என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சந்திரமுகி-2'.
    • லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் லைகா புரொடக்ஷன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கே.எம்.தமிழ் குமரன், இயக்குனர் பி. வாசு, ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், மகிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே, சுபிக்ஷா கிருஷ்ணன், குழந்தை நட்சத்திரங்கள் மானசி, தீக்ஷா, நடிகர்கள் ரவி மரியா, விக்னேஷ், கூல் சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


    இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பி. வாசு பேசியதாவது, என்னிடம் அடிக்கடி வளர்ந்துவிட்ட டெக்னாலஜியை எப்படி பார்க்கிறீர்கள்? என கேட்பார்கள். அதற்கு ஒரே உதாரணம் கூல் சுரேஷ். அவரைப் போன்ற பலரைப் பார்த்து என்னை நான் அப்டேட் செய்து கொண்டிருக்கிறேன். அவர் இயக்குனர் இல்லை. இருப்பினும் கஷ்டப்பட்டு முயற்சி செய்து தன்னுடைய தனித்துவமான அடையாளத்தை பதிவு செய்திருக்கிறார். இவரை போன்ற கலைஞர்களை பாராட்டுவது தான் என் போன்றோரின் கடமை.


    அதே போல் தான் நான் இயக்குனராக பணியாற்றும்போது ராகவா லாரன்ஸ் என்னிடம், 'நான் நான்காவது வரிசையில் ஆடிக் கொண்டிருக்கிறேன். ஒரு வரிசை முன்னேறி மூன்றாவது வரிசையில் ஆட மாட்டேனா என ஏங்குகிறேன் சார்' என்பார். நான்காவது வரிசையிலிருந்து முதல் வரிசையில் ஆடி நடன உதவியாளராகி நடன இயக்குனராகவும் கடின உழைப்பால் உயர்ந்தவர் ராகவா லாரன்ஸ். அதன் பிறகு என்னுடைய இயக்கத்தில் உருவான திரைப்படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியவர். அதன் பிறகு கதாநாயகனாகி நல்ல செயல்களை செய்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். அவருடைய முயற்சியில் அவருடைய உழைப்பில் இந்த இடத்திற்கு முன்னேறி வந்திருக்கிறார். தன்னிடம் இருப்பதை மற்றவருக்கு பகிர்ந்து கொடுக்கும் நல்ல மனதுள்ள மனிதர்.


    இந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் முதலில் ராகவா லாரன்ஸின் நடிப்பை பாராட்டுவீர்கள். அதன் பிறகு கங்கனாவின் சந்திரமுகி கதாபாத்திரத்தை பாராட்டுவீர்கள். அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் நடித்திருக்கும் அனைவரையும் பற்றியும் நீங்கள் பேசுவீர்கள். ஏனெனில் அனைவருக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. எங்களுக்கு கிடைத்த அருமையான முதலாளி சுபாஸ்கரன். அவரைப் பற்றி ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் அவரால் பத்தாயிரம் குடும்பங்கள் வாழ்கிறது. ஆனால் இது எதுவும் தெரியாமல் இருப்பவர்தான் சுபாஸ்கரன்.


    ஆடியோ வெளியிட்டு விழாவில் என் அருகில் அமர்ந்திருந்தார் சுபாஸ்கரன். மாற்றுத்திறனாளி கலைஞர்கள் மேடையில் நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது தமிழ்குமரனை அழைத்து ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னார். உடனடியாக அவர்களுக்கு மேடையிலேயே ஒரு கோடி ரூபாய் நன்கொடையை வழங்கியதுடன் மட்டுமல்லாமல் அவர்களுடன் அமர்ந்தார். நல்ல மனிதர். தர்மம் தலைகாக்கும் என்பார்கள் அது இந்த படத்தின் வெற்றியிலும் தெரியும்.


