என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    போல்ட் ஆடியோ நிறுவனம் இந்திய சந்தையில் ஏர்பேஸ் ப்ரோபாட்ஸ் எக்ஸ் பெயரில் புது இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது.


    போல்ட் ஆடியோ நிறுவனம் ஏர்பேஸ் ப்ரோபாட்ஸ் எக்ஸ் பெயரில் புது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் ப்ளூடூத் 5.1, ஹை-பிடெலிட்டி டிரைவர்கள், ஐ.பி.எக்ஸ்.5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.

    இந்த இயர்பட்களில் டச் கண்ட்ரோல் வசதி உள்ளது. இதனால் வால்யூம், பாடல்களை மாற்றுவது, அழைப்புகளை இயக்குவது போன்ற அம்சங்களை எளிதில் இயக்க முடியும். டைப் சி பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் ப்ரோபாட்ஸ் எக்ஸ் மாடலை முழு சார்ஜ் செய்தால் 32 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. இத்துடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் கொண்டு இயர்பட்களை நான்கு முறை முழுமையாக சார்ஜ் செய்யலாம்.

     போல்ட் ஏர்பாஸ் ப்ரோபாட்ஸ் எக்ஸ்

    புதிய போல்ட் ப்ரோபாட்ஸ் எக்ஸ் மாடல் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இது அமேசான் தளத்தில் ரூ. 1499 விலையில் வற்பனை செய்யப்படுகிறது. இது அறிமுக விலை என்பதால், எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம். இத்தடன் இந்த இயர்பட்ஸ் ஒரு வருட வாரண்டி கொண்டிருக்கிறது.
    இன்பினிக்ஸ் நிறுவனம் விரைவில் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.


    ஹாங்-காங்கை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான இன்பினிக்ஸ் இந்தியாவில் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இன்பினிக்ஸ் இந்தியா தலைமை செயல் அதிகாரி அனிஷ் கபூர் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இதனை அறிவித்தார். 

    ஸ்மார்ட்போன் மட்டுமின்றி புதிய 55 இன்ச் டி.வி. மாடலையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். முன்னதாக இன்பினிக்ஸ் நிறுவனம் தனது முதல் லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

     5ஜி

    “ஸ்மார்ட்போனின் விலையை நிர்ணயிக்க பல்வேறு விஷயங்களை எதிர்கொள்ள வேண்டும். உதிரிபாகங்கள் விலை மட்டுமின்றி, டாலர் மதிப்பு கடந்த சில மாதங்களில் 8 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது. இது ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த விலையை பாதிக்கும். இருந்தபோதும், ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டிற்குள் விலையை நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளோம்,” என அவர் தெரிவித்தார்.  

    அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் 5 முதல் 6 ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இன்பினிக்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்த 55 இன்ச் டி.வி. மாடல் உருவாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகமாகும்.
    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது விலை உயர்ந்த பிரீபெயிட் சலுகை பலன்களில் மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 2399 விலையில் வழங்கி வந்த பிரீபெயிட் சலுகையின் வேலிடிட்டியை 425 நாட்கள் என கடந்த ஆகஸ்ட் மாதம் நீட்டித்தது. முன்னதாக இதற்கான வேலிடிட்டி 365 நாட்கள் என்றே இருந்தது குறிப்பிடத்தக்கது.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி இந்த சலுகையின் வேலிடிட்டி மீண்டும் 365 நாட்கள் என குறைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது 425 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் சலுகை அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் மாற்றப்படுகிறது.

     கோப்புப்படம்

    ரூ. 2399 பி.எஸ்.என்.எல். சலுகையை ஆன்லைன் அல்லது பி.எஸ்.என்.எல். அதிகாரப்பூர்வ ஸ்டோர்களில் பெறலாம். இதுதவிர மொபைல் போனில் *444*2399# குறியீட்டு எண்ணில் அழைத்தும் ரீசார்ஜ் செய்யலாம். இவ்வாறு செய்யும் முன் பிரீபெயிட் அக்கவுண்டில் போதுமான பேலன்ஸ் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

