என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    பெண்கள் உள்ளாடை என்று வரும் போது பெரும்பாலனோர் நல்ல கவர்ச்சியான உள்ளாடைகளை அணிகிறார்களே தவிர தரமான உள்ளாடைகளை அவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை.
    பெண்கள் உள்ளாடை பராமரிப்பு என்று வரும் போது நாம் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளது. ஏனெனில் நம்மில் பெரும்பாலனோர் நல்ல கவர்ச்சியான உள்ளாடைகளை அணிகிறார்களே தவிர தரமான உள்ளாடைகளை அவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை.

    உள்ளாடை மீது கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். இது தான் பெண்ணுறுப்பை சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் வைக்க உதவுகிறது. பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிரிகள் பெண்ணுறுப்புக்குள் நுழைவதை தடுக்கிறது. பெண்ணுறுப்பில் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் நமைச்சலை தடுக்கிறது.

    எனவே இப்படி பாதுகாப்பு அளிக்கும் உள்ளாடைகளை நாம் எப்படி பராமரிக்க வேண்டும், அதை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என மகப்பேறியியல் மருத்துவர் நமக்கு விளக்கம் அளிக்கிறார்.

    உங்க உள்ளாடை கவர்ச்சியாக இருப்பதை விட தரமான ஒன்றாக இருக்க வேண்டும். உங்க உள்ளாடை 100% பருத்தியால் செய்யப்படவில்லை என்றால் ஈரப்பதத்தை உறிஞ்சாது. எனவே குறிப்பாக நைலான், பாலியஸ்டர் போன்ற உள்ளாடைகளுக்கு தயவு செய்து செல்லாதீர்கள். இது உங்க பெண்ணுறுப்பில் அரிப்பு, சிவத்தல் மற்றும் எரிச்சலை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. தினமும் பருத்தி உள்ளாடைகளை மட்டுமே அணிய வலியுறுத்துகிறார் மருத்துவர். இது தான் உங்க சருமத்தை சுவாசிக்க அனுமதிக்கும். வியர்வையை உறிஞ்ச உதவி செய்யும்.

    பெரும்பாலான பெண்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை உள்ளாடைகளை மாற்றுவதையே கஷ்டமாக உணர்கின்றனர். முடிந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட முறை உங்க உள்ளாடைகளை மாற்ற முயற்சி செய்யுங்கள். ஒருவேளை பிறப்புறுப்பு திரவ வெளியேற்றம் மற்றும் ஈரப்பதம் இருந்தால் உடனே உங்க உள்ளாடைகளை மாற்றுவது அவசியம். ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளாடைகளை அணிவது ஒரு ஆரோக்கியமான தேர்வாக இருக்கும். ஒருவேளை நீங்கள் உடற்பயிற்சி செய்து வியர்க்க ஆரம்பித்தால் உடனே உள்ளாடைகளை மாற்ற முயலுங்கள்.

    இரவில் உள்ளாடை அணியாமல் தூங்குவது அந்த பகுதியை சுவாசிக்க வைக்கிறது. காற்றோட்டமாக வைக்கிறது. இரவில் உங்களால் நிம்மதியாக தூங்க முடியும். சிலருக்கு உள்ளாடை அணியாமல் தூங்குவது செளகரியமாக இருக்கலாம். சிலருக்கு அதில் இஷ்டம் இல்லையென்றால் காற்றோட்டமான உள்ளாடைகளை தேர்வு செய்து அணியுங்கள். இது உங்க சொந்த விருப்பத்தை பொருத்தது.

    உள்ளாடை மிகவும் மென்மையானது. எனவே இதை உங்க ஆடைகளை விட கவனமாக கையாள வேண்டும். முடிந்தால் உள்ளாடைகளை தனியாக துவைக்க முற்படுங்கள். ஏனெனில் உள்ளாடைகளில் பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. இதை மற்ற ஆடைகளுடன் சேர்த்து துவைக்க வேண்டாம். எனவே உள்ளாடைகளை தனியாக துவைக்க பரிந்துரைக்கப்படுகிறது. இந்த உள்ளாடைகளை துவைக்க மைல்டு சோப்பு பயன்படுத்துங்கள். சூரிய ஒளியில் உலர வையுங்கள். ஏனெனில் சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள் உள்ளாடைகளில் உள்ள பாக்டீரியாக்களை கொல்ல உதவும்.

    ஒவ்வொரு ஆண்டும் பழைய உள்ளாடைகளை மாற்றி புதிய உள்ளாடைகளை வாங்க மகப்பேறியியல் மருத்துவர் பரிந்துரைக்கிறார். ஒருவேளை துணியின் நெகிழ்வுத்தன்மை இழந்து விட்டாலோ அல்லது துர்நாற்றம் வீச ஆரம்பித்து விட்டாலோ உடனே மாற்றுவது நல்லது. எனவே எப்போதும் புதிய உள்ளாடைகளை கைவசம் வைத்து இருங்கள் என்று மகப்பேறியியல் மருத்துவர் கூறுகிறார்.
    பாடி ஸ்பா போன்று கூந்தலுக்கு ஹேர் ஸ்பா செய்கிறார்கள். இதை செய்வதால் முடிக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். முடி சேதமடையாமல் காக்கலாம். முடி வளர்ச்சி, முடி ஷைனிங் என எல்லாமே பெறலாம்.
    கொரோனாவால் எல்லோரும் வீட்டிலிருக்கும் இந்த காலத்தில் ஹேர் ஸ்பாவுக்கு வெளியே செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே செய்துகொள்ளலாம். எப்படி வீட்டில் ஹேர் ஸ்பா செய்வது என்று ஒவ்வொரு ஸ்டெப் தெரிந்துகொள்வோம்.