    சூப்பர் ஸ்டாருடன் யாரையும் ஒப்பிடாதீர்கள். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் மட்டும்தான். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டும்தான். விஜய், அஜித் என ஒவ்வொருத்தருக்கும் உலக அளவில் ஒவ்வொரு அடையாளம் இருக்கிறது. அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்து இந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள். அதற்கு உண்டான பலனை மக்கள் அளிக்கிறார்கள். அதேபோல் அதற்கு உண்டான பட்டத்தையும் மக்களே வழங்குவார்கள். அதனால் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி யாரும் பேச வேண்டியதில்லை. அது அவசியமுமில்லை நன்றி'' என்றார்.




    • சமந்தா -விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான திரைப்படம் 'குஷி'.
    • இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.

    இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'குஷி'. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.


    குஷி போஸ்டர்

    இந்நிலையில், 'குஷி' படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'குஷி' திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.70.23 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.




    • சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’.
    • இப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார்.

    நடிகர் சிவா நடிப்பில் வெளியான 'தமிழ்படம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன். இவர் மின்னலே, அனேகன் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் 'ரத்தம்'. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    ரத்தம் போஸ்டர்

    இந்நிலையில், 'ரத்தம்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

    ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'இறைவன்' திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.





    • ஜெயம் ரவி- நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் ‘இறைவன்’.
    • இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    'வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இறைவன்'. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


    இந்நிலையில், 'இறைவன்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 'தப்பு பண்ணும் போது ஆண்டவன் பாத்துப்பானு விட்டுபோற அளவுக்கு பொறும இல்ல' போன்ற வசனங்களுடன் த்ரில்லர் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், 'இறைவன்' டிரைலர் ஒரே நாளில் 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.


    'இறைவன்' திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.





    • ரஜினிகாந்த் ரசிகரின் திருமண விழாவில், ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணா கலந்துகொண்டு வாழ்த்தினார்.
    • ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார்.

    மதுரையில் நடந்த நடிகர் ரஜினிகாந்த் ரசிகரின் திருமண விழாவில், ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணா கலந்துகொண்டு வாழ்த்தினார்.

    இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், "முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ரஜினிகாந்த் சந்திப்பில் அரசியல் இல்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார்" என்றார்.

    இதற்கிடையே, ரஜினிகாந்துக்கு, கவர்னர் பதவி கிடைக்குமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "அது ஆண்டவன் முடிவு" என்று அவர் பதில் அளித்தார்.

    • மார்க் ஆண்டனி படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • மார்க் ஆண்டனி படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

     

    ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், 'மார்க் ஆண்டனி' படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு இருக்கிறது. டைம் மெஷின் சார்ந்த கதையம்சம் கொண்ட படமாக மார்க் ஆண்டனி உருவாகி இருப்பது டிரைலரில் தெரியவந்துள்ளது.

    ஆக்ஷன், காமெடி கலந்த காட்சிகள் அடங்கிய மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் ரசிகர்களை கவர்ந்து இருப்பதோடு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • சந்திரமுகி 2 படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

     

    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

    இந்த நிலையில், சந்திரமுகி 2 படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    • விஜய்க்கு ஜோடியாக நடிக்க முதலில் ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடந்தது.
    • விஜய் ஜோடியாக 2003-ம் ஆண்டு வசீகரா என்ற படத்தில் சினேகா நடித்துள்ளார்.

    'லியோ' படத்திற்கு அடுத்ததாக விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.

    இதில் விஜய் தந்தை, மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் ேதாற்றம் ஹாலிவுட் தரத்தில் 3டி வி.எப்.எக்ஸ். தொழில்நுட்பத்தில் மாற்றும் பணி லாஸ் ஏஞ்சல்சில் நடந்தது. இதற்காக விஜய், வெங்கட் பிரபு, கல்பாத்தி அகோரம் அங்கு சென்றுள்ளனர்.

