என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போனின் லைவ் படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அதன்படி புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாட் டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் கட்-அவுட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

    புது ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் 9 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 9இ போன்ற மாடல்களும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடலில் வித்தியாசமான கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. இதில் மூன்று கேமரா சென்சார்களும், பிளாஷ் யூனிட் கேமரா மாட்யூலினுள் வழங்கப்படுகிறது.

     ஒன்பிளஸ் 8டி

    இத்துடன் புது ஸ்மார்ட்போனில் வித்தியாசமான ஒன்பிளஸ் லோகோ காணப்படுகிறது. இது ப்ரோடோடைப் யூனிட் என்பதால் இந்த லோகோ வழங்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தோற்றத்தில் ஸ்மார்ட்போனின் முன்புறம் ஒன்பிளஸ் 8டி போன்றே காட்சியளிக்கிறது.

    புது ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஸ்ரீஷ் ரேட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஹெச்டிஆர் வசதி, 4500 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படலாம் என தெரிகிறது.
    ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    புது சலுகையின் படி ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஹெச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1250 வரை சேமிக்க முடியும். இந்த சலுகை சியோமி நிறுவன வலைதளத்தில் மட்டும் வழங்கப்படுகிறது. 

    ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை அதன் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 16,999 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 FHD+ LCD டாட் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
    - அட்ரினோ 618 GPU
    - 6 ஜி.பி. / 4 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
    - 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
    - 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.89
    - 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
    - 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ்
    - 2 எம்.பி. டெப்த் சென்சார்
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டூயல் மைக்ரோபோன்
    - ஸ்பிலாஷ் ப்ரூஃப் (P2i கோட்டிங்)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, வோ வைபை, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 5020 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அரோரா புளூ, ஷேம்பெயின் கோல்டு, கிளேசியர் வைட் மற்றும் இன்டர்ஸ்டெல்லார் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 

    குறு வீடியோ செயலியான டப்ஸ்மாஷ்ஐ ரெடிட் விலைக்கு வாங்கி இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆன்லைன் தளமான ரெடிட் வீடியோ பகிரும் செயலியான டப்ஸ்மாஷை விலைக்கு வாங்கி இருக்கிறது. வீடியோ தளத்தை ரெடிட் எவ்வளவு தொகைக்கு வாங்கி இருக்கிறது என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.  

    ஒப்பந்தத்தின் பிறகும் டப்ஸ்மாஷ் தனது பிளாட்பார்ம் மற்றும் பிராண்டிங்கில் மாற்றம் செய்யாது. ரெடிட் நிறுவனம் டப்ஸ்மாஷ் குழுவை ஒருங்கிணைத்து தற்போதுள்ள டப்ஸ்மாஷ் அனுபவத்தை மாற்றும் பணிகளில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது.

     டப்ஸ்மாஷ்

    ரெடிட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் படி டப்ஸ்மாஷ் இணை நிறுவனர்களுடன் ஒட்டுமொத்த குழுவும் ரெடிட் உடன் இணைகிறது. டப்ஸ்மாஷ் வித்தியாசமான வீடியோ டூல்கள் ரெடிட் தளத்தில் ஒருங்கிணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இதன் மூலம் ரெடிட் பயனர்கள் தங்களின் கற்பனையை புதுவிதங்களில் வெளிப்படுத்த முடியும். டப்ஸ்மாஷ் தளத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் 100 கோடி வியூக்களை பெற்று வருகிறது.

    ரியல்மி பிராண்டின் புதிய வாட்ச் எஸ் சீரிஸ் மாடலின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    ரியல்மி நிறுவனம் வாட்ச் எஸ் மற்றும் வாட்ச் எஸ் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை இந்திய சந்தையில் டிசம்பர் 23 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பு ரியல்மி சமூக வலைதள பக்கங்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய வாட்ச் மாடல்களுடன் ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோ மாஸ்டர் எடிஷனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ரியல்மி பிராண்டு இந்த ஆண்டு பல்வேறு ஐஒடி சாதனங்களை அறிமுகம் செய்து இருக்கிறது. தற்சமயம் அணியக்கூடிய சாதனங்கள் பிரிவில் ரியல்மி கவனம் செலுத்துகிறது.

