search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    • டேசியா மாடல்களை போன்றே காட்சியளிக்கிறது.
    • இந்த கார் 7 சீட்டர் வேரியண்டிலும் அறிமுகம் செய்யப்படலாம்.

    ரெனால்ட் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முற்றிலும் புதிய டஸ்டர் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனை ரெனால்ட்-இன் துணை பிராண்டு டேசியா அறிமுகம் செய்துள்ளது. புதிய டஸ்டர் மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து மற்ற சந்தைகளில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    இந்திய சந்தையில் முற்றிலும் புதிய டஸ்டர் மாடல் 2025 ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். மூன்றாம் தலைமுறை டஸ்டர் மாடல் CMF-B பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதே பிளாட்ஃபார்மில் இதுவரை பல்வேறு டேசியா, ரெனால்ட் மற்றும் நிசான் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன.

     

    இந்த காரின் முன்புறம் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் டேசியா மாடல்களை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், ரெனால்ட் பிராண்டிங்கில் அறிமுகமாகும் டஸ்டர் மாடலில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. இந்த கார் 7 சீட்டர் வேரியண்டிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    டேசியா டஸ்டர் மாடலில் 1.6 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் 1.2 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் ரி-ஜெனரேடிவ் பிரேக்கிங் வசதி வழங்கப்படுகிறது.

     

    இத்துடன் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் ஸ்டார்டர் மோட்டார் வழங்கப்படுகிறது. முந்தைய மாடலை போன்றே புதிய டஸ்டர் மாடலும் 4x2 மற்றும் 4x4 ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. 

    • இரு கார்களின் டாப் எண்ட் மாடல்களின் அம்சங்கள் உள்ளன.
    • காண்டிராஸ்ட் நிற க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது குஷக் எஸ்.யு.வி. மற்றும் ஸ்லேவியா செடான் மாடல்களின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 18 லட்சத்து 31 ஆயிரம், ரூ. 17 லட்சத்து 52 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    எலிகன்ஸ் எடிஷன் என்று அழைக்கப்படும் புதிய மாடல்களில் டீப் பிளாக் நிற வெளிப்புற பெயிண்ட், இரு கார்களின் டாப் எண்ட் மாடல்களின் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. பிளாக் ஃபினிஷ் தவிர கிரில், டெயில்கேட் மற்றும் டோர் மோல்டிங்களில் காண்டிராஸ்ட் நிற க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இரு மாடல்களின் கதவருகே படில் லேம்ப்கள் எனும் விசேஷ மின்விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

    குஷக் எலிகன்ஸ் எடிஷன் மாடலில் 17 இன்ச் வீகா அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் இரு கார்களின் ஸ்டீரிங் வீல் மற்றும் குஷன்களில் எலிகன்ஸ் எடிஷன் பேட்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் கிளஸ்டர், 6 ஸ்பீக்கர், சப்-ஊஃபர் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    புதிய எலிகன்ஸ் எடிஷன் மாடல்களில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 150 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    • புதிய கண்ட்ரிமேன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புதிய மினி கண்ட்ரிமேன் மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் அளவில் சிறிய கார்களை உற்பத்தி செய்வதில் உலகம் முழுக்க தனக்கென வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் பிராண்டாக மினி அறியப்படுகிறது. குட்டி கார் என்ற போதிலும், பெரும்பாலானோரை கவரும் வகையிலான டிசைன், ஃபிளாக்ஷிப் தர உற்பத்தி மற்றும் சக்திவாய்ந்த என்ஜின் என மினி கார்களில் அனைத்து அம்சங்களும் சிறப்பானதாகவே இருந்து வந்துள்ளன.

    அந்த வரிசையில், மினி பிராண்டின் முற்றிலும் புதிய கண்ட்ரிமேன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய 2025 மினி கண்ட்ரிமேன் மாடல், இதுவரை வெளியானதிலேயே மிகப்பெரிய மினி கார் ஆகும். அளவில் பெரிய கண்ட்ரிமேன் மாடலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.

