என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஆப்பிள் நிறுவனம் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்விலேயே புது மேக்புக் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு ஜூன் 7 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்வு அந்நிறுவன வலைதளங்களில் நேரலை செய்யப்பட்டது. புதிய M1X பிராசஸர் கொண்ட மேக்புக் மாடல்களை ஆப்பிள் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்ய இருப்பதாக பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. 

    எனினும், புது மேக்புக் அப்போது அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் தனது டெவலப்பர்கள் நிகழ்விலேயே புது மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. 

     டிம் குக்

    இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு யூடியூப் வீடியோவில் M1X மேக்புக் ப்ரோ மற்றும் M1X போன்ற குறியீடுகள் இடம்பெற்று இருந்தது கண்டறியப்பட்டு இருக்கிறது. 

    இதுகுறித்து வெளியாகும் தகவல்களில் சிலர், புது மேக்புக் வெளியீடு கடைசி நேரத்தில் திடீரென ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது என்றும், சிலர் வீடியோவுக்கான SEO-வை மேம்படுத்த ஆப்பிள் இவ்வாறு செய்து இருக்கலாம் என கூறுகின்றனர்.
     
    புது மேக்புக் மாடல் அறிமுகம் செய்யப்படவில்லை என்ற போதும், M1X பிராசஸர் மற்றும் M1X கொண்ட மேக்புக் ப்ரோ இந்த ஆண்டு வெளியாகும் என ஆப்பிள் தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
    சாம்சங் நிறுவனத்தின் புது கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர், 6 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் பென்ச்மார்க் விவரங்கள் ஏப்ரல் மாத வாக்கில் வெளியாகி இருந்தது. அதில் இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    புது எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் சாம்சங் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி எம்31 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். முந்தைய மாடலை போன்று இல்லாமல் புதிய கேலக்ஸி எம்32 மீடியாடெக் ஜி88 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

     சாம்சங் ஸ்மார்ட்போன்

    கீக்பென்ச் விவரங்களின்படி கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3.1, 48 எம்பி பிரைமரி கேமராவுடன், குவாட் கேமராக்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. 

    முன்புறம் 20 எம்பி செல்பி கேமராவும் கனெக்டிவிடிக்கு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி, 6000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என தெரிகிறது. கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் லைட் புளூ நிறங்களில் கிடைக்கும். இதன் விலை ரூ. 15 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்படலாம்.  
    ரியல்மி நிறுவனத்தின் புதிய லேப்டாப் மற்றும் டேப்லெட் மாடல்கள் ரியல்மி ஜிடி குளோபல் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

    ரியல்மி நிறுவனத்தின் ஜிடி குளோபல் நிகழ்வில் புது சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்து இருக்கிறார். இதுபற்றிய விவரங்களை ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி ரியல்மி ஜிடி குளோபல் நிகழ்வில் புது லேப்டாப் மற்றும் டேப்லெட் மாடல்கள் அறிமுகமாகும் என தெரிகிறது.

     ரியல்மி ஜிடி டீசர்

    முன்னதாக ரியல்மி தனது கம்யூனிட்டி தளத்தில் புது லேப்டாப் வெளியீட்டை உணர்த்தும் வகையிலான சர்வே ஒன்றை நடத்தியது. இதைத் தொடர்ந்து ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மற்றும் துணை தலைவர் மாதவ் சேத் புது சாதனங்கள் வெளியீட்டை உணர்த்தும் டீசரை வெளியிட்டுள்ளார்.

    புது லேப்டாப் மற்றும்  டேப்லெட் வெளியீடு குறித்து ரியல்மி ஏற்கனவே பல விவரங்களை வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது இவற்றின் வெளியீட்டு தேதி உறுதியாகி இருக்கிறது. ரியல்மி ஜிடி குளோபல் நிகழ்வு ஜூன் 15 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் கொண்டிருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி மாடலில் 6.43 இன்ச் FHD+ புளூயிட் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 11 கொண்டிருக்கும் நார்டு CE 5ஜி மாடலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மென்பொருள் அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக ஒன்பிளஸ் உறுதியளித்து இருக்கிறது.

