என் மலர்tooltip icon

    இது புதுசு

    • பெயர்கள் மாற்றப்படும் என எதிர்பார்க்கலாம்.
    • புதிய ஏ.சி. வெண்ட்கள் வழங்கப்படுகின்றன.

    மஹிந்திரா நிறுவனம் தனது XUV300 பேஸ்லிப்ட் மாடலுக்கான டீசரை முதல் முறையாக வெளியிட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் சர்வதேச சந்தையில் ஏப்ரல் 29 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    மேம்பட்ட புதிய சப்-4 மீட்டர் எஸ்.யு.வி. மாடலுக்கு மஹிந்திரா XUV 3XO என அந்நிறுவனம் பெயரிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அறிமுகம் செய்யப்படும் ஒட்டுமொத்த XUV மாடல்களும் இதே போன்ற பெயர்கள் மாற்றப்படும் என எதிர்பார்க்கலாம்.

    டீசரில் புதிய மஹிந்திரா XUV 3XO மாடலின் முன்புறம் புதிய தோற்றம் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் செட்டப், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லைட்கள், வட்ட வடிவம் கொண்ட ஃபாக் லேம்ப்கள், எல் வடிவம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், புதிய பேட்டன் கொண்ட கிரில், டூயல் டோன் அலாய் வீல்கள் உள்ளன.

    இத்துடன் புதிதாக சி வடிவம் கொண்ட எல்.இ.டி. டெயில் லைட்கள், கனெக்டெட் எல்.இ.டி. லைட் பார், ரியர் வைப்பர் மற்றும் வாஷர், பின்புறத்தில் XUV 3XO லெட்டரிங் உள்ளது. இவைதவிர டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், புதிய ஏ.சி. வெண்ட்கள் வழங்கப்படுகின்றன.

    புதிய மஹிந்திரா XUV 3XO மாடலிலும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏ.எம்.டி. யூனிட்கள் வழங்கப்படுகின்றன.

    இந்திய சந்தையில் அறிமுகமானதும் மஹிந்திரா XUV 3XO கார், மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்சான், கியா சொனெட், ஹூண்டாய் வென்யூ, ரெனால்ட் கைகர் மற்றும் நிசான் மேக்னைட் போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும் என்று தெரிகிறது.

    • முழு சார்ஜ் செய்தால் நீண்ட தூரம் செல்லும் ரேன்ஜ் வழங்குகிறது.
    • அதிக ரேன்ஜ் வழங்கும் என்பது அனைவரையும் திரும்பி பார்க்க செய்திருக்கிறது.

    தாய்லாந்தை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் ஸ்மார்டெக் 45 ஆவது பாங்காக் மோட்டார் விழாவில் தனது முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் டூரிங் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. ஃபெலோ டூஸ் என அழைக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் முழு சார்ஜ் செய்தால் நீண்ட தூரம் செல்லும் ரேன்ஜ் வழங்குகிறது.

    புதிய எலெக்ட்ரிக் டூரர் பைக்கின் பேட்டரி மற்றும் மோட்டார் பற்றிய விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த எலெக்ட்ரிக் பைக் முழு சார்ஜ் செய்தால் 720 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்பது அனைவரையும் திரும்பி பார்க்க செய்திருக்கிறது.


     

    ஃபெலோ டூஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் உள்ள வெஹிகில் டு லோட் அல்லது V2L என்ற அம்சம் கொண்டு பயனர்கள் மோட்டார்சைக்கிளின் பேட்டரியை கொண்டு மற்ற சாதனங்களுக்கு சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும். டூஸ் மாடலில் உள்ள பேட்டரியை 20-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 20 நிமிடங்களே ஆகும். இந்த பைக்கினை டைப் 2 சார்ஜர் கொண்டு சார்ஜ் ஏற்றலாம்.

    ஹோண்டா கோல்டுவிங் மாடலை போன்ற தோற்றம் கொண்டிருக்கும் ஃபெலோ டூஸ் மாடலில் ஃபிளாட் பாடி பேனல்கள் மற்றும் அளவில் பெரிய டாப் பாக்ஸ் மற்றும் பேனியர்கள் (பொருட்களை வைத்துக் கொள்வதற்கான பெட்டி) பேனியர்களில் ஒன்றை சில்டு பாக்ஸ்-ஆக மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது.

