என் மலர்tooltip icon

    இது புதுசு

    • ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் புதிய ரேன்ஜ் ரோவர் டெலிவரி அப்டேட்டை வெளியிட்டு உள்ளது.
    • புதிய ரேன்ஜ் ரோவர் மொத்தம் 25 ட்ரிம்களில் கிடைக்கிறது.

    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் புதிய ரேன்ஜ் ரோவர் டெலிவரி அப்டேட்டை வெளியிட்டு உள்ளது. புதிய ரேன்ஜ் ரோவர் மொத்தம் 25 ட்ரிம்களில் கிடைக்கிறது.ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய ரேன்ஜ் ரோவர் மாடலின் வினியோகத்தை இந்தியாவில் துவங்கி உள்ளது. புதிய ரேன்ஜ் ரோவர் மாடல் ஐந்து இருக்கைகளுடன் ஸ்டாண்டர்டு மற்றும் நீண்ட வீல்பேஸ் வேரியண்ட்களில் கிடைக்கிறது. அதிக இடவசதி விரும்புவோருக்கு மூன்றாம் அடுக்கு கொண்ட பகுதியில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்ட நிலையில் வழங்கப்படுகிறது.

    புதிய ரேன்ஜ் ரோவர் SE, HSE மற்றும் ஆட்டோபயோகிராபி மாடல்களின் வினியோகம் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய ரேன்ஜ் ரோவர் மாடல் மொத்தத்தில் 25 ட்ரிம்களில் பெட்ரோல், டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ. 2 கோடியே 39 லட்சம் என துவங்குகிறது. டாப் எண்ட் மாடல் விலை ரூ. 4 கோடியே 01 லட்சம் என துவங்குகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


    "புதிய ரேன்ஜ் ரோவர் தனித்துவம் மற்றும் அதிநவீன ஆடம்பரத்தின் உச்ச நிலையை வெளிப்படுத்தி, சமரசம் இல்லா தொழில்நுட்ப நுனுக்கங்களை சீராக கொண்ட மாடல் ஆகும். இந்த வாகனம் தனித்துவம் மிக்க வாடிக்கையாளர்களுக்கு கச்சிதமாக பொருந்தும் வகையை சேர்ந்தது ஆகும்," என ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரோகித் சூரி தெரிவித்து உள்ளார்.

    புதிய ரேன்ஜ் ரோவர் மாடல் 3 லிட்டர், 6 சிலிண்டர் டீசல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட், 4.4 லிட்டர் வி8 என்ஜின் ஆப்ஷ்களில் கிடைக்கிறது. இதன் 3 லிட்டர் டீசல் என்ஜின் 243 ஹெச்.பி. பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இதன் 4.4 லிட்டர் வி8 என்ஜின் 516 ஹெச்.பி. பவர், 750 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் 3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் சர்வதேச சந்தையில் 389 ஹெச்.பி. பவர், 550 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டு இருக்கிறது.

    • மாருதி சுசுசி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் ஜூலை 20 ஆம் தேதி இந்திய சந்தையில் தனது கிராண்ட் விட்டாரா மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கார் மாருதி சுசுகி நிறுவனத்தின் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடல் ஆகும். புதிய மாடலின் பெயர் அறிவித்தது மட்டும் இன்றி இதற்கான முன்பதிவுகளையும் மாருதி சுசுகி துவங்கி இருக்கிறது. அந்த வகையில் புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும்.

    புதிய எஸ்.யு.வி. மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிரெஸ்ஸா மாடலின் மேல் நிலை நிறுத்தப்பட இருக்கிறது. இந்த கார் டொயோட்டா-சுசுகி கூட்டணியின் அங்கமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலை தழுவி உருவாகி இருக்கும் மாருதி சுசுகி கார் ஆகும். இதன் தோற்றம் சற்றே வித்தியாசமாகவும், புதிய நிறங்களிலும் அறிமுகம் செய்யப்படலாம்.


    இதன் உற்பத்தி கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் பிடாடி ஆலையில் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலுடன் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 9 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர், எலெக்ட்ரிக் சன்ரூஃப், லெதர் இருக்கை கவர்கள் வழங்கப்படுகின்றன.

    புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடலில் 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. ஸ்டிராங் ஹைப்ரிட் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் e-CVT யூனிட் வழங்கப்பட இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய கிராண்ட் விட்டாரா மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷக், எம்.ஜி. ஆஸ்டர், போக்ஸ்வேகன் டைகுன் மற்றும் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • நிசான் நிறுவனம் தனது மேக்னைட் மாடலின் ரெட் எடிஷனில் காஸ்மெடிக் மாற்றங்களை மேற்கொள்ள இருக்கிறது.
    • இந்த கார் இருவித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    நிசான் மேக்னைட் ரெட் எடிஷன் மாடல் ஜூலை 18 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய ரெட் எடிஷன் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. நிசான் மேக்னைட் மாடல் முன்பதிவு ஏற்கனவே ஒரு லட்சம் யூனிட்களை கடந்து இருக்கிறது.

    புதிய மேக்னைட் ரெட் எடிஷன் XV வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் 1.0 லிட்டர் NA பெட்ரோல் மேனுவல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மேனுவல் மற்றும் 1.0 டர்போ பெட்ரோல் CVT என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மேக்னைட் மாடலின் முதல் ஸ்பெஷல் எடிஷன் இது ஆகும்.


    புதிய நிசான் மேக்னைட் ரெட் எடிஷன் மாடலின் கிரில், முன்புற பம்ப்பர் கிளாடிங், வீல் ஆர்ச், பக்கவாட்டில் பாடி கிளாடிங் உள்ளிட்டவைகளில் மீது ரெட் அக்செண்ட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பாடி கிராபிக்ஸ், பின்புற டெயில்கேட்டில் குரோம் கார்னிஷ், இலுமினேட் செய்யப்பட்ட டோர் சில்கள், ரெட் எடிஷன் பேட்ஜ் உள்ளது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜிங், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ஆம்பியண்ட் லைட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    நிசான் மேக்னைட் XV வேரியண்டில் 8 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, புஷ் பட்டன் ஸ்டார்ட், ஷார்க் ஃபின் ஆண்டெனா மற்றும் ஏர் பியூரிஃபயர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

    • எம்ஜி மோட்டார் நிறுவனம் புது எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலை அறிமுகம் செய்து உள்ளது.
    • இந்த கார் முதற்கட்டமாக ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.

    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் ஹேச்பேக், எம்ஜி 4 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் முதற்கட்டமாக ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. போக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஐடி.3 மாடலுக்கு போட்டியாக புது எம்ஜி4 அறிமுகமாகி இருக்கிறது. சில நாடுகளில் புதிய எம்ஜி 4 மாடல் கியா நிரோ EV மாடலுக்கும் போட்டியாக அமைகிறது.

    புதிய எம்ஜி 4 மாடல் முழு சார்ஜ் செய்தால் 450 கிமீ வரையிலான ரேன்ஜ் கொண்டிருக்கும். இத்துடன் அதிக இடவசதி கொண்ட இண்டீரியர் மற்றும் அதிகளவு அம்சங்கள் வழங்கப்படுகிறது. சீன சந்தையில் எம்ஜி 4 மாடல் எம்ஜி முலன் எனும் பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த ஹேச்பேக் மாடல் எம்ஜி மோட்டார் தாய் நிறுவனமான SAIC-இன் மாட்யுலர் ஸ்கேலபில் பிளாட்பார்ம் (MSP) தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.


    இதே பிளாட்பார்மில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் எதிர்கால மாடல்களும் உருவாக்கப்பட இருக்கின்றன. இந்த பிளாட்பார்மில் காரின் வீல்பேஸ் 2650mm இல் இருந்து அதிகபட்சம் 3100mm வரையில் வழங்கப்படுகிறது. மேலும் பேட்டரியை பொருத்தவரை 40 கிலோவாட் ஹவர்-இல் இருந்து அதிகபட்சம் 150 கிலோவாட் ஹவர் வரையிலான திறன் வழங்கப்படலாம். இதில் பயன்படுத்தப்படும் பேட்டரி புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பேக் பேட்டரி முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட இருக்கும் எம்ஜி 4 மாடலில் 167 ஹெச்.பி. பவர், 201 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் ரியர் வீல் டிரைவ் பவர்டிரெயின்கள் வழங்கப்பட இருக்கிறது. இதே காரின் டூயல் மோட்டார், 4 வீல் டிரைவ் யூனிட் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த காரின் 167 ஹெச்.பி. பவர் கொண்ட வேரியண்டில் 51 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது.