    மெமரியை பொருத்தவரை நார்டு CE 5ஜி மாடல் - 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

     ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி

    புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மோனோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி உள்ளது. இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 30டி வார்ப் சார்ஜ் பிளஸ் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

    ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி மாடல் மேட் பினிஷ் கொண்ட புளூ வாய்ட், கிளாஸி பினிஷ் கொண்ட சார்கோல் இன்க் மற்றும் கிரேடியன்ட் எபெக்ட் கொண்ட சில்வர் ரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் மாடல் விலை ரூ. 22,999, 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 24,999 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 27,999 ஆகும்.
    சோனி நிறுவனத்தின் புதிய பிரேவியா X90J ஸ்மார்ட் டிவி காக்னிட்டிவ் பிராசஸர் கொண்டிருக்கிறது.


    சோனி நிறுவனம் 2021 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் காக்னிடிவ் பிராசஸர் XR-ஐ அறிமுகம் செய்தது. தற்போது இந்த பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சோனி பிரேவியா X90J 55-இன்ச், 65 மற்றும் 75-இன்ச் அளவுகளில் கிடைக்கிறது.

    இந்த டிவியில் ஃபுல் அரே பேக்லைட்டிங் மற்றும் லோக்கல் டிம்மிங் உள்ளது. இதில் உள்ள 4K பேனல் HDR10, டால்பி விஷன் மற்றும்  HLG உள்ளிட்டவைகளுக்கான சப்போர்ட் வழங்குகிறது. இந்த டிவியில் மொத்தம் நான்கு HDMI போர்ட்கள் உள்ளன. 

     சோனி பிரேவியா X90J டிவி

    மேலும் இதில் மினி-ஏவி போக்ட், இரண்டு யுஎஸ்பி போர்ட்கள், ஹெட்போன் அவுட், ஆப்டிக்கல் அவுட், வைபை மற்றும் ப்ளூடூத் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் IMAX மோட் உள்ளது. இதில் உள்ள லைட் சென்சார்கள் அறையில் உள்ள வெளிச்சத்திற்கு ஏற்ப பிக்சர் செட்டிங்களை மாற்றியமைக்கும்.  

    புதிய சோனி பிரேவியா X90J 55-இன்ச் விலை ரூ. 1,39,990 ஆகும். இதன் விற்பனை இன்று (ஜூன் 10) துவங்கியது. 65 மற்றும் 75 இன்ச் வேரியண்ட்களின் விற்பனை விரைவில் துவங்கும் என தெரிகிறது.
    விவோ நிறுவனத்தின் புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போன் 16 எம்பி செல்பி கேமரா, அதிகபட்சம் 8 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.


    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் வை73 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புது வை சீரிஸ் ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 16 எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.

     விவோ வை73

    புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஒஎஸ் 11, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ வழங்கப்பட்டுள்ளது.

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, 4000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய விவோ வை73 ஸ்மார்ட்போன் டைமண்ட் பிளேர் மற்றும் ரோமன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 20,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    பேஸ்புக் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்வாட்ச் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    உலகின் முன்னணி நிறுவனங்கள் ஒவ்வொன்றாக ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வரிசையில், பேஸ்புக் நிறுவனமும் ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை உருவாக்கி வருகிறது. புது மாடலில் பல்வேறு நவீன அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