    நீங்கள் வீட்டில் ஹேர் ஸ்பா செய்வதாக இருந்தால் உங்கள் முடியின் தன்மைக்கேற்ற ஷாம்பு வகைகளை முதலில் தேர்ந்தெடுங்கள். பொடுகு அதிகமாக இருந்தால் அதற்கென பிரத்யேகமான பியூரி ஃபையிங் ஷாம்பு பயன்படுத்தலாம். மற்றவர்கள் டீடாக்ஸ் ஷாம்பு பயன்படுத்தலாம். ஷாம்பு பயன்படுத்திய பிறகு முடிக்கு தேவையான க்ரீம் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.

    உங்கள் கூந்தலுக்கேற்ற க்ரீம் வகைகளை உங்களது அழகு கலை நிபுணரோடு கலந்து தேர்வு செய்யுங்கள். அதே நேரம் முடி கனமா இருந்தாலோ அல்லது அதிகமாக சிதைந்து இரூந்தாலோ அதற்கான க்ரீம் வகைகளை தேர்வு செய்யும் போது அதிக கவனமாக செய்ய வேண்டும்.

    கடைகளில் ஹேர் ஸ்பாவுக்கு தேவையான ஷாம்பு, கண்டிஷனர் கிடைக்கும் என்றாலும் உங்களுக்கு தேவையானதை மட்டும் நிபுணரின் ஆலோசனையோடு பயன்படுத்த தவற வேண்டாம். 

    ஆலிவ் எண்ணெய் - 5 டீஸ்பூன் அளவு - உங்கள் கூந்தலின் நீளத்துக்கேற்ப தேவையான அளவு எடுத்துகொள்ளலாம். இப்போது எப்படி செய்வது பார்க்கலாம். 

    ஸ்டெப்- 1 முதலில் உங்கள் கூந்தலை சிக்கில்லாமல் சீவி வைத்துகொள்ளுங்கள்.

    ஸ்டெப் -2 கூந்தலை நன்றாக விரித்து செளகரியமாக உட்கார்ந்து எண்ணெயை விரல்களால் தொட்டு உச்சந்தலையிலிருந்து முடியின் நுனிவரை மசாஜ் செய்யுங்கள். வட்ட வடிவ இயக்கத்தில் நன்றாக மசாஜ் செய்யுங்கள். 10 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யுங்கள்.

    ஸ்டெப்-3 மண் பானையில் கொதிக்க வைத்து நீர் ஊற்றி வாயை மெல்லிய துணியால் கட்டி, வெளிவரும் ஆவி முடி மீது படும்படி முடியை காண்பிக்க வேண்டும். முகத்தின் மிது படியாமல் இருக்க முகத்தில் ஒரு துண்டு கட்டி கொள்ளலாம். தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை இதை செய்ய வேண்டும். முடியின் ஆழம்வரை நீராவி சென்று உள்ளே போக வேண்டும்.

    ஸ்டெப் -4 கூந்தலில் நீராவி பிடித்தது போக இப்போது மெல்லிய துணியை குளிர்ந்த நீரில் நனைத்து அதை கூந்தலில் மென்மையாக இலேசாக இறுக்கி கட்டவும். ஸ்டெப் - 5 ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தி முடியை கழுவி எடுக்கவும். ஹேர் ஸ்பா க்ரீம் உங்கள் கூந்தலுக்கேற்றதை பயன்படுத்தவும். வாரத்துக்கு ஒரு முறை கூட இதை செய்யலாம்.

    ​நன்மைகள்

    முடியின் மயிர்கால்கள் வலுவடையகூடும். உச்சந்தலையில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துகிறது.இதனால் பொடுகு, அரிப்பு, நமைச்சல் பிரச்சனையும் இருக்காது. பொலிவிழந்த முடிக்கு சிகிச்சையாக இதை செய்யலாம்.

    இது முடியை வலுவாக்குவதால் முடி அடர்த்தி அதிகரிக்கும். முடி இழப்பை ஊக்குவிக்காது. முடிக்கு ரத்த ஓட்டம் கொடுப்பதால் முடி வளர்ச்சி அதிகரிக்க கூடும். முடி வளர்ச்சிக்கான சிகிச்சையும் கூட. முடியின் வேர்களுக்கு ஊட்டமளிப்பதன் மூலம் முடி வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
    வாழ்க்கை முறை, உணவு பழக்கவழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் வயிறு தொடர்பான உறுப்புகளில் புற்றுநோய் வருவதை முன்கூட்டியே தடுக்கலாம்.
    மலத்தில் ரத்தம் கலந்து வருவதற்கு 3 காரணங்கள் உண்டு. அவை பைல்ஸ், ஆசன வாயில் உள்ள கிழிசல், புற்றுநோய். ரத்தம் மலத்தில் கலந்து வருவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எதையும் அலட்சியமாக கவனிக்காமல் விட்டுவிட்டால், நோய் முற்றி சிகிச்சை அளிப்பதும், குணப்படுத்துவதும் கடினமாகி விடக்கூடும். மலத்தில் ரத்தம் கலந்து வருவது 2 வகைப்படும். ஒன்று கண்ணுக்கே தெரியாது. மற்றொன்று நன்கு தெரியும். சிறிய புண் அல்லது கட்டியில் இருந்து ரத்தம் கசிந்து வருவதால் இது ஏற்படும். கண்ணுக்கு தெரியாவிட்டாலும் அக்கல்ட் பிளட் என்ற பரிசோதனை மூலம் இதை கண்டுபிடிக்கலாம்.