    இந்த மாடலில் 12 இன்ச் டி.எப்.டி. டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, ஏ.பி.எஸ். மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் வசதிகள் உள்ளன. சர்வதேச சந்தையில் இந்த மாடல் எப்போது அறிமுகமாகும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. எனினும், தாய்லாந்தில் இந்த மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    • சியோமி SU7 மாடல் மே மாதம் விற்பனைக்கு வருகிறது.
    • 900 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும்.

    சியோமி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனம் - SU7 மாடலை அறிமுகம் செய்தது. ஆன்லைன் நேரலையில் சியோமி தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை அறிவித்தார். அறிமுகத்தின் போது புதிய SU7 மாடலை டெஸ்லா மாடல் 3 காருடன் நேரடியாக ஒப்பிட்டார். இதோடு, சியோமி SU7 மாடல் சீன சந்தையில் மே மாதம் விற்பனைக்கு வரும் என்று அறிவித்துள்ளார்.

    புதிய சியோமி SU7 மாடலில் டூயல் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை இணைந்து 637 ஹெச்.பி. பவர், 838 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. பயனர்கள் தேர்வு செய்யும் வேரியண்டிற்கு ஏற்ப சியோமி SU7 மாடல் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 900 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று சியோமி தெரிவித்துள்ளது.

     


    இந்த எலெக்ட்ரிக் கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 2.78 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 265 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. ஐந்து மீட்டர்கள் நீளமாக உள்ள சியோமி SU7 2 மீட்டர்கள் அகலம், 3 மீட்டர்கள் வீல்பஸ் கொண்டிருக்கிறது. இந்த கார் மொத்தத்தில் ஒன்பது விதமான நிறங்களில் கிடைக்கும்.

    புதிய எலெக்ட்ரிக் கார் அம்சங்களில் - வாட்டர் டிராப் ஹெட்லைட்கள், ஹாலோ டெயில் லைட்கள், ஆக்டிவ் ரியர் ஸ்பாயிலர், ஃபுளோயிங் கர்வ், மறைக்கப்பட்ட நிலையில் கதவுகளின் கைப்பிடிகள் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க அம்சங்களாக உள்ளன. இந்த எலெக்ட்ரிக் கார் சியோமியின் ஹைப்பர் ஒ.எஸ். கொண்டிருக்கிறது.

    இதை கொண்டு பயனர்கள் தங்களது சியோமி ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் இதர சாதனங்களை காருடன் இணைத்துக் கொள்ள முடியும். இந்த காரில் ராப்-அரவுண்ட் காக்பிட், பல்வேறு ஸ்கிரீன்கள், டிரைவர் அசிஸ்டன்ஸ் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    சியோமி SU7 பேஸ் மாடலில் 73.6 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இது முழு சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது. இந்த வேரியண்ட் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும். இதன் விலை சீன சந்தையில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 900 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 24 லட்சத்து 90 ஆயிரத்து 413 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த காரின் டாப் என்ட் வேரியண்டில் 101 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இதை முழு சார்ஜ் செய்தால் 900 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும். இதன் விலை 2 லட்சத்து 99 ஆயிரத்து 900 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 34 லட்சத்து 59 ஆயிரத்து 356 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும்.
    • எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து மேம்பட்ட திட்ட விவரங்கள் வெளியீடு.

    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் முற்றிலும் புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. 2026 ஆம் ஆண்டிற்குள் ஆறு எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய ஜாகுவார் லேண்ட் ரோவர் முடிவு செய்துள்ள நிலையில், இது அந்த பட்டியலில் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும் என்று தெரிகிறது.

    எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ரி-இமாஜின் டிரான்ஸ்ஃபர்மேஷன் ஸ்டிராடஜி என்ற திட்டத்தை உருவாக்கி இருப்பதாக அதன் தலைமை செயல் அதிகாரி தெய்ரி பாலோர் தெரிவித்து இருந்தார். தற்போது ஜாகுவார் லேண்ட் ரோவர் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் அட்ரியன் மார்டெல் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து மேம்பட்ட திட்ட விவரங்களை வெளியிட்டுள்ளார்.

