என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • வோடபோன் ஐடியா நிறுவனம் அதிக பலன்களை வழங்கும் புதிய சேவையை அறிவித்து இருக்கிறது.
    • புதிய சேவையில் நான்கு சலுகைகள் பல்வேறு விலை பிரிவுகளில் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    வோடபோன் ஐடியா நிறுவனம் இந்திய பயனர்களுக்கு வி ஒன் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை பேக்கேஜ் போன்று சேவையை பெற விரும்புவோருக்காக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் பைபர் கனெக்ஷன், இலவச ரவுட்டர், இன்ஸ்டாலேஷன், பிரீபெயிட் மொபைல் மற்றும் ஒடிடி ஆப்ஸ் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன.

    தற்போது ரூ. 2 ஆயிரத்து 192 துவக்க விலையில் நான்கு சலுகைகள் இடம்பெற்றுள்ளன. தற்போதைக்கு இதில் கஸ்டமைசேஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் டேட்டா ரோல்-ஓவர் மற்றும் பின்ஜ் ஆல்நைட் இன்டர்நெட் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இலவச இண்டர்நெட் சேவையை பயன்படுத்த முடியும்.

     

    வி ஒன் ரூ. 2 ஆயிரத்து 192 சலுகை பலன்கள்:

    - அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கும் பிரீபெயிட் சிம்

    - 40Mbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா வழங்கும் பைபர் பிராட்பேன்ட் சேவை

    - 90 நாட்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல்

    - 90 நாட்களுக்கு சோனிலைவ் மொபைல், வி மூவிஸ் மற்றும் டிவி விஐபி, ஹங்காமா மியூசிக்

    - 90 நாட்களுக்கு ஜீ5 சந்தா

    - இந்த சலுகையின் வேலிடிட்டி 93 நாட்கள் ஆகும்

    வி ஒன் ரூ. 3 ஆயிரத்து 109 பலன்கள்:

    - அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கும் பிரீபெயிட் சிம்

    - 100Mbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா வழங்கும் பைபர் பிராட்பேன்ட் சேவை

    - 90 நாட்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல்

    - 90 நாட்களுக்கு சோனிலைவ் மொபைல், வி மூவிஸ் மற்றும் டிவி விஐபி, ஹங்காமா மியூசிக்

    - 90 நாட்களுக்கு ஜீ5 சந்தா

    - இந்த சலுகையின் வேலிடிட்டி 93 நாட்கள் ஆகும்

     

    வி ஒன் ரூ. 8 ஆயிரத்து 390 பலன்கள்:

    - அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கும் பிரீபெயிட் சிம்

    - 40Mbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா வழங்கும் பைபர் பிராட்பேன்ட் சேவை

    - ஒரு வருடத்திற்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல்

    - ஒரு வருடத்திற்கு சோனிலைவ் மொபைல், வி மூவிஸ் மற்றும் டிவி விஐபி

    - இந்த சலுகையின் வேலிடிட்டி 368 நாட்கள் ஆகும்

    வி ஒன் ரூ. 12 ஆயிரத்து 155 பலன்கள்:

    - அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கும் பிரீபெயிட் சிம்

    - 100Mbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா வழங்கும் பைபர் பிராட்பேன்ட் சேவை

    - ஒரு வருடத்திற்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல்

    - ஒரு வருடத்திற்கு சோனிலைவ் மொபைல், வி மூவிஸ் மற்றும் டிவி விஐபி

    - ஒரு வருடத்திற்கு ஜீ5 சந்தா

    - இந்த சலுகையின் வேலிடிட்டி 368 நாட்கள் ஆகும்

    • வாட்ஸ்அப் பீட்டா பயனர்கள் தங்களின் செயலியை அப்டேட் செய்து இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்.
    • புதிய க்ரூப் வீடியோ கால் அம்சம் வாட்ஸ்அப் செயலியின் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ கால்களில் அதிகபட்சம் 32 பேருடன் பேச முடியும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் பயனர்களால் அதிகபட்சம் 7 பேருடன் மட்டுமே க்ரூப் வீடியோ கால் பேச முடிந்தது. தற்போது 32 பேருடன் வீடியோ காலில் பேசுவதற்கு, வீடியோகால் ஏற்கனவே துவங்கி இருப்பது அவசியம் ஆகும்.