    வாழ்க்கை முறை, உணவு பழக்கவழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் வயிறு தொடர்பான உறுப்புகளில் புற்றுநோய் வருவதை முன்கூட்டியே தடுக்கலாம். பச்சைக் காய்கறி, பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் உண்ணும் பழக்கம் இருக்க வேண்டும். நடைபயிற்சி அவசியம். எடை கூடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். தினந்தோறும் மலம் கழிக்கும் பழக்கம் இருக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    வயிறு என்பது உணவு சேமிப்பு கிடங்குதான். சிறுகுடலில்தான் செரிமானம் நடைபெறுகிறது. பெருங்குடலோ, உணவு பையோ இல்லாமல் வாழ முடியும். ஆனால், சிறுகுடல் இல்லாமல் வாழ முடியாது. உணவுப் பையில் புற்றுநோய் வந்தால் அதை முழுமையாக நீக்கிவிட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியும். ரத்த வாந்தி அல்லது மலத்தில் ரத்தம் வெளியேறும் நிலையில் குடல் தொடர்பான அவசர சிகிச்சை செய்யப்படும். வாந்தி எடுக்கும்போது சில நேரம் வயிற்றில் இருக்கும் வாயுவால் ரத்தத்தின் நிறம் மாறிக் காபி நிறத்தில் வரும்போது, அப்போது சாப்பிட்ட உணவுதான் வருகிறது என்று தவறாக நினைத்துச் சாதாரணமாக கவனிக்காமல் விட்டுவிடுவார்கள்.

    உணவுக் குழாய் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களே இத்தகைய வாந்தி, மலத்தில் காணப்படும் நிற மாறுதலுக்குக் காரணம். வயிற்றில் அல்சர் அல்லது புற்றுநோய் இருந்தால் கொஞ்சம் சாப்பிட்ட உடன் வயிறு நிரம்பிவிட்டது போன்ற உணர்வு ஏற்படும். சில நேரங்களில் எரிமலை போல குடலுக்குள் எரியும். உடலில் ஏற்படும் சிறிய மாற்றங்களையும் உடனுக்குடன் கவனித்து, சிகிச்சை பெற்றால் சாதாரண வாழ்க்கை வாழலாம்.
    செம்பருத்தி ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும்.
    உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் காய்ந்த இதழ்களை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    தேவையான பொருட்கள்

    செம்பருத்தி இதழ் (காய்ந்தது ) - 5 இதழ்
    தண்ணீர் 1 கப் - 150 ml
    நாட்டு சர்க்கரை அல்லது தேன் -1 ஸ்பூன்

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் 150ml தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். 

    தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் செம்பருத்தி இதழை போட்டு 5 நிமிடங்கள் கொதித்தபின் வடிக்கட்டி நாட்டு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து குடிக்கவும்.

    ஒரு நாளைக்கு 2 - 3 தடவை குடிக்கலாம். காலை உணவுக்கு பின் குடிப்பது உடலுக்கு நல்லது.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மூன்று முதல் ஐந்து வயதுவரையிலான காலம் மிக முக்கியமானது. இத்தகைய வளர்ச்சியின்போது குழந்தைகளின் மொழித் திறன்,பேசும் திறனை செவித்திறன் வாயிலாக அவர்கள் வாழும் சூழலுக்கேற்ப கற்றுக்கொள்கின்றனர்.
    குழந்தைகளுக்கு மூன்று முதல் ஐந்து வயதுவரையிலான காலம் மிக முக்கியமானது. இந்தக் காலத்தில்தான், மூளை அதிவேகமாக வளர்கிறது. நியூரான்களுக்கு இடையிலான இணைப்பும் அந்தக் காலகட்டத்தில்தான் ஏற்படுகிறது. அப்போதுதான் மூளையானது தன் முழு வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கிறது‌. இத்தகைய வளர்ச்சியின்போது குழந்தைகளின் மொழித் திறன்,பேசும் திறனை செவித்திறன் வாயிலாக அவர்கள் வாழும் சூழலுக்கேற்ப கற்றுக்கொள்கின்றனர். 

    ஓடிடிஸ் மீடியா (Ottitis media):

    குழந்தைகளுக்குப் பொதுவாக ஏற்படும் தொற்று ஓடிடிஸ் மீடியா. இது பெரும்பாலும் யூஸ்டாசியன் டியூப்  (Eustachian tube malfunction) செயல் இழப்பதால் ஏற்படுகிறது. நடுக்காதையும் உள்மூக்கின் மேல்பகுதியையும் இணைக்கும் குழல்தான் யூஸ்டாசியன் டியூப். பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளில் இந்த யூஸ்டாசியன் டியூப் அமைந்திருக்கும் நிலை காரணமாகக் குழந்தைகளில்  ஓடிடிஸ் மீடியா  அதிகம் ஏற்படுகிறது எனலாம்.

    குழந்தைகளுக்கு இந்தக் குழாய் செங்குத்தாக இருப்பதால் தொற்று எளிதாகப் பரவி நடுக்காது பகுதிக்குப் பரவக்கூடும். இதனால் தண்ணீரோ அல்லது திரவமோ நடுக்காதில் சேர வாய்ப்பு உள்ளது. இது பாக்டீரியாவின் வளர்ச்சியை அதிகரிக்கும். குழந்தை வளர்ச்சியின் காரணமாக கிடைமட்ட நிலைக்கு மாறுவதால், தொற்று ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

    * கண்டக்டிவ் ஹியரிங் லாஸ் (Conductive hearing loss): ஒலியானது வெளியே இருந்து உள் காதுக்குச் செல்லும் பாதையில் ஏற்படும் தடையை `கண்டக்டிவ் ஹியரிங் லாஸ்' என்பார்கள். எடுத்துக்காட்டாக அந்நியப் பொருள்கள் பாதையை அடைப்பது (Foreign wax) மற்றும் அழுக்கு சேர்வது (Ear wax).

    * சென்சரி நியூரல் ஹியரிங் லாஸ் (Sensori -neural hearingloss): காக்ளியா அல்லது உள்காதிலிருந்து மூளைக்கு எடுத்துச் செல்லும் நரம்பில் ஏற்படும் பாதிப்பே, ,`சென்சரி நியூரல் ஹியரிங் லாஸ்' ஆகும். காக்ளியாவின் வளர்ச்சியில் ஏற்படும் பிறழ்வு காரணமாக வரும் செவித்திறன் குறைபாடு, இந்த வகையைச் சார்ந்ததாகும்.

    சிகிச்சை முறை

    * காதில் தொற்று ஏற்பட்டால், செவித்திறன் பரிசோதனை வல்லுநர் மூலம் மட்டுமே செவித்திறன் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். பின்னர் செவித்திறன் குறைபாட்டின் தன்மைக்கேற்ப காதொலிக் கருவிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. மேலும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயனாளர்களுக்கு இலவசமாகவே காதொலிக் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    *காக்ளியர் இம்ப்ளான்ட்

    காக்லியாவின் வளர்ச்சியில் ஏற்படும் பிறழ்வு காரணமாகப் பிறவிக்கேள்விக் குறைபாடு ஏற்படக்கூடும் .குழந்தைகள் பேச்சுத்திறனிலும் மொழித் திறனிலும் பின்தங்கிக் காணப்படுவார்கள். இந்நிலையில் காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை (உள்காது நரம்பியல்) மூலம் கேட்கும் திறனை முழுமையாகப் பெற முடியும். 
    ஒவ்வொரு நற்செயலையும் பாராட்டும்போதுதான் அடுத்தடுத்து அதேபோல் செய்து நல்ல பெயரை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருவருக்கு ஏற்படுகிறது.
    ஒருவர் மற்றொருவரைப் பாராட்டும்போதுதான் அவரை ஊக்கப்படுத்த முடியும். ஒருவர் போட்டியில் வென்றால் மட்டுமே அவரைப் பாராட்ட வேண்டும் என்று நினைத்து விடக்கூடாது.

    ஒவ்வொரு நற்செயலையும் பாராட்டும்போதுதான் அடுத்தடுத்து அதேபோல் செய்து நல்ல பெயரை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருவருக்கு ஏற்படுகிறது. மேலும், பாராட்டியவர் செய்த நல்ல செயல் களைத் தானும் கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணமும் மற்றவர்களுக்கு ஏற்படும். தோல்வி அடைந்தவரைக் கூட பாராட்டலாம். அப்போது அவருக்கு கிடைத்த அந்த பாராட்டு மேலும், அவரை புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. 

    நாம் செல்லும் பாதையில் கிடக்கும் முட்களை ஒருவர் அகற்றினாலும்கூட, அவரை மனதார பாராட்டுங்கள். முதியவருக்கு ஒருவர் பாதையைக் கடக்க உதவினாலும் பாராட்டுங்கள். பயணங்களின் போதும் ஒருவருக்கொருவர் சிறுசிறு உதவிகள் செய்தாலும், மனம் திறந்து பாராட்டுங்கள். ‘இதுக்குப் போய் பாராட்ட வேண்டுமா’ என்ற எண்ணம் வந்தால், அதை ஒதுக்கித் தள்ளிவிடுங்கள். எவன் ஒருவன் பிறர் செய்யும் நற்செயல்களைப் பாராட்டுகிறானோ, அவனே பாராட்டு பெறவும் தகுதி உடையவனாகிறான்.

    பெற்றோரின் பாராட்டு

    முதலில் பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பாராட்ட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பரந்தமனப்பான்மை வளரும். நண்பர்கள் சின்ன சின்ன விஷயங்களை அழகாக செய்யும் போதும், பாராட்டுங்கள். அது உங்கள் நண்பரை பெரிய பெரிய காரியங்களை எல்லாம் சாதிக்கத் தூண்டும்.

    நாநலம் என்னும் நலனுடமை, அந்நலம்

    யாநலத்து உள்ளதூஉம் அன்று

    என்கிறார், வள்ளுவர்.

    அதாவது, நாம் பேசும்போது உண்டாகும் நன்மைகளை விட, மற்றவற்றால் எந்தவிதமான நன்மைகளும் வரப்போவது இல்லை. எனவே, எந்தவிதத்திலும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் அனைவரையும் பாராட்டுங்கள். பாராட்டுவதில் கஞ்சத்தனம் காட்டாதீர்கள். பாராட்டும்போதுதான் புதுப்புது கலைஞர்களை உருவாக்க முடியும். பகையை நட்பாக மாற்றுகிறது பாராட்டு.எவன் ஒருவன் தன் பகைவனையே பாராட்டுகிறானோ, அப்போது அங்கு ‘பகைமை’ என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போகிறது. ஒருவரைப் பாராட்டும்போது அதனால், அவருக்கு மட்டும் பெருமை வாய்ப்பதில்லை. அவரது பெற்றோர், நண்பர்கள், சமுதாயம் என்று நாட்டிற்கே பெருமைதான். அப்துல் கலாம், ஏ.ஆர்.ரகுமான் போன்றவர்களை இதற்கு உதாரணமாக கூறலாம். ஒருவர் செய்யும் சிறிய நற்செயல்களுக்கு நாம் கொடுக்கும் பெரிய வெகுமதியே இந்த பாராட்டுதான்.

