என் மலர்
இது புதுசு
- போர்ஷே நிறுவனத்தின் புதிய கயென் மாடலே இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.
- இந்த கார் கூப் பாடி ஸ்டைலிலும் கிடைக்கிறது.
ஜெர்மன் நாட்டு ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தியாளரான போர்ஷே இந்திய சந்தையில் முற்றிலும் புதிய கயென் டர்போ ஜிடி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய போர்ஷே கயென் டர்போ ஜிடி மாடலின் விலை ரூ. 2 கோடியே 57 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது போர்ஷே கார் லம்போர்கினி உருஸ் மற்றும் ஆடி RSQ8 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
மற்ற கயென் மாடல்களுடன் வித்தியாசப்படுத்தும் வகையில், புதிய கயென் டர்போ ஜிடி மாடலின் வெளிப்புற தோற்றத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலின் முன்புற பம்ப்பரில் பெரிய ஏர் இன்லெட்கள், பின்புறம் வித்தியாசமான பம்ப்பர், டிப்யுசர், அலாய் வீல்களில் அசத்தல் நிறம் மற்றும் இரு எக்சாஸ்ட் பைப்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் ரூப் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், போர்ஷேவின் டைனமிக் லைட் சிஸ்டம் பிளஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

உள்புறத்தில் அல்காண்ட்ரா மற்றும் லெதர் மூலம் டிசைன் செய்யப்பட்டு இறுக்கிறது. முன்புறம் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், நான்கு ஜோன் டெம்ப்பரேச்சர் கண்ட்ரோல், அல்காண்ட்ரா ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், 12 இன்ச் செண்ட்ரல் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 10 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.
போர்ஷே கயென் டர்போ ஜிடி மாடலில் மாடிபை செய்யப்பட்ட 3996சிசி, ட்வின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 பெட்ரோல் என்ஜின், 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 632 ஹெச்.பி. பவர், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை 3.3 நொடிகளிலும் 160 கி.மீ. வேகத்தை 7.7 நொடிகளிலும் எட்டி விடும். மேலும் 200 கி.மீ. வேகத்தை 12.2 நொடிகளிலேயே எட்டி விடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 300 கி.மீ. வேகத்தில் செல்லும்.
- பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது எம் பிரிவின் ஐம்பதாவது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது.
- இதன் அங்கமாக ஸ்பெஷல் எடிஷன் கார்களை அறிமுகம் செய்து வருகிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் 5 சீரிஸ் 50 ஜாரெ எம் எடிஷன் செடான் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலின் விலை ரூ. 67 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலுக்கான ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
மற்ற ஸ்பெஷல் எடிஷன் பி.எம்.டபிள்யூ. கார்களை போன்றே புதிய பி.எம்.டபிள்யூ. 5 சீரிஸ் 50 ஜாரெ எம் எடிஷன் மாடலும் சென்னையில் இயங்கி வரும் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. புதிய 5 சீரிஸ் 50 ஜாரெ எம் எடிஷன் மாடல் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் எம் பிரிவு 50-ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த கார் டாப் எண்ட் பி.எம்.டபிள்யூ. 5 சீரிஸ் 530i எம் ஸ்போர்ட் வேரியண்ட்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த மாடலில் 2 லிட்டர், ட்வின் டர்போ-சார்ஜ் செய்யப்பட்ட, இன்-லைன்-4, DOHC பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 248 ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கி.மீ. வேகத்தை 6.1 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் மட்டும் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. தோற்றத்தில் இந்த கார் பி.எம்.டபிள்யூ. 5 சீரிஸ் 530i செடான் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் ஸ்பெஷல் எடிஷன் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
- ஹூண்டாய் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் கார் விவரங்கள் வெளியாகி உள்ளது.
- இந்த எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீடு பற்றிய அப்டேட்களும் வெளியாகியுள்ளன.
