என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    ஐயப்ப பக்தர்கள் தினமும் காலை, மாலை இருவேளையிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐயப்பனின் 108 சரணத்தை சொல்லி வழிபாடு செய்து வந்தால் நன்மை உண்டாகும்.
    ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா
    ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
    ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
    ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா
    ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா
    ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா
    ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா
    ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் ஈசனின் திருமகனே சரணம் ஐயப்பா
    ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா

    ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா
    ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
    ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா
    ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா
    ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
    ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா
    ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா

    ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா
    ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
    ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா
    ஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா
    ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா
    ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா
    ஓம் சைவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா
    ஓம் அச்சங்கோயில் அரசே சரணம் ஐயப்பா

    ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா
    ஓம் குளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா
    ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
    ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
    ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா
    ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா
    ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா
    ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா
    ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா
    ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா

    ஓம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா
    ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா
    ஓம் குருதட்சினை அளித்தவனே சரணம் ஐயப்பா
    ஓம் புலிப்பாலைக் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா
    ஓம் வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
    ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
    ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா
    ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா
    ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா
    ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் இரு முடிப்பிரியனே சரணம் ஐயப்பா
    ஓம் எரிமேலி தர்மசாஸ்தாவே சரணம் ஐயப்பா
    ஓம் நித்ய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா
    ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா
    ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா
    ஓம் பெரும்ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
    ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா

    ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
    ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
    ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா
    ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
    ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா
    ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா
    ஓம் அழுதைமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
    ஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா
    ஓம் கல்லிடும் குன்றமே சரணம் ஐயப்பா

    ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
    ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
    ஓம் கரியிலந் தோடே சரணம் ஐயப்பா
    ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
    ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா
    ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா
    ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா
    ஓம் பம்பா நதித் தீர்த்தமே சரணம் ஐயப்பா
    ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் திரிவேணி சங்கமே சரணம் ஐயப்பா

    ஓம் திருராமர் பாதமே சரணம் ஐயப்பா
    ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா
    ஓம் சபரிக்கு அருள் செய்தவளே சரணம் ஐயப்பா
    ஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா
    ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா
    ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா
    ஓம் திருப்பம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா
    ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

    ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா
    ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா
    ஓம் இப்பாச்சி குழியே சரணம் ஐயப்பா
    ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா
    ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா
    ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா
    ஓம் கருப்பண்ணசாமியே சரணம் ஐயப்பா
    ஓம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா
    ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா
    ஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா

    ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா
    ஓம் பசுவின் நெய்யபிஷேகமே சரணம் ஐயப்பா
    ஓம் கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா
    ஓம் நாகராசப் பிரபுவே சரணம் ஐயப்பா
    ஓம் மாளிகைப் புரத்தம்மனே சரணம் ஐயப்பா
    ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா
    ஓம் அக்கினி குண்டமே சரணம் ஐயப்பா
    ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா
    ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா
    ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா
    ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா
    ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா

    ஓம் ஐயப்பா! நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்க வேண்டும். ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் வில்லாளி வீரன் வீர மணிகண்டன் காசி, ராமேஸ்வரம், பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஓம்ஸ்ரீ ஹரி ஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சாமியே சரணம் ஐயப்பா! 
    திருமங்கையாழ்வாரும் நம்மாழ்வாரும் சோளிங்கர் நரசிம்மப் பெருமானை அக்காரக்கனி என்று அழைத்துள்ளனர். பேயாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் கடிகை என்று சோளிங்கரைக் குறிப்பிட்டுள்ளனர்.
    பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
    கொண்டங் குறைவாயார்க்கு கோவில் போல் வண்டு
    வளம்கிளரும் நீர்சோலை வண்பூங் கடிகை
    இளங்குமரன் தன்விண்ணகர்.பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி. 61
    மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
    புக்காளைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையைத்
    தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
    அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே.
    திருமங்கைஆழ்வார் பெரியதிருமொழி. 8-9-4.
    எக்காலத் தெந்தையாய் என்னுள் மன்னில்
    மற்றெக் காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
    மிக்கார் வேதவிமலர் விழுங்குமென்
    அக்காரக் கனியே உன்னையே யானே.நம்மாழ்வார் திருவாய்மொழி. 2-9-8.

