என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் மற்றும் சபாரி புது வேரியண்ட்கள் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கின்றன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் XTA+ மற்றும் சபாரி XTA+ மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹேரியர் XTA+ விலை ரூ. 19.14 லட்சத்தில் துவங்கி ரூ. 19.34 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
டாடா சபாரி XTA+ மாடல் விலை ரூ. 20.08 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இது XT+ மேனுவல் மாடலை விட ரூ. 1.29 லட்சம் அதிகம் ஆகும். இந்த மாடலில் பானரோமிக் சன்ரூப், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹேரியர் XTA+ மாடலில் 2 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 பி.ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.
சபாரி XTA+ மாடலிலும் 2 லிட்டர் டீசல் என்ஜினே வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜினும் 168 பி.ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் XUV700 மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் XUV700 எஸ்.யு.வி. மாடல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை பண்டிகை காலக்கட்டத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய XUV700 மாடலின் சில முக்கிய அம்சங்கள் ஸ்பை படங்கள் வாயிலாக ஏற்கனவே வெளியாகிவிட்டன. இதைத் தொடர்ந்து மஹிந்திராவும் XUV700 அம்சங்களை ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறது. சமீபத்திய டீசரில் புதிய XUV700 பெரிய பானரோமிக் சன்ரூப் கொண்டிருக்கும் என தெரியவந்தது. இத்துடன் தனிப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கை தகவல்கள், ஓட்டுனர் உறக்கத்தில் இருப்பதை கண்டறியும் வசதி போன்றவை வழங்கப்படுகிறது.

காரின் உள்புறம் 3 ஸ்போக் ஸ்டீரிங் வீல், டூயல் ஹெச்.டி. ரெசல்யூஷன் ஸ்கிரீன்- ஒன்று தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், சோனி மியூசிக் சிஸ்டம், மஹிந்திராவின் அட்ரினோ எக்ஸ் ஏ.ஐ. தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
புதிய 2021 மஹிந்திரா XUV700 மாடலில் 2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இவற்றுடன் மேனுவல், ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
கவாசகி நிறுவனத்தின் 2022 நின்ஜா 650 மோட்டார்சைக்கிள் இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.
கவாசகி நிறுவனம் 2022 நின்ஜா 650 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய நின்ஜா 650 விலை ரூ. 6.61 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 7 ஆயிரம் அதிகம் ஆகும். 2022 நின்ஜா 650 இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.

2022 நின்ஜா 650 மாடலில் புல் எல்.இ.டி. ஹெட்லைட், டெயில் லைட், 4.3 இன்ச் புல் கலர் டி.எப்.டி. டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் 649சிசி, பேரலெல் ட்வின் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 66.4 பி.ஹெச்.பி. பவர், 64 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது. சஸ்பென்ஷனிற்கு முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.
ஆடி நிறுவனம் இந்திய சந்தைக்கென பிரத்யேக திட்டம் தீட்டி புது கார்களை அறிமுகம் செய்து வருகிறது.
ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் உற்பத்தியாளரான ஆடி இந்தியாவில் மேலும் மூன்று புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. சமீபத்தில் ஆடி RS5 ஸ்போர்ட்பேக் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இந்த ஆண்டு ஆடி அறிமுகம் செய்த ஐந்தாவது மாடல் ஆகும்.

