என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் எம்ஐ 10 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் வெளியிடப்படுகிறது.

    சியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு இரண்டு சாப்ட்வேர் அப்டேட் வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் பெரும்பாலான ரெட்மி மற்றும் எம்ஐ சாதனங்களுக்கு எம்ஐயுஐ 12 அப்டேட் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு புது அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருந்தன.

    தற்சமயம் சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் எம்ஐ 10 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்க துவங்கி உள்ளது. இதற்கான அறிவிப்பை சியோமி நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து இருக்கிறது.

     ரெட்மி டீசர்

    ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் கொரோனாவைரஸ் ஊரடங்கு அறிவிக்கும் முன் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இது தற்சமயம் வரை முதன்மையான நோட் சீரிஸ் மாடலாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் எம்ஐயுஐ 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் வெளியிடப்பட்டது. 

    ரெட்மி நோட் 9 ப்ரோ தவிர எம்ஐ 10 5ஜி ஸ்மார்ட்போனிற்கும் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது. இது சியோமியின் பிரீமியம் ஸ்மார்ட்போன் ஆகும். இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 44,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    இந்தியாவில் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் டிசம்பர் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என சியோமி நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பு ரெட்மி இந்தியா சமூக வலைதள கணக்கில் பதிவிடப்பட்டு இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் பவர் பேக்டு மாடலாக இருக்கும் என சியோமி குறிப்பிட்டுள்ளது.

    முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது.

     ரெட்மி 9 பவர்

    ரெட்மி இந்தியா பதிவுகளின் படி ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் டிசம்பர் 17 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கென பிரத்யேக வலைப்பக்கம் அமேசான் தளத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் 48 எம்பி பிரைமரி கேமரா, பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஹைரெஸ் ஆடியோ மற்றும் நான்குவித நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    போட் நிறுவனத்தின் புதிய எனிக்மா ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    போட் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் வாட்ச் எனிக்மா ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. முன்னதாக அக்டோபர் மாதத்தில் போட் ஸ்டாம் எனும் ஸ்மார்ட்வாட்ச் மாடலை போட் அறிமுகம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    புதிய போட் எனிக்மா ஸ்மார்ட்வாட்ச் 1.54 இன்ச் கலர் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, இதய துடிப்பு சென்சார், எஸ்பிஒ2 மாணிட்டரிங், 8 ஸ்போர்ட்ஸ் மோட்கள், 3 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது.

    இத்துடன் ப்ளூடூத் 4.2, அழைப்புகள், டெக்ஸ்ட் செடன்டரி அலெர்ட் வைப்ரேஷன், 24/7 இதய துடிப்பு சென்சார், SpO2 / இரத்தத்தின் காற்றோட்டத்தை டிராக் செய்யும் வசதி, உறக்கத்தை மாணிட்டர் செய்யும் வசதி, 8 விதமான ஸ்போர்ட்ஸ் மோட், ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    வாட்டர் ரெசிஸ்டண்ட் (3ATM / 30 meters) வசதி கொண்டிருக்கும் வாட்ச் எனிக்மா ரிமோட் கேமரா மற்றும் மியூசிக் கண்ட்ரோல் ஆப்ஷன் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 230 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    போட் வாட்ச் எனிக்மா மாடல் சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது.

    கூகுளில் பயனர்கள் அதிகம் தேடிய பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    கூகுள் நிறுவனம் தனது பாரம்பரிய வழக்கப்படி Year In Search 2020 பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பயனர்கள் கூகுளில் அதிகம் தேடிய தலைப்புகளை இந்தியா மற்றும் உலகளவில் பிரித்து பட்டியலிடும். 

    அந்த வகையில் இந்த கூகுள் தேடலில் ‘coronavirus’, ‘US election’, ‘IPL’ மற்றும் ‘PM Kisan Yojana’ உள்ளிட்ட தலைப்புகளை மக்கள் அதிகளவில் தேடியுள்ளனர். 

    இந்திய அளவில் பயனர்கள் ஐபிஎல், கொரோனாவைரஸ், அமெரிக்க தேர்தல் முடிவுகள் உள்ளிட்ட தலைப்புகளில் அதிகளவு தேடியுள்ளனர். இதைத் தொடர்ந்து பிரதான் மந்த்ரி கிசான் சம்மன் நிதி திட்டம் பற்றியும் தேடி இரு்கின்றனர். 

    இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட பட்டியல்

    - இந்திய பிரீமியர் லீக்
    - கொரோனாவைரஸ்
    - அமெரிக்க தேர்தல் முடிவுகள்
    - பிரதமர் கிசான் யோஜனா
    - பீகார் தேர்தல் முடிவுகள்
    - டெல்லி தேர்தல் முடிவுகள்
    - தில் பெச்ரா
    - ஜோ பைடன்
    - லீப் நாள்
    - அர்னாப் கோஸ்வாமி

    உலகளவில் அதிகம் தேடப்பட்டவை

    - கொரோனாவைரஸ்
    - தேர்தல் முடிவுகள்
    - கோப் ப்ரியன்ட்
    - ஜூம்
    - ஐபிஎல்
    - இந்தியா v நியூ சிலாந்து
    - கொரோனவைரஸ் அப்டேட்
    - கொரோனாவைரஸ் சிம்ப்டம்ஸ்
    - ஜோ பைடன்
    - கூகுள் கிளாஸ்ரூம்

    ஒட்டுமொத்த பட்டியல் தவிர செய்தி நிகழ்வுகள், பிரபலங்கள் மற்றும் திரைப்படங்கள் போன்ற தலைப்புகளில் அதிகம் தேடப்பட்டவற்றையும் கூகுள் பட்டியலிட்டு உள்ளது. இத்துடன் How To மற்றும் What is போன்ற கேள்விகள் நிறைந்த தேடல்களும் இந்த ஆண்டு அதிகரித்து இருப்பதாக கூகுள் தெரிவித்து இருக்கிறது.

    சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆப்பிள் வழியில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

    சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் சார்ஜர் வழங்கப்படாது என கூறப்படுகிறது. பிரேசில் நாட்டு டெலிகாம் நிறுவன வலைதளத்தில் இருந்து லீக் ஆன விவரங்களில் இந்த தகவல் இடம்பெற்று இருந்ததாக தெரிகிறது.

    முன்னதாக ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன்களுடன் சார்ஜரை வழங்கவில்லை. இவ்வாறு செய்தால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்தது. ஐபோன் 7 சீரிஸ் துவங்கி ஹெட்போன் ஜாக்-ஐ ஆப்பிள் நீக்கியது குறிப்பிடத்தக்கது.

    அந்த வரிசையில் இந்த ஆண்டு சார்ஜர் இணைந்து கொண்டது. தற்சமயம் சாம்சங் நிறுவனமும் ஸ்மார்ட்போனுடன் சார்ஜரை வழங்காது என கூறப்படுகிறது. சார்ஜர் வழங்காத பட்சத்தில் சாம்சங் என்ன காரணத்தை தெரிவிக்கும் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி எஸ்21 மற்றும் கேலக்ஸி எஸ்21 பிளஸ் மாடல்களில் FHD+ ஸ்கிரீன் வழங்கப்படும் என்றும் இவை பிளாஸ்டிக் பாடி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    புதிய கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் SM-G991U எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வெளியீட்டின் போதே ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் லஹியானா எனும் குறியீட்டு பெயர் கொண்ட பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இந்த பிராசஸர் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் ஆக இருக்கும் என தெரிகிறது. புதிய ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற குவால்காம் ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு அறிமுகமான ஸ்னாப்டிராகன் 865 பிராசஸரின் மேம்பட்ட சிப்செட் ஆகும்.

    சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இது கேலக்ஸி எப்62 என அழைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

    தற்போதைய தகவல்களின் படி கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போன் கிளாஸி பினிஷ், சதுரங்க வடிவில் கேமரா மாட்யூல் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் பாலிகார்பனைட் பில்டு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதனை சாம்சங் கிளாஸ்டிக் என அழைக்கிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போனில் மூன்று அல்லது நான்கு கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம் என்றும் டிஸ்ப்ளேவினுள் அல்லது பக்கவாட்டில் கைரேகை சென்சார் மற்றும் டூயல் சிம் கார்டு வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இத்துடன் எக்சைனோஸ் 9825 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படலாம் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் உற்பத்தி பணிகள் நொய்டாவில் உள்ள ஆலையில் ஏற்கனவே துவங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
    வாட்ஸ்அப் செயலியில் ஷாப்பிங் செய்ய புது வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியை பயன்படுத்துவோருக்கு புதிய அம்சம் சேர்க்கப்பட்டு உள்ளது. இது ஷாப்பிங் அனுபவத்தை மேலும் எளிமையாக்குகிறது. கொரோனா தொற்று காலக்கட்டத்தில் டிஜிட்டல் சேவைகள் பல்வேறு துறைகளிலும் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

     வாட்ஸ்அப்

    அந்த வகையில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் புதிதாக கார்ட்ஸ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த அம்சத்தில் பயனர்கள் பல்வேறு பொருட்களை ஒரே சமயத்தில் ஒற்றை மெசேஜ் மூலம் ஆர்டர் செய்ய முடியும். இதன் மூலம் வியாபாரம் செய்வோர் ஆர்டர் விவரங்களை சரியாக கண்காணிக்க முடியும்.

    `ஆடை விற்பனையகம், உணவகம் போன்ற வியாபாரங்களுக்கு புதிய கார்ட்ஸ் அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்' என வாட்ஸ்அப் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில் தெரிவித்து இருக்கிறது. புதிய கார்ட்ஸ் அம்சத்திற்கான அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது. 

    சாம்சங் நிறுவனம் 600 எம்பி கேமரா சென்சார் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    சாம்சங் நிறுவனம் ISOCELL 600 எம்பி கேமரா சென்சாரை உருவாக்கி வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை வெளியாகி இருக்கும் ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சம் 108 எம்பி கேமரா சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் சாம்சங் புது சென்சார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    புதிய 600 எம்பி கேமரா சென்சார் 4கே மற்றும் 8கே ரெக்கார்டிங்கின் போதும் தெளிவான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்தகைய திறன் கொண்ட சென்சாரை உருவாக்க சாம்சங் இன்னும் பல்வேறு தடைகளை கடக்க வேண்டியுள்ளதாக தெரிகிறது.

    அந்த வகையில், இந்த சென்சார் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக மேலும் சில காலம் ஆகும் என்றே தெரிகிறது. சாம்சங் தற்சமயம் உருவாக்கி வரும் ISOCELL 600 எம்பி சென்சார் 1/0.57 இன்ச் அளவில் இருக்கும் என கூறப்படுகிறது. இது தற்போதைய சென்சார்களை விட அளவில் மிகப்பெரியது ஆகும்.

    சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களில் 108 எம்பி பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் சாம்சங் அடுத்த தலைமுறை பிளாக்ஷிப் மாடல்களில் 600 எம்பி கேமரா வழங்கப்படாது என்றே தெரிகிறது.
    பட்ஜெட் விலையில் புதிய மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புது ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 64 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், 6000 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் டர்போ பவர் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போனில் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், ஆண்ட்ராய்டு 10 மற்றும் மை யுஎக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP52), டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் மெட்டாலிக் சேஜ் மற்றும் எலெக்ட்ரிக் வைலட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் டிசம்பர் 15 ஆம் தேதி துவங்குகிறது.

    வேண்டுமென்றே செய்த காரியத்தால் சர்ச்சையில் சிக்கிய சீன நிறுவனம் என்ன செய்தது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.