    புதிய மினி கண்ட்ரிமேன் மாடல் S All4 மற்றும் JCW என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் S All4 வேரியண்டில் 2.0 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 241 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதன் JCW வேரியண்டில் 312 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் என்ஜின் வழங்கப்படுகிறது.

    2025 மினி கண்ட்ரிமேன் மாடலின் உற்பத்தி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கும் என்று தெரிகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மாடல்கள் 2024 மே மாதம் விற்பனை மையங்களை வந்தடையும் என்று கூறப்படுகிறது. இந்த கார் வெளியீட்டின் போதே All4 மற்றும் JCW என இரண்டு வேரியண்ட்களும் கிடைக்கும். இதே காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அடுத்த ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படலாம்.

    • டெஸ்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாக கூறப்பட்டது.
    • இது மிட்-சைஸ் கிராஸ்ஒவர் எஸ்.யு.வி. ஆகும்.

    எலான் மஸ்க்-இன் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யும் நிறுவனமான டெஸ்லா தனது குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் மாடலை ஜெர்மனி நாட்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் இரண்டு கதவுகளை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதுதவிர இந்த குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் ஜெர்மனியை தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    இந்திய சந்தையில் டெஸ்லா களமிறங்குவது குறித்து எலான் மஸ்க் சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்படவில்லை. எனினும், இந்நிறுவனம் தனது மாடல்களில் சிலவற்றை அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் இறக்குமதி செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும், இதுபற்றிய தகவல்கள் ரகசியமாகவே உள்ளன.

    கடந்த 2020 ஆண்டு டெஸ்லா அறிமுகம் செய்த எலெக்ட்ரிக் கார் "மாடல் Y" சற்றே குறைந்த விலை பிரிவுக்கு ஏற்றதாக இருக்கும் என்று தெரிகிறது. இது மிட்-சைஸ் கிராஸ்ஒவர் எஸ்.யு.வி. ஆகும். இந்த எலெக்ட்ரிக் கார் மாடல் 3 செடான் உருவாக்கப்பட்ட பிளாட்ஃபார்மை தழுவி டிசைன் செய்யப்பட்டு இருந்தது.

    முன்னதாக வெளியான தகவல்களில் இந்திய அரசாங்கத்துடன் டெஸ்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாக கூறப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் டெஸ்லா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து, அதன்பிறகு இரண்டு ஆண்டுகளுக்குள் உற்பத்தி ஆலையை கட்டமைக்க இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

    • புதிய ஸ்கூட்டர் அளவில் பெரியதாக இருக்கும்.
    • மனதில் வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களை ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் இணை நிறுவனரும், மூத்த நிர்வாக அதிகாரியுமான தருன் மேத்தா உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்றும் தெரிவித்தார்.

    இது தொடர்பான எக்ஸ் பதிவில், "புதிய ஸ்கூட்டர் அளவில் பெரியதாக இருக்கும் என்றும், அது குடும்ப பயன்பாட்டுக்கான ஒன்றாக இருக்கும் என்றும் இது ஒட்டுமொத்த குடும்பத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது," என்று அவர் தெரிவித்துள்ளார்.

