என் மலர்
ஆட்டோமொபைல் செய்திகள்
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய ஸ்லேவியா செடான் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஸ்கோடா நிறுவனம் தனது புதிய செடான் ஸ்லேவியா மாடல் அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. புதிய ஸ்லேவியா ஸ்கோடா ரேபிட் மாடலுக்கு மாற்றாக அறிமுகமாகிறது. இந்த மாடல் இந்தியாவில் பேஸ்லிப்ட் வடிவில் அறிமுகமாகிறது.
இந்த மாடல் ஆக்டேவியா மற்றும் சூப்பர்ப் வரிசையில் ஸ்கோடாவின் பிரீமியம் செடான் மாடல்களுடன் இணைகிறது. இந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் ஸ்லேவியா மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அறிமுகமானதும் புதிய ஸ்லேவியா மாடல் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, மாருதி சுசுகி சியாஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

இந்தியாவில் புதிய ஸ்கோடா ஸ்லேவியா மாடலின் விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்த இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலை ஜனவரி 1, 2022 முதல் உயர்த்தப்படுவதாக அறிவித்து உள்ளது. விலை உயர்வு காரணமாக கார்களின் விலை தற்போதைய விலையில் இருந்து இரண்டு முதல் ஐந்து சதவீதம் வரை அதிகமாகிறது. விலை உயர்வு மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.
விலை உயர்வில் வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் மட்டும் இடம்பெறாது. சமீபத்தில் தான் டைகுன் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடலின் விலை உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக இந்த மாடலின் விலை அடுத்த மாதம் உயர்த்தப்படாது என தெரிகிறது. இந்த ஆண்டு வோக்ஸ்வேகன் நிறுவனம் டி ராக், டைகுன் மற்றும் டிகுவான் பேஸ்லிப்ட் போன்ற மாடல்களை அறிமுகம் செய்தது.

விரைவில் வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய செடான் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் விர்டுஸ் என அழைக்கப்பட இருக்கிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது.
டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அபாச்சி ஆர்.டி.ஆர். 165 ஆர்.பி. மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
டி.வி.எஸ். நிறுவனம் அபாச்சி ஆர்.டி.ஆர். 165 ஆர்.பி. மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது அபாச்சி ஆர்.டி.ஆர். 160 4வி மாடலை விட அதிக திறன் கொண்டுள்ளது. புதிய அபாச்சி ஆர்.டி.ஆர். 165 ஆர்.பி. மாடலின் விலை ரூ. 1.45 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மாடலில் சற்றே அதிக செயல்திறன் வெளிப்படுத்தும் பெரிய என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் வெளிப்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில் டி.வி.எஸ். ரேசிங் லோகோ, அலாய் வீல்களுக்கு மேட்ச் செய்யும் ரெட் நிற கிராப் ரெயில்கள் உள்ளன.

இதன் ஹார்டுவேர் அம்சங்கள் அபாச்சி ஆர்.டி.ஆர். 160 4வி மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய லீவர்கள் உள்ளன.
புதிய அபாச்சி ஆர்.டி.ஆர். 165 ஆர்.பி. எடிஷன் மாடலில் 164.9 சி.சி. சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 18.93 பி.ஹெச்.பி. திறன், 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த பிரிவில் அதிக சக்திவாய்ந்த மாடலாக புதிய அபாச்சி ஆர்.டி.ஆர். 165 ஆர்.பி. இருக்கிறது.
யெஸ்டி ரோட்கிங் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் நிலையில் அதன் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
பிரபல யெஸ்டி பிராண்டை கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் மறுசீரமைப்பு செய்கிறது. கிளாசிக் லெஜண்ட்ஸ் ஏற்கனவே ஜாவா மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. முன்னதாக யெஸ்டி பிராண்டு மாடல்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், தற்போது இந்த மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய யெஸ்டி மோட்டார்சைக்கிள் ரோட்கிங் மாடலின் அதிநவீன வேரியண்டாக இருக்கும் என கூறப்படுகிறது. டீசர் வீடியோவில் புதிய யெஸ்டி மாடல் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், இந்த மாடல் ஓவல் நிற பியூவல் டேன்க், நீண்ட முன்புற சஸ்பென்ஷன், 18 இன்ச் ஸ்போக் வீல் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