     பேஸ்புக்

    தற்போது வெளியாகி இருக்கும் தகவலில் புது ஸ்மார்ட்வாட்ச் கழற்றக்கூடிய கேமராக்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. சந்தையில் கிடைக்கும் மற்ற ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுடனான போட்டியை எதிர்கொள்ள பேஸ்புக் தனது ஸ்மார்ட்வாட்ச் மாடலில் வீடியோ கால் மேற்கொள்ள ஏதுவாக கழற்றக்கூடிய கேமராக்களை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    கழற்றக்கூடிய கேமரா 1080 பிக்சல் தரத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்கும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. ஸ்மார்ட்போன்களை போன்றே எதிர்காலத்தில் ஸ்மார்ட்வாட்ச்களையும் பயன்படுத்த வைக்கும் நோக்கில் பேஸ்புக் புது ஸ்மார்ட்வாட்ச்-ஐ உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
    சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது எம்ஐ 11எக்ஸ் சீரிஸ் மாடல்கள் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் விவரங்களை வெளியிட்டு உள்ளது.


    சியோமி இந்தியா நிறுவனம் தனது எம்ஐ 11எக்ஸ் சீரிஸ் மாடலை ஏப்ரல் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அறிமுகமான சுமார் 45 நாட்களுக்குள் இந்த மாடல் ரூ. 300 கோடி மதிப்பிலான யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக சியோமி தெரிவித்துள்ளது.

    முன்னதாக எம்ஐ 10ஐ 5ஜி மாடல்கள் ரூ. 400 கோடி மதிப்பிலான யூனிட்கள் விற்பனை  செய்யப்பட்டதாக சியோமி தெரிவித்தது. எம்ஐ 11எக்ஸ் சீரிசில் எம்ஐ 11எக்ஸ் மற்றும் எம்ஐ 11எக்ஸ் ப்ரோ என இரு மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. 

     சியோமி எம்ஐ 11எக்ஸ் சீரிஸ்

    இரு மாடல்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் மற்றும் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 6.67 இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ், ஆடியோ ஜூம் போன்ற அம்சங்கள் உள்ளன. 

    எம்ஐ 11 எக்ஸ் மற்றும் எம்ஐ 11எக்ஸ் ப்ரோ மாடல்கள் விலை ரூ. 29,999 முதல் துவங்குகின்றன. இரு மாடல்களும் அமேசான் மற்றும் எம்ஐ வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. 
    ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் புது ஒஎஸ் அம்சங்கள் மற்றும் அவற்றின் வெளியீட்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

    ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு (WWDC 21) நேற்று நடைபெற்றது. கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த நிகழ்வு ஆப்பிள் வளாகத்தில் ஏற்கனவே படமாக்கப்பட்டு, நேரலை செய்யப்பட்டது. அசத்தலான அறிமுக வீடியோவுடன் துவங்கிய டெவலப்பர்கள் நிகழ்வில் புது ஒஎஸ் அப்டேட்களை ஆப்பிள் மென்பொருள் பொறியாளர்கள் அறிவித்தனர்.

    ஐஒஎஸ் 15

    அதன்படி ஐஒஎஸ் 15 தளத்தில் பேஸ்டைம் சேவை பல்வேறு புது அப்டேட்களை பெற்றுள்ளது. இம்முறை பேஸ்டைம் சேவையில் ஸ்பேஷியல் ஆடியோ அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் ஆடியோ அனுபவம் முன்பு இருந்ததை விட மேம்பட்டு இருக்கிறது. பேஸ்டைம் செயலியில் புதிதாக போர்டிரெயிட் மோட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேலும் பேஸ்டைம் அழைப்புகளை லின்க்குகளாக மாற்றும் வசதி வழங்கப்படுகிறது. 

     ஐஒஎஸ் 15

    இதேபோன்று புது ஐஒஎஸ் தளத்தின் மெசேஜஸ் சேவையில் புது அம்சங்கள் வழங்கப்படுகிறது. அதன்படி மெசேஜஸ் செயலியில் பல்வேறு வசதிகள் அடங்கிய (DND-Do Not Disturb) அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. போக்கஸ் என அழைக்கப்படும் புது அம்சம் எதுபோன்ற குறுந்தகவல்களுக்கு நோட்டிபிகேஷன் வரவேண்டும் என்பதை பயனர்களே முடிவு செய்ய வழி வகுக்கிறது.

