என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.


    மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. ஐபி52 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் மோட்டோ இ7 பவர் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் கொண்டுள்ளது.

     மோட்டோ இ7 பவர்

    மோட்டோ இ7 பவர் சிறப்பம்சங்கள்

    - 6.5 இன்ச் 1600×720 பிக்சல் HD+ மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே
    - 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர்
    - IMG PowerVR GE8320 GPU
    - 4 ஜிபி LPDDR4x ரேம்
    - 64 ஜிபி (eMCP) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, LED பிளாஷ்
    - 2 எம்பி மேக்ரோ கேமரா
    - 5 எம்பி செல்பி கேமரா, f/2.2
    - ஆண்ட்ராய்டு 10
    - ஹைப்ரிட் டூயல் சிம் 
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ 
    - பின்புறம் கைரேகை சென்சார்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP52)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 5,000 எம்ஏஹெச் பேட்டரி
    - 10 வாட் சார்ஜிங் 

    மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போன் டஹிட்டி புளூ மற்றும் கோரல் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை பிப்ரவரி 26 ஆம் தேதி துவங்குகிறது.
    ஒப்போ நிறுவனம் புதுவித செல்பி கேமரா அமைப்பை பயன்படுத்துவதற்கான காப்புரிமையை பெற்று இருக்கிறது.


    ஒப்போ நிறுவனம் வித்தியாசமான ஸ்மார்ட்போன் டிசைன் மற்றும் அம்சங்களை உருவாக்குவதற்கான பணிகளில் துவக்கம் முதலே ஈடுபட்டு வருகிறது. முன்னதாக ஒப்போ நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்க ஒப்போ காப்புரிமைகளை பெற்று இருந்தது. 

    தற்சமயம் ஸ்லைடிங் செல்பி கேமராவிற்கான காப்புரிமையை ஒப்போ பெற்று இருக்கிறது. புதுவித செல்பி கேமராவிற்கான காப்புரிமையை பெற ஒப்போ நிறுவனம் சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தது. 33 பக்கங்கள் அடங்கிய விண்ணப்பத்தில் செல்பி கேமரா தொழில்நுட்பம் எவ்வாறு இயங்கும் என்பதை ஒப்போ விளக்கி உள்ளது. 

     ஒப்போ ஸ்மார்ட்போன்

    அதன்படி ஸ்லைடிங் செல்பி கேமரா கொண்டு வெவ்வேறு கோணங்களில் புகைப்படங்களை எடுக்க முடியும் என ஒப்போ தெரிவித்து இருக்கிறது. காப்புரிமை விவரங்களின்படி இந்த அம்சம் கொண்ட ஸ்மார்ட்போனில் சிறிய மோட்டார் பொருத்தப்படும் இது கேமராவை ஒரு இடத்தில் இருந்து ஸ்லைடு செய்யும். 

    இந்த மோட்டார், தற்போதைய பாப்-ரக செல்பி கேமராக்களை போன்றே, பயனர் ஸ்மார்ட்போனில் செல்பி கேமரா அம்சத்தை இயக்கினால் மட்டுமே செயல்படும் வகையில் உருவாக்கப்படுகிறது. தற்சமயம் காப்புரிமை நிலையில் இருக்கும் புது அம்சம் வர்த்தக ரீதியிலான ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
    ரியல்மி நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போனை மார்ச் 4 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்வதாக அறிவித்து உள்ளது. இது அந்நிறுவனம் ரேஸ் எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கி வந்த ஸ்மார்ட்போன் ஆகும். புதிய ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் மாடல் ஆகும். 

    புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்டிருக்கும் என ரியல்மி அறிவித்து இருக்கிறது. புதிய ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போன் இளம் தலைமுறையின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலான அனுபவத்தை வழங்கும் என்றும் தெரிவித்து உள்ளது.

     ரியல்மி ஜிடி

    ரியல்மி ஜிடி மாடல் ஜிடி ஸ்போர்ட்ஸ் கார்களை தழுவிய கான்செப்ட் கொண்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் கார்கள் அதிவேகமாக நீண்ட தூரம் பயணிக்கும் வகையில் அதிக செயல்திறன் மற்றும் நம்பத்தகுந்த அம்சங்களை வழங்கும். ரியல்மி ஜிடி பிளாக்ஷிப் மாடல் இளம் பயனர்களை கவரும் அம்சங்களை கொண்டிருக்கிறது. 

