search icon
என் மலர்tooltip icon

    பைக்

    முற்றிலும் புதிய புல்லட் 350 - விரைவில் வெளியீடு
    X

    கோப்புப் படம் 

    முற்றிலும் புதிய புல்லட் 350 - விரைவில் வெளியீடு

    • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முற்றிலும் புதிய புல்லட் 350 மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகமாகிறது.
    • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சமீபத்திய மோட்டார்சைக்கிள் மாடல்கள் ஜெ பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு வருகிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் 2020 வாக்கில் மீடியோர் 350 மாடலின் மூலம் ஜெ சீரிஸ் பிளாட்பார்மை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை ஜெ சீரிசில் உருவாக்கி அப்டேட் செய்து இருந்தது. புதிய ஜெ சீரிஸ் பிளாட்பார்ம் மோட்டார்சைக்கிளை முன்பு இருந்ததை விட சிறப்பானதாக மாற்றி இருக்கிறது.

    சமீபத்தில் ஜெ சீரிஸ் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்ட ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை ராயல் என்பீல்டு அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து தற்போது முற்றிலும் புதிய புல்லட் 350 மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ராயல் என்பீல்டு புல்லட் 350 மோட்டார்சைக்கிள் வெளியீட்டை உணர்த்தும் டீசர்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

    மற்ற ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் மாடல்களுடன் ஒப்பிடும் போது, புல்லட் 350 மாடலை அறிமுகம் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டு வருகிறது. தொழில்நுட்ப சிக்கல்கள் மட்டுமின்றி உலகின் மிக பழைய மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை புல்லட் 350 பெற்று இருக்கிறது. இந்த மாடலுக்கு இந்திய சந்தையில் அதிக ரசிகர்கள் உள்ளனர்.

    Next Story
    ×