search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maruti Alto"

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் முற்றிலும் புது ஆல்டோ மாடல் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
    • இந்த மாடலில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் வரும் மாதங்களில் இரண்டு புது கார் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இவற்றில் புது ஆல்டோ மாடல் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. புது ஆல்டோ தவிர மாருதி கிராண்ட் விட்டாரா மாடல் இன்று (ஜூலை 20) சர்வதேச சந்தையில் வெளியாகிறது. இந்த மாடலின் விலை அறிவிப்புக்கு முன்பே முற்றிலும் புது ஆல்டோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தகவல் வெளியாகி உள்ளது.

    இரு மாடல்களும் மாருதி சுசுகி வாகன பிரிவில் பெரிய இடைவெளியை கொண்டுள்ளன. ஆல்டோ கார் மாருதி நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் மாடல் ஆகும். கிராண்ட் விட்டாரா அந்நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் எஸ்யுவி ஆகும். இவற்றில் ஆல்டோ மாடல் மாருதி அரினா விற்பனை மையங்களிலும், கிராண்ட் விட்டாரா மாருதி நெக்சா விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்பட உள்ளன.


    முற்றிலும் புது ஆல்டோ மாடல் அதிகளவு மாற்றங்களை கொண்டிருக்கும். அதன்படி இந்த மாடலில் முற்றிலும் புதிய பிளாட்பார்ம் மற்றும் பவர்டிரெயின் வழங்கப்பட இருக்கிறது. ஆல்டோ மாடல் சுசிகியின் மாட்யுலர் ஹார்டெக்ட் பிளாட்பார்ம் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது. மாருதி நிறுவன கார் மாடல்களில் எஸ் பிரெஸ்ஸோ-வில் துவங்கி XL6 வரை பல்வேறு மாடல்கள் இந்த பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டுள்ளன.

    புதிய ஆல்டோ மாடலில் K10C 1.0 லிட்டர் டூயல் ஜெட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 67 ஹெச்.பி. பவர், 89 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இது தற்போதைய மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 796சிசி என்ஜின் வழங்கும் 19 ஹெச்.பி. மற்றும் 20 நியூட்டன் மீட்டர் டார்க்-ஐ விட அதிகம் ஆகும். இதே என்ஜின் புது மாடலின் பேஸ் வேரியண்ட்களில் வழங்கப்படலாம். 

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மாருதியின் ஆல்டோ காருக்கு போட்டியாக என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் காரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. #TataMotors



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் காரினை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. புதிய டாடா ஹேட்ச்பேக் கார் டியாகோ மற்றும் டிகோர் மாடல்களுக்கு இடைப்பட்டதாக இருக்கும் என தெரிகிறது.

    இந்திய சந்தையில் டாடா டியாகோ, டிகோர் மற்றும் நெக்சான் உள்ளிட்ட மாடல்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனினும், என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் பிரிவில் டாடா சார்பில் எந்த மாடலும் இதுவரை அறிமுகமாகவில்லை. இந்த குறையை போக்க நானோ மாடல் இருந்தபோதும், இது எதிர்பார்த்த அளவு விற்பனையாகவில்லை.



    இதனால் டாடா அறிமுகம் செய்ய இருக்கும் புதிய என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் கார் அந்நிறுவனத்தின் ஆல்ஃபா (ALFA) பிளாட்ஃபார்மில் உருவாகும் என கூறப்படுகிறது. இந்த பிளாட்ஃபார்மில் 3.6 முதல் 4 மீட்டர் வரையிலான நீளமுள்ள கார்களை உருவாக்க முடியும். 

    ஏற்கனவே டியாகோ, டிகோர் மற்றும் நெக்சான் உள்ளிட்ட கார்களின் அடுத்த தலைமுறை மாடல்கள் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாகும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துவிட்டது. முன்னதாக ஆல்ஃபா வடிமைப்பு அல்ட்ரோஸ்  பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலில் வழங்கப்பட்டிருக்கிறது. எனினும், இந்த கார் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை.

    அல்ட்ரோஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் டாடா மோட்டார்ஸ் இன் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவான முதல் கார் ஆகும். இந்த ஹேட்ச்பேக் மாடலில் டாடாவின் புத்தம் புதிய இம்பேக்ட் 2.0 வடிவமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் சமீபத்தில் நடந்து முடிந்த 2019 ஜெனிவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 
    ×