என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
அடுத்தடுத்து மூன்று கார்கள் - ஆடியின் அசத்தல் திட்டம்
Byமாலை மலர்10 Aug 2021 9:09 AM GMT (Updated: 10 Aug 2021 9:09 AM GMT)
ஆடி நிறுவனம் இந்திய சந்தைக்கென பிரத்யேக திட்டம் தீட்டி புது கார்களை அறிமுகம் செய்து வருகிறது.
ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் உற்பத்தியாளரான ஆடி இந்தியாவில் மேலும் மூன்று புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. சமீபத்தில் ஆடி RS5 ஸ்போர்ட்பேக் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இந்த ஆண்டு ஆடி அறிமுகம் செய்த ஐந்தாவது மாடல் ஆகும்.
ஆண்டு துவக்கம் முதல் ஆடி A4 பேஸ்லிப்ட், S5 ஸ்போர்ட்பேக், இ டிரான் மற்றும் இ டிரான் ஸ்போர்ட்பேக் போன்ற மாடல்களை ஆடி இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் மேலும் மூன்று புதிய கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ஆடி இந்தியா தலைவர் பல்பீர் சிங் திலன் தனியார் நிறுவன உரைடாயலில் சூசகமாக தெரிவித்தார்.
கடந்த மாதம் மூன்று கார்களை அறிமுகம் செய்தோம். மேலும் பல கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம் என அவர் தெரிவித்தார். எனினும், எந்தெந்த மாடல்கள் அறிமுகமாகும் என அவர் தெரிவிக்கவில்லை. தற்போதைய தகவல்களின்படி மூன்றில் ஒரு கார் எலெக்ட்ரிக் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X