search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 குழந்தைகளை கொன்ற கொடூர தாய் அபிராமியின் டப் மாஷ் வீடியோக்கள்
    X

    2 குழந்தைகளை கொன்ற கொடூர தாய் அபிராமியின் டப் மாஷ் வீடியோக்கள்

    குன்றத்தூரில் 2 குழந்தைகளை கொன்ற தாய் அபிராமியின் டப் மாஷ் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோக்களை பார்த்த பலரும் அபிராமியை திட்டி தீர்க்கின்றனர். #KundrathurAbirami
    சென்னை:

    பெற்ற குழந்தைகளுக்கு பாலில் வி‌ஷம் கலந்து கொல்ல எப்படித்தான் மனம் வந்ததோ...? இந்த பாதகத்திக்கு என்று குன்றத்தூரில் 2 குழந்தைகளை கொன்ற அபிராமியை அனைவரும் திட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இதுதொடர்பாக பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொந்தளிப்புடன் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அபிராமி உற்சாகத்தோடு காதல் மொழி வசனம் பேசி வெளியிட்ட ‘டப் மாஷ்’ வீடியோக்கள் இப்போது வெளியாகி எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

    என்ன இந்த குரு... குரு... பார்வை என்று தொடங்கும் வீடியோவின் முடிவில் பேசும் ஆணின் குரல் இப்படி ஒலிக்கிறது. ஒருநாள் உனக்கு பஞ்சராகப் போகுது என்று ஆண் ஒருவர் அபிராமியை பார்த்து எச்சரிக்கிறார்.

    இன்னொரு வீடியோவில் அபிராமியிடம் வாலிபர் ஒருவர் ஐலவ்யூ கூறுவது போலவும்... எனக்கு உன்னை புடிக்கல, நீ எனக்கு அண்ணன் மாதிரி என்று அதற்கு அவர் பதில் கூறுவது போலவும் காட்சிகள் உள்ளன.

    உனக்கு என்னடா மரியாதை, புறம்போக்கு... டால்டா.. என்று வடிவேலுவை பார்த்து கதாநாயகி பேசும் வசனம் மிகவும் பிரபலம். அதுபோன்ற வீடியோவையும் அபிராமி வெளியிட்டுள்ளார்.

    என்னவளே... என்னவளே... எங்கிருக்கிறாய் நீதான் என்ற பாடலில் கண்களை மூடிவிட்டு ஒளிந்ததும் நீதான் என்ற பாடலில்...

    அருகில் வந்து அணைப்பதும், நீதான் என்று தான் பாடுவது போன்ற வீடியோவை அபிராமி வெளியிட்டுள்ளார்.

    இந்த வீடியோக்களில் அபிராமி கண்களை சிமிட்டி, உதட்டை கடித்து, சினிமா கதாநாயகியை போல நன்றாக நடித்துள்ளார்.

    இந்த வீடியோக்களை பார்த்தவர்கள் அபிராமியை மீண்டும் வசைபாட தொடங்கி உள்ளனர்.
    Next Story
    ×