என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஆப்பிள் நிறுவனத்தின் WWDC 21 நிகழ்வில் மேக் ஒஎஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ஆப்பிள் நிறுவனம் மென்பொருள் சார்ந்த புது அறிவிப்புகளை வெளியிடும் சர்வதேச டெவலப்பர்கள் (WWDC) நிகழ்வு துவங்கியது. ஆப்பிள் வழக்கப்படி அசத்தலான அறிமுக வீடியோவுடன் 2021 WWDC நிகழ்வு துவங்கியது.

     டிம் குக்

    ஆப்பிள் WWDC 21 நிகழ்வின் துவக்க உரையில் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் மேற்கொண்டார். தொடக்க உரையில், ஆப்பிள் டெவலப்பர்களுக்கு வழங்கும் புது சேவைகளை பற்றி விளக்கினார். 

    துவக்க உரையை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின்  மென்பொருள் பொறியியல் பிரிவுக்கான மூத்த துணை தலைவர் க்ரியாக் ஃபெடரிகி ஐஒஎஸ் 15 வழங்கும் புது அம்சங்களை விவரித்தார்.

    அதன்படி ஐஒஎஸ் 15 தளத்தில் பேஸ்டைம் சேவை பல்வேறு புது அப்டேட்களை பெற்றுள்ளது. இம்முறை பேஸ்டைம் சேவையில் ஸ்பேஷியல் ஆடியோ அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் ஆடியோ அனுபவம் முன்பு இருந்ததை விட மேம்பட்டு இருக்கிறது. பேஸ்டைம் செயலியில் புதிதாக போர்டிரெயிட் மோட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேலும் பேஸ்டைம் அழைப்புகளை லின்க்குகளாக மாற்றும் வசதி வழங்கப்படுகிறது. 

     ஐமெசேஜ்

    இதேபோன்று புது ஐஒஎஸ் தளத்தின் மெசேஜஸ் சேவையில் புது அம்சங்கள் வழங்கப்படுகிறது. அதன்படி மெசேஜஸ் செயலியில் பல்வேறு வசதிகள் அடங்கிய (DND-Do Not Disturb) அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. போக்கஸ் என அழைக்கப்படும் புது அம்சம் எதுபோன்ற குறுந்தகவல்களுக்கு நோட்டிபிகேஷன் வரவேண்டும் என்பதை பயனர்களே முடிவு செய்ய அனுமதிக்கிறது.

     ஆப்பிள் மேப்ஸ்

    ஐஒஎஸ் 15 தளத்தில் ஆப்பிள் கீஸ் அம்சம் பல்வேறு புது கார்கள், தனியார் விடுதிகளில் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த சேவையை விரிவுப்படுத்த பல்வேறு நிறுவனங்களுடன் ஆப்பிள் இணைந்துள்ளது. இதேபோன்று அடையாள சான்று மற்றும் இதர தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய கார்டுகளை ஆப்பிள் வாலெட் செயலியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

    இவற்றுடன் ஆப்பிள் மேப், வெதர் செயலிகளிலும் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. ஆப்பிள் மேப் சேவையில் முன்பு இருந்ததை விட அதிக நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. புது மேப் செயலியில் முகவரிகள் முற்றிலும் புது முறையில் அதிக தெளிவாக காட்சியளிக்கும்படி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஐஒஎஸ் 15 ஆப்பிள் ஏர்பாட்ஸ் சாதனத்தில் அதிக அம்சங்களை வழங்குகிறது. மேலும் இது ஆடியோ அனுபவத்தை முன்பு இருந்ததை விட அதிகளவு மேம்படுத்துகிறது. இது ஏர்பாட்ஸ் சாதனத்தில் ஸ்பேஷியல் ஆடியோ வசதி வழங்கப்படுகிறது.

     ஐபேட் ஒஎஸ் 15

    ஐபேட் ஒஎஸ் 15

    ஐபேட் ஒஎஸ் 15 விட்ஜெட்களில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விட்ஜெட்களை பொழுதுபோக்கு, விளையாட்டு என பல விதங்களில் பிரித்து அவற்றை மிக அழகாக ஒருங்கிணைத்து அடுக்கி வைத்துக் கொள்ளலாம். ஆப் லைப்ரரி அம்சத்தில் அனைத்து செயலிகளையும் விட்ஜெட் மூலம் பார்க்கலாம்.

    இதில் உள்ள மல்டி டாஸ்கிங் அம்சம் கொண்டு ஒரே சமயத்தில் இரு செயலிகளை பயன்படுத்த முடியும். செயலியின் தன்மைக்கு ஏற்ப அவற்றின் அளவை திரையில் மாற்றியமைத்துக் கொள்ளலாம். இந்த அம்சம் ஒவ்வொரு செயலிக்கு ஏற்ப அசத்தலான வசதிகளை வழங்குகிறது.