    திருமங்கையாழ்வாரும் நம்மாழ்வாரும் சோளிங்கர் நரசிம்மப் பெருமானை அக்காரக்கனி என்று அழைத்துள்ளனர். பேயாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் கடிகை என்று சோளிங்கரைக் குறிப்பிட்டுள்ளனர்.
    சனி திசை மற்றும் சனி புத்தி நடைபெறும் போது இந்த காயத்ரி மந்திரம் சொல்லி வரும் போது சனி பகவனால் ஏற்படும் திங்கு விலகி நன்மை உண்டாகும்.
    கீழ்க்காணும் சனீஸ்வர காயத்ரி மந்திரங்களைச் சொல்லி, அருகில் உள்ள சிவன் கோயில்களில் உள்ள சனீஸ்வரர் சந்நிதியை வணங்குவது, அல்லது நவக்கிரகத்தில் உள்ள சனீஸ்வரரை வலம் வந்து வணங்குவது ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.
    இதனை தந்த்ர காயத்ரி என்பார்கள்.  

    ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி
    தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்!

    ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி
    தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்!

    ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி
    தன்னோ சனைச்சர ப்ரசோதயாத்!

    ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி
    தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்!

    ஓம் சதுர்புஜாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி
    தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்!
    இன்று தேய்பிறை அஷ்டமி திதியில் இந்த 108 போற்றியை சொல்லி பைரவர் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் படிப்படியாக குறையும். அந்த 108 போற்றியை கீழே பார்க்கலாம்.
    தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். இந்த நாளில் மாலை 4.30- 6 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த போற்றியைச் சொல்லலாம். பைரவர் சன்னதி முன்பு கூட்டாக அமர்ந்து, ஒருவர் சொல்ல மற்றவர்கள் திருப்பிச் சொல்லலாம்.

    01. ஓம் பைரவனே போற்றி
    02. ஓம் பயநாசகனே போற்றி
    03. ஓம் அஷ்டரூபனே போற்றி
    04. ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
    05. ஓம் அயன்குருவே போற்றி

    06. ஓம் அறக்காவலனே போற்றி
    07. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
    08. ஓம் அடங்காரின் அழிவே போற்றி
    09. ஓம் அற்புதனே போற்றி
    10. ஓம் அசிதாங்க பைரவனே போற்றி

    11. ஓம் ஆனந்த பைரவனே போற்றி
    12. ஓம் ஆலயக்காவலனே போற்றி
    13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
    14. ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி
    15. ஓம் உக்ர பைரவனே போற்றி

    16. ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
    17. ஓம் உதிரம் குடித்தவனே போற்றி
    18. ஓம் உன்மத்த பைரவனே போற்றி
    19. ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
    20. ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி

    21. ஓம் எல்லை தேவனே போற்றி
    22. ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
    23. ஓம் கபாலதாரியே போற்றி
    24. ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
    25. ஓம் கர்வ பங்கனே போற்றி

    26. ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
    27. ஓம் கதாயுதனே போற்றி
    28. ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி
    29. ஓம் கருமேக நிறனே போற்றி
    30. ஓம் கட்வாங்க தாரியே போற்றி

    31. ஓம் களவைக் குலைப்போனே போற்றி
    32. ஓம் கருணாமூர்த்தியே போற்றி
    33. ஓம் கால பைரவனே போற்றி
    34. ஓம் காபாலிகர் தேவனே போற்றி
    35. ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி

    36. ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
    37. ஓம் காசிநாதனே போற்றி
    38. ஓம் காவல்தெய்வமே போற்றி
    39. ஓம் கிரோத பைரவனே போற்றி
    40. ஓம் கொன்றைப்பிரியனே போற்றி

