என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது.


    சியோமி இந்தியா நிறுவனம் இரண்டு புதிய ஆடியோ சாதனங்களை பிப்ரவரி 22 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இரு சாதனங்களும் இதுவரை இல்லாத வகையில் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் புதிய சவுண்ட் வேவ் வெளியிடப்பட இருப்பதாக சியோமி டீசரில் தெரிவித்து இருக்கிறது. இதற்கான டீசர்களில் இரண்டு இன்-இயர் ஹெட்செட் இடம்பெற்று இருக்கின்றன. எனினும், இவை வையர்டு அல்லது நெக்பேண்ட் ஹெட்செட் என எதுவாக இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

     சியோமி டீசர்

    சியோமி இந்திய தலைவர் மனு குமார் ஜெயின் இரண்டு புத்தம் புதிய ஆடியோ சாதனங்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். எனினும், இதுபற்றி வேறு எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் இன் நோட் 1 மாடலுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட் விவரங்களை பார்ப்போம்.


    இந்திய சந்தையில் நீண்ட இடைவெளிக்கு பின் மைக்ரோமேக்ஸ் சமீபத்தில் ரி-என்ட்ரி கொடுத்தது. அதன்படி மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இன் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
     
    அறிமுக நிகழ்விலேயே புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், சமீபத்திய இணைய உரையாடலின் போது மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் ஷர்மா இன் நோட் 1 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் ஏப்ரல் மாத வாக்கில் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் மைக்ரோமேக்ஸ் போரம்களில் ஆண்ட்ராய்டு 11 early access விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

     ஆண்ட்ராய்டு 11

    முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கு ஜனவரி 2021 அப்டேட் வழங்கப்பட்டு, EIS, RAW மோட் போன்ற அம்சங்கள், செல்பி கேமராவில் மேம்படுத்தல்கள் வழங்கப்பட்டன. இன் நோட் 1 ஸ்மார்ட்போனை தொடர்ந்து இன் 1பி மாடலுக்கும் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படும் என தெரிகிறது.

    இவைதவிர மைக்ரோமேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் பற்றிய கேள்விக்கும் ராகுல் ஷர்மா பதில் அளித்தார். அதன்படி, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் வயர்லெஸ் இயர்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். இரு சாதனங்களும் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம்.
    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இரண்டு புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.


    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 3.4 மற்றும் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஹெச்டி பிளஸ் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி,  மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், எப்எம் ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

    நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஹெச்டி பிளஸ் பன்ச் ஹோல் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்பி செல்பி கேமரா, 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி டெப்த், 2 எம்பி மேக்ரோ சென்சார் உள்ளன.

     நோக்கியா 5.4

    டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் நோக்கியா 5.4 மாடலில் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ், 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், எப்எம் ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, 4000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் ஜோர்டு, டஸ்க் மற்றும் சார்கோல் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உ்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் பிப்ரவரி 20 ஆம் தேதி துவங்குகிறது.

    நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் போலார் நைட் மற்றும் டஸ்க் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 4 ஜிபி ரேம் மாடல் விலை ரூ. 13,999 என்றும் 6 ஜிபி ரேம் மாடல் விலை ரூ. 15,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் பிப்ரவரி 17 ஆம் தேதி துவங்குகிறது.
    போக்கோ பிராண்டின் புதிய போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் முதல் விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது.


    போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை ரூ. 10,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற்றது.

    இந்தியாவில் நடைபெற்ற முதல் விற்பனையில் சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிக போக்கோ எம்3 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டதாக போக்கோ நிறுவனம் அறிவித்து உள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கான அடுத்த விற்பனை பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

     போக்கோ எம்3

    போக்கோ எம்3 சிறப்பம்சங்கள்

    - 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19.5:9 LCD ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
    - அட்ரினோ 610 GPU
    - 6 ஜிபி LPPDDR4x ரேம்
    - 64 ஜிபி (UFS 2.1) / 128 ஜிபி (UFS 2.2) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்பி கேமரா, f/2.05
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 6000 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    இந்திய சந்தையில் விரைவில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான சோதனை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்திய சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் 5ஜி சேவையை வழங்க தயாராகி வருகின்றன. இந்த நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்தியாவில் 5ஜி சேவைக்கான சோதனை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் துவங்கலாம் என கூறப்படுகிறது.

