என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
கும்பகோணம் அருகே உள்ள நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோவிலில் உதய கருடசேவை உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளில் ஒன்றாக கும்பகோணம் அருகே நாதன்கோவில் கிராமத்தில் உள்ள ஜெகநாதபெருமாள் கோவில் உள்ளது. இங்கு பெருமாள் செண்பகவல்லி தாயாருடன் அருள்பாலித்து வருகிறார். பிரம்மன், மார்க்கண்டேயர், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் இங்கு வழிபட்டுள்ளனர்.
நந்திக்கு சாபவிமோசனம் கிடைத்த தலம் என தலபுராணம் கூறுகிறது. இங்கு நந்தி பெயரிலேயே தீர்த்தம் உள்ளது. பஞ்சாயுதபாணியாய் எழுந்தருளி அருள்பாலிக்கும் இக்கோவில் பெருமாள் குறித்து திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்களை பாடி உள்ளார். இங்கு மகாலட்சுமி பிரார்த்தனை செய்து 8 அஷ்டமி விரதம் இருந்து, 8-வது அஷ்டமியில் திருமாலின் திருமார்பில் இணைந்ததாக தலபுராணத்தில் கூறப்பட்டு உள்ளது.
பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை நாளில் உதய கருடசேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று தை அமாவாசையை முன்னிட்டு உதய கருடசேவை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி ஜெகநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
கருட சேவை உற்சவத்தையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து கோபூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து சாமி வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
நந்திக்கு சாபவிமோசனம் கிடைத்த தலம் என தலபுராணம் கூறுகிறது. இங்கு நந்தி பெயரிலேயே தீர்த்தம் உள்ளது. பஞ்சாயுதபாணியாய் எழுந்தருளி அருள்பாலிக்கும் இக்கோவில் பெருமாள் குறித்து திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்களை பாடி உள்ளார். இங்கு மகாலட்சுமி பிரார்த்தனை செய்து 8 அஷ்டமி விரதம் இருந்து, 8-வது அஷ்டமியில் திருமாலின் திருமார்பில் இணைந்ததாக தலபுராணத்தில் கூறப்பட்டு உள்ளது.
பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை நாளில் உதய கருடசேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று தை அமாவாசையை முன்னிட்டு உதய கருடசேவை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி ஜெகநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
கருட சேவை உற்சவத்தையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து கோபூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து சாமி வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
63 நாயன்மார்கள், விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் முருகர் சப்பரங்களிலும், நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி கோவிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளில் உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் தை அமாவாசையையொட்டி பத்ர தீப திருவிழா நடைபெற்றது. இதையொட்டி 3 நாட்களாக காலை, மாலை இரு வேளைகளும் சாமிக்கு சிறப்பு யாகசாலை பூஜைகளும், அதைத்தொடர்ந்து மகா அபிஷேகமும் நடைபெற்றது. நேற்று முன்தினம் சுவாமி சன்னதி மணி மண்டபத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ஏற்றப்படும் தங்க விளக்கு ஏற்றப்பட்டது.
நேற்று காலை சுவாமி சன்னதியில் யாகசாலை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலையில் தங்க விளக்கில் இருந்து சுடர் எடுத்து வரப்பட்டு மகா நந்தி முன்பு 11 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு இருந்த நந்தி விளக்கு ஏற்றப்பட்டு பத்ர தீப விழா நடைபெற்றது. இதையொட்டி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் சன்னதிகளில் 10 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு ஒளி வெள்ளத்தில் கோவில் ஜொலித்தது.
இரவில் 63 நாயன்மார்கள், விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் முருகர் சப்பரங்களிலும், நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி கோவிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளில் உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று காலை சுவாமி சன்னதியில் யாகசாலை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலையில் தங்க விளக்கில் இருந்து சுடர் எடுத்து வரப்பட்டு மகா நந்தி முன்பு 11 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு இருந்த நந்தி விளக்கு ஏற்றப்பட்டு பத்ர தீப விழா நடைபெற்றது. இதையொட்டி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் சன்னதிகளில் 10 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு ஒளி வெள்ளத்தில் கோவில் ஜொலித்தது.
இரவில் 63 நாயன்மார்கள், விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் முருகர் சப்பரங்களிலும், நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி கோவிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளில் உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று தை அமாவாசை என்பதால் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். இதனால் படிப்பாதை, மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகிய இடங்களில் கூட்டம் அலைமோதியது.
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் வருகை தருகின்றனர். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நிகழ்ச்சிகள் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி நடந்தது. அதேவேளையில் பாதயாத்திரையாகவும், அலகுகுத்தியும் ஏராளமான பக்தர்கள் வந்து முருக பெருமானை தரிசனம் செய்தனர்.
இந்தநிலையில் தைப்பூச திருவிழா முடிந்த பின்னரும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அதன்படி நேற்று தை அமாவாசை என்பதால் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். இதனால் படிப்பாதை, மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகிய இடங்களில் கூட்டம் அலைமோதியது.
