என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    போக்கோ பிராண்டின் சமீபத்திய எம்3 ஸ்மார்ட்போன் விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.


    போக்கோ நிறுவனம் சமீபத்தில் எம்3 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. விற்பனை துவங்கியது முதல் போக்கோ எம்3 ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை நடைபெற்ற விற்பனையில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் 2,50,000-க்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    இந்தியாவில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்க சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் ப்ளிப்கார்ட் தளத்தில் விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர். இந்த ஸ்மார்ட்போனின் இரண்டாவது விற்பனை இன்று நடைபெற்றது. தற்போதைய 2.5 லட்சம் யூனிட்கள் இன்றைய ( பிப்ரவரி 23) விற்பனையை சேர்க்காமல் எடுக்கப்பட்டுள்ளது.

     போக்கோ எம்3

    போக்கோ எம்3 சிறப்பம்சங்கள்

    - 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19.5:9 LCD ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
    - அட்ரினோ 610 GPU
    - 6 ஜிபி LPPDDR4x ரேம்
    - 64 ஜிபி (UFS 2.1) / 128 ஜிபி (UFS 2.2) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்பி கேமரா, f/2.05
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 6000 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
    ஹூவாய் நிறுவனம் மேட் எக்ஸ்2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஹூவாய் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி மேட் எக்ஸ்2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி போல்டு போன்று உள்புறம் மடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

    புதிய மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் உள்புறம் 8 இன்ச் OLED ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், வெளிப்புறம் 6.45 இன்ச் OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் மேக்னெட்ரான் நானோ-ஆப்டிக்கல் பிலிம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனில் கிரீஸ் பகுதியை பெருமளவு மறைக்கிறது. இதன் ஹின்ஜ் பகுதி பைபர் மற்றும் ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது முந்தை மாடலில் உள்ளதை விட உறுதியாக இருக்கிறது.

    ஹூவாய் மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் EMUI 11 ஒஎஸ் கொண்டுள்ளது. இது ஏப்ரல் மாதம் ஹார்மனி ஒஎஸ் அப்டேட் பெறும் என ஹூவாய் தெரிவித்து உள்ளது. அந்த வகையில் இது ஹார்மனி ஒஎஸ் பெறும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

     ஹூவாய் மேட் எக்ஸ்2

    புகைப்படங்களை எடுக்க 50 எம்பி RYYB பிரைமரி கேமரா, 16 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12 எம்பி RYYB 3x டெலிபோட்டோ மற்றும் 8 எம்பி 10எக்ஸ் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் 16 எம்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் கிரின் 9000 5ஜி பிராசஸர் கொண்டுள்ளது. இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 55 வாட் வையர்டு பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹூவாய் மேட் எக்ஸ்2 பிளாக், வைட், க்ரிஸ்டல் புளூ மற்றும் க்ரிஸ்டல் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 256 ஜிபி மாடல் விலை 17,999 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 2,01,705 என்றும் 512 ஜிபி மெமரி மாடல் விலை 18,999 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 2,12,970 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    எல்ஜி நிறுவனத்தின் புதிய W41 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    எல்ஜி நிறுவனம் இந்தியாவில் W41, W41 பிளஸ் மற்றும் W41 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன்கள் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த W31 சீரிசின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். 

    எல்ஜியின் புதிய LG W41 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 6.55 இன்ச் ஹெச்டி பிளஸ் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி டெப்த் மற்றும் 5 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்கள் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளன.

     எல்ஜி W41 ப்ரோ

    எல்ஜி W41, W41 பிளஸ் மற்றும் W41 ப்ரோ அம்சங்கள்

    - 6.55 இன்ச் 1600x720 பிக்சல் 20:9 ஹெச்டி பிளஸ் புல் விஷன் டிஸ்ப்ளே
    - 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
    - IMG PowerVR GE8320 GPU
    - 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி (W41)
    - 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி (W41 பிளஸ்)
    - 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி (W41 ப்ரோ)
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10
    - டூயல் சிம்
    - 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
    - 5 எம்பி அல்ட்ரா வைடு சென்சார்
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 5 எம்பி மேக்ரோ கேமரா 
    - 8 எம்பி செல்பி கேமரா
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - கைரேகை சென்சார்
    - கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி

    எல்ஜி W41, W41 பிளஸ் மற்றும் W41 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் மேஜிக் புளூ மற்றும் லேசர் புளூ நிறங்களில் கிடைக்கின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 13,490, ரூ. 14,490 மற்றும் ரூ. 15,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 
    விவோ நிறுவனத்தின் புதிய எஸ்9 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    விவோ நிறுவனம் தனது எஸ்9 ஸ்மார்ட்போன் மார்ச் 3 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் புதிய எஸ் சீரிஸ் மாடலாக இருக்கும். 

