search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bike"

    • வாகனத்தின் எண்ணை வைத்து உரிமையாளரின் செல்போனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • திருடிய சமயத்தில் இருந்த மோட்டார் சைக்கிளின் கலரை மாற்றி அந்த ஆசாமி வேறு கலருடன் சுற்றி வருகிறார்.

    திண்டுக்கல்:

    சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் ரியாஸ் அகமது. இவரது மனைவி வண்டலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 01.10.2020ம் ஆண்டு அலுவலகத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் பணிக்கு சென்றார். மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருடுபோனது. இதுகுறித்து வண்டலூர் போலீஸ் நிலையத்தில் ரியாஸ் அகமது புகார் அளித்தார்.

    அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து முதல் தகவல் அறிக்கைக்கான ரசீது ரியாஸ் அகமதுக்கு வழங்கப்பட்டது. அதன் பின்பு பலமுறை போலீஸ் நிலையத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது பைக் சிக்கவில்லை என கூறிவந்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் திருடுபோன பைக்குடன் ஒருவர் சென்றுள்ளார். அந்த பைக்கை போக்குவரத்து காவலர்கள் நிறுத்த முயன்ற போது அவர் நிறுத்தாமல் சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து அவரது வாகனத்தின் எண்ணை வைத்து உரிமையாளரின் செல்போனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதில் ரூ.3 ஆயிரம் அபராதம் கட்டச்சொல்லி ரியாஸ் அகமதுக்கு குறுந்தகவல் வந்துள்ளது.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வண்டலூர் போலீஸ் நிலைத்தில் விபரம் கேட்டறிந்தார். பின்னர் ஒட்டன்சத்திரம் போலீசாரிடம் அவர்கள் கேட்டபோது சம்மந்தப்பட்ட பைக் திருடு போய்விட்டது என்றால் அதுகுறித்து உடனடியாக கணினியில் ஏற்றப்பட்டு விடும். அந்த சமயத்தில் உரிமையாளருக்கும், அந்த வாகனத்திற்கும் எந்த தொடர்பும் இருக்காது. அவ்வாறு உள்ள சூழ்நிலையில் திருட்டு போன மோட்டார் சைக்கிள் விதிமீறளுக்காக எவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது என கேட்டனர்.

    அந்த வாகனம் கடந்த சில நாட்களாக திண்டுக்கல் மாவட்டத்தின் குறிப்பிட்ட சில இடங்களில் சுற்றி வருவதால் விரைவில் அதனை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி திருடிய சமயத்தில் இருந்த மோட்டார் சைக்கிளின் கலரை மாற்றி அந்த ஆசாமி வேறு கலருடன் சுற்றி வருகிறார். ஏதேனும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டாலும் உரிமையாளருக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் இருப்பதால் உடனடியாக அவரை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்த காதல் ஜோடி பைக்கில் சாகச பயணம் செய்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
    • பைக்கில் பயணம் செய்த பெண் ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் கே.டி.எம் பைக்கின் பெட்ரோல் டேங்க் மேல் காதலியை அமர வைத்து, கட்டியணைத்தபடி இளைஞர் ஒருவர் பயணம் செய்துள்ளார்.

    அவ்வழியே தனது காரில் பயணம் செய்த ஜாஸ்பூர் காவல் கண்காணிப்பளார் (எஸ்.பி) ஷசி மோகன் சிங் இந்த ஜோடியை பார்த்து அதனை வீடியோ எடுத்துள்ளார். பின்னர் ஆபத்தான முறையில் பைக் ஒட்டிய வினய் என்பவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த காதல் ஜோடி பைக்கில் சாகச பயணம் செய்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. பைக்கில் பயணம் செய்த பெண் ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹிமாலயன் மாடலில் உள்ளதை போன்ற என்ஜின், சேசிஸ் வழங்கப்படலாம்.
    • புதிய ராயல் என்பீல்டு பைக்கின் பாகங்கள் வித்தியாசமாக காட்சியளிக்கின்றன.