    தந்தை விஜய்க்கு ஜோடியாக நடிக்க முதலில் ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அவர் இன்னொரு விஜய்க்கு அம்மாவாக நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அவருக்கு பதிலாக தந்தை விஜய்க்கு ஜோடியாக சினேகாவிடம் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    விஜய் ஜோடியாக 2003-ம் ஆண்டு வசீகரா என்ற படத்தில் சினேகா நடித்துள்ளார். 20 வருடங்களுக்கு பின்னர் தற்போது அவருக்கு ஜோடியாக சினேகா நடிக்க இருப்பது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மகன் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

    • ஸ்ரேயா தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
    • ஸ்ரேயா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    நடிகை ஸ்ரேயா தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம், என பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கப்சா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

    இந்த நிலையில் 40 வயதாகும் ஸ்ரேயா இன்னும் வயதான தோற்றம் இல்லாமல் நடிக்க வந்த ஆரம்பத்தில் எவ்வளவு அழகாக இருந்தாரோ அதே அளவிற்கு கவர்ச்சியுடனும், அழகுடன் இருக்கிறார். ரசிகர்களுக்காகவே வித்தியாசமாக உடைகளை அணிந்துகொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

    தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் சேலை அணிந்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    புகைப்படங்களை பார்த்த பலரும் 40 வயதில் இவ்வளவு அழகா? இன்னும் உங்களுக்கு கவர்ச்சி குறையவே இல்லை என வியப்புடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

    • மகேந்திரன் என்பவர் தன்னை சமூகஆர்வலர் எனக்கூறிக்கொண்டு வீடு கட்டுவது தொடர்பாக அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்தார்.
    • இணையதளங்கள் மற்றும் ஊடகங்களை பயன்படுத்தி என்மீது களங்கம் ஏற்படுத்தி வருகிறார்.

    கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் நடிகர் பாபிசிம்ஹாவிற்கு சொந்தமான 15 சென்ட் நிலம் உள்ளது. இதில் அவர் வீடு கட்டி வருகிறார். இந்த பணிகளை கொடைக்கானலை சேர்ந்த காண்ட்ராக்டர்கள் ஜமீர், காசிம்முகமது ஆகியோர் மேற்கொணடு வந்தனர்.

    இவர்களுக்கும், பாபிசிம்ஹாவிற்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் கட்டுமான பணிகள் தாமதமாகி வந்துள்ளது. இதுகுறித்து நடிகர் பாபிசிம்ஹா காண்ட்ராக்டர்களிடம் கேட்டபோது அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    காண்ட்ராக்டர்களுடன் சேர்ந்து பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் என்பவரும் நடிகரை மிரட்டியுள்ளார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசில் பாபிசிம்ஹா கொடுத்த புகாரின்பேரில் காண்ட்ராக்டர்கள் உள்பட 4 பேர் மீது கொலைமிரட்டல், ஏமாற்றுதல், அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து நடிகர் பாபிசிம்ஹா தெரிவிக்கையில், நான் முறையான அனுமதிபெற்றுதான் கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருகிறேன். பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் தன்னை சமூகஆர்வலர் எனக்கூறிக்கொண்டு வீடு கட்டுவது தொடர்பாக அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்தார்.

    இணையதளங்கள் மற்றும் ஊடகங்களை பயன்படுத்தி என்மீது களங்கம் ஏற்படுத்தி வருகிறார். என்னையும், எனது தாயாரையும் அவர் மிரட்டிய அனைத்து ஆவணங்களும் உள்ளது. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கஞ்சா கடத்தல், பணம் கேட்டு மிரட்டுதல், வெளிநாட்டு பெண்மணியை மிரட்டிய வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

    அதேபோல் தன்னையும் அவர் மிரட்டி வருகிறார். பணம் பறிப்பதையே தொழிலாக வைத்துள்ள இவர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்தியாவின் பணக்கார நடிகையாக கருதப்படும் ஆலியா பட்டுக்கு, ரூ.560 கோடி மதிப்பிலான சொத்துகள் இருக்கிறது.
    • வெற்றிகரமான பெண் தொழில் அதிபராகவும் ஆலியா பட் திகழ்கிறார்.