    புதிய விவோ எஸ்9 அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இது மீடியாடெக் டிமென்சிட்டி 1100 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் டூயல் செல்பி கேமரா கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

     விவோ எஸ்7

    முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகமாகும் விவோ எஸ்9 அதன்பின் மற்ற சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. அம்சங்களை பொருத்தவரை புதிய விவோ எஸ்9 மாடல் 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 12 ஜிபி + 256 ஜிபி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. 

    இத்துடன் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், டூயல் செல்பி கேமராக்கள் வழங்கப்படலாம். மீடியாடெக் டிமென்சிட்டி 1100 பிராசஸர் வழங்கப்படும் பட்சத்தில், இது 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும். இவைதவிர 6.4 இன்ச் டிஸ்ப்ளே, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
    சியோமி நிறுவனம் புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் மற்றும் ப்ளூடூத் இயர்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.


    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எம்ஐ போர்டபில் ப்ளூடூத் ஸ்பீக்கர் மற்றும் நெக்பேண்ட் ப்ளூடூத் இயர்போன் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்தது. 16 வாட் திறன் கொண்ட ப்ளூடூத் ஸ்பீக்கரில் ப்ளூடூத் 5.0, டூயல் EQ மோட், மைக்ரோபோன், வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இத்துடன் IPX7 வாட்டர் ப்ரூப் வசதி, அதிகபட்சம் 13 மணி நேர பிளேபேக் வழங்குகிறது. பேப்ரிக் டிசைன் கொண்டிருக்கும் புதிய ஸ்பீக்கர் கைகளில் இருந்து நழுவாமல் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 2600 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது.

     எம்ஐ நெக்பேண்ட் ப்ளூடூத் இயர்போன்

    புதிய எம்ஐ நெக்பேண்ட் ப்ளூடூத் இயர்போன் ப்ரோ ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டுள்ளது. இது சியோமியின் முதல் ANC வசதி கொண்ட நெக்பேண்ட் இயர்போன் ஆகும். மேலும் இதில் அழைப்புகளுக்கு ENC வசதி, ப்ளூடூத் 5, 10எம்எம் பேஸ் டிரைவர், லோ-லேடென்சி ஆடியோ மற்றும் 20 மணி நேர பேட்டரி பேக்கப் கொண்டிருக்கிறது.

    இத்துடன் மேக்னெடிக் இயர்பட்ஸ், ஆன்டி-வாக்ஸ் இயர்டிப்கள் வழங்கப்பட்டுள்ளன. வாய்ஸ் அசிஸ்டண்ட், வால்யூம்/மியூசிக் மற்றும் அழைப்புகளை ஏற்க/நிராகரிக்கும் வசதி கொண்ட பட்டன் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த இயர்போனில் IPX5 தர ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் 150 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய எம்ஐ போர்டபில் ப்ளூடூத் ஸ்பீக்கர் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மார்ச் 1 ஆம் தேதி முதல் அமேசானில் துவங்குகிறது. எம்ஐ நெக்பேண்ட் ப்ளூடூத் இயர்போன் ப்ரோ மாடல் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ரெட்மி பிராண்டின் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ரெட்மி பிராண்டின் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் புது வேரியண்ட் இந்தியாவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படட்டது. ரெட்மி 9 பவர் புது வேரியண்ட் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வரிசையில் இதன் புது வேரியண்ட் அறிமுகமாகி உள்ளது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அட்ரினோ 610 GPU வழங்கப்பட்டு இருக்கிறது. 

     ரெட்மி 9 பவர்

    இந்த ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. முன்புறம் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. 

    இத்துடன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12 யுஐ, கைரேகை சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 6000 mAh பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 3.5 எம்எம் ஆடியோஜாக், எப்எம் ரேடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i coating), டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 மற்றும் யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் ரெட்மி 9 பவர் 4 ஜிபி + 64 ஜிபி மற்றும் 4 ஜிபி + 128 ஜிபி மெமரி வேரியண்ட் விலை முறையே ரூ. 10,999 மற்றும் ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டது. புதிய 6 ஜிபி + 128 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனம் 6ஜி வயர்லெஸ் தொழில்நுட்பத்தை உருவாக்க பொறியாளர்களை பணியமர்த்தும் பணிகளை துவங்கி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் 6  ஆம் தலைமுறை செல்லுலார் கனெக்டிவிட்டி அதாவது 6ஜி தொழில்நுட்பத்தில் பணியாற்ற பொறியாளர்களை பணியமர்த்தும் பணிகளை துவங்கி உள்ளது. இதற்கான அறிவிப்பை ஆப்பிள் தனது வலைதளத்தின் வேலைவாய்ப்பு பகுதியில் வெளியிட்டு இருக்கிறது.

