search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dubsmash"

    இளம்பெண்களிடையே டப்ஸ்மாஷ் மோகம் அதிகரித்துள்ள நிலையில் அவர்களின் கவர்ச்சி நடனம், குத்தாட்டம் ஆடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. #Dubsmash
    சென்னை:

    ஆன்ட்ராய்டு செல்போன்களின் ஆதிக்கம் அதிகரித்த பின்னர் இளம்பெண்கள் பலர் அதில் மூழ்கியே கிடக்கிறார்கள்.

    செல்போனில் ‘வாட்ஸ்அப்’ வசதி வந்த பின்னர் பிடித்தவர்களோடு பேசி பொழுதை கழித்தும் வருகிறார்கள். சமீப காலமாக ‘டப்ஸ்மாஷ் மோகம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

    தங்களுக்கு பிடித்த சினிமா கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகளை போல வசனம் பேசி... வீடியோக்களை உருவாக்கி அதனை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு வருகிறார்கள். இது போன்ற வீடியோக்கள் ரசிக்கும் வகையில் சிரிக்க வைப்பதாகவே உள்ளது.

    ஆனால் இந்த டப்ஸ்மாஷ் மோகம் இளம்பெண்களை எல்லை மீறிப் போகச் செய்துள்ளது.

    தங்களை சினிமா கதாநாயகிகளாக நினைத்துக் கொண்டு அவர்களை போல அங்க அசைவுகளை வெளிப்படுத்தி கவர்ச்சி நடனம் ஆடி அதனை வீடியோவாக பதிவு செய்து பல பெண்கள் வெளியிட்டுள்ளனர். இது போன்ற வீடியோக்களை நடுத்தர குடும்ப பெண்களே நடித்துள்ளனர்.

    சினிமா நடிகைகள் போல சேலையை காற்றில் பறக்க விட்டும், இறுக்கமான உடைகளை அணிந்த படியும் இளம்பெண்கள் பலர் குத்தாட்டம் போடும் வீடியோக்களும் பரவி வருகிறது. மல... மல... பாடலுக்கு நைட்டி அணிந்தபடியே 2 பெண்கள் ஆடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதே போல சன்யாசம் போனவனும் சமயம் வந்தா சாமி இல்ல... சக்தி இருந்தா... என்று தொடங்கும் கிளு கிளுப்பான பாடலுக்கு பெண் ஒருவர் காட்டும் கண் இசைவு கவர்ச்சி நடிகைகளையே மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது.

    இப்படி பெண்களின் கவர்ச்சி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வரிசை கட்டி நிற்கும் வேளையில், முரட்டு பெண்கள் பலர் தங்களை தாதாக்களாக நினைத்துக் கொண்டு மிரட்டும் வீடியோக்களும் வெளியாகி உள்ளன.

    அது போன்ற பெண்கள் தொடையை தட்டியபடி கூலிங்கிளாஸ் அணிந்த நிலையில் சவால் விடும் காட்சிகள் கொடூர வில்லன்களின் நடிப்பையே மிஞ்சும் வகையில் உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு குன்றத்தூரில் 2 குழந்தைகளை கொன்ற அபிராமியின் டப்ஸ்மாஷ் வீடியோக்களும் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. #Dubsmash
    வீடியோகாலில் கள்ளக்காதலனுடன் நீண்ட நேர உரையாடிய கொலைகாரி அபிராமி, குறும்பு செய்த குழந்தைகளை சைக்கோ போல் துன்புறுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #KundrathurAbirami
    சென்னை:

    குன்றத்தூரைச் சேர்ந்த வங்கி ஊழியர் விஜயின் மனைவி அபிராமி (25). தனது 2 குழந்தைகளை பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து கொலை செய்த குற்றத்துக்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    அவருடன் கள்ளக்காதலன் சுந்தரம் (28) என்பவரும் கைதாகியுள்ளார். இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கள்ளக்காதலுக்காக ஒரு பெண் தனது 2 குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரக்கமுள்ள தாய் என்றால் பெற்ற குழந்தைகளை கொலை செய்ய மனம் வராது. ஆனால் அபிராமி தனது 2 குழந்தைகள் மீது வெறுப்புடன் இருந்ததால் தான் கொலை செய்யும் அளவுக்கு துணிந்து இருப்பதாக போலீசார் சந்தேகப்பட்டு அபிராமியின் நடவடிக்கைகள் குறித்து விசாரித்தனர்.

    அப்போது அபிராமி செல்போனுக்கு அடிமையானவர் என தெரியவந்தது. எப்போதும் செல்போனிலேயே மூழ்கி இருப்பார். படித்த முகவசீகரமான அபிராமி தன்னைத்தானே செல்போனில் படம் பிடித்து அழகுபார்ப்பார். ‘டப்ஸ் மாஸ்’ என்ற செயலி (ஆப்) செல்போனில் பிரபலமாகி வருகிறது.

    அதில் சினிமா வசனங்களுக்கு ஏற்பவும், பாடல்களுக்கு ஏற்பவும் நாம் பேசுவது, பாடுவது போல் பாவனை செய்து கொள்ளலாம். இன்றைய இளம் தலைமுறையினர் ‘டப்ஸ் மாஸ்’ பாவனையை மிகவும் ரசிப்பதுடன் அதை மற்றவர்களுக்கும் அனுப்பி மகிழ்கிறார்கள்.

