என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக அதேபோன்ற அம்சங்களை கொண்ட 5 மெசேஜிங் ஆப்ஸ் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.


    வாட்ஸ்அப் உலகின் பிரபலமான குறுந்தகவல் செயலியாக இருக்கிறது. எனினும், சமீபத்திய பிரைவசி பாலிசி மாற்றம் காரணமாக வாட்ஸ்அப் செயலி மீது பயனர்கள் அதிருப்தியில் உள்ளனர். புதிய பிரைவசி பாலிசிக்கு ஒப்புதல் அளிக்காத பட்சத்தில் செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில், வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம் என நினைப்பவர்கள் அந்த செயலிக்கு மாற்றாக அதே போன்ற அம்சங்கள் கொண்ட 5 மெசேஜிங் ஆப்ஸ் என்ன என்பதை தொடர்ந்து பார்க்கலாம்..,

    டெலிகிராம்

    டெலிகிராம்

    டெலிகிராம் ஆப் பல ஆண்டுகளாக இருந்து வரும் அசத்தலான ஒன்று ஆகும். இது வாட்ஸ்அப் செயலிக்கு சிறந்த மாற்றாக விளங்குகிறது. வாட்ஸ்அப் செயலி தற்சமயம் வழங்கும் பெரும்பாலான அம்சங்கள் இந்த செயலியிலும் கிடைக்கிறது. இந்த செயலி ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ், விண்டோஸ் போன், மேக்ஒஎஸ், லினக்ஸ் மற்றும் வெப் போன்ற தளங்களில் கிடைக்கிறது.

    சிக்னல்

    வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக கிடைக்கும் மற்றொரு சிறந்த செயலி சிக்னல். வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சரில் என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் சேவையை வழங்குவது சிக்னல் பவுன்டேஷன் நிறுவனம் தான். இதன் சொந்த படைப்பான சிக்னல் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. சிக்னல் செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் கிடைக்கிறது.

    டிஸ்கார்டு

    டிஸ்கார்டு

    கேமிங் மட்டுமின்றி டிஸ்கார்டு தளத்தில் சாட் அம்சமும் கிடைக்கிறது. இதை கொண்டு தனிப்பட்ட குறுந்தகவல், ஜிப் பைல்கள், புகைப்படங்கள் மற்றும் டாக்யூமென்ட் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் வாட்ஸ்அப் போன்றே வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி வழங்கப்படுகிறது. இந்த செயலி ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ், விண்டோஸ் போன், மேக்ஒஎஸ், லினக்ஸ் மற்றும் வெப் போன்ற தளங்களில் கிடைக்கிறது.

    வைபர்

    குறுந்தகவல் செயலிகளில் பிரபலமான ஒன்றாக வைபர் விளங்குகிறது. இந்த செயலியும் என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் வசதியை கொண்டிருக்கிறது. மேலும் வைபர் பயனர்கள் சர்வதேச அழைப்புகளை வைபர் செயலியை பயன்படுத்தாவர்களுக்கும் மேற்கொள்ளும் வசதி இதில் வழங்கப்படுகிறது.

    பிரிட்ஜிபை

    ஆப்லைனிலும் இயங்கும் குறுந்தகவல் செயலியாக பிரிட்ஜிபை (Bridgefy) இருக்கிறது. இணைய வசதி இல்லாத நேரத்திலும் சாட் செய்யும் வசதியை இந்த செயலி வழங்குகிறது. இது ப்ளூடூத் மெஷ் நெட்வொர்க் மற்றும் வைபை டைரக்ட் சார்ந்த நெட்வொர்க்கில் இயங்குகிறது. இதை கொண்டு அருகாமையில் உள்ள நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்பலாம். இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் இலவசமாக கிடைக்கிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் 2021 ஐபோன் எஸ்இ, ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடல்களின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனம் 2021 ஐபோன் எஸ்இ மற்றும் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடல்களை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ஜப்பான் நாட்டு வலைதளம் ஒன்றில் இருந்து வெளியாகி இருக்கிறது.

