என் மலர்
- முதல் நாள் விழாவில் குருவிகுளம் பங்குத்தந்தை சந்தியாகு புனித இஞ்ஞாசியார் கொடியினை ஏற்றி வைத்தார்.
- திருப்பலி முடிந்ததும் மதியம் அன்னதானம் நடைபெற்றது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள சம்சிகாபுரத்தில் தூய லொயோலா இஞ்ஞாசியார் திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாள் விழாவில் குருவிகுளம் பங்குத்தந்தை சந்தியாகு புனித இஞ்ஞாசியார் கொடியினை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினார்.
2-ம் நாள் துரைச்சாமிபுரம் பங்குத்தந்தை பவுல் ஸ்டாலின் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு சப்பர பவனி நடைபெற்றது. 3-ம் நாளான நேற்று காலை திருவிழா திருப்பலியை வீரமாமுனிவர் சித்த மருத்துவமனை இயக்குனர் அருள்ராஜ் தலைமையில் திருவிழா திருப்பலியாக நிறைவேற்றப்பட்டது.
விழாவில் சங்கரன்கோவில் பங்குதந்தை ஸ்டீபன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருப்பலி முடிந்ததும் மதியம் அன்னதானம் நடைபெற்றது. புனித இஞ்ஞாசியார் உருவம் பதித்த கொடியினை சாப்ளின் டெய்லரிங் உரிமையாளர் பாஸ்கரன் செய்து கொடுத்திருந்தார். ஏற்பாடுகளை சங்கரன்கோவில் பங்குதந்தை ஸ்டீபன் மற்றும் சம்சிகாபுரம் இறைமக்களும் இணைந்து செய்திருந்தனர்.
- அறையில் இருந்த முருகேசனை சரமாரியாக வெட்டிக்கொன்றுவிட்டு செல்வம் தப்பிச்சென்றார்.
- முருகேசன் சமீபத்தில் ஒரு சொத்தை விற்றார். அதற்கான தொகையாக அவருக்கு ரூ.55 லட்சம் கிடைத்தது.
தென்காசி:
நெல்லையை அடுத்த மூலக்கரைப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன்(வயது 35). இவர் சென்னை தாம்பரம் சிட்லபாக்கம் பகுதியில் நாட்டு மருந்து கடை நடத்தி வந்தார்.
கொலை
இவரது உடன்பிறந்த அக்காள் கணவர் பாளையை சேர்ந்த நாராயண மூர்த்தி(45). இவரது நண்பர்கள் தாழையூத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் தங்கதுரை(28), செல்வம்(26). இவர்கள் 4 பேரும் சேர்ந்து சில நாட்களுக்கு முன்பு குற்றாலத்திற்கு குளிக்க சென்றனர். அங்கு தனியார் விடுதியில் 4 பேரும் தங்கிய நிலையில் அறையில் இருந்த முருகேசனை சரமாரியாக வெட்டிக்கொன்றுவிட்டு செல்வம் தப்பிச்சென்றார்.
இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணை யில் பணத்திற்காக மைத்துனர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து முருகேசனை கொன்றது தெரியவந்தது.
இது தொடர்பாக நாராயண மூர்த்தி போலீசில் கூறியதாவது:-
முருகேசன் சமீபத்தில் ஒரு சொத்தை விற்றார். அதற்கான தொகையாக அவருக்கு ரூ.55 லட்சம் கிடைத்தது. அதில் எனக்கும் தொழில் செய்ய கொஞ்சம் பணம் கொடுக்குமாறு கேட்டேன். ஆனால் அவர் தர மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை எப்படியாவது கொலை செய்துவிட வேண்டும் என்று திட்டம் தீட்டினேன். இதற்காக எனது நண்பர்கள் 2 பேரிடமும் பேசினேன். அவர்கள் போட்டு கொடுத்த திட்டத்தின்படி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நெல்லையில் ஒரு தனியார் விடுதிக்கு இதேபோல் சென்றோம். ஆனால் அங்கு வைத்து அவரை கொலை செய்ய முடியவில்லை.
