search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rahu bhagavan"

    ராகு தோஷத்தால் அவதிப்படுபவர்கள் தினமும் சில விரத வழிபாடுகளை முறையாக செய்து வந்தால் அதன் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
    தினசரி விரதம் இருந்து துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர வேண்டும். செவ்வாய் கிழமைகளில் விரதம் இருந்து துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்ற வேண்டும்.

    தினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும்.

    துர்க்கைக்கு அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி விரதம் இருந்து வலம் வர வேண்டும். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் விரதம் இருந்து வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.

    ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லி வர வேண்டும்.

    ஒருவரது ஜாதகத்தில் ராகு கிரகம் யோகம் செய்யக்கூடாது என்பார்கள். அவ்வாறு யோகம் செய்யும் போது, மிகப் பெரிய கெடுதலையும் செய்து விடுவார் என்பது பொதுவான கருத்து.
    காரகன் - பிதாமகன்
    தேவதை - பத்திரகாளி
    தானியம் - உளுந்து
    உலோகம் - கருங்கல்
    நிறம் - கறுப்பு

    குணம் - தாமஸம்
    சுபாவம் - குரூரர்
    சுவை - புளிப்பு
    திக்கு - தென் மேற்கு
    உடல் அங்கம் - முழங்கால்

    தாது - இல்லை (நிழல் கிரகம் என்பதால்)
    நோய் - பித்தம்
    பஞ்சபூதம் - ஆகாயம்
    பார்வை நிலை - தான் நின்ற ராசியில் இருந்து 7-ம் இடத்தை முழுமையாகவும், 3, 10 இடங்களை கால் பங்கும், 5,9 ஆகிய இடங்களை அரை பங்கும், 4,8 இடங்களை முக்கால் பங்கும் பார்ப்பார்.

    பாலினம் - பெண்
    உபகிரகம் - வியாதீபாதன்
    ஆட்சி ராசி - இல்லை
    உச்ச ராசி - விருச்சிகம்

    மூலத்திரிகோண ராசி - இல்லை
    நட்பு ராசி - மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம்
    சமமான ராசி - இல்லை
    பகை ராசி - மேஷம், கடகம், சிம்மம்

    நீச்ச ராசி - ரிஷபம்
    திசை ஆண்டுகள் - பதினெட்டு ஆண்டுகள்
    ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - ஒன்றரை ஆண்டுகள்
    நட்பு கிரகங்கள் - சுக்ரன், சனி
    சமமான கிரகங்கள் - புதன், குரு

    பகையான கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்
    அதிகமான பகையான கிரகம் - சூரியன்
    இதர பெயர்கள் - வஞ்சன், நஞ்சன், கரும்பாம்பு
    நட்சத்திரங்கள் - திருவாதிரை, சுவாதி, சதயம் 
    ஒருவரது ஜாதகத்தில் ராகு பலமாக அமைந்தால், பல நாள்பட்ட நோய்கள், கொஞ்சம் கொஞ்சமாக மறையும். இப்போது ராகு பகவானால் உண்டாகும் நோய்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
    ஒருவரது ஜாதகத்தில் ராகு கிரகம் யோகம் செய்யக்கூடாது என்பார்கள். அவ்வாறு யோகம் செய்யும் போது, மிகப் பெரிய கெடுதலையும் செய்து விடுவார் என்பது பொதுவான கருத்து. அதற்கு அனுபவத்திலும் பல உண்மைகள் இருக்கின்றன. ஆனால் நாம் ஜோதிட மருத்துவத்தில் இருந்து விலகி விடுவோம் என்பதைக் கவனத்தில் கொண்டு ராகு செய்யும் யோகம் பற்றி பார்ப்போம்.