    அபிராமியின் செல்போனை போலீசார் ஆராய்ந்த போது அவர் ‘டப்ஸ்மாஸ்’ அடிமை என தெரியவந்தது. அவர் தனது கள்ளக்காதலனுடன் வீடியோ காலில் நீண்ட நேரம் பேசி இருக்கிறார். அதில் ஒரு பகுதியை ‘டப்ஸ்மாஸ்’ ஆக மாற்றி தனது செல்போனில் சேமித்து வைத்து இருக்கிறார்.

    இதே போல் குழந்தைகளையும் பேச வைத்து இருக்கிறாள். இதில் குழந்தைகளும் அடிமைகளாகி தாய் பேசும் போது அவர்களும் குறுக்கே புகுந்து இடையூறு செய்து இருக்கிறார்கள்.

    இதனால் எரிச்சல் அடைந்து அபிராமி தனது குழந்தைகளை சத்தம் போட்டு மிரட்டுவாள். பல சமயம் பக்கத்து வீடுகளுக்கு கேட்கும் அளவுக்கு அவள் குழந்தைகளை சைக்கோ போல் கோபத்தின் எல்லைக்கே சென்று அடித்து அழ வைத்திருக்கிறார்.

    குழந்தைகளின் அழுகை சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் அபிராமிக்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள்.

    இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, அபிராமி தனது காதலனுடன் வீடியோகால் மூலம் அடிக்கடி பேசியிருக்கிறார். அதை அவர் தனது செல்போனில் பதிவு செய்தும் வைத்து இருக்கிறார். கணவர் வேலைக்கு சென்றபின் அவர் எப்போதும் செல்போனிலேயே மூழ்கி இருப்பது தெரிய வந்தது.

    அவர் கள்ளக்காதலனுடன் வீடியோவில் பேசும் போது, குழந்தைகள் குறுக்கிட்டால் அவர்களை கடுமையாக தாக்குவாள். அந்த அளவுக்கு கள்ளக்காதல் அவரை மாற்றி இருக்கிறது. ஒருமுறை குழந்தைகளை அவர் அடிப்பது குறித்து பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசிலும் புகார் செய்து இருக்கிறார்கள்.

    எப்போதும் தன்னைப் பிரபலப்படுத்திக் காட்ட நினைக்கும் அபிராமி தனது 2 குழந்தைகளை கொன்று அனைவரது கவனத்தை ஈர்த்து இருக்கிறார். இதுவும் ஒருவகையான சைக்கோத்தனம் தான் என்று தெரிவித்தனர். #KundrathurAbirami
    குன்றத்தூரில் 2 குழந்தைகளை கொன்ற தாய் அபிராமியின் டப் மாஷ் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோக்களை பார்த்த பலரும் அபிராமியை திட்டி தீர்க்கின்றனர். #KundrathurAbirami
    சென்னை:

    பெற்ற குழந்தைகளுக்கு பாலில் வி‌ஷம் கலந்து கொல்ல எப்படித்தான் மனம் வந்ததோ...? இந்த பாதகத்திக்கு என்று குன்றத்தூரில் 2 குழந்தைகளை கொன்ற அபிராமியை அனைவரும் திட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இதுதொடர்பாக பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொந்தளிப்புடன் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அபிராமி உற்சாகத்தோடு காதல் மொழி வசனம் பேசி வெளியிட்ட ‘டப் மாஷ்’ வீடியோக்கள் இப்போது வெளியாகி எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

    என்ன இந்த குரு... குரு... பார்வை என்று தொடங்கும் வீடியோவின் முடிவில் பேசும் ஆணின் குரல் இப்படி ஒலிக்கிறது. ஒருநாள் உனக்கு பஞ்சராகப் போகுது என்று ஆண் ஒருவர் அபிராமியை பார்த்து எச்சரிக்கிறார்.

    இன்னொரு வீடியோவில் அபிராமியிடம் வாலிபர் ஒருவர் ஐலவ்யூ கூறுவது போலவும்... எனக்கு உன்னை புடிக்கல, நீ எனக்கு அண்ணன் மாதிரி என்று அதற்கு அவர் பதில் கூறுவது போலவும் காட்சிகள் உள்ளன.

    உனக்கு என்னடா மரியாதை, புறம்போக்கு... டால்டா.. என்று வடிவேலுவை பார்த்து கதாநாயகி பேசும் வசனம் மிகவும் பிரபலம். அதுபோன்ற வீடியோவையும் அபிராமி வெளியிட்டுள்ளார்.

    என்னவளே... என்னவளே... எங்கிருக்கிறாய் நீதான் என்ற பாடலில் கண்களை மூடிவிட்டு ஒளிந்ததும் நீதான் என்ற பாடலில்...

    அருகில் வந்து அணைப்பதும், நீதான் என்று தான் பாடுவது போன்ற வீடியோவை அபிராமி வெளியிட்டுள்ளார்.

    இந்த வீடியோக்களில் அபிராமி கண்களை சிமிட்டி, உதட்டை கடித்து, சினிமா கதாநாயகியை போல நன்றாக நடித்துள்ளார்.

    இந்த வீடியோக்களை பார்த்தவர்கள் அபிராமியை மீண்டும் வசைபாட தொடங்கி உள்ளனர்.
    ×