    தற்போது ஏத்தர் எனர்ஜி விற்பனை செய்து வரும் 450 சீரிசை தழுவியே புதிய மாடலும் உருவாக்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், புதிய ஏத்தர் 450 சீரிஸ் தலைசிறந்த செயல்திறன் வழங்குவதில் சிறப்பான மாடலாக அறியப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    "அந்த மாடலில் ரைடிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்பான அம்சங்கள் வழங்கப்படும்," என்று அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார். இந்த மாடலின் விற்பனை அடுத்த ஆண்டு துவக்கத்தில் துவங்கலாம் என்றும் இதன் விலை சற்று அதிகமாக இருந்தாலும், அது கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற அம்சங்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    • இசை சார்ந்த அனுபவத்தை மேம்படுத்தும் வசதிகள் உள்ளன.
    • ஸ்கோடா ஸ்லேவியா மாடலிலும் இதே அப்டேட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது விர்டுஸ் மற்றும் டைகுன் சவுண்ட் எடிஷன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. சில வாரங்களுக்கு முன்பு டைகுன் டிரையல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சவுண்ட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய வோக்ஸ்வேகன் விர்டுஸ் சவுண்ட் எடிஷன் மாடலின் விலை ரூ. 15 லட்சத்து 52 ஆயிரம் என்று துவங்குகிறது. டைகுன் சவுண்ட் எடிஷன் விலை ரூ. 16 லட்சத்து 33 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களிலும் மெக்கானிக்கல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாமல், இசை சார்ந்த அனுபவத்தை மேம்படுத்தும் வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    சவுண்ட் எடிஷன்என்ற பெயருக்கு ஏற்றார் போல் இரு மாடல்களிலும் ஸ்பீக்கர் மற்றும் ஆம்ப்லிஃபயர் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் பவர்டு முன்புற இருக்கைகள் உள்ளன. இதே போன்ற அம்சங்கள் இரு மாடல்களின் GT பிளஸ் வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. வோக்ஸ்வேகன் போன்றே ஸ்கோடா நிறுவனமும் தனது ஸ்லேவியா மாடலில் இதே அப்டேட்களை வழங்கி உள்ளது.

    இரு கார்களின் வெளிப்புற சி-பில்லர் மற்றும் கதவுகள் அருகே ஸ்பெஷல் எடிஷன் பேட்ஜிங் வழங்கப்படுகிறது. டைகுன் மாடலில் காண்டிராஸ்ட் நிற ரூஃப் மற்றும் விங் மிரர்கள் வழங்கப்படுகிறது. வோக்ஸ்வேகன் விர்டுஸ், டைகுன் சவுண்ட் எடிஷன் மாடல்கள்- லாவா புளூ, கார்பன் ஸ்டீல் கிரே, வைல்டு செர்ரி ரெட் மற்றும் ரைசிங் புளூ என நான்கு நிறங்களில் கிடைக்கின்றன.

    வோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் டைகுன் சவுண்ட் எடிஷன் மாடல்களில் 1.0 லிட்டர் TSI என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 115 ஹெச்.பி. பவர், 178 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இரு கார்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    இந்திய சந்தையில் வோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடல் ஸ்கோடா ஸ்லேவியா, ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சியாஸ் மாடல்களுக்கும், டைகுன் மாடல் ஹோண்டா எலிவேட், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் ஸ்கோடா குஷக் போன்ற மாடல்களுக்கும் போட்டியாக அமைகின்றன.

    • புதிய எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்த வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 520 கிமீ ரேன்ஜ் வழங்குகிறது.

    எம்.ஜி. நிறுவனத்தின் சைபர்ஸ்டர் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட எம்.ஜி. சைபர்ஸ்டர் தற்போது சீனாவில் அறிமுகமாகி இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் கிளாமர் எடிஷன், ஸ்டைல் எடிஷன் மற்றும் பயோனிர் எடிஷன் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இந்த மூன்று வேரியண்ட்களும் RWD 501, RWD 580 மற்றும் AWD 520 என மூன்று வித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. எம்.ஜி. சைபர்ஸ்டர் மாடல் ஆடம்பர எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். இதில் 77 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 536 ஹெச்.பி. பவர், 725 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் டூயல் மோட்டார் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 520 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. எம்.ஜி. சைபர்ஸ்டர் மாடலில் உள்ள கன்வெர்டிபில் சாஃப்ட் டாப்-ஐ (மேற்கூரை) மின்திறன் மூலம் இயக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் லம்போர்கினி கார்களில் உள்ளதை போன்ற சிசர் ரக கதவுகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும்.