    5ஜி சோதனை குறித்து மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய்-க்கு வந்த 16 கோரிக்கைகள் பற்றி பாராளுமன்ற குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழு, இந்தியாவில் ஏன் இன்னும் 5ஜி சேவைக்கான சோதனை துவங்கப்படவில்லை என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

     கோப்புப்படம்

    டெலிகாம் நிறுவனங்களுக்கு இதுவரை 5ஜி ஸ்பெக்ட்ரம் வழங்கப்படாதது பற்றி பாராளுமன்ற குழு வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய சூழலில் ஸ்பெக்ட்ரம் அலைகற்றை வாங்கும் முறை முன்பை விட எளிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் 5ஜி சோதனைக்கான விண்ணப்பங்களில் கல்வி, ஆரோக்கியம், விவசாயம், பொது பாதுகாப்பு போன்ற பிரிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. நிதி துறையில் 5ஜி பயன்பாட்டுக்கு டிராய் ஏற்கனவே அனுமதி அளித்துவிட்டது. இதுகுறித்த பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது.
    சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 10 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரங்களை அறிவித்து இருக்கிறது.


    சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மார்ச் மாத வாக்கில் அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறது. முந்தைய ரெட்மி நோட் 9 சீரிஸ் போன்றே ரெட்மி நோட் 10 சீரிஸ் மாடல்களும் அமேசான், எம்ஐ ஆன்லைன் மற்றும் எம்ஐ ஸ்டோர் தளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

    இதற்கென ரெட்மி வெளியிட்டு இருக்கும் டீசரில் புதிய ஸ்மார்ட்போனின் கேமரா அதிகளவு அப்டேட் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களில் அதிக ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

     ரெட்மி நோட் 10 டீசர்

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் FHD+LCD ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 64 எம்பி பிரைமரி சென்சாருடன் குவாட் கேமரா சிஸ்டம், 5000 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.

    ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி மாடலில் அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முந்தைய நோட் 9 சீரிஸ் போன்றே ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்படுமா என்பது தற்சமயம் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
    கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து 100 செயலிகளை அதிரடியாக நீக்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து 100 செயலிகளை அதரடியாக நீக்கி இருக்கிறது. மத்திய அரசு உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. நீக்கப்பட்ட செயலிகள் கூகுள் விதிகளுக்கு புறம்பாக தனிநபர் விவரங்களை சேகரித்து, அவற்றை தவறாக கையாண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இவ்வாறு சேகரிக்கப்பட்ட விவரங்களை கொண்டு அச்சுறுத்தல் செய்தல், மக்களை பயமுறுத்துதல், தவறான வகையில் கடன்களை திரும்ப வசூலித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் கூகுள் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

     கூகுள் பிளே ஸ்டோர்

    தீங்கு விளைவிக்கும் செயலிகள் பற்றிய தகவல்களை மத்திய அமைச்சகம் சார்பில் கூகுள் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. மேலும் இவை கூகுள் விதிகளுக்கு புறம்பாக செயல்படும் வாய்ப்புகள் இருந்ததாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    மத்திய அரசு அளித்த தகவல்களின் அடிப்படையில் டிசம்பர் 2020 முதல் ஜனவரி 20, 2021 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 100 செயலிகளை கூகுள் நீக்கி இருக்கிறது. இதுபோன்ற நூற்றுக்கணக்கான செயலிகளை ஆய்வு செய்து, தவறான செயல்களில் ஈடுபட்ட செயலிகள் உடனடியாக நீக்கப்பட்டதாக கூகுள் தெரிவித்து இருக்கிறது. 

    மேலும் இதே சேவைகளை தொடர்ந்து வழங்கி வரும் இதர செயலிகள் உள்ளூர் சட்ட விதிகளுக்கு உட்பட வேண்டும் என அறிவுறுத்தி இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தை விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளது.

