என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மஹாலக்ஷ்மிக்கு பிரியமான இந்த மந்திரம் கூறி வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும்.
    1 தன லட்சுமி

    யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் செல்வத்தின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்,வணங்குகிறேன்,வணங்குகிறேன்

    2 வித்யா லட்சுமி


    யா தேவி ஸர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் கலை, கல்வியின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

    3 தான்ய லட்சுமி


    யா தேவி ஸர்வ பூதேஷூ க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் உணவு பொருட்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

    4 வீர லட்சுமி

    யா தேவி ஸர்வ பூதேஷூ த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

    எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் வீரம், வெற்றியின் அம்சமாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

    5 ஸௌபாக்ய லட்சுமி

    யா தேவி ஸர்வ பூதேஷூ முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் சுகம், நிம்மதியின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

    6 சந்தான லட்சுமி

    யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

    எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் தாயாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

    7 காருண்ய லட்சுமி

    யா தேவி ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

    8 ஆதி லட்சுமி

    யா தேவி ஸர்வ பூதேஷூ லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அனைத்து செல்வங்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்
    திருமாலின் திவ்ய நாமங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் இத்துதியை வைகுண்ட ஏகாதசியான இன்று பாராயணம் செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிட்டுவதோடு நாராயணனின் பேரருளும் கிடைக்கும்.
    திருமாலின் திவ்ய நாமங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் இத்துதியை வைகுண்ட ஏகாதசி (18.12.2018) அன்று பாராயணம் செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிட்டுவதோடு நாராயணனின் பேரருளும் கிடைக்கும்.

    ஓம் வாஜுஸூதேவம்
    ஹ்ருஷீகேஸம் வாமனம்
    ஜலஸாயினம் ஜனார்தனம்
    ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம்
    கருடத்வஜம்
    வராஹம் புண்டரீகாக்ஷம்
    ந்ருஸிம்ஹம் நரகாந்தகம்
    அவ்யக்தம் ஸாஸ்வதம்
    விஷ்ணும் அனந்த
    மஜமவ்யயம்
    நாராயணம் கதாத்யக்ஷம்
    கோவிந்தம் கீர்திபாஜனம்
    கோவர்தனோத்தரம் தேவம்
    பூதரம் புவனேஸ்வரம்
    வேத்தாரம் யக்ஞபுருஷம்
    யக்ஞேஸம் யக்ஞவாஹகம்
    சக்ரபாணிம் கதாபாணிம்
    ஸங்கபாணிம் நரோத்தமம்
    வைகுண்டம்
    துஷ்டதமனம் பூகர்பம்
    பீதவாஸஸம் த்ரிவிக்ரமம்
    த்ரிகாலஜ்ஞம் த்ரிமூர்த்திம்
    நந்திகேஸ்வரம்
    ராமம் ராமம் ஹயக்ரீவம் பீமம்
    ரௌத்ரம் பவோத்பவம்ஸ்ரீபதிம்
    ஸ்ரீதரம் ஸ்ரீஸம் மங்கலம்
    மங்கலாயுதம்
    தாமோதரம்
    தமோபேதம் கேஸவம்
    கேஸிஸ¨தனம் வரேண்யம்
    வரதம் விஷ்ணுமானந்தம்
    வஸூதேவஜம்
    ஹிரண்யரேதஸம்
    தீப்தம் புராணம்
    புருஷோத்தமம் ஸகலம்
    நிஷ்கலம் ஸூத்தம் நிர்குணம்
    குணஸாஸ்வதம்
    ஹிரண்யதனுஸங்காஸம்
    ஸூர்யாயுத
    ஸமப்ரபம்மேகஸ்யாமம்
    சதுர்பாஹம் குஸலம்
    கமலேக்ஷணம்
    ஜ்யோதீ ரூமரூபம் சஸ்வரூபம்
    ரூப ஸம்ஸ்திதம்ஸர்வஞ்ஜம்
    ஸர்வரூபஸ்தம் ஸர்வேஸம்
    ஸர்வதோமுகம்
    ஜ்ஞானம் கூடஸ்தமசலம்
    ஜ்ஞானதம் பரமம்
    ப்ரபும்யோகீஸம் யோக
    நிஷ்ணாதம் யோகினம்
    யோகரூபிணம்
    ஈஸ்வரம் ஸர்வபூதானாம்
    வந்தே பூதமயம் ப்ரபும்இதி
    நாமஸதம் திவ்யம்
    வைஷ்ணவம் கலுபாபஹம்
    வ்யாஸேன கதிதம் பூர்வம்
    ஸர்வபாப ப்ரணாஸனம்
    ய: படேத் ப்ராதருத்தாய ஸ
    பவேத் வைஷ்ணவோ நர:
    ஸர்வ பாப விஸூத்தாத்மா:
    விஷ்ணு ஸாயுஜ்யமாப்னுயாத்
    சாந்த்ராயண ஸஹஸ்ராணி
    கன்யாதான ஸதானி ச
    கவாம் லக்ஷஸஹஸ்ராணி
    முக்திபாகீ பவேந்நர:
    அஸ்வமேதாயுதம் புண்யம்
    பலம் ப்ராப்னோதி மானவ:
    விஷ்ணு ஸதநாம
    ஸ்தோத்திரம்.