    இம்முறை வெளியீடு தவிர இரு சாதனங்கள் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனினும், இரு சாதனங்கள் பற்றிய தகவல்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. 

     ஐபோன் எஸ்இ

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்இ 2020 மாடலை அறிமுகம் செய்தது. முன்னதாக 2019 அக்டோபர் மாதத்தில் ஏர்பாட்ஸ் ப்ரோ வயர்லெஸ் இயர்போனினை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. 2020 ஐபோன் எஸ்இ மாடல் தோற்றத்தில் ஐபோன் 8 போன்றே காட்சியளிக்கிறது.

    இதன் அம்சங்கள் ஐபோன் 11 மாடலில் இருந்ததை போன்றே இருக்கிறது. புதிய ஐபோன் எஸ்இ வெளியானது முதல் இதற்கான பிளஸ் வேரியண்ட் ஐபோன் 8 பிளஸ் தோற்றத்தில் வெளியாகும் என பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    இதுவரை 2021 ஐபோன் எஸ்இ மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடல் பற்றி ஆப்பிள் சார்பில் எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. 
    2021 சிஇஎஸ் நிகழ்வில் நான்கு புது ஸ்மார்ட்போன்களை மோட்டோரோலா அறிமுகம் செய்து இருக்கிறது.


    2021 சிஇஎஸ் (சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா) நிகழ்வில் மோட்டோரோலா நிறுவனம் புது ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. 

    அதன்படி மோட்டோ ஜி சீரிசில் 2021 மோட்டோ ஜி பிளே, மோட்டோ ஜி பவர், மோட்டோ ஜி ஸ்டைலஸ் போன்ற மாடல்கள் இடம்பெற்று இருக்கிறது. மோட்டோரோலா ஒன் சீரிசில் மோட்டோரோலா ஒன் 5ஜி ஏஸ் மாடல் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 

    சிறப்பம்சங்களை பொருத்தவரை மோட்டோ ஜி பிளே 2021 மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 13 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.

    இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோ ஜி பிளே 2021 மாடல் மிஸ்டி புளூ மற்றும் பிளாஷ் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 12500 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     2021 மோட்டோ ஜி பிவர்

    மோட்டோ ஜி பவர் 2021 மாடலில் 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 3ஜிபி / 32 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 48 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 5000எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங், கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோ ஜி பவர் 2021 மாடல் குளோவிங் புளூ, போலார் சில்வர் மற்றும் பிளாஷ் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை இந்திய மதிப்பில் ரூ. 14600 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021 ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 678 பிராசஸர், 4ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 48 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி செல்பி கேமரா மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கிறது.

    இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021 மாடல் அரோரா பிளாக் மற்றும் அரோரா வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 22100 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மோட்டோரோலா ஒன் 5ஜி ஏஸ்

    மோட்டோரோலா ஒன் 5ஜி ஏஸ் மாடல் 6.7 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 750 ஜி பிராசஸர், 4ஜிபி / 64 ஜிபி மெமரி மற்றும், 6 ஜிபி / 128 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் 48 எம்பி + 8 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி செல்பி கேமரா மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் சார்ஜிங் கொண்டிருக்கிறது.

    பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மோட்டோரோலா ஒன் 5ஜி ஏஸ் மாடலிலும் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வொல்கானிக் கிரே மற்றும் பிராஸ்டெட் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 29300 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் பிட்னஸ் பேண்ட் அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் பிட்னஸ் பேண்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஒன்பிளஸ் பேண்ட் மாடலில் 1.1 இன்ச் AMOLED கலர் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 3 பிரத்யேக உடற்பயிற்சி மோட்கள், ஐபி 68 + 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் ரியல்-டைம் இதய துடிப்பு டிராக்கிங் வசதி, எஸ்பிஒ2 சென்சார் மற்றும் 14 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் 100 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.