     


    அதில், "2026 ஆம் ஆண்டிற்குள் ஆறு லேண்ட் ரோவர்கள் பற்றி தெரிவித்து இருந்தோம். 2026 ஆம் ஆண்டிற்குள் ஆறு ஜாகுவார் லேண்ட் ரோவர் மாடல்களை வைத்திருப்பது கிட்டத்தட்ட சாத்தியமாகி வருகிறது. புதிய தொழில்நுட்பம் கொண்டு இதுவரை நாங்கள் உருவாக்கியதிலேயே மிகவும் சிறப்பான வாகனங்களை உற்பத்தி செய்வதில் நாங்கள் கவனமுடன் பணியாற்றி வருகிறோம்," என்று தெரிவித்தார்.

    தற்போது மாற்றப்பட்ட புதிய திட்டப்படி ரேன்ஜ் ரோவர் EV மற்றும் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் EV மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் EV மாடல் முதலில் அறிமுகம் செய்யப்படுகிறது. இரு மாடல்களும் MLA பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. இவற்றுடன் இரண்டு சிறிய எஸ்.யு.வி.-க்கள் முற்றிலும் புதிய EMA பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட இருக்கிறது.

    சிறிய கார்கள் ரேன்ஜ் ரோவர் இவோக் மற்றும் வெலார் EV மாடல்களாக இருக்கும் என்று தெரிகிறது. நான்கு கார்கள் தவிர டிஸ்கவரி ஸ்போர்ட் மற்றும் டிஃபென்டர் மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் இணையும் என்று எதிர்பார்க்கலாம். 

    • புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
    • 18 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது.

    போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது குர்கா 5-டோர் எஸ்.யு.வி. மாடலுக்கான டீசரை வெளியிட்டுள்ளது. போர்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எஸ்.யு.வி.-க்களில் ஒன்றாக குர்கா மாடல் விளங்குகிறது. முன்னதாக இந்த மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    இந்த நிலையில், போர்ஸ் குர்கா 5 கதவுகள் கொண்ட மாடல் இந்திய சந்தையில் 2023 அரையாண்டிற்குள் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய குர்கா 5-டோர் வேரியண்ட் அதன் தற்போதைய 3-டோர் வேரியண்டை விட புதிய டிசைன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த மாடலில் 18 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது.

    புதிய குர்கா மாடலின் கேபின் லே-அவுட் மாற்றமின்றி 3-டோர் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது. குர்கா 5-டோர் மாடல் இரண்டடுக்கு இருக்கைகளுடன் ஐந்து இருக்கைகள் மற்றும் மூன்றடுக்கு இருக்கைகளுடன் ஆறு இருக்கைகள் மற்றும் ஏழு பேர் அமரும் வகையில் கேப்டன் இருக்கை போன்ற ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    போர்ஸ் குர்கா 5-டோர் மாடலில் மெர்சிடிஸ் 2.6 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதே போன்ற செட்டப் குர்கா 3-டோர் வெர்ஷனிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. விலையை பொருத்தவரை இந்த மாடல் தற்போதைய 3-டோர் வெர்ஷனை விட ரூ. 1.5 லட்சம் வரை அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    • முந்தைய கார் பெட்ரோல் ஆப்ஷனில் மட்டுமே கிடைத்தது.
    • புதிய கார் மணிக்கு 100 கிமீ வேகத்தை 7.9 நொடிகளில் எட்டிவிடும்.

    ஜெர்மனியை சேர்ந்த ஆடம்பர கார் உற்பத்தியாளர் பி.எம்.டபிள்யூ. இந்திய சந்தையில் தனது 620d M ஸ்போர்ட் சிக்னேச்சர் கார் மாடலை அறிமுகம் செய்தது. புதிய பி.எம்.டபிள்யூ. M காரின் விலை ரூ. 78 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் பெட்ரோல் ஆப்ஷனில் மட்டும் கிடைத்த நிலையில், இந்த வெர்ஷன் டீசல் பவர்டிரெயின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

    புதிய பி.எம்.டபிள்யூ. காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய 620d M ஸ்போர்ட் சிக்னேச்சர் எடிஷன் மாடல்- மினரல் வைட், டான்சனைட் புளூ, ஸ்கை ஸ்கிரேப்பர் கிரே மற்றும் கார்பன் பிளாக் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.

     


    அம்சங்களை பொருத்தவரை இரட்டை 12.3 இன்ச் ஸ்கிரீன்கள்- ஒன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றொன்று இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ரியர்வியூ கேமரா, பார்க் அசிஸ்ட், ரிமோட் கண்ட்ரோல் பார்க்கிங் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜர், ஸ்மார்ட்போன் ஹோல்டர், பேடில் ஷிஃப்டர்கள், பானரோமிக் சன்ரூஃப், 16 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    பி.எம்.டபிள்யூ. 620d M ஸ்போர்ட் சிக்னேச்சர் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 188 ஹெச்.பி. பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 7.9 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் கம்ஃபர்ட், கம்ஃபர்ட் பிளஸ், ஸ்போர்ட் , இகோ ப்ரோ மற்றும் அடாப்டிவ் என ஐந்துவித டிரைவிங் மோட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    • இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • ஹெட்-அப் டிஸ்ப்ளேவை பொருத்திக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

    ஆடி நிறுவனத்தின் முற்றிலும் புதிய கியூ6 இ டிரான் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆடியின் புதிய எலெக்ட்ரிக் கார் பி.பி.இ. பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்.யு.வி. மாடல் டூயல் மோட்டார் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இந்த கார் மாடல் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கியூ6 இ டிரான் மாடல் ஆடியின் முற்றிலும் புதிய டிசைன் மற்றும் ஸ்ப்லிட் ஹெட்லைட் செட்டப் கொண்டிருக்கிறது. இந்த காரின் முன்புறம் க்ளோஸ்டு ஆஃப் கிரில், அழகிய தோற்றம் கொண்ட டி.ஆர்.எல்.கள், முன்புறம் அகலமான ஏர் இன்டேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த காரில் ஆடியின் முற்றிலும் புதிய டிஜிட்டல் லைட் சிக்னேச்சர் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    இந்த காரின் உள்புறம் பானரோமிக் டிஸ்ப்ளே, 11.9 இன்ச் ஆடி விர்ச்சுவல் காக்பிட், 14.5 இன்ச் MMI டச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஸ்டீரிங் வீலில் பட்டன்களுக்கு மாற்றாக டச் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன. பயனர்கள் விரும்பும் பட்சத்தில் இந்த எஸ்.யு.வி.-யில் ஆக்மென்டெட் ரியாலிட்டி ஹெட்-அப் டிஸ்ப்ளேவை பொருத்திக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.


     

    பவர்டிரெயினை பொருத்தவரை ஆடி கியூ6 இ டிரான் மாடலில் 382 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் டூயல் மோட்டார் செட்டப் உள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.9 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இதில் உள்ள 100 கிலோவாட் ஹவர் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 625 கிலோமீட்டர்கள் ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது.

    • இந்திய ராணுவத்திற்காக விசேஷமாக உருவாக்கி இருக்கிறது.
    • பாதுகாப்பு மற்றும் பல்வேறு இதர பணிகளில் இதனை பயன்படுத்த முடியும்.

    இந்திய ராணுவத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஆயுதம் தாங்கிய இலகுரக வாகனம்- அர்மாடோ (Armoured Light Specialist Vehicle-ASLV) 2024 குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்டது. மஹிந்திரா நிறுவனம் இந்த வாகனத்தை இந்திய ராணுவத்திற்காக மிகவும் விசேஷமாக உருவாக்கி இருக்கிறது.

    முழுக்க முழுக்க இந்தியாவிலேயே டிசைன் செய்யப்பட்ட மஹிந்திரா அர்மாடோ ராணுவ பயன்பாட்டுக்கு தேவையான அதிநவீன தொழில்நுட்பங்கள், அதிகளவு பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கிறது. பலவிதங்களில் பயன்படுத்தக்கூடிய மிக முக்கிய வாகனங்களில் ஒன்றாக ஆயுதம் தாங்கிய இலகுரக வாகனம் விளங்குகிறது.