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போன் அதிக ரிப்ரெஷ் ரேட் கொண்ட பன்ச் ஹோல் AMOLED டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், பின்புறம் ஜிடி பிராண்டிங் கொண்டிருக்கும் என கூறப்பட்டு உள்ளது. இத்துடன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, ரியல்மி யுஐ 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 64 எம்பி மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படலாம்.
    ரியல்மி நார்சோ 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ரியல்மி நிறுவனம் தனது நார்சோ 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் பிப்ரவரி 24 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து உள்ளது. நார்சோ 30 சீரிசில் நார்சோ 30 ப்ரோ 5ஜி, நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன்களும் பட்ஸ் ஏர் 2 இயர்போன் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

    முந்தைய ரியல்மி ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய நார்சோ சீரிஸ் மாடல்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. நார்சோ 30 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர் வழங்கப்படும் என்றும் நார்சோ 30ஏ மாடலில் மூன்று பிரைமரி கேமராக்கள், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

    சமீபத்திய டீசரில் புதிய ஸ்மார்ட்போன் 48 எம்பி பிரைமரி கேமரா, மேட் பினிஷ், பக்கவாட்டில் கைரேகை சென்சார், பன்ச்-ஹோல் ரக டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி கியூ2 5ஜி ஸ்மார்ட்போன் போன்றே காட்சியளிக்கிறது.

     நார்சோ 30 சீரிஸ்

    ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி / கியூ2 5ஜி சிறப்பம்சங்கள்

    - 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர்
    - 4 ஜிபி / 6 ஜிபி LPDDR4x ரேம்
    - 128 ஜிபி (UFS 2.1) மெமரி 
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
    - 8 எம்பி 119° அல்ட்ரா-வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
    - 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4
    - 16 எம்பி செல்பி கேமரா, f/2.1
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 30 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் 

    டைவா நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய டிவி மாடல்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்து உள்ளது.


    டைவா நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய டிவி மாடல்களை- டைவா D32S7B மற்றும் D40HDRS எனும் பெயர்களில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக டைவா நிறுவனம் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

    புதிய டிவி மாடல்கள் 32 இன்ச் மற்றும் 39 இன்ச் அளவுகளில் கிடைக்கின்றன. இரு டிவி மாடல்களிலும் அலெக்சா சார்ந்த வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி உள்ளது. இந்த டிவியுடன் வழங்கப்படும் ரிமோட் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் சோனி லிவ் போன்ற தளங்களை இயக்க ஹாட்கீ கொண்டிருக்கிறது.

     டைவா ஸ்மார்ட் டிவி

    இரு மாடல்களில் 39 இன்ச் டிவி மட்டுமே ஹெச்டி ரெடி வசதி கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே 1366x768 பிக்சல் ரெசல்யூஷன் ஆகும். இரு மாடல்களிலும் மூன்று HDMI மற்றும் இரண்டு யுஎஸ்பி போர்ட்கள், ப்ளூடூத் மற்றும் இ-ஷேர் போன்ற வசதிகள் உள்ளன.

    இ-ஷேர் வசதி இருப்பதால் டிவியை ஸ்மார்ட்போன் கொண்டே இயக்க முடியும். இரு மாடல்களிலும் குவாட்கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 8, 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி மற்றும் டைவா நிறுவனத்தின் தி பிக் வால் மென்பொருள் வழங்கப்பட்டு இருக்கிறது. இது பல்வேறு ஒடிடி தளங்களில் இருந்து தரவுகளை வழங்குகிறது.

    இந்தியாவில் டைவா D32S7B மாடல் விலை ரூ. 15,990 என்றும் D40HDRS மாடல் விலை ரூ. 21,990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு டிவிக்களும் ஒரு வருடத்திற்கான வாரண்டியை கொண்டுள்ளன. இவற்றின் விற்பனை விரைவில் துவங்க இருக்கின்றன.
    ஜீ5 பிரீமியம் வருடாந்திர சந்தா கட்டணத்திற்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    இந்தியாவில் ஜீ5 பிரீமியம் சேவைக்கான வருடாந்திர சந்தா 50 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. ஜீ5 ஒடிடி தளம் துவங்கி மூன்றாவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இந்த சலுகை தற்காலிகமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஜீ5 வருடாந்திர சந்தா ரூ. 499 மட்டும் தான்.

    இந்த சலுகை இம்மாத இறுதி வரை வழங்கப்படுகிறது. அதன் பின் ஜீ5 பிரீமியம் வருடாந்திர சந்தாவின் விலை ரூ. 999 என முந்தைய விலைக்கே மாறிவிடும். ஜீ5 பிரீமியம் மாதாந்திர, மூன்று மாத சலுகை கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

     ஜீ5

    ஜீ5 மூன்றாம் ஆண்டு விழாவை முன்னிட்டு அதன் பிரீமியம் வருடாந்திர சந்தா 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த சலுகை பிப்வரி 28 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. ஜீ5 பிரீமியம் ஒரு மாதம் மற்றும் மூன்று மாதங்களுக்கான சந்தா விலை முறையே ரூ. 99 மற்றும் ரூ. 299 ஆகும்.