    ஒருவரது ஜாதகத்தில் ராகு பலமாக அமைந்தால், பல நாள்பட்ட நோய்கள், கொஞ்சம் கொஞ்சமாக மறையும். எதிர்பாராத வகையில் திடீர் தலைவர், திடீர் உயர் பதவி கிடைக்கும். வெளிநாடுகளுக்கு சென்று வரும் வாய்ப்பு அமையும். ஆபத்தான காடு, மலைகளில் சுற்றிவருவார். கெட்ட நண்பர்கள் மூலமாக தனக்கு சாதகமான காரியங்களை சாதித்துக் கொள்வார். புறம்போக்கு நிலம், அனாதை சொத்துகள் கைக்கு வரும். மாய, மந்திர வித்தைகள் மூலம் நினைத்ததை சாதிப்பார்.

    பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றை கற்றும், கொடூர மிருகங்களை வைத்து வித்தை காட்டியும் மகிழ்வார். நினைத்து பார்க்க முடியாத புதையல் கிடைக்கும். பல கோடி ரூபாய் களுக்கு பினாமியாக மாறுவது அல்லது கீழே கிடந்து எடுப்பது போன்றவை ராகுவால்தான் வாய்க்கும். தந்தை வழி, தாத்தா மற்றும் பாட்டி சொத்துகள் கைக்கு வரும். அந்நிய மொழி, இனத்தவர்களை திருமணம் செய்யும் யோகம், அதன் மூலம் ஆதாயம் பெற வைப்பது ராகு தான்.

    ராகு கிரகம் தரும் நோய்கள்

    நன்கு உயரமான, மெலிந்த ஒல்லியான உடலமைப்புக்கு காரணமானவர் ராகு பகவான். கண்களில் தூசி, துரும்பு பட்டு கண்ணீர் கசிய வைப்பது ராகுவே. மங்கலான பார்வைத் திறன், மருத்துவர்களால் அறியப்படாத புதுவகையான நோய்கள், காற்றில் பரவி வரும் நோய்கள், துஷ்ட கனவுகள், நமது உடலில் பித்த நீர் உற்பத்தியாக வைப்பது போன்ற வேலைகளை ராகு பகவான் தான் செய்கிறார்.

    பேய், பிசாசு, பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றிற்கெல்லாம் பயப்பட செய்வது ராகு தான். விஷப்பூச்சிகள், விஷ வண்டுகள் கடிப்பது, அதனால் உடல் நலக்குறைவு ஏற்படுவது, சிறைவாசம் மூலம் பரவும் தொற்று நோய்கள், திடீர் என்று மனநிலை பாதித்ததுபோல் செய்யக்கூடிய காரியங்கள், விஷப் பாம்புகளுடன் பழகுவது, அவற்றுடன் வாழ்வது, விஷப் பாம்புகள் கடிப்பதன் மூலம் பெரும் துன்பம் அடைந்து உயிரிழப்பது போன்ற செயல்களும் ராகுவால் தான் நடக்கின்றன.

    பிறப்பு உறுப்புகளில் கிருமிகள் தாக்குவது, மூத்த வயதுடைய பெண்ணை பாலுறவு கொள்வதால் உண்டாகும் நோய், மாந்திரீகம், தாந்திரீகம், மாய மந்திரங்களால் உண்டாகும் கெடுதல், மருத்துவ பரிசோதனையில் கண்களுக்கு புலப்படாத நோய்களை வெளிக்காட்டி கொடுப்பது, விஷவாயு, ரசாயன வாயு, செப்டிக் டேங்க் வாயு, கிணறு வெட்டும் போது வெளிப்படும் விஷ வாயு மூலம் உண்டாகும் பாதிப்புகள், கடல் அலைகளில் சிக்கி மூழ்கி இறப்பது, ஒருவருக்கு வந்த கொடிய நோயானது தொற்றாக பரவுவது, பட்டாசு போன்ற ஆயுத கிடங்கு, துப்பாக்கி தொழிற்சாலையில் வேலைக்காரணமாக உண்டாகும் விபத்துகள், எதிர்பாராத விதமாக வாந்தி, மயக்கம், மூச்சு விடுதலில் சிரமம் போன்றவைகளுக்கு காரணமாக இருப்பவர் ராகு தான்.
    ×