    தற்போது வாட்ஸ்அப்-இல் வெளியாகி இருக்கும் அப்டேட் மூலம் பயனர்கள் க்ரூப் வீடியோ கால்-ஐ மேற்கொள்ளும் போதே அதிகபட்சம் 15 பேருடன் உரையாட முடியும். இதற்கான அப்டேட் வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.23.15.14, 2.23.15.10, 2.23.15.11 மற்றும் 2.23.15.13 வெர்ஷன்களில் கிடைப்பதாக கூறப்படுகிறது.

     

    Photo Courtesy WaBetaInfo

    Photo Courtesy WaBetaInfo

    வாட்ஸ்அப் பீட்டா பயனர்கள் தங்களின் செயலியை அப்டேட் செய்து இந்த அம்சத்தை பயன்படுத்த துவங்கலாம். பீட்டா வெர்ஷனில் இருப்பதால், இந்த அம்சம் அனைவருக்கும் கிடைக்க மேலும் சில காலம் ஆகும். வாட்ஸ்அப்-இல் க்ரூப் வீடியோ கால் மேற்கொள்வதற்கான வழிமுறை மிகவும் எளிமையானது தான். வாட்ஸ்அப் செயலியில் கால்ஸ் டேப்-ஐ க்ளிக் செய்து, க்ரியேட் கால் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

    இனி க்ரூப் வீடியோ கால் ஆப்ஷனில் கான்டாக்ட் லிஸ்ட்-இல் இருப்பவர்களை தேர்வு செய்ய வேண்டும் தற்போது உங்களால் அதிகபட்சம் ஏழு பேரை, கால் துவங்கும் முன் சேர்க்க முடியும். கால் துவங்கியதும், அதிகபட்சம் 32 பேரை இணைத்துக் கொள்ள முடியும். புதிய அப்டேட் மூலம் இந்த எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

    • ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என தகவல்.
    • ஒன்பிளஸ் 12 மாடலில் 32MP செல்ஃபி கேமரா, பன்ச் ஹோல் கட்-அவுட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒன்பிளஸ் 12 வெளியீடு பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.

    எனினும், புதிய ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் இந்தியா உள்பட சர்வதேச சந்தையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 5400 எம்ஏஹெச் பேட்டரி, 100 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    கோப்புப் படம் 

    கோப்புப் படம் 

     

    இதுபற்றி டிப்ஸ்டர் மேக்ஸ் ஜம்போர் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் 12 மாடல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்து இருக்கிறார். முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த தகவல் வெளியாகி உள்ளது.

    எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    ஒன்பிளஸ் 12 மாடலில் ஆன்ட்ராய்டு 14 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 14, 6.7 இன்ச் புளூயிட் LTPO AMOLED டிஸ்ப்ளே, 2K ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் நிறுவனத்தின் இதுவரை அறிவிக்கப்படாத ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், 16 ஜிபி LPDDR5X ரேம், UFS 4.0 ரக ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

     

    கோப்புப் படம் 

    கோப்புப் படம் 

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 64MP டெலிபோட்டோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் பன்ச் ஹோல் கட்-அவுட், அலர்ட் ஸ்லைடர், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 5400 எம்ஏஹெச் பேட்டரி, , 100 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் விலை 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 56 ஆயிரத்து 999 என்றும் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 61 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • நெட்ப்ளிக்ஸ் சேவையில் புதிதாக 60 லட்சம் பேர் இணைந்திருப்பதாக அந்நிறுவனம் அறிவிப்பு.
    • இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் தள பயன்பாடுகளில் புதிய மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் பாஸ்வேர்டு ஷேரிங் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. புதிய அறிவிப்பு காரணமாக இந்திய பயனர்கள் இனி தங்களது அக்கவுன்ட் விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது.