    41. ஓம் சண்ட பைரவனே போற்றி
    42. ஓம் சட்டை நாதனே போற்றி
    43. ஓம் சம்ஹார பைரவனே போற்றி
    44. ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
    45. ஓம் சிவத்தோன்றலே போற்றி

    46. ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி
    47. ஓம் சிக்ஷகனே போற்றி
    48. ஓம் சீர்காழித்தேவனே போற்றி
    49. ஓம் சுடர்ச்சடையனே போற்றி
    50. ஓம் சுதந்திர பைரவனே போற்றி

    51. ஓம் சிவ அம்சனே போற்றி
    52. ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
    53. ஓம் சூலதாரியே போற்றி
    54. ஓம் சூழ்வினை அறுப்பவனே போற்றி
    55. ஓம் செம்மேனியனே போற்றி

    56. ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி
    57. ஓம் தட்சனை அழித்தவனே போற்றி
    58. ஓம் தலங்களின் காவலனே போற்றி
    59. ஓம் தீது அழிப்பவனே போற்றி
    60. ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி

    61. ஓம் தெற்கு நோக்கனே போற்றி
    62. ஓம் தைரியமளிப்பவனே போற்றி
    63. ஓம் நவரச ரூபனே போற்றி
    64. ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி
    65. ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி

    66. ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
    67. ஓம் நாய் வாகனனே போற்றி
    68. ஓம் நாடியருள்வோனே போற்றி
    69. ஓம் நிமலனே போற்றி
    70. ஓம் நிர்வாணனே போற்றி

    71. ஓம் நிறைவளிப்பவனே போற்றி
    72. ஓம் நின்றருள்வோனே போற்றி
    73. ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
    74. ஓம் பகையளிப்பவனே போற்றி
    75. ஓம் பரசு ஏந்தியவனே போற்றி

    76. ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி
    77. ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி
    78. ஓம் பால பைரவனே போற்றி
    79. ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி
    80. ஓம் பிரளயகாலனே போற்றி

    81. ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி
    82. ஓம் பூஷண பைரவனே போற்றி
    83. ஓம் பூதங்களின் நாதனே போற்றி
    84. ஓம் பெரியவனே போற்றி
    85. ஓம் பைராகியர் நாதனே போற்றி

    86. ஓம் மல நாசகனே போற்றி
    87. ஓம் மகோதரனே போற்றி
    88. ஓம் மகா பைரவனே போற்றி
    89. ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி
    90. ஓம் மகா குண்டலனே போற்றி

    91. ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
    92. ஓம் முக்கண்ணனே போற்றி
    93. ஓம் முக்தியருள்வோனே போற்றி
    94. ஓம் முனீஸ்வரனே போற்றி
    95. ஓம் மூலமூர்த்தியே போற்றி

    96. ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
    97. ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
    98. ஓம் ருத்ரனே போற்றி
    99. ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
    100. ஓம் வடுக பைரவனே போற்றி

    101. ஓம் வடுகூர் நாதனே போற்றி
    102. ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி
    103. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
    104. ஓம் வாரணாசி வேந்தே போற்றி
    105. ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி

    106. ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
    107. ஓம் விபீஷண பைரவனே போற்றி
    108. ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி! 
    மாலை அணிந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த வழி நடைசரணத்தை தினமும் பாடி வழிபாடு செய்ய வேண்டும்.
    சுவாமியே........ அய்யப்போ     
    அய்யப்போ..... சுவாமியே
    சுவாமி சரணம்..... அய்யப்ப சரணம்
    அய்யப்ப சரணம்.... சுவாமி சரணம்
    தேவன் சரணம்..... தேவி சரணம்
    தேவி சரணம்..... தேவன் சரணம்
    ஈஸ்வரன் சரணம்.... ஈஸ்வரி சரணம்
    ஈஸ்வரி சரணம்.... ஈஸ்வரன் சரணம்
    பகவான் சரணம்.... பகவதி சரணம்
    பகவதி சரணம்... பகவான் சரணம்
    சங்கரன் சரணம்.... சங்கரி சரணம்
    சங்கரி சரணம்.... சங்கரன் சரணம்
    பள்ளிக்கட்டு.... சபரிமலைக்கு
    சபரிமலைக்கு.... பள்ளிக்கட்டு
    கல்லும் முள்ளும்...காலுக்கு மெத்தை
    காலுக்கு மெத்தை... கல்லும் முள்ளும்
    குன்டும் குழியும்... கண்ணுக்கு வெளிச்சம்
    கண்ணுக்கு வெளிச்சம்... குன்டும் குழியும்
    இருமுடிக்கட்டு...... சபரிமலைக்கு
    சபரிமலைக்கு.... இருமுடிக்கட்டு
    கட்டும் கட்டு.... சபரிமலைக்கு
    சபரிமலைக்கு...... கட்டும் கட்டு
    யாரை காண.... சுவாமியை காண
    சுவாமியை கண்டால்... மோக்ஷம் கிட்டும்
    எப்போ கிட்டும்... இப்போ கிட்டும்
    தேக பலம் தா... பாத பலம் தா
    பாத பலம் தா... தேக பலம் தா
    ஆத்மா பலம் தா... மனோ பலம் தா
    மனோ பலம் தா.. ஆத்மா பலம் தா
    நெய் அபிஷேகம்.... சுவாமிக்கே
    சுவாமிக்கே... நெய் அபிஷேகம்
    பன்னீர் அபிஷேகம்..... சுவாமிக்கே
    சுவாமிக்கே... பன்னீர் அபிஷேகம்
    அவலும் மலரும்...... சுவாமிக்கே
    சுவாமிக்கே... அவலும் மலரும்
    சுவாமி பாதம்... ஐயப்பன் பாதம்
    ஐயப்பன் பாதம்... சுவாமி பாதம்
    தேவன் பாதம்... தேவி பாதம்
    தேவி பாதம்... தேவன் பாதம்
    ஈஸ்வரன் பாதம்... ஈஸ்வரி பாதம்
    ஈஸ்வரி பாதம்... ஈஸ்வரன் பாதம்
    சுவாமி திந்தக்க தோம் தோம்..... அய்யப்ப் திந்தக்க தோம் தோம்.. 
    பெருமாளுக்கு உகந்த திதி ஏகாதசி. இந்த துதிகளை ஏகாதசி அன்று மட்டுமின்றி சனிக்கிழமைகளிலும் சொல்லி வழிபாடு செய்தால் பெருமாளின் பூரண அருள் கிடைக்கும்.
    பெருமாளுக்கு உகந்த திதி ஏகாதசி. இந்த திதியில் விரதம் இருப்பவர்களுக்கு பெருமாளின் பூரண அருள் கிடைப்பதுடன், அவன் மார்பில் நீங்காமல் உறைந்து நிற்கும், திருமகளின் அருளும் கிடைக்கும். இந்த துதிகளை ஏகாதசி அன்று மட்டுமின்றி சனிக்கிழமைகளிலும் சொல்லி வரலாம்.

    ஓம் கேசவாயநம,

    ஓம் நாராயணாயநம,

    ஓம் மாதவாயநம,

    ஓம் கோவிந்தாயநம,

    ஓம் விஷ்ணுவேநம,
    விபத்து, எதிரிகள் தொல்லை போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    விபத்து, எதிரிகள் தொல்லை போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    1. ச்ருணு தேவி ப்ரவக்ஷ்யாமி கவசம் ஸர்வஸித்திதம்
    படித்தவா பாடயித்வா சநரோ முச்யேத ஸங்கடாத்

    2. அஜ்ஞாத்வா கவசம் தேவி துர்கா மந்த்ரம் சயோஜயேத்
    ஸநாப்நோதி பலம் தஸ்ய பாஞ்ச நரகம் வ்ரஜேத்