இதனால் 2-வது முறையாக திட்டம் தீட்டி குற்றாலத்திற்கு அழைத்து வந்து கொலை செய்தோம். செல்வம் கொலை செய்ததாக கூறிவிட்டு நாங்கள் தப்பித்து விடலாம் என்று நினைத்தோம். ஆனால் போலீசார் எங்களை கண்டுபிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாராயணமூர்த்தி கூறிய அனைத்தையும் போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- இந்த ஆண்டு விழா கடந்த 22-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
- சிறப்பு நிகழ்ச்சியாக 7-வது நாள் திருவீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
செங்கோட்டை:
செங்கோட்டையில் வீற்றிருக்கும் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத அழகிய மணவாளப்பெருமாள் கோவில் 11 நாள் பிரம்மோ ற்சவ விழா ஆண்டு தோறும் நடத்தப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு விழா கடந்த 22-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. இதனை யொட்டி நாள்தோறும் மூல வருக்கு காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு உற்சவருக்கு அலங்கார திருமஞ்னமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் காலையில் பல்ல க்கிலும், இரவில் பல்வேறு வகை யான வாகனத்திலும் வீதி வலம் வந்து பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலித்தார். சிறப்பு நிகழ்ச்சியாக 5-வது நாள் வெள்ளி கருட வாகனத்தில் வந்தும், 7-வது நாள் வெள்ளைப்பூ சாத்தி திருவீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான 10-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை 9.10 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்ற னர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நாளை 11-வது நாள் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
- ஈஸ்டர் ராஜ் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
- தனியாக இருந்த ஈஸ்டர் ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்லத்தாயார்புரத்தை சேர்ந்தவர் அருள் தாமஸ். இவரது மகன் ஈஸ்டர் ராஜ்(வயது 34). இவர் டிப்ளமோ படித்து விட்டு ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி செல்வ மெர்ஸி என்ற மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.இந்நிலையில் கணவன்-மனைவி 2 பேருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று பாவூர்சத்திரம் அருகே மருதடியூரில் தனது மாமனார் வீட்டுக்கு ஈஸ்டர் ராஜ் சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாத நிலையில், தனியாக இருந்த ஈஸ்டர் ராஜ் அங்குள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்து பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- குற்றாலத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் சுற்றுலா பயணிகள் குண்டாறு அணைக்கு வந்துவிடுவார்கள்.
- சில வாலிபர்கள் நடந்து சென்ற பெண்கள் மீது மோதுவதுபோல் காரை ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே குண்டாறு அணைக்கட்டு உள்ளது. மாவட்டத்தில் மிகச்சிறிய, 36 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையானது பருவமழை தொடங்கி நன்றாக பெய்தால், சில நாட்களிலேயே நிரம்பி வழியும்.
சீசன் காலங்களில் குற்றாலத்திற்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அங்கு தண்ணீர் குறைவாக விழுந்தாலோ அல்லது பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தாலோ குண்டாறு அணைக்கு வந்துவிடுவார்கள். அவ்வாறு வருபவர்கள் குண்டாறு அணையில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அங்கு விழும் நெய் அருவியில் குளித்து மகிழ்வார்கள்.
இந்தநிலையில் நேற்று விடுமுறை தினத்தையொட்டி அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்க சென்றனர். அப்போது சில வாலிபர்கள் நடந்து சென்ற பெண்கள் மீது மோதுவதுபோல் காரை ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் குளிக்க சென்ற இடத்திலும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் 2 தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அவர்கள் தாக்கிக்கொண்ட காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதனை அறிந்த செங்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்த பகுதியில் தனியார் அருவிகள் ஏராளமானவை உள்ளன. அங்கு சென்று குளிக்க, குண்டாறு அணை பகுதியில் இருந்து இயக்கப்படும் தனியார் ஜீப்களில் மட்டுமே செல்ல அனுமதி என்பதால், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் புகார் கூறுகின்றனர். மேலும் மோதல்கள் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே பாதுகாப்புக்கு போலீசாரை நியமிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அரசு பஸ் ஒன்று பாவூர்சத்திரத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.
- டிரைவர் பஸ்சை நிறுத்தும் முன்பே மூதாட்டி இறங்கியதால் தவறி விழுந்தார்.
தென்காசி:
தென்காசியில் இருந்து பாவூர்சத்திரம், ஆலங்குளம் வழியாக நெல்லை செல்லும் அரசு பஸ் ஒன்று பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நெல்லைக்கு புறப்பட்டது.
இந்நிலையில் நெல்லை- தென்காசி 4 வழிச்சாலையில் பாவூர்சத்திரம் பிரதான பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த பஸ்சில் வழி தவறி ஏறிய சுமார் 80 வயது உள்ள மூதாட்டி ஒருவர் அவசரமாக இறங்குவதற்கு முயற்சித்துள்ளார்.
