search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டையில் அழகிய மணவாளப் பெருமாள் கோவில் ஆடி பிரம்மோற்சவ தேரோட்டம்
    X

    செங்கோட்டையில் அழகிய மணவாளப் பெருமாள் கோவில் ஆடி பிரம்மோற்சவ தேரோட்டம்

    • இந்த ஆண்டு விழா கடந்த 22-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
    • சிறப்பு நிகழ்ச்சியாக 7-வது நாள் திருவீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் வீற்றிருக்கும் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத அழகிய மணவாளப்பெருமாள் கோவில் 11 நாள் பிரம்மோ ற்சவ விழா ஆண்டு தோறும் நடத்தப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு விழா கடந்த 22-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. இதனை யொட்டி நாள்தோறும் மூல வருக்கு காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

    முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு உற்சவருக்கு அலங்கார திருமஞ்னமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் காலையில் பல்ல க்கிலும், இரவில் பல்வேறு வகை யான வாகனத்திலும் வீதி வலம் வந்து பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலித்தார். சிறப்பு நிகழ்ச்சியாக 5-வது நாள் வெள்ளி கருட வாகனத்தில் வந்தும், 7-வது நாள் வெள்ளைப்பூ சாத்தி திருவீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

    முக்கிய நிகழ்ச்சியான 10-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை 9.10 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்ற னர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நாளை 11-வது நாள் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    Next Story
    ×