    இந்த ஸ்லோத்தை வெள்ளிக்கிழமைகளில் அல்லது தினமும் சொல்லி வந்தால் குடும்பத்தார் மனதில் உள்ள வேற்றுமைகள் தீர்ந்து, ஒற்றுமையாக வாழலாம்.
    மஹாதேவீம் மஹாசக்திம் பவானீம்
    பவவல்லபாம்பவார்திபஞ்ஜநகரீம்
    வந்தே த்வாம் லோகமாதரம்ஜகத்கர்த்ரீம்
    ஜகத்தாத்ரீம் ஜகத்ஸம்ஹாரகாரிணீம்முனிபி:
    ஸமஸ்துதாம் பத்ராம் வந்தேத்வாம் மோக்ஷதாயினீம்.

    பொருள்:

    மகாதேவனுடைய மனைவியே, மிகுந்த சக்தி வாய்ந்தவளே, பவானி என்றழைக்கப்படுபவளே, பக்தர்களின் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் மனக் கவலைகளைப் போக்குகிறவளே, அனைத்து உலகங்களுக்கும் தாயே, தங்களை நமஸ்கரிக்கிறேன். உலகைப் படைப்பவளே, படைத்ததைக் காப்பவளே, கடைசியில் அதை அழிக்கவும் செய்பவளே, முனிவர்களால் துதிக்கப்படுபவளே, பக்தர்களுக்கு எந்நாளும் மங்கலத்தை அளிப்பவளே, முக்தியை தரவல்லவளே, தங்களை நமஸ்கரிக்கிறேன்.
    பெருமாளுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது ஏகாதசி அன்று சொல்லி வழிபாடு செய்து வந்தால் வறுமை நீங்கி ஐஸ்வர்யம் பெருகும்.
    ஸப்த ப்ராகாரமத்யே ஸரஸிஜமுகுளோத்பாஸமானே விமானே
    காவேரீ மத்ய தேஸே ம்ருதுதரபணிராட்போகபர்யங்கபாகே
    நித்ராமுத்ராபிராமம் கடிநிகட ஸிர: பார்ஸ்வவின்யஸ்தஹஸ்தம்

    பொருள்:

