என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
ரியல்மி வாட்ச் எஸ் சீரிஸ் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு
Byமாலை மலர்14 Dec 2020 7:00 AM GMT (Updated: 14 Dec 2020 7:00 AM GMT)
ரியல்மி பிராண்டின் புதிய வாட்ச் எஸ் சீரிஸ் மாடலின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் வாட்ச் எஸ் மற்றும் வாட்ச் எஸ் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை இந்திய சந்தையில் டிசம்பர் 23 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பு ரியல்மி சமூக வலைதள பக்கங்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய வாட்ச் மாடல்களுடன் ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோ மாஸ்டர் எடிஷனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ரியல்மி பிராண்டு இந்த ஆண்டு பல்வேறு ஐஒடி சாதனங்களை அறிமுகம் செய்து இருக்கிறது. தற்சமயம் அணியக்கூடிய சாதனங்கள் பிரிவில் ரியல்மி கவனம் செலுத்துகிறது.
முன்னதாக ரியல்மி வாட்ச் எஸ் சீரிஸ் பாகிஸ்தானில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அம்சங்களை பொருத்துவரை இது அமேஸ்பிட் வெர்ஜ் லைட் மற்றும் இதர வாட்ச் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. ரியல்மி வாட்ச் எஸ் மாடலில் 1.3 இன்ச் வட்ட வடிவ டிஸ்ப்ளே, 360x360 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது.
மேலும் இந்த வாட்ச் ஆட்டோ-பிரைட்னஸ் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது பெரும்பாலான குறைந்தவிலை ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் வழங்கப்படாத அம்சம் ஆகும். இத்துடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X