    விலையை பொருத்தவரை எம்.ஜி. சைபர்ஸ்டர் மாடல் CNY 3,19,800 இந்திய மதிப்பில் ரூ. 37 லட்சம் என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை CNY 3,55,800 இந்திய மதிப்பில் ரூ. 41 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    • இரு மாடல்களிலும் ஒரே மாதிரியான முன்புற பம்ப்பர் உள்ளது.
    • இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 708 கி.மீ. ரேன்ஜ் வழங்குகிறது.

    அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் லுசிட் மோட்டார்ஸ் தனது முதல் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. கிராவிட்டி என அழைக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஏர் செடான் மாடலை அடுத்து லுசிட் மோட்டார்ஸ் அறிமுகம் செய்த இரண்டாவது மாடல் இது ஆகும்.

    புதிய லுசிட் கிராவிட்டி மாடல் இரண்டு மற்றும் மூன்றடுக்கு இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இந்த காரின் உற்பத்தி பணிகள் 2024 வாக்கில் துவங்கும் என்று தெரிகிறது. தோற்றத்தில் இந்த கார் ஏர் செடான் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் ஒரே மாதிரியான முன்புற பம்ப்பர் மற்றும் ஹெட்லேம்ப்கள் வழங்கப்படுகின்றன.

    இதன் பின்புறத்தில் மெல்லிய டிசைன், கிளாஸ் ரூஃப், நீண்ட ஓவர்ஹேங், கூர்மையான சி பில்லர், ரியர் ஸ்பாயிலர் வழங்கப்பட்டு இருக்கிறது. உள்புறம் இரண்டு ஸ்கிரீன்கள் உள்ளன. இதில் ஒன்று 34 இன்ச் அளவில் கர்வ்டு டிஸ்ப்ளே ஆகும். இது ஸ்டீரிங் வீலின் மேல்புறமாக பொருத்தப்பட்டு இருக்கிறது. மற்றொரு ஸ்கிரீன் டேஷ்போர்டின் மத்தியில் உள்ளது.

    இத்துடன் 22 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்டிங், இருக்கைகளில் மசாஜ் வசதி வழங்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் ஐந்து இருக்கைகள் மற்றும் ஆறு அல்லது ஏழு இருக்கைகள் என மூன்றுவித இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இதில் உள்ள டூயல் மோட்டார் செட்டப் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை வழங்குகிறது.

    இவை 792 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.67 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 708 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. 

    • இந்த காரில் ஏராளமான சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
    • இந்த தொழில்நுட்பம் ஓட்டுனர்களுக்கு நிம்மதியை கொடுக்கும்.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது 7 சீரிஸ் மாடல்களில் லெவல் 3 ஆட்டோனோமஸ் டிரைவிங் தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. 2024 ஆண்டு முதல் விற்பனை செய்யப்படும் 7 சீரிஸ் மாடல்களில் இந்த தொழில்நுட்பம் வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் புதிய பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ் மாடல்கள் அதிகபட்சம் மணிக்கு 96.5 கிலோமீட்டர் வேகத்தில் தானியங்கி முறையில் இயங்கும்.

    7 சீரிஸ் மட்டுமின்றி பி.எம்.டபிள்யூ. i7 எலெக்ட்ரிக் செடான் மாடல்களிலும் லெவல் 3 ஆட்டோனோமஸ் டிரைவிங் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது இந்த தொழில்நுட்பம் ஓட்டுனர்களுக்கு நிம்மதியை கொடுக்கும் என்று தெரிகிறது.

    தானியங்கி முறையில் செல்வதோடு, கார் விபத்தில் சிக்குவதை பெருமளவுக்கு தடுக்கவும் லெவல் 3 ஆட்டோனோமஸ் டிரைவிங் தொழில்நுட்பம் உதவும். இதற்காக இந்த காரில் ஏராளமான சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை அதிக வெளிச்சம் நிறைந்த பகல் நேரங்கள் மட்டுமின்றி, இரவு நேரத்திலும் சீராக இயங்கும் என்று கூறப்படுகிறது.