    ஏழு மதில்களால் சூழப்பட்ட பிராகார மத்தியில் தாமரை மொட்டுப் போன்ற விமானத்தின் கீழ் மிகவும் மிருதுவான ஆதிசேஷனுடைய சரீரமாகிய கட்டிலில் யோக நித்திரை கொண்டவரே, ரங்கநாதா, நமஸ்காரம். அழகு வாய்ந்தவரே, இடது கையை இடுப்பில் வைத்து ஒய்யாரக் கோலம் காட்டுபவரே, ஸ்ரீதேவி- பூதேவி இருவரும் பற்றி, மிருதுவாகப் பிடித்து வருடும் பாதங்களைக் கொண்டவரே, ரங்கநாதா, நமஸ்காரம்.
    தினமும் காலையில் குளித்து விட்டு ஆத்மசுத்தியுடன் மனதில் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவியை எண்ணிக்கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.
    தினமும் காலையில் குளித்து விட்டு ஆத்மசுத்தியுடன் மனதில் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை சொல்ல வேண்டும்.

    ஓம் ஹ்ரீம் யாம் கல்பயந்தினோரய
    க்ருத்யாம் க்ரூராம் வதுரமிவே
    ஹ்ராம்தாம் ப்ரம்ஹணா அவநிர்ணுத்ம
    ப்ரத்யக் கர்த்தாரம் ச்சது
    காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங்கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.
    காலையில் எழுந்திருக்கும்போதே, காலில் சக்கரமும் தோளில் இறக்கையும் கட்டிக்கொண்டு பரபரக்கிற வாழ்க்கைதான் பலருக்கும்! ஆனாலும் தினமும் எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம் கொஞ்சம் நிதானம் பழகுவது நல்லது. குறிப்பாக, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். ஏனெனில், நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பதாக ஐதீகம்!

    ஆகவே, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங்கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.  

    கராக்ரே வஸதே லக்ஷ்மீ
    கரமத்யே ஸரஸ்வதீ கரமூலேது
    கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்

    நம் ஒவ்வொரு செயலிலும் பக்கபலமாக இருந்து, நம்மையும் நம் இல்லத்தையும் சிறக்கவும் செழிக்கவும் செய்வாள் தேவி!
    கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எந்த வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
    கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எந்த வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.

    ஓம் நமோ பகவதே, கருடாய;
    காலாக்னி வர்ணாய ஏஹ்யேஹி
    கால நல லோல ஜிக்வாய
    பாதய பாதய மோஹய
    மோஹய வித்ராவய வித்ராவய
    ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய
    ஹந ஹந தஹ
    மகாலட்சுமிதேவியின் அருளைப் பெற கீழ்க்காணும் ஸ்லோகத்தை தினமும் மாலைவேளையில் விளக்கேற்றி வைத்துச் சொல்லி வாருங்கள்.
    மகாலட்சுமிதேவியின் அருளைப் பெற கீழ்க்காணும் ஸ்லோகத்தை தினமும் மாலைவேளையில் விளக்கேற்றி வைத்துச் சொல்லிவாருங்கள். உங்கள் இல்லத்திலும் மகாலட்சுமி மனமாரக் குடிகொண்டு அருள்வாள். தினமும் இந்த வழிபாட்டைச் செய்ய இயலாதவர்கள், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது இதைச் செய்வது நல்லது.

    ஸஹஸ்ரதள பத்மஸ்த கர்ணிகா வாஸினீம் பராம்
    சரத்பார்வண கோடீந்து ப்ரபாமுஷ்டிகராம் பராம்
    ஸ்வதேஜஸா ப்ரஜ்வலந்தீம் ஸுகத்ருச்யாம் மனோஹராம்
    ப்ரதப்த காஞ்சனநிப சோபாம் மூர்திமதீம் ஸதீம்
    ரத்நபூஷண பூஷாட்யாம் சோபிதாம் பீதவாஸஸா
    ஈஷத்தாஸ்ய ப்ரஸன்னாஸ்யாம் சஸ்வத்ஸுஸ்திரயௌவனாம்
    ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ச மஹாலக்ஷ்மீம் பஜே சுபாம்'

    விளக்கம்:

    ஆயிரம் தளங்களுடன் கூடிய தாமரை மலரின் நடுவில் வசிப்பவளும் சிறந்தவளும், சரத் காலத்தில் உள்ள கோடி சந்திரனுக்கு ஒப்பான காந்தி உள்ளவளும், தனது காந்தியால் மிகவும் பிரகாசிக்கின்றவளும், ஆனந்தமயமாகக் காட்சி தருபவளும், பக்தர்களின் மனத்தைக் கவருகின்றவளும், உருக்கி வார்த்த தங்கத்தின் காந்தியே (பிரகாசமே) உருவெடுத்து வந்தது போன்று இருப்பவளும், பதிவிரதையும், ரத்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும், தங்கப் பட்டாடையால் விளங்குகின்றவளும், மந்தஹாஸத்தால் பிரசன்ன முகமுடையவளும், சாஸ்வதமாய் அமைந்துள்ள யௌவனத்தை உடையவளும், பக்தர்களுக்கு சர்வ சம்பத்துக்களையும் தருபவளும், மங்கலத்தை அருள்கின்றவளுமான ஸ்ரீ மகாலட்சுமியைப் பூஜிக்கிறேன்.

    ஸ்ரீதேவி பாகவதம் 9-வது ஸ்கந்தம், 42-வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள இந்த ஸ்லோகம் நம் இல்லத்தில் சகல சௌந்தர்யங்களையும் கொண்டுவந்து சேர்க்கக்கூடிய சக்தி கொண்டது.

    "ஸ்ரீ மகாலட்சுமி தாயார் திருவடிகளே சரணம்"
    கீழ்க்காணும் துதியையும் சத்யநாராயண விரதம் மேற்கொள்ளும் நாளில் உச்சரித்து வந்தால் செல்வ வளம் சூழும்; பிறர் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும்.
    கீழ்க்காணும் துதியையும் சத்யநாராயண விரதம் மேற்கொள்ளும் நாளில் உச்சரித்து வந்தால் செல்வ வளம் சூழும்; பிறர் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும்.

    ‘அர்கௌகாபம் கிரீடாந்வித மகரலஸத்
    குண்டலம் தீப்திராஜத்
    கேயூரம் கௌஸ்துபாபாஸ பலருசிரஹாரம்
    ஸபீதாம்பரம் ச
    நாநாரத்நாம்ஸு பிந்நாபரண ஸதயுஜம்
    ஸ்ரீதராஸ்லிஷ்டபார்ஸ்வம்
    வந்தே தோ: ஸக்த சக்ராம்புருஹ தரகதம்
    விஸ்வவந்த்யம் முகுந்தம்.’