ஹூண்டாய் நிறுவனம் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் கார் மாடலை உருவாக்கி வருவதாக தெரிவித்து இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனம் தனது கியா மற்றும் ஜெனிசிஸ் பிராண்டுகளின் கீழ் ஏற்கனவே பல்வேறு எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், ஐரோப்பிய சந்தையை குறி வைத்து 20 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் சுமார் ரூ. 15 லட்சம் விலையில் புது எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. "இது போன்ற எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை 20 ஆயிரம் யூரோக்கள் என எல்லோருக்கும் தெரியும்," என ஹூண்டாய் ஐரோப்பா விற்பனை பிரிவு தலைவர் ஆண்ட்ரியாஸ் க்ரிஸ்டோப் ஃஹாப்மேன் தெரிவித்தார்.

முன்னதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது ID.Life கானெச்ப்ட் கார்களை ஐரோப்பாவில் அறிமுகம் செய்வதாகவும், இவற்றின் விலை 25 ஆயிரம் டாலர்களுக்குள் நிர்ணயம் செய்யப்படும் என அறிவித்து இருந்தது. தற்போது ஹூண்டாய் தலைவர் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஹூண்டாய் i10 எலெக்ட்ரிக் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்றே உணர முடிகிறது. i10 கார் எண்ட்ரி லெவல் ஹேச்பேக் மாடல் ஆகும்.
இது ஐரோப்பா மட்டுமின்றி இந்தியா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் வாகனத்தை இந்தியாவில் உற்பத்தி செய்ய இருக்கிறது. இந்த வரிசையில், பல்வேறு புது மாடல்களை கொண்டு வர ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.
- மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த புது கார் கிராண்ட் விட்டாரா.
- இது எஸ் கிராஸ் மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. டீசர்களின் மூலம் இந்த மாடல் கிராண்ட் விட்டாரா எனும் பெயரில் அறிமுகமாகும் என தெரியவந்துள்ளது. மேலும் இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகின்றன. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். முன்பதிவுகள் நெக்சா விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது.
இந்திய சந்தையில் புதிய கிராண்ட் விட்டாரா மாடல் எஸ் கிராஸ் காருக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விலை விவரங்கள் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்த மாடல் கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா, டாடா ஹேரியர் மற்றும் எம்.ஜி. ஆஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

ஸ்ப்லிட் ரக ஹெட்லேம்ப் டிசைன், முற்றிலும் புது கிரில், க்ரோம் இன்சர்ட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், பாடி நிறம் கொண்ட ORVM-கள், பிளாக் ரூஃப், ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள், டூ பீஸ் எல்இடி லைட் பார் உள்ளிட்டவை இந்த காரின் அம்சங்கள் ஆகும். இத்துடன் பானரோமிக் சன்ரூஃப், 9 இன்ச் பிரீஸ்டாண்டிங் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ஹெட்-அப் டிஸ்ப்ளே உள்ளது.
புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடல் 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் மற்றும் 1.5 லிட்டர் ஸ்டிராங் ஹைப்ரிட் சிஸ்டம் என இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதன் மைல்டு ஹைப்ரிட் என்ஜின் 100 ஹெச்.பி. பவர், 135 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஸ்டிராங் ஹைப்ரிட் சிஸ்டம் 115 ஹெச்.பி. பவர், என்ஜின் டார்க் 122 நியட்டன் மீட்டர்களாகவும், எலெக்ட்ரிக் மோட்டார் டார்க் 141 நியூட்டன் மீட்டர்களாகவும் உள்ளது. இந்த என்ஜினுடன் e-CVT ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதன் மைல்டு ஹைப்ரிட் வேரியண்ட் ஆல்-வீல் டிரைவ் வசதி கொண்டு இருக்கிறது.
- மாருதி சுசுகி நிறுவனத்தின் முற்றிலும் புது ஆல்டோ மாடல் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
- இந்த மாடலில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் வரும் மாதங்களில் இரண்டு புது கார் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இவற்றில் புது ஆல்டோ மாடல் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. புது ஆல்டோ தவிர மாருதி கிராண்ட் விட்டாரா மாடல் இன்று (ஜூலை 20) சர்வதேச சந்தையில் வெளியாகிறது. இந்த மாடலின் விலை அறிவிப்புக்கு முன்பே முற்றிலும் புது ஆல்டோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தகவல் வெளியாகி உள்ளது.