இதேபோல் பாதயாத்திரை பக்தர்களின் வருகையும் அதிகம் இருந்தது. குறிப்பாக பழனி-பொள்ளாச்சி சாலையில் பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும், அலகுகுத்தியும் பழனிக்கு வந்தனர். முன்னதாக அவர்கள் ரதவீதி, பெரியகடைவீதி, பஸ்நிலையம் வழியாக அடிவாரம் வந்தனர். பின்னர் திருஆவினன்குடி, மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
பழனி முருகன் கோவிலில் தினமும் இரவு தங்கரத புறப்பாடு நடைபெறுகிறது. ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி, தங்கரத புறப்பாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுகின்றனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் 11-ந்தேதி முதல் பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட்டது.
தற்போது கொரோனா பரவல் குறைந்ததையடுத்து பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. நேற்று தை அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இதில் 58 பக்தர்கள் தங்கரத புறப்பாட்டில் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் தைப்பூச திருவிழா முடிந்த பின்னரும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அதன்படி நேற்று தை அமாவாசை என்பதால் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். இதனால் படிப்பாதை, மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகிய இடங்களில் கூட்டம் அலைமோதியது.
இதேபோல் பாதயாத்திரை பக்தர்களின் வருகையும் அதிகம் இருந்தது. குறிப்பாக பழனி-பொள்ளாச்சி சாலையில் பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும், அலகுகுத்தியும் பழனிக்கு வந்தனர். முன்னதாக அவர்கள் ரதவீதி, பெரியகடைவீதி, பஸ்நிலையம் வழியாக அடிவாரம் வந்தனர். பின்னர் திருஆவினன்குடி, மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
பழனி முருகன் கோவிலில் தினமும் இரவு தங்கரத புறப்பாடு நடைபெறுகிறது. ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி, தங்கரத புறப்பாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுகின்றனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் 11-ந்தேதி முதல் பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட்டது.
தற்போது கொரோனா பரவல் குறைந்ததையடுத்து பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. நேற்று தை அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இதில் 58 பக்தர்கள் தங்கரத புறப்பாட்டில் கலந்து கொண்டனர்.
பிப்ரவரி மாதம் 1-ம் தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் 7-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
1-ம் தேதி செவ்வாய் கிழமை :
* திருவோண விரதம்
* வைத்தீஸ்வரன் கோவில் செல்வமுத்துக்குமாரசுவாமி பவனி
* சந்திராஷ்டமம் - மிருகசீருஷம், திருவாதிரை
2-ம் தேதி புதன் கிழமை :
* வாசவி அக்னி பிரவேசம்
* சந்திர தரிசனம்
* தேவமாதா பரிசுத்தமான திருநாள்
* சந்திராஷ்டமம் - திருவாதிரை, புனர்பூசம்
3-ம் தேதி வியாழக்கிழமை :
* சித்தயோகம்
* திருவள்ளூர் வீரராகவர் தொட்டிக்திருமஞ்சனம்
* திருவாவடுதுறை சிவபெருமான புறப்பாடு
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை
* சந்திராஷ்டமம்- புனர்பூசம், பூசம்
4-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* சதுர்த்தி விரதம்
* முகுந்த சதுர்த்தி
* நெல்லையப்பர் காந்தியம்மனுக்கு திருமஞ்சனம்
* சந்திராஷ்டமம் - பூசம், ஆயில்யம்
5-ம் தேதி சனிக்கிழமை :
* வசந்த பஞ்சமி
* சூரியநயினார் கோவில், சிவபெருமான் புறப்படு
* சித்தயோகம்
* திருமெய்யம் ஆண்டாள் பிரியாவிடை உற்சவம்
* சந்திராஷ்டமம் - ஆயில்யம், மகம்
6-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* வளர்பிறை பஞ்சமி
* சஷ்டி விரதம்
* சுபமுகூர்த்த நாள்
* செடி, கொடிகள் வைக்க நன்று
* சந்திராஷ்டமம் - மகம், பூசம்
7-ம் தேதி திங்கள் கிழமை :
* கல்லிடைக்குறிச்சி சிவபெருமான் பவனி
* திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள்
* திருமெய்யம் ஆண்டாள் புறப்பாடு
* மதுரை கூடலழகர் உற்சவாரம்பம்
* சிறிய நகசு
* சந்திராஷ்டமம் - பூரம், உத்திரம்
* திருவோண விரதம்
* வைத்தீஸ்வரன் கோவில் செல்வமுத்துக்குமாரசுவாமி பவனி
* சந்திராஷ்டமம் - மிருகசீருஷம், திருவாதிரை
2-ம் தேதி புதன் கிழமை :
* வாசவி அக்னி பிரவேசம்
* சந்திர தரிசனம்
* தேவமாதா பரிசுத்தமான திருநாள்
* சந்திராஷ்டமம் - திருவாதிரை, புனர்பூசம்