    3. உமாதேவீ சிர: பாது லலாடே சூலதாரிணீ
    சக்ஷúஷீகேசரீ பாது கர்ணௌ சத்வதர வாஸிநீ

    4. ஸுகந்தா நாஸிகே பாது வத நம் ஸர்வதாரிணீ
    ஜிஹ்வாஞ்ச சண்டிகாதேவீக்ரீவாம் ஸெளபத்ரிகாததா

    5. அசோக வாஸிநீ சேதோ த்வெள பாஹூ வஜ்ரதாரிணீ
    ஹ்ருதயம் லலிதா தேவீ உதரம் ஸிம்ஹவாஹிநீ

    6. கடிம்பகவதீ தேவீ த்வாவூரு விந்த்ய வாஸிநீ
    மஹா பலாச ஜங்க்வே த்தே பாதௌ பூதவாஸிநீ

    7. ஏவம் ஸ்திதாஸி தேவி த்வம்த்ரைலோக்யேரக்ஷணாத்மிகா
    ரக்ஷமாம் ஸர்வகாத்ரேஷுதுர்கே தேவீ நமோஸ்துதே.
    சித்தர்களுக்கு உகந்த காயத்ரி மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்து வந்தால் நம் துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும். சித்தர்களின் காயத்ரி மந்திரங்களை பார்க்கலாம்.
    அகஸ்தியர் (ஞானம் உண்டாக)

    ஓம் அகஸ்தீஸ்வராய வித்மஹே
    பொதிகை சஞ்சராய தீமஹி
    தன்னோ ஞானகுரு ப்ரசோதயாத்

    கருவூரார் (ஆயுள் தீர்க்கம் பெற)


    ஓம் ராஜமூர்த்யா வித்மஹே
    சௌபாக்ய ரத்நாய தீமஹி
    தன்னோ வாதகாயை கருவூர்சித்த ப்ரசோதயாத்

    காலங்கிநாதர்

    ஓம் வாலை உபாசாய வித்மஹே
    புவனேஸ்வரி சிஷ்யா தீமஹி
    தன்னோ காலங்கிநாத ப்ரசோதயாத்

    திருமூலர் (தியான யோகம் பெற)

    ஓம் ககன சித்ராய வித்மஹே
    பிரம்மசொரூபிணே தீமஹி
    தன்னோ திருமூலராய ப்ரசோதயாத்

    பதஞ்சலி (யோகங்கள் சித்தி அடைய)

    ஓம் சிவதத்வாய வித்மஹே
    யோகாந்தராய தீமஹி
    தன்னோ பதஞ்சலிகுரு ப்ரசோதயாத்

    புண்ணாக்கீசர்


    ஓம் ஈசத்வாய ச வித்மஹே
    ரணனாவாய தீமஹி
    தன்னோ முக்தி புண்ணாகீ ப்ரசோதயாத்

    சுந்தரானந்தர் (சகல காரியங்களும் சித்தி பெற)

    ஓம் ஸ்ரீ வல்லபாய வித்மஹே
    ஸ்ரீ மீனாக்ஷி பதிவால் தீமஹி
    தன்னோ சுந்தரானந்த ப்ரசோதயாத்

    போகர்

    ஓம் நவபாஷாவைகராய வித்மஹே
    மன்மதரூபாய தீமஹி
    தன்னோ பிரபஞ்ச சஞ்சார
    சீனபதிர்ஷி ப்ரசோதயாத்

    பைரவர் (அஷ்ட சித்திகளை பெற)

    ஓம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய வித்மஹே
    க்ஷத்ர பாலாய தீமஹி
    தன்னோ பைரவ ப்ரசோதயாத்