    51 கிலோவாட் ஹவர் பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 350 கிமீ வரை பயணிக்கலாம். எம்ஜி 4 காரின் 201 ஹெச்.பி. மற்றும் 443 ஹெச்.பி. வேரியண்ட்களில் 64 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரிகள் வழங்கப்பட உள்ளன. இவை முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 450 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்கும். 

    • ஹூண்டாய் நிறுவனம் N பிராண்டிங்கில் புது காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்த கார் கான்செப்ட் மாடலாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஹூண்டாய் நிறுவனத்தின் N பெர்ஃபார்மன்ஸ் பிராண்டு புது மாடல்களுக்கான டீசர்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. அதன்படி புது கார் ஜூலை 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில் ஒரு டீசர் தெளிவற்ற நிலையில் கார் வேகமாக செல்லும் போது எடுக்கப்பட்ட படம் இடம்பெற்று இருக்கிறது. மற்றொரு டீசரில் முழுமையாக மறைக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் கார் படம் இடம்பெற்று உள்ளது. புது மாடல் பற்றி ஹூண்டாய் நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.

    எனினும், இந்த மாடல் ஹூண்டாய் மற்றும் ரிமக் நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இது எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. டீசரில் நீண்ட லோ-செட் பொனெட், முன்புறம் பம்ப்பரில் ஸ்ப்லிட்டர் வழங்கப்பட்டு இறுக்கிறது. இத்துடன் ஃபிளாட் ரூஃப், ரேக்டு ரியர் விண்ட் ஸ்கிரீன் மற்றும் பூட் லிட் மீது ஸ்பாயிலர் காணப்படுகிறது.


    ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் 5 மாடலின் மற்றொரு வேரியண்டை உருவாக்கி வருகிறது. இந்த மாடல் N பாரம்பரியத்தின் எதிர்காலத்தை பிரதிபலிக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த கார் அடுத்த தலைமுறை பெர்ஃபார்மன்ஸ் காராக இருக்கும் என தெரிகிறது.


    மேலும் ஹூண்டாய் நிறுவனம் ப்ரி-ப்ரோடக்‌ஷன் ப்ரோடோடைப் மாடல்களை சர்வதேச சாலைகளில் சோதனை செய்து வருகிறது. இதன் ப்ரோடக்‌ஷன் வேரியண்டில் கியா EV6 மாடலில் வழங்கப்பட்டதை போன்ற பவர்டிரெயின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மூன்றாவது டீசரில் இருக்கும் மாடல், ஹூண்டாய் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் காரின் N வேரியண்ட் ஆக இருக்கும் என தெரியவந்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் தனது சாதாரண கார்களின் N பிராண்டு மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

    • டெக்சாஸ்-ஐ சேர்ந்த ஹெனசி நிறுவனம் புதிதாக எலெக்ட்ரிக் ஹைப்பர்கார் மாடலை உருவாக்கி வருகிறது.
    • இந்த காரின் விலை விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் டெக்சாஸ்-ஐ சேர்ந்த ஹெனசி நிறுவனம் எலெக்ட்ரிக் ஹைப்பர்கார் மாடலை உருவாக்கி வருவதாக அறிவித்து இருந்தது. புதிய எலெக்ட்ரிக் ஹைப்பர்கார் மாடல் டீப்-ஸ்பேஸ் என அழைக்கப்படுகிறது. டீர்-ஸ்பேஸ் மாடலில் மொத்தம் ஆறு வீல்கள் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஹைப்பர்காரின் உற்பத்தி 2026 வாக்கில் துவங்க இருக்கிறது. இதன் விலை ரூ. 237 கோடியே 5 லடச்த்து 26 ஆயிரத்து 917 வரை நிர்ணயம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் தற்போதைய தகவல்களில் புதிய ஹெனசி டீப்-ஸ்பேஸ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 1000 கி.மீ. ரேன்ஜ் கிடைக்கும் என ஹெனசி நிறுவனத்தின் சி.இ.ஒ. ஜான் ஹெனசி தெரிவித்து இருக்கிறார். இந்த காரில் வழங்கப்பட இருக்கும் பெரிய பேட்டரி காரணமாக இந்த ரேன்ஜ் சாத்தியம் தான் என அவர் மேலும் தெரிவித்தார். எனினும், இவ்வாறு செய்யும் போது காரின் எடை அதிகரிக்கும் வாய்ப்புகளும் உண்டு.