இந்நிலையில் பஸ் டிரைவர் நிறுத்துவதற்கு முன்பே அந்த மூதாட்டி பதட்டத்தில் இறங்கியதால் தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. உடனே பஸ் நிறுத்தப்பட்டது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் அந்த மூதாட்டிக்கு தலையில் அடிபட்டதால் தனது பெயர், அவரது ஊர் மற்றும் உறவினர்கள் பெயரை சொல்ல முடியாமல் திணறினார். சம்பவம் அறிந்து விரைந்து வந்த பாவூர்சத்திரம் போலீசார் அந்த மூதாட்டியை 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மூலம் சிகிச்சை கொடுத்து பின்னர் அவரை அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். ஆம்பு லன்சில் ஏறுவதற்கு மறுத்த மூதாட்டியை பெண் போலீஸ் ஒருவர் கரிசனையுடன் பேச்சு கொடுத்து அவரை 108 ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காகவும், மூதாட்டியின் உறவினர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வதற்காகவும் அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியாக பார்க்கப்பட்டது. அந்த பெண் போலீசுக்கு பாராட்டுகளும் குவிகிறது. இந்நிலையில் மூதாட்டியின் சொந்த ஊர் மடத்தூர் என்பது தெரியவந்தது.
- நாளை சங்கரன்கோவில் ஆடித்தபசு காட்சி நடைபெற உள்ளது.
- கோவிலை சுற்றி உள்ள மாட வீதிகள், கோவில் முன்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் ஆய்வு செய்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் ஆடித்தபசு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்த ஆண்டு கடந்த 21-ந்தேதி ஆடித்தபசு திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று விமர்சையாக நடை பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தேரை வடம்பிடித்து இழுத்து நிலையம் சேர்த்தனர். தொடர்ந்து நாளை (திங்கட்கி ழமை) தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் ஆடித்தபசு காட்சி நடைபெற உள்ளது.
இதனையொட்டி நாளை அதிகாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு விளா பூஜை, சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெறும். மதியம் தெற்கு ரதவீதியில் உள்ள தபசு மண்டபத்துக்கு கோமதி அம்பாள் ஒற்றைக்காலில் நின்றபடி, தவக்கோலத்தில் எழுந்தருள, மாலையில் சங்கரநாராயண சுவாமி தபசு காட்சிக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது, தனது வலதுபாகத்தில் சிவனுக்குரிய அம்சங்களும், இடது பக்கம் திருமாலுக்குரிய அம்சங்க ளுமாக சங்கர நாராயணராக எழுந்தருளி, கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறும்.
நகராட்சி சேர்மன் ஆய்வு
இந்நிகழ்வையொட்டி கோவிலை சுற்றி உள்ள மாட வீதிகள், கோவில் முன்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் ஆய்வு செய்தார். அங்கு சுகாதார பணிகள், தற்காலிக குடிநீர் வசதிகள் ஏற்படுத்தும் இடங்கள், ஏற்கனவே உள்ள கழிப்பிடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அதிகாரிகளிடம் சுகாதார பணிகளை திருவிழா நாட்களில் முழு நேரமும் கண்காணித்து குப்பைகள் சேராத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். வியாபாரிகள் பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும்.
தற்காலிக குடிநீர் வசதி, தற்காலிக குடிநீர் டேங்குகளில் குடிநீர் இருப்பை அடிக்கடி ஆய்வு செய்து குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார். மேலும் ஏற்கனவே உள்ள கழிப்பிடத்தை ஆய்வு செய்த சேர்மன் உமா மகேஸ்வரி, கழிப்பிடத்தை நிர்வகித்து வருபவர்களிடம் அடிக்கடி சுத்தம் செய்து சுகாதாரமான முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும், பக்தர்களிடம் கட்டணம் அதிகமாக வசூலிக்க கூடாது எனவும் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது நகராட்சி கமிஷனர் சபாநாயகம், சுகாதார அலுவலர் பாலச்சந்தர், சுகாதார ஆய்வாளர் வெங்கட்ராமன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- கோவிலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டக படிதாரர்கள் சார்பில் திருவிழா நடைபெற்றது.
- விரதமிருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
சிவகிரி:
சிவகிரி அருகே விஸ்வநாதபேரி திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடிமாதம் பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டக படிதாரர்கள் சார்பில் திருவிழா நடைபெற்றது. திரவுபதி அம்மன் திருக்கல்யாண அலங்காரம், கனி பறித்தல், அர்ச்சுனன் தபசு, பூப்பறித்தல், அரவான் களப்பொலி, துச்சாதனன் பலி வாங்குதல் ஆகிய வடிவங்களில் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. 9-ம் திருநாளான நேற்று சேனைத்தலைவர் சமுதாயத்தினர் சார்பில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.
காலையில் திரவுபதி அம்மன் உட்பட அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்ட பூக்குழி திடலில் வேதபராயண முறைப்படி அக்னி வளர்க்கப்பட்டது.
தொடர்ந்து பகலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு திரவுபதி அம்மன், அர்ச்சுனன், கிருஷ்ணன் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.
பின்னர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மாலை 6.30 மணிக்கு பூக்குழி திடலை அடைந்த உடன் பூசாரி மணிகண்டன் பூக்குழி இறங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
இதில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள், பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள், விழா கமிட்டியினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- 3 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு கதை முடிவை தெரிவித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
- போட்டிகளில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தென்காசி:
இலஞ்சி பாரத் மாண்டி சோரி, பாரத் வித்யா மந்திர் பள்ளிகள் உள்ளிட்ட பாரத் கல்விக்குழுமத்தில் பெகாசஸ்-2023 கலைத் திருவிழா போட்டிகள் நடை பெற்றது. பாரத் கல்விக் குழும தலைவர் மோகன கிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், முதல்வர் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சூரஜ் வரவேற்று பேசினார்.
கனிஷ்கா மற்றும் உஷாஷீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். பாரத் கல்வி குழும தலைவர், செயலாளர், முதல்வர்கள், கல்வி ஆலோசகர் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து குத்து விளக்கேற்றி கலை விழா போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
காலையில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் மழலையர் பிரிவினருக்கு வர்ணம் தீட்டுதல், பாடல் ஒப்புவித்தல், புராண கதைகளில் உள்ள கதாபாத்திரங்கள் சித்தரிப்பு ஆகிய போட்டிகளும், 1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடனம், ஆங்கில பொருளறிதல், திறன் தேர்வு, படங்களை தேர்வு செய்து ஒட்டுதல் ஆகிய போட்டிகளும், 3 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு கதை முடிவை தெரிவித்தல், தேவையற்ற ஆடைகளில் இருந்து உடை அலங்காரம் செய்தல், நடனம் ஆகிய போட்டிகளும், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் வடிவமைப்பு, புதிர் ஆகிய போட்டிகளும், 9 முதல் பிளஸ்-2 வரை மிஸ், மாஸ்டர் பெகாசஸ், வினாடி -வினா, குழு பாடல் ஆகிய போட்டிகளும் நடை பெற்றது. மேலும் 1 முதல் பிளஸ்-2 வரை உள்ள மாணவர்களுக்கு குழு பாடல், கணிதம் மற்றும் அறிவியல் திறனறி தேர்வு ஆகிய போட்டிகளும் நடை பெற்றன.
இதில் 30-க்கும் மேற் பட்ட பள்ளிகளை சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இலஞ்சி ஆக்ஸிஸ் வங்கி முதன்மை மேலாளர் மாரியப்பன் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு போட்டிகளில் முதல் 3 இடம் பெற்ற பள்ளிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினார். அவரைத் தொடர்ந்து பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன் மற்றும் செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன் போட்டிகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்க ளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டி னர்.
முதலிடம் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் பெகாசஸ் சுழற்சின்ன பரிசும், 2-ம் இடம் பெற்ற எஸ்.ஆர் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் பள்ளிக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு, கேடயமும், 3-ம் இடம் பெற்ற கிங்ஸ் ஸ்கூல் சி.பி.எஸ்.சி பள்ளிக்கு ரொக்க பரிசு ரூ.3 ஆயிரம் மற்றும் கேடயமும் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் விழாவின்போது திறன்மிகு ஆசிரியர் விருது உள்ளிட்ட பல்வேறு விருது கள் வழங்கப்பட்டன. பாரத் வித்யாமந்திர் மேல்நிலைப் பள்ளி 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் தன்னார்வலர்களாக செயல்பட்டனர். ஆக்ஸிஸ் வங்கி, டிரிஸில் உணவகம், பிரசாந்தி மருத்துவமனை, பி.கே.போட்நிக், வேலவன் புத்தக மையம், செக்யூர் ஐ.டி டெக், இன்பைனைட் லேர்னிங், ரூத் சிப்பிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட் ஆகியோர் பெகாசஸ் -2023 கலைத் திருவிழா போட்டிக்கு நன்கொடை அளித்திருந்தனர்.