    ராயல் என்பீல்டு நிறுவனம் 450 சிசி பிரிவில் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வரிசையில், ராயல் என்பீல்டு நிறுவனம் குயெரில்லா (Guerrilla) 450 மோட்டார்சைக்கிளை இந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    புதிய ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் ஹிமாலயன் மாடலை தழுவி நேக்கட் மோட்டார்சைக்கிள் மாடலாக உருவாக்கப்படுகிறது. இந்த மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     


    ஹிமாலயன் 450 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு வரும் குயெரில்லா 450 மோட்டார்சைக்கிள் அதன் புரொடக்ஷன் நிலையில் இருக்கும் வேரியண்ட் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த மாடலிலும் ஹிமாலயன் 450 மோட்டார்சைக்கிளில் உள்ளதை போன்ற என்ஜின் மற்றும் சேசிஸ் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    புதிய பைக்கின் பியூவல் டேன்க், சீட், மட்கார்டுகள் மற்றும் முன்புற சஸ்பென்ஷன் என்று எல்லாமே வித்தியாசமாகவே காட்சியளிக்கிறது. இதில் உள்ள அலாய் வீல்கள் 17 இன்ச் அளவில் இருப்பதை போன்று காட்சியளிக்கிறது. இந்த மாடலில் ஃபுல் கலர் டி.எஃப்.டி. ஸ்கிரீன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    ராயல் என்பீல்டு குயெரில்லா 450 மாடலிலும் 452சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த என்ஜின் 39.47 ஹெச்.பி. பவர், 40 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.

    இந்திய சந்தையில் புதிய ராயல் என்பீல்டு பைக்கின் விலை ரூ. 2.4 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 2.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    • புளூ ப்ரின்ட் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
    • மோட்டார்சைக்கிளின் மத்தியில் இருக்கையின் கீழ் வழங்கப்படுகிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அடுத்த மாதம் தனது முதல் சி.என்.ஜி. பைக்கை அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய சி.என்.ஜி. பைக் தொடர்பாக பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், பஜாஜ் சி.என்.ஜி. பைக்கின் புளூ ப்ரின்ட் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    இதில் புதிய பைக்கின் சேசிஸ், சி.என்.ஜி. மற்றும் பெட்ரோல் டேன்க் மற்றும் ஒட்டுமொத்த தோற்றம் எப்படி இருக்கும் என்ற விவரங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி பஜாஜ் சி.என்.ஜி. பைக் டபுள் கிராடில் ஃபிரேம் கொண்டிருக்கும் என்றும் சி.என்.ஜி. சிலிண்டரை பிடித்துக் கொள்ளும் பிடிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த யூனிட் மோட்டார்சைக்கிளின் மத்தியில் இருக்கையின் கீழ் வழங்கப்படுகிறது.

     


    சி.என்.ஜி. மற்றும் பெட்ரோல் டேன்க் என இரண்டையும் வைத்துக் கொள்வதற்கு ஏற்ற வகையில் பஜாஜ் சி.என்.ஜி. பைக்கில் ஸ்லோப்பர் என்ஜின் வழங்கப்படுகிறது. என்ஜினின் தலைப்பகுதி கீழ்புறமாக வைக்கப்பட்டு இருப்பதால், சி.என்.ஜி. டேன்க் வைக்க இடம் கிடைக்கிறது.

    சி.என்.ஜி. டேன்க்-ஐ வைத்து கொள்ள ஏதுவாக சேசிஸ்-இன் மெயின் ஃபிரேம் மற்றும் சப்-ஃபிரேம் இடையில் வட்ட வடிவம் கொண்ட பிடிப்புகள் வெல்டிங் செய்யப்படுகின்றன. என்ஜின், சி.என்.ஜி. சிலிண்டர் மற்றும் ஃபியூவல் டேன்க் உள்ளிட்டவைகளை பஜாஜ் நிறுவனம் எப்படி ஒருங்கிணைக்கும், பைக்கின் எடை எவ்வளவு இருக்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    புதிய சி.என்.ஜி. பைக்கில் பஜாஜ் நிறுவனம் 125சிசி என்ஜின் வழங்கும் என்று தெரிகிறது. இந்தியாவின் முதல் சி.என்.ஜி. பைக் என்ற பெருமையை பெறுகிறது. அந்த வகையில், இந்த பைக் அதிக மைலேஜ் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். 