    ஐஒஎஸ் 15 தளத்தில் ஆப்பிள் கீஸ் அம்சம் பல்வேறு புது கார்கள், தனியார் விடுதிகளில் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த சேவையை விரிவுப்படுத்த பல்வேறு நிறுவனங்களுடன் ஆப்பிள் இணைந்துள்ளது. இதேபோன்று அடையாள சான்று மற்றும் இதர தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய கார்டுகளை ஆப்பிள் வாலெட் செயலியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

    இவற்றுடன் ஆப்பிள் மேப், வெதர் செயலிகளிலும் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. ஆப்பிள் மேப் சேவையில் முன்பு இருந்ததை விட அதிக நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. புது மேப் செயலியில் முகவரிகள் முற்றிலும் புது முறையில் அதிக தெளிவாக காட்சியளிக்கும்படி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஐஒஎஸ் 15 ஆப்பிள் ஏர்பாட்ஸ் சாதனத்தில் அதிக அம்சங்களை வழங்குகிறது. மேலும் இது ஆடியோ அனுபவத்தை முன்பு இருந்ததை விட அதிகளவு மேம்படுத்தி இருக்கிறது. இத்துடன் ஏர்பாட்ஸ் சாதனத்தில் ஸ்பேஷியல் ஆடியோ வசதி வழங்கப்பட்டுள்ளது.  

     ஐபேட் ஒஎஸ்

    ஐபேட் ஒஎஸ் 15

    ஐபேட் ஒஎஸ் 15 விட்ஜெட்களில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விட்ஜெட்களை பொழுதுபோக்கு, விளையாட்டு என பல விதங்களில் பிரித்து அவற்றை மிக அழகாக ஒருங்கிணைத்து அடுக்கி வைத்துக் கொள்ளலாம். ஆப் லைப்ரரி அம்சத்தில் அனைத்து செயலிகளையும் விட்ஜெட் மூலம் பார்க்கலாம்.

    இதில் உள்ள மல்டி டாஸ்கிங் அம்சம் கொண்டு ஒரே சமயத்தில் இரு செயலிகளை பயன்படுத்த முடியும். செயலியின் தன்மைக்கு ஏற்ப அவற்றின் அளவை திரையில் மாற்றியமைத்துக் கொள்ளலாம். இந்த அம்சம் ஒவ்வொரு செயலிக்கும் ஏற்ப அசத்தலான வசதிகளை வழங்குகிறது.

    இதன் டிரான்ஸ்லேட் அம்சம் கடந்த ஆண்டை விட இம்முறை அதிக வசதிகளை வழங்குகிறது. வருடாந்திர அடிப்படையில் ஆப்பிள் டிரான்ஸ்லேட் பயனர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. மேலும் ஸ்விப்ட் பிளேகிரவுண்ட் தளமும் அதிகளவு மாற்றப்பட்டு இருக்கிறது.

    இந்த தளத்தில் செயலிகளுக்கு குறியீடு எழுதும் போதே அவற்றை சோதனை செய்யும் வசதியும், அவற்றை உடனடியாக ஆப் ஸ்டோரில் பதிவேற்றம் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. 

     பிரைவசி

    பிரைவசி

    இன்றைய உரையில் ஆப்பிள் நிறுவனம் பிரைவசி சார்ந்த அம்சங்களை அறிவித்தது. அதன்படி மெயில் பிரைவசி ப்ரோடெக்ஷன் அறிமுகமாகிறது. இது ஐபி முகவரிகளை மறைக்கும். மேலும் சபாரி பிரவுசரில் டிராக் செய்வோரிடம் இருந்தும் ஐபி முகவரிகளை மறைக்கிறது. இத்துடன் செயலிகள் எவ்வாறு பிரைவசி செட்டிங்களை பயன்படுத்திகின்றன என்பதை அறிந்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.

