என் மலர்tooltip icon

    பைக்

    • யமஹா நிறுவனத்தின் புதிய மேக்சி ஸ்கூட்டர் மாடல் ஐரோப்பா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய 2023 மாடலில் ஏராளமான புது அம்சங்கள், டிசைன் அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    யமஹா நிறுவனத்தின் எக்ஸ்மேக்ஸ் மேக்சி ஸ்கூட்டர்கள் ஐரோப்பா உள்பட பல்வேறு நாடுகளில் சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது. ஐரோப்பாவில் மட்டும் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்கூட்டர்களை யமஹா விற்பனை செய்து இருக்கிறது. இந்த ஸ்கூட்டரை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்ற எக்ஸ்மேக்ஸ் மாடல்களில் புது அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது.

    2023 யமஹா எக்ஸ்மேக்ஸ் மாடல்கள் ஏராளமான மாற்றங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது. இந்த 300சிசி மாடல் தற்போது ஸ்டாண்டர்டு மற்றும் டெக் மேக்ஸ் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் 4.2 இன்ச் கலர் டிஎப்டி டிஸ்ப்ளே, 3.2 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதன் டிஎப்டி யூனிட் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதி கொண்டிருக்கிறது. இதன் காரணமாக குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் நோட்டிபிகேஷன்களை பார்க்க முடியும். வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனில் யமஹா மைரைடு செயலி மூலம் மோட்டார்சைக்கிளை கனெக்ட் செய்து கொள்ள வேண்டும். இது மியூசிக் கண்ட்ரோல் வசதியையும் கொண்டுள்ளது. இதன் பேஸ் வேரியண்டில் எல்சிடி டேஷ் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஸ்கூட்டரின் என்ஜினில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடலில் 292சிசி,சிங்கில் சிலிண்டர் என்ஜின், CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 27.6 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. சஸ்பென்ஷனுக்கு முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் டூயல் ஸ்ப்ரிங்குகள், இருபுறமும் சிங்கில் டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவது கேள்விக்குறியான விஷயம் தான்.

    • ராயல் என்பீல்டு நிறுவனம் புதிதாக 650சிசி மோட்டார்சைக்கிளை நீண்ட காலமாக சோதனை செய்து வருகிறது.
    • இந்த மோட்டார்சைக்கிள் முதலில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகி அதன்பின் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிகிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிளை அடுத்த மாதம் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. 2022 EICMA நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டு அதன் பின் இந்தியாவில் ரைடர் மேனியா 2022 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக சோதனை செய்யப்பட்டு வரும் குரூயிசர் மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இண்டர்செப்டார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், 650சிசி பிரிவில் புது மாடலை அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

    சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து நவம்பர் 18 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் 2022 ரைடர் மேனியா நிகழ்வில் சூப்பர் மீடியோர் 650 மாடல் அறிமுகம் செய்யப்படலாம். கிளாசிக் 500 மற்றும் புல்லட் 500 பயன்படுத்துவோர் இந்த மாடலுக்காக காத்திருக்கின்றனர்.

    அதிக செயல்திறன் மற்றும் இருக்கை அமைப்பு காரணமாக இண்டர்செப்டார் 650 இந்த வாடிக்கையாளர்களுக்கு கச்சிதமான மாடலாக அமையவில்லை. இந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் சூப்பர் மீடியோர் 650 பதில் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் ஃபூட் பெக்-கள் முன்புறமாக அமைக்கப்பட்டு உள்ளது.

    புதிய சூப்பர் மீடியோர் 650 விலை இண்டர்செப்டார் மாடலை விட ரூ. 20 ஆயிரம் வரை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 விலை ரூ. 3 லட்சத்து 05 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    Photo Courtesy: Bikewale

    • கேடிஎம் நிறுவனத்தின் புதிய 2023 RC 8C மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • இது லிமிடெட் எடிஷன் டிராக் சூப்பர் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் ஆகும்.

