என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ12 மற்றும் கேலக்ஸி ஏ02எஸ் ஸ்மார்ட்போன்களை ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு புது மாடல்கள் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனினை சாம்சங் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் குவாட் கேமரா சென்சார், அதிக திறனுள்ள பேட்டரி கொண்டிருக்கும் என தெரிகிறது.

     சாம்சங் ஸ்மார்ட்போன்

    முன்னதாக கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் பிஐஎஸ் தர சான்று பெற்று இருந்தது. சான்று பெற்றதை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்சமயம் இதன் வெளியீட்டு விவரம் சார்ந்த தகவல் வெளியாகி உள்ளது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ12 மாடலில் 6.5 இன்ச் HD+PLS TFT LCD டிஸ்ப்ளே, 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது.

    இத்துடன் டூயல் சிம் 4ஜி வசதி, ப்ளூடூத் 5, வைபை, ஜிபிஎஸ், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், பக்கவாட்டில் கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது.
    காதலர் தினத்தை முன்னிட்டு அமேசான் சார்பில் ‘வேலன்டைன்ஸ் டே ஸ்டோர்’ உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் வீட்டில் இருந்தபடியே அன்புக்குரியவர்களுக்கு பரிசுகளை வாங்கலாம்.
    அமேசான் சார்பில் ‘வேலன்டைன்ஸ் டே ஸ்டோர்’ உருவாக்கப்பட்டு இருக்கிறது. அமேசான் இணையதள பக்கத்துக்கு சென்று வேலன்டைன்ஸ் டே ஸ்டோர் மூலம் அன்புக்குரியவர்களுக்கு என்ன பிடிக்குமோ? அந்த பரிசு பொருட்களை வீட்டில் இருந்தபடியே வாங்கி, அவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வதற்கு ஏற்ற தளத்தை அமேசான் ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த ஸ்டோரில் புதிய மலர்கள், வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்கள், சாக்லேட்டுகள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு அலங்காரம், சமையல் உபகரணங்கள், ஆடை அலங்கார பொருட்கள், அழகு சாதனங்கள், செல்போன்கள் உள்பட பல்வேறு பொருட்களை வீட்டில் இருந்தபடியே வாங்க முடியும்.

    மேலும், 18 முதல் 24 வயதுடைய வாடிக்கையாளர்கள் தங்கள் பிரைம் மெம்பர்ஷிப்பில் 50 சதவீதம் தள்ளுபடியை பெற முடியும். பிரைமுக்கு ‘சைன் அப்’ செய்து தங்கள் வயதை சரிபார்த்து உடனடியாக 50 சதவீதம் கேஷ்பேக் பெறுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பெறலாம்.

    கோப்புப்படம்

    வேலன்டைன்ஸ் டே ஸ்டோரில் பாம்பே சேவிங் கம்பெனியில் இருந்து ஆண் மற்றும் பெண்களுக்கான அற்புதமான பரிசுகளின் வகைகள் 35 சதவீதம் வரையிலான தள்ளுபடியில் கிடைக்கின்றன. அதேபோல், காட்பரி டைரி மில்கின் பிரீமியம் சாக்லேட் ரூ.617-க்கும், 15 வகையான புதிய ரோஜாக்களுடன் மலர் பூங்கொத்து ரூ.588-க்கும், அன்புக்குரியவர்களை கவரும் விதமாக சாப்ட் டெடி பியர் ரூ.399-க்கும், சாம்சங் கேலக்சி எம் 02 எஸ். மாடல் செல்போன் ரூ.9 ஆயிரத்து 999-க்கும் என ஏராளமான பரிசு வகைகள் கிடைக்கிறது.