    • 30 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
    • அதிக அம்சங்கள், புதிய தொழில்நுட்பங்களை கொண்டிருக்கிறது.

    கே.டி.எம். இந்தியா நிறுவனம் தனது மிகப்பெரிய மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் கே.டி.எம்.-இன் பெரிய பைக்குகள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

    தற்போது கே.டி.எம். இந்தியா நிறுவனம் புதிய 390 டியூக் மாடலை மட்டுமே பெரிய பைக் பிரிவில் விற்பனை செய்து வருகிறது. இந்த மாடலில் 399சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 40 ஹெச்.பி. பவர், 30 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

     


    தற்போதைய தகவல்களின் படி கே.டி.எம். 890 டியூக் ஸ்டிரீட் நேக்கட், 890 அட்வென்ச்சர் அல்லது 990 டியூக் மற்றும் 1390 சூப்பர் டியூக் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. 890 டியூக் மாடல் அதிக அம்சங்கள், புதிய தொழில்நுட்பங்களை கொண்டிருக்கிறது.

    இதில் கே.டி.எம். 890 டியூக் மாடல் அந்நிறுவனத்தின் கே.டி.எம். 790 டியூக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. 890 அட்வென்ச்சர் மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெறும் என்று தெரிகிறது.

    டூரிங் மற்றும் ஆஃப் ரோட் ரைடிங் என இருவித பயன்பாடுகளுக்கும் ஏற்ற மாடலாக 890 அட்வென்ச்சர் விளங்குகிறது. இந்திய சந்தையில் இந்த பைக் டிரையம்ப் டைகர் 900 மற்றும் சுசுகி வி ஸ்டாம் 800DE மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    இந்திய சந்தையில் கே.டி.எம்.-இன் பெரிய பைக் மாடல்கள் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. 

    • தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் பைக் ஒட்டி வந்த நபர் மீது ஒரு லாரி மோதியது.
    • இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் பைக் ஒட்டி வந்த நபர் மீது ஒரு லாரி மோதியது. இதனால் பைக் லாரியின் அடியில் சிக்கி சேதமடைந்தது. உடனே பைக் ஒட்டி வந்த நபர் லாரி மீது ஏறி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    ஆனால் அதைப் பொருட்படுத்தாது ஓட்டுநர் லாரியை ஓட்டிச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அன்றைய தினம் இதே லாரி மற்றொரு விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. 

    • பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' .
    • டிரிப்பில் அஜித் தனது நண்பர்களுக்கு பிரியாணி சமைத்து தரும் வீடியோ டிரெண்டிங் ஆனது.

    பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' . இதனை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார்.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். மேலும் நடிகை ரெஜினா கசெண்ட்ரா நடிக்கிறார். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படப்பிடிப்பின் போது ஆரவ் எடுத்த அஜித் குமாரின் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலானது.

    அஜித் குமார் அவர்களின் நண்பர்களோடு பைக் டூர் செல்லும் பழக்கம் உடையவர். சமீபத்தில் அவர் மீண்டும் நண்பர்களுடன் பைக் டிரிப் சென்றார். அதில் நடிகர் ஆரவும் உடனிருந்தார். அந்த டிரிப்பில் அஜித் தனது நண்பர்களுக்கு பிரியாணி சமைத்து தரும் வீடியோ டிரெண்டிங் ஆனது.

    கடந்த வாரம் விடாமுயற்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சி ஒன்றின் வீடியோவை படக்குழு வெளியிட்டது. விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து அஜித் குமாரும் ஆரவும் மிக நல்ல நண்பர்களாக இருக்கின்றனர்.