     வாட்ச் ஒஎஸ்

    வாட்ச் ஒஎஸ் 8

    புதிய வாட்ச் ஒஎஸ் 8 புதுவிதமான அனிமேஷன்களை கொண்டுள்ளது. இவை பயனர்கள் மனநிலையை ஒரே தன்மையில் வைத்துக் கொள்ள உதவுகிறது. இதுதவிர மன உளைச்சல் ஏற்படும் வாய்ப்பை வெகுவாக குறைக்கிறது. மேலும் பயனர் சுவாச அளவில் மாற்றம் ஏற்பட்டால் உடனே அதுபற்றிய நோட்டிபிகேஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் பல்வேறு உடற்பயிற்சிகள் வாட்ச் ஒஎஸ்-இல் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் அதிக பிரபலமான வாட்ச் பேஸ் புது ஒஎஸ்-இல் மாற்றப்பட்டு இருக்கிறது. புது தளத்தில் வாட்ச் பேஸ் முன்பை விட அதிக விவரங்களை வழங்குகிறது. இத்துடன் புதிதாக போட்டோஸ் ஆப் சேர்க்கப்பட்டு உள்ளது. வாட்ச் ஒஎஸ் கொண்டு குறுந்தகவல் அனுப்பும் வசதியில் அசத்தலான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

     மேக் ஒஎஸ்

    மேக் ஒஎஸ் 

    மேக் ஒஎஸ் மான்ட்ரெ தளத்தில் யுனிவர்சல் கண்ட்ரோல் எனும் புது அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மேக் கீபோர்டு மற்றும் மவுஸ் கொண்டு ஐபேட் சாதனத்தையும் இயக்க முடியும். இதே போன்று ஐமேக் மவுஸ் மற்றும் கீபோர்டு கொண்டு ஐபேட் மற்றும் ஐமேக் சாதனங்களை இயக்கலாம்.  

    மேக் சாதனங்களுக்கான ஏர்பிளே அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இருப்பதை போன்றே ஏர்பிளே அம்சம் ஐமேக் சாதனங்களிலும் இயங்கும். புதிய மான்ட்ரெ தளத்தில் ஷார்ட்கட்ஸ் மற்றும் ஷார்ட்கட் எடிட்டர் அம்சங்கள் உள்ளன. இது மேக் சாதனங்களின் பல்வேறு செயலிகளில் இயங்கும். 

    உலகின் அதிவேக பிரவுசராக இருக்கும் சபாரி பயனர் விவரங்களை பாதுகாப்பதில் தலைசிறந்த அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் தோற்றம் முற்றிலுமாக மாற்றப்பட்டு டேப்கள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் சர்ச் டேப் முன்பைவிட சிறியதாக இருக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு இதர டேப்களும் அளவில் சிறியதாக இருக்கின்றன. 

    புதிய சபாரி பிரவுசர் மேக், ஐமேக், ஐபேட் என அனைத்து சாதனங்களிலும் ஒரே மாதிரி காட்சியளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஐபோனில் சர்ச் பார் திரையில் மென்மையாக க்ளிக் செய்தால் தோன்றும். இதனால் சிறு திரையிலும் பெரிய பிரவுசர் போன்ற அனுபவம் கிடைக்கும்.
    ஆப்பிள் நிறுவனத்தின் WWDC 21 நிகழ்வில் மேக் ஒஎஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ஆப்பிள் நிறுவனம் மென்பொருள் சார்ந்த புது அறிவிப்புகளை வெளியிடும் சர்வதேச டெவலப்பர்கள் (WWDC) நிகழ்வு துவங்கியது. ஆப்பிள் வழக்கப்படி அசத்தலான அறிமுக வீடியோவுடன் 2021 WWDC நிகழ்வு துவங்கியது.