    ஓம் திகம்பராய வித்மஹே
    தீர்கசிச்நாய தீமஹி
    தன்னோ பைரவ ப்ரசோதயாத்

    ஓம் ஸ்வாநத்வஜாய வித்மஹே
    சூல ஹஸ்தாய தீமஹி
    தன்னோ பைரவஹ் ப்ரசோதயாத்
    ஆஞ்சநேயரை பூரண பிரம்மச்சரியத்துடன் உபாசிப்பதால் எல்லா நலன்களும் உண்டாகும். பில்லி, ஏவல் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
    நிஷ்காம்ய பக்தி யோகத்தின் மூர்த்தமாகத் திகழ்பவர் ஸ்ரீஆஞ்சநேயர். இந்தக் கலியுகத்துக்குப் பிரம்மாவாக விளங்குபவர். ஆஞ்சநேயரை பூரண பிரம்மச்சரியத்துடன் இவரை உபாசிப்பதால் எல்லா நலன்களும் உண்டாகும். பில்லி, ஏவல் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

    ஓம் பராபிசார சமனோ
    துக்கக்னோ பக்த மோக்ஷத
    நவத்வார புராதாரோ
    நவத்வார நிகேதனம்
    வாராகி பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வாராகிக்கு உகந்த மந்திரங்களை பார்க்கலாம்.
    பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.

    தியான சுலோகம்

    முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
    கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

    மந்திரம்


    ஓம் வாம் வாராஹி நம:
    ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

    காயத்ரி மந்திரம்

    ஓம் ச்யாமளாயை வித்மஹே
    ஹல ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
    கணவன், மனைவி சேர்ந்து வாழவும், திருமணத் தடைகள் நீங்கவும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படவும் ஸ்ரீ துர்காதேவி மந்திரம் எனும் இந்த ஸ்லோகம் மிகவும் சிறந்தது.
    கணவன், மனைவி சேர்ந்து வாழவும், திருமணத் தடைகள் நீங்கவும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படவும் ஸ்ரீ துர்காதேவி மந்திரம் எனும் இந்த ஸ்லோகம் மிகவும் சிறந்தது.