இரு மாடல்களும் மாருதி சுசுகி வாகன பிரிவில் பெரிய இடைவெளியை கொண்டுள்ளன. ஆல்டோ கார் மாருதி நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் மாடல் ஆகும். கிராண்ட் விட்டாரா அந்நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்யுவி ஆகும். இவற்றில் ஆல்டோ மாடல் மாருதி அரினா விற்பனை மையங்களிலும், கிராண்ட் விட்டாரா மாருதி நெக்சா விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்பட உள்ளன.

முற்றிலும் புது ஆல்டோ மாடல் அதிகளவு மாற்றங்களை கொண்டிருக்கும். அதன்படி இந்த மாடலில் முற்றிலும் புதிய பிளாட்பார்ம் மற்றும் பவர்டிரெயின் வழங்கப்பட இருக்கிறது. ஆல்டோ மாடல் சுசிகியின் மாட்யுலர் ஹார்டெக்ட் பிளாட்பார்ம் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது. மாருதி நிறுவன கார் மாடல்களில் எஸ் பிரெஸ்ஸோ-வில் துவங்கி XL6 வரை பல்வேறு மாடல்கள் இந்த பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டுள்ளன.
புதிய ஆல்டோ மாடலில் K10C 1.0 லிட்டர் டூயல் ஜெட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 67 ஹெச்.பி. பவர், 89 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இது தற்போதைய மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 796சிசி என்ஜின் வழங்கும் 19 ஹெச்.பி. மற்றும் 20 நியூட்டன் மீட்டர் டார்க்-ஐ விட அதிகம் ஆகும். இதே என்ஜின் புது மாடலின் பேஸ் வேரியண்ட்களில் வழங்கப்படலாம்.
- ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புது 450X மாடல் வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது.
- முந்தைய தலைமுறை 450X மாடலின் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் மேம்பட்ட மூன்றாம் தலைமுறை 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஏத்தர் 450X Gen 3 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 56 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 5 ஆயிரம் வரை விலை அதிகம் ஆகும்.
புது மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து ஏத்தர் 450X Gen 2 மாடலின் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. மேலும் Gen 2 மாடலுக்கு மாற்றாக Gen 3 விற்பனையகம் வர உள்ளன. புதிய ஏத்தர் 450X Gen 3 வினியோகம் ஜூலை 20 ஆம் தேதி தொடங்குகிறது. ஏத்தர் 450X Gen 3 மாடலில் 3.7 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய Gen 2 மாடலில் 2.9 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏத்தர் 450X Gen 3 மாடல் முழு சார்ஜ் செய்தால் 146 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது. எனினும், நிஜ பயன்பாட்டில் இந்த மாடல் 105 கி.மீ. வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இத்துடன் புது மாடலில் இருமடங்கு பெரிய ரியர் வியூ மிரர்கள், எம்.ஆர்.எப். மற்றும் ஏத்தர் இணைந்து உருவாக்கிய புது டையர்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்த ஸ்கூட்டரில் உள்ள புது இண்டர்ஃபேஸ் 2 ஜிபி ரேம் கொண்டுள்ளது. முந்தைய மாடலில் 1 ஜிபி ரேம் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய மாடலில் உள்ள அதிக ரேம் காரணமாக டேஷ்போர்டின் கம்ப்யுடிங் வேகம் அதிகமாக இருக்கும். இந்த மாடலில் பல்வேறு புது அம்சங்கள் எதிர்காலத்தில் வழங்குவதற்கு ஏற்ப உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இவை தவிர ஏத்தர் 450X Gen 3 மாடலின் டிசைன் மற்றும் சேசிஸ் உள்ளிட்டவைகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மாடல் இப்போதும் வைட், ஸ்பேஸ் கிரே மற்றும் மிண்ட் கிரீன் என மூன்று வித நிறங்களில் தான் கிடைக்கிறது.