    கேடிஎம் நிறுவனம் 2023 RC 8C லிமிடெட் எடிஷன் டிராக்-ஒன்லி சூப்பர் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் ஆகும். சர்வதேச சந்தையில் அறிமுகமாகி இருக்கும் லிமிடெட் எடிஷன் மாடல் காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்களை பெற்று இருக்கிறது. 2023 கேடிஎம் RC 8C மாடல் முற்றிலும் புதிய நிறம், ஏரோ பேக்கேஜில் மாற்றம், மேம்பட்ட எலெக்ட்ரிக் அம்சங்கள், உயர் ரக உபகரணங்களை கொண்டிருக்கிறது.

    செயல்திறனை பொருத்தவரை 2023 கேடிஎம் RC 8C மாடல் 133 ஹெச்பி பவர், 98 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய மாட்கள், குறைந்த எடை கொண்ட டைட்டானியம் வால்வுகள், காண்ராட், இரு பிஸ்டன் ரிங், அதிக கம்ப்ரெஷன் ரேட், பெரிய திராட்டில் பாடி, போல்ஸ்டர் செய்யப்பட்ட பியூவல் பம்ப் / பிரெஷர் காரணமாக இந்த மாடலின் திறன் 6.9 ஹெச்பி வரை அதிகரித்து இருக்கிறது.

    மேலும் இந்த மோட்டார்சைக்கிளின் கிளட்ச் பிரீலோடு அதிகரிக்கப்பட்டு, டாப் பேலன்சர் நீக்கப்பட்டு, கிரான்க்-கேஸ் பேலன்சர் அட்ஜஸ்ட் செய்யப்பட்டு இருப்பதாக கேடிஎம் தெரிவித்து உள்ளது. மேலும் இதன் தெர்மல் ஸ்டேபிலிட்டியை உறுதிப்படுத்த PANK ஆயில் கூலர் கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கிறது. 2023 கேடிஎம் RC 8C மாடலின் ஒட்டுமொத்த எடை 142 கிலோ ஆகும். இதில் உள்ள முற்றிலும் புது டைட்டானியம் அக்ரபோவிக் எக்சாஸ்ட் சிஸ்டம் எடை குறைய உதவுகிறது.

    புதிய லிமிடெட் எடிஷன் RC 8C மாடலின் டிராக்‌ஷன் கண்ட்ரோல், மேப்பிங் மற்றும் என்ஜின் பிரேக்கிங் உள்ளிட்டவைகளை ரைடர்கள் கஸ்டமைஸ் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்டீரிங் ஹெட், திராட்டில் ரெஸ்பான்ஸ், பிரெம்போ ஸ்டைல்மா கேலிப்பர், RCS 19 கோர்சா கோர்சா மாஸ்டர் சிலிண்டர் உள்ளிட்டவைகளில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இதன் காக்பிட் பகுதியில் மேம்பட்ட டேஷ்போர்டு, ஜிபிஎஸ் டேட்டா லாகர், கேடிஎம் RC16 சார்ந்து உருவாக்கப்பட்ட ஹேண்டில்பார் ஸ்விட்ச்கள் உள்ளன. 2023 கேடிஎம் RC 8C மாடல் மொத்தத்தில் 200 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட உள்ளன. இவை ஒவ்வொன்றின் ட்ரிபில் கிளாம்பில் பிரத்யேக சீரியல் நம்பர் இடம்பெற்று இருக்கும்.

    • ராயல் என்பீல்டு நிறுவனம் சில மாதங்களுக்கு முன் புதிய ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.
    • புதிய ஹண்டர் 350 ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் மோட்டார்சைக்கிள் ஆகும்.

    ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாத வாக்கில் புதிய ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. ஹண்டர் 350 மாடல் குறைந்த விலையில் எண்ட்ரி லெவல் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளாக நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், புதிய ஹண்டர் 350 மாடல் விற்பனை விவரங்கள் வெளியாகி உள்ளது.