    பி.எஸ்.என்.எல். ரூ. 2399 சலுகையில் தினமும் 3 ஜி.பி. அதிவேக டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிடெட் வாய்ஸ் கால், பி.எஸ்.என்.எல். டியூன்ஸ் மற்றும் இரோஸ் நௌ சந்தா வழங்கப்படுகிறது. அந்த வகையில் பி.எஸ்.என்.எல். ரூ. 2399 சிறப்பான நீண்ட கால சலுகை ஆகும். 
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போன் விலை மற்றும் அம்சங்கள் அந்நிறுவன வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 எப்.இ. விவரங்கள் சாம்சங் ஐயர்லாந்து வலைதளத்தில் இடம்பெற்றது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் துவங்க இருக்கும் சி.இ.எஸ். 2022 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சாம்சங் வலைதள விவரங்களின்படி இந்த ஸ்மார்ட்போன் 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    மேலும் இந்த ஸ்மார்ட்போன் நான்கு வித நிறங்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் 128 ஜி.பி. விலை இந்திய மதிப்பில் ரூ. 65,800 வரை நிர்ணயிக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் 256 ஜி.பி. விலை இந்திய மதிப்பில் ரூ. 71,800 வரை நிர்ணயிக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

     சாம்சங் ஸ்மார்ட்போன்

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்21 எப்.இ. மாடலில் 6.4 இன்ச் பிளாட் டைனமிக் அமோலெட் இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே, அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 6 ஜி.பி. அல்லது 8 ஜி.பி. மெமரி, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் வழங்கப்படும் என தெரிகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு 2 சி.இ. ஸ்மார்ட்போன் விவரங்கள் பி.ஐ.எஸ். தளத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கி வரும் நார்டு 2 சி.இ. ஸ்மார்ட்போன் பி.ஐ.எஸ். சான்று பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இந்தியாவில் வெளியீடு உறுதியாகி இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய ஒன்பிளஸ் நார்டு 2 சி.இ. ஸ்மார்ட்போன் மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகமாகிறது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய நார்டு 2 சி.இ. மாடலில் 6.4 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர் வழங்கப்படுகிறது. பி.ஐ.எஸ். தளத்தில் இடம்பெற்று இருப்பதால், இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், இந்த மாடல் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.

     ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

    தற்போதைய தகவல்களில் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அம்சங்கள் எதுவும் இடம்பெறவில்லை. எனினும், முந்தைய தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி, 64 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ், 16 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் எஸ்.இ. மாடல் உற்பத்தி விரைவில் துவங்க இருப்பதாக வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் எஸ்.இ. சீரிசை பட்ஜெட் பிரிவில் விற்பனை செய்து வருகிறது. இதுவரை இரண்டு ஐபோன் எஸ்.இ. மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த சீரிசில் மூன்றாம் தலைமுறை மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஐபோன் எஸ்.இ. 3 மாடலின் உற்பத்தி விரைவில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. உதிரிபாகங்களை வினியோகிக்கும் பல்வேறு நிறுவனங்களும் ஐபோன் எஸ்.இ.-க்கான பாகங்களை வினியோகம் செய்ய ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

     ஐபோன் எஸ்.இ.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஐபோன் எஸ்.இ. 3 மாடலில் 4.7 இன்ச் ரெட்டினா ஹெச்.டி. எல்.சி.டி. டிஸ்ப்ளே, ஹோம் பட்டனில் கைரேகை சென்சார், ஆப்பிள் ஏ15 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், 5ஜி கனெக்டிவிட்டி, 12 எம்.பி. பிரைமரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பீட்ஸ் பெயரில் புதிய இயர்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.


    இந்தியாவில் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. போட் மற்றும் நாய்ஸ் போன்ற பிராண்டுகள் குறைந்த விலை வயர்லெஸ் இயர்பட் மாடல்களை விற்பனை செய்து வருகின்றன. தற்போது நாய்ஸ் நிறுவனம் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை நாய்ஸ் பீட்ஸ் பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

    இந்த இயர்பட்ஸ் அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த இயர்பட் எடை 4.5 கிராம் ஆகும். இதில் நான்கு எல்.இ.டி. லைட்கள் உள்ளன. புதிய நாய்ஸ் பீட்ஸ் முழு சார்ஜ் செய்தால் ஏழு மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகிறது. சார்ஜிங் கேஸ் உடன் சேர்க்கும் போது மொத்தம் 18 மணி நேரத்திற்கு பிளேபேக் கிடைக்கும்.

     நாய்ஸ் பீட்ஸ் இயர்பட்ஸ்

    நாய்ஸ் பீட்ஸ் இயர்பட்ஸ் ரூ. 1,499 எனும் அறிமுக விலையில் கிடைக்கிறது. அமேசான் தளத்தில் இந்த இயர்பட்ஸ் உண்மை விலை ரூ. 3,499 என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், புதிய இயர்பட்ஸ் விலை விரைவில் மாற்றப்படலாம்.