யெஸ்டி ரோட்கிங் மாடலில் 334சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 30.64 பி.ஹெச்.பி. திறன், 32.74 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இதே என்ஜின் ஜாவா பெராக் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
சீனாவை சேர்ந்த நியோ நிறுவனத்தின் நியோ இ.டி.5 முழு சார்ஜ் செய்தால் ஆயிரம் கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
சீன எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளரான நியோ இ.டி.5 பெயரில் புதிய எலெக்ட்ரிக் செடான் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் செடான் முழு சார்ஜ் செய்தால் ஆயிரம் கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
சீனாவில் புதிய நியோ இ.டி.5 விலை 51,476 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 38,90,594 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலின் வினியோகம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்குகிறது. ரேன்ஜ் அடிப்படையில் இந்த கார் டெஸ்லாவின் மாடல் 3-க்கு போட்டியாக அமைகிறது.

நியோ இ.டி.5 மாடல் - 75 கிலோவாட் ஹவர், 100 கிலோவாட் ஹவர் மற்றும் 150 கிலோவாட் ஹவர் என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் 150 கிலோவாட் ஹவர் பேட்டரி மாடல் நீண்ட தூரம் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
இதன் பேஸ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 550 கிலோமீட்டர்களும், 100 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட மாடல் முழு சார்ஜ் செய்தால் 750 கிலோமீட்டர்களும் செல்லும். இந்த கார் டூயல் மோட்டார் செட்டப் கொண்டது ஆகும். இவை இணைந்து 483 பி.ஹெச்.பி. திறன், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன.
டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது புதிய மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது புதிய மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. டீசர் வீடியோவில் புதிய பைக் ஆர்.பி., ரேஸ் பெர்பார்மன்ஸ் எனும் வாசகம் இடம்பெற்று இருக்கிறது. தற்போதைய தகவல்களின்படி இந்த மோட்டார்சைக்கிள் அபாச்சி 165 ஆர்.பி. மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.
புதிய அபாச்சி 165 ஆர்.பி. மாடலில் பந்தய களம் சார்ந்த உதிரிபாகங்கள் வழங்கப்படுகிறது. இந்தியாவில் புதிய டி.வி.எஸ். மோட்டார்சைக்கிள் பஜாஜ் பல்சர் 150 மற்றும் யமஹா எப்.இசட்.16 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

இந்த மோட்டார்சைக்கிளில் 160சிசி என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 17.6 பி.ஹெச்.பி. திறன், 14.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
முன்னதாக டி.வி.எஸ். நிறுவனம் தனது டி.வி.எஸ். கனெக்ட் செயலியை அப்டேட் செய்தது. அதன்படி டி.வி.எஸ். கனெக்ட் செயலியில் வாட்3வொர்ட்ஸ் (what3words) சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எந்த விதமான பகுதிக்கும் சரியாக சென்றுவிட முடியும்.
ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ பேஸ்லிப்ட் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் வென்யூ பேஸ்லிப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. வென்யூ பேஸ்லிப்ட் மாடல் வெளிநாடுகளில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகின.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் வென்யூ என்-லைன் மாடலை ஹூண்டாய் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது. ஸ்பை படங்களில் புதிய காரின் பின்புறம் முற்றிலுமாக மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் டெயில்கேட், புதிய பம்ப்பர் மற்றும் புது டெயில்-லைட் வழங்கப்படுகிறது.