    பாலிவுட் முன்னணி நடிகையாக திகழும் ஆலியா பட், திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் கூட 'கங்குபாய் கதியவாடி' படத்துக்காக அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

    இந்தியாவின் பணக்கார நடிகையாக கருதப்படும் ஆலியா பட்டுக்கு, ரூ.560 கோடி மதிப்பிலான சொத்துகள் இருக்கிறது. மும்பையில் 2 சொகுசு வீடுகளும், லண்டனில் ஒரு வீடும் சொந்தமாக இருக்கிறது. பல சொகுசு கார்களும் அடங்கும்.

    இதில் மும்பை பாந்த்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 5-வது தளத்தை அவர் கடந்த 2019-ம் ஆண்டு வாங்கினார். இதே குடியிருப்பில் 7-வது தளம் கணவர் ரன்பீர் கபூருக்கு சொந்தமானது ஆகும்.

    இதுதவிர வெற்றிகரமான பெண் தொழில் அதிபராகவும் ஆலியா பட் திகழ்கிறார். பிரபல ஆடை பிராண்டின் உரிமையாளரான ஆலியா பட் நிர்வகிக்கும் நிறுவனத்தின் மதிப்பீடு தற்போது ரூ.150 கோடியை எட்டியிருக்கிறது. இந்த பிராண்ட் ஆடைகள் இந்தியா தாண்டி வெளிநாடுகளிலும் மிகவும் விரும்பப்படுகிறதாம்.

    இந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    இப்படி சினிமா தாண்டி தொழில் அதிபராகவும் ஆலியா பட் கலக்கி வருகிறார்.

    • சமூக வலைதளங்கள் மூலம் எனக்கு புனித் சிங் ராஜ்புத் அறிமுகம் ஆனார்.
    • நான் இனியும் அவருடன் தொடர்பில் இருக்க விரும்பவில்லை.

    போஜ்பூரி நடிகையான பிரியன்சு சிங், சக நடிகர் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார். தன்னுடன் இணைந்து நடித்த புனித் சிங் ராஜ்புத் மீது அவர் இந்த புகாரை கூறியிருக்கிறார்.

    இதுகுறித்து நடிகை பிரியன்சு சிங் கூறுகையில், "சமூக வலைதளங்கள் மூலம் எனக்கு புனித் சிங் ராஜ்புத் அறிமுகம் ஆனார். என் மூலமாகவே அவர் படங்களிலும் நடித்தார். என்னிடம் அன்பாக பழகிய அவர், என்னை திருமணம் செய்வதாக நம்பிக்கை அளித்தார். அதை நம்பி நானும் அவருடன் நெருக்கமாக பழகினேன்.

    ஒருநாள் நான் வீட்டில் தனியாக இருந்தபோது குடிபோதையில் வந்த அவர், என்னிடம் தகாத முறையில் அத்துமீறி நடந்துகொண்டார். பின்னர் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டு என்னை சமாதானப்படுத்தினார். திருமணம் செய்துகொள்வதாக அவர் தொடர்ந்து உறுதி அளித்ததால் நான் இதை பெரிதுபடுத்தவில்லை.

    இதற்கிடையில் இதேபோல மீண்டும் ஒருமுறை என்னிடம் அத்துமீறினார். முடியை பிடித்து இழுத்து சொல்லமுடியாத அளவில் என்னை பலாத்காரம் செய்தார். நான் இனியும் அவருடன் தொடர்பில் இருக்க விரும்பவில்லை. திருமணம் செய்துகொள்ளவும் விருப்பமில்லை. எனக்கு நீதி வேண்டும். புனித் சிங் ராஜ்புத் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என்றார்.

    நடிகையின் பாலியல் பலாத்கார புகார் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    ×