3-ம் தேதி வியாழக்கிழமை :
* சித்தயோகம்
* திருவள்ளூர் வீரராகவர் தொட்டிக்திருமஞ்சனம்
* திருவாவடுதுறை சிவபெருமான புறப்பாடு
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை
* சந்திராஷ்டமம்- புனர்பூசம், பூசம்
4-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* சதுர்த்தி விரதம்
* முகுந்த சதுர்த்தி
* நெல்லையப்பர் காந்தியம்மனுக்கு திருமஞ்சனம்
* சந்திராஷ்டமம் - பூசம், ஆயில்யம்
5-ம் தேதி சனிக்கிழமை :
* வசந்த பஞ்சமி
* சூரியநயினார் கோவில், சிவபெருமான் புறப்படு
* சித்தயோகம்
* திருமெய்யம் ஆண்டாள் பிரியாவிடை உற்சவம்
* சந்திராஷ்டமம் - ஆயில்யம், மகம்
6-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* வளர்பிறை பஞ்சமி
* சஷ்டி விரதம்
* சுபமுகூர்த்த நாள்
* செடி, கொடிகள் வைக்க நன்று
* சந்திராஷ்டமம் - மகம், பூசம்
7-ம் தேதி திங்கள் கிழமை :
* கல்லிடைக்குறிச்சி சிவபெருமான் பவனி
* திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள்
* திருமெய்யம் ஆண்டாள் புறப்பாடு
* மதுரை கூடலழகர் உற்சவாரம்பம்
* சிறிய நகசு
* சந்திராஷ்டமம் - பூரம், உத்திரம்
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்காக சர்க்கார்பதியில் இருந்து 70 அடி நீள மூங்கில் கம்பம் வெட்டி எடுத்து கொண்டுவரப்பட்டது.
பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. ஆனைமலை உப்பாற்றங்கரையில் சயன நிலையில் இருந்து அருள்பாலித்து வரும் மாசாணியம்மனை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் உள்பட பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா தை அமாவாசை நாளில் கொடி யேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.
அதன்படி தை அமாவாசை நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் குண்டம் திருவிழா தொடங்குகிறது. அதை தொடர்ந்து 18 நாட்களுக்கு காலை மற்றும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது.
ஆனைமலை ஆழியாற்றங் கரையில் உள்ள மயானத்தில் வருகிற 14-ந்தேதி நள்ளிரவு 1 மணிக்கு மயான பூஜை நடக்கிறது. 15-ந்தேதி காலை 7.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30 மணிக்கு மகாபூஜை, 16-ந் தேதி காலை 9.30 மணிக்கு ஆனைமலை குண்டம் மைதானத்தில் குண்டம் கட்டுதல் நடைபெறுகிறது.அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு சித்திரத்தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா ஆகியவை நடக்கிறது. இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது.
மறுநாள் 17-ந்தேதி காலை 7.30 மணிக்கு விரதமிருந்த பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர். 18-ந்தேதி காலை 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜையையும் நடக்கிறது. 19-ந்தேதி பகல் 11.30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் கருணாநிதி, கண்காணிப்பாளர் தமிழ்வாணன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
முன்னதாக குண்டம் திருவிழாவையொட்டி கொடியேற்றுவதற்கு மூங்கில் கம்பம் வெட்டி எடுத்து வருவதற்கு நேற்று முன் தினம் மாலை சர்க்கார்பதியில் உள்ள அடர்ந்த காட்டிற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து சுமார் 70 அடி நீளமுள்ள மூங்கில் கம்பை வெட்டி எடுத்து வந்தனர்.பின்னர் சர்க்கார்பதி மாரியம்மன் கோவிலில் வைத்து மூங்கில் கம்பத்துக்கு புடவை கட்டி, சந்தனம், குங்குமம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இதையடுத்து செண்டை மேளம் முழங்க சுமார் 16 கிலோ மீட்டர் தூரம் நடந்தே பக்தர்கள் தோளில் வைத்து மூங்கில் கம்பத்தை கோவிலுக்கு எடுத்து வந்தனர்.
அதன்படி தை அமாவாசை நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் குண்டம் திருவிழா தொடங்குகிறது. அதை தொடர்ந்து 18 நாட்களுக்கு காலை மற்றும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது.
ஆனைமலை ஆழியாற்றங் கரையில் உள்ள மயானத்தில் வருகிற 14-ந்தேதி நள்ளிரவு 1 மணிக்கு மயான பூஜை நடக்கிறது. 15-ந்தேதி காலை 7.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30 மணிக்கு மகாபூஜை, 16-ந் தேதி காலை 9.30 மணிக்கு ஆனைமலை குண்டம் மைதானத்தில் குண்டம் கட்டுதல் நடைபெறுகிறது.அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு சித்திரத்தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா ஆகியவை நடக்கிறது. இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது.