    பொதுப்பொருள்: எங்கும் வியாபித்திருக்கும் நாராயணனே, நமஸ்காரம். மகர, குண்டலங்களோடு பீதாம்பரதாரியாக பக்தர்களுக்கு காட்சியளிக்கும் பெருமாளே, நமஸ்காரம். சங்கு, சக்ரம், கதை, தாமரை ஆகியவற்றைக் கையில் ஏந்தி, நீலமேக ஸ்யாமளராக காட்சியளித்து, பக்தர்களைக் காக்கும் சத்யநாராயணப் பெருமாளே, அஷ்டாக்ஷர மந்திர வடிவினரே நமஸ்காரம். 
    ஸ்ரீ நரசிம்மருக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது இந்த கார்த்திகை மாதம் முழுவதும் அல்லது நரசிம்மருக்கு உகந்த நாட்களில் சொல்லி வரலாம்.
    ஓம் திருக்கடிகைத்தேவா போற்றி
    ஓம் திருமாமகள் கேள்வா போற்றி
    ஓம் யோக நரசிங்கா போற்றி
    ஓம் அழியங்கையா போற்றி
    ஓம் அக்காரத் கனியே போற்றி
    ஓம் அனுமனுக்கு ஆழி
     அளித்தாய் போற்றி
    ஓம் எக்காலத் தெந்தாய் போற்றி
    ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி
    ஓம் சங்கரப்ரியனே போற்றி
    ஓம் சார்ங்க விற்கையா போற்றி
    ஓம் உலகமுண்டாய் போற்றி
    ஓம் உலப்பில் கீர்த்தியம்மா போற்றி
    ஓம் அடியவர்க்கருள்வாய் போற்றி
    ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
    ஓம் தாமரைக் கண்ணா போற்றி
    ஓம் காமனைக் பயந்தாய் போற்றி
    ஓம் ஊழி முதல்வா போற்றி
    ஓம் ஒளிமணிவண்ணனே போற்றி
    ஓம் இராவணாந்தகனே போற்றி
    ஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி
    ஓம் பெற்ற மாளியே போற்றி
    ஓம் பேரில் மணாளா போற்றி
    ஓம் செல்வ நாரணா போற்றி
    ஓம் திருக்குறளா போற்றி
    ஓம் இளங்குமரா போற்றி
    ஓம் விளங்கொளியே போற்றி
    ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி
    ஓம் வந்தெனையாண்டாய் போற்றி
    ஓம் எங்கள் பெருமான் போற்றி
    ஓம் இமையோர் தலைவா போற்றி
    ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி
    ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி
    ஓம் வேதியர் வாழ்வே போற்றி
    ஓம் வேங்கடத்துறைவா போற்றி
    ஓம் நந்தா விளக்கே போற்றி
    ஓம் நால் தோளமுதே போற்றி
    ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி
    ஓம் ஆழ்வார்களுயிரே போற்றி
    ஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி
    ஓம் வாமதேவனுக்களித்தாய் போற்றி
    ஓம் மூவா முதல்வா போற்றி
    ஓம் தேவாதி தேவா போற்றி
    ஓம் எட்டெழுத்திறைவா போற்றி
    ஓம் எழில்ஞானச் சுடரே போற்றி
    ஓம் வரவர முனிவாழ்வே போற்றி
    ஓம் வடதிருவரங்கா போற்றி
    ஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி
    ஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி
    ஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி
    ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி
    ஓம் மாலே போற்றி
    ஓம் மாயப்பெருமானே போற்றி
    ஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி
    ஓம் அருள்மாரி புகலே போற்றி
    ஓம் விண் மீதிருப்பாய் போற்றி
    ஓம் மண் மீதுழல்வோய் போற்றி
    ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி
    ஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றி
    ஓம் முந்நீர் வண்ணா போற்றி
    ஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி
    ஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி
    ஓம் முற்றவிம்  மண்ணளந்தாய் போற்றி
    ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
    ஓம் அரவிந்த லோசன போற்றி
    ஓம் மந்திரப்பொருளே போற்றி
    ஓம் இந்திரனுக்கருள்வாய் போற்றி
    ஓம் குருபரம்பரை முதலே போற்றி
    ஓம் விகனசர் தொழும் தேவா போற்றி
    ஓம் பின்னை மணாளா போற்றி
    ஓம் என்னை யாளுடையாய் போற்றி
    ஓம் நலம்தரும் சொல்லே போற்றி
    ஓம் நாரண நம்பி போற்றி
    ஓம் பிரகல்லாதப்ரியனே போற்றி
    ஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி
    ஓம் பேயார் கண்டதிருவே போற்றி
    ஓம் ஏழு மாமுனிவர்க்கருளே போற்றி
    ஓம் ஏமகூட விமானத்திறைவா போற்றி
    ஓம் ஆணையின் நெஞ்சிடர்  தீர்த்தாய் போற்றி
    ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
    ஓம் கச்சி யூரகத்தாய் போற்றி
    ஓம் வில்லிறுத்த தேவா போற்றி
    ஓம் வீடணனுக் கருளினாய் போற்றி
    ஓம் இனியாய் போற்றி
    ஓம் இனிய பெயரினாய் போற்றி
    ஓம் புனலரங்கா போற்றி
    ஓம் அனலுருவே போற்றி
    ஓம் புண்ணியா போற்றி
    ஓம் புராணா போற்றி
    ஓம் கோவிந்தா போற்றி
    ஓம் கோளரியே போற்றி
    ஓம் சிந்தாமணி போற்றி
    ஓம் சிரீதரா போற்றி
    ஓம் மருந்தே போற்றி
    ஓம் மாமணி வண்ணா போற்றி
    ஓம் பொன் மலையாய் போற்றி
    ஓம் பொன் வடிவே போற்றி
    ஓம் பூந்துழாய் போற்றி
    ஓம் பாண்டவர்க் கன்பா போற்றி
    ஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி
    ஓம் தயரதன் வாழ்வே போற்றி
    ஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி
    ஓம் மறையாய் விரிந்த  விளக்கே போற்றி
    ஓம் வள்ளலே போற்றி
    ஓம் வர மருள்வாய் போற்றி
    ஓம் சுதாவல்லி நாதனே போற்றி
    ஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி
    ஓம் பத்தராவியே போற்றி
    ஓம் பக்தோசிதனே போற்றி
    ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவிற்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் தினமும் 108 முறை பாராயணம் செய்தால் நமது அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும்.
    ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
    சச்சிதானந்தாய தீமஹி
    தன்னோ சாய் ப்ரசோதயாத்

