search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராகு தோஷத்தால் அவதிப்படுபவர்கள் செய்ய வேண்டிய விரத வழிபாடு
    X

    ராகு தோஷத்தால் அவதிப்படுபவர்கள் செய்ய வேண்டிய விரத வழிபாடு

    ராகு தோஷத்தால் அவதிப்படுபவர்கள் தினமும் சில விரத வழிபாடுகளை முறையாக செய்து வந்தால் அதன் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
    தினசரி விரதம் இருந்து துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர வேண்டும். செவ்வாய் கிழமைகளில் விரதம் இருந்து துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்ற வேண்டும்.

    தினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும்.

    துர்க்கைக்கு அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி விரதம் இருந்து வலம் வர வேண்டும். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் விரதம் இருந்து வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.

    ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லி வர வேண்டும்.

    Next Story
    ×