    புதிய பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ் மற்றும் i7 எலெக்ட்ரிக் செடான் மாடல்களில் அதிநவீன சென்சார்கள், ரேடார், 3D Lidar மற்றும் அல்ட்ராசோனிக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த சென்சார்கள் 2024 பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ் மற்றும் i7 மாடல்களை அனைத்து விதமான வானிலைகளின் போதும் அருகில் உள்ள பொருட்களை துல்லியமாக கண்டறிய உதவும்.

    புதிய சென்சார்கள் வழங்கப்படுவதால், பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது 7 சீரிஸ் மற்றும் i7 செடான் மாடல்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிகிறது. 

    • இந்தியாவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் வினியோகம் செய்யப்பட்டது.
    • சரக்கு விமானத்தில் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு இருக்கலாம்.

    பிரிட்டனை சேர்ந்த உலகின் முன்னணி ஆடம்பர கார் உற்பத்தியாளர் ரோல்ஸ் ராய்ஸ். இதன் முதல் எலெக்ட்ரிக் கார் தான் ஸ்பெக்டர். சர்வதேச சந்தையில் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இதன் இந்திய வெளியீடு இதுவரை நடைபெறவில்லை. எனினும், இந்தியாவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் வினியோகம் செய்யப்பட்டு விட்டது.

    முற்றிலும் புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடல் சென்னையில் வினியோகம் செய்யப்பட்ட புகைப்படங்களை ஆட்டோமொபிலி ஆர்டென்ட் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. புகைப்படங்களின் படி ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடல் கனரக வாகனம் ஒன்றில் இருந்து தோட்டத்தில் இறக்கப்படுகிறது.

    சென்னையில் வினியோகம் செய்யப்பட்டு இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் சரக்கு விமானத்தில் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சென்னையில் இந்த எலெக்ட்ரிக் ரோல்ஸ் ராய்ஸ் காரை யார் வாங்கியுள்ளார் என்ற தகவல் மர்மமாகவே உள்ளது. இந்தியாவில் இதுவரை அறிமுகம் செய்யப்படாத நிலையில், ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் சென்னையில் வினியோகம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் இந்திய விலை ரூ. 9 கோடி, எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. முற்றிலும் எலெக்ட்ரிக் திறன் கொண்டிருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடலில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார்கள் 577 ஹெச்.பி. வரையிலான திறன், 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 418 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது.

    • லம்போர்கினி ரிவால்டோ மாடலில் 6.5 லிட்டர் வி12 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த கார் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை 2.5 நொடிகளில் எட்டிவிடும்.

    லம்போர்கினி நிறுவனத்தின் முற்றிலும் புதிய சூப்பர் கார் ரிவால்டோ இந்திய சந்தையில் அடுத்த மாதம் 6-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது அந்நிறுவனத்தின் மிகவும் பிரபலமான அவென்டடார் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். ஹைப்ரிட் சூப்பர்கார் என்ற முறையில், இந்த காரில் வி12 ரக என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    லம்போர்கினி ரிவால்டோ மாடலில் 6.5 லிட்டர் வி12 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 825 ஹெச்.பி. பவர், 725 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜினுடன் மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் 3.8 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த சூப்பர்காரில் உள்ள என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்கள் ஒருங்கிணைந்து 1015 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆல் வீல் டிரைவ் செட்டப் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 2.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் இறக்குமதி செய்யப்படும் என்பதால், புதிய லம்போர்கினி ரிவால்டோ விலை ரூ. 8 கோடியில் இருந்து துவங்கும் என்று தெரிகிறது. இதன் ஆன் ரோடு விலை கிட்டத்தட்ட ரூ. 10 கோடி வரை நிர்ணயம் செய்யப்படலாம். இந்த மாடலுக்கான முன்பதிவு தற்போதைக்கு துவங்காது என்றே தெரிகிறது. முன்னதாக இந்த ஆண்டுக்கான யூனிட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததாக லம்போர்கினி அறிவித்தது.