    புவனேஷ், 10-ம் வகுப்பு, பெங்களூரு.
    காதல் அன்பால் நிறைந்தது. அது ஒரு போதும் யாரையும் அழிக்காது. அதனால் ஒருதலை காதல் என்றாலும், காதல் தோல்வி என்றாலும் விருப்பம் இல்லாவிட்டால் விலகிச்சென்றுவிடவேண்டும்.
    காதல் உன்னதமானது. ஆனால் ஒருதலை காதல் ஆபத்தானது. காதலுக்கு மதமும், ஜாதியும் விரோதியாக இருந்தாலும் அதிக ஆபத்தை தரும் எதிரி ஒருதலை காதல்தான்! மற்ற நாடுகளை விட இந்தியாவில் ஒருதலை காதலால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கத்தான் செய்கின்றன. அதனால் அதில் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் நிர்கதியாகின்றன. அதை தொடர்ந்து பல்வேறுவிதமான மன உளைச்சலுக்கும், சமூக சிக்கல்களுக்கும் அந்த குடும்பங்கள் இரையாகின்றன. ஒருதலை காதலுக்காக சிலர் படிப்பையும், உயிரையும் விட்டு விடுவது உச்சகட்ட அறியாமை.

    காதல் உண்மையானது என்றால், அதை நிரூபிக்க அமைதியாக காத்திருக்கவேண்டும். நியாயமான முறையில் போராட வேண்டும். அப்படியும் ஏற்காவிட்டால் விட்டுவிட வேண்டும். பதிலுக்கு கொடூரமான செயலில் ஈடுபடக்கூடாது. ஒரு பெண் தனது காதலை ஏற்றுக்கொள்ளாதபோது, அதை ஆண் அமைதியாக ஏற்றுக்கொண்டு ஒதுங்கிவிடவேண்டும். மாறாக அவள் தன்னை அலட்சியப்படுத்திவிட்டாள் என்று கருதும்போதுதான் அது வன்ம உணர்வை தூண்டுகிறது. அதுதான் தாழ்வுமனப்பான்மையை தோற்றுவித்து, வெறியை உருவாக்குகிறது.

    பெண்கள் எப்போதும் கவனமாக இருக்கவேண்டும். புதிதாக ஒருவர் தன்னிடம் பேசும்போதும், பழகும்போதும் அவரது மனநிலை எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்து நடந்துகொள்ளவேண்டும். நட்பாக மட்டுமே இருந்தால் ஆபத்தில்லை. வேறு மாதிரியான எண்ணங் கள் மனதில் இருப்பதாக தோன்றினால், விழிப்பாகி விடவேண்டும். ‘அதெல்லாம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று கருதாமல், ‘நீங்கள் என்னோடு நட்போடு மட்டும்தான் பழகவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்’ என்று முதலிலே கூறிவிடுங்கள்.

    ஒருதலை காதல் பிரச்சினை தோன்றும்போது, பெற்றோரிடம் அதை கூறலாமா? கூடாதா? என்ற சிந்தனை பெண்களிடம் ஏற்படுகிறது. பெற்றோர்களிடம் சொல்லத்தான் வேண்டும். ஆனால் பெற்றோர் உடனே உணர்ச்சிவசப்பட்டோ, பயப்பட்டோ அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிவிடக்கூடாது. மென்மையாக கையாண்டு, மகளுக்கு பாதுகாப்பும், தைரியமும் கொடுக்கும் விதத்தில் நடந்துகொள்ளவேண்டும்.

    மாணவிகள், சக மாணவர்களுடன் எப்படி பழகவேண்டும்? நட்பின் எல்லை என்ன? என்பதை எல்லாம் பாடத்திட்டம் போல் எங்கும் சொல்லிக்கொடுப்பதில்லை. அவர்களாக அனுபவப்பட்டு தெரிந்துகொள்ளட்டும் என்று விட்டு விடுகிறார்கள். பெற்றோர்களும் பக்குவமாக அதை மகள்களுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை. ‘எல்லாம் தெரிந்த மகளுக்கு இதுவும் தெரியும்’ என்று விட்டுவிடுகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் மாணவிகளுக்கு இந்த விஷயத்தில் கைகொடுப்பது ஊடகங்கள்தான். அன்றாட நாட்டு நடப்புகளை அவர்கள் பத்திரிகைகள் வாயிலாக படிக்கத் தொடங்கிவிட்டால், இந்த விஷயத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று புரிந்துகொள்வார்கள்.

    பெண், ஆணிடம் பழகும்போது அவர் ஒருதலை காதலோடு தன்னை அணுகும் சூழ்நிலை உருவாகலாம் என்பதை நினைவில் வைத்திருங்கள். அதனால் தொடக்கத்தில் இருந்தே நெருங்காமலும், விலகாமலும் ‘நான் எல்லோரிடமும் இப்படித்தான் நட்போடு பழகுவேன்’ என்பதை சுட்டிக்காட்டிவிடுங்கள். தெரிந்த இளைஞராக இருந்தாலும், அறிமுகமற்ற இளைஞராக இருந்தாலும் அவர்களுக்கு ஆபத்து என்றால் உதவுங்கள். உதவிக்கு அவர்கள் நன்றி சொல்வதோடு அந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளிவைத்துவிடுங்கள். ‘உதவியதற்கு அவர்மீது கொண்டிருக்கும் காதல் காரணம்’ என்று அவர் கருதிக் கொள்ள வாய்ப்புகொடுத்துவிடாதீர்கள்.

    காதல் பற்றியோ, கல்யாணம் பற்றியோ பேசக்கூடிய சூழ்நிலை ஏற்படும்போது அவைகளை பற்றி பேசாமலே தவிர்க்கவேண்டியதில்லை. அத்தகைய பேச்சை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு, ‘காதலுக்கு இப்போது இடமில்லை’ என்று தெளிவாக கூறிவிடுங்கள். பெண்கள் சுய நலத்திற்காக இளைஞர்களை ஒருபோதும் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. உங்கள் குடும்ப விஷயங்களிலும், அந்தரங்க விஷயங்களிலும் அவர்களை தலையிட அனுமதிக்கும்போது, நீங்கள் அவரை காதலிப்பதாக அவர் புரிந்துகொள்ளக்கூடும். அதுவே பிற்காலத்தில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.

