என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    இந்த ஸ்லோகத்தை செவ்வாய், வெள்ளி, ஞாயிற்று கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கையம்மன் சன்னதியில் சொல்லி தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேணடும்.
    இராகுபகவான் தோஷம் இருந்தால் அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம் இராகுபகவானின் அமைப்பு சரியாக இருந்தால் தந்தைவழி சொத்துக்கள் கைகூடி வரும் இல்லாவிட்டால் இழுபறியாகும்.

    திருமணத் தடை குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தடை பெயர் புகழுக்கு களங்கம் ஏற்படுவது எதிர்பாராத நஷ்டம் மனவிரக்தி அடிக்கடி இடமாற்றம் வீண்பழி சுமத்தல் குடும்பப் பிரிவு என பொதுவான பிரச்னைகள் வரும் உடல் நலக் கோளாறுகள் ஏற்படும். ஜாதகர் மீது வழக்குகள் தொடரப்படும் இராஜதண்டனை என்னும் பயம் இருந்து வரும். சொந்த வீட்டை விட்டு ஒட்டி விடும் மரண பயம் ஏற்படும்.

    கஷ்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து வரும். இராகுபகவான் தோஷம் என்னும் சர்ப்ப தோஷம் ஏற்பட்டால் நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் துர்க்கையம்மன் ஆகும்.

    அரவெனும் இராகு ஐயனே போற்றி
    கரவாதருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
    ஆகவருள்புரி அனைத்திலும் வெற்றி
    இராகுகனியே ரம்பா போற்றி.
    வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு
    அமுதம் ஈயப் போகுமக் காலை
    யுன்றன் புணர்ப்பினால் சிரமே அற்றுப்
    பாகுசேர் மொழியாள் பங்கன் பரன்னகியல்
    மீண்டும் பெற்றஇராகுவே உனைத்துதிப்பென்
    ரட்சிப்பாய் ரட்சிப்பாயே .
    தண்மதி விழுங்கிய ராகுவே போற்றி
    துன்மதி நினைப்பினை அறுப்பாய் போற்றி
    என்மதி துலங்கிட முயல்வாய் போற்றி
    இத்துதியை காரடையான் நோன்பன்றும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் பாராயணம் செய்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிட்டும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
    ஓம்கார பூர்விகே தேவி வீணாபுஸ்தக தாரிணி
    வேதமாதா நமஸ்துப்யம் அவைதவ்யம் ப்ரயச்சமே.
    பதிவ்ரதே மஹாபாகே பர்துஸ்ச ப்ரியவாதினி
    அவைதவ்யம் ஸௌபாக்யம்
    தேஹித்வம் மம ஸுவ்ருதே
    புத்ரான் பௌத்ராம்ஸ்ச ஸௌக்யம்
    ஸௌமங்கல்யம் ச தேஹிமே.

    பொதுப் பொருள்:

    தனது பெயருக்கு முன் ஓங்காரத்தை உடையவளும், வீணை, புஸ்தகம் இவைகளை தரித்துக் கொண்டிருப்பவளும், வேதங்களுக்குத் தாயுமான காயத்ரீ எனும் ஸாவித்ரி தேவீ. தங்களுக்கு நமஸ்காரம். கணவனை விட்டுப் பிரியாதிருத்தல் எனும் தீர்க்க சுமங்கலி வரத்தை தாங்கள் எனக்கு அருள வேண்டும்.

