என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
இந்தியாவில் புதிய நிறத்தில் அறிமுகமான புல்லட் 350
Byமாலை மலர்2 Feb 2021 7:14 AM GMT (Updated: 2 Feb 2021 7:14 AM GMT)
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 மோட்டார்சைக்கிள் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புல்லட் 350 மோட்டார்சைக்கிளை பாரஸ்ட் கிரீன் எனும் புதிய நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ராயல் என்பீல்டு புல்லட் 350 பாரஸ்ட் கிரீன் விலை ரூ. 1.33 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய நிறம் புல்லட் 350 ஸ்டான்டர்டு வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. இது பிளாக், ஆனிக்ஸ் பிளாக் மற்றும் புல்லட் சில்வர் போன்ற நிற வேரியண்ட்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. புல்லட் இஎஸ் வேரியண்ட்டில் இந்த நிறம் வழங்கப்படவில்லை.
பாரஸ்ட் கிரீன் நிறம் தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவில் புல்லட் 350 அதிக பிரபலமான மாடலாக இருந்து வருகிறது. முன்னதாக புல்லட் 350 மாடல் கடந்த ஆண்டு துவக்கத்தில் அப்டேட் செய்யப்பட்டு பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்பட்டது.
அந்த வகையில் இந்த மாடலில் 346சிசி, சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 19.1 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X