     


    அந்த வகையில், மஹிந்திரா உருவாக்கும் அர்மாடோ மாடலில் பி7 மற்றும் ஸ்டனாக் லெவல் II பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அதிநவீன வாகனம் என்ற வகையில், இது சிறப்பு படையினர், தீவிரவாத தடுப்பு படை, எல்லை பாதுகாப்பு மற்றும் பல்வேறு இதர பணிகளில் இதனை பயன்படுத்த முடியும். அர்மாடோ மாடலில் 3.2 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டைரக்ட் இன்ஜெக்ஷன் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் பலவித எரிபொருள்களில் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. செயல்திறனை பொருத்தவரை இந்த யூனிட் 215 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஆல்-வீல் டிரைவ் வசதி மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

     


    வாகனத்தில் 1000 கிலோ எடை ஏற்றப்பட்ட நிலையிலும் அர்மாடோ மாடல் மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த வாகனத்தின் டயர்களில் காற்று இல்லாமலோ அல்லது பன்ச்சர் ஆன நிலையில்கூட 50 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும். கடினமான சூழலிலும் பயன்படுத்த ஏதுவாக இதில் செல்ஃப்-கிளீனிங் எக்சாஸ்ட் மற்றும் ஃபில்ட்ரேஷன் சிஸ்டம் உள்ளது.

    இவைதவிர அர்மாடோ மாடலில் ஆயுதங்களை பொருத்திக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் ஹம்மர் போன்ற டிசைன் கொண்டிருக்கும் அர்மாடோ அசாத்திய செயல்திறன், அதிநவீன தொழில்நுட்பத்துடன் ராணுவ பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா அர்மாடோ குறித்த பதிவை தனது எக்ஸ் அக்கவுண்டில் பகிர்ந்து இருக்கிறார்.



    • காரின் அம்சங்கள் செடான் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ளது.
    • இந்த காரில் லெவல் 2 ADAS, 360 டிகிரி சரவுண்ட் கேமரா, பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது.

    பி.ஒய்.டி. நிறுவனம் தனது 2024 அட்டோ 3 மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மேம்பட்ட மாடலின் வெளிப்புறம் காஸ்மடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, புதிய நிற ஆப்ஷன்கள் மற்றும் மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சில அம்சங்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சீல் செடான் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ளது.

    புதிய கார் காஸ்மோஸ் பிளாக் பெயரில் புது நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் புதிய பேட்டன் டிசைன் கொண்ட 18-இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இதன் பின்புறம் பில்டு யுவர் டிரீம்ஸ் லோகோவுக்கு மாற்றாக பி.ஒய்.டி. எழுத்துக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. உள்புறத்தில் 15.6 இன்ச் அளவில் சுழலக்கூடிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.

     


    பி.ஒய்.டி. அட்டோ 3 மாடலில் டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், வென்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், பவர்டு டிரைவர் சீட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், வயர்லெஸ் சார்ஜர், லெவல் 2 ADAS, 360 டிகிரி சரவுண்ட் கேமரா, பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது.

    புதிய அட்டோ 3 மாடலில் 60.48 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 521 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது. இதில் உள்ள பேட்டரி பேக் 80 கிலோவாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதை கொண்டு காரை 50 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும்.

    சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் இந்த மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பி.ஒய்.டி. அட்டோ 3 மாடலின் விலை ரூ. 33 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • ஸ்கோடா மாடல்களில் இந்த அம்சம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.
    • கார்களை அப்டேட் செய்யும் பணிகளில் அந்நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

    ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் மற்றும் ஸ்லேவியா மாடல்கள் அப்டேட் செய்யப்பட்டு விரைவில் இவற்றின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. ஸ்கோடா இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் கார் மாடல்களை அப்டேட் செய்யும் பணிகளில் அந்நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில், ஸ்கோடா ஃபேஸ்லிஃப்ட் கார் மாடல்களில் கூடுதல் அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. இதனை ஸ்கோடா இந்தியா பிரான்டு இயக்குநர் பீட்டர் ஜனேபா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.


     

    ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா போன்ற மிட்சைஸ் செடான்கள், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் ஹோண்டா எலிவேட் போன்ற மிட்சைஸ் எஸ்.யு.வி. மாடல்களில் தற்போது லெவல் 2 ஆட்டோனோமஸ் டிரைவல் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதி வழங்கப்பட்டு விட்டது. எனினும், ஸ்கோடா மாடல்களில் இந்த அம்சம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.

    இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜனேபா, "ADAS 2.0-வை பொருத்தவரை MQB AO-IN பிளாட்ஃபார்மில் உருவான அனைத்து கார்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களிலும் படிப்படியாக வழங்கப்பட்டு விடும்," என்று தெரிவித்தார்.