    பரிசுகளுக்கும், பண உதவிகளுக்கும், பொழுதுபோக்குகளுக்கும் ஆண்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டாம். ஒரு பெண் தன்னிடம் மனம் விட்டுபேசினாலே அது காதல்தான் என்று ஆண்களும் தப்பாக புரிந்துகொள்ளக்கூடாது.

    காதல் அன்பால் நிறைந்தது. அது ஒரு போதும் யாரையும் அழிக்காது. அதனால் ஒருதலை காதல் என்றாலும், காதல் தோல்வி என்றாலும் விருப்பம் இல்லாவிட்டால் விலகிச்சென்றுவிடவேண்டும்.
    முகத்தை கழுவும் போது எத்தனை பேர் சரியாக கழுவுகிறோம்? முகத்தை முறையாக, மென்மையாக கழுவவில்லை என்றால் முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் தான் அதிகமாகும்.
    முகமானது அழகாக இருக்க, அடிக்கடி முகத்தை கழுவுவோம். ஆனால் அவ்வாறு முகத்தை கழுவும் போது எத்தனை பேர் சரியாக கழுவுகிறோம்? மேலும் சிலர் முகத்தில் இருக்கும் அழுக்குகள் போக வேண்டும் என்பதற்காக தேய்த்து கழுவுவார்கள். அவ்வாறு செய்து, முகத்தை முறையாக, மென்மையாக கழுவவில்லை என்றால் முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் தான் அதிகமாகும்.

    ஆகவே அத்தகையது வராமல், மென்மையாக இருக்க முகத்தில் இருக்கும் இறந்த செல்களை, அழுக்குகளை, கிருமிகளை நன்கு கழுவ, ஒரு சில வழிகள் இருக்கிறது. அதைப் பின்பற்றினால் முகத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம். முகத்தை கழுவுவதற்கு முன்னால், கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். 

    பிறகு சிறிது காட்டனை எடுத்து, கிளின்சரில் நனைத்துக் கொண்டு, முகத்தை நன்கு துடைத்து விட வேண்டும். ஆனால் அப்படி கிளின்சர் பயன்படுத்தும் போது, சருமத்திற்கு ஏற்றதாக பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும்.உதாரணமாக, வறண்ட சருமம் உள்ளவர்கள் கிரீம் போன்று இருக்கும் கிளின்சரைப் பயன்படுத்த வேண்டும். 

    அதுவே எண்ணெய் சருமம் உள்ளவர்கள், வழுவழுப்பாக இருக்கும் கிளின்சரை பயன்படுத்த வேண்டும். அத்தகைய கிளின்சரை தினத்திற்கு 1 அல்லது 2 முறை பயன்படுத்த வேண்டும். ஆனால் அதற்கு மேல் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அது முகத்தில் இயற்கையாக இருக்கும் எண்ணெயையும் அகற்றிவிடும்.

    எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். அதனால் முகத்தில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் குழிகளில் இருக்கும் அழுக்குகளை நீக்கிவிடும். பின் கழுவியதும் சுத்தமான துணியால் முகத்தை துடைத்துவிட வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் எளிதில் போய்விடும்.
    அதுவும் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையே செய்ய வேண்டும். பின் கழுவி விட வேண்டும். இவ்வாறெல்லாம் முகத்தை கழுவினால் முகமானது அழகாக, பொலிவோடு இருப்பதோடு, ஆரோக்கி யமாகவும் இருக்கும்.

    அதிசயங்கள் நிறைந்த சுரங்கமாக இருக்கும் மனித உடலில் இனப்பெருக்க செயல்பாடுகள் பல்வேறு ஆச்சரியங்களை அரங்கேற்றுகின்றன.
    இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாட்டிலும் அதிசயங்கள் நிறைந்திருக்கின்றன. தொடர்ச்சியாக மனித இனம் உருவாகிக் கொண்டே இருக்க இனப்பெருக்க உறுப்புகள் தான் காரணம்.  ஆண் இனப்பெருக்க உறுப்பிற்கும், பெண் இனப்பெருக்க உறுப்பிற்கும் வித்தியா சங்கள் இருந்தாலும், இரண்டும் இணைந்து உருவாக்கம் நிகழ்த்தும் விதத்தில் அவை அற்புதமாக படைக்க பட்டிருக்கின்றன. 

    ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரான், ஆணின் விரைகளில் செயல்பட்டு உயிரணுவை உற்பத்தி செய்கிறது. ஒரு மில்லி விந்துவில் ஒன்றரை கோடி உயிரணுக்கள் இருக்கும். பெண்ணை கருத்தரிக்க வைக்க அதில் ஒன்றே ஒன்று போதுமானது. பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் தான், மனித உற்பத்திக் கேந்திரம். 

    பெண்ணுறுப்பு, கருப்பை, சினைப்பைகள், கருக்குழாய்கள் போன்றவைகள் அதில் குறிப்பிடத்தக்கவை. பெண்ணுறுப்பு கிட்டத்தட்ட பத்து செ.மீ. நீளம் கொண்ட ஒரு குழல் போன்ற அமைப்பு. அதன் முகப்பு பகுதி கன்னிச்சவ்வு மூலம் மூடப்பட்டிருக்கும். 

    அதன் நடுவில் உள்ள சிறிய துவாரத்தின் வழியாகத்தான் மாதவிலக்கு உதிரம் வெளியேறுகிறது. உறவின் போது ஆணின் உயிரணுவை, யோனி நாளம் வரவேற்கிறது. பெண்ணுறுப்புக்கு பார்தோலின் என்ற சுரப்பி சுரக்கும் திரவம் வழுவழுப்புத் தன்மையை உருவாக்குகிறது. இவை அனைத்தும் உடலியல் விஞ்ஞான தகவல்கள் ஆகும்.