    முன்னதாக ஹெனசி வெளியிட்ட தகவல்களில் இந்த ஹைப்பர்கார் மணிக்கு 322 கி.மீ. வேகத்தில் சீறிப் பாயும் திறன் கொண்டு இருக்கும் என தெரிவித்து இருந்தார். இதில் உள்ள ஆறு எலெக்ட்ரிக் மோட்டார்கள் 2400 ஹெச்.பி. வரையிலான திறன் வழங்கும் திறன் கொண்டு இருக்கிறது.

    இந்த ஹைப்பர்கார் மாடல் 'பிராஜக்ட் டீப்-ஸ்பேஸ்' திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு வருகிறது. இது அதிவேகமாக செல்வதோடு, அதீத செயல்திறன் கொண்டிருக்கும். ஹைப்பர்கார் மட்டுமின்றி இதன் இண்டீரியர் அதிக ஆடம்பர வசதிகளை கொண்டிருக்க வேண்டும் என ஹெனசி முடிவு செய்துள்ளது. தற்போதைய ஆடம்பர கார்களுக்கு சவால் விடும் வகையில், இந்த மாடலின் அம்சங்கள் இடம்பெற்று இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    உலகம் முழுக்க ஹெனசி டீப்-ஸ்பேஸ் மாடல் மொத்தத்தில் 105 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இதன் ப்ரோடோடைப் மாடல் 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டு, உற்பத்தி வெர்ஷன் 2026 வாக்கில் உருவாக்கப்படலாம். இந்த காரின் முதல் வேரியண்ட்-ஐ வாங்க ஏற்கனவே ஒரு வாடிக்கையாளர் முன்பதிவு செய்து இருக்கிறார்.

    • ஏத்தர் எனர்ஜி நிறுவனம் புதிய ஏத்தர் 450X பேஸ்லிப்ட் மாடலை உருவாக்கி வருகிறது.
    • தற்போதைய ஏத்தர் 450X முழு சார்ஜ் செய்தால் 116 கி.மீ ரேன்ஜ் வழங்குகிறது.

    பெங்களூரை சேர்ந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது ஃபிளாக்‌ஷிப் 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேஸ்லிப்ட் மாடலை ஜூலை 11 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடலில் பெரிய பேட்டரி மற்றும் அதிக செயல்திறன் வழங்கப்படும் என தெரிகிறது.

    தற்போது விற்பனை செய்யப்படும் ஏத்தர் ஸ்கூட்டரின் விலை ரூ. 1 லட்சத்து 38 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டரில் 2.9 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு உள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 116 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்கும்.


    புதிய ஏத்தர் 450X பேஸ்லிப்ட் மாடலில் 3.66 கிலோ வாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதில் 3 பேஸ் பெர்மணன்ட் மேக்னெட் சின்க்ரோனஸ் எலெக்ட்ரிக் மோட்டார் சிஸ்டம் வழங்கப்படலாம். இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 146 கி.மீ. வரையிலான ரேன்ஜ் வழங்கும் என கூறப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை ஏத்தர் 450X பேஸ்லிப்ட் மாடலில் ராப் மோட், ஸ்போர்ட் மோட், ரைடு மோட், ஸ்மார்ட் ஈகோ மோட் மற்றும் ஈகோ மோட் என ஏராளமான டிரைவிங் மோட்கள் வழங்கப்படலாம். இதன் ராப் மோட் ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்த மாடலின் வெளியீடு மெட்டாவெர்ஸ் வெர்ஷனாக நடைபெற இருக்கிறது.

    இந்திய சந்தையில் வால்வோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் XC40 ரிசார்ஜ் ஒரு ஆண்டுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விற்பனை கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே துவங்க இருந்தது. எனினும், வால்வோ நிறுவனம் தனது காரை இறக்குமதி செய்ய முடிவு எடுத்த காரணத்தால் இதன் விற்பனை தாமதமாகி போனது.

    தற்போது வால்வோ நிறுவனம் தனது XC40 ரிசார்ஜ் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்து இருக்கிறது. மேலும் இந்த மாடலின் வெளியீடு ஜூலை 26 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும் இந்த மாடலின் வெளியீடு மெட்டாவெர்ஸ் வெர்ஷனாக நடைபெற இருக்கிறது. இதனை வால்வோ நிறுவனம் வால்வோவெர்ஸ் என அழைக்கிறது.


    வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் டிரைவ் டிரெயின் 405 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை 4.9 நொடிகளில் எட்டி விடும். இந்த எலெக்ட்ரிக் காரில் 79 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 400 கிமீ ரேன்ஜ் வழங்குகிறது.

    கடந்த ஆண்டு வால்வோ நிறுவனம் வால்வோ XC60, வால்வோ S90 மற்றும் வால்வோ XC90 பெட்ரோல் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் அறிமுகம் செய்தது. அனைத்து பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கு மாற்றாக முழு எலெக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    • இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் தான் பிரபல அம்பாசடர் மாடல்களை விற்பனை செய்து வந்தது.
    • இந்த நிறுவனம் மீண்டும் சந்தையில் களமிறங்க இருக்கிறது.

    இந்திய சந்தையில் அதிக பிரபலமாக இருந்த அம்பாசடர் மாடல்களை விற்பனை செய்து வந்த இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் மீண்டும் சந்தையில் களமிறங்க இருக்கிறது. இந்த நிறுவனம் அடுத்த ஆண்டு புது எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்காக இந்துஸ்தான் மோட்டார் நிறுவனம் ஐரோப்பிய நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

    எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி துவங்கும் போது இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் சுமார் 400 ஊழியர்களை பணி அமர்த்த முடிவு செய்து உள்ளது. தற்போது இரு நிறுவனங்கள் இணைந்து நிதி சார்ந்த திட்டமிடல்களை மேற்கொண்டு வருகின்றன. இந்த பணிகள் நிறைவு பெற இரண்டு மாதங்கள் ஆகும்.


    இதைத் தொடர்ந்து இரண்டு நிறுவனங்களும் இணைந்து முதலீட்டை ஈர்ப்பது, புது நிறுவனத்தை துவங்குவது என பல்வேறு விஷயங்களை மேற்கொள்ள இருக்கிறது. இது சார்ந்த பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி வாக்கில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிகரமாக கூட்டணி அமைத்த பின் திட்டத்தின் முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள மேலும் இரண்டு காலாண்டுகளே தேவைப்படும்.

    அந்த வகையில் இந்துஸ்தான் மோட்டார்ஸ் மற்றும் ஐரோப்பிய நிறுவன கூட்டணியில் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் அடுத்த நிதியாண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம்.

    • சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய C3 மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்த கார் இருவித டியூனிங்கில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.

    சிட்ரோயன் நிறுவனம் தனது C3 மாடலை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், புதிய சிட்ரோயன் C3 மாடலுக்கான முன்பதிவு துவங்கி உள்ளது. இந்த மாடலின் விலை விவரங்கள் ஜூலை 20 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்தியாவில் சிட்ரோயன் C3 மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் - லைவ் மற்றும் ஃபீல் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    C5 ஏர்கிராஸ் எஸ்.யு.வி.யை தொடர்ந்து சிட்ரோயன் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கும் இரண்டாவது மாடல் சிட்ரோயன் C3 ஆகும். இந்த மாடல் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் செட்டப், டூ-டோன் பெயின்ட், சில்வர் ஸ்கிட் பிளேட்கள், பிளாஸ்டிக் கிளாசிங் கொண்டுள்ளது. புதிய சிட்ரோயன் C3 நான்கு மோனோ டோன் மற்றும் இரண்டு டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது.


    காரின் உள்புறம் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 10 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், லெதர் இருக்கை கவர்கள், பிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், மேனுவல் HVAC சிஸ்டம் கொண்டிருக்கிறது.

    புதிய சிட்ரோயன் C3 மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த என்ஜின்கள் முறையே 81 ஹெச்.பி. மற்றும் 109 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    • சுசுகி இந்தியா நிறுவனம் விரைவில் புது மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்த மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    சுசுகி இந்தியா நிறுவனம் கட்டானா லிட்டர்-கிளாஸ் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான டீசரை வெளியிட்டு உள்ளது. விரைவில் இந்த மாடல் விற்பனையகம் வரத் துவங்கி விடும் என தெரிகிறது.