- ஹூண்டாய் நிறுவனத்தின் புது தலைமுறை டக்சன் மாடல் அம்சங்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளன.
- இந்த மாடலுக்கான முன்பதிவு அப்டேட் வெளியாகி உள்ளது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய டக்சன் மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புது ஹூண்டாய் டக்சன் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும். இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் டக்சன் மாடல் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதிய ஹூண்டாய் டக்சன் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் தற்போது 2.0 லிட்டர் வடிவில் வழங்கப்பட்டுள்ளன. இவை 154 ஹெச்.பி. பவர், 192 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 184 ஹெச்.பி. பவர், 416 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

2022 டக்சன் மாடலில் ஹூண்டாய் நிறுவனத்தின் சென்சுயல் ஸ்போர்டினஸ் டிசைன் பின்பற்றப்பட்டு இருக்கிறது. முன்புறம் பெரிய கிரில் மற்றும் பாராமெட்ரிக் ஜூவல் பேட்டன் உள்ளது. இத்துடன் எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள் உள்ளன.
ஹெட்லைட்கள் கிரில்-மீது இரு புறங்களின் ஓரத்தில் செங்குத்தாக உள்ளது. முன்புறம் செண்ட்ரல் ஏர் டேம் மற்றும் சில்வர் ஃபாக்ஸ் பாஷ் பிளேட் உள்ளது. புதிய டக்சன் மாடலின் இந்திய வேரியண்ட்டில் 18 இன்ச் அலாய் வீல்கள், டெயில் லைட்கள், வழங்கப்பட்டுள்ளன.
- மினி நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் கார் மாடலில் கன்வெர்டிபில் ஆப்ஷனை வழங்கி சோதனை செய்து வருகிறது.
- தற்போதைய மினி கன்வெர்டபில் மாடலில் எலெக்ட்ரிக் வெர்ஷன் வழங்கப்படாது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் அடுத்த தலைமுறை மினி மாடல்கள் வரிசையில் கன்வெர்டிபில் மாடல்களை சேர்க்க இருக்கிறது. இதற்காக முற்றிலும் எலெக்ட்ரிக் திறன் கொண்ட மினி கன்வெர்டிபில் மாடல் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சந்தையில் இந்த மாடல் எந்த அளவுக்கு நிலைத்து இருக்கும் என்பதை சோதனை செய்ய அந்நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது.
ஒன்-ஆப் மினி எலெக்ட்ரிக் என அழைக்கப்படும் புது மாடல் ப்ரோடோடைப் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சோதனை அடிப்படையில் இந்த மாடல் இருக்கும் என பி.எம்.டபிள்யூ. தெரிவித்து உள்ளது. முனிச்-இல் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த ப்ரோடோடைப் மாடல் தற்போதைய கூப்பர் S கன்வெர்டபில் மாடலின் உருவில் கூப்பர் SE மாடலில் உள்ள 184 ஹெச்.பி. பவர் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக ப்ரோடோடைப் மாடலின் எடை ICE கூப்பர் S கன்வெர்டபில் மாடலை விட 140 கிலோ வரை அதிகரித்து இருக்கிறது. இதன் பூட் கொள்ளளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது 160 லிட்டர்கள் கொள்ளளவு வழங்குகிறது.
தற்போதைய மினி கன்வெர்டபில் மாடல்கள் எலெக்ட்ரிக் வடிவில் மாற்றப்படாது. எலெக்ட்ரிக் கன்வெர்டபில் மாடல்கள் முற்றிலும் புதிதாக உருவாக்கப்படும் என பி.எம்.டபிள்யூ. தெரிவித்து இருக்கிறது. "மினி கன்வெர்டபில் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் அறிமுகமாகும் என நாங்கள் அறிவித்து விட்டோம். ஆனால் அதன் என்ஜின் விவரங்கள் பற்றி இப்போதே அறிவிப்பது சரியாக இருக்காது," என பி.எம்.டபிள்யூ. தெரிவித்து உள்ளது.
