என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
அசத்தலான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்க காப்புரிமை பெற்ற சாம்சங்
Byமாலை மலர்14 Dec 2020 4:25 AM GMT (Updated: 14 Dec 2020 4:25 AM GMT)
சாம்சங் நிறுவனம் அசத்தலான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்குவதற்கான காப்புரிமையை பெற்று இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் ப்ளிப் 5ஜி போன்றே காட்சியளிக்கும் புதிய ஸ்மார்ட்பஓனிற்கானகாப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் அளவில் பெரியதாகவும், பெரிய கவர் டிஸ்ப்ளே, அதிக கேமராக்கள் மற்றும் சிறப்பான ஹின்ஜ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இந்த விண்ணப்பத்தை சாம்சங் நிறுவனம் ஜூன் 2020 வாக்கில் சமர்பித்து இருக்கிறது. இது மடிக்கக்கூடிய எலெக்டிரானிக் சாதனம் எனும் பெயரில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த விண்ணப்பத்திற்கு டிசம்பர் 10 ஆம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஸ்மார்ட்போனில் மேம்பட்ட ஹின்ஜ் பிளெக்ஸ் மோட் வசதி மட்டுமின்றி ஜீரோ-கேப் வழங்கும் என கூறப்படுகிறது. இத்துடன் புகைப்படங்களை மூன்று பிரைமரி கேமரா மாட்யூல், எல்இடி பிளாஷ் வழங்கப்படுகிறது. மேலும் உள்புற டிஸ்ப்ளே பன்ச் ஹோல் வழங்கப்படாது என கூறப்படுகிறது.
முன்னதாக சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் போல்டு 2 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் கவர் ஸ்கிரீன், 7.6 இன்ச் ஸ்கிரீனுடன் அறிமுகம் செய்தது. இது சாம்சங் நிறுவனத்தின் மூன்றாவது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X