    பதிவ்ரதையும் மிகுந்த பாக்யசாலியும், பர்தாவிற்குப் பிரியமான சொல் சொல்கிறவளும், பக்தர்களை ரக்ஷிப்பதையே விரதமாகக் கொண்டவளும் ஆன ஹே தேவி! என்னை விதவை ஆகாதவளாகச் செய்ய வேண்டும்.
    தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கு ஏற்றும் போது கீழே கொடுப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும். கஷ்டம் தீரும்.
    ஓம் சிவாய நம
    ஓம் சிவசக்தியே நம
    ஓம் இச்சா சக்தியே நம
    ஓம் கிரியாசக்தியே நம
    ஓம் சொர்ண சொரூபியே நம
    ஓம் ஜோதி லக்ஷமியே நம
    ஓம் தீப லக்ஷமியே நம
    ஓம் மஹா லக்ஷமியே நம
    ஓம் தன லக்ஷமியே நம
    ஓம் தான்ய லக்ஷமியே நம
    ஓம் தைர்ய லக்ஷமியே நம
    ஓம் வீர லக்ஷமியே நம
    ஓம் விஜய லக்ஷமியே நம
    ஓம் வித்யா லக்ஷமியே நம
    ஓம் ஜெய லக்ஷமியே நம
    ஓம் வர லக்ஷமியே நம
    ஓம் கஜ லக்ஷமியே நம
    ஓம் காம வல்லியே நம
    ஓம் காமாட்சி சுந்தரியே நம
    ஓம் சுப லக்ஷமியே நம
    ஓம் ராஜ லக்ஷமியே நம
    ஓம் கிருஹ லக்ஷமியே நம
    ஓம் சித்த லக்ஷமியே நம
    ஓம் சீதா லக்ஷமியே நம
    ஓம் திரிபுர லக்ஷமியே நம
    ஓம் சர்வமங்கள காரணியே நம
    ஓம் சர்வ துக்க நிவாரணியே நம
    ஓம் சர்வாங்க சுந்தரியே நம
    ஓம் சௌபாக்ய லக்ஷமியே நம
    ஓம் நவக்கிரஹ தாயினே நம
    ஓம் அண்டர் நாயகியே நம
    ஓம் அலங்கார நாயகியே நம
    ஓம் ஆனந்த சொரூபியே நம
    ஓம் அகிலாண்ட நாயகியே நம
    ஓம் பிரம்மாண்ட நாயகியே நம

    இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள பைரவ காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நவகிரகங்களால் ஏற்படும் காள சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை நிவர்த்தி ஆகும்.
    நவகிரகங்களால் ஏற்படும் காள சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை பைரவரை வழிபட நிவர்த்தி ஆகும். அஷ்டமி திதியில் அஷ்ட லஷ்மிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். ஆகையால் வெள்ளிக்கிழமையில் அஷ்டமி வருகையில் பைரவரை வழிபட லஷ்மி கடாட்சம் சித்திக்கும் என்பது நம்பிக்கை.

    ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
    சூல ஹஸ்தாய தீமஹி
    தன்னோ பைரவ ப்ரசோதயாத்.
    இந்த காயத்ரியை அஷ்டமி
    வழிபாடு தினத்தில் 108 முறை சொல்லலாம்.

    ஸ்லோகம் :

    ஓம் கால காலாய வித்மஹே!
    காலஹஸ்தாய தீமஹி
    தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத்
    நாகதோஷம் (ராகு - கேது தோஷம்) உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வர நாகதோஷம் நீங்கும்.
    ஓம் ரூபப் பிரபவம் நமஹ;
    ஓம் சாரும் கேவும் நமஹ;
    ஓம் சரவும் பரவும் நமஹ;
    ஓம் நய்யும் மெய்யும் நமஹ;
    ஓம் ஜெகமும் புரமும் நமஹ;
    ஓம் காளத்தி மேளத்தி நமஹ;
    ஓம் ஜாலும் மேலும் நமஹ;
    ஓம் நகுடத்தி பெகுடத்தி நமஹ;
    ஓம் சரகத்தி பாபத்தி நமஹ;
    ஓம் சரசாலி பிரசாலி நமஹ;
    ஓம் ஓம் ஓம்!!

    நாகதோஷம் உள்ளவர்கள் இந்த மந்திரத்தை108 முறை ஜபித்து வர நாகதோஷம் நீங்கும்.
    சக்தி வாய்ந்ததாக விளங்கும் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத தீய சக்திகளிடம் இருந்தும் பாதுகாக்கும்.
    ஸ்ரீ சுதர்சன சக்கர ரக்ஷா மந்திரம் :

    ஓம் நமோ சுதர்சன சக்ராய |
    ஸ்மரண மாத்ரேண ப்ரகடய ப்ரகடய |
    த்வம் ஸ்வரூபம் மம தர்சய தர்சய |
    மம சர்வத்ர ரக்ஷய ரக்ஷய ஸ்வாஹா ||      

    மஹாரக்ஷையாக, சக்தி வாய்ந்ததாக விளங்கும் இந்த மந்திரத்தைச் சித்தி செய்யும் முறை மிக எளிது. ஒரு சூரிய அல்லது சந்திர கிரகணத்தன்று விளக்கேற்றி, ஊதுவத்தி ஏற்றி வைத்து 1008 தடவை ஜெபிக்கச் சித்தியாகும். பின்னர் தேவையான போது 3 தடவை ஜெபிக்க எந்தவிதமான ஆபத்துக்களில் இருந்தும், கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத தீய சக்திகளிடம் இருந்தும் பாதுகாக்கும்.