- ஹூண்டாய் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புதிய மாடல் எலெக்ட்ரிக் செடான் வடிவில் உருவாகி வருகிறது.
தென் கொரிய கார் உற்பத்தியாளரான ஹூண்டாய் RN22e கான்செப்ட் எலெக்ட்ரிக் செடான் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஹூண்டாய் RN22e கான்செப்ட் ஹூண்டாய் நிறுவனத்தின் N பிரிவு எதிர்கால எலெக்ட்ரிக் மாடல் ஆகும். ஹூண்டாய் நிறுவனத்தின் N பிரிவு சார்பில் RN22e கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் N விஷன் 74 கான்செப்ட் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது.
"RN22e மற்றும் N விஷன் 74 கான்செப்ட் மாடல்கள் ஒட்டுமொத்த வாகன வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கும். குறிப்பாக எங்களின் எலெக்ட்ரிக் வாகனம் மற்றும் அதிக செயல்திறன் கொண்ட வாகனங்கள் பிரிவில் இவை இரண்டு மாடல்களும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும். ரோலிங் லேப்ஸ் எங்களின் அதிநவீன தொழில்நுட்பங்களை தொடர்ந்து உருவாக்கி வருகிறது. இந்த பிரத்யேக நோக்கம் தான் எங்களை எதிர்கால சவால்களை எதிர்கொள்ள செய்கிறது," என ஹூண்டாய் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் தாமஸ் ஸ்கிமெரா தெரிவித்தார்.

ஹூண்டாய் RN22e மாடலில் டூயல் மோட்டார் செட்டப் உள்ளது. RN22e டூயல் மோட்டார் செட்டப் 577 ஹெச்.பி. திறன், 740 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கி.மீ. வேகத்தை எத்தனை நொடிகளில் எட்டும் என்பதை ஹூண்டாய் நிறுவனம் தெரிவிக்கவில்லை. எனினும், இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கி.மீ. வேகத்தில் செல்லும் என தெரிகிறது.
புதிய ஹூண்டாய் RN22e கான்செப்ட் மாடலில் நான்கு பிஸ்டன் கேலிப்பர்கள் கொண்ட 400 மில்லிமீட்டர் ஹைப்ரிட் டிஸ்க் பிரேக்குகள், 3டி ப்ரி்ண்ட் செய்யப்பட்ட பாகங்கள் உள்ளன. இவை காரின் எடையை குறைக்க வெகுவாக உதவி இருக்கிறது. இவை தவிர செயல்திறனை ஊக்குவிக்க இந்த மாடலில் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.

ஹூண்டாய் RN22e மாடலில் 77.4 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 18 நிமிடங்களே போதும். இந்த கார் ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் E-GMP பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இது அதிகபட்சம் 800 வோல்ட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்குகிறது.
- ஹூண்டாய் நிறுவனம் முற்றிலும் புதிய டக்சன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
- இந்த மாடல் நீண்ட வீல் பேஸ் கொண்டு இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
தென் கொரியாவை சேர்ந்த கார் உற்பத்தியாளரான ஹூண்டாய் நான்காம் தலைமுறை டக்சன் எஸ்.யு.வி.-யை இந்கியி சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹூண்டாய் டக்சன் மாடலுக்கான விலை விவரங்கள் ஆகஸ்ட் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் இந்த மாடல் நீண்ட வீல் பேஸ் கொண்டிருக்கிறது.
நான்காம் தலைமுறை ஹூண்டாய் டக்சன் மாடல் அதன் முந்தைய வேரியண்டை விட பெருமளவு வித்தியாசமாக காட்சி அளிக்கிறது. புதிய டக்சன் மாடலில் ஹூண்டாய் நிறுவனத்தின் சென்சுயல் ஸ்போர்டினஸ் டிசைன் பின்பற்றப்பட்டு இருக்கிறது. முன்புறம் பெரிய கிரில் மற்றும் பாராமெட்ரிக் ஜூவல் பேட்டன் உள்ளது. இத்துடன் எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள் உள்ளன.