    மேலும், கடிகாரம், ஆபரணங்கள், கைப்பைகள், மணிபர்சுகள், செல்போன்கள், ஸ்பீக்கர்கள், லேப்டாப் மற்றும் டேப்லெட்டுகள், அழகு சாதனங்கள் உள்பட பல்வேறு பொருட்களையும் இந்த ஸ்டோரில் வாங்க முடியும். காதலர் தினத்தில் அன்புக்குரியவர்களுடன் பரிசு பொருட்களை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை அமேசான் ஏற்படுத்தி தந்துள்ளது.

    மேற்கண்ட தகவல் அமேசான் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பிஎஸ்என்எல் ரூ. 199 விலை போஸ்ட்பெயிட் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய போஸ்ட்பெயிட் சலுகையை ரூ. 199 விலையில் அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் முன்னதாக இந்த சலுகையில் 300 நிமிடங்கள் ஆப்-நெட் அழைப்புகள் வழங்கப்பட்டு இருந்தது.

    புதிய மாற்றம் இந்த சலுகை எவ்வித கட்டுப்பாடும் இன்றி அழைப்புகளை வழங்குகிறது. இதில் பிஎஸ்என்எல் மட்டுமின்றி இதர நிறுவன எண்களுக்கும் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால் தவிர இந்த சலுகையில் 25 ஜிபி மாதாந்திர டேட்டா வழங்கப்படுகிறது.

    கோப்புப்படம்

    இத்துடன் அதிகபட்சம் 75 ஜிபி வரையிலான டேட்டா ரோல்ஓவர் வசதியும் வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் ரூ. 199 புதிய பலன்கள் பிப்ரவரி 1 ஆம் தேதி அமலானது. இதுபற்றிய தகவல் பிஎஸ்என்எல் சென்னை அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டு உள்ளது.

    பிஎஸ்என்எல் ரூ. 199 சலுகை மாற்றம் சென்னை மட்டுமின்று நாடு முழுக்க அமலாகி இருக்கிறது. இந்த சலுகையில் மாதத்திற்கு 25 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்களும் வழங்கப்படுகிறது.
    போர்ட்கள் எதுவுமின்றி வாட்டர்பால் டிஸ்ப்ளே கொண்ட சியோமி கான்செப்ட் போன் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    சியோமி நிறுவனத்தின் புதிய கான்செப்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் போர்ட்லெஸ் டிசைன் மற்றும் குவாட்-கர்வ்டு வாட்டர்பால் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் நான்கு புறங்களிலும் வளைந்த வாட்டர்பால் டிஸ்ப்ளே உள்ளது.

    மேலும் இந்த கான்செப்ட் ஸ்மார்ட்போன் போர்ட்லெஸ் யுனிபாடி டிசைன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே முன்புற பேனலை முழுமையாக மறைக்கும் வகையில் உள்ளது. 88-டிகரி ஹைப்பர் குவாட் கர்வ்டு ஸ்கிரீன் டிசைன் விஷூவல் இன்டர்பேஸ்களை போனின் மீது நீரோட்டம் போல் விழ செய்கிறது.

     சியோமி கான்செப்ட் போன்

    ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த பிரேமும் ஸ்கிரீன் கொண்டு மறைக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பட்டன்கள் மற்றும் போர்ட்கள் எதுவும் இல்லை. 3டி பாண்டிங் முறையில் 88-டிகிரி குவாட் கர்வ்டு கிளாஸ் பேனலை பிளெக்சிபில் டிஸ்ப்ளே மீது பொருத்தி இருப்பதாக சியோமி தெரிவித்து உள்ளது.

    சியோமி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 46 தொழில்நுட்பங்களுக்கு காப்புரிமை பெறப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மூன்றாம் தலைமுறை அன்டர் டிஸ்ப்ளே கேமரா, வயர்லெஸ் சார்ஜிங், இசிம் சிப் மற்றும் பிரெஷர் சென்சிட்டி டச் ஸ்கிரீன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக ரஷ்யாவில் உள்ள பயனர்களுக்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன் யுஐ 3.0 வழங்கப்பட்டு வருகிறது. 

    புது அப்டேட் கேலக்ஸி ஏ51 பயனர்களுக்கு மேம்பட்ட யுஐ, முன்பை விட சிறப்பான பிரைவசி அம்சங்கள், சாட் பபிள்கள், பேரண்டல் கண்ட்ரோல், மேம்பட்ட ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே என் பல்வேறு அம்சங்கள் கிடைக்கும். இத்துடன் பிப்ரவரி மாதத்திற்கான ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது.

     ஆண்ட்ராய்டு 11

    இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் இந்திய வெளியீடு பற்றி சாம்சங் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. மூன்று ஆண்டு ஆண்ட்ராய்டு அப்கிரேடு பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் இந்த மாடல் இடம்பெற்று இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் உடன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் இந்த ஸ்மார்ட்போனிற்கு மூன்று ஆண்ட்ராய்டு அப்டேட்கள் வழங்கப்படலாம். 

    இந்தியாவில் ஒப்போ நிறுவனத்தின் ஏ15எஸ் புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ஒப்போ நிறுவனத்தின் ஏ15எஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.

    தற்சமயம் கூடுதல் மெமரி தவிர இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி ஒப்போ ஏ15எஸ் மாடலில் 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் ஸ்கிரீன், ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10 சார்ந்த கலர் ஒஎஸ் 7.2 கொண்டிருக்கும் ஏ15எஸ் ஸ்மார்ட்போன் 3D வளைந்த பாடி, பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 4230 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.

     ஒப்போ ஏ15எஸ்

    ஒப்போ ஏ15எஸ் சிறப்பம்சங்கள்

    - 6.55 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
    - IMG PowerVR GE8320 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2
    - 13 எம்பி பிரைமரி கேமரா
    - 2 எம்பி டெப்த் சென்சார்
    - 2 எம்பி மேக்ரோ கேமரா
    - 8 எம்பி செல்பி கேமரா
    - டூயல் சிம் ஸ்லாட்
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
    - 4230 எம்ஏஹெச் பேட்டரி
    - 10வாட் சார்ஜிங்

    ஒப்போ ஏ15எஸ் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் டைனமிக் பிளாக் மற்றும் பேன்சி வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 12,490 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    இந்தியாவில் போக்கோ பிராண்டு ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தலான விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் தனித்துவம் பெற்று ஒரு ஆண்டு நிறைவுற்றதை கொண்டாடுகிறது. இதை முன்னிட்டு போக்கோ Anniversary Sale ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 4 ஆம் தேதி துவங்கிய சிறப்பு விற்பனை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.

    இந்த விற்பனையில் போக்கோ எக்ஸ்3, போக்கோ எம்2 மற்றும் போக்கோ சி3 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. போக்கோ எக்ஸ்3 அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர பிரீபெயிட் பரிமாற்றங்களுக்கு ரூ. 500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     போக்கோ சி3

    போக்கோ சிறப்பு விலை விவரங்கள்

    போக்கோ எக்ஸ்3 (6ஜிபி + 64 ஜிபி) ரூ. 14,499
    போக்கோ எக்ஸ்3 (6ஜிபி + 128 ஜிபி) ரூ. 15,499
    போக்கோ எக்ஸ்3 (8ஜிபி + 128 ஜிபி) ரூ. 17,499
    போக்கோ எம்2 ப்ரோ (4ஜிபி + 64 ஜிபி) ரூ. 11,999
    போக்கோ எம்2 ப்ரோ (6ஜிபி + 64 ஜிபி) ரூ. 12,999
    போக்கோ எம்2 ப்ரோ (6ஜிபி + 128 ஜிபி) ரூ. 14,999
    போக்கோ எம்2 (6ஜிபி + 64 ஜிபி) ரூ. 9,499
    போக்கோ எம்2 (6ஜிபி + 128 ஜிபி) ரூ. 10,499
    போக்கோ சி3 (4ஜிபி + 64 ஜிபி) ரூ. 7,999

    இந்தியாவில் போக்கோ எக்ஸ்2 மற்றும் போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன்கள் முறையே பத்து லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக போக்கோ தெரிவித்து உள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மேம்பட்ட அல்ட்ரா வைடு கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஐபோன் 13 புதிய அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஐபோனில் ஆப்பிள் மேம்பட்ட 7 பிக்சல் வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கலாம் என தெரிகிறது.