    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோணி பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் வேண்டுமென்றே ட்ரோஜன் ஹோர்ஸ் குறியீடுகளை செலுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த செயலை சீன ஒழுங்குமுறை ஆணையம் கண்டறிந்து இருக்கிறது.

    ஸ்மார்ட்போன்களில் ட்ரோஜன் செலுத்தியதன் மூலம் சட்டவிரோதமாக பயனர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் வருவாய் ஈட்டும் முயற்சியில் ஜியோணி ஈடுபட்டு வந்திருக்கிறது. இதுபோன்ற ட்ரோஜன் ஹோர்ஸ் குறியீடுகள் சுமார் 2.6 கோடி ஸ்மார்ட்போன்களில் செலுத்தப்பட்டு இருக்கிறது.

    ஜியோணியின் தாய் நிறுவனமான ஷென்சென் ஷிபு டெக்னாலஜி கோ லிமிட்டெட் இந்த செயலை செய்ததாக கூறப்படுகிறது. டிசம்பர் 2018 முதல் அக்டோபர் 2019 வரையிலான காலக்கட்டத்தில் இந்த நிறுவனம் ஜியோணி ஸ்மார்ட்போன்களில் `ஸ்டோரி லாக் ஸ்கிரீன்' எனும் செயலியை இன்ஸ்டால் செய்தது.

    இந்த செயலி தேவையற்ற விளம்பரங்களை புகுத்தி, பயனர்களை நீண்ட நேரம் செயலியை பயன்படுத்த வைத்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வந்துள்ளது. இதுபோன்ற செயல் புல் மெத்தட் என அழைக்கப்படுகிறது. ட்ரோஜன் ஹோர்ஸ் அப்டேட் மூலம் ஜியோணி நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ. 31.5 கோடி வரை வருவாய் ஈட்டி இருக்கிறது.

    குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து சு லி, ஷூ யிங், ஜியா ஹென்குயிங் மற்றும் பான் குயி உள்ளிட்ட நிர்வாக அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு 3 முதல் 3.5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் இந்திய மதிப்பில் ரூ. 22,60,428 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    விவோ நிறுவனத்தின் புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    விவோ நிறுவனத்தின் வை51 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய விவோ வை51 ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    விவோ வை51 சிறப்பம்சங்கள்

    6.59 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே
    குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
    8 ஜிபி ரேம்
    128 ஜிபி மெமரி
    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    டூயல் சிம் ஸ்லாட்
    48 எம்பி பிரைமரி கேமரா
    8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
    2 எம்பி மேக்ரோ கேமரா
    16 எம்பி செல்பி கேமரா
    பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    5000 எம்ஏஹெச் பேட்டரி
    18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி

    புதிய விவோ வை51 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ. 17,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டைட்டானியம் சபையர் மற்றும் க்ரிஸ்டல் சிம்பனி நிறங்களில் கிடைக்கிறது.

    இந்தியாவில் ஒப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    இந்தியாவில் ஒப்போ எப்17 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1500 குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு ஆப்லைன் சந்தையில் அமலாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஒப்போ எப்17 ப்ரோ ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத வாக்கில் ரூ. 22,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    தற்சமயம் விலை குறைப்பின் படி இந்த ஸ்மார்ட்போன் ரூ. 21,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நாடு முழுக்க ஆப்லைன் விற்பனை மையங்களில் அமலாகி இருப்பதாக கூறப்படுகிறது.

     ஒப்போ எப்17 ப்ரோ

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ எப்17 ப்ரோ மாடலில் 6.43 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன், டூயல் பன்ச் ஹோல் அமைப்பில் 16 எம்பி + 2 எம்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

    இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மோனோ கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த கலர் ஒஎஸ் 7.2 ஒஎஸ், 4015 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 30 வாட் வூக் 4.0 பிளாஷ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
    ×