இத்துடன் குரோம்-பிளேட் செய்யப்பட்ட டுவின் எக்சாஸ்ட் பைப்கள், அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. காரின் முன்புறத்தில் மேம்பட்ட கிரில், புதிய பம்ப்பர், ஹெட்லைட்கள் வழங்கப்படும் என தெரிகிறது. ஹூண்டாய் வென்யூ மாடல் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்சான், மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300, கியா சொனெட், நிசான் மேக்னைட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ராக்கெட் 3 221 ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் 3 221 ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த மாடல்கள் ஆர் மற்றும் ஜி.டி. என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கின்றன. ஆர் வேரியண்ட் விலை ரூ. 20.80 லட்சம் என்றும் ஜி.டி. வேரியண்ட் விலை ரூ. 21.40 லட்சம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய ராக்கெட் 3 221 ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளில் புதிய கிராபிக்ஸ் வழங்கப்படுகிறது. ஸ்பெஷல் எடிஷன் மாடல் ரெட் ஹாப்பர் நிறத்தில் கிடைக்கிறது. பேஸ் நிறத்துடன் பிளை-ஸ்கிரீன், சைடு பேனல்கள், ரியர் பகுதி, ரேடியேட்டர் கவுல்கள், ஹெட்லேம்ப் கவுல்களில் சபையர் பிளாக் நிறம் பூசப்பட்டுள்ளது.

டிரையம்ப் ராக்கெட் 3 221 ஸ்பெஷல் எடிஷன் மாடல்களில் 2458சிசி, இன்-லைன், 3 சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 165 பி.ஹெச்.பி. திறன், 221 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இத்துடன் ஷோவா 47 எம்.எம். அப்சைடு-டவுன் முன்புற போர்க், ஷோவா ரியர் மோனோ-ஷாக், முன்புறம் இரண்டு டிஸ்க், பின்புறம் ஒற்றை ரோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை இனெர்ஷியல் மெஷர்மெண்ட் யூனிட், கார்னெரிங் ஏ.பி.எஸ்., கார்னெரிங் டிராக்ஷன் கண்ட்ரோல், 4 ரைடிங் மோட்கள், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் கீலெஸ் இக்னிஷன் வழங்கப்படுகிறது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்ளுக்கு வழங்கி வந்த இலவச சார்ஜிங் சேவை வேலிடிட்டியை நீட்டித்து இருக்கிறது.
இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளராக ஏத்தர் எனர்ஜி இருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வது மட்டுமின்றி ஏத்தர் கிரிட் பெயரில் பொது சார்ஜிங் மையங்களை ஏத்தர் எனர்ஜி இயக்கி வருகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நாட்டின் 200 கிரிட் மையங்களில் இலவச சார்ஜிங் வசதியை அறிவித்தது. இந்த நிறுவனம் விற்பனை செய்த ஏத்தர் 450 மற்றும் ஏத்தர் 450 எக்ஸ் மாடல்களுக்கு இலவச சார்ஜிங்கை அனைத்து பொது சார்ஜிங் மையங்களிலும் வழங்கி வருகிறது. முன்னதாக இலவச சார்ஜிங் டிசம்பர் 31, 2021 வரை வழங்கப்படும் என ஏத்தர் எனர்ஜி அறிவித்து இருந்தது.

தற்போது இலவச சார்ஜிங் அடுத்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை வழங்கப்படும் என ஏத்தர் எனர்ஜி அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இடம்பெற்று இருக்கிறது.
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஆப்டிமா ஹெச்.எக்ஸ். ஸ்கூட்டர் புதிய அம்சத்தை பெற்று இருக்கிறது.
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஆப்டிமா ஹெச்.எக்ஸ். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் குரூயிஸ் கண்ட்ரோல் வசதி பெற்று இருக்கிறது. ஹீரோ ஆப்டிமா ஹெச்.எக்ஸ். மாடலின் விலை ரூ. 55,850 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
சவுகரிய பயணத்திற்கு சீரான வேகத்தில் பயணிக்க இந்த புதிய அம்சம் வழி செய்கிறது. ஸ்கூட்டரில் உள்ள குரூயிஸ் கண்ட்ரோல் பட்டனை கிளிக் செய்து இந்த அம்சத்தை இயக்க முடியும். செயல்படுத்தப்பட்டதும் ஸ்பீடோமீட்டரில் குரூயிஸ் கண்ட்ரோல் சின்னம் காட்சியளிக்கும். மற்ற வாகனங்களில் உள்ளதை போன்றே பிரேக் அல்லது திராட்டிலை டுவிஸ்ட் செய்து குரூயிஸ் கண்ட்ரோல் வசதியை செயலிழக்க செய்யலாம்.

