search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்
    X
    சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

    அசத்தலான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்க காப்புரிமை பெற்ற சாம்சங்

    சாம்சங் நிறுவனம் அசத்தலான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்குவதற்கான காப்புரிமையை பெற்று இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் ப்ளிப் 5ஜி போன்றே காட்சியளிக்கும் புதிய ஸ்மார்ட்பஓனிற்கானகாப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் அளவில் பெரியதாகவும், பெரிய கவர் டிஸ்ப்ளே, அதிக கேமராக்கள் மற்றும் சிறப்பான ஹின்ஜ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இந்த விண்ணப்பத்தை சாம்சங் நிறுவனம் ஜூன் 2020 வாக்கில் சமர்பித்து இருக்கிறது. இது மடிக்கக்கூடிய எலெக்டிரானிக் சாதனம் எனும் பெயரில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த விண்ணப்பத்திற்கு டிசம்பர் 10 ஆம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஸ்மார்ட்போனில் மேம்பட்ட ஹின்ஜ் பிளெக்ஸ் மோட் வசதி மட்டுமின்றி ஜீரோ-கேப் வழங்கும் என கூறப்படுகிறது. இத்துடன் புகைப்படங்களை மூன்று பிரைமரி கேமரா மாட்யூல், எல்இடி பிளாஷ் வழங்கப்படுகிறது. மேலும் உள்புற டிஸ்ப்ளே பன்ச் ஹோல் வழங்கப்படாது என கூறப்படுகிறது.

    முன்னதாக சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் போல்டு 2 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் கவர் ஸ்கிரீன், 7.6 இன்ச் ஸ்கிரீனுடன் அறிமுகம் செய்தது. இது சாம்சங் நிறுவனத்தின் மூன்றாவது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகும்.
    Next Story
    ×