     ஒன்பிளஸ் பேண்ட்

    ஒன்பிளஸ் பேண்ட் சிறப்பம்சங்கள்

    - 1.1 இன்ச் 126x294 பிக்சல் AMOLED கலர் டச் ஸ்கிரீன்  டிஸ்ப்ளே
    - நோட்டிபிகேஷன் வசதி
    - மியூசிக் கண்ட்ரோல், கேமரா ஷட்டர் கண்ட்ரோல்
    - இதய துடிப்பு சென்சார், எஸ்பிஒ2 மாணிட்டரிங்
    - ஆக்டிவிட்டி டிராக்கிங் மற்றும் ஸ்லீப் டிராக்கிங்
    - உடற்பயிற்சி மோட்கள்
    - 3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப்
    - ப்ளூடூத் 5
    - ஐபி68+ 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
    - 110 எம்ஏஹெச் பேட்டரி

    ஒன்பிளஸ் பேண்ட் மாடல் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஒன்பிளஸ் பேண்ட் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 அப்டேட் பெறும் விவோ ஸ்மார்ட்போன்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

    விவோ நிறுவனம் வி20 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து விவோ எக்ஸ்50 ப்ரோ மற்றும் வி20 ப்ரோ போன்ற மாடல்களுக்கு கடந்த மாதம் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்பட்டது.

    தற்சமயம் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 அப்டேட் பெறும் இதர விவோ ஸ்மார்ட்போன்கள் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

     விவோ

    அதன்படி இம்மாத இறுதியில் விவோ வி19, விவோ எக்ஸ்50 ஸ்மார்ட்போன்களுக்கும் மார்ச் மாத இறுதியில் விவோ வி17, வி17 ப்ரோ, வி15 ப்ரோ மற்றும் விவோ எஸ்1 போன்ற மாடல்களுக்கும் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.

    இதைத் தொடர்ந்து ஏப்ரல் மாத இறுதியில் விவோ எஸ்1 ப்ரோ, இசட்1எக்ஸ், இசட்1 ப்ரோ போன்ற மாடல்களுக்கும் ஜூன் மாத இறுதியில் விவோ வி15 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 அப்டேட் வழங்குவதாக விவோ நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    முதற்கட்டமாக பீட்டா அப்டேட் பேட்ச்களாக வெளியிடப்பட்டு அதன்பின் ஸ்டேபில் அப்டேட் வழங்கப்படும் என விவோ அறிவித்து உள்ளது. மேற்கண்ட பட்டியலில் விவோ வை சீரிஸ், யு சீரிஸ் மற்றும் சில வி சீரிஸ் மாடல்கள் இடம்பெறவில்லை. இவற்றுக்கு புது ஒஎஸ் அப்டேட் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
    வாட்ஸ்அப் செயலியில் மேற்கொள்ளப்படும் பிரைவசி விவகாரம் காரணமாக சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலிகள் டிரெண்ட் ஆகி வருகின்றன.


    வாட்ஸ்அப் செயலியில் புதிய பிரைவசி பாலிசி மாற்றம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக சிக்னல் செயலியை பயன்படுத்த எலான் மஸ்க் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

    பிரைவசி மாற்ற விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானதோடு சிக்னல் செயலியின் பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. சிக்னல் மட்டுமின்றி டெலிகிராம் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதகரிப்பதாக கூறப்படுகிறது.

     டெலிகிராம்

    இதனை உறுதிப்படுத்தும் வகையில், சிக்னல் செயலி இந்தியா, ஆஸ்த்ரியா, பின்லாந்து, ஜெர்மனி, ஹாங்காங் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற பகுதிகளில் ஆப்பிள் ஆப் ஸ்டோரின் முன்னணி இலவச செயலிகள் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது. 

    அதிகப்படியான டவுன்லோட்களில் சிக்னல் செயலியின் சர்வெர்கள் முடங்கும் நிலையும் ஏற்பட்டது. இதனால் பயனர்கள் சைன்-இன் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த தகவலை சிக்னல் தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறது.