    ச்ருணு தேவி ப்ரவக்ஷ?யாமி கவசம் ஸர்வஸித்திதம்
    படித்தவா பாடயித்வா சநரோ முச்யேத ஸங்கடாத்
    அஜ்ஞாத்வா கவசம் தேவி துர்கா மந்த்ரம் சயோஜயேத்
    ஸநாப்நோதி பலம் தஸ்ய பாஞ்ச நரகம் வ்ரஜேத்
    உமாதேவீ சிர: பாது லலாடே சூலதாரிணீ
    சக்ஷúஷீகேசரீ பாது கர்ணௌ சத்வதர வாஸிநீ
    ஸுகந்தா நாஸிகே பாது வத நம் ஸர்வதாரிணீ
    ஜிஹ்வாஞ்ச சண்டிகாதேவீக்ரீவாம் ஸெளபத்ரிகாததா
    அசோக வாஸிநீ சேதோ த்வெள பாஹூ வஜ்ரதாரிணீ
    ஹ்ருதயம் லலிதா தேவீ உதரம் ஸிம்ஹவாஹிநீ
    கடிம்பகவதீ தேவீ த்வாவூரு விந்த்ய வாஸிநீ
    மஹா பலாச ஜங்க்வே த்தே பாதௌ பூதவாஸிநீ
    ஏவம் ஸ்திதாஸி தேவி த்வம்த்ரைலோக்யேரக்ஷணாத்மிகா
    ரக்ஷமாம் ஸர்வகாத்ரேஷுதுர்கே தேவீ நமோஸ்துதே.
    வெற்றிவேல் முருகனுக்கு உகந்த இந்த போற்றியை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வரலாம்.
    வெற்றிவேல் முருகா கந்தா, வேலவா செந்தில் குமரா
    வேலினை ஏந்தி வந்தோம், விழிகளைத் திறந்து பாராய்
    கொற்றவை புதல்வா பாலா, கோலமயில் ஏறிடும் அழகா,
    கூட்டமாய் காண வந்தோம், குறைகளைத் தீர்க்க வாராய்
    மற்றவை எல்லாம் நாங்கள் , மறந்துன்னைக் காண வந்தோம்
    மயிலோனே கொஞ்சம் எங்கள் மனதோடு பேச வாராய் .
    ஒற்றுமையாக வந்தோம், ஊரோடு சேர்ந்து வந்தோம்
    உன்பதம் காண வந்தோம், ஓடோடி வாராய் கந்தா !
    செந்தூரின் கடலின் ஓரம், சில்லென்ற அலையின் ஈரம்
    தெறித்திடும் அந்த நேரம் , சிதறாதோ நெஞ்சின் பாரம்?.
    சிந்தையில் முருகா உந்தன் சிங்கார முகத்தை நாளும்
    சிந்தித்து கடக்கும் தூரம் சிறுதூரம் ஆகிப் போகும்
    வெந்திடும் வெயிலின் அனலும் வாட்டிடும் பனியின் குளிரும்
    வேலனே உன்னைக் காணும் வேட்கையில் மறைந்தே போகும்.
    வந்ததுயர் எல்லாம் உந்தன் வாசலில் வந்து சொன்னால்
    வான்கதிர் முன்னே பனியாய் வழியின்றி உருகி ஓடும்.
    கடமைகள் ஆற்ற வில்லை, காசுபணம் பொருட்டே இல்லை
    கந்தனே உன்னைக் காண, காலங்கள்
    பார்க்கவில்லை .
    நடப்பது நடக்கட்டும் என்று நடக்கிறோம் உன்னைக் காண ,
    ஞானவேல் காட்டும் பாதை, நம்பாதை என்றே தோண.
    கடம்பனே என்று சொன்னோம் கால்வலி தோணவில்லை
    கதிர்வடி வேலா என்றோம், கடப்பதும் தூரம் இல்லை .
    கடலோரம் கோயில் கொண்ட கடவுளே செந்தூர் முருகா
    காலங்கள் தோறும் உந்தன் காலடி பணிந்தோம் வாராய்.
    வள்ளிமேல் வைத்த காதல் விழிகளால் நோக்க வேண்டும்.
    வஞ்சகன் சூரனைக் கொன்ற கரங்களால் காக்க வேண்டும்
    துள்ளிவரும் வேலைக் கொண்டு துயரங்கள் ஓட்ட வேண்டும்,
    தோகைமயில் ஏறி வந்து , தூயமுகம் காட்ட வேண்டும்.
    உள்ளத்தில் தெளிவு வேண்டும், உடலினில் உறுதி வேண்டும்.
    உன்நாமம் சொல்லிச் சொல்லி ஊழ்வினை தாண்ட வேண்டும்.
    வள்ளலே செந்தூர் முருகா, வருகிறோம் உன்னை நோக்கி
    வளமாக்கு எங்கள் வாழ்வை, வருகின்ற தடைகள் நீக்கி .
    முப்புரம் எரித்த அப்பன் மும்மலம் எரிக்க வேண்டும்.
    மூவடி பெற்ற மாமன் , முன்னின்று காக்க வேண்டும்.
    தொப்பையார் அண்ணன் துணையால் தொட்டது துலங்க வேண்டும்
    துர்க்கையாம் உந்தன் அன்னை, துணையாகி நிற்க வேண்டும்
    அப்பனே உன்னி டத்தில் அடக்கமாய் கேட்ட பாடம்
    அகந்தையால் பிரம்மன் அன்று அகப்பட்டு உணர்ந்த பாடம்
    சுப்பிர மணியா எனக்கு சொல்லியே ஆக வேண்டும்
    சூழ்ந்திடும் வினைகள் எல்லாம் சொல்லாமல் போக வேண்டும்.
    திரைகடல் மணலைப் போலே தீராத செல்வம் வேண்டும்.
    தேடிப்போய் தர்மம் செய்து, தீவினை போக்க வேண்டும்.
    கரைதேடிக் களைத்துப் போகா, கடல்அலை போல நானும்
    காலங்கள் தோறும் உந்தன் கருணையைப் பாட வேண்டும் .
    இரைதேடி தேடித் தேடி எஞ்சியது ஒன்றும் இல்லை .
    எத்தனை காலம் இன்னும் ஏங்கிட வைப்பாய் அய்யா ?
    நரைகூடிக் கிழடாய் ஆகி நரம்பெலாம் தளரும் முன்னே,
    நான்கொண்ட கடமை தீர்க்க நல்லருள் செய்வாய் அய்யா.
    தீயாகி காற்றாய் மண்ணாய், திரைகடல் நீராய் விண்ணாய்
    திசையெங்கும் தெரிவ தெல்லாம், திருச்செந்தூர் முருகா நீயே
    ஓயாமல் இரையும் கடலின், ஒலியினில் முருகா உந்தன்
    ஓமென்னும் மந்திரம் தான் உண்மையாய் கேட்குதையா .
    வாயார பாடும் தமிழின் வார்த்தைகள் எல்லாம் உந்தன்
    வடிவத்தைக் கண்டு சொக்கி, வாய்பொத்தி நிற்குதையா .
    தாயாக தந்தை குருவாய் தலைவனாய் உனையே எண்ணி
    தஞ்சமென வந்தோம் எம்மைத் தாங்கிட வேண்டுமையா .
    நாவினில் நீயே தந்த நற்றமிழ் கவிதை உண்டு.
    நடக்கின்ற பாதை தோறும் ஞானவேல் ஒளியும் உண்டு.
    ஆவியில் கலந்த அப்பன் அஞ்செழுத்து மந்திரம் உண்டு
    அஞ்சாதே என்று சொல்லும் அன்னையின் சக்தி உண்டு.
    கோவிந்த மாமன் பாதம் கூவி நான் தொழுவதுண்டு
    கோயில்கள் பலவும் சென்று கும்பிட்டு அழுவதுண்டு
    பூவினில் உறைவாள் அருள்தான் போதாத குறையும் உண்டு.
    பொன்மகள் மாமியிடம் நீ போய்ச் சொன்னால் புண்ணியம் உண்டு.
    இரும்பென தேகம் வேண்டும் இளகிடும் இதயம் வேண்டும்
    இருக்கின்ற காலம் வரையில் இடரிலா வாழ்க்கை வேண்டும்
    அரும்பிடும் மலரின் இதழாய் அணைக்கின்ற சுற்றம் வேண்டும்.
    அகிலமே எதிர்க்கும் போதும் அகலாத நட்பு வேண்டும் .
    கரும்பென இனிக்கும் தமிழின் கற்கண்டு சொற்கள் வேண்டும்
    கந்தாஉனைப் பாடும் பாடல் காலத்தை வெல்ல வேண்டும்
    வரும்போது மரணம் தன்னை வரவேற்கும் உள்ளம் வேண்டும்
    வையத்தில் மற்றோர் பிறவி வாராத வரமும் வேண்டும்.
    எந்தையே இறைவா போற்றி எனையாளும் தலைவா போற்றி.
    ஈசனின் மைந்தா போற்றி இடர்களைக் களைவாய் போற்றி
    கந்தனே கடம்பா போற்றி காத்திட வருவாய் போற்றி
    கணபதி தமையா போற்றி கவலைகள் தீர்ப்பாய் போற்றி.
    சுந்தர வடிவே போற்றி சுகமெலாம் தருவாய் போற்றி
    சூரனை அழித்தாய் போற்றி துயரங்கள் அறுப்பாய் போற்றி.
    செந்தில்வேல் குமரா போற்றி சிந்தையில் உறைவாய் போற்றி
    சேவற்கொடி உடையாய் போற்றி
    சேவடி பணிந்தேன் போற்றி..
    முருகாசரணம்...

    ×