    அதன்படி செப்டம்பர் மாதத்தில் மட்டும் ராயல் என்பீல்டு நிறுவனம் 17 ஆயிரத்து 118 ஹண்டர் 350 யூனிட்களை விற்பனை செய்ததாக அறிவித்து இருக்கிறது. இது ஆகஸ்ட் மாதத்தில் விற்பனையானதை விட குறைவு ஆகும். ஆகஸ்ட் மாதத்தில் 18 ஆயிரத்து 197 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.

    செப்டம்பரில் ஹோண்டா சிபி350 மாடல் மொத்தத்தில் 3 ஆயிரத்து 980 யூனிட்களே விற்பனையாகி இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் 3 ஆயிரத்து 714 யூனிட்கள் விற்பனையானது. விற்பனையில் இவ்வளவு வித்தியாசம் ஏற்பட ஹண்டர் 350 மற்றும் சிபி350 விலை காரணமாக இருக்கலாம். இந்தியாவில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடல் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது.

    ஹோண்டா சிபி350 விலை ரூ. 2 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விலை மட்டுமின்றி விற்பனை விற்பனை மற்றும் சர்வீஸ் நெட்வொர்க் உள்ளிட்டவையும் ராயல் என்பீல்டு விற்பனை அதிகரிக்க காரணமாக இருக்கும். ஹோண்டா தனது சிபி350 மோட்டார்சைக்கிளை பிங்விங் விற்பனை மையங்களிலேயே விற்பனை செய்து வருகிறது. 

    • ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் குறைந்த விலையில் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த வாரம் அறிமுகம் செய்தது.
    • அறிமுக சலுகையாக இந்த ஸ்கூட்டர் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் அடுத்த ஆண்டு வாக்கில் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரிவில் களமிறங்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய விவரம் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்- ஒலா S1 ஏர் மாடல் வெளியீட்டின் போது தெரியவந்துள்ளது.

    இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என ஒலா எலெக்ட்ரிக் நம்புகிறது. இந்த பிரிவில் தற்போதைய சூழலில் அதிக நிறுவனங்கள் களத்தில் போட்டியிடவில்லை.

    மேலும் தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்கள் தன்னை கவரவில்லை என ஒலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்து இருக்கிறார். புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

    புதிய எலெக்ட்ரிக் வாகனம் சிறப்பானதாக இருக்க ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் முற்றிலும் புது தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மட்டுமின்றி எலெக்ட்ரிக் கார்கள் பிரிவிலும் ஒலா எலெக்ட்ரிக் கவனம் செலுத்த உள்ளது. இதற்கான டீசர்களை ஒலா எலெக்ட்ரிக் வெளியிட்டு வருகிறது.

    • ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தோற்றத்தில் ஒலா S1 சீரிஸ் போன்றே காட்சியளிக்கிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய ஒலா S1 ஏர் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஒலா S1 ஏர் ஒலா நிறுவன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேஸ் வேரியண்ட் ஆக அமைந்து இருக்கிறது. குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வர ஒலா எலெக்ட்ரிக் புதிய ஸ்கூட்டரில் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

    அறிமுக சலுகையாக ஒலா S1 ஏர் ஸ்கூட்டர் விலை ரூ. 79 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த அறிமுக விலை அக்டோபர் 24 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதன் பின் புதிய ஒலா S1 ஏர் விலை ரூ. 84 ஆயிரத்து 999 என மாறி விடும். புதிய ஒலா S1 ஏர் மாடல்- இகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் என மூன்று ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.

    ஒலா S1 ஏர் மாடலில் 2.5 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 101 கிலோமீட்டர் வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது. இத்துடன் மணிக்கு அதிகபட்சமாக 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என ஒலா எலெக்ட்ரிக் தெரிவித்து இருக்கிறது. ஒலா S1 ப்ரோ மாடலில் 8.5 கிலோவாட் மோட்டார் மற்றும் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஒலா S1 ஏர் மாடலில் டெலிஸ்கோபிக் முன்புற போர்க்குகள், பின்புறம் ட்வின் ரியர் ஷாக் அப்சார்பர்கள், டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த ஸ்கூட்டர் ஒலா S1 ப்ரோ மாடலை விட எடை குறைவாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் மொத்த எடை 99 கிலோ ஆகும். ஒலா S1 ப்ரோ எடை 125 கிலோ ஆகும்.