     டிம் குக்

    ஆப்பிள் WWDC 21 நிகழ்வின் துவக்க உரையில் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் மேற்கொண்டார். தொடக்க உரையில், ஆப்பிள் டெவலப்பர்களுக்கு வழங்கும் புது சேவைகளை பற்றி விளக்கினார். 

    துவக்க உரையை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின்  மென்பொருள் பொறியியல் பிரிவுக்கான மூத்த துணை தலைவர் க்ரியாக் ஃபெடரிகி ஐஒஎஸ் 15 வழங்கும் புது அம்சங்களை விவரித்தார்.

    அதன்படி ஐஒஎஸ் 15 தளத்தில் பேஸ்டைம் சேவை பல்வேறு புது அப்டேட்களை பெற்றுள்ளது. இம்முறை பேஸ்டைம் சேவையில் ஸ்பேஷியல் ஆடியோ அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் ஆடியோ அனுபவம் முன்பு இருந்ததை விட மேம்பட்டு இருக்கிறது. பேஸ்டைம் செயலியில் புதிதாக போர்டிரெயிட் மோட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேலும் பேஸ்டைம் அழைப்புகளை லின்க்குகளாக மாற்றும் வசதி வழங்கப்படுகிறது. 

     ஐமெசேஜ்

    இதேபோன்று புது ஐஒஎஸ் தளத்தின் மெசேஜஸ் சேவையில் புது அம்சங்கள் வழங்கப்படுகிறது. அதன்படி மெசேஜஸ் செயலியில் பல்வேறு வசதிகள் அடங்கிய (DND-Do Not Disturb) அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. போக்கஸ் என அழைக்கப்படும் புது அம்சம் எதுபோன்ற குறுந்தகவல்களுக்கு நோட்டிபிகேஷன் வரவேண்டும் என்பதை பயனர்களே முடிவு செய்ய அனுமதிக்கிறது.

     ஆப்பிள் மேப்ஸ்

    ஐஒஎஸ் 15 தளத்தில் ஆப்பிள் கீஸ் அம்சம் பல்வேறு புது கார்கள், தனியார் விடுதிகளில் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த சேவையை விரிவுப்படுத்த பல்வேறு நிறுவனங்களுடன் ஆப்பிள் இணைந்துள்ளது. இதேபோன்று அடையாள சான்று மற்றும் இதர தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய கார்டுகளை ஆப்பிள் வாலெட் செயலியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

    இவற்றுடன் ஆப்பிள் மேப், வெதர் செயலிகளிலும் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. ஆப்பிள் மேப் சேவையில் முன்பு இருந்ததை விட அதிக நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. புது மேப் செயலியில் முகவரிகள் முற்றிலும் புது முறையில் அதிக தெளிவாக காட்சியளிக்கும்படி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஐஒஎஸ் 15 ஆப்பிள் ஏர்பாட்ஸ் சாதனத்தில் அதிக அம்சங்களை வழங்குகிறது. மேலும் இது ஆடியோ அனுபவத்தை முன்பு இருந்ததை விட அதிகளவு மேம்படுத்துகிறது. இது ஏர்பாட்ஸ் சாதனத்தில் ஸ்பேஷியல் ஆடியோ வசதி வழங்கப்படுகிறது.

     ஐபேட் ஒஎஸ் 15

    ஐபேட் ஒஎஸ் 15

    ஐபேட் ஒஎஸ் 15 விட்ஜெட்களில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விட்ஜெட்களை பொழுதுபோக்கு, விளையாட்டு என பல விதங்களில் பிரித்து அவற்றை மிக அழகாக ஒருங்கிணைத்து அடுக்கி வைத்துக் கொள்ளலாம். ஆப் லைப்ரரி அம்சத்தில் அனைத்து செயலிகளையும் விட்ஜெட் மூலம் பார்க்கலாம்.