     

    தொடர்ந்து பேசிய அவர், "இந்திய சந்தை மிகவும் அதிவேகமான ஒன்று. எங்களது போட்டியாளர்கள் இன்றைய சூழலில் அதிவேகமாக செயல்படுகின்றனர், ஆனால் நாங்கள் விரைவில் இந்த நிலையை எட்டிவிடுவோம். ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் மட்டுமின்றி இடையில் வேறுசிலவற்றையும் கொண்டுவருவோம்."

    "அந்த வகையில், 2.5 மாடல்களான காம்பேக்ட் எஸ்.யு.வி.-யில் தற்போது குஷக் மாடலில் இல்லாத சில அம்சங்களும் வழங்கப்படும். இதில் ஒன்று 360-டிகிரி கேமரா," என்று அவர் தெரிவித்தார்.

    அதன்படி மார்ச் 2025 அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஸ்கோடா காம்பேக்ட் எஸ்.யு.வி.-க்களில் லெவல் 2 ADAS மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகள் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.

    • மொத்தத்தில் 120 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
    • இந்த மாடலில் 6.75 லிட்டர் டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி12 என்ஜின் உள்ளது.

    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய கோஸ்ட் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்நிறுவனத்தின் 120-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் அறிமுகமாகி இருக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ப்ரிசம் என்று அழைக்கப்படும் இந்த கார் மொத்தத்தில் 120 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளது.

    புதிய கோஸ்ட் ப்ரிசம் மாடலில் ஏராளமான காஸ்மடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இவை இந்த காலத்துக்கு ஏற்ற வகையில் டிரெண்டிங் டிசைன் மற்றும் அழகு சாதன துறையை தழுவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் வெளிப்புறம் கன்மெட்டல் கிரே நிறம் கொண்டிருக்கிறது.

    இதுதவிர புதிய கோஸ்ட் ப்ரிசம் மாடல்- ஃபீனிக்ஸ் ரெட், டர்சீஸ், மாண்டரின் மற்றும் ஃபோர்ஜ் எல்லோ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இவை காரின் பம்ப்பர் இன்சர்ட்கள், பிரேக் கேலிப்பர்கள மற்றும் கோச்லைன் உள்ளிட்டவைகளில் இடம்பெற்றுள்ளன. இதன் இன்டீரியர் பற்றிய விவரங்கள் அதிகளவு வெளியாகவில்லை.

    ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ப்ரிசம் மாடலில் 6.75 லிட்டர் டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி12 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 555 ஹெச்.பி. பவர், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. 

    • பிக்ஸ்டர் மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியானது.
    • பின்புற டிசைன் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கும்.

    ரெனால்ட் நிறுவனத்தின் புதிய தலைமுறை டஸ்டர் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட டஸ்டர் மாடல் இந்திய சந்தையில் மிட் சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது.

    புதிய மாடல் இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த கார் 5 சீட்டர் வடிவில் அறிமுகமாகுமா அல்லது 7 சீட்டர் வடிவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிலையில், டஸ்டரின் 7 சீட்டர் வெர்ஷனான பிக்ஸ்டர் மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

     


    புதிய பிக்ஸ்டர் மாடல் CMF-B ஆர்கிடெக்ச்சரில் உருவாகி இருக்கும் என்று தெரிகிறது. இந்த கார் 4.6 மீட்டர் நீளமாக இருக்கும் என்றும் இதன் வீல்பேஸ் பின்புற இருக்கைகளுக்கு ஏற்ற வகையில் அளவில் நீண்டு இருக்கும் என்று தெரிகிறது. இதன் காரணமாக இந்த காரின் புன்புற டிசைன் வழக்கமான டஸ்டர் போன்றில்லாமல் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கும்.

    எனினும், இதன் விலை மற்றும் உற்பத்தி செலவீனங்களை குறைவாக வைத்துக் கொள்ளும் நோக்கில், புதிய பிக்ஸ்டர் மாடலின் பாடி பேனல்கள், மெக்கானிக்கல் பாகங்கள் மற்றும் பவர்டிரெயின் ஆப்ஷன்கள் டஸ்டர் மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்படும் என்று தெரிகிறது.

    இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் புதிய டஸ்டர் மாடல் மஹிந்திரா XUV700, டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கசார், எம்.ஜி. ஹெக்டார் பிளஸ் மற்றும் சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். 

    ×