    அம்சங்களை பொருத்தவரை ஒலா S1 ஏர் மாடலில் 7 இன்ச் டிஎப்டி டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, மூவ் ஒஎஸ் 3.0 மென்பொருள், ஹில் ஹோல்டு கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் வினியோகம் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டருக்கு அசத்தல் கேஷ்பேக் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகை தேர்வு செய்யப்பட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

    ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஆக்டிவா மாடலுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகையின் கீழ் ஆக்டிவா ஸ்கூட்டர் வாங்குவோருக்கு ஐந்து சதவீதம் (அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம்) வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    எனினும், கேஷ்பேக் சலுகை மாத தவணை முறை பரிவர்த்தனைகளில் தேர்வு செய்யப்பட்ட டெபிட்/கிரெடிட் கார்டுகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதி மற்றும் முன்பணம் இல்லாமல் ஆக்டிவா ஸ்கூட்டரை வாங்கும் சலுகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    புதிய ஆக்டிவா ஸ்கூட்டரை வாங்குவோர் ஏதேனும் ஒரு சலுகையை மட்டுமே பெற முடியும். நிதி சலுகைகள் தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த சலுகை பலன்கள் அக்டோபர் 31 ஆம் தேதி வரை வழங்கப்படும்.

    இந்திய சந்தையில் ஹோண்டா ஆக்டிவா சீரிஸ் - ஆக்டிவா 6ஜி (110சிசி) மற்றும் ஆக்டிவா 125 (125சிசி) என இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. ஹோண்டா ஆக்டிவா 6ஜி மாடல் விலை ரூ. 73 ஆயிரத்து 086 என்றும் ஆக்டிவா 125 விலை ரூ. 77 ஆயிரத்து 062 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் 125 சிசி மோட்டார்சைக்கிள் புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
    • புது வேரியண்ட் முந்தைய வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்த அம்சங்களுடன் கூடுதலாக ஸ்மார்ட் அம்சங்களை கொண்டிருக்கிறது.

    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவவனம் இந்திய சந்தையில் புதிய ரைடர் 125 SmartXonnect மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வெர்ஷன் அறிமுகமாகி இருப்பதை தொடர்ந்து ரைடர் 125 மோட்டார்சைக்கிள்: டிரம், டிஸ்க் மற்றும் SmartXonnect என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    டிசைன் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை புதிய ரைடர் 125 SmartXonnect ஒரே மாதிரியே உள்ளது. புது SmartXonnect வேரியண்டிலும் எல்இடி ஹெட்லைட், இளமை மிக்க ஸ்டைலிங், காம்பேக்ட் அளவீடுகளை கொண்டிருக்கிறது. எனினும், SmartXonnect வேரியண்டில் புதிதாக டிஎப்டி கன்சோல் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அழைப்புகள், எஸ்எம்எஸ், நோட்டிபிகேஷன் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியை பெறலாம்.

    இத்துடன் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு அருகாமையில் உள்ள எரிபொருள் நிரப்பும் மையத்திற்கு டிஎப்டி ஸ்கிரீன் மூலம் வழி பார்த்து எளிதில் சென்றடைய முடியும். டிவிஎஸ் ரைடர் SmartXonnect வேரியண்டிலும் 124.8சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜினே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 11.2 ஹெச்பி பவர், 11.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ், முன்புறம் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட், முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய டிவிஎஸ் ரைடர் SmartXonnect விலை ரூ. 99 ஆயிரத்து 990, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது டிவிஎஸ் ரைடர் டிரம் வேரியண்டை விட ரூ. 14 ஆயிரமும், டிஸ்க் பிரேக் வேரியண்டை விட ரூ. 6 ஆயிரம் அதிகமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் டிவிஎஸ் ரைடர் 125சிசி மோட்டார்சைக்கிள் ஹோண்டா SP125, ஹீரோ கிளாமர் 125 மற்றும் பஜாஜ் பல்சர் 125 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • கேடிஎம் நிறுவனத்தின் 890 அட்வென்ச்சர் ஆர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் சோதனை செய்யப்படுகிறது.
    • இந்திய சோதனையில் எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி உள்ளது.

    கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் முதல் முறையாக வெளியாகி உள்ளது. பூனேவை அடுத்த சக்கன் ஆலை அருகில் இந்த மோட்டார்சைக்கிள் பாகங்கள் பிக்-அப் டிரக்-இல் எடுத்துவரப்பட்டு இருக்கிறது.

    இந்திய சோதனையை அடுத்து புதிய கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர் மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுதவிர இந்திய பைக் வார நிகழ்வில் காட்சிப்படுத்தும் நோக்கில் கேடிஎம் தனது 890 அட்வென்ச்சர் ஆர் மோட்டார்சைக்கிளின் சில யூனிட்களை மட்டும் இந்தியா கொண்டுவந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    முன்னதாக 2019 வாக்கில் நடைபெற்ற இந்திய பைக் வார நிகழ்வின் கேடிஎம் அரங்கில் 1290 சூப்பர் டியூக் மற்றும் 790 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடல்களை கொண்டுவந்திருந்தது. எனினும், இந்த மாடல்கள் எதுவும் இந்திய சந்தையில் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை. கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர் மாடல் ஏராளமான எலெக்டிரானிக் அம்சங்கள், பிரீமியம் ஹார்டுவேர் மற்றும் செயல்திறன் மிக்க என்ஜின் கொண்டிருக்கிறது.

    இந்த மாடலில் 889சிசி, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 104 ஹெச்பி பவர், 100 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் டிராக்‌ஷன் கண்ட்ரோல், 6டி சென்சார், ஆஃப்-ரோடு ஏபிஎஸ், கார்னெரிங் ஏபிஎஸ் மற்றும் நான்கு ரைடிங் மோட்கள் கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர் மோட்டார்சைக்கிளில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை இந்த மோட்டார்சைக்கிளில் ஐந்து இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே, புதிய கிராபிக்ஸ், மேம்பட்ட நேவிகேஷன் சிஸ்டம், யுஎஸ்பி சி கனெக்டர், 21-18 இன்ச் ஸ்போக் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள், 48 எம்எம் யுஎஸ்டி முன்புற போர்க்குகள், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர் மோட்டார்சைக்கிள் டிரையம்ப் டைகர் 900, பிஎம்டபிள்யூ F850 GS அட்வென்ச்சர் மற்றும் டுகாட்டி மல்டிஸ்டிராடா வி2 போன்ற மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Photo Courtesy: ZigWheels

    • ஆம்பியர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு பண்டிகை கால சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • பண்டிகை கால சிறப்பு சலுகை விற்பனை ஆம்பியர் கோ எலெக்ட்ரிக் பெஸ்ட் பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.

    கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு பண்டிகை காலத்தை ஒட்டி சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. "ஆம்பியர் கோ எலெக்ட்ரிக் ஃபெஸ்ட்" பெயரில் சிறப்பு சலுகை விற்பனை நடத்தப்படுகிறது. அதன்படி ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு 95 சதவீதம் வரையிலான நிதி சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    இத்துடன் மாத தவணைக்கு ஆண்டு வட்டி 8.25 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வாகனங்களை எக்சேன்ஜ் செய்வோருக்கு அசத்தல் சலுகைகள், ரூ. 2 ஆயிரத்து 500 மதிப்புள்ள கூடுதல் பலன்கள் வழங்கப்படுகின்றன. மேலும் டெஸ்ட் ரைடு செய்து மேக்னஸ் இஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பரிசாக வெல்லும் வாய்ப்பு உள்ளிட்டவை பண்டிகை கால சலுகைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    மேலும் அரசு மற்றும் கார்ப்பரேட் ஊழியர்களுக்கு பண்டிகை கால சிறப்பு பலன்கள் வழங்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறப்பு சலுகைகள் நாடு முழுக்க ஆம்பியர் விற்பனை மையங்களில் வழங்கப்படுகிறது. இவை அக்டோபர் 31, 2022 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    தற்போது ஆம்பியர் நிறுவனம்- மேக்னஸ் இஎஸ், ரியோ பிளஸ் என இரண்டு ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. ஆம்பியர் இஎக்ஸ் மாடலில் 2.1 கிலோவாட் மோட்டார், 60 வோல்ட், 38.25 ஏஹெச் மேம்பட்ட லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் முழு சார்ஜ் செய்தால் 80 முதல் 100 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.