     ரியல்மி வாட்ச் எஸ்

    முன்னதாக ரியல்மி வாட்ச் எஸ் சீரிஸ் பாகிஸ்தானில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அம்சங்களை பொருத்துவரை இது அமேஸ்பிட் வெர்ஜ் லைட் மற்றும் இதர வாட்ச் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. ரியல்மி வாட்ச் எஸ் மாடலில் 1.3 இன்ச் வட்ட வடிவ டிஸ்ப்ளே, 360x360 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது.

    மேலும் இந்த வாட்ச் ஆட்டோ-பிரைட்னஸ் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது பெரும்பாலான குறைந்தவிலை ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் வழங்கப்படாத அம்சம் ஆகும். இத்துடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

    சாம்சங் நிறுவனம் அசத்தலான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்குவதற்கான காப்புரிமையை பெற்று இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் ப்ளிப் 5ஜி போன்றே காட்சியளிக்கும் புதிய ஸ்மார்ட்பஓனிற்கானகாப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் அளவில் பெரியதாகவும், பெரிய கவர் டிஸ்ப்ளே, அதிக கேமராக்கள் மற்றும் சிறப்பான ஹின்ஜ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இந்த விண்ணப்பத்தை சாம்சங் நிறுவனம் ஜூன் 2020 வாக்கில் சமர்பித்து இருக்கிறது. இது மடிக்கக்கூடிய எலெக்டிரானிக் சாதனம் எனும் பெயரில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த விண்ணப்பத்திற்கு டிசம்பர் 10 ஆம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஸ்மார்ட்போனில் மேம்பட்ட ஹின்ஜ் பிளெக்ஸ் மோட் வசதி மட்டுமின்றி ஜீரோ-கேப் வழங்கும் என கூறப்படுகிறது. இத்துடன் புகைப்படங்களை மூன்று பிரைமரி கேமரா மாட்யூல், எல்இடி பிளாஷ் வழங்கப்படுகிறது. மேலும் உள்புற டிஸ்ப்ளே பன்ச் ஹோல் வழங்கப்படாது என கூறப்படுகிறது.

    முன்னதாக சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் போல்டு 2 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் கவர் ஸ்கிரீன், 7.6 இன்ச் ஸ்கிரீனுடன் அறிமுகம் செய்தது. இது சாம்சங் நிறுவனத்தின் மூன்றாவது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகும்.
    சாம்சங் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட கேலக்ஸி சாதனங்களில் கேமிங் அனுபவத்தை மேம்படுத்த புது செயலியை வெளியிட்டு உள்ளது.

    சாம்சங் நிறுவனம் கேம்டிரைவர் எனும் புது செயலியை வெளியிட்டு இருக்கிறது. இது தேர்வு செய்யப்பட்ட கேலக்ஸி சாதனங்களில் கேமிங் அனுபவத்தை மேம்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    சாம்சங் கேம்டெவ் திட்டத்தின் கீழ் இந்த செயலி அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கும் சாம்சங் கேமிங் அனுபவத்தை மேம்படுத்த அறிவித்து இருக்கும் செயலி, மொபைலில் கேமிங் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களை கவரும்.

     சாம்சங் கேம்டிரைவர்

    தற்சமயம் கேலக்ஸி எஸ்20 அல்லது நோட் 20 சாதனங்களை பயன்படுத்துவோர் கூகுள் பிளே அல்லது சாம்சங் கேலக்ஸி ஸ்டோரில் இருந்து கேம்டிரைவர் செயலியை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இந்த செயலி கூகுள், ஏஆர்எம் மற்று்ம குவால்காம் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    தற்சமயம் கால் ஆப் டியூட்டி மொபைல் மற்றும் போர்ட்நைட் போன்ற கேம்களை புதிய கேம்டிரைவர் செயலி சப்போர்ட் செய்கிறது. இந்த செயலி கிராபிக்ஸ் திறனை மொபைலில் மேம்படுத்தி வழங்குவதால், மொபைல் கேமர்களுக்கு இது சிறப்பான அனுபவத்தை வழங்கும்.
    அமேசான் வலைதளத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.