    கடந்த மே மாதத்தில் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் பாஸ்வேர்டு ஷேரிங் சேவை நிறுத்தப்பட்டது. இந்த சேவை நிறுத்தப்பட்டதில் இருந்து நெட்ப்ளிக்ஸ் சேவையில் சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர் என்று அந்நிறுவனம் அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில் தான், நெட்ப்ளிக்ஸ் சேவையில் ஒரே அக்கவுன்ட்-ஐ பலர் பயன்படுத்துவதற்கான வசதி நீக்கப்பட்டு இருக்கிறது. ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் நெட்ப்ளிக்ஸ் அக்கவுன்ட்-ஐ அவர்களது வீடு, வெளியில் செல்லும் இடங்கள் மற்றும் பயணங்கள் என எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இதோடு டிரான்ஸ்பர் ப்ரோபைல், மேனேஜ் அக்சஸ் மற்றும் டிவைசஸ் போன்ற புதிய அம்சங்களை பயன்படுத்த முடியும். நெட்ஃப்ளிக்ஸ்-இன் புதிய அறிவிப்பு மூலம், அந்நிறுவனம் IP முகவரி, டிவைஸ் ஐடி, அக்கவுன்ட் ஆக்டிவிட்டி உள்ளிட்ட விவரங்கள் அடிப்படையில், அக்கவுன்ட்-ஐ யார் பயன்படுத்துகின்றார்கள் என்பதை அறிந்து கொள்கிறது.

    புதிய மாற்றம் காரணமாக பயனர்கள், நெட்ப்ளிக்ஸ் ஹவுஸ்ஹோல்டு-ஐ செட்டப் செய்து கொள்ள வேண்டும். இந்த அக்கவுன்ட் பயனர் வீடு அல்லது வசிக்கும் இடமாக இருத்தல் அவசியம் ஆகும். ஒரே இன்டர்நெட் இணைப்பை பயன்படுத்துவோர் மட்டுமே இந்த அக்கவுன்ட்-ஐ பயன்படுத்த முடியும்.

    மற்ற இணைப்பில் இருந்து நெட்ப்ளிக்ஸ் அக்கவுன்ட்-இல் லாக் இன் செய்தால், அவ்வாறு செய்வோருக்கு புதிய அக்கவுன்ட் உருவாக்குவதற்கான நோட்டிபிகேஷன் அனுப்பப்படுகிறது.

    • ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் லேப்டாப்கள் என்ட்ரி லெவல் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
    • இந்தியாவில் என்ட்ரி லெவல் லேப்டாப்களின் விலை சுமார் 20 ஆயிரம் ரூபாயில் இருந்து துவங்குகிறது.

    புதிதாக லேப்டாப் வாங்குவது சற்று சிக்கல் நிறைந்த ஒன்று. ஆனால், லேப்டாப்களில் தேர்வு செய்வதற்கு அதிக ஆப்ஷன்கள் சந்தையில் கிடைக்கின்றன. இந்திய சந்தையில் என்ட்ரி லெவல் லேப்டாப் மாடல்களின் விலை சுமார் 20 ஆயிரம் ரூபாயில் இருந்து துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல்களின் விலை லட்சங்களை கடந்துள்ளன.

    அந்த வகையில், ஒவ்வொருத்தர் பயன்பாடு மற்றும் தேவைக்கு ஏற்ப, அனைத்து விலை பிரிவுகளிலும் அதிக லேப்டாப் மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இவைகளில் ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த லேப்டாப் மாடல்கள் எவை என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம். இந்த விலை பிரிவில் கிடைக்கும் மாடல்கள் கிட்டத்தட்ட சிறப்பான என்ட்ரி லெவல் பிரிவிலேயே நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

     

    ஹெச்பி குரோம்புக்

    ஹெச்பி குரோம்புக் 15.6 மாடல் இந்த பட்ஜெட்டில் வாங்குவதற்கு சிறப்பான மாடல் ஆகும். டிஸ்ப்ளே மற்றும் வெப்கேமரா தவிர்த்து, இந்த மாடலின் அம்சங்கள் கொடுக்கும் விலைக்கு ஏற்றதாகவே உள்ளது. இந்த லேப்டாப் இன்டெல் செலரான் V4500 பிராசஸர் கொண்டிருக்கிறது. இதன் விலை இந்திய சந்தையில் ரூ. 28 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது.