    சுசுகி நிறுவனத்தின் பெரிய மாடல்கள் பிரிவில் தற்போது 650சிசி வி ஸ்டாம் 650XT அட்வென்ச்சர் பைக், 1340சிசி ஹயபுசா உள்ளிட்ட மாடல்கள் மட்டுமே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இரு மாடல்கள் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் நோக்கில் சுசுகி பிராண்டு கட்டானா லிட்டர் கிளாஸ் செமி-ஃபேர்டு மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது.


    சாமுராய் வீரர்கள் பயன்படுத்திய ஒற்றை எட்ஜ் கொண்ட வாளை தழுவி இந்த மோட்டார்சைக்கிளுக்கு கட்டானா என பெயரிடப்பட்டு உள்ளது. கட்டானா மாடலில் 999சிசி, இன் லைன், நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் K5 GSX-R1000 மாடலில் இருந்து பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் GSX-S1000 மாடலிலும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    2022 மாடலில் இந்த என்ஜின் கேம் ஷாப்ட்கள், வால்வு ஸ்ப்ரிங் மற்றும் ஏர்பாக்ஸ், எக்சாஸ்ட் சிஸ்டம் அப்டேட்களுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் ரைடு-பை வயர் சிஸ்டம், சிறிய 40mm எலெக்ட்ரிக் திராட்டில், டிராக்‌ஷன் கண்ட்ரோல், பை டைரக்‌ஷனல் குயிக் ஷிப்டர், மூன்று திராட்டில் மேப்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் மேனுவல் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய யு.எஸ்.டி. ஃபோர்க், மோனோஷாக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    புதிய சுசுகி கட்டானா மாடலில் ரேடியல் பிரெம்போ கேலிப்பர்கள் உள்ளன. இத்துடன் எல்.சி.டி. டிஸ்ப்ளே, டி.எப்.டி. யூனிட்கள் வழங்கப்படுகின்றன. இந்திய சந்தையில் புதிய சுசுகி கட்டானா மாடலின் விலை ரூ. 12 லட்சத்தில் நிர்ணயம் செய்யப்படலாம். இந்த மாடல் நின்ஜா 1000SX மற்றும் பி.எம்.டபிள்யூ. F 900 XR போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    • ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் கார் மாடலை உருவாக்கி வருகிறது.
    • இந்த கார் பற்றிய விவரங்கள் டீசர்கள் வடிவில் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    ஹூண்டாய் நிறுவனம் முற்றிலும் புதிய ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் கார் மாடலை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடலுக்கான டீசர்களை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. டீசர்களிலே ஐயோனிக் 6 மாடலின் பல்வேறு விவரங்கள் அம்பலமாகி வருகின்றன.

    புதிய ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் கார் ஹூண்டாய் நிறுவனத்தின் பெர்செப்ட் கான்செப்ட்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய டீசர்களின் படி ஹூண்டாய் ஐயோனிக் 6 மாடலில் பாராமெட்ரிக் பிக்சல் டிசைன் கொண்டிருக்கும் என உறுதியாகி இருக்கிறது. ஐயோனிக் 6 மாடல் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஹூண்டாய் நிறுவனத்தின் வழக்கமான இண்டர்னல் கம்பஷன் மாடல்களை விட முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.


    அதன்படி ஹூண்டாய் ஐயோனிக் 6 மாடலில் மிக மெல்லிய ஹெட்லேம்ப்கள், பாராமெட்ரிக் பிக்சல் எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள் உள்ளன. ஹூண்டாய் நிறுவனத்தின் சமீபத்திய இண்டர்னல் கம்பஷன் மாடல்களின் பக்கவாட்டில் இடம்பெற்று இருக்கும் கிரீஸ், கட்கள் எதுவும் இடம்பெறவில்லை. மேலும் இந்த காரில் கேமரா சார்ந்து இயங்கும் விங் மிரர்கள் உள்ளன.

    புதிய ஹூண்டாய் ஐயோனிக் 6 மாடல் ஹூண்டாய் பர்பஸ் பில்ட் e-GMP பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் இரண்டாவது மாடல் ஆகும். முன்னதாக ஐயோனிக் 5 இந்த பிளாட்பார்ம் கொண்ட முதல் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. ஐயோனிக் 6 மாடல் சர்வதேச சந்தையில் சிங்கில் மற்றும் டூயல் எலெக்ட்ரிக் மோட்டார் பவர்-டிரெயின்களில் கிடைக்கும்.

    ×