மறுநாள் 17-ந்தேதி காலை 7.30 மணிக்கு விரதமிருந்த பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர். 18-ந்தேதி காலை 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜையையும் நடக்கிறது. 19-ந்தேதி பகல் 11.30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் கருணாநிதி, கண்காணிப்பாளர் தமிழ்வாணன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
முன்னதாக குண்டம் திருவிழாவையொட்டி கொடியேற்றுவதற்கு மூங்கில் கம்பம் வெட்டி எடுத்து வருவதற்கு நேற்று முன் தினம் மாலை சர்க்கார்பதியில் உள்ள அடர்ந்த காட்டிற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து சுமார் 70 அடி நீளமுள்ள மூங்கில் கம்பை வெட்டி எடுத்து வந்தனர்.பின்னர் சர்க்கார்பதி மாரியம்மன் கோவிலில் வைத்து மூங்கில் கம்பத்துக்கு புடவை கட்டி, சந்தனம், குங்குமம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இதையடுத்து செண்டை மேளம் முழங்க சுமார் 16 கிலோ மீட்டர் தூரம் நடந்தே பக்தர்கள் தோளில் வைத்து மூங்கில் கம்பத்தை கோவிலுக்கு எடுத்து வந்தனர்.
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜருக்கு சிதம்பரம் பகுதியில் உள்ள தச தீர்த்தங்களில் இன்று(திங்கட்கிழமை) தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.
தை அமாவாசையையொட்டி உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜருக்கு சிதம்பரம் பகுதியில் உள்ள தச தீர்த்தங்களில் இன்று(திங்கட்கிழமை) தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று இரவு 11 மணியளவில் சிவகாமசுந்தரி சமேத நடராஜரின் பிரதிநிதியாக போற்றப்படும் சந்திரசேகரர் சுவாமி, நடராஜர் கோவிலில் இருந்து புறப்பட்டு சிவகங்கை குளத்துக்கு செல்கிறார்.
அங்கு சந்திரசேகரர் முன்னிலையில் அஸ்திரராஜருக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து கிள்ளை கடற்கரை, அம்மாபேட்டை புலிமேடு தீர்த்த குளம், இளமையாக்கினார் கோவில் வியாக்ர தீர்த்தகுளம், அனந்தீஸ்வரர் கோவில் அனந்த தீர்த்தம், நாகசேரி குளத்தில் நாகசேரி தீர்த்தம், சிங்காரத்தோப்பில் பிரம்ம தீர்த்தம், தில்லையம்மன் கோவிலில் சிவப்ரியை தீர்த்தம், புதுத்தெரு பர்ணசாலையில் திருப்பாற்கடல் தீர்த்தம், நடராஜர் கோவில் சித்சபை அருகே உள்ள நடராஜர் அபிஷேக தீர்த்த கிணறு பரமானந்த கூடம் ஆகிய தீர்த்தங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
அங்கு சந்திரசேகரர் முன்னிலையில் அஸ்திரராஜருக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து கிள்ளை கடற்கரை, அம்மாபேட்டை புலிமேடு தீர்த்த குளம், இளமையாக்கினார் கோவில் வியாக்ர தீர்த்தகுளம், அனந்தீஸ்வரர் கோவில் அனந்த தீர்த்தம், நாகசேரி குளத்தில் நாகசேரி தீர்த்தம், சிங்காரத்தோப்பில் பிரம்ம தீர்த்தம், தில்லையம்மன் கோவிலில் சிவப்ரியை தீர்த்தம், புதுத்தெரு பர்ணசாலையில் திருப்பாற்கடல் தீர்த்தம், நடராஜர் கோவில் சித்சபை அருகே உள்ள நடராஜர் அபிஷேக தீர்த்த கிணறு பரமானந்த கூடம் ஆகிய தீர்த்தங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கடன் பிரச்சினை அகலவும், நீண்ட நாள் நோய் தீர, என அனைத்து பிரச்சினைகளுக்கும், இத்தல லட்சுமி நாராயணரை வணங்கி வழிபட்டு வந்தால் போதுமானது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வேப்பஞ்சேரி என்ற இடத்தில் இருக்கிறது, லட்சுமி நாராயணர் திருக்கோவில். இது சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு, மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னனால் கட்டப்பட்டது.
இந்த ஆலயத்தில் தசாவதார தீர்த்தக்குளம் உள்ளது. இந்த குளத்தின் தண்ணீர், இனிப்பு சுவையுடன் இருக்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வேண்டினால், பாவங்கள் விலகும் என்கிறார்கள்.
குளத்தின் அருகில் 21 அடி உயரத்தில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கிருஷ்ணரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனை ‘தசாவதார கிருஷ்ணர்’ என்கிறார்கள். இந்த ஒரே சிலையில், திருமாலின் 10 அவதாரங்களையும் குறிப்பிடும் வகையிலான அனைத்து அம்சங்களுடன் கூடியதாக உருவாக்கியிருக்கிறார்கள்.