     

    அசுஸ் விவோபுக் கோ 15

    இன்டெல் செலரான் டூயல் கோர் பிராசஸர், 8 ஜிபி ரேம், 512 ஜிபி SSD கொண்டிருக்கும் அசுஸ் விவோபுக் கோ 15 மாடலில் சிறப்பான கீபோர்டு வழங்கப்பட்டு இருக்கிறது. 15.6 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் அசுஸ் விவோபுக் கோ 15 மாடலின் விலை ரூ. 27 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     

    இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ்:

    இந்த பட்டியலில் கிடைக்கும் ஸ்டைலிஷ் மாடலாக இந்த லேப்டாப் இருக்கிறது. 10th Gen இன்டெல் கோர் i3 பிராசஸர் கொண்டிருக்கும் இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் மாடலில் 15.6 இன்ச் டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள் உள்ளன. இதன் விலை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ரூ. 28 ஆயிரத்து 990 என்று துவங்குகிறது.

     

    ஹெச்பி 255 G8

    ஹெச்பி லேப்டாப் வாங்க திட்டமிடும் பட்சத்தில் இந்த மாடல் சிறப்பான தேர்வாக இருக்கும். இதில் AMD ரைசன் 3 சீரிஸ் CPU, 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த லேப்டாப்பின் துவக்க விலை ரூ. 29 ஆயிரத்து 990 ஆகும்.

     

    லெனோவோ ஐடியாபேட் 1

    11.6 இன்ச் டிஸ்ப்ளேவுடன், இந்த பட்டியலில் சிறிய லேப்டாப் மாடலாக லெனோவோ ஐடியாபேட் 1 இருக்கிறது. சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கும் இந்த லேப்டாப் அன்றாட பணிகளுக்கு ஏற்றது ஆகும். இதில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் சூட், 4 ஜிபி ரேம், 256 ஜிபி SSD மற்றும் வின்டோஸ் 11 ஒஎஸ் உள்ளது. இதன் விலை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ரூ. 25 ஆயிரத்து 289 என்று துவங்குகிறது.

    • ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவு மற்ற நிறுவனங்களை விட பெரியது.
    • ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் சலுகை 200Mbps வேகத்தில், 3.3TB டேட்டா வழங்குகிறது.

    பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் இந்திய சந்தையில் முன்னணி இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனமாக இருக்கிறது. ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் திட்டத்தில் பயனற்கள் 40Mbps துவங்கி அதிகபட்சம் 1Gbps வரையிலான இணைய வேகத்தில் ஏராளமான சலுகைகளை தேர்வு செய்து பயன்படுத்த முடியும்.

    பட்ஜெட் மற்றும் பயன்பாட்டிற்கான தேவைக்கு ஏற்ப பயனர்கள் தேர்வு செய்ய அதிக ஆப்ஷன்களை ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் வழங்கி வருகிறது. இதில் ஒடிடி பலன்களை வழங்கும் சலுகைகளும் அடங்கும். அந்த வகையில், ஏராளமான ஒடிடி பலன்களை கொண்ட பிராட்பேன்ட் இணைப்பு தேவைப்படும் பட்சத்தில் ஏர்டெல் சேவையை தேர்வு செய்து சிறப்பானதாக இருக்கும்.

     

    ஏர்டெல் சேவை நாடு முழுக்க வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவு மற்ற நிறுவனங்களை விட அளவில் பெரியது ஆகும். இதன் காரணமாக பிராட்பேன்ட் இணைப்பில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை விரைந்து சரி செய்து கொள்ள முடியும். ஒடிடி பலன்களை வழங்கும் ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் சலுகைகள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    ரூ. 999 சலுகை பலன்கள்:

    பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ. 999 சலுகையில் 200Mbps வேகத்தில் இணைய வசதி வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு மாதம் 3.3TB வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் ஃபிக்சட் லைன் காலிங் வசதி வழங்கப்படுகிறது. லேன்ட்லைன் சாதனத்தினை வாடிக்கையாளரே வாங்கிக் கொள்ளலாம்.

    இவை தவிர இந்த சலுகையில்- அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர், விஐபி சர்வீஸ், அப்போலோ 24|7 சர்கில் சந்தா மற்றும் வின்க் பிரீமியம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அம்சத்தை பயன்படுத்த, வாட்ஸ்அப்-இல் ஸ்டார்ட் நியூ சாட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
    • வியாபார ரீதியில் வாட்ஸ்அப்-ஐ சார்ந்து இருப்பவர்களுக்கு புதிய அம்சம் அதிக பயனுள்ளதாக இருக்கும்.

