய வழிமுறைகள் இதோ:
கோபம் வந்துவிட்டால் மனதில் பதற்றம் தொற்றிக்கொள்ளும். நிம்மதி குலைந்துவிடும். கோபம் வரும்போது நன்றாக மூச்சை உள் இழுத்து வெளியே விட வேண்டும். அப்போது 1 முதல் 10, 20 வரை எண்களை மனதுக்குள் பொறுமையாக எண்ணிக்கொண்டே வரலாம். அப்படி செய்யும்போது மனம் இலகுவாகிவிடும். கோபமும் படிப்படியாக குறையத்தொடங்கிவிடும்.
கோபம் வந்தால் பேசுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த சமயத்தில்தான் வார்த்தைகள் கடுமையாக வெளிப்படும். அவை கேட்பவர்கள் மனதை கடுமையாக பாதிக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவதற்கு சிந்திப்பதுதான் சரியான வழிமுறையாக அமையும். என்ன பேச வேண்டும்? எந்த மாதிரியான வார்த்தைகளை உச்சரிக்கலாம்? பிறர் மனம் புண்படாதபடி சிரித்த முகத்துடன் எப்படி பேசுவது? என நிதானமாக யோசித்துவிட்டு பேச வேண்டும். அப்படி பேசும்போது கோபம் வெளிப்பட்டாலும் அதனை நிதானமாக கையாண்டுவிடலாம்.
கோபமாக இருக்கும் சமயத்தில் மற்றவர்கள் சமாதானம் செய்தாலும் அதுவும் சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தக்கூடும். அப்படிப்பட்ட சூழலில் தனிமையில் சில நிமிடங்களை கழிப்பதுதான் நல்லது. தனிமையில் அமர்ந்திருந்து எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் மனதை அமைதிப்படுத்தலாம்.
நடைப்பயிற்சியும் கோபத்தை கட்டுப்படுத்த உதவும். சிறிது தூரம் நடைப்பயிற்சி செய்து வரலாம். அல்லது ஜாக்கிங் மேற்கொள்ளலாம். அப்படி செய்தால் மூளை செல்கள் ரிலாக்ஸ் அடைந்து மனம் இலகுவாகும்.
மனதுக்கு நெருக்கமானவர்கள் கோபம் கொள்ளும்படி நடந்து கொண்டால் அமைதி காப்பதுதான் நல்லது. இல்லாவிட்டால் கடுமையான வார்த்தைகள் வெளிப்பட்டு இருவரின் மனமும் வேதனைப்படக்கூடும். கூடுமானவரை கோபத்தை கட்டுப்படுத்தி அவர்களை மன்னித்துவிடுவதுதான் நல்லது. ஏனெனில் கோபத்திற்கு இடம் கொடுத்தால் ‘பாசிடிவ் பீலிங்’ அனைத்தும் `நெகடிவ்’ ஆக மாறி மனதிற்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். மன்னிக்க பழகிவிட்டால் மற்றவர்கள் மத்தியில் உங்கள் மதிப்பும் உயரும்.
எந்த சூழ்நிலையிலும் கோபம் நீண்ட நேரம் நீடிக்க அனுமதித்துவிடக்கூடாது. அது மனதை பலவீனப்படுத்திவிடும். கோபத்தை தணிப்பதற்கு மனதை திசை திருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்ப்பது, இசையை கேட்பது மனதை சாந்தப்படுத்தும். கோபத்தையும், டென்ஷனையும் தணிக்க உதவும்.
சம்பந்தப்பட்டவர் தான் செய்தது தவறு என்று மன்னிப்பு கேட்டாலும் அதை காது கொடுத்து கேட்கவே மாட்டார்கள். அப்படிப்பட்ட கட்டுப்பாடில்லாத கோபம், அவர்களுக்குத்தான் பாதகத்தை உண்டாக்கும். கோபத்தை கட்டுப்படுத்தி சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பாவிட்டால், சிலருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு உண்டாகிவிடும். அதுவே தொடரும்போது பல்வேறு நோய் பாதிப்புகளால் அவதிப்பட நேரிடும். உடல் நலத்தை கெடுக்கும் கோபத்தை கட்டுப்படுத்துவதற்கு எளிமையான வழிகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றுள் அனைவரும் பின்பற்றத்தக்க எளிய வழிமுறைகள் இதோ:
கோபம் வந்துவிட்டால் மனதில் பதற்றம் தொற்றிக்கொள்ளும். நிம்மதி குலைந்துவிடும். கோபம் வரும்போது நன்றாக மூச்சை உள் இழுத்து வெளியே விட வேண்டும். அப்போது 1 முதல் 10, 20 வரை எண்களை மனதுக்குள் பொறுமையாக எண்ணிக்கொண்டே வரலாம். அப்படி செய்யும்போது மனம் இலகுவாகிவிடும். கோபமும் படிப்படியாக குறையத்தொடங்கிவிடும்.
கோபம் வந்தால் பேசுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த சமயத்தில்தான் வார்த்தைகள் கடுமையாக வெளிப்படும். அவை கேட்பவர்கள் மனதை கடுமையாக பாதிக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவதற்கு சிந்திப்பதுதான் சரியான வழிமுறையாக அமையும். என்ன பேச வேண்டும்? எந்த மாதிரியான வார்த்தைகளை உச்சரிக்கலாம்? பிறர் மனம் புண்படாதபடி சிரித்த முகத்துடன் எப்படி பேசுவது? என நிதானமாக யோசித்துவிட்டு பேச வேண்டும். அப்படி பேசும்போது கோபம் வெளிப்பட்டாலும் அதனை நிதானமாக கையாண்டுவிடலாம்.
கோபமாக இருக்கும் சமயத்தில் மற்றவர்கள் சமாதானம் செய்தாலும் அதுவும் சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தக்கூடும். அப்படிப்பட்ட சூழலில் தனிமையில் சில நிமிடங்களை கழிப்பதுதான் நல்லது. தனிமையில் அமர்ந்திருந்து எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் மனதை அமைதிப்படுத்தலாம்.
நடைப்பயிற்சியும் கோபத்தை கட்டுப்படுத்த உதவும். சிறிது தூரம் நடைப்பயிற்சி செய்து வரலாம். அல்லது ஜாக்கிங் மேற்கொள்ளலாம். அப்படி செய்தால் மூளை செல்கள் ரிலாக்ஸ் அடைந்து மனம் இலகுவாகும்.
மனதுக்கு நெருக்கமானவர்கள் கோபம் கொள்ளும்படி நடந்து கொண்டால் அமைதி காப்பதுதான் நல்லது. இல்லாவிட்டால் கடுமையான வார்த்தைகள் வெளிப்பட்டு இருவரின் மனமும் வேதனைப்படக்கூடும். கூடுமானவரை கோபத்தை கட்டுப்படுத்தி அவர்களை மன்னித்துவிடுவதுதான் நல்லது. ஏனெனில் கோபத்திற்கு இடம் கொடுத்தால் ‘பாசிடிவ் பீலிங்’ அனைத்தும் `நெகடிவ்’ ஆக மாறி மனதிற்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். மன்னிக்க பழகிவிட்டால் மற்றவர்கள் மத்தியில் உங்கள் மதிப்பும் உயரும்.
எந்த சூழ்நிலையிலும் கோபம் நீண்ட நேரம் நீடிக்க அனுமதித்துவிடக்கூடாது. அது மனதை பலவீனப்படுத்திவிடும். கோபத்தை தணிப்பதற்கு மனதை திசை திருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்ப்பது, இசையை கேட்பது மனதை சாந்தப்படுத்தும். கோபத்தையும், டென்ஷனையும் தணிக்க உதவும்.
கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும், தொப்பையைத் தவிர்க்க வேண்டும் என்ற விருப்பம் காரணமாக, காலையில் உணவை தவிர்ப்பது, குறைவாக உணவு உட்கொள்வது என உடல் எடையை குறைக்க ஏதேதோ தவறான வழிமுறைகளைப் பின்பற்றி தோல்வியடைகின்றனர்.
திருமணம் வரை சரியான நேரத்துக்குச் சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் பெண்கள், திருமணத்துக்குப் பிறகு, குறிப்பாக குழந்தை பிறந்த பிறகு, உடல் எடை அதிகரித்துவிடுகின்றனர். கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும், தொப்பையைத் தவிர்க்க வேண்டும் என்ற விருப்பம் காரணமாக, காலையில் உணவை தவிர்ப்பது, குறைவாக உணவு உட்கொள்வது என உடல் எடையை குறைக்க ஏதேதோ தவறான வழிமுறைகளைப் பின்பற்றி தோல்வியடைகின்றனர். கர்ப்ப காலத்தில், உடல் தசைகள் தளர்வடைந்து விடுகின்றன. கர்ப்பப்பையும் வயிறும் விரிவடைவதால், வயிற்றில் உள்ள தசைகள் பிரியும். இதனால், பெண்களின் உடல் அமைப்பு மாறுபடும். சரியான ‘டயட்’ உடன், சில உடற்பயிற்சிகளைச் செய்தாலே போதும், கட்டுக்கோப்பான உடல் அமைப்பைப் பெறலாம். 1. ஆப்ளிக்ஸ் வித் டம்பெல்ஸ் (Obliques with Dumbbells)தாய்மைக்குப் பிறகு ‘6 உடற்பயிற்சிகள்'
தரையில் கால்களை நீட்டி உட்கார வேண்டும். காலை சற்று அகட்டி, லேசாக முட்டியை மடக்கி 45 டிகிரியில் பின்புறமாகச் சாய வேண்டும். கைகளால் டம்பெல்லைப் பிடித்து, மார்புக்கு நேராக வைக்க வேண்டும். இப்போது, டம்பெல்லுடன் கைகள் மற்றும் மேல் உடலை இடது மற்றும் வலது புறம் திருப்ப வேண்டும். இதனை 15 முறை என 2 செட்டாக செய்யலாம்.