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளது. அதன்படி உலகம் முழுக்க இதுவரை 20 கோடி ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. புதிய விற்பனை விவரத்தை ரெட்மி இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் தெரிவித்தது.

    உலகம் முழுக்க ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 20,00,00,000 யூனிட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. அதிக அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன் சீரிஸ் புதிய மைல்கல் கடந்துள்ளது. இந்த மைல்கல் உலகின் அதிகம் விரும்பப்படும் ஸ்மார்ட்போன் சீரிசாக ரெட்மி நோட் இருப்பதற்கு சான்றாக அமைந்துள்ளது  என ரெட்மி இந்தியா தெரிவித்து இருக்கிறது.

     ரெட்மி

    கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் சியோமி இந்தியா நிறுவனம் எம்ஐ 10டி ப்ரோ, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ், ரெட்மி நோட் 9 ப்ரோ, ரெட்மி 9, ரெட்மி 9 பிரைம், ரெட்மி 9ஏ மற்றும் பல்வேறு இதர மாடல்கள் என மொத்தம் 90 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்தது.

    2020 ஆண்டு மட்டும் உலகம் முழுக்க சுமார் 14.5 கோடி ஸ்மார்ட்போன்களை சியோமி வினியோகம் செய்து இருக்கிறது. அதன்படி 2020 நான்காவது காலாண்டில் சியோமி ஸ்மார்ட்போன் வினியோகம் 31 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. சீனாவில் மட்டும் சியோமி வினியோகம் 46 சதவீதம் அதிகரித்து இருககிறது.
    ஆப்பிள் வாட்ச் பற்றிய சமீபத்திய ஆய்வில், அது இதையும் செய்யும் என கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.


    அமெரிக்காவில் உள்ள மவுண்ட் சினய் மருத்துவமனையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கொரோனாவைரஸ் அறிகுறிகளை ஆப்பிள் வாட்ச் தற்போதைய வழிமுறைகளை விட வேகமாக கண்டறிய முடியும் என தெரியவந்துள்ளது.

    ஆப்பிள் வாட்ச் அணிந்திருப்பவரின் இதய துடிப்பு வேறுபாடு விவரங்களை கொண்டு கொரோனாவைரஸ் அறிகுறி ஏற்படுமா என்பதை கண்டறிய முடிந்தது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனாவைரஸ் காலக்கட்டத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படும் முன் கண்டறியும் வழிமுறை பெரும் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

     ஆப்பிள் வாட்ச்

    ஆய்வில் மவுண்ட் சினய் மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களில் பல நூறு பேர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் ஆப்பிள் வாட்ச் அணிந்திருந்தனர். ஆய்வின் போது தினமும் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இதற்கென உருவாக்கப்பட்ட செயலி கொண்டு பதில் அளித்து வந்தனர். 

    இந்த ஆய்வு 2020 ஏப்ரல் மாதம் துவங்கி 2020 செப்டம்பர் வரை நடைபெற்றது. இவைதவிர, ஆய்வில் கலந்து கொண்டவர்களின் ஆரோக்கிய விவரங்கள் ஆப்பிள் வாட்ச் கொண்டு சேகரிக்கப்பட்டு வந்தது. அதன்படி பயனரின் நரம்பியல் முறைகளை கணக்கிட்டதில், ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை முன்கூட்டியே கணிக்க முடிந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    சிஎப்மோட்டோ நிறுவனத்தின் புதிய 300என்கே பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.


    சிஎப்மோட்டோ நிறுவனம் தனது மோட்டார்சைக்கிளை பிஎஸ்6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்ய இருக்கிறது. இதன் வெளியீட்டை ஒட்டி 300என்கே பிஎஸ்6 மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. டீசரில் 2021 300என்கே மாடல் அதிரடியான டிஆர்எல்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    புதிய மாடலில் மேம்பட்ட 292சிசி என்ஜின் வழங்கப்படும் என தெரிகிது. முந்தைய மாடலில் இந்த என்ஜின் 28 பிஹெச்பி பவர், 25.3 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் DOHC செட்டப் உடன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் செட்டப் உள்ளிட்டவை பிஎஸ்4 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது. 