    அமேசான் ஆன்லைன் தளத்தில் ஆப்பிள் டேஸ் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஐபோன் 11 சீரிஸ், ஐபோன் 7 மற்றும் இதர ஆப்பிள் சாதனங்களுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    அமேசானின் ஆப்பிள் டேஸ் சிறப்பு விற்பனை டிசம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த விற்பனையின் போது ஐபோன் 11 மாடல் ரூ. 51,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

     ஐபோன் 11

    மேலும் இதுவரை இல்லாத வகையில் ஐபோன் 7 மாடல் ரூ. 23,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் மட்டுமின்றி ஐபேட் மினி வாங்குவோருக்கு ரூ. 5 ஆயிரம் சேமிப்பு மற்றும் ரூ. 3 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது. 

    இதேபோன்று மேக்புக் ப்ரோ மாடலுக்கும் ரூ. 6 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுவும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. 

    சியோமி நிறுவனம் ரோலபில் ஸ்மார்ட்போன் உருவாக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    சியோமி நிறுவனம் ரோலபில் ஸ்மா்ட்போனிற்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருந்தது. இந்த விண்ணப்பம் அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் கடந்த ஆண்டு சமர்பிக்கப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் இருந்து டிஸ்ப்ளேவை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டது ஆகும்.

    இந்த காப்புரிமை 'Terminal with flexible screen' எனும் தலைப்பில் சமர்பிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அனுமதி 2020, அக்டோபர் 29 ஆம் தேதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது சர்வதேச காப்புரிமை அலுவலக தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

    காப்புரிமை விவரங்களின் படி இந்த சாதனம் ரோலபில் பிளெக்சிபில் டிஸ்ப்ளே, பின்புறம் இரண்டாவது டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இதில் வழங்கப்படும் ரோலபில் ஸ்கிரீனை அகல வாக்கில் 200 சதவீதம் வரை நீட்டிக்க முடியும்.
     
    முன்னதாக முன்புறம் சுழலும் வகையில் குவாட் கேமரா சென்சார் கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை சியோமி பெற்று இருந்தது. இதுதவிர உள்புறமாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை சீனாவில் பெற்று இருக்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இம்முறை இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பிரவுசர் பென்ச்மார்க் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    தற்போதைய தகவல்களின் படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் SM-A526B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. பெரும்பாலும் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ52 ஜி என்றே அழைக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இதே மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருந்தது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 6 ஜிபி ரேம், பன்ச் ஹோல் டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் சென்சார், டெப்த் சென்சார் மற்றும் மேக்ரோ சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்புறம் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.  
    சாம்சங் நிறுவனம் 110 இன்ச் அளவில் மைக்ரோ-எல்இடி டிவி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் 110 இன்ச் மைக்ரோ-எல்இடி டிவியை அறிமுகம் செய்து உள்ளது. தற்சமயம் இந்த பிரமாண்ட டிவி மாடல் கொரிய சந்தையில் பிரீ-சேல் செய்யப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு வாக்கில் இந்த டிவி சர்வதேச சந்தையில் அறிமுகமாக இருக்கிறது.

    முன்னதாக 2018 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் சாம்சங் நிறுவனம் 146 இன்ச் அளவில் தி வால் எனும் டிவியை அறிமுகம் செய்து இருந்தது. எனினும், இது மாட்யூலர் வடிவில் பிரத்யேகமாக இன்ஸ்டால் செய்யக்கூடிய ஒன்றாக இருந்தது. புதிய 110 இன்ச் மாடல் வழக்கமான டிவி போன்று எளிதில் இன்ஸ்டால் செய்ய முடியும்.