    ஆம்பியர் ரியோ பிளஸ் மாடலில் 250 வாட் பிஎல்டிசி மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். முழு சார்ஜ் செய்தால் 58 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. இந்திய சந்தையில் மேக்னஸ் இஎக்ஸ் விலை ரூ. 77 ஆயிரத்து 249 என்றும் ரியோ பிளஸ் விலை ரூ. 61 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முற்றிலும் புதிய புல்லட் 350 மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகமாகிறது.
    • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சமீபத்திய மோட்டார்சைக்கிள் மாடல்கள் ஜெ பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு வருகிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் 2020 வாக்கில் மீடியோர் 350 மாடலின் மூலம் ஜெ சீரிஸ் பிளாட்பார்மை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை ஜெ சீரிசில் உருவாக்கி அப்டேட் செய்து இருந்தது. புதிய ஜெ சீரிஸ் பிளாட்பார்ம் மோட்டார்சைக்கிளை முன்பு இருந்ததை விட சிறப்பானதாக மாற்றி இருக்கிறது.

    சமீபத்தில் ஜெ சீரிஸ் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்ட ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை ராயல் என்பீல்டு அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து தற்போது முற்றிலும் புதிய புல்லட் 350 மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ராயல் என்பீல்டு புல்லட் 350 மோட்டார்சைக்கிள் வெளியீட்டை உணர்த்தும் டீசர்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

    மற்ற ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் மாடல்களுடன் ஒப்பிடும் போது, புல்லட் 350 மாடலை அறிமுகம் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டு வருகிறது. தொழில்நுட்ப சிக்கல்கள் மட்டுமின்றி உலகின் மிக பழைய மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை புல்லட் 350 பெற்று இருக்கிறது. இந்த மாடலுக்கு இந்திய சந்தையில் அதிக ரசிகர்கள் உள்ளனர்.

    • அல்ட்ராவைலட் நிறுவனத்தின் F77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இரு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    பெங்களூரை சேர்ந்த அல்ட்ராவைலட் ஆட்டோமொடிவ் நிறுவனம் இந்திய சந்தையில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் F77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை நவம்பர் 27 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. முன்னதாக 2019 வாக்கில் அல்ட்ராவைலட் நிறுவனம் F77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்தில் தான் இந்த மோட்டார்சைக்கிள் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது.

    2019 மாடலுடன் ஒப்பிடும் போது, F77 மாடலில் தற்போது புதிய பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இதில் கூடுதல் செல்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் முழு சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் 130 முதல் 150 கிலோமீட்டர் வரை செல்லும் என அல்ட்ராவைலட் ஆட்டோமோடிவ் தெரிவித்தது.

    அல்ட்ராவைலட் F77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் உள்ள பிஎல்டிசி மோட்டார் 33 ஹெச்பி பவர், 90 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மணிக்கு 0 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தை 2.8 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 7.5 நொடிகளில் எட்டிவிடும். இந்த பைக் மணிக்கு 147 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன், முன்புறம் யுஎஸ்டி போர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட், முன்புறம் 320எம்எம் மற்றும் பின்புறம் 230எம்எம் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரைடு மோட்கள் மற்றும் ரி-ஜெனரேடிவ் பிரேக்கிங் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    ×