பலன்கள்: வயிற்றுப் பகுதியில் உள்ள பெரிய தசையான ஆப்ளிக்ஸை வலுவாக்கும்.
2. சுவிஸ் பால் அப்ஸ் (Swiss ball abs)
சுவிஸ் பந்து மீது கால்களை அகட்டி உட்கார வேண்டும். முதுகெலும்பு முழுவதும் பந்தில் இருக்கும்படி சாய்ந்துகொள்ள வேண்டும். கைகளை மடக்கி, தலைக்குப் பின்பக்கத்தில் வைக்க வேண்டும். இப்போது, நன்கு மூச்சை இழுத்து, வெளியேவிட்டபடி, தலையை உயர்த்தி முன் வர வேண்டும். மூச்சை இழுத்தபடி பழைய நிலைக்குச் செல்ல வேண்டும். பயிற்சியின்போது கழுத்துக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது. இதை, 15 முறை செய்ய வேண்டும். 30 விநாடிகள் இடைவெளியில் 2 செட்டாகச் செய்ய வேண்டும்.
பலன்கள்: மேல் வயிறு, அடி வயிறு, முதுகுப் பகுதி வலுப்பெறும்.
3. சுவிஸ் பால் வித் லெக் ரெய்ஸ் (Swiss ball with leg raise)
தரையில் மல்லாந்து படுத்து, கைகளை இடுப்புக்குப் பின் வைத்து, அழுத்திக்கொள்ள வேண்டும். கால்களை நன்கு அகட்டி, சுவிஸ் பந்தை கால்களுக்கு இடையில் வைக்க வேண்டும். இப்போது, கால்களை மேலே உயர்த்தி இறக்க வேண்டும். இது போல் 15 முறை 2 செட்டாகச் செய்ய வேண்டும்.
பலன்கள்: வயிற்றின் மையத்தில் உள்ள ரெக்டஸ் அப்டாமினிஸ் (Rectus abdominis) தசையை வலிமையாக்கும். தொப்பையைக் குறைத்து, நல்ல உடல் அமைப்பைத் தரும்.
4. அப்பர் கிரென்ச்சஸ் (Upper crunches)
தரையில் மல்லாந்து படுக்க வேண்டும். கைகளைத் தரையில் பதிக்க வேண்டும். கால்கள் சற்று அகட்டிய நிலையில் இருக்கட்டும். இப்போது கால்களை மேலே உயர்த்த வேண்டும். பின்னர், கைகளை ஒன்றன் மேல் ஒன்று வைத்து மேலே உயர்த்தி கால்களைத் தொட முயற்சிக்க வேண்டும். பின்னர், வந்த நிலையிலேயே பழைய நிலைக்குச் செல்ல வேண்டும். இதுபோல், 15 முறை செய்ய வேண்டும். 30 விநாடிகள் இடைவெளியில் 2 செட்டாகச் செய்யலாம்.
பலன்கள்: மேல் வயிற்றுக்கு நல்ல பயிற்சி. கொழுப்பைக் கரைத்து, பிட்டான தோற்றத்தைத் தரும்.
5. சைடு பிளாங்க் (Side plank)
பக்கவாட்டில் படுத்து, இடது கையால் உடலைத் தாங்க வேண்டும். வலது கையை இடுப்பின் மேல் வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது, இடுப்பை உயர்த்தி ஓரிரு நிமிடங்கள் அப்படியே இருக்க வேண்டும். பின்னர் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல், வலது புறத்துக்கும் செய்ய வேண்டும். இதை 5 முதல் 10 முறை செய்யலாம்.
பலன்கள்: இது இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். மேலும், முழு உடலுக்குமான பயிற்சி இது.
6. மெடிசின் பால் வித் க்ரன்ச்சஸ் (Medicine ball with crunches)
நேராகப் படுத்து, மெடிசின் பந்தை மூட்டின் அடியில் வைத்து, 45 டிகிரியில் எழுந்து, பந்தை மூட்டு பகுதிக்கு மேல் கொண்டு வரவேண்டும். இரு கைகளால் பிடித்தபடி பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி, 12 முதல் 15 முறை செய்யலாம்.
பலன்கள்: வயிற்றில் உள்ள தசைகள் உறுதியாகும்.