    புதிய 110 இன்ச் மைக்ரோஎல்இடி டிவியில் மைக்ரோமீட்டர் அளவு கொண்ட எல்இடி லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் உள்ள மைக்ரோ-எல்இடி-க்கள் தரமான பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இது நீண்டகாலம் உழைக்கும் என சாம்சங் தெரிவித்து உள்ளது.

    மேலும் இந்த டிவி 4K HDR தரவுகளை இயக்கும் வசதி கொண்டுள்ளது. இதன் டிஸ்ப்ளேவில் இருந்து பிளாக் மேட்ரிக்ஸ் மற்றும் பெசல்கள் கழற்றப்பட்டுவிட்டதாக சாம்சங் தெரிவித்து உள்ளது. இதில் உள்ள மல்டி-வியூ அம்சம் கொண்டு ஒரே சமயத்தில் 55 இன்ச் அளவில் நான்கு வெவ்வேறு தரவுகளை பார்க்க முடியும்.

    இந்த டிவி 5.1 சேனல் சவுண்ட் வசதி கொண்டிருக்கிறது. 110 இன்ச் மைக்ரோ-எல்.இ.டி. டிவி மாடல் விலை 156,400 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 1.15 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
    உலகில் முதல்முறையாக பிஎஸ்என்எல் வழங்கும் அசத்தல் சேவை பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    பிஎஸ்என்எல் மற்றும் ஸ்கைலோடெக் இந்தியா நிறுவனங்கள் இணைந்து உலகில் முதல்முறையாக செயற்கைக்கோள் சார்ந்த இணைய சேவையை இந்தியாவில் வழங்குகிறது. 

    இந்த சேவையின் மூலம் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பம் கொண்டு இந்திய கடல் பகுதிகள், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி மற்றும் குஜராத் முதல் வட கிழக்கு இந்திய எல்லைகளுக்குள் சீரான இணைய வசதி வழங்கப்பட இருக்கிறது.

     பிஎஸ்என்எல்

    தற்சமயம் இந்த சேவை கனவரக வாகனங்கள், வணிக வாகனங்கள், ரெயில்வே மற்றும் மீன்படி படகுகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய தொழில்நுட்பம் செல்லுலார் கிரேடு ஹார்டுவேர் கொண்டு தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள இருக்கிறது.

    புதிய தொழில்நுட்பத்தை கொண்டு அதிக தரமான சேவையினை மிகவும் குறைந்த கட்டணத்தில் வழங்க முடியும் என ஸ்கைலோடெக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் இந்தியா முழுக்க இணைய சேவையை அனைவருக்கும் வழங்க முடியும்.
    பேஸ்புக் மீது அமெரிக்காவில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட விவகாரத்தில் அந்நிறுவன அதிகாரி பதில் அளித்து இருக்கிறார்.


    உலகின் பிரபல சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் மீது அமெரிக்காவில் 45 மாகாணங்களில் அரசு வக்கீல்கள் வழக்குகளை தொடர்ந்துள்ளனர். பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க அரசு எடுத்துள்ள மிக முக்கியமான சட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

    தனது போட்டி நிறுவனங்களை வாங்குவதற்கும், போட்டிகளை தடுப்பதற்கும் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் பேஸ்புக் நிறுவனம் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஆகியவற்றை சொந்தமாக வாங்கி நிர்வகித்து வரும் இந்த நிறுவனத்தை உடைப்பது குறித்து பரிசீலினை செய்ய அதிகாரிகள் கோர்ட்டுகளை கோரி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதுபற்றி பேஸ்புக் நிறுவனம் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் புகார்களை ஆய்வு செய்கிறோம். இதுபற்றி விரைவில் விரிவாக சொல்வோம். பெடரல் வர்த்தக ஆணையம் (எப்டிசி) எங்கள் கையகப்படுத்துதல்களை அனுமதித்துள்ளது” என கூறியது.

    பேஸ்புக், பேஸ்புக் மெசேஞ்சர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய அனைத்தும் பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமானவை, அவற்றை மாதம்தோறும் 100 கோடி பேருக்கு மேல் உபயோகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×