    இதன் டிரான்ஸ்லேட் அம்சம் கடந்த ஆண்டை விட இம்முறை அதிக வசதிகளை வழங்குகிறது. வருடாந்திர அடிப்படையில் ஆப்பிள் டிரான்ஸ்லேட் பயனர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. மேலும் ஸ்விப்ட் பிளே கிரவுண்ட் தளமும் அதிகளவு மாற்றப்பட்டது. 

    இதில் செயலிகளுக்கு குறியீடு எழுதும் போதே அவற்றை சோதனை செய்யும் வசதியும், அவற்றை உடனடியாக ஆப் ஸ்டோரில் பதிவேற்றம் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. 

    பிரைவசி

    இன்றைய உரையில் ஆப்பிள் நிறுவனம் பிரைவசி சார்ந்த அம்சங்களை அறிவித்தது. அதன்படி மெயில் பிரைவசி ப்ரோடெக்ஷன் அறிமுகமாகிறது. இது ஐபி முகவரிகளை மறைக்கும். மேலும் சபாரி பிரவுசரில் டிராக் செய்வோரிடம் இருந்தும் ஐபி முகவரிகளை மறைக்கிறது. இத்துடன் செயலிகள் எவ்வாறு பிரைவசி செட்டிங்களை பயன்படுத்திகின்றன என்பதை அறிந்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.

     வாட்ச் ஒஎஸ் 8

    வாட்ச் ஒஎஸ் 8

    புதிய வாட்ச் ஒஎஸ் 8 புதுவிதமான அனிமேஷன்களை கொண்டுள்ளது. இவை பயனர்கள் மனநிலையை ஒரே தன்மையில் வைத்துக் கொள்ள உதவுகிறது. இதுதவிர மன உளைச்சல் ஏற்படும் வாய்ப்பை வெகுவாக குறைக்கிறது. மேலும் பயனர் சுவாச அளவில் மாற்றம் ஏற்பட்டால் உடனே அதுபற்றிய நோட்டிபிகேஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் பல்வேறு உடற்பயிற்சிகள் வாட்ச் ஒஎஸ்-இல் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் அதிக பிரபலமான வாட்ச் பேஸ் புது ஒஎஸ்-இல் மாற்றப்பட்டு இருக்கிறது. புது தளத்தில் வாட்ச் பேஸ் முன்பை விட அதிக விவரங்களை வழங்குகிறது. இத்துடன் புதிதாக போட்டோஸ் ஆப் சேர்க்கப்பட்டு உள்ளது. வாட்ச் ஒஎஸ் கொண்டு குறுந்தகவல் அனுப்பும் வசதியில் அசத்தலான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

     மேக் ஒஎஸ்

    மேக் ஒஎஸ் 

    மேக் ஒஎஸ் மான்ட்ரெ தளத்தில் யுனிவர்சல் கண்ட்ரோல் எனும் புது அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மேக் கீபோர்டு மற்றும் மவுஸ் கொண்டு ஐபேட் சாதனத்தையும் இயக்க முடியும். இதே போன்று ஐமேக் மவுஸ் மற்றும் கீபோர்டு கொண்டு ஐபேட் மற்றும் ஐமேக் சாதனங்களை இயக்கலாம்.  

    மேக் சாதனங்களுக்கான ஏர்பிளே அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இருப்பதை போன்றே ஏர்பிளே அம்சம் ஐமேக் தளங்களிலும் இயங்கும். புதிய மான்ட்ரெ தளத்தில் ஷார்ட்கட்ஸ் மற்றும் ஷார்ட்கட் எடிட்டர் அம்சங்கள் உள்ளன. இது மேக் சாதனங்களின் பல்வேறு செயலிகளில் இயங்கும். 

    உலகின் அதிவேக பிரவுசராக இருக்கும் சபாரி பயனர் விவரங்களை பாதுகாப்பதில் தலைசிறந்த அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் தோற்றம் முற்றிலுமாக மாற்றப்பட்டு டேப்கள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் சர்ச் டேப் முன்பைவிட சிறியதாக இருக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு இதர டேப்களும் அளவில் சிறியதாக இருக்கின்றன. 

    புதிய சபாரி பிரவுசர் மேக், ஐமேக், ஐபேட் என அனைத்து சாதனங்களிலும் ஒரே மாதிரி காட்சியளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஐபோனில் சர்ச் பார் திரையில் மென்மையாக க்ளிக் செய்தால் தோன்றும். இதனால் சிறு திரையிலும் பெரிய பிரவுசர் அனுபவம் கிடைக்கும்.