    ஜீ5 பிரீமியம் சந்தா ஜீ5 ஒரிஜினல்ஸ், பிரத்யேக தொடர்கள், திரைப்படங்கள், அனைத்து ஆல்ட் பாலாஜி, ஜிந்தகி நிகழ்ச்சிகள், நேரலை டிவி மற்றும் டிவியில் ஒளிபரப்பாகும் முன் டிவி தொடர்களை பார்க்கும் வசதியை வழங்குகிறது. பிரீமியம் சந்தாவில் ஒரே சமயத்தில் ஐந்து வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்த முடியும்.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் ரூ. 12,999 விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ மற்றும் டெப்த் கேமராக்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.

     சாம்சங் கேலக்ஸி ஏ12

    சாம்சங் கேலக்ஸி ஏ12 சிறப்பம்சங்கள்

    - 6.5 இன்ச் 1560×720 பிக்சல் HD+ LCD இன்பினிட்டி வி டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் 
    - IMG PowerVR GE8320 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் சாம்சங் ஒன் யுஐ 2.5
    - டூயல் சிம்
    - 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.0
    - 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ கேமரா
    - 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார் 
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ 
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - 5,000 எம்ஏஹெச் பேட்டரி
    - 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12,999 என்றும் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ட்விட்டர் சமூக வலைதளத்தில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ட்விட்டர் நிறுவனம் தனது தளத்தில் வாய்ஸ் மெசேஜிங் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தது. தற்சமயம் இந்த அம்சம் இந்தியா, பிரேசில் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறது. வாய்ஸ் டிஎம் (Voice DM) என அழைக்கப்படும் புது அம்சம் கொண்டு மற்றவர்களுக்கு தெரிவிக்க விரும்பும் தகவலை குரல்வழி பதிவாக அனுப்ப முடியும்.

    முன்னதாக வாய்ஸ் ட்விட் எனும் அம்சத்தை ட்விட்டர் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. முந்தைய வாய்ஸ் ட்விட் போன்றே வாய்ஸ் டிஎம் அனுப்புவதற்கான கால அளவு 140 நொடிகளாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் பயனர்கள் அதிகபட்சம் 140 நொடிகளுக்குள் தங்களின் தகவலை பதிவு செய்து அனுப்ப முடியும்.

     கோப்புப்படம்

    புதிய வாய்ஸ் டிஎம் அம்சம் ட்விட்டர் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ட்விட்டரில் வழக்கமான டிஎம் செய்வதை போன்றே புதிய அம்சத்தையும் இயக்க முடியும். இதற்கு டிஎம் ஆப்ஷனில் Voice Recording எனும் ஐகானை க்ளிக் செய்து குரலை பதிவு செய்ய வேண்டும். குரல் பதிவு முடிந்ததும், மற்றொரு முறை க்ளிக் செய்ய வேண்டும்.

    பின் பயனர் பதிவு செய்த குரலை மீண்டும் கேட்பதற்கான வசதி வழங்கப்படுகிறது. இதனால் குரல் பதிவை அனுப்பும் முன், அதனை சரிபார்க்க மீண்டும் அதனை கேட்கலாம். ஐஒஎஸ் பயனர்கள் வாய்ஸ் ரெக்கார்டு செய்யும் ஐகானை அழுத்தி பிடித்து குரலை பதிவு செய்ய துவங்க வேண்டும், பின் மேல்புறமாக ஸ்வைப் செய்து ஐகானில் இருந்து விரலை விடுவிக்க வேண்டும். 

    முதற்கட்டமாக வாய்ஸ் டிஎம் வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. வெப் பிரவுசரில் வாய்ஸ் டிஎம்-களை கேட்க முடியும். புதிய அம்சம் வலைதள உரையாடல்களை மேலும் உயிரூட்டும் என ட்விட்டர் தெரிவித்து உள்ளது. 
    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் ஏப்ரல் மாதத்திற்குள் 11 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    விவோ நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் 11 புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய தகவல்களில் விவோ எக்ஸ்50 ப்ரோ பிளஸ் மற்றும் எக்ஸ்60 சீரிஸ் விரைவில் வெளியாகலாம் என கூறப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், இரண்டு விவோ பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களுடன் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படலாம் என தற்போதைய தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பிளாக்ஷிப் மாடல்களுடன் விவோ வி21 சீரிஸ், விவோ எஸ்9 5ஜி உள்ளிட்டவையும் அறிமுகம் செய்யப்படலாம்.

     விவோ ஸ்மார்ட்போன்

    விவோ வி21 சீரிஸ் மற்றும் விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போன்கள் முதலில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதில் விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1100 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. விவோ 21 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இவைதவிர விவோ வி21, விவோ 21இ உள்ளிட்டவை 4ஜி மாடல்களாக இருக்கும் என்றும் இவற்றின் விலை 5ஜி மாடல்களை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படும். இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் விவோ வி21இ, வி21 ப்ரோ, எஸ்9 5ஜி, எக்ஸ்50 ப்ரோ பிளஸ், எக்ஸ்60 மற்றும் எக்ஸ்60 ப்ரோ போன்ற மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம்.
    ரியல்மி நிறுவனத்தின் புது வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    ரியல்மி நிறுவனம் விரைவில் ரியல்மி பட்ஸ் ஏர் 2 மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உணர்த்தும் வகையில் ரியல்மி இந்தியா தலைவர் மாதவ் சேத் டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். புதிய இயர்பட்ஸ் ரியல்மி பட்ஸ் ஏர் மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும்.

    முன்னதாக ரியல்மி பட்ஸ் ஏர் 2 மாடல் 2021 முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், மாதவ் சேத் தற்சமயம் வெளியிட்டு இருக்கும் டீசர் வீடியோவில் புதிய இயர்பட்ஸ் எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.

     ரியல்மி இயர்பட்ஸ்

    45 நொடிகள் ஓடும் வீடியோவில் பிளாக் ஓவல் வடிவ கேஸ் ஒன்று இடம்பெற்று இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் பார்க்க பட்ஸ் ஏர் ப்ரோ மாடலின் குறைந்த விலை வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. புதிய பட்ஸ் ஏர் 2 பற்றி ரியல்மி தலைமை செயல் அதிகாரி எந்த தகவலையும் வழங்கவில்லை. 

    எனினும், புதிய இயர்பட்ஸ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். இ்துடன் டிரான்ஸ்பேரன்சி மோட் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் வெளிப்புறம் இருக்கும் சத்தத்தை கேட்டுக் கொண்டே இசையையும் அனுபவிக்க வழி செய்கிறது. புதிய ரியல்மி பட்ஸ் ஏர் 2 மாடலின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சியோமி ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 10 சீரிஸ் இந்திய சந்தையில் மார்ச் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. முந்தைய தகவல்களின் படி புதிய ஸ்மார்ட்போனின் கேமரா அதிகளவு அப்டேட் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களில் அதிக ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

     ரெட்மி நோட் 10 டீசர்

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் FHD+LCD ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 64 எம்பி பிரைமரி சென்சாருடன் குவாட் கேமரா சிஸ்டம், 5000 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.

    ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி மாடலில் அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முந்தைய நோட் 9 சீரிஸ் போன்றே ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்படுமா என்பது தற்சமயம் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
    ஹார்டுவேர் கீபோர்டு கொண்ட பிளாக்பெரி 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    ஆன்வார்டு மொபிலிட்டி நிறுவனம் இந்த ஆண்டு பிளாக்பெரி பிராண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய போவதாக கடந்த ஆண்டே அறிவித்து இருந்தது. இந்த நிலையில், அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட்டர் பிரான்க்ளின் புது பிளாக்பெரி மாடல் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

    மேலும் புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க ஹார்டுவேர் கீபோர்டு மற்றும் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என அவர் தெரிவித்தார். பிளாக்பெரியின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்க ஆன்வார்டு மொபிலிட்டி நிறுவனம் பாக்ஸ்கானுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன.

    முதற்கட்டமாக 5ஜி பிளாக்பெரி ஸ்மார்ட்போன் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டு, பின் ஆசிய சந்தைக்கு கொண்டு வரப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி ஆன்வார்டு மொபிலிட்டி இதுவரை உறுதியான விவரங்களை வழங்கவில்லை.

     பிளாக்பெரி ஸ்மார்ட்போன்

    அந்த வகையில் இதன் வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. புதிய 5ஜி ஸ்மார்ட்போன் பிளாக்பெரியின் புகழ்பெற்ற பாதுகாப்பு அம்சத்தை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கும். பிளாக்பெரி 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    ஆன்வார்டு மொபிலிட்டி 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அமெரிக்க நிறுவனம் ஆகும். இது தலைசிறந்த பாதுகாப்பு கொண்ட மொபைல் மென்பொருள் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் தலைமை செயல் அதிகாரியான பிரான்க்ளின் முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார். 
    ×