    சைவ உணவு உண்பவர்கள் மட்டும் இம்மந்திரத்தை ஜெபிக்கவும்.உங்களையும் வசிப்பிடத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.அல்லது ஏதேனும் விஷ்ணு ஆலயத்தில் வைத்து ஜெபிக்கலாம்.
    தினமும் அல்லது பிரதோஷம், சிவராத்திரி, சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் சொல்ல வேண்டிய சிவ ஸ்துதியை பார்க்கலாம்.
    மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே!
    தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே!

    பாசம் ஆம் பற்று அறுத்து, பாரிக்கும் ஆரியனே!
    நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,
    பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!

    ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
    ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!

    நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!
    இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!

    அன்பருக்கு அன்பனே! யாவையும் ஆய், அல்லையும் ஆம்
    சோதியனே! துன் இருளே! தோன்றாப் பெருமையனே!

    ஆதியனே! அந்தம், நடு, ஆகி, அல்லானே!
    ஈர்த்து என்னை, ஆட்கொண்ட எந்தை பெருமானே!

    கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின்
    நோக்கு அரிய நோக்கே! நுணுக்கு அரிய நுண் உணர்வே!

    போக்கும், வரவும், புணர்வும், இலாப் புண்ணியனே!
    காக்கும் எம் காவலனே! காண்பு அரிய பேர் ஒளியே!

    ஆற்று இன்ப வெள்ளமே! அத்தா! மிக்காய்! நின்ற
    தோற்றச் சுடர் ஒளி ஆய், சொல்லாத நுண் உணர்வு ஆய்,

    மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து, அறிவு ஆம்
    தேற்றனே! தேற்றத் தெளிவே! என் சிந்தனையுள்

    ஊற்று ஆன உண் ஆர் அமுதே! உடையானே! நின் திரு கமல பாதங்கள் போற்றி !
    உலகெல்லாம் காக்கும் திருவடி தாள் போற்றி !
    சிவபெருமானின் சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் புது சக்தி பெற்று மரண பயம் நீங்கப் பெறுவர் என்பது ஐதீகம்.
    சிவபெருமானின் சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் புது சக்தி பெற்று மரண பயம் நீங்கப் பெறுவர் என்பது ஐதீகம். சிவனை ஆராதிப்பதும் பூஜிப்பதும் பல நன்மைகளை கொண்டு வரும்.

    நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய
    மஹாதேவாய த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய
    த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய
    நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய
    ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம.

    சிங் சிங் சிவாய ஓம் எனஜபித்துவந்தால் முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும்.
    ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என சொன்னால் வியாபாரம் நன்றாக நடக்கும்.

    லீங்க்ஷும் சிவாய நம என ஜபித்தால் பெண்கள் வசியம் உண்டாகும்.
    சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால் அரச போகம் கிட்டும்.மந்திர ஜபம் பற்றி சித்தர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

    பண கஷ்டம், தொழில் நஷ்டம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் நிரந்தரமாக பணபிரச்சனைகள் தீரும்.
    ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்

    ஸ்ரீ தனவர்ஷிணி லக்ஷ்மி மந்திரம்

    பிரயோக முறை :-

    1. ஏதேனும் ஒரு வளர்பிறை புதன்கிழமை அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்ததில் எழுந்து குளித்து முடித்துப் புத்தாடை அணிந்து மஞ்சள் நிறத் துணி விரித்து அதில் சிறிது பன்னீர் தெளித்து அதன் மீது கிழக்கு நோக்கி அமரவும்.

    2. நெய் விளக்கேற்றி ஸ்ரீ லக்ஷ்மி யந்திரத்தைக் குங்குமம் மற்றும் பன்னீர் கலந்த நீரால் கழுவி, ஒரு பலகையின் மேல் வெள்ளைத்துணி விரித்து அதில் ஒரு செம்பு அல்லது பித்தளைத் தட்டின் மேல் அந்த யந்திரத்தை வைத்து யந்திரத்திற்கு அட்சதை, குங்குமம், பூக்களால் மூலமந்திரம் 108 தடவை ஜெபித்து அர்ச்சனை செய்யவும்.

    3. வெற்றிலை, பாக்கு, பால், பழங்கள், பாயசம் படைக்கவும்.

    4. பின்னர் வலது உள்ளங்கையில் சிறிது நீர் ஊற்றி ஸ்ரீ லக்ஷ்மி தேவியை மந்திரம் சித்தியாக வேண்டி மூன்று முறை மூலமந்திரம் ஜெபித்து அந்த நீரை அருந்தி துளசி மாலையால் மந்திரம் ஜெபிக்கத் தொடங்கவும்.

    தியான ஸ்லோகம் :-

    ப்ராஹ்மீம் ச வைஷ்ணவீம் பத்ராம் சதுர் புஜாம் ச சதுர்முகீம் |
    த்ரிநேத்ரம் கட்க த்ரிசூல சக்ர கதா தராம் |
    பீதாம்பர தராம் தேவீம் நானாலங்கார பூஷிதாம் |
    தேஜபுஞ்ச தரீம் ஸ்ரேஷ்டம் த்யாயேத் பால குமாரிகாம் ||

    மூலமந்திரம் :

    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தனவர்ஷிணி |
    லக்ஷ்மீர் ஆகச்ச ஆகச்ச |
    மம க்ருஹே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா |

    ஒரு மாதம் கழித்து பூஜைக்கு உபயோகித்த பொருள்களை ஆற்றில் விட்டு விடவும். நாளுக்கு நாள் செல்வம் பெருகத் தொடங்கும்.
    காலையில் கடை திறந்ததும் அல்லது மாலை 6:15 முதல் 6:45 க்குள் இம்மந்திரம் ஜெபித்த நீரை கடையில் தெளிக்க நல்ல பலன்கள் ஏற்படும்.
    இம்மந்திரம் கடை மற்றும் வியாபார ஸ்தலத்திற்கு நாலா திசைகளில் இருந்தும் அதிகமான ஜனங்களை ஈர்த்து வரச்செய்யும். தன வசீகரமும் ஜன வசீகரமும் பெருகும்.

    கடையில் வியாபாரமே இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் மற்றும் தொழில் செய்யும் யாவரும் இம்மந்திரத்தைக் கடை  மற்றும் தொழில் ஸ்தாபனத்தில் அமர்ந்திருக்கும் பொழுது மனதிற்குள் ஜெபித்து வர அதிகமான மக்கள் வரத்துவங்கி தொழில் சிறப்பாக நடைபெறும்.

    இதை என் நண்பர்கள் பலரும் அனுபவித்துப் பலனடைந்திருக்கின்றனர். காலையில் கடை திறந்ததும் இம்மந்திரம் ஜெபித்த நீரை கடையில் தெளிக்க நல்ல பலன்கள் ஏற்படும். அல்லது மாலை 6:15 முதல் 6:45 க்குள் இம்மந்திரம் ஜெபித்து நீரை கடை, தொழிற்சாலை மற்றும் வியாபார ஸ்தலங்களில் தெளித்து வர லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.   

    மந்திரம் :


    ஓம் நமோ பகவதி பத்மா பத்மாவதி |
    ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் பூர்வாய தக்ஷிணாய
    பஸ்சிமாய உத்தராய ஆனுபூரக சர்வே
    ஜன வஸ்யம் குரு ஸ்வாஹா ||
    சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும்.
    சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன.

    சமஸ்கிருதத்தில் "நமஹ" என்றும் தமிழில் "போற்றி" என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது. நாம ஆவளி என்பதற்கு பெயர்களின் வரிசை என்று பொருளாகும். சிவபெருமானின் நூற்றியெட்டு பெயர்களை வரிசைப்படுத்தி பூசையின் பொழுது அர்ச்சனை செய்ய ஏதுவாக இத்தொகுப்பு படைக்கப்பட்டது.

    இத்தொகுப்பானது சிவபெருமான் அஷ்டோத்திர சத நாமாவளி என்றும், சிவ அஷ்டோத்திர சத நாமாவளி என்றும் அறியப்படுகிறது.

    01. ஓம் சிவாய நமஹ
    02. ஓம் மஹேச்வராய நமஹ
    03. ஓம் சம்பவே நமஹ
    04. ஓம் பினாகிநே நமஹ
    05. ஓம் சசிசேகராய நமஹ

    06. ஓம் வாம தேவாய நமஹ
    07. ஓம் விரூபாக்ஷாய நமஹ
    08. ஓம் கபர்தினே நமஹ
    09. ஓம் நீலலோஹிதாய நமஹ
    10. ஓம் சங்கராய நமஹ

    11. ஓம் சூலபாணயே நமஹ
    12. ஓம் கட்வாங்கிநே நமஹ
    13. ஓம் விஷ்ணுவல்லபாய நமஹ
    14. ஓம் சிபி விஷ்டாய நமஹ
    15. ஓம் அம்பிகா நாதாய நமஹ

    16. ஓம் ஸ்ரீ கண்டாய நமஹ
    17. ஓம் பக்த வத்ஸலாய நமஹ
    18. ஓம் பவாய நமஹ
    19. ஓம் சர்வாய நமஹ
    20. ஓம் திரிலோகேசாய நமஹ

    21. ஓம் சிதிகண்டாய நமஹ
    22. ஓம் சிவாப்ரியாய நமஹ
    23. ஓம் உக்ராய நமஹ
    24. ஓம் கபாலிநே நமஹ
    25. ஓம் காமாரயே நமஹ

    26. ஓம் அந்தகாஸுர ஸூதநாய நமஹ
    27. ஓம் கங்காதராய நமஹ
    28. ஓம் லலாடாக்ஷõய நமஹ
    29. ஓம் காலகாளாய நமஹ
    30. ஓம் க்ருபாநிதயே நமஹ

    31. ஓம் பீமாய நமஹ
    32. ஓம் பரசுஹஸ்தாய நமஹ
    33. ஓம் ம்ருகபாணயே நமஹ
    34. ஓம் ஜடாதராய நமஹ
    35. ஓம் கைலாஸவாஸிநே நமஹ

    36. ஓம் கவசிநே நமஹ
    37. ஓம் கடோராய நமஹ
    38. ஓம் திரிபுராந்தகாய நமஹ
    39. ஓம் வ்ருஷாங்காய நமஹ
    40. ஓம் வ்ருஷபாரூடாய நமஹ

    41. ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய நமஹ
    42. ஓம் ஸாமப்ரியாய நமஹ
    43. ஓம் ஸ்வரமயாய நமஹ
    44. ஓம் த்ரயீமூர்த்தயே நமஹ
    45. ஓம் அநீச்வராய நமஹ

    46. ஓம் ஸர்வஜ்ஞாய நமஹ
    47. ஓம் பரமாத்மநே நமஹ
    48. ஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய நமஹ
    49. ஓம் ஹவிஷே நமஹ
    50. ஓம் யக்ஞ மயாய நமஹ

    51. ஓம் ஸோமாய நமஹ
    52. ஓம் பஞ்வக்த்ராய நமஹ
    53. ஓம் ஸதாசிவாய நமஹ
    54. ஓம் விச்வேச்வராய நமஹ
    55. ஓம் வீரபத்ராய நமஹ

    56. ஓம் கணநாதாய நமஹ
    57. ஓம் ப்ரஜாபதயே நமஹ
    58. ஓம் ஹிரண்ய ரேதஸே நமஹ
    59. ஓம் துர்தர்ஷாய நமஹ
    60. ஓம் கிரீசாய நமஹ

    61. ஓம் கிரிசாய நமஹ
    62. ஓம் அநகாய நமஹ
    63. ஓம் புஜங்கபூஷணாய நமஹ
    64. ஓம் பர்க்காய நமஹ
    65. ஓம் கிரிதன்வநே நமஹ

    66. ஓம் கிரிப்ரியாய நமஹ
    67. ஓம் க்ருத்தி வாஸஸே நமஹ
    68. ஓம் புராராதயே நமஹ
    69. ஓம் மகவதே நமஹ
    70. ஓம் ப்ரமதாதிபாய நமஹ

    71. ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நமஹ
    72. ஓம் ஸூக்ஷ்மதனவே நமஹ
    73. ஓம் ஜகத்வ் யாபினே நமஹ
    74. ஓம் ஜகத் குரவே நமஹ
    75. ஓம் வ்யோமகேசாய  நமஹ

    76. ஓம் மஹா ஸேந ஜநகயா நமஹ
    77. ஓம் சாருவிக்ரமாய நமஹ
    78. ஓம் ருத்ராய நமஹ
    79. ஓம் பூதபூதயே நமஹ
    80. ஓம் ஸ்தாணவே நமஹ

    81. ஓம் அஹிர் புதன்யாய நமஹ
    82. ஓம் திகம்பராய நமஹ
    83. ஓம் அஷ்டமூர்த்தயே நமஹ
    84. ஓம் அநேகாத்மநே நமஹ
    85. ஓம் ஸாத்விகாய  நமஹ

    86. ஓம் சுத்த விக்ரஹாய நமஹ
    87. ஓம் சாச்வதாய நமஹ
    88. ஓம் கண்டபரசவே நமஹ
    89. ஓம் அஜாய நமஹ
    90. ஓம் பாசவிமோசகாய நமஹ

    91. ஓம் ம்ருடாய நமஹ
    92. ஓம் பசுபதயே நமஹ
    93. ஓம் தேவாய நமஹ
    94. ஓம் மஹாதேவாய நமஹ
    95. ஓம் அவ்யயாயே நமஹ

    96. ஓம் ஹரயே நமஹ
    97. ஓம் பூஷதந்தபிதே நமஹ
    98. ஓம் அவ்யக்ராய நமஹ
    99. ஓம் பகதேத்ரபிதே நமஹ
    100. ஓம் தக்ஷாத்வரஹராய நமஹ

    101. ஓம் ஹராய நமஹ
    102. ஓம் அவ்யக்தாய நமஹ
    103. ஓம் ஹஸஸ்ராக்ஷாய நமஹ
    104. ஓம் ஸஹஸ்ரபதே நமஹ
    105. ஓம் அபவர்க்கப்ரதாய நமஹ

    106. ஓம் அனந்தாய நமஹ
    107. ஓம் தாரகாய நமஹ
    108. ஓம் பரமேச்வராய நமஹ

    கீழே கொடுக்கப்பட்டுள்ள துதியை தினமும் பாராயணம் செய்தால் அம்பிகையின் திருவருளோடு சரஸ்வதி கடாட்சமும் லட்சுமி கடாட்சமும் சேர்ந்து கிடைக்கும்.
    லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அம்பிகைக்கு இரு புறங்களிலும் லட்சுமியும் சரஸ்வதியும் வீற்றருள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நவமணிமாலை எனும் துதியை தினமும் பாராயணம் செய்தால் அம்பிகையின் திருவருளோடு சரஸ்வதி கடாட்சமும் லட்சுமி கடாட்சமும் சேர்ந்து கிடைக்கும். கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் அருளும் அற்புத துதி இது:

    வாணீம் ஜிதஸுகவாணீமளிகுல
    வேணீம் பவாம்புதித்ரோணீம்
    வீணாஸுகஸிஸுபாணீம்
    நதகீர்வாணீம் நமாமி ஸர்வாணீம்

    வேதரூபியும் இனிமையால் கிளியின் இன்சொல்லை ஜெயித்தவளும் கருவண்டுக் கூட்டம் போன்ற பின்னலை உடையவளும் ஸம்ஸார ஸமுத்திரத்தைக் கடப்பதற்குத் தோணி போன்றவளுமான அம்பிகையே நமஸ்காரம். வீணை, கிளிப்பிள்ளையைக் கைகளில் ஏந்திய சரஸ்வதியினால் வணங்கப்பட்டவளே, பரமசிவனுடைய பத்தினியே, நமஸ்காரம்.



    குவலயதளநீலாங்கீம் குவலயரக்ஷைகதீக்ஷிதாபாங்கீம்
    லோசனவிஜிதகுரங்கீம் மாதங்கீம் நமாமி ஸங்கரார்தாங்கீம்

    நீலோத்பல புஷ்பத்தின் இதழ் போன்ற சரீரத்தை உடையவளே, பூமண்டலத்தை ரட்சிப்பதையே முக்கிய விரதமாகக் கொண்டு, கடைக்கண் பார்வையால் அவ்வாறே அனுக்ரகிப்பவளே நமஸ்காரம். மான்களையும் தன் கண்களின் அழகால் வெட்கப்பட வைத்தவளே, மதங்க மகரிஷியின் புத்திரியே, சங்கரனின் பாதியுடலில் வசிப்பவளே, அம்பிகையே, நமஸ்காரம்.

    கமலாகமலஜகாந்தா கரஸாரஸ
    தத்தகாந்த கரகமலாம்
    கரயுகலவித்ருதகமலாம் விமலாம்
    கமலாங்கசூட ஸகலகலாம்

    லட்சுமி, சரஸ்வதி இவர்களின் தாமரைப் பூக்கள் போன்ற கரங்களில் வைக்கப்பட்ட இன்னொரு தாமரை போன்ற தளிர்க் கரங்களை உடையவளே, இரண்டு கைகளிலும் தாமரையைத் தரித்தவளே, நிர்மலமாயிருப்பவளே, சந்திர சூடனான பரமசிவனுடைய சகல வித்யையின் உருவமாக இருப்பவளே, பராசக்தியே நமஸ்காரம்.

    ×