என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
கடந்த நவம்பர் மாதத்தில் பயணிகள் வாகனங்கள் விற்பனை ஒரு சதவீதம் உயர்ந்துள்ளதாக மோட்டார் வாகன டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த நவம்பர் மாதத்தில் பயணிகள் வாகனங்கள் விற்பனை பற்றி வாகன டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு புள்ளிவிவரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், இந்திய சந்தையில் நவம்பர் மாதத்தில், ஒட்டுமொத்த அளவில் 21,05,508 மோட்டார் வாகனங்கள் விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 20,54,296-ஆக இருந்தது. அந்த வகையில் வாகனங்கள் விற்பனை 2 சதவீதம் வளர்ச்சியடைந்து இருக்கிறது.
இதே காலத்தில் பயணிகள் வாகனங்கள் விற்பனை ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது. எனினும் வர்த்தக வாகனங்கள் விற்பனை 8 சதவீதம் சரிவடைந்து 77,394-ஆக உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அது 83,040-ஆக இருந்தது.

இரண்டு சக்கர வாகனங்கள் விற்பனை 3 சதவீதம் முன்னேறி (16,60,082-ல் இருந்து) 17,05,495-ஆக அதிகரித்து இருக்கிறது. மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 20 சதவீதம் அதிகரித்து 65,348- ஆக உள்ளதாக கூறப்பட்டுள்ளன.
கடந்த பல மாதங்களாக மோட்டார் வாகனங்கள் விற்பனை சரிவை சந்தித்து வந்த நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு தேவைப்பாடு உயர்ந்ததால் நவம்பர் மாதத்தில் விற்பனையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
நவம்பர் மாதத்தில் மாருதி சுசுகி 1,41,834 வாகனங்களை தயாரித்து இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 1,35,946-ஆக இருந்தது. அந்த வகையில், உற்பத்தி 4.33 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒன்பது மாதங்களுக்கு பின் அதன் உற்பத்தி அதிகரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கரோக் கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது புதிய கரோக் மாடல் கார் இந்தியாவில் ஏப்ரல் 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஸ்கோடா கரோக் மாடல் பாகங்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு அசெம்பில் செய்யப்படுகிறது. புதிய கரோக் மாடலில் 1.0 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் யூனிட், 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் யூனிட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு என்ஜின்களும் முறையே 113 பி.ஹெச்.பி. பவர், 175 என்.எம். டார்க், மற்றும் 148 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது. புதிய ஸ்கோடா கரோக் மாடல் MQB பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் அறிமுகமானதும் புதிய கார் எம்.ஜி. ஹெக்டார், ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் டக்சன் போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும்.
இதுதவிர ஸ்கோடா நிறுவனம் புத்தம் புதிய ஆக்டேவியா ஆர்.எஸ்.245 மாடலை 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் இந்த கார் மொத்தமாக 200 யூனிட்களே விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ஆறு லட்சம் ஆட்டோமேடிக் கார்களை விற்பனை செய்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவன்ம இந்திய சந்தையில் மொத்தம் ஆறு லட்சம் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்ட கார்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தற்சமயம் மாருதி நிறுவனம் ஆட்டோ கியர் ஷிஃப்ட், டார்க் கன்வெர்ட்டர் மற்றும் சி.வி.டி. போன்ற டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. சமீப காலமாக இந்நிறுவன வாகனங்களில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டவைகளின் விற்பனை கணிசமான அளவு அதிகரித்து இருக்கிறது.
ஆட்டோ கியர் ஷிஃப்ட் அதாவது ஏ.ஜி.எஸ். வசதியினை மாருதி நிறுவனம் ஆல்டோ கே10, எஸ் பிரெஸ்ஸோ, வேகன் ஆர், செலரியோ, இக்னிஸ், ஸ்விஃப்ட், டிசையர் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களில் வழங்கி வருகிறது. டார்க் கன்வெர்ட்டர் டிரான்ஸ்மிஷன் எர்டிகா, சியாஸ் மற்றும் எக்ஸ்.எல்.6 மாடல்களிலும் சி.வி.டி. யூனிட் பலேனோ மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.