இத்துடன் ஹெட்லைட்கள் கிரில்-மீது இரு புறங்களின் ஓரத்தில் செங்குத்தாக உள்ளது. முன்புறம் செண்ட்ரல் ஏர் டேம் மற்றும் சில்வர் ஃபாக்ஸ் பாஷ் பிளேட் உள்ளது. புதிய டக்சன் மாடலின் இந்திய வேரியண்ட்டில் 18 இன்ச் அலாய் வீல்கள், டெயில் லைட்கள், வழங்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் புதிய ஹூண்டாய் டக்சன் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் தற்போது 2.0 லிட்டர் வடிவில் வழங்கப்பட்டுள்ளன. இவை 154 ஹெச்.பி. பவர், 192 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 184 ஹெச்.பி. பவர், 416 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
- கியா நிறுவனத்தின் முற்றிலும் புதிய செல்டோஸ் மாடல் புசான் சர்வதேச மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
- இதே மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
புசான் சர்வதேச மோட்டார் விழாவில் கியா நிறுவனத்தின் 2023 கியா செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதே மாடல் 2023 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். சமீபத்தில் இந்த மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. அந்த வகையில், இந்த மாடல் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டு வந்தது.
2023 கியா செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடலில் புதிய ஹெட்லைட் மற்றும் ரிவைஸ்டு முன்புற கிரில், அதிக காற்றோட்டத்திற்கு வழி வகை செய்யும் ட்வீக் செய்யப்பட்ட பம்ப்பர் உள்ளது. இதன் ஃபாக் லேம்ப் ஹவுசிங்கில் மட்டும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. பக்கவாட்டில் 18 இன்ச் மெஷின் கட் டூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் இந்திய வேரியண்டில் 17 இன்ச் யூனிட்கள் வழங்கப்படலாம்.

பின்புறம் முற்றிலும் புது டிசைன் கொண்ட எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் புதிய பம்ப்பர் மற்றும் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் வழங்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. உள்புறத்தில் 10.25 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் UVO கனெக்டெட் கார் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
புதிய கியா செல்டோஸ் மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இந்த மாடல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய கியா செல்டோஸ் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, போக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷக் டொயோட்டா ஹைரைடர் மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- ஆடி நிறுவனத்தின் புதிய A8 L மாடல் சக்திவாய்ந்த வி6 என்ஜின் கொண்டு இருக்கிறது.
- இந்த கார் ஹைப்ரிட் சிஸ்டம் வசதி கொண்டு இருக்கிறது.
ஆடி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2022 ஆடி A8 L பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் புதிய ஆடி A8 L மாடலின் விலை ரூ. 1 கோடியே 29 லட்சம் என துவங்குகிறது. இதன் டெக்னாலஜி எடிஷன் விலை ரூ. 1 கோடியே 57 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய ஆடி A8 L ஃபிளாக்ஷிப் செடான் மாடல் நீண்ட வீல்பேஸ் கொண்டுள்ளது. ஆடி இந்தியா நிறுவனம் புதிய A8 L ஃபேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு மே மாதத்திலேயே துவங்கி விட்டது. இதற்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10 லட்சம் ஆகும். 2022 பிப்ரவரி மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட 2022 ஆடி A8 L ஃபேஸ்லிப்ட் மாடல் தற்போது இந்தியாவில்ல் வெளியாகி இருக்கிறது.

2022 ஆடி A8 L பேஸ்லிப்ட் மாடலில் 3 லிட்டர் TFSI பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 340 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கி.மீ. வேகத்தை 5.7 நொடிகளில் எட்டிவிடும்.
இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் மட்டுமின்றி 4 லிட்டர் TFSI என்ஜின் ஆப்ஷனாக வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 460 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டது ஆகும்.