    எட்டு செ.மீ. நீளமும், ஐந்து செ.மீ. அகலமும் கொண்ட தசையாலான பை தான் கருப்பை. இனப்பெருக்கத்தில் இது செய்யும் பணி அதிசயமானது. 50 கிராம் எடை கொண்ட கருப்பை, கருவை உள்வாங்கி, அதைவிட பலமடங்கு கொண்ட குழந்தையாக வளர்த்தெடுக்கிறது.

    ஆணின் உயிரணுவும், பெண்ணின் சினை முட்டையும் சந்தித்து, கருக்குழாயில் கருவாகிறது. அந்த கரு, கருப்பைக்குள் சென்று பதியமாகி சிசுவாகி, குழந்தையாக வளருகிறது. கருப்பையின் மேல் பகுதியில், இருபுறமும் இரு சினைப்பைகள் உள்ளன. இதில் இருந்து தான் மாதந்தோறும் சினைமுட்டை வெளி வருகிறது. 

    பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளில் பெலோப்பியன் டியூப் எனப்படும் கருக்குழாயின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. முடியை விட மெலிதாக இருக்கும் இந்த குழாய்கள் தான் சினை முட்டையையும், உயிரணுவையும் சந்திக்க வைக்கவும் - கருவாக்கி - அதனை கருப்பைக்குள் அனுப்பும் பணியையும் செய்கின்றன. 

    இதன் பணிகள் அனைத்தும் பிரமிக்க வைக்கின்றன. பெண் பூப்படைவது மூலம் அவள் இனப்பெருக்கத்திற்கு தயாராகி விட்டாள் என்பது உணர்த்தப்படுகிறது. பெண்ணின் ஒவ்வொரு மாதவிலக்கு சுழற்சி காலத்திலும் சினை முட்டை முதிர்ந்து வெடித்து வெளியே வருகிறது. அது ஆணின் உயிரணுவோடு சேர்ந்து கருவாகும் சூழல் உருவாகிறது. 

    சினைமுட்டை வெளியேறும் ஒவ்வொரு மாதமும் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான் ஆகிய ஹார்மோன்கள் கருப்பைக்குள் என்டோமெட்ரியம் என்ற பஞ்சுப்பொதி போன்ற மென்பொருளை உருவாக்குகிறது. கருப்பைக்குள் வரும் கரு வளர படுக்கை அமைத்து கொடுப்பது போன்ற பணியை என்டோமெட்ரியம் செய்யும். ஆனால் ஆணும், பெண்ணும் இணையாவிட் டால் கருத்தரிப்பு அங்கே நிகழாது. 

    அதனால் என்டோமெட்ரியத்திற்கு அங்கே வேலையில்லை. அதனால் அது ரத்தத்தோடு மாதந்தோறும் வெளியேறும். அப்படி வெளியேற்ற படுவதைத்தான் மாதவிலக்கு என்கிறோம். கர்ப்ப காலத்தில் மாதவிலக்கு தோன்றாது. அதிசயங்கள் நிறைந்த சுரங்கமாக இருக்கும் மனித உடலில் இனப்பெருக்க செயல்பாடுகள் பல்வேறு ஆச்சரியங்களை அரங்கேற்றுகின்றன. 

    இந்த அதிசயங்களை பார்த்து மலைத்து, சிலிர்த்துப் போவதைவிட இந்த அற்புத உயிர் இயந்திரத்தின் இயக்கத்தில் எந்த கோளாறும் (நோயும்) வராமல் பார்த்துக் கொள்வது தான் நாம் நமது உடலுக்கு செய்யும் மரியாதையாகும்.
    முளைக்கீரையில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளதால் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது அருமருந்தாக உள்ளது. முளைக்கீரையில் இன்று கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    முளைக்கீரை - 1 கட்டு
    வெங்காயம்  - 1
    தக்காளி  - 1
    பச்சை மிளகாய் (கீறியது) - 2  
    பாசிப்பருப்பு - அரை கப்
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    அரைக்க:

    தேங்காய் துருவல் - 2  டேபிள்ஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்

    தாளிக்க:

    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 1 

    செய்முறை:

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கீரையை நன்றாக மண் போக அலசி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

    பாசிபருப்பை மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து குழைவாக வேகவைக்கவும். 

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

    பிறகு பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

    இத்துடன் நறுக்கிய கீரையை சேர்த்து நன்றாக வதக்கிய பின் வேக வைத்த பாசிபருப்பை சேர்க்கவும். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கீரையை வேக வைக்கவும். 

    கீரை முக்கால்வாசி வெந்ததும், அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து சேர்க்கவும். 

    இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து இறக்கவும்.  

    சூப்பரான சத்தான முளைக்கீரை கூட்டு ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வீடுகளில் வளர்க்கக்கூடிய ஒரு செடி வகை செம்பருத்தி. இது, பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாகும். எந்த பிரச்சனைக்கு செம்பருத்தியை எப்படி சாப்பிட வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
    வீடுகளில் வளர்க்கக்கூடிய ஒரு செடி வகை செம்பருத்தி. இது, பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாகும். 

    செம்பருத்தி பூவின் சாற்றை, சம அளவு தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி வர முடி கருத்து அடர்த்தியாக வளரும். 

    உடல் சூடு காரணமாக பலருக்கு வாய்புண், வயிற்றுப்புண் உண்டாகும். அவர்கள் தினம் 10 பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் புண்கள் ஆறும். ஒரு மாதகாலம் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். 

    செம்பருத்தி பூ குளிர்ச்சியானது. சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளக்க செய்யும். பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்து குளித்தால் பேன்கள் குறையும். 