மாருதி நிறுவன வாகனங்களில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட முதல் காராக செலரியோ மாடல் வெளியிடப்பட்டது. இந்த கார் 2014 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. செலரியோ மாடலில் ஏ.ஜி.எஸ். வசதி வழங்கப்பட்டது.
இந்திய சந்தையில் பெங்களூரு, டெல்லி, ஐதராபாத், மும்பை, பூனே மற்றும் சென்னை போன்ற நகரங்களில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்களுக்கு அதிகளழு வரவேற்பு கிடைத்து இருப்பதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.
யமஹா நிறுவனத்தின் பி.எஸ். 6 ஆர்15 வி3 மோட்டார்சைக்கிளின் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
யமஹா நிறுவனத்தின் ஆர்15 வி3 மோட்டார்சைக்கிள் நாடு முழுவதிலும் உள்ள விற்பனையகங்களுக்கு வரத்துவங்கியது. மேலும் சில விற்பனையாளர்கள் புதிய மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய யமஹா ஆர்15 வி3 பி.எஸ்.6 மாடல் ரூ. 1000 கட்டணத்திற்கு முன்பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
புதிய பி.எஸ். 6 யமஹா ஆர்15 வி3 மோட்டார்சைக்கிளில் 155சிசி திறன் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 18.6 பி.ஹெச்.பி. பவர், 14.1 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் பி.எஸ்.4 மாடல்களில் இந்த என்ஜின் 19.3 பி.ஹெச்.பி. பவர், 14.7 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

பி.எஸ். 6 என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வேரியபிள் வால்வ் ஆக்டுயேஷன் வழஹ்கப்பட்டுள்ளது. இது வாகனத்தை சீரான வேகத்தில் இயக்க வழி செய்கிறது.
யமஹா ஆர்15 வி3 பி.எஸ்.6 மாடல்- ரேசிங் புளூ, தண்டர் கிரே மற்றும் டார்க்நைட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. மூன்று மோட்டார்சைக்கிள்களின் விலை முறையே ரூ. 1.46 லட்சம், ரூ. 1.45 லட்சம் மற்றும் ரூ. 1.47 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ ஜி.பி. லிமிட்டெட் எடிஷன் மாடலும் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1.43 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ பவர் பிளஸ் மாடல் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ பவர் பிளஸ் கார் பி.எஸ்.6 வெர்ஷன் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஸ்பை படங்களில் புதிய காரில் காஸ்மெடிக் அப்டேட்கள் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் பி.எஸ்.6 பொலிரோ பவர் பிளஸ் மாடல் AIS145 பாதுகாப்பு விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.
புதிய பொலிரோ பவர் பிளஸ் மாடலில் 1.5 லிட்டர் எம்ஹாக் டி70 டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 71 பி.எஸ். பவர், 195 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும். இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். இந்த என்ஜினை ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையம் (ICAT) மூலம் சான்று பெற்றிருக்கிறது.

சமீபத்தில் பொலிரோ பவர் பிளஸ் மாடலில் டிரைவர் ஏர்பேக், பின்புறம் பார்க்கிங் சென்சார்கள், டிரைவர் மற்றும் கோ-டிரைவர் சீட்பெல்ட் ரிமைண்டர், ஹை-ஸ்பீடு அலெர்ட் போன்றவை ஸ்டான்டர்டு அம்சங்களாக வழங்கப்பட்டது. முன்னதாக இந்த காரில் ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., முன்புற டிஸ்க் பிரேக், டிரைவர் சைடு சீட்பெல்ட் ரிமைன்டர் மட்டும் வழங்கப்பட்டு இருந்தது.
இந்தியாவில் பி.எஸ்.6 மஹிந்திரா பொலிரோ கார் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகமானதும் புதிய பி.எஸ்.6 பொலிரோ பவர் பிளஸ் மாடல்களின் விலை தற்போதைய மாடலை விட விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
புகைப்படம் நன்றி: Lemon Green Studios
வால்வோ நிறுவனத்தின் எக்ஸ்.சி.40 டி4 ஆர் டிசைன் பி.எஸ்.6 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
வால்வோ நிறுவனம் இந்தியாவில் எக்ஸ்.சி.40 டி4 ஆர் டிசைன் பெட்ரோல் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 39.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய காரில் பி.எஸ்.6 ரக என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் புதிய வால்வோ காரில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 187 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்க் செயல்திறன், 8 ஸ்பீடு கியர்டிரானிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. எக்ஸ்.சி.40 மாடல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு, ஆடம்பர காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் புதிய மாடலாக வெளியிடப்பட்டுள்ளது.