கோவிலின் தென்பகுதியில் அஷ்டலட்சுமிக்கு தனிச் சன்னிதி உள்ளது. மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், இந்த சன்னிதிக்கு வந்து தாயாரை மனமுருக வேண்டி, விளக்கு ஏற்றி வழிபட்டால், மது பழக்கத்தில் இருந்து விடுபடுவர் என்பது நம்பிக்கை. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு நடைபெறும் ராகு கால பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு, சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் அகலும் என்கிறார்கள்.
திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கடன் பிரச்சினை அகலவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேண்டுபவர்கள், நீண்ட நாள் நோய் தீர, தொழில் விருத்தியாக, நலிந்த தொழில் மீண்டும் நல்ல முறையில் நடைபெற என அனைத்து பிரச்சினைகளுக்கும், இத்தல லட்சுமி நாராயணரை வணங்கி வழிபட்டு வந்தால் போதுமானது. தங்களின் கோரிக்கை நிறை வேறியதும் பக்தர்கள், இறைவனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
சித்தூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில், வேப்பஞ்சேரி லட்சுமி நாராயணர் திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில் தசாவதார தீர்த்தக்குளம் உள்ளது. இந்த குளத்தின் தண்ணீர், இனிப்பு சுவையுடன் இருக்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வேண்டினால், பாவங்கள் விலகும் என்கிறார்கள்.
குளத்தின் அருகில் 21 அடி உயரத்தில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கிருஷ்ணரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனை ‘தசாவதார கிருஷ்ணர்’ என்கிறார்கள். இந்த ஒரே சிலையில், திருமாலின் 10 அவதாரங்களையும் குறிப்பிடும் வகையிலான அனைத்து அம்சங்களுடன் கூடியதாக உருவாக்கியிருக்கிறார்கள்.
கோவிலின் தென்பகுதியில் அஷ்டலட்சுமிக்கு தனிச் சன்னிதி உள்ளது. மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், இந்த சன்னிதிக்கு வந்து தாயாரை மனமுருக வேண்டி, விளக்கு ஏற்றி வழிபட்டால், மது பழக்கத்தில் இருந்து விடுபடுவர் என்பது நம்பிக்கை. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு நடைபெறும் ராகு கால பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு, சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் அகலும் என்கிறார்கள்.
திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கடன் பிரச்சினை அகலவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேண்டுபவர்கள், நீண்ட நாள் நோய் தீர, தொழில் விருத்தியாக, நலிந்த தொழில் மீண்டும் நல்ல முறையில் நடைபெற என அனைத்து பிரச்சினைகளுக்கும், இத்தல லட்சுமி நாராயணரை வணங்கி வழிபட்டு வந்தால் போதுமானது. தங்களின் கோரிக்கை நிறை வேறியதும் பக்தர்கள், இறைவனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
சித்தூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில், வேப்பஞ்சேரி லட்சுமி நாராயணர் திருக்கோவில் அமைந்துள்ளது.
நெல்லையப்பர் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) பத்ர தீப விழா நடைபெறுகிறது. இன்று மாலையில் நந்தி தீபமும், அதைத்தொடர்ந்து 10 ஆயிரம் தீபங்களும் ஏற்றப்படுகிறது.
நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் அமாவாசையையொட்டி பத்ர தீப விழா நடைபெறும். இந்த ஆண்டு பத்ரதீப விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நெல்லையப்பர் சன்னதி மணி மண்டபத்தில் நேற்று மாலை தங்க விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்கள்.
அதன் தொடர்ச்சியாக இன்று 11 பால் குடங்கள் எடுத்து நெல்லையப்பர் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. 11 மணிக்கு அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள், உற்சவர்கள் எழுந்தருளுகிறார்கள். 308 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் தீபாராதனை, மகேஸ்வர பூஜை நடைபெறுகிறது.
இன்று மாலையில் நந்தி தீபமும், அதைத்தொடர்ந்து 10 ஆயிரம் தீபங்களும் ஏற்றப்படுகிறது.
இரவு 8 மணிக்கு நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சண்முகர் கோவில் வளாகத்தில் சோடச தீபாராதனை நடைபெறுகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று 11 பால் குடங்கள் எடுத்து நெல்லையப்பர் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. 11 மணிக்கு அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள், உற்சவர்கள் எழுந்தருளுகிறார்கள். 308 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் தீபாராதனை, மகேஸ்வர பூஜை நடைபெறுகிறது.
இன்று மாலையில் நந்தி தீபமும், அதைத்தொடர்ந்து 10 ஆயிரம் தீபங்களும் ஏற்றப்படுகிறது.
இரவு 8 மணிக்கு நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சண்முகர் கோவில் வளாகத்தில் சோடச தீபாராதனை நடைபெறுகிறது.