    ஆப் ஸ்டோர் துவங்கியது முதல் ஆப்பிள் டெவலப்பர்களுக்காக மேற்கொண்ட நடவடிக்கைகளை க்ரியாக் விவரித்தார். மேலும் இன்று அறிவிக்கப்பட்ட புது ஒஎஸ் பீட்டா வெர்ஷன் இன்று முதல் கிடைக்கும் என டிம் குக் தெரிவித்தார். இவற்றின் பொது பீட்டா அடுத்த மாதமும், இதைத் தொடர்ந்து அனைவருக்குமான ஸ்டேபில் ஒஎஸ் சில மாதங்களில் வெளியாகும் என கூறி நிகழ்வை டிம் குக் நிறைவு செய்தார்.

    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் அந்நிறுவன வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.


    சாம்சங் கேலக்ஸி எம்21 பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி சாம்சங் சார்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும், புது எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. 

    இத்துடன் கேலக்ஸி எம்21 பிரைம் எடிஷன் பிஐஎஸ் சான்று பெற்று, கூகுள் பிளே சப்போர்ட் கொண்ட சாதனங்கள் பட்டியலிலும் இடம்பெற்று இருக்கிறது. புதிய பிரைம் எடிஷன் மாடலில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி எம்21 மாடலில் வழங்கப்பட்ட அம்சங்கள் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி எம்21

    சாம்சங் கேலக்ஸி எம்21 பிரைம் எடிஷன் SM-M215G/DS எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதே மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் கூகுள் பிளே சப்போர்ட் கொண்ட சாதனங்கள் பட்டியலிலும் இடம்பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகமான கேல்கஸி எம்21 மாடல் SM-M215F/DS எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது.

    புது எம்21 பிரைம் எடிஷன் மாடலில் 6.4 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2340 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர், 6000 எம்ஏஹெச் பேட்டரி, 48 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி செல்பி கேமரா, அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனம் சில தினங்களில் அறிமுகம் செய்ய இருக்கும் ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி விலை விவரங்கள் லீக் ஆகி உள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி மாடல் விலை ஒன்பிளஸ் வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது. தனியார் வங்கி சலுகை மூலம் ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி விலை மற்றும் கேஷ்பேக் சலுகை விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி ஜூன் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

     ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி

    புதிய ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி மாடலில் மிக மெல்லிய டிசைன், ஹெட்போன் ஜாக், 64 எம்பி மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படுகின்றன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 4500 எம்ஏஹெச் பேட்டரி, 30டி வார்ப் சார்ஜ் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    விலையை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி மாடல் விலை ரூ. 22,999 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது கடந்த ஆண்டு வெளியான ஒன்பிளஸ் நார்டு விலையை விட குறைவு ஆகும். அந்த வகையில், இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ஜூன் 10 ஆம் தேதி வெளியாகிவிடும்.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி போன் விலை மற்றும் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் கூட்டணியில் 5ஜி ஸ்மார்ட்போன் உருவாகி வருவது  அனைவரும் அறிந்ததே. புதிய 5ஜி மாடல் விவரங்கள் ஜூன் 24 ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஜியோ 5ஜி மாடல் 2021 தீபாவளி வாக்கில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.  

    கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த வாரம் தெரிவித்து இருந்தார். எனினும், இதன் வெளியீடு குறித்து எந்த தகவலையும் வழங்கவில்லை. 

     ஜியோ 5ஜி

    தற்போதைய தகவல்களின் படி ஜியோ 5ஜி மாடல் தீபாவளி காலக்கட்டத்தில் அதாவது அக்டோபர் - நவம்பர் மாத வாக்கில் வெளியாகும் என கூறப்படுகிறது. புது மாடல் வெளியீடு பற்றி இரு நிறுவனங்கள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

    புது 5ஜி மாடல் விலை 50 டாலர்களுக்கும் கீழ் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் இதன் விலை ரூ. 3500 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் ப்ரோ மாடல் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
     

    ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புது ஐபேட் மாடல் கிளாஸ் பேக் டிசைன் கொண்டிருக்கும் என்றும் இதில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

     ஐபேட் ப்ரோ

    ஐபேட் மினி சீரிசை மேம்படுத்தி, புதிதாக என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல் ஒன்றை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீப காலங்களில் வெளியாகும் ஐபோன்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    அந்த வகையில் புதிய ஐபேட் மாடல்களிலும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை ஆப்பிள் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஐபேட் ப்ரோ மாடலில் வயர்லெஸ் சார்ஜிங் மட்டுமின்றி ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
    கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோர் கோவின் தளத்தை பிராந்திய மொழிகளில் இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    கொரோனாவைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இந்தியாவில் கோவின் தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இதுவரை கோவின் தளம் ஆங்கில மொழியில் மட்டுமே இயக்க முடியும். தற்போது பிராந்திய மொழிகளில் இயக்கும் வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது.