தரையில் கால்களை நீட்டி உட்கார வேண்டும். காலை சற்று அகட்டி, லேசாக முட்டியை மடக்கி 45 டிகிரியில் பின்புறமாகச் சாய வேண்டும். கைகளால் டம்பெல்லைப் பிடித்து, மார்புக்கு நேராக வைக்க வேண்டும். இப்போது, டம்பெல்லுடன் கைகள் மற்றும் மேல் உடலை இடது மற்றும் வலது புறம் திருப்ப வேண்டும். இதனை 15 முறை என 2 செட்டாக செய்யலாம்.
பலன்கள்: வயிற்றுப் பகுதியில் உள்ள பெரிய தசையான ஆப்ளிக்ஸை வலுவாக்கும்.
2. சுவிஸ் பால் அப்ஸ் (Swiss ball abs)
சுவிஸ் பந்து மீது கால்களை அகட்டி உட்கார வேண்டும். முதுகெலும்பு முழுவதும் பந்தில் இருக்கும்படி சாய்ந்துகொள்ள வேண்டும். கைகளை மடக்கி, தலைக்குப் பின்பக்கத்தில் வைக்க வேண்டும். இப்போது, நன்கு மூச்சை இழுத்து, வெளியேவிட்டபடி, தலையை உயர்த்தி முன் வர வேண்டும். மூச்சை இழுத்தபடி பழைய நிலைக்குச் செல்ல வேண்டும். பயிற்சியின்போது கழுத்துக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது. இதை, 15 முறை செய்ய வேண்டும். 30 விநாடிகள் இடைவெளியில் 2 செட்டாகச் செய்ய வேண்டும்.
பலன்கள்: மேல் வயிறு, அடி வயிறு, முதுகுப் பகுதி வலுப்பெறும்.
3. சுவிஸ் பால் வித் லெக் ரெய்ஸ் (Swiss ball with leg raise)
தரையில் மல்லாந்து படுத்து, கைகளை இடுப்புக்குப் பின் வைத்து, அழுத்திக்கொள்ள வேண்டும். கால்களை நன்கு அகட்டி, சுவிஸ் பந்தை கால்களுக்கு இடையில் வைக்க வேண்டும். இப்போது, கால்களை மேலே உயர்த்தி இறக்க வேண்டும். இது போல் 15 முறை 2 செட்டாகச் செய்ய வேண்டும்.
பலன்கள்: வயிற்றின் மையத்தில் உள்ள ரெக்டஸ் அப்டாமினிஸ் (Rectus abdominis) தசையை வலிமையாக்கும். தொப்பையைக் குறைத்து, நல்ல உடல் அமைப்பைத் தரும்.
4. அப்பர் கிரென்ச்சஸ் (Upper crunches)
தரையில் மல்லாந்து படுக்க வேண்டும். கைகளைத் தரையில் பதிக்க வேண்டும். கால்கள் சற்று அகட்டிய நிலையில் இருக்கட்டும். இப்போது கால்களை மேலே உயர்த்த வேண்டும். பின்னர், கைகளை ஒன்றன் மேல் ஒன்று வைத்து மேலே உயர்த்தி கால்களைத் தொட முயற்சிக்க வேண்டும். பின்னர், வந்த நிலையிலேயே பழைய நிலைக்குச் செல்ல வேண்டும். இதுபோல், 15 முறை செய்ய வேண்டும். 30 விநாடிகள் இடைவெளியில் 2 செட்டாகச் செய்யலாம்.
பலன்கள்: மேல் வயிற்றுக்கு நல்ல பயிற்சி. கொழுப்பைக் கரைத்து, பிட்டான தோற்றத்தைத் தரும்.
5. சைடு பிளாங்க் (Side plank)
பக்கவாட்டில் படுத்து, இடது கையால் உடலைத் தாங்க வேண்டும். வலது கையை இடுப்பின் மேல் வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது, இடுப்பை உயர்த்தி ஓரிரு நிமிடங்கள் அப்படியே இருக்க வேண்டும். பின்னர் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல், வலது புறத்துக்கும் செய்ய வேண்டும். இதை 5 முதல் 10 முறை செய்யலாம்.
பலன்கள்: இது இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். மேலும், முழு உடலுக்குமான பயிற்சி இது.
6. மெடிசின் பால் வித் க்ரன்ச்சஸ் (Medicine ball with crunches)
நேராகப் படுத்து, மெடிசின் பந்தை மூட்டின் அடியில் வைத்து, 45 டிகிரியில் எழுந்து, பந்தை மூட்டு பகுதிக்கு மேல் கொண்டு வரவேண்டும். இரு கைகளால் பிடித்தபடி பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி, 12 முதல் 15 முறை செய்யலாம்.
பலன்கள்: வயிற்றில் உள்ள தசைகள் உறுதியாகும்.