    10 பூக்களின் இதழ்களை நீரில் இட்டு காய்ச்சி குடித்து வர சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும். உடல் வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும். 

    கருப்பை நோய்கள், இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணி செம்பருத்தி பூக்கள். பூவிதழ்களை 200 மி.லி நீரில் கொதிக்க வைத்து, காலை நேரத்தில் அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் சீராகும். 

    செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டை தூள் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட ரத்தத்தில் இரும்பு சத்து அதிகரித்து ரத்த சோகை நோய் குறையும்.
    குழந்தையின் செவித்திறன் சார்ந்த செயல்பாட்டைத் தெரிந்துகொண்டாலே அவர்களுக்கு செவித்திறன் குறைபாடு உள்ளதா, இல்லையா என்பதை எளிதில் கண்டறியலாம்.
    செவித்திறன்தான், குழந்தைகளின் பேச்சுத்திறனுக்கும் மொழித்திறனுக்கும் அடிப்படையாக இருக்கிறது. அதன்படி செவித்திறனற்ற அல்லது செவித்திறன் பாதித்த குழந்தைகள் மொழித் திறன் மற்றும் பேச்சுத்திறனில் பின்தங்குகிறார்கள்.  எவ்வளவு சிறுவயதில் செவித்திறன் பாதிப்பு கண்டறியப்படுகிறதோ, அவ்வளவு சீக்கிரம் சிகிச்சை மேற்கொண்டு குழந்தைகளின் வளர்ச்சியைச் சீராக்கலாம். கை, கால் பாதிப்புகளை சுலபமாகக் கண்டறிந்துவிடலாம். ஆனால் செவித்திறன் குறைபாட்டை பெரும்பாலான பெற்றோர் கண்டறிய  தவறுகின்றன.

    குழந்தைகளுக்கு மூன்று முதல் ஐந்து வயதுவரையிலான காலம் மிக முக்கியமானது. இந்தக் காலத்தில்தான், மூளை அதிவேகமாக வளர்கிறது. நியூரான்களுக்கு இடையிலான இணைப்பும் அந்தக் காலகட்டத்தில்தான் ஏற்படுகிறது. அப்போதுதான் மூளையானது தன் முழு வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கிறது‌. இத்தகைய வளர்ச்சியின்போது குழந்தைகளின் மொழித் திறன்,பேசும் திறனை செவித்திறன் வாயிலாக அவர்கள் வாழும் சூழலுக்கேற்ப கற்றுக்கொள்கின்றனர். 

    குழந்தைக்கு செவித்திறன் குறைபாடு ஏற்பட்டிருந்தால் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் பேசும் பேச்சும் மொழியும் குழந்தையின் மூளையைச் சென்றடையாது. ஆனால், மூன்று வயதான நிலையில், தங்கள் குழந்தை பேசவில்லை என்றவுடன் பெற்றோர் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவார்கள். 

    இவை அனைத்தையும் கடந்தே சில பெற்றோர் செவித்திறன் சார்ந்த சிகிச்சைக்காகச் செல்கிறார்கள். அப்படிச் செல்லும் பலரும் காலங்கள் கடந்தே செல்கின்றனர். இதனால் அந்தக் குழந்தையின் மொழித்திறன் மற்றும் பேச்சுத்திறன் வளர்ச்சியில் மற்ற குழந்தைகளைவிடப் பின்தங்கி நிற்க நேரும். இதனால் பள்ளியில் சேர்வதிலும் சிக்கலை உண்டாக்கும்.

    கருவறையில் 20-வது வாரத்தில் இருந்தே குழந்தை கேட்கும் திறனைப் பெற்று விடுகிறது. உள்காதின்‌ செவித்திறன் சார்ந்த முக்கிய உறுப்பான காக்ளியா (Cochlea) அப்போது முழு வளர்ச்சியை அடைந்து விடுகிறது. எனவே, பிறப்பதற்கு பல நாள்கள் முன்பிருந்தே குழந்தை, கேட்கத் தொடங்கி விடுகிறது.

    செவித்திறன் சார்ந்த வளர்ச்சிப் படிநிலை:

    குழந்தையின் செவித்திறன் சார்ந்த செயல்பாட்டைத் தெரிந்துகொண்டாலே அவர்களுக்கு செவித்திறன் குறைபாடு உள்ளதா, இல்லையா என்பதை எளிதில் கண்டறியலாம்.

    * பொதுவாக, முதல் மூன்று மாதத்தில் 50-ல் இருந்து 60 டெசிபல் சத்தம் கேட்டு குழந்தைகள் அனிச்சையான செயலை வெளிப்படுத்துவர். அதாவது திடீர் சத்தம் கேட்டு கண்களைச் சுருக்குவது, சிமிட்டுவது அல்லது தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்தெழுவது, அழுவது என குழந்தைகளிடம் சில இயல்பான நடவடிக்கைகளைக் காண முடியும்.

    * நான்கு முதல் ஒன்பது மாதங்களில் சத்தம் கேட்கும் பக்கம் குழந்தை தங்கள் தலையைத் திருப்ப முயற்சி செய்யும். நான்காவது மாதத்தில் 40-ல் இருந்து 50 டெஸிபல் சத்தத்துக்கு தலையைத் திருப்பிய குழந்தை, ஒன்பதாவது மாதத்தில், 25-35 டெசிபல் சத்தத்துக்கே தலையைத் திருப்பும்.
    * 10-வது மாதம்/ஒரு வயதில் - சரியாக சத்தம் வரும் இடத்தைக் கண்டுபிடித்து அந்தப் பக்கமாகத் தலையைத் திருப்புவார்கள். மிகச்சிறிய சத்தத்தையும் எளிதில் கண்டறிவார்கள்.
    ×