ஏற்பாடுகளை பாரத் கல்வி குழுமத் தலைவர் மோகன கிருஷ்ணன், செய லாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், பள்ளி முதல்வர் வனிதா, ஆலோச கர் உஷா ரமேஷ் மற்றும் இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் செய்திருந்தனர்.
- போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் ஆய்வு செய்தார்.
- நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்தில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் 'திடீர்' ஆய்வு நடத்தினார். அப்போது போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், கைதிகள் அறை, கணினி அறை, வழக்குகளில் உள்ள இருசக்கர வாக னங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.
மேலும் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும் போலீசாருக்கு அறிவுறுத்தினார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் உடையார் சாமி, தலைமை காவலர்கள் உள்பட போலீ சார் உடனிருந்தனர்.
- கிருஷ்ணா புரத்தில் தொடங்கிய இந்த பேரணி கடையநல்லூர் புதிய பஸ் நிலையத்தில் முடிவு பெற்றது.
- பேரணியில் பங்கேற்றவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர்.
கடையநல்லூர்:
கடையநல்லூரில் மக்கா அறக்கட்டளை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
அறக்கட்டளை நிறுவனத்த லைவர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கி னார். அறக்கட்டளை செய லாளர் சம்சுதீன், அறக்கட்ட ளை பொறுப்பா ளர்கள் ஹீரா, காஜாமைதீன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். கடையநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு பேரணியை கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக வார்டு கவுன்சிலர்கள் கண்ணன் என்ற பாலசுப்பிரமணியன், சுபா ராஜேந்திர பிரசாத், பூங்கோதை கருப்பையா தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கிருஷ்ணா புரத்தில் தொடங்கிய இந்த பேரணி கடையநல்லூர் புதிய பஸ் நிலையத்தில் முடிவு பெற்றது. பேரணியில் பங்கேற்றவர்கள் போதை தடுப்பு விழிப்பு ணர்வு மற்றும் விபத்து தடுப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர். இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் ஷேக் மைதீன், யாசின், பைசல் அமீர்கான் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.முடிவில் அறக்க ட்டளை பொறு ப்பாளர் மீராசா இப்ராஹிம் நன்றி கூறினார்.
- போட்டிகளில் 40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
- பெண்கள் பிரிவில் முதல் 2 இடங்களை ஸ்ரீகிருஷ்ணா பள்ளி, ஸ்டஅக்-ஹைடெக் பள்ளி பெற்றன.
ஆலங்குளம்:
இடைகால் ஸ்டஅக்-ஹைடெக் பள்ளியில் 3-ம் ஆண்டு ஸ்ரீசொக்கலிங்கம் ஞானப்பூ நினைவு சுழற்கோப்பைக்கான மாநில அளவிலான கோகோ போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 12 மற்றும் 14 வயதிற்குட்பட்ட மாணவ- மாணவிகள் 40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. ஆண்களு க்கான 12 வயதிற்குட்ப ட்டோர் பிரிவில் முதல் 2 இடங்களை புதுச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்டஅக் ஹை-டெக் பள்ளி பெற்றன. பெண்கள் பிரிவில் முதல் 2 இடங்களை கன்னியா குமரி ஸ்ரீகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்டஅக்-ஹைடெக் பள்ளி பெற்றன. ஆண்களுக்கான 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதல் 2 இடங்களை புதுச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா மேல் நிலைப்பள்ளி பெற்றன. பெண்கள் பிரிவில் முதல் இரண்டு இடங்களை ஸ்ரீகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி மற்றும் கிராமக் கமிட்டி மேல்நிலைப்பள்ளி பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றி க்கோப்பை, பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை பள்ளி தலைவர் முருகன், தாளாளர் புனிதா செல்வி, முதல்வர் பிரவின்குமார் மற்றும் பள்ளி ஆலோசகர் ஜோசப் ஆகியோர் வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடு களை பள்ளியின் உடற்கல்வி துறை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.







