என் மலர்tooltip icon

    பைக்

    டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஜூப்பிட்டர் மாடல் புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் 110சிசி ஜூப்பிட்டர் ஸ்கூட்டரை புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்கூட்டர் தற்சமயம் இன்டெலிகோ தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இது காற்று மாசை குறைப்பதோடு, எரிபொருள் சேமிக்கவும் உதவும் என டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    புதிய இன்டெலிகோ தொழில்நுட்பம் ஜூப்பிட்டர் டாப் எண்ட் மாடலான இசட்எக்ஸ் டிஸ்க் வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தியாவில் புதிய வேரியண்ட் விலை ரூ. 72,347 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டர் ஸ்டிரெயிட் புளூ மற்றும் ராயல் வைன் நிறங்களில் கிடைக்கிறது.

     டிவிஎஸ் ஜூப்பிட்டர்

    இன்டெலிகோ தொழில்நுட்பம் போக்குவரத்து நெரிசல் சமயங்களில் நீண்ட நேரம் என்ஜின் இயங்கும் சூழலில் என்ஜினை தானாக ஆப் செய்துவிடும். பின் மீண்டும் ஸ்டார்ட் செய்ய திராட்டிள் செய்தாலே போதுமானது. இதுபோன்ற அம்சம் பெற்ற முதல் டிவிஎஸ் வாகனமாக ஜூப்பிட்டர் இருக்கிறது.

    புதிய தொழில்நுட்பம் தவிர இந்த ஸ்கூட்டரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி இந்த ஸ்கூட்டரில் அதே என்ஜின், மெக்கானிக்கல் அம்சங்கள், உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. டிவிஎஸ் ஜூப்பிட்டர் மாடலில் 110சிசி சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 7.3 பிஹெச்பி பவர், 8.4 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் சிவிடி டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது. இதன் முன்புறம் 220எம்எம் டிஸ்க், பின்புறம் 130எம்எம் டிரம் பிரேக் வழங்கப்பட்டு உள்ளது.
    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 மோட்டார்சைக்கிள் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புல்லட் 350 மோட்டார்சைக்கிளை பாரஸ்ட் கிரீன் எனும் புதிய நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ராயல் என்பீல்டு புல்லட் 350 பாரஸ்ட் கிரீன் விலை ரூ. 1.33 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய நிறம் புல்லட் 350 ஸ்டான்டர்டு வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. இது பிளாக், ஆனிக்ஸ் பிளாக் மற்றும் புல்லட் சில்வர் போன்ற நிற வேரியண்ட்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. புல்லட் இஎஸ் வேரியண்ட்டில் இந்த நிறம் வழங்கப்படவில்லை.

     ராயல் என்பீல்டு புல்லட் 350

    பாரஸ்ட் கிரீன் நிறம் தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவில் புல்லட் 350 அதிக பிரபலமான மாடலாக இருந்து வருகிறது. முன்னதாக புல்லட் 350 மாடல் கடந்த ஆண்டு துவக்கத்தில் அப்டேட் செய்யப்பட்டு பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்பட்டது.

    அந்த வகையில் இந்த மாடலில் 346சிசி, சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 19.1 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    இந்தியாவில் ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்கள் விலையை உயர்த்தி உள்ளது. ஜாவா, ஜாவா பார்டி டூ, பெராக் என மூன்று மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

    மூன்று மாடல்களின் விலையும் முன்பை விட ரூ. 2,897 உயர்த்தப்பட்டு உள்ளது. முன்னதாக பல்வேறு வாகன உற்பத்தியாளர்களும் தங்களின் வாகன விலையை உயர்த்தி இருக்கின்றன. தற்சமயம் அந்த வரிசையில் ஜாவா நிறுவமும் இணைந்துள்ளது.

    உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து இருப்பதே விலை உயர்வுக்கு பெரும்பாலான நிறுவனங்கள் காரணமாக கூறி வருகின்றன. 

     ஜாவா 300

    புதிய விலை விவரம்

    ஜாவா பார்டி டூ சிங்கில் சேனல் ஏபிஎஸ் மாடல் விலை ரூ. 1.63 லட்சம்
    ஜாவா பார்டி டூ டூயல் சேனல் ஏபிஎஸ் மாடல் விலை ரூ. 1.72 லட்சம்
    ஜாவா 300 சிங்கில் சேனல் ஏபிஎஸ் மாடல் விலை ரூ. 1.76 லட்சம்
    ஜாவா 300 டூயல் சேனல் ஏபிஎஸ் மாடல் விலை ரூ. 1.85 லட்சம்
    ஜாவா பெராக் மாடல் விலை ரூ. 1.97 லட்சம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.
    சுசுகி நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஹயபுசா மாடல் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    சுசுகி நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஹயபுசா சூப்பர் பைக் மாடலுக்கான டீசர் வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. டீசரின் படி புதிய மாடல் உலகின் அதிவேக பைக் என்ற பெருமையை தக்கவைத்துக் கொள்ளும் என தெரிகிறது. இந்த பைக் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் சீறிபாயும் காட்சிகள் டீசரில் இடம்பெற்று உள்ளன.

    மேலும் இந்த மாடலின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ஸ்பீடோமீட்டருக்கு அனலாக் டையல் மற்றும் சிறிய டிஎப்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இது இதர ரைடு விவரங்களை வழங்கும்.

     சுசுகி ஹயபுசா

    ஒட்டுமொத்த வடிவமைப்பு பழைய மாடலை தழுவியே மேற்கொள்ளப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், புதிய மாடலில் அதிநவீன அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கும். தற்சமயம் புதிய மாடலின் என்ஜின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளன.

    புதிய மாடலில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என தெரிகிறது. அடுத்த தலைமுறை சுசுகி ஹயபுசா பிப்ரவரி 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த சில மாதங்களில் இதன் விற்பனை துவங்குகிறது.
    பெனலி நிறுவனத்தின் புதிய 2021 டிஆர்கே 502 மோட்டார்சைக்கிள் விற்பனையகம் வர துவங்கி உள்ளது.


    2021 பெனலி டிஆர்கே 502 பிஎஸ்6 அட்வென்ச்சர் டூரிங் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் விற்பனையகம் வர துவங்கி உள்ளது. விரைவில் இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் தனது அனைத்து பிஎஸ்4 மாடல்களையும் புதிய பிஎஸ்6 விதிகளுக்கு ஏற்ப பெனலி அப்டேட் செய்ய இருக்கிறது.

    புதிய 2021 பெனலி டிஆர்கே 502 பிஎஸ்6 மாடலில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஸ்விட்ச்கியர் அப்டேட் செய்யப்பட்டு பிரீமியம் தோற்றம் பெற்று இருக்கிறது. முன்புறம் பாடி-கலர்டு மட்கார்டு, வித்தியாசமான நக்கிள் கார்டு, புதுவித வடிவமைப்பு கொண்ட ரியர் மிரர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

     2021 பெனலி டிஆர்கே 501

    இவைதவிர புதிய மோட்டார்சைக்கிள் தோற்றத்தில் பிஎஸ்4 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. 2021 பெனலி டிஆர்கே 502 மாடலின் பெரும் அப்டேட் ஆக மேம்பட்ட என்ஜின் இருக்கிறது. இந்த மாடலில் 499சிசி ட்வின் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. 

    இதே என்ஜின் பிஎஸ்4 மாடலில் 47.6 பிஹெச்பி பவர், 45 என்எம் டார்க் செயல்திறன் வழங்கியது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. முந்தைய டிஆர்கே 502 மோட்டார்சைக்கிள் இரண்டு வேரியண்ட்களில் வழங்கப்பட்டது. 
    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 ஹிமாலயன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ராயல் என்பீல்டு நிறுவனம் தனது ஹிமாலயன் அட்வென்ச்சர் டூரிங் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் விரைவில் அப்டேட் செய்ய இருக்கிறது. புதிய 2021 ஹிமாலயன் மாடல் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புதிய ஹிமாலயன் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.

    அதன்படி 2021 ஹிமாலயன் மாடல் Make it Yours கஸ்டமைசேஷன் திட்டத்தில் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் 2021 ஹிமாலயன் மாடல் விலை ரூ. 2.51 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த விலை கொண்ட மாடலில் பேணியர்கள் காணப்படுகின்றன. 