    மெட்டா நிறுவனத்தின் முன்னணி செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. அவ்வப்போது புதிய அம்சங்களை வழங்கி வரும் வாட்ஸ்அப், தற்போது கான்டாக்ட்களை சேவ் செய்யாமலும் குறுந்தகவல் அனுப்பும் வசதியை வழங்கி இருக்கிறது.

    இது குறித்து Wabetainfo வெளியிட்டு இருக்கும் தகவல்களில் பயனர்கள் புதிய நம்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்ப நேரிட்டால், அந்த நம்பரை சேவ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதன் மூலம் பயனர்கள் குறுந்தகவல் அனுப்ப வேண்டிய அனைத்து நம்பர்களையும் சேமிக்க வேண்டிய அவசியம் இருக்காது. வாட்ஸ்அப் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு வெர்ஷன்களை அப்டேட் செய்த பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    இந்த அம்சத்தை பயன்படுத்த, வாட்ஸ்அப்-இல் ஸ்டார்ட் நியூ சாட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து சர்ச் பாரில் மொபைல் நம்பரை பதிவிட வேண்டும். இவ்வாறு செய்யும் போது, நம்பர் உங்களது பட்டியலில் இருக்கிறதா இல்லையா என்பதை வாட்ஸ்அப் தேடும். அதன்பிறகு கான்டாக்ட் லிஸ்ட் வெளியிலும் தேடும்.

    தற்காலிகமாக அறிமுகமில்லா நபர்களுக்கு வாட்ஸ்அப் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், பயனர்கள் முன்னதாக அந்த நம்பர்களை மொபைலில் சேவ் செய்தால் மட்டுமே குறுந்தகவல் அனுப்ப முடியும். ஆனால், புதிய வசதி மூலம் பயனர்கள் மொபைல் நம்பர்களை சேவ் செய்யாமலும், குறுந்தவல் அனுப்பிடலாம்.

    வியாபார ரீதியில் தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப்-ஐ அதிகம் சார்ந்து இருப்பவர்களுக்கு புதிய அம்சம் அதிக பயனுள்ளதாக இருக்கும். இது பீட்டா பயனர்கள் மட்டுமின்றி, அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனிலேயே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், பயனர்கள் வாட்ஸ்அப்-இன் சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் செய்து, புதிய அம்சத்தை பயன்படுத்தலாம். 

    • வோடபோன் ஐடியா நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 400 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    • வோடபோன் ஐடியா பிரீபெயிட் பயனர்கள் இந்த சலுகையில் பயன்பெற முடியும்.

    வி ஸ்மார்ட்போன் திட்டம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் வோடபோன் ஐடியா பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்காக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 4ஜி அல்லது 5ஜி போனுக்கு மாறும் வி வாடிக்கையாளர்கள் ரூ. 2 ஆயிரத்து 400 வரையிலான தள்ளுபடி பெற முடியும்.

    எனினும், இந்த தள்ளுபடியை வி செயலி மூலம் மேற்கொள்ளப்படும் ரிசார்ஜ்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். முதற்கட்டமாக இந்த திட்டம் தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.மேலும் இது குறுகிய கால சலுகை என்பதால், பயனர்கள் இதனை நீண்ட காலம் கழித்து பயன்படுத்த முடியாது.

     

    வி ஸ்மார்ட்போன் திட்டம்

    பீச்சர் போன் பயனர்களை ஸ்மார்ட்போன் வாங்க செய்யும் நோக்கில் இந்த புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே உள்ள வி பயனர்கள் 4ஜி அல்லது 5ஜி சாதனத்திற்கு அப்கிரேடு செய்யும் போது, இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தியாவில் வி நிறுவனம் 5ஜி சேவையை வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது.

    இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவு பெற்றதும், 5ஜி வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்த சலுகை ஜூலை 4-ம் தேதி துவங்கிய நிலையில், செப்டம்பர் 30-ம் தேதி வரை வழங்கப்பட இருக்கிறது. இநத திட்டம் பஞ்சாப், அரியானா, சென்னை மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் வழங்கப்படுகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் வாசிக்கையாளர்களுக்கு முதலில் வெல்கம் எஸ்எம்எஸ் அனுப்பப்படும். இதில் ரூ. 2 ஆயிரத்து 400 ரிசார்ஜ் தள்ளுபடி பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருக்கும். இந்த திட்டத்தின் கீழ் தள்ளுபடி பெறுவதற்கு பயனர்கள், ரூ. 319, ரூ. 359, ரூ. 368, ரூ. 399, ரூ. 409, ரூ. 475, ரூ. 479, ரூ. 499, ரூ. 539, ரூ. 599, ரூ. 601, ரூ. 666, ரூ. 719, ரூ. 839, ரூ. 901, ரூ. 902, ரூ. 903, ரூ. 1066, ரூ. 1499, ரூ. 1999, ரூ. 2899, ரூ. 2999 மற்றும் ரூ. 3099 விலை சலுகைகளில் ஒன்றை ரிசார்ஜ் செய்து தள்ளுபடி பெறலாம்.

    மேலும் பயனர்கள் வி ஆப் மூலம் ரிசார்ஜ் செய்தால் மட்டுமே தள்ளுபடி பெற முடியும். புதிய ஸ்மார்ட்போனில் ரிசார்ஜ் செய்யும் போது ரூ. 100 தள்ளுபடி கூப்பன் பெறலாம். இதற்கான கூப்பன் வி செயலியின் மை கூப்பன் பிரிவில் இடம்பெற்று இருக்கும்.

    • திரெட்ஸ் ஆப்-இல் டெக்ஸ்ட் அப்டேட்கள், லைக், ரிப்ளை, ரி-போஸ்ட், ஷேர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
    • திரெட்ஸ் செயலியில் புதிய அம்சங்கள் எப்போது வழங்கப்படும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

    மெட்டா நிறுவனம் டுவிட்டர் தளத்துக்கு போட்டியாக உருவாக்கி இருக்கும் புதிய செயலி தான் திரெட்ஸ். இன்ஸ்டாகிராமை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய திரெட்ஸ் செயலி அறிமுகமானது முதலே அதிகளவு டவுன்லோட்களை கடந்து வருகிறது.

    தற்போது திரெட்ஸ் ஆப்-இல் டெக்ஸ்ட் அப்டேட்கள், லைக், ரிப்ளை, ரி-போஸ்ட், ஷேர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. எனினும், திரெட்ஸ் ஆப்-இல் நேரடி குறுந்தகவல் செய்யும் வசதி இதுவரை வழங்கப்படவில்லை. விரைவில் இந்த நிலை மாறி, இந்த அம்சம் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

     

    கோப்புப் படம் 

    கோப்புப் படம் 

    இன்ஸ்டாகிராம் தலைமை செயல் அதிகாரி ஆடம் மொசெரி, திரெட்ஸ் ஆப்-இல் டைரக்ட் மெசேஜ்களை தற்போதைக்கு வழங்கும் திட்டம் இல்லை என்று முன்னதாக தெரிவித்து இருந்தார். சமூக வலைதள ஆய்வாளரான மேட் நவரா வெளியிட்டு இருக்கும் தகவல்களில், விரைவில் திரெட்ஸ் செயலியில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது.

    அதில், டிரென்ட்ஸ் அன்ட் டாபிக்ஸ் (Trends&Topics), இம்ப்ரூவ்டு சர்ச் (Improved Search) மற்றும் மெசேஜிங் (Messaging) போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், கிரியேட்டர்கள் வழங்கும் கருத்துக்களுக்கு ஏற்ப அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    அந்த வகையில், திரெட்ஸ் செயலியில் குறுந்தகவல் அம்சம் வழங்க கோரி ஏராளமான கோரிக்கைகள் எழுந்து இருக்கும் என்று தெரிகிறது. புதிய அம்சங்கள் எப்போது திரெட்ஸ் செயலியில் வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • குறிப்பிட்ட ஊழியர்கள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது.
    • ஊழியர்கள் தங்களின் சொந்த தேவைக்காக ஆப்பிள் நிறுவன சாதனங்களை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

    அரசு துறை பணிகளுக்கு வெளிநாட்டு சாதனங்களை சார்ந்து இருப்பதை தடுக்கும் வகையில், அரசு அதிகாரிகள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த ரஷியா அதிரடி தடை விதித்துள்ளது. திங்கள் கிழமை முதல் அரசு அதிகாரிகள் ஆப்பிள் நிறுவன ஐபோன் மற்றும் இதர சாதனங்களை பயன்படுத்தக் கூடாது என்று ரஷிய வர்த்தக துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ரஷியாவின் தொலை தொடர்பு, அரசு ஊடகத் துறை என்று அரசு துறையை சேர்ந்த அனைத்து நிறுவன ஊழியர்களுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும். ஏற்கனவே குறிப்பிட்ட சில நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது இந்த பட்டியலில் அனைத்து அரசு அதிகாரிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