    இந்த சென்சார் குறைந்த வெளிச்சம் உள்ள பகுதிகளிலும் சிறப்பான புகைப்படங்களை எடுக்க வழிவகை செய்யும். ஆப்பிள் நிறுவனத்திற்கு லென்ஸ் பாகங்களை வழங்கும் சன்னி ஆப்டிக்கல் ஐபேட் 5பி லென்ஸ் பாகங்களை இந்த ஆண்டு வினியோகம் செய்ய இருக்கிறது. 

     ஐபோன்

    இதே நிறுவனம் ஐபோன் 13 சீரிஸ் மாடல்களுக்கு 7பி வைடு ஆங்கில் லென்ஸ்களை வழங்கலாம் என கூறப்படுகிறது. 7பி லென்ஸ் இருப்பதால் ஐபோன் 13 அல்ட்ரா-வைடு லென்ஸ்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. இதில் தற்போதைய ஐபோன் 12 மாடல்களில் இருப்பதை விட அகலமான அப்ரேச்சர் இருக்கும் என்பதால் குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பான புகைப்படங்களை எடுக்க முடியும்.

    புதிய அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் ஐபோன் 13 சீரிசில் அனைத்து மாடல்களிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. எனினும், இந்த லென்ஸ் இரண்டு டாப் எண்ட் மாடல்களில் மட்டுமே வழங்கப்படும் என மிங் சி கியோ கணித்திருக்கிறார்.
    18 மணி நேர பேக்கப் வழங்கும் சாம்சங் லெவல் யு2 ப்ளூடூத் இயர்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.


    சாம்சங் நிறுவனம் லெவல் யு2 ப்ளூடூத் ஸ்டீரியோ இயர்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்த லெவல் யு மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். 

    புதிய லெவல் யு2 அட்ஜஸ்ட் செய்யக்கூடிய நெக் பேண்ட் டிசைன் மற்றும் 41.5 கிராம் எடை கொண்டுள்ளது. இதனை இயக்க நான்கு பட்டன்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும் இரண்டு பில்ட்-இன் மைக்ரோபோன், 12 எம்எம் டிரைவர்கள் வழங்கப்பட்டு உள்ளன.

     சாம்சங் லெவல் யு2

    சாம்சங் ஸ்கேலபிள் கோடெக் தொழில்நுட்பம் பயனர்கள் அருகாமையில் இருக்கும் இடையூறுகளை கண்டறிந்து, ஆடியோ பிட்ரேட்டை தானாக அட்ஜஸ்ட் செய்யும். இதனால் சீரான ஆடியோ அனுபவம் கிடைக்கிறது. இதில் ப்ளூடூத் 5.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 159 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இது அதிகபட்சம் 18 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. இந்தியாவில் புதிய சாம்சங் லெவல் யு2 ப்ளூடூத் இயர்போன் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ஒப்போ நிறுவனத்தின் புதிய எப்19 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் முன்கூட்டியே விற்பனைக்கு வர இருக்கின்றன.