    இந்தியாவில் நாய்ஸ் பீட்ஸ் முதல் விற்பனை டிசம்பர் 24 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அமேசான் தளத்தில் துவங்குகிறது. இந்த இயர்பட்ஸ் பிளாக் மற்றும் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
    ஒன்பிளஸ் நிறுவனம் சர்வதேச ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனம் தனது 8-வது ஆண்டு விழாவை இந்த வாரம் கொண்டாடி வருகிறது. தற்போது சர்வதேச சந்தையில் ஒரு கோடி ஸ்மார்ட்போன்களை ஒன்பிளஸ் விற்றுள்ளது. டிசம்பர் 17 வரையிலான விற்பனையில் இந்த மைல்கல்லை ஒன்பிளஸ் எட்டியது. இதுதவிர உலகம் முழுக்க இரண்டு கோடிக்கும் அதிகமானோர் ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்களாகி இருக்கின்றனர்.

    ஒன்பிளஸ் கம்யூனிட்டி ஃபோரம் உறுப்பினர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு 1.10 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இந்த தளத்தில் 11.6 கோடி குறுந்தகவல்கள் பகிரப்படுகின்றன.

     ஒன்பிளஸ்

    இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நிறுவனம் 29 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மட்டும் ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான ஸ்மார்ட்போன்கள் பிரிவில், ஒன்பிளஸ் 30 சதவீத பங்குகளை பெற்றுள்ளது.

    வட அமெரிக்காவில் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மட்டும் ஒன்பிளஸ் நிறுவனம் 712 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஐரோப்பாவில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் பிராண்டுகள் பட்டியலில் ஒன்பிளஸ் முதலிடம் பிடித்துள்ளது. 

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 10 சீரிஸ் மாடல்கள் அடுத்த ஆண்டு துவக்கத்திலும் நார்டு 2 சி.இ. மற்றும் மிட் ரேன்ஜ் மாடல்கள் அடுத்தடுத்து அறிமுகமாகின்றன.

    கேவியர் நிறுவனம் புல்லட் புரூஃப் வசதி கொண்ட ஐபோன் 13 சீரிஸ் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஐபோன்களை மாற்றியமைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வரும் கேவியர் நிறுவனம், தற்போது ஐபோன் 13-இல் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி இந்த மாடல்கள் ஸ்டெல்த் 2.0 என அழைக்கப்படுகின்றன. இவை ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் கிடைக்கின்றன.

    ஸ்டெல்த் 2.0 சீரிஸ் ஐபோன்கள் பி.ஆர்.2 கிளாஸ் 2 புல்லட்புரூஃப் ஆர்மர் கொண்டுள்ளது. இது துப்பாக்கி தோட்டாக்களை தடுத்து நிறுத்தும் அளவு உறுதித்தன்மை கொண்டவை ஆகும். இதனை என்.பி.ஒ.டி.சி.ஐ.டி. எனும் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இந்த நிறுவனம் போர் ஹெலிகாப்டர்கள் மற்றும் பாதுகாப்பு வாகனங்களை உருவாக்கி வருகிறது.

     ஐபோன் 13 ஸ்டெல்த் 2.0

    ஸ்டெல்த் 2.0 மாடல்களில் எந்த கேமராவும் இருக்காது, என்பதால் பேஸ் ஐடி அம்சம் பயனற்று போகும். இதன் காரணமாக இந்த மாடல்களில் எவ்வித பயோமெட்ரிக் பாதுகாப்பும் இருக்காது. இந்த போன்களை கேமராக்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளில் பயன்படுத்தலாம் என கேவியர் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. 

    புல்லட் புரூஃப் ஐபோன் பெயருக்கு ஏற்றார் போல் தோட்டாக்களை உண்மையில் தடுத்து நிறுத்துகிறது. எனினும், தோட்டாக்களை எதிர்கொண்ட பின் ஐபோன் செயலற்று போகிவிடுகிறது. ஐபோன் செயலற்று போனாலும், துப்பாக்கி தாக்குதல் போன்ற ஆபத்து காலத்தில் ஒருவரின் உயிரை காப்பாற்றுகிறது. இந்த ஐபோன் மொத்தத்தில் 99 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. 

    ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் அதிகபட்சம் 1 டி.பி. மெமரி ஆப்ஷனை பயனர்கள் தேர்வு செய்யலாம். இதன் துவக்க விலை இந்திய மதிப்பில் ரூ. 4.85 லட்சம் என துவங்கி டாப் எண்ட் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் 1 டி.பி. மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 6.07 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி எபிக் கேம்ஸ் ஸ்டோர் அதன் பயனர்களுக்கு 15 கேம்களை இலவசமாக வழங்குகிறது.


    எபிக் கேம்ஸ் ஸ்டோர் கிறிஸ்துமஸ் கால சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இம்முறை பயனர்களுக்கு மொத்தம் 15 கேம்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது. இந்த சலுகை ஜனவரி 6, 2022 வரை வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் சலுகையின் போது பல்வேறு கேம்கள் ஏற்கனவே இலவசமாக வழங்கப்பட்டு இருந்தது. 

    எனினும், இம்முறை அறிவிக்கப்பட்டு இருக்கும் கேம்கள் முற்றிலும் புதிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலவச கேம்களின் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு கேம் வீதம் அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இலவச கேம்கள் டிசம்பர் 16 முதல் டிசம்பர் 29 ஆம் தேதி மாலை 4.59 மணிக்குள் பெற்றுக் கொள்ளலாம்.

     டுவிட்டர் ஸ்கிரீன்ஷாட்

    இதுவரை கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 5, கண்ட்ரோல் மற்றும் பல்வேறு பிரபல கேம்களை எபிக் கேம்ஸ் ஸ்டோர் இலவசமாக வழங்கி இருக்கிறது. இதுதவிர ஒவ்வொரு வாரமும் எபிக் கேம்ஸ் ஸ்டோர் இலவச கேம்களை வழங்கி வருகிறது.

    இலவச கேம்கள் மட்டுமின்றி பல்வேறு கேம்களுக்கு அசத்தலான தள்ளுபடி மற்றும் குறுகிய கால விலை குறைப்பு உள்ளிட்டவையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
    ஒப்போ நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலான பைண்ட் என் முதல் விற்பனையில் விற்றுத்தீர்ந்தது.


    ஒப்போ நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. ஓரளவு குறைந்த விலையில் அறிமுகமான நிலையில், இந்த ஸ்மார்ட்போன் முதல் விற்பனையிலேயே விற்றுத்தீர்ந்தது. முதல் விற்பனை நிறைவுற்ற நிலையில், இதே ஸ்மார்ட்போன் மறுவிற்பனைக்கு (செகண்ட் ஹேண்ட் சேல்ஸ்) ஆன்லைன் தளங்களில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. மேலும் இதன் விலை அதிகமாகவே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    பிரீமியம் பிரிவில் அறிமுகமாகி இருக்கும் ஒப்போ பைண்ட் என் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வந்த மாடல் ஆகும். இந்த மாடலை கொண்டு ஒப்போ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் களமிறங்கி இருக்கிறது. இந்த பிரிவில் சாம்சங் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் ஒப்போ பைண்ட் என் மாடல், கேலக்ஸி இசட் போல்டு 3 சீரிஸ் விலையை விட குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     ஒப்போ பைண்ட் என்

    ஒப்போ நிறுவனம் தனது பைண்ட் என் மாடலை குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே ஆன்லைன் மற்றும் ஆப்லைன் தளங்களில் விற்பனைக்கு கொண்டுவந்தது. இந்த யூனிட்களும் விற்பனை துவங்கிய சிறிது நேரத்திலேயே விற்றுத்தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. ஒப்போ பைண்ட் என் ஸ்மார்ட்போன் 8 ஜி.பி., 256 ஜி.பி. மற்றும் 12 ஜி.பி., 512 ஜி.பி. என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் இந்தியாவில் நான்கு புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.


    வி நிறுவனம் நான்கு புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 155, ரூ. 239, ரூ. 666 மற்றும் ரூ. 699 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது சலுகைகள் வி நிறுவன வலைதளம் மற்றும் மொபைல் செயலியில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது.

    புதிய சலுகைகளில் ரூ. 155 மற்றும் ரூ. 239 சலுகைகள் சமீபத்திய விலை உயர்வுக்கு பின் ஓரளவு குறைந்த விலையில் கிடைக்கின்றன. பலன்களை பொருத்தவரை வி ரூ. 155 சலுகையில் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 24 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

     கோப்புப்படம்

    வி ரூ. 239 சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா, வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 24 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 666 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் காலிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 77 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் பல்வேறு பலன்களும் வழங்கப்படுகிறது.

    வி ரூ. 699 சலுகையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் கூடுதல் பலன்களும் வழங்கப்படுகிறது.
    ×