புதிய எக்ஸ்.சி.40 மாடலில் 12.3 இன்ச் செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கும் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் ஹார்மன் கார்டன் 14 ஸ்பீக்கர் 600 வாட் சரவுண்ட் சிஸ்டம், டேஷ் மவுன்ட் செய்யப்பட்ட வூஃபர், பானரோமிக் சன்ரூஃப், ஸ்மார்ட்போன்களுக்கு வயர்லெஸ் சார்ஜிங் வசதி, டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 9 இன்ச் MID தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.
போர்ஷ் நிறுவனத்தின் கயென் கூப் மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
போர்ஷ் நிறுவனம் இந்தியாவில் புதிய கயென் கூப் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய போர்ஷ் கயென் கூப் பேஸ் மாடலின் துவக்க விலை ரூ. 1.31 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1.97 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கூப் வெர்ஷன் மாடல் போர்ஷ் கயென் எஸ்.யு.வி. வேரியண்ட்டை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், புதிய கூப் மாடலின் மேல்புறம் சற்று கூர்மையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் புதுவிதமான ரூஃப்லைன் காரின் தோற்றத்தை அப்டேட் செய்ய வைத்துள்ளது.
புதிய போர்ஷ் கூப் மாடல் இந்தியாவில் சி.பி.யு. முறையில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த எஸ்.யு.வி. மாடல் பார்க்க ஐரோப்பிய வேரியண்ட் போன்றே காட்சியளிக்கிறது. இந்த காரில் தற்சமயம் அடாப்டிவ் பின்புற ஸ்பாயிலர், பானரோமிக் சன்ரூஃப் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

காரின் உள்புறம் பெரிய டிஜிட்டல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெனட் கிளஸ்டர், டேஷ்போர்டில் பிரீமியம் லெதர் மற்றும் மென்மையான பொருட்கள் பயன்டுத்தப்பட்டுள்ளது. இத்துடன் பல்வேறு ஆடம்பர அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.
புதிய போர்ஷ் கயென் கூப் மாடல் வி6 மற்றும் வி8 என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இது 3.0 லிட்டர் வி6 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 335 பி.ஹெச்.பி. பவர், 450 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. உயர் ரக மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த என்ஜின் 542 பி.ஹெச்.பி. பவர், 770 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் ஸ்டான்டர்டு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.
சுசுகி நிறுவனத்தின் 2020 ஹயபூசா சூப்பர்பைக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் 2020 ஹயபூசா மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2020 சுசுகி ஹயபூசா மாடலின் துவக்க விலை ரூ. 13.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹயபூசா மாடல் மெட்டாலிக் தண்டர் கிரே மற்றும் கேண்டி டேரிங் ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.
2020 ஹயபூசா மாடலில் பி.எஸ்.4 ரக என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட் பி.எஸ்.6 கெடு துவங்கும் வரை குறைந்த எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது. இவை தவிர மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

சுசுகியின் புதிய 2020 ஹயபூசா மாடலில் 1340 சிசி இன்-லைன் நான்கு சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 197 பி.ஹெச்.பி. @9500 ஆர்.பி.எம். பவர் மற்றும் 155 என்.எம். டார்க் @7200 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த சூப்பர் பைக் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.74 நொடிகளில் எட்டிவிடும்.
இந்த சூப்பர்பைக் மணிக்கு அதிகபட்சமாக 299 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே அசெம்பில் செய்யப்பட்ட முதல் சூப்பர்பைக் மாடலாக 2020 ஹயபூசா இருக்கிறது. உள்நாட்டில் இந்த பணிகள் 2017 ஆம் ஆண்டு துவங்கியது.
வரும் ஆண்டுகளில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய முற்றிலும் புதிய ஹயபூசா மாடலை உருவாக்கும் பணிகளில் சுசுகி நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முற்றிலும் புதிய சுசுகி ஹயபூசா சூப்பர்பைக் 2021 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2020 ரேபிட் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஸ்கோடா நிறுவனம் சர்வதேச சந்தையில் புதிய 2020 ரேபிட் காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.
2020 ஸ்கோடா ரேபிட் கார் இந்தியாவில் 2021 ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ஃவோக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB-AO-IN பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் என தெரிகிறது.
புகிய 2020 ஸ்கோடா ரேபிட் காரின் முன்புறம் புதி ஹெக்சாகோனல் கிரில், புதிய வடிவமைப்பு கொண்ட ஹெட்லேம்ப் கிளஸ்டர், பின்புறம் புதிய டெயில் லேம்ப் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