    இதில் உள்ள மல்டி டாஸ்கிங் அம்சம் கொண்டு ஒரே சமயத்தில் இரு செயலிகளை பயன்படுத்த முடியும். செயலியின் தன்மைக்கு ஏற்ப அவற்றின் அளவை திரையில் மாற்றியமைத்துக் கொள்ளலாம். இந்த அம்சம் ஒவ்வொரு செயலிக்கு ஏற்ப அசத்தலான வசதிகளை வழங்குகிறது.

    இதன் டிரான்ஸ்லேட் அம்சம் கடந்த ஆண்டை விட இம்முறை அதிக வசதிகளை வழங்குகிறது. வருடாந்திர அடிப்படையில் ஆப்பிள் டிரான்ஸ்லேட் பயனர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. மேலும் ஸ்விப்ட் பிளே கிரவுண்ட் தளமும் அதிகளவு மாற்றப்பட்டது. 

    இதில் செயலிகளுக்கு குறியீடு எழுதும் போதே அவற்றை சோதனை செய்யும் வசதியும், அவற்றை உடனடியாக ஆப் ஸ்டோரில் பதிவேற்றம் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. 

    பிரைவசி

    இன்றைய உரையில் ஆப்பிள் நிறுவனம் பிரைவசி சார்ந்த அம்சங்களை அறிவித்தது. அதன்படி மெயில் பிரைவசி ப்ரோடெக்ஷன் அறிமுகமாகிறது. இது ஐபி முகவரிகளை மறைக்கும். மேலும் சபாரி பிரவுசரில் டிராக் செய்வோரிடம் இருந்தும் ஐபி முகவரிகளை மறைக்கிறது. இத்துடன் செயலிகள் எவ்வாறு பிரைவசி செட்டிங்களை பயன்படுத்திகின்றன என்பதை அறிந்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.

     வாட்ச் ஒஎஸ் 8

    வாட்ச் ஒஎஸ் 8

    புதிய வாட்ச் ஒஎஸ் 8 புதுவிதமான அனிமேஷன்களை கொண்டுள்ளது. இவை பயனர்கள் மனநிலையை ஒரே தன்மையில் வைத்துக் கொள்ள உதவுகிறது. இதுதவிர மன உளைச்சல் ஏற்படும் வாய்ப்பை வெகுவாக குறைக்கிறது. மேலும் பயனர் சுவாச அளவில் மாற்றம் ஏற்பட்டால் உடனே அதுபற்றிய நோட்டிபிகேஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் பல்வேறு உடற்பயிற்சிகள் வாட்ச் ஒஎஸ்-இல் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் அதிக பிரபலமான வாட்ச் பேஸ் புது ஒஎஸ்-இல் மாற்றப்பட்டு இருக்கிறது. புது தளத்தில் வாட்ச் பேஸ் முன்பை விட அதிக விவரங்களை வழங்குகிறது. இத்துடன் புதிதாக போட்டோஸ் ஆப் சேர்க்கப்பட்டு உள்ளது. வாட்ச் ஒஎஸ் கொண்டு குறுந்தகவல் அனுப்பும் வசதியில் அசத்தலான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

     மேக் ஒஎஸ்

    மேக் ஒஎஸ் 

    மேக் ஒஎஸ் மான்ட்ரெ தளத்தில் யுனிவர்சல் கண்ட்ரோல் எனும் புது அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மேக் கீபோர்டு மற்றும் மவுஸ் கொண்டு ஐபேட் சாதனத்தையும் இயக்க முடியும். இதே போன்று ஐமேக் மவுஸ் மற்றும் கீபோர்டு கொண்டு ஐபேட் மற்றும் ஐமேக் சாதனங்களை இயக்கலாம்.  

    மேக் சாதனங்களுக்கான ஏர்பிளே அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இருப்பதை போன்றே ஏர்பிளே அம்சம் ஐமேக் தளங்களிலும் இயங்கும். புதிய மான்ட்ரெ தளத்தில் ஷார்ட்கட்ஸ் மற்றும் ஷார்ட்கட் எடிட்டர் அம்சங்கள் உள்ளன. இது மேக் சாதனங்களின் பல்வேறு செயலிகளில் இயங்கும். 