திருமலையில் புரந்தரதாசர் ஆராதனை உற்சவம் நிறைவு நாளான (புதன்கிழமை) திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் சுப்ரபாதம் தியானம், பக்தி பஜனைகள் ஆகியவை நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையானை புகழ்ந்து ஏராளமான பக்தி கீர்த்தனைகளை பாடியவர் புரந்தரதாசர். அவரை போற்றும் வகையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் புரந்தரதாசர் ஆராதனை உற்சவத்தை நடத்தி வருகிறது. அதேபோல் இந்த ஆண்டுக்கான புரந்தரதாசர் ஆராதனை உற்சவம் 3 நாட்கள் நடக்க உள்ளது.
அதன்படி திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் தாச சாகித்திய திட்டம் சார்பில் கர்நாடக இசை மேதை புரந்தரதாசரின் ஆராதனை உற்சவம் நாளை (திங்கட்கிழமை) முதல் பிப்ரவரி மாதம் 2-ந்தேதி வரை 3 நாட்கள் திருப்பதி மற்றும் திருமலையில் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை தாச சாகித்ய திட்ட சிறப்பு அதிகாரி ஆனந்த தீர்த்தாச்சார்யா செய்து வருகிறார்.
முதல் நாள் மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை திருப்பதியில் உள்ள அன்னமாச்சாரியார் கலையரங்கில் ஹரிதாச ரஞ்சனியின் பஜனை இசை நிகழ்ச்சியும், ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது.
முன்னதாக இன்று காலை திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் சுப்ரபாத, தியானம், பஜனை, சங்கீர்த்தனை, புரந்தரா சங்கீர்த்தனை, பல்வேறு மடாதிபதிகளின் மங்களாசாசனங்கள் ஆகியவை நடக்கிறது.
2-வதுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அலிபிரியில் உள்ள புரந்தரதாசரின் உருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. மாலை 6 மணிக்கு கோவிலில் உள்ள வைபவ மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளை கொண்டு வந்து ஆராதனை நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக புரந்தரதாசர் பாடிய பக்தி கீர்த்தனைகள் பாடப்படுகிறது.
நிறைவுநாளான (புதன்கிழமை) காலை 6 மணியில் இருந்து காலை 9 மணி வரை திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் சுப்ரபாதம் தியானம், பக்தி பஜனைகள் ஆகியவை நடக்கிறது.
இ்வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் தாச சாகித்திய திட்டம் சார்பில் கர்நாடக இசை மேதை புரந்தரதாசரின் ஆராதனை உற்சவம் நாளை (திங்கட்கிழமை) முதல் பிப்ரவரி மாதம் 2-ந்தேதி வரை 3 நாட்கள் திருப்பதி மற்றும் திருமலையில் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை தாச சாகித்ய திட்ட சிறப்பு அதிகாரி ஆனந்த தீர்த்தாச்சார்யா செய்து வருகிறார்.
முதல் நாள் மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை திருப்பதியில் உள்ள அன்னமாச்சாரியார் கலையரங்கில் ஹரிதாச ரஞ்சனியின் பஜனை இசை நிகழ்ச்சியும், ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது.
முன்னதாக இன்று காலை திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் சுப்ரபாத, தியானம், பஜனை, சங்கீர்த்தனை, புரந்தரா சங்கீர்த்தனை, பல்வேறு மடாதிபதிகளின் மங்களாசாசனங்கள் ஆகியவை நடக்கிறது.
2-வதுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அலிபிரியில் உள்ள புரந்தரதாசரின் உருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. மாலை 6 மணிக்கு கோவிலில் உள்ள வைபவ மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளை கொண்டு வந்து ஆராதனை நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக புரந்தரதாசர் பாடிய பக்தி கீர்த்தனைகள் பாடப்படுகிறது.
நிறைவுநாளான (புதன்கிழமை) காலை 6 மணியில் இருந்து காலை 9 மணி வரை திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் சுப்ரபாதம் தியானம், பக்தி பஜனைகள் ஆகியவை நடக்கிறது.
இ்வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.
இந்திரனின் அம்சம். கற்பகமலர்களை கூந்தலில் சூடியவள். யானை இவளது வாகனம். சொத்து சுகம் தருபவர். தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவதிலும், மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!.
மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.
இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டுவாள். சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும் கொண்டவள்
ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்
மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.
இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டுவாள். சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும் கொண்டவள்
ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்
கண்ணாடி மண்டபத்தில் ரத்னாங்கி சேவையில் எழுந்தருளிய உற்சவர் வீரராகவ பெருமாளை சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபட்டனர்.
திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் பெருமாள் கோயில் பிரசித்ரிபெற்றது. தை அமாவாசையை முன்னிட்டு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் நேற்று இரவு முதலே திருவள்ளூரில் குவிந்தனர்
அவர்கள் தங்க இடமின்றி கோவில் வளாகம், பஸ் நிலையம், மூடிக்கிடக்கும் கடைமுன்பு மற்றும் நடைமேடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கி இருந்தனர்.