    எலான் மஸ்க் மட்டுமின்றி ஆய்வாளரான எட்வர்ட் ஸ்னோடனும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்தார். மேலும் தான் சிக்னல் செயலியை பயன்படுத்தி வருவதாக தெகிவித்தார்.
    சாம்சங் நிறுவனத்தின் இரண்டு கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டு இருக்கிறது.


    இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு திடீர் விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது. அதன்படி சாம்சங் கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் மீண்டும் குறைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இவற்றின் விலை கடந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக அதிகரிக்கப்பட்டது. 

    பின் 2020 செப்டம்பர் மாதத்தில் ஒருமுறையும், அதன் பின் இரண்டாவது முறையாக இவற்றின் விலை குறைக்கப்பட்டது. அந்த வரிசையில் இரு ஸ்மார்ட்போன்களின் விலை மூன்றாவது முறையாக இந்திய சந்தையில் குறைக்கப்பட்டு இருக்கிறது. 

     கேலக்ஸி ஏ71

    புதிய விலை விவரங்கள்

    சாம்சங் கேலக்ஸி ஏ51 (6 ஜிபி + 128 ஜிபி) வேரியண்ட் ரூ. 20,999 
    சாம்சங் கேலக்ஸி ஏ51 (8 ஜிபி + 128 ஜிபி) வேரியண்ட் ரூ. 22,499 
    சாம்சங் கேலக்ஸி ஏ71 (8 ஜிபி + 128 ஜிபி) வேரியண்ட் ரூ. 27,499 

    இம்முறை இரு ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. மாற்றப்பட்ட புதிய விலை தற்சமயம் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பிரதிபலிக்கிறது. விரைவில் இது ப்ளிப்கார்ட், அமேசான் ஆன்லைன் தளங்கள் மற்றும் இதர ஆப்லைன் ஸ்டோர்களிலும் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    நோக்கியா 6.3 ஸ்மார்ட்போன் என கூறி புது நோக்கியா போன் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.


    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. புதிய ஸ்மார்ட்போன் நோக்கியா 6.3 மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த மாடலில் வாட்டர் டிராப் நாட்ச், குவாட் கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6.45 இன்ச் பிளாட் டிஸ்ப்ளே, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5 எம்எம் போர்ட், பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதன் பின்புறம் வட்ட வடிவ ஹவுசிங்கில் கேமரா சென்சார்கள் வழங்கப்படுகின்றன.

     நோக்கியா ஸ்மார்ட்போன்

    இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பவர் பட்டனில் பொருத்தப்படுகிறது. இதன் கீழ் வால்யூம் ராக்கர் வழங்கப்படுகிறது. இடதுபுறத்தில் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் வழங்கப்படுகிறது. இத்துடன் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் வழங்கப்படுகிறது.

    புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இது இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என்றும் கூறப்படுகிறது. 
    வாட்ஸ்அப் செயலியின் புதிய பிரைவசி பாலிசி பற்றி முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    வாட்ஸ்அப் செயலியின் பிரைவசி கொள்கைகள் மற்றும் பயன்பாட்டு விதிகளை மாற்றி அமைத்து இருக்கிறது. செயலியில் தனியுரிமை கொள்கை மாற்றப்படுவதை பயனர்களுக்கு பாப்-அப் மெசேஜ் மூலம் வாட்ஸ்அப் தெரிவித்தது. இதனை பலர் படிக்காமலேயே புதிய விதிகளுக்கு ஒப்புதல் அளிக்க Agree ஆப்ஷனை தேர்வு செய்து இருக்கின்றனர்.

    முந்தைய அப்டேட்கள் போன்று இல்லாமல், புது அப்டேட் பயனர்கள் அவசியம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். இதில் வாட்ஸ்அப் அதன் பயனாளிகள் தகவல்களை எப்படி கையாள்கிறது என்பது விவரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தொழில் நிறுவனங்கள் எப்படி பேஸ்புக் சேவைகளின் டேட்டாவை சேமிப்பது, பேஸ்புக்கின் மற்ற சேவைகளுடன் வாட்ஸ்அப் எப்படி ஒருங்கிணைந்து செயல்படும் என்ற விவரங்களும் இடம்பெற்று இருக்கின்றன.

    புதிய கொள்கை முறை பற்றி வாட்ஸ்அப் தனது வலைதள பக்கத்தில் விரிவாக குறிப்பிட்டு இருக்கிறது. அதன்படி முக்கிய மாற்றங்களில் ஒன்றாக மீடியா தரவுகள் எப்படி சர்வெர்களில் சேமிக்கப்படுகிறது என்ற விவரம் இடம்பெற்று உள்ளது. புதிய முறையில் தகவல் பார்வேர்டு செய்யப்படும்போது அதை எளிதில் வாட்ஸ்அப் சேமித்து கொள்ளும்.

     வாட்ஸ்அப்

    மேலும் பயனர் வாட்ஸ்அப் சேவையை எப்படி பயன்படுத்துகின்றனர், எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றார், எந்த மாதிரி சேவைகளை பயன்படுத்துகின்றனர், ஆன்லைனில் எந்தெந்த நேரத்தில் இருக்கிறார் என பல்வேறு தகவல்களை பட்டியலிட்டு இருக்கிறது. 

    இத்துடன் வாட்ஸ்அப் பேமண்ட் சேவையை இயக்கும் போது பரிமாற்ற விவரங்களான-  பேமண்ட் அக்கவுண்ட், பேமண்ட் முறை, வினியோக விவரம், பரிமாற்றம் செய்யப்படும் தொகை உள்ளிட்டவற்றை சேமித்து வைக்கும். பின் இவை பேஸ்புக்கின் மற்ற சேவைகளுடன் பகிரப்பட இருக்கிறது.

    புதிய கொள்கைகளுக்கு அனுமதி அளிக்காத பட்சத்தில் பயனர்கள், பிப்ரவரி 8 ஆம் தேதிக்கு பின் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். வாட்ஸ்அப் செயலி மாற்றங்களுக்கு பயனர்கள் மத்தியில் எதிர்ப்பு மனநிலை ஏற்பட்டு உள்ளது.

    பலர் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக சிக்னல், டெலிகிராம் போன்றவற்றை பயன்படுத்த போவதாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.  

    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எஸ்21 சீரிஸ் முன்பதிவு சலுகைகளுடன் துவங்கி இருக்கிறது.


    இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி உள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 3849 மதிப்புள்ள போன் கவர் இலவசமாக வழங்கப்படுகிறது. 

    முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மாடல்களை முன்பதிவு செய்வோருக்கு ஸ்மார்ட் டேக், கேலக்ஸி பட்ஸ் லைவ் போன்ற அக்சஸரீக்கள் வழங்கப்படும் என கூறப்பட்டது. கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா மாடலை முன்பதிவு செய்வோருக்கு ஸ்மார்ட் டேக் மற்றும் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ இலவசமாக வழங்கப்படும் என கூறப்பட்டது.

     சாம்சங்

    சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி கேலக்ஸி எஸ்21 முன்பதிவு செய்வோருக்கு கவர் இலவசமாக வழங்கப்படுகிறது. இதுதவிர கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா, கேலக்ஸி எஸ்21 பிளஸ் போன்ற மாடல்கள் பற்றி சாம்சங் தளத்தில் எந்த தகவலும் இடம்பெறவில்லை.

    கேலக்ஸி எஸ்21 முன்பதிவு செய்ய விரும்புவோர் ரூ.2  ஆயிரம் மதிப்புள்ள விஐபி பாஸ் வாங்க வேண்டும். இவர்களுக்கு கேலக்ஸி எஸ்21 வினியோகத்தில் முன்னுரிமை வழங்கப்படும். பின் ஸ்மார்ட்போன் வாங்கும் போது விஐபி பாஸ் பெற செலுத்திய ரூ. 2 ஆயிரம் கழிக்கப்படும்.

    சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கேலக்ஸி அன்பேக்டு 2021 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிகழ்வு ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
    வோடபோன் ஐடியா (வி) நிறுவனத்தின் பிரீபெயிட் சலுகைகளில் இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது.