'தற்போது குரூயிஸ் கண்ட்ரோல் அம்சம் அனைத்து வாகனங்களிலும் இன்றியமையாத அம்சமாகி விட்டது. மற்ற அம்சங்களான ப்ளூடூத் மற்றும் ஜி.பி.எஸ். கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வாடிக்கையாளர் விருப்பத்தின் பேரில் வழங்கப்பட்டு வருகிறது,' என ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சொஹிந்தர் கில் தெரிவித்தார்.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.700 மாடலின் காத்திருப்பு காலம் மேலும் அதிகரித்து இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்.யு.வி.700 மாடலை இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அறிமுகமானது முதல் இந்த எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் அதிக பிரபலமாகி விட்டது. இதுவரை புதிய எக்ஸ்.யு.வி.700 வாங்க சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
எனினும், இந்த காரின் உற்பத்தி எண்ணிக்கை தொடர்ந்து குறைவாகவே இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி புதிய எக்ஸ்.யு.வி.700 வாங்க சுமார் 1.5 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எக்ஸ்.யு.வி.700 எம்.எக்ஸ். பெட்ரோல் வேரியண்டை பெற 25 முதல் 27 வாரங்கள் வரையிலும், ஏ.எக்ஸ்.7 லக்சரி பேக் மாடலை பெற அதிகபட்சம் 75 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

செமிகண்டக்டர் சிப் குறைபாடு காரணமாக எக்ஸ்.யு.வி.700 காத்திருப்பு காலம் அதிகரித்து இருக்கிறது. காரை வேகமாக டெலிவரி பெற மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் சில அம்சங்கள் இன்றி பெற்றுக் கொள்ள கேட்டுக்கொண்டு வருகிறது. இவ்வாறு செய்யும் போது காரை சற்று முன்னதாக பெற முடியும்.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய டைகர் 1200 மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் பிளாக்ஷிப் அட்வென்ச்சர் டூரர் மாடலான, டைகர் 1200 முன்பதிவை துவங்கியது. எனினும், இதன் வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
ஏற்கனவே இந்த மாடல் சில சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. டைகர் 900 மாடலை போன்றே 2022 டிரையம்ப் டைகர் 1200 மாடலும்- டைகர் 1200 ஜி.டி. மற்றும் டைகர் 1200 ரேலி ரேன்ஜ் என இரண்டு பிரிவுகளில் கிடைக்கிறது. இவற்றில் ரேலி ரேன்ஜ் ஆஃப்-ரோடு சார்ந்த மாடல் ஆகும்.

இதில் 21 இன்ச் மற்றும் 18 இன்ச் டியூப்லெஸ் ஸ்போக் வீல்கள் உள்ளன. ஜி.டி. ரேன்ஜ் மாடல்களில் 19 இன்ச் மற்றும் 18 இன்ச் அலுமினியிம் வீல்கள் உள்ளன. புதிய டைகர் 1200 மாடலில் 1160 சிசி, டிரிபில் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
செயல்திறனை பொருத்தவரை இந்த என்ஜின் 148 பி.ஹெச்.பி. திறன், 130 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடலில் 30 லிட்டர் டேன்க் வழங்கப்படுகிறது. டிரையம்ப் டைகர் 1200 மாடல் முற்றிலும் புது மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த மாடல் டிரிபில் என்ஜின், புதிய சேசிஸ் மற்றும் குறைந்த எடை கொண்டிருக்கிறது.