    இந்நிலையில் அஜித் குமார் ஆரவுக்கு ரூ. 35 லட்சம் மதிப்பிளான ரேசிங் பைக்கை பரிசளித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கல்லூரியில் படித்து கொண்டே பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கும் இளைஞரின் வறுமையை உணர்ந்து அந்த மாணவருக்கு பைக்கை பரிசாக பாலா வழங்கினார்.
    • நடிகர் பாலா ஏழை இளைஞருக்கு பைக் வழங்கிய சம்பவத்தை பொம்மையாக உருவாக்கி உள்ளார்

    சின்னத்திரை காமெடி நடிகராக லட்சக் கணக்கானோர் மனதில் இடம் பிடித்தவர் பாலா. இவரது சமூக சேவை பணிகள் வைரலாகி வருகின்றன.

    அந்த வகையில் மேல்மருவத்தூரில் கல்லூரியில் படித்து கொண்டே பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கும் இளைஞரின் வறுமையை உணர்ந்து அந்த மாணவருக்கு பைக்கை பரிசாக பாலா வழங்கினார்.

    அனைவராலும் பாராட்டப்பட்ட இதனை செய்தியாக கடந்து விடாமல் கலை சிற்பமாக மாணவர் ஒருவர் வடிவமைத்துள்ளார். புதுச்சேரி சேலியமேடு கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர் ஜெகதீஷ் கலை பொம்மையாக மாற்றியுள்ளார்.

    பள்ளியின் நுண்கலை ஆசிரியர் உமாபதி கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களுக்கு கிராமங்களில் கிடைக்கும் பயனற்ற தேங்காய் குருமி,தென்னை நார், சுரக்காய் குடுவை போன்றவற்றைக் கொண்டு கலைநயமிக்க பொம்மைகளை உருவாக்கும் பயிற்சி அளித்து வந்தார்.

     

    இதில் பயிற்சி பெற்ற மாணவர் ஜெகதீஷ்,நடிகர் பாலா ஏழை இளைஞருக்கு பைக் வழங்கிய சம்பவத்தை பொம்மையாக உருவாக்கி உள்ளார்.இந்த பைக் பொம்மையை பாலாவுக்கு தான் தர விரும்புவதாக கூறியுள்ளார்.

    தான் சென்னைக்கு செல்ல இயலாது என்ற காரணத்தினால் புதுச்சேரிக்கு நடிகர் பாலா எப்பொழுது வருகிறாரோ அப்போது தருவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இருசக்கர வாகனங்கள் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கிறது.
    • முன்னணி நிறுவனங்களின் மாடல்கள் எத்தனை யூனிட்கள் விற்பனையாகின?

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இருசக்கர வாகனங்கள் விற்பனை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. இந்த ஆண்டின் முதல் மாதத்தில் முன்னணி நிறுவனங்களின் இருசக்கர வாகனங்கள் எத்தனை யூனிட்கள் வரை விற்பனையாகி இருக்கின்றன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

    அதன்படி ஜனவரி 2024 மாதம் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான மோட்டார்சைக்கிள் மாடலாக ஹீரோ மோட்டோகார்ப்-இன் ஸ்பிலெண்டர் மாடல் இடம்பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து ஹோண்டா ஷைன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

    2024 ஆண்டின் ஜனவரி மாதம் இந்திய சந்தையில் விற்பனையான டாப் 10 மோட்டார்சைக்கிள் மாடல்கள் எவை என்ற பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

     


    ஜனவரி 2024 டாப் 10 பைக்குகள்:

    ஹீரோ ஸ்பிலெண்டர்: 2 லட்சத்து 55 ஆயிரத்து 122

    ஹோண்டா ஷைன்: 1 லட்சத்து 45 ஆயிரத்து 252

    பஜாஜ் பல்சர்: 1 லட்சத்து 28 ஆயிரத்து 883

    ஹீரோ ஹெச்.எஃப். டீலக்ஸ்: 78 ஆயிரத்து 767

    டி.வி.எஸ். ரைடர்: 43 ஆயிரத்து 331

    பஜாஜ் பிளாட்டினா: 33 ஆயிரத்து 013

    டி.வி.எஸ். அபாச்சி: 31 ஆயிரத்து 222

    ஹீரோ பேஷன்: 30 ஆயிரத்து 042

    ராயல் என்பீல்டு கிளாசிக் 350: 28 ஆயிரத்து 013

    ஹோண்டா யுனிகான்: 18 ஆயிரத்து 506

    • அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வன்முறையை ஏவி விட்டுள்ளனர்.
    • சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள மாநில வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் புதிய கோர்ட்டு அலுவலகம் கட்ட மாநில அரசு முடிவு செய்தது.