ஆண்டு துவக்கம் முதல் ஆடி A4 பேஸ்லிப்ட், S5 ஸ்போர்ட்பேக், இ டிரான் மற்றும் இ டிரான் ஸ்போர்ட்பேக் போன்ற மாடல்களை ஆடி இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் மேலும் மூன்று புதிய கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ஆடி இந்தியா தலைவர் பல்பீர் சிங் திலன் தனியார் நிறுவன உரைடாயலில் சூசகமாக தெரிவித்தார்.
கடந்த மாதம் மூன்று கார்களை அறிமுகம் செய்தோம். மேலும் பல கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம் என அவர் தெரிவித்தார். எனினும், எந்தெந்த மாடல்கள் அறிமுகமாகும் என அவர் தெரிவிக்கவில்லை. தற்போதைய தகவல்களின்படி மூன்றில் ஒரு கார் எலெக்ட்ரிக் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
ரெனால்ட் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்துக்கான சலுகை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது. இது கார்களின் அனைத்து வேரியண்ட்களுக்கும் வழங்கப்படுகிறது.
ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி க்விட், டிரைபர், டஸ்டர் மற்றும் கைகர் போன்ற மாடல்களுக்கு ஆகஸ்ட் மாதத்துக்கான சலுகை விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்த சலுகை கார்களின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.
ரெனால்ட் க்விட் மாடலுக்கு ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் லாயல்டி போனஸ் அடங்கும்.
இந்த சலுகைகள் மகாராஷ்டிரா, குஜராத், கோவா மற்றும் கேரளா பகுதிகளுக்கும் மட்டும் தான் பொருந்தும். மற்ற மாநில வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

ரெனால்ட் டிரைபர் மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் லாயல்டி போனஸ் வழங்கப்படுகிறது. டிரைபர் மாடலின் 2021MY வேரியண்டை வாங்குவோர் ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் லாயல்டி போனஸ் பெற முடியும்.
ரெனால்ட் கைகர் மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் லாயல்டி போனஸ் வழங்கப்படுகிறது. சில மாநிலங்களில் 5 ஆண்டுகள் | 1 லட்சம் கிலோமீட்டர்களுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது. இத்துடன் சிறப்பு நிதி சலுகைகளும் வழங்கப்படுகிறது.
ரெனால்ட் டஸ்டர் மாடலை வாங்குவோருக்கு ரூ. 40 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் லாயல்டி போனஸ் வழங்கப்படுகிறது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவின் வெற்றியை பெட்ரோல் விற்பனையாளர் ஒருவர் வித்தியாசமாக கொண்டாடி இருக்கிறார்.
குஜராத் மாநிலத்தின் பருச் பகுதியை சேர்ந்த பெட்ரோல் விற்பனை மையத்தில் இரண்டு நாட்களுக்கு இலவச பெட்ரோல் வழங்கப்பட்டது. இலவச பெட்ரோல் அனைவருக்கும் வழங்காமல், நீரஜ் எனும் பெயர் கொண்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்று அசத்திய நீரஜ் சோப்ராவை பெருமைப்படுத்தும் விதமாக இந்த சலுகையை, பெட்ரோல் விற்பனை மையத்தின் முதலாளி அயுப் பதான் அறிவித்தார். இலவச பெட்ரோல் பெற, வாடிக்கையாளர் தங்களின் பெயர் இடம்பெற்றுள்ள அடையாள சான்றை காண்பிக்க வேண்டும். அடையாள சான்றில் நீரஜ் அல்லது சோப்ரா என இடம்பெற்று இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது.

இரண்டு நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட இந்த சலுகை நேற்று (திங்கள் கிழமை) மாலையுடன் நிறைவுற்றது. இந்த சலுகையில் மொத்தம் 30 பேர் வரை பயனடைந்ததாக அயுப் பதான் தெரிவித்தார். நீரஜ் பெயர் கொண்ட ஒவ்வொருவருக்கும் ரூ. 501 மதிப்புள்ள பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவின் வெற்றியால் ஒட்டுமொத்த நாடும் பெருமை பெற்றுள்ளது. இவரின் வெற்றியை இந்திய குடிமக்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் பலர் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து செய்தி மற்றும் பரிசு அறிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா, நீரஜ் சோப்ராவுக்கு புத்தம் புதிய மஹிந்திரா XUV700 மாடலை பரிசாக வழங்குவதாக அறிவித்தார்.
ஹீரோ நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் இந்திய சந்தையில் வெளியாகும் என தெரிகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. ஹீரோ நிறுவனம் தாய்வானை சேர்ந்த இ.வி. கியான், கோகோரோ போன்ற நிறுவனங்களுடன் கூட்டணி அமைப்பதாக சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையில், ஹீரோவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

லீக் ஆன புகைப்படத்தில் இருப்பது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என தெளிவாக தெரிகிறது. மேலும் இந்த ஸ்கூட்டர் உற்பத்திக்கு தயார் நிலையில் காட்சியளிக்கிறது. ஒட்டுமொத்த தோற்றம் சந்தையில் தற்போது கிடைக்கும் மாடல்களை விட பெரியதாக இருக்கிறது. மேலும் இதன் வடிவமைப்பு ஹீரோவின் பெட்ரோல் மாடல்களை விட வித்தியாசமாக இருக்கிறது.
அந்த வகையில் புதிய எலெக்ட்ரிக் மாடல் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவைதவிர ஸ்கூட்டரின் இதர அம்சங்கள் மர்மமாகவே உள்ளது. புதிய ஸ்கூட்டரின் வெளியீடு இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ நடைபெறும் என தெரிதிறது.
ஹூண்டாய் நிறுவனம் புதிய என் லைன் மாடல்களை இந்திய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது என் லைன் கார் மாடல்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. முதல் என் லைன் மாடல் இந்தியாவில் இந்த ஆண்டே அறிமுகம் செய்யப்படும் என ஹூண்டாய் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் புதிய என் லைன் மாடல்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. என் லைன் மாடலில் முதல் காராக ஹூண்டாய் ஐ20 என் அறிமுகமாக இருக்கிறது.

"நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளராக, ஹூண்டாய் தொடர்ந்து தலைசிறந்த கார்களை அறிமுகம் செய்வதுடன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. என் லைன் மூலம் ஹூண்டாய் மோட்டார் இந்தியா தொடர்ந்து புதிய இலக்குகளை சவாலாக ஏற்று, புதிய தலைமுறை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் புதிய கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம்."
"அந்த வரிசையில் புதிய என் லைன் மாடல் 2021-இல் அறிமுகம் செய்வதோடு, வரும் ஆண்டுகளில் கூடுதலாக என் லைன் மாடல்களை இந்திய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கிறோம்," என ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.எஸ். கிம் தெரிவித்தார்.
மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்.யு.வி. மாடல்களுக்கென பிரத்யேக லோகோ அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது எஸ்.யு.வி. மாடல்களுக்கென புது லோகோவை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த லோகோ முதலில் மஹிந்திரா XUV700 மாடலில் வழங்கப்பட இருக்கிறது.