    தினமும் 11 அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும். 
    தினமும் அல்லது சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் சொல்ல வேண்டிய லிங்காஷ்டகத்தை (தமிழில்) அறிந்து கொள்ளலாம்.
    அன்னையும் பிதாவும் முதன்மை என்கின்றன இதிகாச, புராணங்கள். அவர்களைப் பணிந்தாலே போதும், சகல வளமும் நலமும் சேரும் என்பது நிச்சயம். சிவபாலன் முருகன் தன் பெற்றோரைப் பணிந்து பாடிய இத்துதியைச் சொல்வது வற்றாத செல்வமும், குன்றாத ஆயுளும் தரும் என்பது குமரக்கடவுளின் வாக்கு. துதியைச் சொல்வதோடு தூய மனதுடன் உங்கள் தாய் தந்தையரையும் பணியுங்கள். நிச்சயம் உங்கள் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

    நான்முகன் திருமால் பூஜை செய் லிங்கம்

    தூயசொல் புகழ் பெரும் பேரெழில் லிங்கம்

    பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம்

    வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 1

    காமனை எரித்த பேரெழில் லிங்கம்

    இராவணன் கர்வம் அடக்கிய லிங்கம்

    வழி வழி முனிவர்கள் வழிபடும் லிங்கம்

    வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 2

    திவ்ய மணம் பல கமழ்கின்ற லிங்கம்

    சித்தம் தெளிவிக்கும் சித்தர்கள் லிங்கம்

    தேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம்

    வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 3

    படம் எடுத்தாடும் பாம்பணை லிங்கம்

    கனகமும் நவமணி ஒளித்திடும் லிங்கம்

    தட்சனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம்

    வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 4

    குங்குமம் சந்தனம் பொழிந்திடும் லிங்கம்

    பங்கய மலர்களைச் சூடிடும் லிங்கம்

    வந்ததொரு பாவத்தைப் போக்கிடும் லிங்கம்

    வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 5

    அசுரர்கள் அங்கம் போற்றிடும் லிங்கம்

    அன்பர்கள் பக்தியை ஏற்றிடும் லிங்கம்

    கதிரவன் கோடி சுடர் மிகு லிங்கம்

    வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 6

    எட்டிதழ் மலர்களும் சுற்றிடும் லிங்கம்

    எல்லாப் பிறப்பிற்கும் காரண லிங்கம்

    அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம்

    வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 7

    வியாழனும் தேவரும் போற்றிடும் லிங்கம்

    வில்வமதை மலர் எனக்கொளும் லிங்கம்

    தன்னோடு பிறரையும் காத்திடும் லிங்கம்

    வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 8

    (ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழாக்கம் நிறைவு)
    ×