    வயர்லெஸ் சிஸ்டம் ஆய்வு பொறியாளர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் சிலிகான் வேலி மற்றும் சான் டெய்கோ அலுவலகங்களில் பணியாற்றுவர். எதிர்கால ஆப்பிள் சாதனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அடுத்த தலைமுறை வயர்லெஸ் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு எனும் தலைப்பில் ஆப்பிள் புதிய பணி பற்றி விவரிக்கிறது.

     6ஜி

    இந்த பிரிவில் பணியாற்றுவோர் 6ஜி வயர்லெஸ் தகவல் பரிமாற்ற முறைகளுக்கான ரேடியோ நெட்வொர்க்குகளை வடிவமைப்பார்கள் என ஆப்பிள் தெரிவித்து உள்ளது. 6ஜி தொழில்நுட்பம் இன்றைய தேதியில் தொலைதூர கனவு ஆகும். தற்சமயம் 5ஜி தொழில்நுட்பம் மெல்ல பயன்பாட்டுக்கு வரத் துவங்கி இருக்கிறது.

    எனினும், 4ஜி எல்டிஇ உலகின் பல்வேறு நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் மொபைல் நெட்வொர்க் ஆக இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் 6ஜி தொழில்நுட்பத்தை வழங்குவோரில் முன்னணியில் இருக்க திட்டமிட்டு உள்ளது. ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த அனைத்து ஐபோன் 12 சீரிஸ் மாடல்களும் 5ஜி வசதி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
    வாட்ஸ்அப் நிறுவனம் மேம்பட்ட பிரைவசி பாலிசிக்கான அப்டேட்டை விரைவில் வெளியிட இருப்பதாக தெரிவித்து உள்ளது.


    வாட்ஸ்அப் நிறுவனம் வரும் வாரங்களில் மேம்படுத்தப்பட்ட பிரைவசி பாலிசியை மீண்டும் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சில வாரங்களுக்கு முன் வாட்ஸ்அப் வெளியிட்ட புது அப்டேட்டிற்கு உலகளாவிய பயனர்கள் பெரும் எதிர்ப்பை தெரிவிதித்தனர். 

    பின் புது அப்டேட் பற்றி வாட்ஸ்அப் நீண்ட விளக்கம் அளித்தது. மேலும் புதிய மாற்றங்களுக்கு பயனர்கள் ஒப்புதல் வழங்க மே 15, 2021 எனும் புதிய காலக்கெடுவை பிறப்பித்தது. இத்துடன் வாட்ஸ்அப் தனது பயனரின் தனிப்பட்ட குறுந்தகவல், குழுக்களில் பகிரப்படும் குறுந்தகவல் உள்ளிட்டவைகளை பார்க்க முடியாது என தெரிவித்தது. 

     கோப்புப்படம்

    மேலும் பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் பிஸ்னஸ் அம்சத்தை கையாண்டு, வியாபாரங்கள் புது சேவைகள் மற்றும் அம்சங்களை இயக்க வழி செய்வதாக வாட்ஸ்அப் தெரிவித்தது. முன்னதாக ஜனவரி மாதத்தில் பயனர்கள் மேம்பட்ட பிரைவசி பாலிசியை ஏற்றுக் கொண்டால் மட்டுமே செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என தெரிவித்தது.

    இதைத் தொடர்ந்து பலர் வாட்ஸ்அப் செயலியை அன்-இன்ஸ்டால் செய்து டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகளை பயன்படுத்த துவங்கினர். பின் வாட்ஸ்அப் சர்ச்சைக்குள்ளான பிரைவசி பாலிசி பற்றிய விளக்கத்தை உலகம் முழுக்க விளம்பரங்கள் வாயிலாக பயனர்களுக்கு தெரிவித்து வருகிறது.
    லெனோவோ நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த விலை ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.


    லெனோவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் கடிகாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட் கடிகாரத்தில் கூகுள் அசிஸ்டண்ட் சேவையின் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இது இந்தி மொழியில் கமாண்ட்களை வழங்கும் லெனோவோவின் முதல் ஸ்மார்ட் சாதனம் ஆகும்.

    புதிய லெனோவோ ஸ்மார்ட் கிளாக் எசென்ஷியல் 4 இன்ச் LED டிஸ்ப்ளே, ஸ்மார்ட் அலாரம் வசதி, பார்-பீல்டு மைக்ரோபோன் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது. இத்துடன் 4 ஜிபி ரேம், 512 எம்பி ரோம், பிளே / அலாரம் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

     லெனோவோ ஸ்மார்ட் கிளாக் எசென்ஷியல்

    லெனோவோ ஸ்மார்ட் கடிகாரம் சிறப்பம்சங்கள்

    - 4 இன்ச் LED டிஸ்ப்ளே
    - அம்லாஜிக் ஏ11மஎக்ஸ் பிராசஸர்
    - 3 வாட் ஸ்பீக்கர்
    - 2 மைக்ரோபோன் அரே
    - 4 ஜிபி ரேம்
    - 512 எம்பி ரோம்
    - மைக்ரோபோன் மியூட் டாகிள்
    - பிளே பட்டன், அலாரம் படட்டன்
    - 2.4ஜி / 5ஜி டூயல் பேண்ட், IEEE 802.11 ac, ப்ளூடூத் 5

    புதிய லெனோவோ ஸ்மார்ட் கடிகாரம் சாப்ட் டச் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 4,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 9 அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் சீரிஸ் ஆன ஒன்பிளஸ் 9 மாடல்களின் விவரங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்சமயம் ஒன்பிளஸ் 9 விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. 

    அதன்படி புதிய ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 1080x2400 பிக்சல் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், பன்ச்-ஹோல் கட்-அவுட் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படலாம்.

     ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

    புதிய ஒன்பிளஸ் 9 மாடலில் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆக்சிஜன் ஒஎஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு 11 வழங்கப்படும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 4 இல் 1 பிக்சல் பின்னிங் மூலம் 48 எம்பி ரெசல்யூஷன் வழங்கும் என கூறப்படுகிறது. 

    இந்த ஸ்மார்ட்போனின் இதர சென்சார்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. புதிய ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்கான டீசர்கள் விரைவில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

    போக்கோ இந்தியா நிறுவனம் புதிய பிராண்டு லோகோவை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    போக்கோ இந்தியா நிறுவனம் புதிய பிராண்ட் லோகோ மற்றும் மஸ்கோட் ஆகியவற்றை அறிமுகம் செய்தது. புது பிராண்ட் லோகோ குழப்பத்தை குறிக்கும் சின்னத்தை சார்ந்து உருவாக்கப்பட்டு உள்ளது. இது ஒவ்வொரு விஷயத்திலும் முற்றிலும் வித்தியாசமான மாற்றை தேடும் நபரை குறிக்கும் என போக்கோ இந்தியா தெரிவித்து இருக்கிறது. 

    லோகோவுடன் அறிமுகம் செய்யப்பட்ட மஸ்கோட் பற்றியும் போக்கோ விளக்கம் அளித்து இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு போக்கோ சியோமியின் துணை பிராண்டாக அறிமுகமானது. பின் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் போக்கோ தனி பிராண்டாக மாறியது.

     போக்கோ மஸ்கோட்

    சியோமி நிறுவனம் அதிக ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிளாக்ஷிப் மாடல்களை ஒவ்வொரு ஆண்டும் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. போக்கோ நிறுவனம் குறைந்த எண்ணிக்கையில் சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்தில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யதது.

    இதுதவிர போக்கோ பாப் பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. மேலும் போக்கோ எப்2 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோனிற்கு எல்ஜி நிறுவனம் டிஸ்ப்ளே வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கடிய ஐபோன் மாடலை உருவாக்கி வருவதாக நீண்ட காலமாக தகவல் வெளியாகி வருகிறது.

    அந்த வரிசையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோனிற்கு எல்ஜி டிஸ்ப்ளேவை பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. ப்ளிப் டிசைன் கொண்ட ஐபோன் மாடலுக்கான டிஸ்ப்ளேவை எல்ஜி வினியோகம் செய்யலாம் என தெரிகிறது.

     ஐபோன்

    எல்ஜி டிஸ்ப்ளே நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளே பேனலை உருவாக்க தேவையான உதவிகளை செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும், மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே பேனல்களை எல்ஜி டிஸ்ப்ளே வினியோகம் செய்யுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    எல்ஜி தவிர சாம்சங் டிஸ்ப்ளே நிறுவனமும் ஆப்பிள் நிறுவனத்திற்கு மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளே பேனல்களை வினியோகம் செய்து வருகிறது. முந்தைய தகவல்களில் சாம்சங் நிறுவனம் அதிகப்படியான மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்களை ஆப்பிள் நிறுவனத்திற்கு சோதனை பணிகளுக்காக வழங்க இருப்பதாக கூறப்பட்டது.
    ×