"புதிய லோகோ மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்புளோர் தி இம்பாசிபில் (Explore the Impossible) வாக்கியத்தை பரைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய சவால்களை எதிர்கொள்ளும் நோக்கத்தை இந்த லோகோ பிரதிபலிக்கிறது."
The new Mahindra SUV logo, to be seen first on @MahindraXUV700, is more than just a mark. It is the new us. Watch the logo reveal film narrated by Naseerudin Shah with music by @EhsaanNoorani-@loy_mendonsa here https://t.co/DSHij8DPpn#Mahindra#ExploreTheImpossible#LogoRevealpic.twitter.com/3WiglSto41
— Mahindra Automotive (@Mahindra_Auto) August 9, 2021
"2022 ஆண்டிற்குள் நாட்டின் 823 நகரங்களில் செயல்பட்டு வரும் 1300 விற்பனை மற்றும் சர்வீஸ் டச்பாயின்ட்களில் புது லோகோ காணப்படும். புதிய சின்னத்தை படிப்படியாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க இருக்கிறோம்," என மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோடிவ் பிரிவு தலைமை செயல் அதிகாரி வீஜே நக்ரா தெரிவித்தார்.
ஆடி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய RS5 ஸ்போர்ட்பேக் மாடல் வி6 பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.
ஆடி இந்தியா நிறுவனம் புதிய RS5 ஸ்போர்ட்பேக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்போர்ட் கார் துவக்க விலை ரூ. 1.04 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மேம்பட்ட மாடல் இந்தியாவுக்கு CBU முறையில் கொண்டுவரப்படுகிறது. இதன் வெளிப்புற தோற்றத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
புதிய 2021 ஆடி RS5 ஸ்போர்ட்பேக் மாடலில் 2.9 லிட்டர், ட்வின்-டர்போ வி6 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 444 பி.ஹெச்.பி. திறன், 600 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. புதிய ஆடி RS5 ஸ்போர்ட்பேக் நான்கு கதவுகளை கொண்டிருக்கிறது.
இந்த மாடலில் RS சார்ந்த பிரத்யேக கிரில், ஹனிகொம்ப் இன்சர்ட்கள், மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஸ்ப்லிட் எல்.இ.டி. டெயில் லைட்கள், ஸ்பாயிலர் குரோம் பினிஷ் செய்யப்பட்ட எக்சாஸ்ட் டிப்கள், 19 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது ஜிG310 சீரிஸ் மாடல்கள் விலையை இரண்டாவது முறையாக மாற்றியமைத்து இருக்கிறது.
பி.எம்.டபிள்.யூ. நிறுவனம் இந்தியாவில் G310R மற்றும் G310GS மாடல்கள் விலையை மாற்றியமைத்து இருக்கிறது. இந்திய சந்தையில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் மாடல்களாக G310R மற்றும் G310GS இருக்கின்றன.

இரு மாடல்கள் விலை முன்னதாக ரூ. 2.50 லட்சம் மற்றும் ரூ. 2.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தன. தற்போது இவற்றின் விலை ரூ. 10 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இரு மாடல்கள் விலை முறையே ரூ. 2.60 லட்சம் மற்றும் ரூ. 3 லட்சம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்திய விற்பனையில் இரு மாடல்களும் கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகின்றன. இரு மாடல்களில் G310GS அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 250 டூயல் டோன் எடிஷன் மூன்று வித நிறங்களில் அறிமுகமாகி இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பஜாஜ் டாமினர் 250 டூயல் டோன் எடிஷனை அறிமுகம் செய்தது. புதிய டாமினர் 250 டூயல் டோன் எடிஷன் விலை ரூ. 1,54,176 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். புதிய டூயல் டோன் எடிஷன்- ரேசிங் ரெட் & மேட் சில்வர், சிட்ரஸ் ரஷ் & மேட் சில்வர் மற்றும் ஸ்பார்க்லிங் பிளாக் & மேட் சில்வர் என மூன்று நிறங்களில் அறிமுகமாகி இருக்கிறது.
டாமினர் 250 மாடலில் 248.8சிசி, சிங்கில் சிலிண்டர், DOHC என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 26.6 பி.ஹெச்.பி. திறன், 23.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த மாடலில் நிறம் தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

பஜாஜ் டாமினர் 250 மாடல் கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் உள்ள என்ஜின் கே.டி.எம். 250 டியூக் பிளாட்பார்மை சார்ந்து, சற்றே வித்தியாசமான டியூனிங்கில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர ஒட்டுமொத்த தோற்றம் டாமினர் 400 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
டாமினர் 250 மாடலில் 248.8சிசி, சிங்கில் சிலிண்டர், DOHC என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 26.6 பி.ஹெச்.பி. திறன், 23.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த மாடலில் நிறம் தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

பஜாஜ் டாமினர் 250 மாடல் கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் உள்ள என்ஜின் கே.டி.எம். 250 டியூக் பிளாட்பார்மை சார்ந்து, சற்றே வித்தியாசமான டியூனிங்கில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர ஒட்டுமொத்த தோற்றம் டாமினர் 400 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.