    • லோட்டஸ் எலெட்ரெ எஸ்.யு.வி. மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • புதிய லோட்டஸ் எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 600 கி.மீ. ரேன்ஜ் வழங்குகிறது.

    பிரிட்டன் நாட்டு கார் உற்பத்தியாளரான லோட்டஸ் இந்திய சந்தையில் தனது முதல் வாகனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த வாகனம் முற்றிலும் எலெக்ட்ரிக் மூலம் இயங்கும் ஹைப்பர் எஸ்.யு.வி. ஆகும். இந்த மாடல் எலெட்ரெ, எலெட்ரெ S மற்றும் எலெட்ரெ R என மூன்று ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த மாடல் நாடு முழுக்க லோட்டஸ் விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

    காரின் வெளிப்புறம் லோட்டஸ் எலெட்ரெ மாடலில் பிரமாண்ட முகப்பு, மெல்லிய மற்றும் அம்பு வடிவிலான டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் செட்டப், ஆக்டிவ் கிரில் மற்றும் அகலமான ஏர் டேம்கள் உள்ளன. பக்கவாட்டில் பிளாக் பெயின்ட் செய்யப்பட்ட ரூஃப், பிளாக்டு அவுட் வீல் ஆர்ச்கள் வழங்கப்பட்டு உள்ளன.

     

    பின்புறத்தில் ஃபுல் லென்த் எல்.இ.டி. லைட் பார் உள்ளது. இது டெயில் லைட்களுடன் இணையும் வகையில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் ரூஃப் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், ஏர் டேம்கள், ஸ்லோபிங் ரூஃப்லைன், பிளாக்டு-அவுட் ரியர் பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. லோட்டஸ் எலெட்ரெ மாடல் நேட்ரான் ரெட், காலோவே கிரீன், ஸ்டெல்லார் பிளாக், கைமு கிரே, பிளாசம் ரிபே மற்றும் சோலார் எல்லோ போன்ற நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இதன் உள்புறத்தில் 15.1 இன்ச் அளவில் மடிக்கக்கூடிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லோட்டஸ் ஹைப்பர் ஒ.எஸ்., 4-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 12 வழிகளில் எலெகெட்ரிக் அட்ஜஸ்ட வசதி கொண்ட முன்புற இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ADAS சூட், ஏர் பியூரிஃபையர், மல்டி-கலர் ஆம்பியண்ட் லைட்டிங், 15 ஸ்பீக்கர்கள் அடங்கிய சவுண்ட் சிஸ்டம் உள்ளது.

     

    இந்த எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் நான்கு மற்றும் ஐந்து பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இத்துடன் இன்டீரியர் தீம்-ஐ ஆறு விதமான ஸ்டைல்களில் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

    புதிய லோட்டஸ் எலெட்ரெ மாடலில் 112 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. எலெட்ரெ மற்றும் எலெட்ரெ S மாடல்களில் டூயல் மோட்டார் செட்டப் உள்ளது. இவை முழு சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன. செயல்திறனை பொருத்தவரை 600 ஹெச்.பி. பவர், 710 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

     

    எலெட்ரெ R மாடலில் டூயல் மோட்டார் செட்டப், 2 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 490 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இது 900 ஹெச்.பி. பவர், 985 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    விலை விவரங்கள்:

    லோட்டஸ் எலெட்ரெ ரூ. 2 கோடியே 55 லட்சம்

    லோட்டஸ் எலெட்ரெ S ரூ. 2 கோடியே 75 லட்சம்

    லோட்டஸ் எலெட்ரெ R ரூ. 2 கோடியே 99 லட்சம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ×