என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    • டெக்னோ போவா 5 ப்ரோ மாடலில் உள்ள எல்இடி லைட்டிங்-ஐ அந்நிறுவனம் ஆர்க் இன்டர்பேஸ் என்று அழைக்கிறது.
    • இந்தியாவில் டெக்னோ 5 ப்ரோ விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.

    டெக்னோ பிரான்டின் புதிய டெக்னோ போவா 5 ப்ரோ ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் நத்திங் போன் 2 மாடலில் உள்ளதை போன்றே டிசைன் கொண்டிருக்கிறது. டெக்னோ போவா 5 ப்ரோ மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் எல்இடி லைட்டிங்-ஐ அந்நிறுவனம் ஆர்க் இன்டர்பேஸ் என்று அழைக்கிறது.

    இதில் உள்ள எல்இடி லைட்கள் கேமிங்கின் போது பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் அழைப்புகள், நோட்டிபிகேஷன், லோ பேட்டரி எச்சரிக்கை உள்ளிட்டவைகளுக்கு எல்இடி லைட்கள் எரியும். இந்த ஸ்மார்ட்போன் டார்க் இல்யூஷன் மற்றும் சில்வர் பேன்டசி என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

     

    டெக்னோ போவா 5 ப்ரோ அம்சங்கள்:

    6.78 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் டிமென்சிட்டி 6080 பிராசஸர்

    8 ஜிபி ரேம்

    128 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி

    ஆன்ட்ராய்டு 13 சார்ந்த ஹைஒஎஸ் 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    ஏஐ கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்

    16MP செல்பி கேமரா

    வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    68 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங்

    சர்வதேச சந்தையில் டெக்னோ போவா 5 ப்ரோ மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 16 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய டெக்னோ 5 ப்ரோ மாடலின் இந்திய வெளியீடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. எனினும், அறிமுக தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. புதிய டெக்னோ போவா 5 ப்ரோ விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.

    • இரு ஸ்மார்ட்போன்களும் மூன்ஸ்டோன் சில்வர், பேஸ்டல் புளூ மற்றும் ஜேட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
    • புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ் வழங்கப்படுகிறது.

    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை ரெட்மி பிரான்டிங்கில் அறிமுகம் செய்து இருக்கிறது. ரெட்மி 12 மற்றும் ரெட்மி 12 5ஜி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 10 ஆயிரத்தில் துவங்கி ரூ. 13 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ரெட்மி 12 மாடலில் 6.79 இன்ச் Full HD, LCD, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 6 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி மெமரி ஸ்டோரேஜ், ஆன்ட்ராய்டு 13 சார்ந்த எம்ஐயுஐ 14, 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச், 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

     

    ரெட்மி 12 5ஜி மாடலில் 6.79 இன்ச் Full HD, LCD, 90Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 256 ஜிபி மெமரி ஸ்டோரேஜ், ஆன்ட்ராய்டு 13 சார்ந்த எம்ஐயுஐ 14, 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச், 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    விலை விவரங்கள்:

    ரெட்மி 12 மற்றும் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன்கள் மூன்ஸ்டோன் சில்வர், பேஸ்டல் புளூ மற்றும் ஜேட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. ரெட்மி 12 மாடலின் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது. இதன் டாப் என்ட் மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ரெட்மி 12 5ஜி மாடலின் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என்று துவங்கி, டாப் என்ட் மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் 4-ம் தேதி துவங்குகிறது.

    • பயர் போல்ட் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை பிரீமியம் பிரிவில் நிலை நிறுத்தி இருக்கிறது.
    • புதிய பயர் போல்ட் ஸ்மார்ட்வாட்ச் பிரீமியம் டிசைன், ப்ளூடூத் காலிங் வசதிகளை கொண்டிருக்கிறது.

    பயர் போல்ட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. பயர் போல்ட் ப்லிசர்டு அல்ட்ரா என்று அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்வாட்ச் பிரீமியம் டிசைன் கொண்டிருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை 1.28 இன்ச் HD டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங், ஏராளமான உடல்நல மற்றும் ஆரோக்கிய அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    இத்துடன் பில்ட்-இன் ஸ்பீக்கர், மைக்ரோபோன், சுழலும் கிரவுன், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டிசைன், வட்ட வடிவம் கொண்ட டயல் வழங்கப்பட்டு இருக்கிறது. நூற்றுக்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கும் பயர் போல்ட் ப்லிசர்டு அல்ட்ரா மாடலில் உள்ள பேட்டரி அதிகபட்சம் ஏழு நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது.