    உலகின் அதிவேக பிரவுசராக இருக்கும் சபாரி பயனர் விவரங்களை பாதுகாப்பதில் தலைசிறந்த அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் தோற்றம் முற்றிலுமாக மாற்றப்பட்டு டேப்கள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் சர்ச் டேப் முன்பைவிட சிறியதாக இருக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு இதர டேப்களும் அளவில் சிறியதாக இருக்கின்றன. 

    புதிய சபாரி பிரவுசர் மேக், ஐமேக், ஐபேட் என அனைத்து சாதனங்களிலும் ஒரே மாதிரி காட்சியளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஐபோனில் சர்ச் பார் திரையில் மென்மையாக க்ளிக் செய்தால் தோன்றும். இதனால் சிறு திரையிலும் பெரிய பிரவுசர் அனுபவம் கிடைக்கும்.

    ஆப் ஸ்டோர் துவங்கியது முதல் ஆப்பிள் டெவலப்பர்களுக்காக மேற்கொண்ட நடவடிக்கைகளை க்ரியாக் விவரித்தார். மேலும் இன்று அறிவிக்கப்பட்ட புது ஒஎஸ் பீட்டா வெர்ஷன் இன்று முதல் கிடைக்கும் என டிம் குக் தெரிவித்தார். இவற்றின் பொது பீட்டா அடுத்த மாதமும், இதைத் தொடர்ந்து அனைவருக்குமான ஸ்டேபில் ஒஎஸ் சில மாதங்களில் வெளியாகும் என கூறி நிகழ்வை டிம் குக் நிறைவு செய்தார்.

    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் அந்நிறுவன வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.


    சாம்சங் கேலக்ஸி எம்21 பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி சாம்சங் சார்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும், புது எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. 

    இத்துடன் கேலக்ஸி எம்21 பிரைம் எடிஷன் பிஐஎஸ் சான்று பெற்று, கூகுள் பிளே சப்போர்ட் கொண்ட சாதனங்கள் பட்டியலிலும் இடம்பெற்று இருக்கிறது. புதிய பிரைம் எடிஷன் மாடலில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி எம்21 மாடலில் வழங்கப்பட்ட அம்சங்கள் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி எம்21

    சாம்சங் கேலக்ஸி எம்21 பிரைம் எடிஷன் SM-M215G/DS எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதே மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் கூகுள் பிளே சப்போர்ட் கொண்ட சாதனங்கள் பட்டியலிலும் இடம்பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகமான கேல்கஸி எம்21 மாடல் SM-M215F/DS எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது.

    புது எம்21 பிரைம் எடிஷன் மாடலில் 6.4 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2340 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர், 6000 எம்ஏஹெச் பேட்டரி, 48 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி செல்பி கேமரா, அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனம் சில தினங்களில் அறிமுகம் செய்ய இருக்கும் ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி விலை விவரங்கள் லீக் ஆகி உள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி மாடல் விலை ஒன்பிளஸ் வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது. தனியார் வங்கி சலுகை மூலம் ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி விலை மற்றும் கேஷ்பேக் சலுகை விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி ஜூன் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

     ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி

    புதிய ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி மாடலில் மிக மெல்லிய டிசைன், ஹெட்போன் ஜாக், 64 எம்பி மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படுகின்றன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 4500 எம்ஏஹெச் பேட்டரி, 30டி வார்ப் சார்ஜ் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    விலையை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி மாடல் விலை ரூ. 22,999 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது கடந்த ஆண்டு வெளியான ஒன்பிளஸ் நார்டு விலையை விட குறைவு ஆகும். அந்த வகையில், இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ஜூன் 10 ஆம் தேதி வெளியாகிவிடும்.
    ×