கொரோனா பரவலை முன்னிட்டு ஏற்கனவே கோவில் குளக்கரைக்கு செல்ல பக்தர்களுக்கு தடைவிதிக்கபட்டு உள்ளது. இதனால் இன்று காலை தை அமாவாசையையொட்டி அதிகாலை கோவில் மாட வீதியில் காத்திருந்த புரோகிதர்கள் மூலம் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இதேபோல் காக்களூரில் உள்ள பாதாள விநாயகர் கோவில் அருகேயும் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
பின்னர் அவர்கள் வீரராகவர் கோவிலுக்கு வழிபட வந்தனர். கண்ணாடி மண்டபத்தில் ரத்னாங்கி சேவையில் எழுந்தருளிய உற்சவர் வீரராகவ பெருமாளை சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபட்டனர். இதனால் கோவில் முன்பு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கோவிலுக்குள் கூட்டம் அதிகமாக இருந்தால் அரை மணிநேரத்துக்கு ஒரு முறை பக்தர்கள் பிரித்து கோவிலுக்குள் அனுப்பப்பட்டனர். இதனால் கோவிலுக்குள் கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டது.
அதிக அளவு பக்தர்கள் குவிந்ததால் திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பாபி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் தங்க இடமின்றி கோவில் வளாகம், பஸ் நிலையம், மூடிக்கிடக்கும் கடைமுன்பு மற்றும் நடைமேடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கி இருந்தனர்.
கொரோனா பரவலை முன்னிட்டு ஏற்கனவே கோவில் குளக்கரைக்கு செல்ல பக்தர்களுக்கு தடைவிதிக்கபட்டு உள்ளது. இதனால் இன்று காலை தை அமாவாசையையொட்டி அதிகாலை கோவில் மாட வீதியில் காத்திருந்த புரோகிதர்கள் மூலம் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இதேபோல் காக்களூரில் உள்ள பாதாள விநாயகர் கோவில் அருகேயும் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
பின்னர் அவர்கள் வீரராகவர் கோவிலுக்கு வழிபட வந்தனர். கண்ணாடி மண்டபத்தில் ரத்னாங்கி சேவையில் எழுந்தருளிய உற்சவர் வீரராகவ பெருமாளை சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபட்டனர். இதனால் கோவில் முன்பு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கோவிலுக்குள் கூட்டம் அதிகமாக இருந்தால் அரை மணிநேரத்துக்கு ஒரு முறை பக்தர்கள் பிரித்து கோவிலுக்குள் அனுப்பப்பட்டனர். இதனால் கோவிலுக்குள் கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டது.
அதிக அளவு பக்தர்கள் குவிந்ததால் திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பாபி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து நீர்நிலைகள், காவிரிபடித்துறை, புண்ணிய தலங்களில் தை அமாவாசை தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் 12 அமாவாசை வந்தாலும், ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை எனும் புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினங்கள் மிகவும் விசேஷமாக விரதம் கடைப்பிடிப்பது வழக்கம்.
ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை திதியில் நாம் விரதமிருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டாலும், தை, ஆடி, மகாளய அமாவாசை தினத்திலாவது நாம் விரதமிருந்து தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது அவசியம். அப்படி செய்தால் முன்னோர்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதன்படி இன்று தை அமாவாசை என்பதால் தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள், புண்ணிய தலங்களில் ஏராளமானோர் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து நீர்நிலைகள், காவிரிபடித்துறை, புண்ணிய தலங்களில் தை அமாவாசை தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்ய மண்டப படித்துறையில் இன்று அதிகாலை முதல் ஏராளமான மக்கள் குவிந்தனர். அங்கு வழியில் அமைக்கப்பட்டிருந்த கடைகளில் காய்கறிகள், பழங்கள் வாங்கி சென்று காவிரியில் நீராடி புஷ்ய மண்டபத்தில் உள்ள புரோகிதர்களிடம் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
பின்னர் பிண்டத்தை காவிரியில் விட்டு வணங்கி அங்கிருந்து ஐயாறப்பர் கோவிலின் தெற்கு வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டார் சன்னதியின் வாசலில் குங்கிலியம் பொடி போட்டு வணங்கி சென்று ஆட்கொண்டாருக்கு அர்ச்சனை செய்தனர். கோவிலின் உள்ளே ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
தஞ்சையிலும் புதுஆற்று படித்துறையில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் காலை முதல் பக்தர்கள் குளத்தின் 4 கரைகளிலும் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பண திதி கொடுத்து வழிபட்டனர். குளத்தில் கரையில் அமைந்துள்ள சோடச லிங்க சன்னதிகளில் சென்று வழிபட்டனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதிகடல் மற்றும் கோடியக்கரை ஆதிசேது கடற்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, கடலில் புனித நீராடி வழிபட்டனர்.