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    அந்த வகையில் கோவின் தளம் இந்தி, அசாமீஸ், கன்னடா, பெங்காலி, ஒடியா, மலையாளம், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி போன்ற மொழிகளில் இயக்க முடியும். கோவின் தளத்தில் பிராந்திய மொழிகளுக்கான வசதி வழங்கப்பட்டு இருப்பதை மத்திய சுகாதார துறை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறது.

    கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள கோவின் தளம் மட்டுமின்றி உமாங் அல்லது ஆரோக்ய சேது போன்ற செயலிகளிலும் முன்பதிவு செய்ய முடியும். 
    சாம்சங் நிறுவனத்தின் புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கு சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் காப்புரிமை பெறப்பட்டு இருக்கிறது.

    புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமை பெற சாம்சங் நிறுவனம் சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பம் நவம்பர் 2020 வாக்கில் சமர்பிக்கப்பட்டது. இது ஜூன் 3, 2021 அன்று அச்சிடப்பட்டது. காப்புரிமையில் இடம்பெற்று இருக்கும் படங்கள், ஸ்மார்ட்போனின் மடிக்கும் விவரங்கள் தெரியவந்துள்ளது.

    ஹின்ஜ் டிசைன் கேலக்ஸி இசட் போல்டு 2 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று விதங்களில் மடிக்கும் வகையில் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. முன்புறம் பன்ச் ஹோல் கட்-அவுட், மிக மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது. 

     சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

    பின்புறம் இரண்டு வெவ்வேறு ஹின்ஜ்கள் இடம்பெற்றுள்ளன. பேக் பேனலில் மூன்று கேமரா சென்சார்கள், செங்குத்தாக பொருத்தப்படுகின்றன. புது ஸ்மார்ட்போனின் இரண்டாவது ஹின்ஜ் கேமரா லென்ஸ்களை கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போன் முழுமையாக மடிக்கப்பட்ட நிலையில், இவை செல்பி கேமராக்களாக பயன்படுத்தக்கூடியாத இருக்கும்.

    வலதுபுற ஸ்கிரீன் நடுப்புறமாக மடிக்கக்கூடியதாக இருக்கிறது. இடதுபுற ஸ்கிரீன் நடுப்புற ஸ்கிரீனின் பின்புறம் மடிந்து கொள்கிறது. இந்த ஸ்மார்ட்போன் யுஎஸ்பி டைப் சி போர்ட், இடதுபுறத்தில் ஸ்பீக்கர் கிரில் உள்ளது. கேலக்ஸி இசட் போல்டு 2 போன்று இல்லாமல், இந்த மாடலின் முன்புற ஸ்கிரீன் சற்றே அகலமாக இருக்கிறது.
    ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்த வாரம் அறிமுகம் செய்யும் நார்டு CE 5ஜி மாடல் 64 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு CE 5ஜி (கோர் எடிஷன்) மாடல் இந்தியாவில் ஜூன் 10 ஆம் தேதி அறிமுகமாகும் என ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த நிலையில், புது ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை ஒன்பிளஸ் டீசர்களாக வெளியிட்டு வருகிறது.

    ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி மாடல் மிக மெல்லிய டிசைன் கொண்டிருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் டீசரில் புது நார்டு CE 5ஜி 64 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என்றும், மற்ற சென்சார்கள் செங்குத்தாக அடுக்கப்பட்டு இருக்கும் என தெரியவந்துள்ளது. இத்துடன் எல்இடி பிளாஷ் மாட்யூல் ஒன்றும் காணப்படுகிறது.

     ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி

    பிரைமரி கேமராவுடன் 8 எம்பி இரண்டாவது சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஒற்றை பன்ச் ஹோல் ஸ்கிரீன், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    ஒன்பிளஸ் டிவி U1S மாடலை பொருத்தவரை இது வாய்ஸ் கண்ட்ரோல் வசதி, கீழ்புற பெசல் பகுதியில் மின்விளக்குகள் இருக்கும் என தெரிகிறது. இந்த டிவியுடன் இரண்டு போன்களை இணைத்து அவற்றில் இருக்கும் தரவுகளை ஸ்டிரீம் செய்ய முடியும்.
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது.

    சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் ரெட்மி நோட் 10எஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்தியாவில் அறிமுகமான இரண்டு மாதங்களில் சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10 ப்ரோ விலையை உயர்த்தி இருக்கிறது. முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் ரெட்மி நோட் 10 விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரெட்மி நோட் 10 மாடல் விலை ரூ. 500 வரை உயர்த்தப்பட்டது.

    அந்த வகையில் தற்போது, ரெட்மி நோட் 10 ப்ரோ மாடல் விலையும் ரூ. 500 உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வு 6 ஜிபி + 128 ஜிபி மாடலுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விலை உயர்வை தொடர்ந்து இதன் புதிய விலை ரூ. 17,499 என மாறி இருக்கிறது.
    ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ரியல்மி நிறுவனம் 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான சோதனை துவங்கி நடைபெற்று வருகிறது. எனினும், மிட்-ரேன்ஜ், பிரீமியம் பிரிவுகளில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் 5ஜி கனெக்டிவிட்டியுடன் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

     5ஜி

    இந்த நிலையில், ரியல்மி நிறுவனம் 5ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் பிரிவில் அரிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை ரியல்மி இந்தியா மற்றும் ஐரோப்பாவுக்கான தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத்  தெரிவித்தார்.

    இந்திய சந்தையில் 2022 ஆண்டு இறுதியில் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிட திட்டமிட்டு வருவதாக அவர் தெரிவித்தார். ரியல்மி குளோபல் 5ஜி நிகழ்வில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிகழ்வு கவுண்டர்பாயின்ட் ரிசர்ச், குவால்காம் மற்றும் ஜிஎஸ்எம்ஏ உடன் இணைந்து நடத்தப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் டிமென்சிட்டி 700 பிராசஸர் கொண்டிருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ22 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரு கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களும் மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகமாகி இருக்கின்றன. கேலக்ஸி ஏ22 5ஜி மாடலில் 6.6 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது.

    இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 

     சாம்சங் கேலக்ஸி ஏ22

    கேலக்ஸி ஏ22 மாடலில் 6.4 இன்ச் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இரு ஸ்மார்ட்போன்களிலும் பக்கவாட்டில் கைரேகை சென்சார், பிளாஸ்டிக் பேக் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கிறது. இரு மாடல்களும் கிரே, வைட், மின்ட் மற்றும் வைலட் நிறங்களில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் இதன் விலை 229 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 20,295 என துவங்குகிறது. கேலக்ஸி ஏ22 விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. 
    ட்விட்டர் சமூக வலைதளத்தில் துவங்கப்பட இருக்கும் புது சேவை குறித்த விவரங்கள் கூகுள் பிளே ஸ்டோர் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது.

    ட்விட்டர் நிறுவனம் ட்விட்டர் புளூ எனும் பெயரில் புது சந்தா முறையை உருவாக்கி வருவதாக பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தது. இது குறித்த விவரங்கள் ஐஒஎஸ் தளத்துக்கான ஆப் ஸ்டோரிலும் இடம்பெற்றது. தற்போது ட்விட்டர் புளூ விவரங்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பெற்று இருக்கிறது. 

    சமீபத்திய ட்விட்டர் பீட்டா பதிப்புக்கான கூகுள் பிளே ஸ்டோர் பட்டியலில் ஆப் பர்சேஸ் இடம்பெற்று இருக்கிறது. இதில் சேவைக்கான கட்டணம் 2.99 டாலர்கள் முதல் துவங்குகிறது. இதே விலை ட்விட்டர் புளூ சேவைக்கு நிர்ணயிக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது. 

     கோப்புப்படம்

    ட்விட்டர் புளூ சேவையில் பயனர் பதிவிட்ட ட்விட்களை திரும்ப பெறும் வசதி, செயலியை பல நிறங்கள் அடங்கிய தீம்கள் மூலம் கஸ்டமைஸ் செய்வது என ஏராளமான அம்சங்கள் வழங்கப்படுகின்றன. தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பெற்று இருப்பதால், விரைவில் இந்த சேவை துவங்கப்படும் என கூறப்படுகிறது. 

    புதிய ட்விட்டர் புளூ சேவை பல்வேறு சந்தா முறைகளில் கிடைக்கும். இவற்றில் அதிக விலை கொண்ட சந்தாவில் அதிக அம்சங்கள் வழங்கப்படும். ட்விட்டர் புளூ சேவைக்கான ஆரம்ப விலை மாதம் 2.99 டார்கள், இந்திய மதிப்பில் ரூ. 218 வரை நிர்ணயிக்கப்படலாம்.
    ×