முன்பற பம்ப்பர்களும் முந்தைய மாடல்களை விட பிரம்மாண்ட தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் காரின் வெளிப்புறத்தில் லிப் ஸ்பாயிலர், கருப்பு நிற ORVMகள், கருப்பு நிற அலாய் வீல்கள் மற்றும் புதிய ஃபாக் லேம்ப்களை கொண்டிருக்கிறது. உள்புறம் முற்றிலும் புதிய டேஷ்போர்டு வடிவமைப்பு மற்றும் புதிய உபகரணங்களை கொண்டிருக்கிறது.
அதன்படி காரில் 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மூன்று ஸ்போக் கொண்ட ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் புதிய ஸ்கோடா ரேபிட் கார்: 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின், சக்திவாய்ந்த 1.4 TSI என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த என்ஜின்கள் முறையே 88.7 பி.ஹெச்.பி. பவர், 108.4 பி.ஹெச்.பி. பவர் என இருவித டியூனிங்கிலும், சக்திவாய்ந்த TSI என்ஜின் 123.2 பி.ஹெச்.பி. செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7-ஸ்பீடு DSG டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் கார் இந்தியாவில் ஜனவரி 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. இந்த காருக்கான முன்பதிவு விரைவில் துவங்கும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
இந்திய சந்தையின் பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கார் மாடலாக டாடா அல்ட்ரோஸ் கார் இருக்கிறது. இந்தியாவில் அல்ட்ரோஸ் கார் டாடா நிறுவனத்தின் முதல் பிரீமியம் ஹேட்ச்பேக் காராக அறிமுகமாகிறது. இந்த கார் இந்தியாவில் மாருதி சுசுகி பலேனோ, டொயோட்டா கிளான்சா மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.

டாடா அல்ட்ரோஸ் காரில் பல்வேறு புதிய அம்சங்கள், வடிவமைப்பு மற்றும் சக்திவாய்ந்த என்ஜன் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. இந்த கார் ALFA தளத்தில் உருவாகி இருக்கிறது.
டாடா ஹேரியர் மாடலை தொடர்ந்து இம்பேக்ட் 2.0 வடிவமைப்பை தழுவி உருவாகி இருக்கும் இரண்டாவது கார் மாடலாக டாடா அல்ட்ரோஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டாடா அல்ட்ரோஸ் கான்செப்ட் கார் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இந்த ஆண்டு ஜெனீவா மோட்டார் விழாவில் ஹேரியர் மற்றும் இதர வாகனங்களுடன் புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தியது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350சிசி வாகனங்களுக்கான பி.எஸ்.6 அப்டேட் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சிங்கிள் சிலிண்டர் மோட்டார்சைக்கிள்களை சோதனை செய்து வருகிறது. இவை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ராயல் என்ஃபீல்டு புதிய பி.எஸ்.6 வாகனங்களை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்குள் வெளியிடும் என கூறப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350சிசி மாடல்களை பி.எஸ்.6 தரத்திற்கு ஏற்ப அப்டேட் செய்ய இருக்கிறது. இவை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. மேலும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது பி.எஸ்.6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்வதாக தெரிவித்துள்ளது.

புதிய அப்டேட் 350சிசி வாகனங்களுக்கு ஃபியூயல் இன்ஜெக்ஷன் ரகத்திற்கு அப்டேட் செய்யும் பட்சத்தில் வாகனங்களின் விலை உயரும் என கூறப்படுகிறது. தற்சமயம் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350சிசி மோட்டார்சைக்கிள்களின் விலை ரூ. 1.2 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 1.64 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புல்லட் சீரிஸ் வாகனங்களில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கிளாசிக், தண்டர்பேர்டு, டிரையல்ஸ் மற்றும் தண்டர்பேர்டு எக்ஸ் மாடல்களை விற்பனை செய்கிறது. அடுத்த தலைமுறை ராயல் என்ஃபீல்டு வாகனங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கிராவிடாஸ் எஸ்.யு.வி. கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
டாடா நிறுவனத்தின் கிராவிடாஸ் எஸ்.யு.வி. கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. டாடா ஹேரியர் காரின் ஏழு பேர் பயணிக்கும் கார் கிராவிடாஸ் பெயரில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகிறது.
டாடா கிராவிடாஸ் கார் ஹேரியர் போன்று OMEGA தளத்தில் உருவாகி இருக்கிறது. புதிய காரில் குவாட்டர் கிளாஸ், டி பில்லர், பெரிய ரூஃப் ரெயில்கள், மேம்பட்ட வடிவமைப்பு கொண்ட கண்ணாடிகள், கிளாஸி பிளாக் ORVMகள் வழங்கப்பட்டுள்ளன. அளவில் கிராவிடாஸ் கார் ஹேரியர் மாடலை விட நீளமாக இருக்கிறது.

காரின் பின்புறம் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. அதன்படி புதிய ஸ்மோக்டு டெயில்லேம்ப்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், பெரிய ஸ்பாயிலர் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கப்படுகிறது.
என்ஜினை பொருத்தவரை டாடா கிராவிடாஸ் காரில் ஃபியாட் தயாரித்த 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 170 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.
புதிய கிராவிடாஸ் கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகமானதும் இந்த கார் ஃபோர்டு என்டேவர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
புகைப்படம் நன்றி: MotorOctane