     

    அரசு பணிகளை மேற்கொள்வதற்காக ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்த அரசு தடை விதித்து இருக்கிறது. இதன் காரணமாக அரசு அதிகாரிகள் அலுவல் பூர்வ தகவல் பரிமாற்றத்தை தவிர்த்து, தங்களின் சொந்த தேவைக்காக ஆப்பிள் நிறுவன சாதனங்களை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

    அமெரிக்க உளவு நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை கொண்டு உளவு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக, ரஷியாவின் ஃபெடரல் பாதுகாப்பு நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மிக கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருந்தது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது அரசு ஊழியர்கள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    நேட்டோ நாடுகளில் வசிக்கும் ரஷிய அதிகாரிகள் பயன்படுத்தும் ஐபோன்களில் பிரத்யேக உளவு மென்பொருள் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருந்ததாக ஃபெடரல் பாதுகாப்பு நிறுவனம் குற்றம்சாட்டி இருந்தது. ஆப்பிள் நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்து இருப்பதோடு, பயனர் தனியுரிமையை பாதுகாப்பதில், மிக கடுமையாகவும், கவனமாகவும் செயல்பட்டு வருவதாக தெரிவித்து இருக்கிறது.

    • ஹானர் பிரான்டு இந்திய சந்தையில் ரி-என்ட்ரி கொடுக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
    • மாதவ் சேத் இந்தியாவில் ஹானர் பிரான்டுக்கு தலைவர் பதவியை ஏற்க இருப்பதாக தகவல்.

    ஹூவாய் நிறுவனத்தின் துணை பிரான்டாக 2013-ம் ஆண்டு துவங்கப்பட்டது தான் ஹானர். இந்திய சந்தையில் 2014 ஆண்டு களமிறங்கிய ஹானர் பிரான்டு குறைந்த விலை மற்றும் காசுக்கு ஏற்ற சாதனங்களை வழங்கியதன் மூலம் மிக விரைவில் அதிக பிரபலம் அடைந்தது. எனினும், 2020 ஆண்டு ஹானர் தனது இந்திய வியாபாரத்தை நிறுத்தி விட்டது.

    முன்னதாக ஹானர் 9X ப்ரோ, ஹானர் 9A மற்றும் ஹானர் 9S போன்ற ஸ்மார்ட்போன்களை ஹானர் பிரான்டு அறிமுகம் செய்து இருந்தது. பிறகு அமெரிக்க அரசு ஹூவாய் நிறுவனத்தின் மீது பிறப்பித்த கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, ஹூவாய் நிறுவனம் தனது ஹானர் பிரான்டை சீன நிறுவனங்கள் ஒருங்கிணைந்த கூட்டமைப்பிடம் விற்றுவிட்டது.

     

    ஹானர் பிரான்டு சீனா மற்றும் சில சர்வதேச சந்தைகளில் தொடர்ந்து வியாபார பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து விலகி இருந்த போதிலும், ஹானர் பிரான்டு தொடர்ச்சியாக ஃபிட்னஸ் டிராக்கர் மற்றும் டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்து வந்தது.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஹானர் பிரான்டு இந்திய சந்தையில் ரி-என்ட்ரி கொடுக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஹானர் பிரான்டிங் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் மாடல் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னதாக இணையத்தில் வெளியாகி இருந்த தகவல்களின் படி ரியல்மி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் இந்தியாவில் ஹானர் பிரான்டுக்கு தலைவர் பதவியை ஏற்க இருப்பதாக கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பிரபல டிப்ஸ்டர் முகுல் ஷர்மா வெளியிட்டு இருக்கும் தகவல்களில், டிரேட்மார்க் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.