இறந்த மூதாதையர்களுக்கு பச்சரிசி, எள்,காய்கறி, பழங்கள், தேங்காய், வெற்றிலை பாக்கு ஆகிய பொருட்களை வைத்து தர்ப்பணம் கொடுத்து, பின்பு கடலில் காதோலை கருகமணி தேங்காய், வெற்றிலைபாக்கு, எலுமிச்சம்பழம் உள்ளிட்ட பொருட்களை கடலில் விட்டுபுனித நீராடினர்.
பின்பு வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் புனித நீராடி திருமண கோலத்தில் உள்ள சிவபெருமானை பக்தர்கள் வழிப்பட்டனர்.
பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாககழிவறை உடைமாற்றும் அறை அடிப்படைத் தேவைகளை நகராட்சி கோடியக்கரை ஊராட்சியில் செய்திருந்தனர்பாதுகாப்பு ஏற்பாடுகளை வேதாரண்யம் போலீசார் செய்திருந்தனர்.
இதேப்போல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி கடலில் சங்கமிக்கும் இடத்தில் தைஅமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிப்பட்டனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் தை, ஆடி, மகாளய அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பலர் வீட்டின் மாடியிலேயே தர்ப்பணம் கொடுத்து வந்தனர். ஆனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவித்து இம்முறை தர்ப்பணம் கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக இன்று பொதுமக்கள் வழக்கமான முறையில் நீர்நிலை, கடற்கரை, காவிரிபடித்துறை, புண்ணிய தலங்களில் தை அமாவாசை தர்ப்பணம் கொடுத்தனர் என்பது குறிப்பிடதக்கது.
ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை திதியில் நாம் விரதமிருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டாலும், தை, ஆடி, மகாளய அமாவாசை தினத்திலாவது நாம் விரதமிருந்து தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது அவசியம். அப்படி செய்தால் முன்னோர்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதன்படி இன்று தை அமாவாசை என்பதால் தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள், புண்ணிய தலங்களில் ஏராளமானோர் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து நீர்நிலைகள், காவிரிபடித்துறை, புண்ணிய தலங்களில் தை அமாவாசை தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்ய மண்டப படித்துறையில் இன்று அதிகாலை முதல் ஏராளமான மக்கள் குவிந்தனர். அங்கு வழியில் அமைக்கப்பட்டிருந்த கடைகளில் காய்கறிகள், பழங்கள் வாங்கி சென்று காவிரியில் நீராடி புஷ்ய மண்டபத்தில் உள்ள புரோகிதர்களிடம் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
பின்னர் பிண்டத்தை காவிரியில் விட்டு வணங்கி அங்கிருந்து ஐயாறப்பர் கோவிலின் தெற்கு வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டார் சன்னதியின் வாசலில் குங்கிலியம் பொடி போட்டு வணங்கி சென்று ஆட்கொண்டாருக்கு அர்ச்சனை செய்தனர். கோவிலின் உள்ளே ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
தஞ்சையிலும் புதுஆற்று படித்துறையில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் காலை முதல் பக்தர்கள் குளத்தின் 4 கரைகளிலும் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பண திதி கொடுத்து வழிபட்டனர். குளத்தில் கரையில் அமைந்துள்ள சோடச லிங்க சன்னதிகளில் சென்று வழிபட்டனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதிகடல் மற்றும் கோடியக்கரை ஆதிசேது கடற்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, கடலில் புனித நீராடி வழிபட்டனர்.
இறந்த மூதாதையர்களுக்கு பச்சரிசி, எள்,காய்கறி, பழங்கள், தேங்காய், வெற்றிலை பாக்கு ஆகிய பொருட்களை வைத்து தர்ப்பணம் கொடுத்து, பின்பு கடலில் காதோலை கருகமணி தேங்காய், வெற்றிலைபாக்கு, எலுமிச்சம்பழம் உள்ளிட்ட பொருட்களை கடலில் விட்டுபுனித நீராடினர்.
பின்பு வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் புனித நீராடி திருமண கோலத்தில் உள்ள சிவபெருமானை பக்தர்கள் வழிப்பட்டனர்.
பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாககழிவறை உடைமாற்றும் அறை அடிப்படைத் தேவைகளை நகராட்சி கோடியக்கரை ஊராட்சியில் செய்திருந்தனர்பாதுகாப்பு ஏற்பாடுகளை வேதாரண்யம் போலீசார் செய்திருந்தனர்.
இதேப்போல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி கடலில் சங்கமிக்கும் இடத்தில் தைஅமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிப்பட்டனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் தை, ஆடி, மகாளய அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பலர் வீட்டின் மாடியிலேயே தர்ப்பணம் கொடுத்து வந்தனர். ஆனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவித்து இம்முறை தர்ப்பணம் கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக இன்று பொதுமக்கள் வழக்கமான முறையில் நீர்நிலை, கடற்கரை, காவிரிபடித்துறை, புண்ணிய தலங்களில் தை அமாவாசை தர்ப்பணம் கொடுத்தனர் என்பது குறிப்பிடதக்கது.