    இந்திய டெலிகாம் சந்தையில் குறைந்த விலையில் அதிக டேட்டா வழங்கும் வழக்கத்தை ரிலையன்ஸ் ஜியோ துவங்கி வைத்தது. எனினும், இந்த ஆண்டு இருமடங்கு டேட்டா பலன் வழங்கும் ஒற்றை நிறுவனமாக வோடபோன் ஐடியா இருக்கிறது.

    இந்த நிறுவனத்தின் பிரீபெயிட் சலுகைகளில் தேர்வு செய்யப்பட்ட மூன்று சலுகைகளுக்கு இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது. அதாவது வி ரூ. 299, ரூ. 449 மற்றும் ரூ. 699 சலுகைகளை ரீசார்ஜ் செய்வோருக்கு இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது.

     கோப்புப்படம்

    இந்த மூன்று சலுகைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. தற்சமயம் புது சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் தினமும் 4 ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும். கூடுதல் டேட்டா தவிர மூன்று சலுகை பலன்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    வி ரூ. 299 சலுகை பலன்களை பொருத்தவரை தினமும் 4 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ், வி மூவிஸ் & டிவி ஆப் பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 449 சலுகையில் இதே பலன்கள் 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 699 வி சலுகையில் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
    ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர் ஒஎஸ் 11 அப்டேட் பெறும் ஒப்போ ஸ்மார்ட்போன்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.


    ஒப்போ நிறுவனம் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர் ஒஎஸ்11 அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் பீட்டா மற்றும் அதிகாரப்பூர்வ வெர்ஷன்களை பெறும் ஸ்மார்ட்போன்களின் பெயர் இடம்பெற்று இருக்கிறது.

    மேலும் உலகின் எந்தெந்த பகுதிகளில் இந்த அப்டேட் வழங்கப்பட இருக்கிறது என்ற விவரங்களையும் ஒப்போ தெரிவித்து உள்ளது. படிப்படியாக வெளியிடப்படுவதால் ஒரே ஒப்போ போன் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த அப்டேட் கிடைக்க சிலகாலம் ஆகும் என தெரிகிறது.

     ஒப்போ

    ஒப்போ கலர்ஒஎஸ் 11 ஸ்டேபில் அப்டேட்

    ஒப்போ பைண்ட் எக்ஸ்2, பைண்ட் எக்ஸ்2 ப்ரோ, பைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஆட்டோமொபைல் லம்போர்கினி எடிஷன், ஒப்போ எப்17 ப்ரோ, ரெனோ 4எப், ஒப்போ ஏ93, ரெனோ 4 ப்ரோ 5ஜி, ரெனோ 4 ப்ரோ 4ஜி, ரெனோ 4 4ஜி, ரெனோ 4 லைட், ரெனோ 3 ப்ரோ 4ஜி, ரெனோ 3 4ஜி மற்றும் ஒப்போ ஏ72 உள்ளிட்ட மாடல்கள் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர்ஒஎஸ் 11 ஸ்டேபில் அப்டேட் பெற இருக்கின்றன.

     ஒப்போ

    ஒப்போ எப்11, ஒப்போ எப்11 ப்ரோ மற்றும் எப்11 ப்ரோ மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிடெட் எடிஷன் மாடல்களுக்கு இன்று முதல் இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் அப்டேட் வழங்கப்படுகிறது. இதேபோன்று ஒப்போ ஏ52, ஒப்போ ஏ9 மாடல்களுக்கும் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர்ஒஎஸ் 11 அப்டேட் வழங்கப்படுகிறது.

    ஜனவரி 26 ஆம் தேதி முதல் ரெனோ 2எப், ரெனோ 10எக்ஸ் ஜூம் மாடலுக்கும், ஒப்போ எப்15 மாடலுக்கு ஜனவரி 29 ஆம் தேதி முதல் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர்ஒஎஸ் 11 அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.
    ×