    பல்கலைக்கழக வளாகத்தில் புதிய கட்டிடம் கட்ட உள்ள இடத்தில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட உள்ளது.

    புதிய கட்டிடத்திற்கு வேறு இடம் ஒதுக்க வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது வந்த போலீசார் மாணவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை விரட்டியடித்தனர்.

    அப்போது கல்லூரி மாணவி ஒருவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். பைக்கில் வந்த 2 பெண் போலீசார் மாணவியை துரத்தி சென்றனர்.

    மாணவியின் அருகில் சென்ற பெண் போலீஸ் ஒருவர் மாணவியின் நீண்ட தலை முடியை பிடித்து கொண்டார். இதனால் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

    கீழே விழுந்த மாணவியின் தலைமுடியை பிடித்துக் கொண்டு தரதரவென இழுத்துக் கொண்டு பைக்கை ஓட்டி சென்றனர்.

    இதனால் மாணவி சிறிது தூரம் தரையில் விழுந்து உரசியபடி சென்றதால் காலில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த சில மாணவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அதில் இந்த சம்பவம் ஆழ்ந்த கவலைக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

    இதுகுறித்து மகளிர் ஆணையம் மற்றும் மனித உரிமை ஆணையம் விரிவான விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வன்முறையை ஏவி விட்டுள்ளனர் எனக் கூறியுள்ளார். 

    • நள்ளிரவு மர்ம நபர்கள் 2 பேர், தாலுகா போலீஸ் நிலையம் உள்ளே புகுந்தனர்.
    • போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரணி:

    ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டராக ஷாபுதீன் உட்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் பணி புரிகின்றனர்.

    இந்த போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் வழிப்பறி, திருட்டு மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் பைக்குகளை, போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    மேலும், மணல் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நடந்த 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு பாதுகாப்பு பணிக்காக இங்குள்ளபோலீசார் சென்றனர்.

    ஒரு சில போலீசார் இரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நள்ளிரவு மர்ம நபர்கள் 2 பேர், தாலுகா போலீஸ் நிலையம் உள்ளே புகுந்தனர்.

    பின்னர் பைக்குகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இடத்துக்கு சென்று 50-க்கும் மேற்பட்ட, பைக்குகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு' தப்பித்து சென்றனர்.

    சிறிது நேரத்தில் பைக்குகள் அனைத்தும் தீப்பற்றி எரிந்தது. திடீரென உள்ளே பைக்குகள் தீப்பற்றி எரிவதை கண்ட போலீசார் விரைந்து சென்று தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அதற்குள் பல பைக்குகள் எரிந்து நாசமானது.

    இதுகுறித்து போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே வந்த போது அதிவேகமாக வந்த பைக் சக்கரபாணியின் பைக் மீது வேகமாக மோதியது.
    • சக்கரபாணி சிகிச்சை பலன் இன்றி சக்கரபாணி பரிதாபமாக இறந்தார்.

    புதுச்சேரி:

    கண்டமங்கலம் அருகே ஆழியூர் பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி ( வயது50). இவர் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று சக்கரபாணி தனது மகளை கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அழைத்துச்சென்றார். பின்பு சர்வீஸ் சாலை வழியாக வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார்.

    அப்போது கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே வந்த போது அதிவேகமாக வந்த பைக் சக்கரபாணியின் பைக் மீது வேகமாக மோதியது. இதில் சக்கரபாணி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து ேமல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சக்கரபாணி சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு சக்கரபாணி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×