என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » எஸ்எம்எஸ்
நீங்கள் தேடியது "எஸ்எம்எஸ்"
எஸ்.எம்.எஸ். கொடுத்தால் ஆவின் பால் பொருட்களை வீடுதேடி வினியோகம் செய்யும் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #AavinMilk #MinisterKadamburRaju
தூத்துக்குடி:
ஆவின் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
பால் உற்பத்தியில் இந்தியாவில் முதல் இடத்தில் குஜராத் இருந்தது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பால் உற்பத்தியை பெருக்குவதற்காக இலவச கறவை பசுக்கள், வெள்ளாடுகளை வழங்கினார். அதன்பேரில் தற்போது தமிழ்நாடு பால் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது. இதனால் வெண்மை புரட்சி ஏற்பட்டு உள்ளது. பால் உற்பத்தியை பெருக்குவதற்காக கால்நடைகளுக்கு அரசு தீவனம் வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
பால் கொள்முதல் விலை உயர்த்துவது தொடர்பாக முதல்அமைச்சர் நல்ல அறிவிப்பை தருவார். ஆவின் பால் பூத்களில் ஆவின் தவிர மற்ற பொருட்கள் விற்பனை செய்தவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சத்துணவில் மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #Aavin #MinisterKadamburRaju
ஆவின் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
பால் உற்பத்தியில் இந்தியாவில் முதல் இடத்தில் குஜராத் இருந்தது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பால் உற்பத்தியை பெருக்குவதற்காக இலவச கறவை பசுக்கள், வெள்ளாடுகளை வழங்கினார். அதன்பேரில் தற்போது தமிழ்நாடு பால் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது. இதனால் வெண்மை புரட்சி ஏற்பட்டு உள்ளது. பால் உற்பத்தியை பெருக்குவதற்காக கால்நடைகளுக்கு அரசு தீவனம் வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
சைக்கிள் மூலம் ஆவின் பால் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தனியாருக்கு சற்றும் குறைவு இல்லாமல் ஊக்கத்தொகை கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் பால் 100 சதவீதம் சுத்தமான பால் ஆகும். ஆவின் பால் பூத்களுக்கு தேவையான பொருட்கள் உடனடியாக வழங்கப்படும். எஸ்.எம்.எஸ். கொடுத்தாலே பால் பொருட்களை வீடுதேடி வினியோகம் செய்யும் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #Aavin #MinisterKadamburRaju
மதுரையில் விடுமுறை என்று சகமாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியதை பள்ளி நிர்வாகம் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டான்.
மதுரை:
மதுரை மாவட்டம், அப்பன் திருப்பதி அருகே உள்ள காதக்கிணறு சண்முகவேல் நகரைச் சேர்ந்தவன் நவீன் பாரதி (வயது 14). அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
நவீன் பாரதியின் தந்தை இளங்கோவன் ‘கொரியர்’ நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது தாயார் தேவி மாநகராட்சி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நவீன் பாரதி கடந்த வெள்ளிக்கிழமை “இன்று பள்ளிக்கு விடுமுறை” என்று சக மாணவர்களுக்கு செல்போன் வாயிலாக குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி உள்ளார். இதனை நம்பிய பலரும் அந்த செய்தியை பார்வேர்டு செய்து உள்ளனர். இதனால் அன்றைய தினம் 50-க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு வரவில்லை.
பள்ளி நிர்வாகம் இது தொடர்பாக விசாரித்த போது நவீன்பாரதி குறுஞ்செய்தி அனுப்பிய விவரம் தெரியவந்தது. இதையடுத்து தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோரை அழைத்து கண்டித்தார்.
இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற நவீன் பாரதியை ஆசிரியர்கள் மட்டுமின்றி சக மாணவர்களும் திட்டினர். இதனால் மனவேதனை அடைந்த நவீன்பாரதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இது குறித்து அவனது தந்தை இளங்கோவன் கொடுத்த புகாரின் பேரில் அப்பன் திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை மாவட்டம், அப்பன் திருப்பதி அருகே உள்ள காதக்கிணறு சண்முகவேல் நகரைச் சேர்ந்தவன் நவீன் பாரதி (வயது 14). அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
நவீன் பாரதியின் தந்தை இளங்கோவன் ‘கொரியர்’ நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது தாயார் தேவி மாநகராட்சி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நவீன் பாரதி கடந்த வெள்ளிக்கிழமை “இன்று பள்ளிக்கு விடுமுறை” என்று சக மாணவர்களுக்கு செல்போன் வாயிலாக குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி உள்ளார். இதனை நம்பிய பலரும் அந்த செய்தியை பார்வேர்டு செய்து உள்ளனர். இதனால் அன்றைய தினம் 50-க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு வரவில்லை.
பள்ளி நிர்வாகம் இது தொடர்பாக விசாரித்த போது நவீன்பாரதி குறுஞ்செய்தி அனுப்பிய விவரம் தெரியவந்தது. இதையடுத்து தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோரை அழைத்து கண்டித்தார்.
இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற நவீன் பாரதியை ஆசிரியர்கள் மட்டுமின்றி சக மாணவர்களும் திட்டினர். இதனால் மனவேதனை அடைந்த நவீன்பாரதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இது குறித்து அவனது தந்தை இளங்கோவன் கொடுத்த புகாரின் பேரில் அப்பன் திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X