    டிரேட்மார்க் படங்களில், நிறுவனம் "ஹானர் ஃபார் நைட்ஸ்" (Honor For Knights) என்ற பெயர் கொண்டிருக்கிறது. இத்துடன் புதிய நிறுவனம் மொபைல் போன் மற்றும் அக்சஸரீக்கள் தொடர்பான வியாபார பணிகளை மேற்கொள்ள இருப்பதாக அதன் விவரகுறிப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன், அதன் உரிமையாளராக மாதவ் சேத் பெயர் இடம்பெற்று உள்ளது.

     

    இதுதவிர மாதவ் சேத் டுவிட்டர் மற்றும் லின்க்டுஇன் போன்ற வலைதள பயோ பிரிவில் நைட் எப்போது வரப் போகிறது, "When is the KNIGHT Coming?" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இவற்றை வைத்தே மாதவ் சேத் தலைமையில் புதிய ஹானர் பிரான்டு இந்தியாவில் களமிறங்க இருப்பதை நெட்டிசன்கள் கிட்டத்தட்ட உறுதியான தகவலாக எடுத்துக் கொண்டுள்ளனர்.

    டிப்ஸ்டர் முகுல் ஷர்மா வெளியிட்டு இருக்கும் தகவல்களில், ஹானர் பிரான்டு இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்க இருப்பதாகவும், இதன் புதிய ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ரி-என்ட்ரிக்காக ஹானர் அறிமுகம் செய்ய இருக்கும் முதல் ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் மர்மமாகவே உள்ளன.

    • அமேசான் பிரைம் சந்தா ஒரு மாதத்திற்கான கட்டணம் ரூ. 299 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    • சிறப்பு விற்பனையில் மின்சாதன பொருட்களுக்கு அதிக தள்ளுபடி வழங்கப்பட்டு இருக்கிறது.

    அமேசான் பிரைம் டே சேல் 2023 பிரைம் டே சேல் துவங்கி நடைபெற்று வருகிறது. அமேசான் பிரைம் சந்தா வைத்திருப்போர், இந்த சிறப்பு விற்பனையில் ஏராளமான பொருட்களுக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இன்று (ஜூலை 15), நாளை (ஜூலை 16) அமேசான் பிரைம் டே சேல் பிரைம் சந்தா வைத்திருப்போருக்கு நடைபெற்று வருகிறது.

    இந்த சிறப்பு விற்பனையில் மின்சாதன பொருட்களான ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி, வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ஸ்மார்ட் சாதனங்களுக்கு அதிக தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ஐபோன் 14 மாடலின் விலை ரூ.65 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இத்துடன் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு, ஐசிஐசிஐ டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     

    தற்போது துவங்கி இருக்கும் விற்பனை 48 மணி நேரம் மட்டுமே நடைபெறுகிறது. பிரைம் சந்தா சேவையை பெறாதவர்கள், தற்போது அமேசான் பிரைம் சேவையை பெற்று, விரும்பிய பொருட்களை சலுகை விலையில் வாங்கிட முடியும். அமேசான் பிரைம் சந்தா ஒரு மாதத்திற்கான கட்டணம் ரூ. 299 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மூன்று மாதத்திற்கான அமேசான் பிரைம் சந்தா கட்டணம் ரூ. 599, ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தாவுக்கான கட்டணம் ரூ. 1,499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முதல் முறை அமேசான் பிரைம் சந்தாவில் இணைய இருப்பவர்கள், ஒரு மாத காலத்திற்கு சோதனை அடிப்படையில் இலவசமாக வழங்கப்படுகிறது.

    ஸ்மார்ட்போனிற்கான சலுகை விவரங்கள்:

    அமேசான் பிரைம் டே சேல் விற்பனையின் போது ஐபோன் 14 மாடலுக்கு ரூ. 65 ஆயிரத்து 999 என்று குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஐபோன் 14 மாடல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ. 79 ஆயிரத்து 900 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய விலை குறைப்பு மட்டுமின்றி, எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு, ஐசிஐசிஐ டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஐபோன் மட்டுமின்றி ஐகூ நியோ 7 ப்ரோ 5ஜி, ஒன்பிளஸ் நார்டு 3 5ஜி, ரியல்மி நார்சோ 60 5ஜி மற்றும் சாம்ங் கேலக்ஸி M34 5ஜி மாடல்களுக்கும் விலை குறைப்பு, சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவை மட்டுமின்றி பல்வேறு இதர மாடல்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ×