search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slokam"

    எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது எவ்விதத் தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிப்பது நமது வழக்கம்.
    எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது எவ்விதத் தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிப்பது நமது வழக்கம்.

    சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
    ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

    என்று பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும். இது விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ளது.

    எல்லாவிதத் தடைகளும் இடையூறுகளும் நீங்கவும், மறைந்து போகவும் வெள்ளை நிற உடையணிந்து கொண்டிருப்பவரும் நான்கு கரங்களை உடையவரும் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளும், நிலவைப் போன்ற தன்மையுடையவரும், எப்பொழுதும் ஆனந்தமயமாக அருட்காட்சியளிக்கும் விநாயகரைத் தியானிப்போம் என்பது இதன் பொருளாகும்.

    காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

    கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
    கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
    உமாஸுதம் சோக வினாச காரணம்
    நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

    பொருள் : யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.
    சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்று விரும்பும் பெண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகைக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் ஜெபிக்கவும்.
    ஹே சங்கர சமரஹா ப்ரமதாதி
    நாதரி மன்னாத ஸரம்ப சரிசூட
    ஹரதிரிசூலின் சம்போஸுகப்பிரசவ
    கிருத்பவமே தயாளோ
    ஹேமாதவி வனேச
    பாளையமாம் நமஸ்தே

    சுகப்பிரசவம் ஆக இதை 108 முறை ஜெபிக்க வேண்டும்.

    ஹிம்பத் யுத்தரே பார்ஸ்வே
    ஸுரதர நாம யாஷினி
    தஸ்யா ஸ்மரண மாத்ரேணா
    விசல்யா கர்ப்பினிபவேது
    ×