     ராயல் என்பீல்டு ஹிமாலயன்

    அந்த வகையில் பேணியர்களுக்கான கட்டணமும் சேர்க்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இதனால் புதிய 2021 ஹிமாலயன் மாடல் விலை ரூ. 20 ஆயிரம் வரை உயர்த்தப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

    2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் மாடல் பைன் கிரீன், மிரேஜ் சில்வர் மற்றும் கிரானைடே பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் தற்போதைய மாடல்களை போன்றே லேக் புளூ,, கிராவெல் கிரே மற்றும் ராக் ரெட் நிறங்களிலும் இது கிடைக்கும் என கூறப்படுகிறது. 
    ரூ. 16 லட்சம் பட்ஜெட்டில் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் புது மோட்டார்சைக்கிள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புதிய 2021 ஸ்பீடு டிரிபில் 1200 ஆர்எஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் 2021 டிரையம்ப் ஸ்பீடு டிரிபில் 1200 ஆர்எஸ் விலை ரூ. 16.95 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    20201 டிரையம்ப் மாடல் பல்வேறு புது அம்சங்கள், உபகரணங்கள், மேம்பட்ட டிசைன் மற்றும் ஸ்டைலிங் கொண்டிருக்கிறது. முன்னதாக சில நாட்களுக்கு முன் இந்த மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு விற்பனையகம் மற்றும் ஆன்லைனில் துவங்கி உள்ளது.

     2021 டிரையம்ப் ஸ்பீடு டிரிபில் 1200 ஆர்எஸ்

    ரோட்ஸ்டர் சீரிசில் புதிய பிளாக்ஷிப் மாடலாக 2021 டிரையம்ப் ஸ்பீடு டிரிபில் 1200 ஆர்எஸ் அறிமுகமாகி இருக்கிறது. இந்த மாடலில் 1160சிசி, 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 178 பிஹெச்பி பவர், 125 என்எம்  டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இதுதவிர முன்புறம் மற்றும் பின்புறத்தில் ஒலின்ஸ் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது. இவை 43எம்எம் அப்சைடு-டவுன் போர்க், பின்புறம் டிடிஎக்ஸ்36 மோனோ-ஷாக் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 320எம்எம் இரட்டை டிஸ்க், பின்புறம் 270எம்எம் டிஸ்க் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு உள்ளது.
    டுகாட்டி நிறுவனத்தின் 2021 ஸ்கிராம்ப்ளர் 1100 டார்க் ப்ரோ மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.


    டுகாட்டி இந்தியா நிறுவனம் புதிய ஸ்கிராம்ப்ளர் 1100 டார்க் ப்ரோ மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள் விலை ரூ. 10.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    2021 ஸ்கிராம்ப்ளர் 1100 டார்க் ப்ரோ மாடல் மேட் பிளாக் மற்றும் அயோனைஸ் செய்யப்பட்ட பாகங்களை கொண்டிருக்கிறது. இதில் புல் எல்இடி லைட்டிங், பிளாட் ஹேன்டில்பார், கிளாசிக் ரியர்வியூ மிரர்கள், 10-ஸ்போக் அலாய் வீல்கள், டால்-செட் எக்சாஸ்ட் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது.

     2021 டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100 டார்க் ப்ரோ

    இத்துடன் 1079சிசி, ஏர் கூல்டு, ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 84.48 பிஹெச்பி பவர், 88 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 

    இவைதவிர புதிய மோட்டார்சைக்கிளில் டுகாட்டி டிராக்ஷன் கண்ட்ரோல், கார்னெரிங் ஏபிஎஸ் மற்றும் ஆக்டிவ், ஜர்னி, சிட்டி என மூன்றுவித ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு உள்ளன. சஸ்பென்ஷனிற்கு அப்சைடு-டவுன் போர்க், பின்புறம் மோனோ ஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பிரேக்கிங்கிற்கு முன்புறம் ட்வின் ரோட்டார்களும், பின்புறம் ஒற்றை டிஸ்க் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. புதிய 2021 ஸ்கிராம்ப்ளர் டார்க் ப்ரோ மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
    ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    இந்தியாவை பூர்விகமாக கொண்டு இயங்கும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான ஆம்பியர் எலெக்ட்ரிக் இந்திய சந்தையில் 75 ஆயிரம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து உள்ளது. இந்தியாவில் 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், புது மைல்கல்லை தற்சமயம் எட்டியுள்ளது.

    விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளதை தொடர்ந்து ஆம்பியர் தனது 300-வது விற்பனையகத்தை மகாராஷ்டிரா மாநிலத்தில் துவங்கி உள்ளது. கொரோனாவைரஸ் ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் ஆம்பியர் எலெக்ட்ரிக் நாடு முழுக்க 80 விற்பனையகங்களை துவங்கி இருக்கிறது.

     ஆம்பியர் ஸ்கூட்டர்

    சமீபத்திய அறிக்கையின் படி இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் விற்பனை அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலகில் அதிகரித்து வரும் காற்று மாசு மற்றும் மத்திய அரசின் பசுமை போக்குவரத்து திட்டம் பற்றிய விழிப்புணர்வே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

    ஒகினாவா பிராண்டின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான ஒகினவா இந்தியாவில் புதிய ஸ்கூட்டரை டூயல் எனும் பெயரில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஒகினவா டூயல் மாடல் விலை ரூ. 58,998 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டர் சுமைதாங்கும் வசதியுடன் கிடைக்கிறது. 

    இதன் முன்புறம் மற்றும் பின்புறங்களில் அதிக எடை கொண்ட பொருட்களை வைத்து பயணிக்கும் வகையிலான கேரியர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதுதவிர டெலிவரி பெட்டி, அடுக்குகள், குளிர்சாதன பெட்டி உள்ளிட்டவைகளையும் ஒகினவா கூடுதல் அக்சஸரீயாக வழங்குகிறது.

     ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    மேலும் இதன் பக்கவாட்டுகளில் பூட்ரெஸ்ட், மேட் டிசைன், போன் வைக்கும் ஸ்டாண்டு, சார்ஜிங் போர்ட் போன்றவை வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய ஒகினவா டூயல் 250வாட் எலெக்ட்ரிக் மோட்டார் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது ஆகும்.

    இந்த ஸ்கூட்டரை வாங்குவோர் 48V 28Ah பேட்டரியை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இது 45 நிமிடங்களில் 80 சதவீதமும், மூன்று மணி நேரத்தில் முழுமையாகவும் சார்ஜ் ஆகிறது. இதன் சிறிய பேட்டரி பேக் ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.

    ஒகினவா டூயல் ஸ்கூட்டரின் பேட்டரிக்கு மூன்று ஆண்டுகள் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் பயர் ரெட் மற்றும் சன்ஷைன் எல்லோ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்தியாவில் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல்கள் விலையில் திடீர் மாற்றம் செய்து இருக்கிறது.

    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. இரு மாடல்களின் விலையும் ரூ. 5 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது. 

    விலை உயர்வின் படி பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மாடல் தற்சமயம் ரூ. 2.50 லட்சம் என்றும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் மாடல் ரூ. 2.90 லட்சம் என மாறி உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் அறிமுகமான மூன்றே மாதங்களில் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

     பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ்

    இரு பிஎம்டபிள்யூ மாடல்களிலும் பிஎஸ்6 ரக 312சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 34 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் கேடிஎம் 390 டியூக் மாடலுக்கும் ஜி 310 ஜிஎஸ் கேடிஎம் 390 அட்வென்ச்சர் மற்றும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் மாடல்களுக்கும் போட்டியாக அமைகிறது.
    சிஎப் மோட்டோ நிறுவனத்தின் எம்டி800 அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது.

    சீனாவை சேர்ந்த இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான சிஎப் மோட்டோ தனது எம்டி800 அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. இது கேடிஎம் 790 அட்வென்ச்சர் மாடலை தழுவி உருவாகி இருக்கிறது. 

    புதிய எம்டி800 மாடல் ரோடு மற்றும் ஆப்-ரோடு என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் முதல் வேரியண்ட் அலாய் வீல்களும், ஆப்-ரோட் வேரியண்ட் வயர்-ஸ்போக் வீல்களை கொண்டிருக்கிறது. புதிய மாடலில் எல்இடி ஹெட்லைட், பீக் வடிவம் மற்றும் விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் பெரிய பியூவல் டேன்க், ஸ்ப்லிட்-ஸ்டைல் சீட், டெயில்-செட் எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய எம்டி800 மோட்டார்சைக்கிளில் கேடிஎம் 790 மாடலை போன்றே 799சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 95 பிஹெச்பி பவர், 88 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    எனினும், எம்டி800 மாடலில் இந்த என்ஜின் வழங்கும் செயல்திறன் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இத்துடன் அப்சைடு-டவுன் போர்க், பின்புறம் மோனோ-ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    பிரேக்கிங்கிற்கு முன்புறம் ட்வின் டிஸ்க் பிரேக், பின்புறம் ஒற்றை ரோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பிற்கு புதிய சிஎப் மோட்டோ எம்டி800 மாடலில் ஏபிஎஸ் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    ×