     சிஎப்மோட்டோ 300என்கே

    அதன்படி முன்புறம் அப்சைடு-டவுன் போர்க், பின்புறம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் செட்டப் வழங்கப்படும் என கூறப்படுகிறது. பிரேக்கிங்கிற்கு இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ரியல்மி நிறுவனம் தனது நார்சோ 30 சீரிஸ் மாடல்களுக்கான டீசரை புதுவித முறையில் வெளியிட்டு உள்ளது.


    ரியல்மி நிறுவனம் நார்சோ 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. டீசருடன் புதிய ஸ்மார்ட்போனிற்கான ரீடெயில் பாக்ஸ் எப்படி இருக்க வேண்டும் என வாடிக்கையாளர்களிடம் ரியல்மி கேள்வி எழுப்பி உள்ளது.

    மேலும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய ஆறு வெவ்வேறு வடிவமைப்பு கொண்ட ரீடெயில் பாக்ஸ் படங்களை தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறது. ஆறு வடிவமைப்புகளில் வாடிக்கையாளர்கள் விரும்பும் ஒன்றை தேர்வு செய்ய முடியும். இதற்கு வாக்களிக்க கூகுள் படிவம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     ரியல்மி நார்சோ 30

    புதிய ஸ்மார்ட்போனிற்கான அறிவிப்புடன் தற்சமயம் சுமார் 30 லட்சம் நார்சோ பயனர்கள் இந்தியாவில் இருப்பதாக ரியல்மி தெரிவித்து உள்ளது. ரியல்மி நார்சோ 30 அந்நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்த நார்சோ 20 சீரிஸ் மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். 

    ரீடெயில் பாக்ஸ் மற்றும் பெயர் தவிர புதிய ஸ்மார்ட்போன் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு மே மாதத்தில் ரியல்மி நார்சோ சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக நார்சோ 10 மற்றும் நார்சோ 10ஏ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 

    பின் செப்டம்பரில் நார்சோ 20, நார்சோ 20 ப்ரோ மற்றும் நார்சோ 20ஏ மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தற்சமயம் ரியல்மி நார்சோ 30 சீரிசில் நார்சோ 30 மற்றும் நார்சோ 30 ப்ரோ மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    மோட்டோரோலா நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை இபிசா (Ibiza) எனும் பெயரில் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருந்தன. தற்சமயம் இதன் ரென்டர்கள் வெளியாகி இருக்கின்றன. 

    தற்போதைய ரென்டர்களில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் தெரியவந்துள்ளது. மேலும் மோட்டோரோலா இபிசா ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் இது 5ஜி வசதி கொண்ட குறைந்த விலை மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

    முன்னதாக மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 21,999 விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஸ்மார்ட்போனின் விலை ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டிற்குள் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

     மோட்டோ ஸ்மார்ட்போன்

    இது உண்மையாகும் பட்சத்தில் மோட்டோரோலா இபிசா ஸ்மார்ட்போன் இந்தியாவில் தற்சமயம் கிடைப்பதில் குறைந்த விலை 5ஜி மாடலாக வெளியாகலாம். சிறப்பம்சங்களை பொருத்தவரை மோட்டோ இபிசா ஸ்மார்ட்போனில் 90 ஹெர்ட்ஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிகிறது. 

    இதன் ஸ்கிரீன் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன் கொண்டிருக்குமா அல்லது புல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன் கொண்டிருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. முந்தைய தகவல்களின் படி மோட்டோரோலா இபிசா ஸ்மார்ட்போன் 2021 முதல் காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் என கூறப்பட்டது. 

    இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் மோட்டோரோலா இபிசா அல்லது மோட்டோ ஜி40 என எந்த பெயரில் விற்பனைக்கு வரும் என்பதும் தற்சமயம் கேள்விக்குறியாகவே உள்ளது. 
    ×