    ஒப்போ நிறுவனத்தின் எப்19 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஒப்போ எப்19 மற்றும் ஒப்போ எப்19 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் மார்ச் மாத வாக்கில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    இரு புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி ஒப்போ சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. புதிய ஒப்போ எப்19 சீரிஸ் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ எப்17 சீரிசின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய ஒப்போ எப்19 சீரிஸ் ஹைப்ரிட் ஆப்டிக்கல் ஜூம் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என்றும் இது 10x ஜூம் வசதியை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

     ஒப்போ எப்17 ப்ரோ

    இந்தியாவில் ஒப்போ எப்17 பேஸ் வேரியண்ட் விலை ரூ. 16,990 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இரு ஸ்மார்ட்போன்களும் ப்ளிப்கார்ட் மற்றும் இதர ஆன்லைன், ஆப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

    சமீபத்தில் ஒப்போ தனது ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ரூ. 35,990 எனும் துவக்க விலையில் அறிமுகம் செய்தது. ரெனோ 5 ப்ரோ 5ஜி மாடலில் FHD+AMOLED டிஸ்ப்ளே, 2400x1080 பிக்சல் டிஸ்ப்ளே, அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 1000 பிளஸ் பிராசஸர், 64 எம்பி குவாட் கேமரா, 32 எம்பி செல்பி கேமரா, 65 வாட் சூப்பர்வூக் 2.0 சார்ஜிங் என பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
    சோனி நிறுவனம் மூன்றாவது காலாண்டிற்கான விற்பனை விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.


    சோனி கார்ப்பரேஷன் நிறுவனம் டிசம்பர் 31, 2020 வரை காலாண்டிற்கான விற்பனை நிலவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி சோனி நிறுவனம் 35,920 கோடி ஜப்பானிய யென்களை லாபமாக ஈட்டியுள்ளது. இந்த காலக்கட்டத்தில் பிஎஸ் 5 விற்பனை 45 லட்சம் யூனிட்களை கடந்து இருக்கிறது.

    இந்த ஆண்டிற்கான விற்பனை இலக்கு 76 லட்சம் யூனிட்கள் என்றும், இதனை எட்ட சோனி முயற்சித்து வருவதாக தெரிவித்து இருக்கிறது. பிஎஸ் 5 யூனிட்களுக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு முடிந்த வரை அதிக யூனிட்களை வினியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சோனி தெரிவித்து உள்ளது.

    டிசம்பர் இறுதி வரை மார்வெல் நிறுவனத்தின் ஸ்பைடர் மேன் - மைல்ஸ் மொரால்ஸ் கேம் சுமார் 41 லட்சம் யூனிட்கள் விற்பனையானகி இருக்கிறது. டிசம்பர் வரைலியான காலக்கட்டத்தில் கேம் மற்றும் நெட்வொர்க் பிரிவு விற்பனை 40 சதவீதம் வளர்ச்சி பெற்று இருக்கிறது.  

    இதே காலக்கட்டத்தில் தான் சோனி தனது புதிய கேமிங் கன்சோல் பிஎஸ் 5 விற்பனையை துவங்கியது. இதன் நிகர லாபம் 50 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
    சியோமி நிறுவனத்தின் இரு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது.


    சியோமி நிறுவனம் தனது எம்ஐ 10டி மற்றும் எம்ஐ 10டி ப்ரோ மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது. எம்ஐ 10டி சீரிஸ் மாடல்களுக்கு உலகில் முதல் முறையாக இந்தியாவில் தான் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் 2.8 ஜிபி அளவு கொண்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு அப்டேட் உடன் ஜனவரி மாதத்திற்கான செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது. எம்ஐ 10டி மற்றும் 10டி ப்ரோ பயனர்களுக்கு சிறப்பான மீடியா கண்ட்ரோல் டூல், ஸ்மார்ட் ஹோம் கண்ட்ரோல், டீபால்ட் ஸ்கிரீன் ரிகார்டர் போன்ற அம்சங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய அப்டேட் டவுன்லோட் செய்ய சியோமி ஸ்மார்ட்போன்களின் செட்டிங்ஸ் மற்றும் அபவுட் போன் ஆப்ஷன்களை க்ளிக் செய்து எம்ஐயுஐ வெர்ஷனை க்ளிக் செய்து check for updates ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
    ×