     

    பயர் போல்ட் ப்லிசர்டு அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள்:

    1.28 இன்ச் TFT LCD டிஸ்ப்ளே, 240x240 பிக்சல் ரெசல்யூஷன்

    வட்ட வடிவம் கொண்ட டயல்

    ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டிசைன்

    சுழலும் கிரவுன், பிரீமியம் டிசைன்

    பில்ட்-இன் ஸ்பீக்கர், மைக்ரோபோன்

    ப்ளூடூத் காலிங்

    உடல நல டிராக்கிங் அம்சங்கள்

    100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    பில்ட்-இன் கேம்ஸ்

    ஏழு நாட்களுக்கு பேட்டரி பேக்கப்

     

    விலை விவரங்கள்:

    பயர் போல்ட் ப்லிசர்டு அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 3 ஆயிரத்து 499 என்று பயர் போல்ட் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இதன் விலை ரூ. 21 ஆயிரம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை பயர் போல்ட் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் ஆகஸ்ட் 2-ம் தேதி துவங்குகிறது.

    • ஐபோன் 15 ப்ரோ, 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களை சுற்றி இருக்கும் பெசல்கள் 1.5mm ஆக குறைக்கப்படுகிறது.
    • ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்கள் டைட்டானியம் பிரேம்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் தனது முற்றிலும் புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், ஐபோன் 15 சீரிஸ் பற்றிய ஏராளமான விவரங்கள் இணையத்தில் பலமுறை வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் ஐபோன் 15 சீரிஸ் விலை அதன் முந்தைய வெர்ஷனை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    இது பற்றி ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. லோ-இன்ஜெக்ஷன் பிரெஷர் ஓவர் மால்டிங் எனும் புதிய உற்பத்தி தொழில்நுட்பம் (LIPO) காரணமாக இது சாத்தியமாக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களை சுற்றி இருக்கும் பெசல்கள் 2.2mm-இல் இருந்து 1.5mm ஆக குறைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. முன்னதாக ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 மாடல்களில் LIPO தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதே தொழில்நுட்பம் எதிர்கால ஐபேட் மாடல்களிலும் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

    மெல்லிய பெசல்கள் மட்டுமின்றி ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்கள் டைட்டானியம் பிரேம்களை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இவை தற்போதைய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிரேம்களை விட குறைந்த எடை, அதிக விலை கொண்டிருக்கின்றன. இதன் மூலம் நான்கு மாடல்களின் விலையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் வழங்கப்படும் பிராசஸர் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இவை தற்போதைய ஏ16 சிப்செட்-ஐ விட அதிவேகமாக இருக்கும். இந்த சிப்செட் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    Photo Courtesy: 9To5Mac

    • ஹானர் நிறுவனத்தின் புதிய டேப்லெட் ஆன்ட்ராய்டு 13 சார்ந்த ஒஎஸ் கொண்டிருக்கிறது.
    • ஹானர் பேட் X9 மாடல் மொத்தத்தில் ஸ்பேஸ் கிரே எனும் ஒற்றை நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது.

    ஹானர் பிரான்டு இந்திய சந்தையில் ரி என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஸ்மார்ட்போன்கள் தவிர ஹானர் பிரான்டு லேப்டாப் மற்றும் டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது ஹானர் பேட் X9 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய டேப்லெட் மாடல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஹானர் பேட் X8 மாடலை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. புதிய ஹானர் பேட் X9 மாடல் ரியல்மி பேட் 2, ஒப்போ பேட் ஏர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

     

    அம்சங்களை பொருத்தவரை ஹானர் பேட் X9 மாடலில் 11.5 இன்ச் டிஸ்ப்ளே, சுற்றிலும் சிமெட்ரிக்கல் பெசல்கள், 2K ரெசல்யூஷன், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஹை-ரெஸ் ஆடியோ, மெட்டல் யுனிபாடி, 5MP சென்சார், 5MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இந்த டேப்லெட் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் கொண்டிருக்கிறது.

    இத்துடன் 4 ஜிபி ரேம், 3 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி மெமரி, 7250 எம்ஏஹெச் பேட்டரி, 22.5 வாட் சார்ஜிங் வழங்கப்படுகிறது. இந்த டேப்லெட்-ஐ முழுமையாக சார்ஜ் செய்தால் 13 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. ஹானர் பேட் X9 மாடலில் ஆன்ட்ராய்டு 13 சார்ந்த மேஜிக்யுஐ 7.1 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஹானர் பேட் X9 மாடலின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அறிமுக விலை ஆகும். இந்த டேப்லெட் ஸ்பேஸ் கிரே எனும் ஒற்றை நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது.

    இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை ஆகஸ்ட் 2-ம் தேதி துவங்க இருக்கிறது. புதிய ஹானர் பேட் X9 மாடலை முன்பதிவு செய்வோருக்கு ரூ. 500 தள்ளுபடி, ஹானர் ப்ளிப் கேஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.

    • போக்கோ பாட்ஸ் இயர்பட்ஸ் மாடலில் 12 மில்லிமீட்டர் டிரைவர்கள், கூகுள் பாஸ்ட் பேர் சப்போர்ட் உள்ளது.
    • இந்த இயர்பட்ஸ்-ஐ 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 90 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும்.

    போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய போக்கோ பாட்ஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்தது. புதிய போக்கோ பாட்ஸ் அம்சங்கள், ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இது வித்தியாசமான நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய போக்கோ பாட்ஸ் இயர்பட்ஸ் மாடலில் 12 மில்லிமீட்டர் டிரைவர்கள், கூகுள் பாஸ்ட் பேர் சப்போர்ட், ப்ளூடூத் 5.3, IPX4 வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி, டச் கன்ட்ரோல்கள், லோ-லேடன்சி மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 30 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இதனுடன் வழங்கப்படும் சார்ஜிங் கேசில் 440 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. பாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் இந்த இயர்பட்ஸ்-ஐ 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 90 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும்.

    போக்கோ பாட்ஸ் அம்சங்கள்:

    ப்ளூடூத் 5.3, எஸ்.பி.சி. கோடெக், கூகுள் பாஸ்ட் பேர்

    12 மில்லிமீட்டர் டிரைவர்கள்

    என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன்

    60ms லோ-லேடன்சி கேமிங் மோட்

    டச் கன்ட்ரோல்கள்

    ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட்

    இயர்பட்-இல் 34 எம்ஏஹெச் பேட்டரி

    சார்ஜிங் கேசில் 440 எம்ஏஹெச் பேட்டரி

    10 நிமிட சார்ஜில் 90 நிமிடங்களுக்கு பேக்கப்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    போக்கோ பாட்ஸ் இயர்பட்ஸ் மிட்நைட் குரூவ் நிறத்தில் கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ் பிளாக் மற்றும் எல்லோ நிறங்களில் கிடைக்கிறது. அறிமுக சலுகையாக இந்த இயர்பட்ஸ் 1,199 விலையில் வாங்கிட முடியும். விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் துவங்குகிறது.

    • இந்த மாடல் சீனாவை கடந்து மேலும் சில நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படுகிறது.
    • ஒப்போ பைன்ட் N3 மாடலில் 6.5 இன்ச் AMOLED FHD+ 120Hz ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.

    ஒப்போ நிறுவனம் தனது புதிய போல்டபில் ஸ்மார்ட்போனிற்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. இது ஒப்போ பைன்ட் N3 பெயரில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. ஒப்போ பைன்ட் N3 மாடல் ஆகஸ்ட் மாத வாக்கில் பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் முந்தைய பைன்ட் N மற்றும் பைன்ட் N2 போன்று சீன சந்தையில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டது. புதிய பைன்ட் N3 விவரங்கள் தாய்லாந்து மற்றும் இந்தோனேசிய சான்று அளிக்கும் வலைதளங்களில் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி இந்த மாடல் சீனாவை கடந்து மேலும் சில நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று உறுதியாகி இருக்கிறது.

    ஒப்போ பைன்ட் N3 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    ஒப்போ பைன்ட் N3 மாடலில் 6.5 இன்ச் AMOLED FHD+ 120Hz ஸ்கிரீன், 8 இன்ச் AMOLED 2K 120Hz டிஸ்ப்ளே, 4805 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் வயர்டு, 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி LPDDR5x ரேம், 1 டிபி UFS 4.0 மெமரி வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 48MP அல்ட்ரா வைடு லென்ஸ், 32MP டெலிபோட்டோ கேமரா, 32MP அல்லது 20MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த மாடலில் ஆன்ட்ராய்டு 13 சார்ந்த கலர் ஒஎஸ் 13.1 வழங்கப்படலாம்.

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான பதிவு வெளியாகி உள்ளது.
    • புதிய ஒன்பிளஸ் ஒபன் வெளியீடு பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியான நிலையில், இது ஒன்பிளஸ் போல்டு அல்லது ஒன்பிளஸ் V போல்டு போன்ற பெயர்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.

    எனினும், சமீபத்திய தகவல்களில் இந்த மாடல் ஒன்பிளஸ் ஒபன் எனும் பெயரில் அறிமுகமாகும் என்று கூறப்பட்டது. தற்போது ஒன்பிளஸ் ஒபன் தான் அந்நிறுவனத்தின் முதல் மடிக்ககூடிய ஸ்மார்ட்போனின் பெயராக இருக்கும் என்று கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான பதிவை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

     

    அதில் "We OPEN when others FOLD" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சாம்சங் நிறுவனம் தென்கொரியாவில் தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நிலையில், ஒன்பிளஸ் இந்த பதிவை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஒபன் பெயரில் அறிமுகமாகும் என்று உறுதியாகி இருக்கிறது.

    புதிய ஒன்பிளஸ் ஒபன் வெளியீடு பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், இதன் வெளியீடு அடுத்த மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலுடன் ஒன்பிளஸ் நார்டு CE 3 மற்றும் ஏஸ் 2 ப்ரோ மாடல்களும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

    • சாம்சங் கேலக்ஸி Z போல்டு 5 மாடல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பார் கேலக்ஸி பிராசஸர் கொண்டிருக்கிறது.
    • கேலக்ஸி Z போல்டு 5 மாடல் புளூ, பேன்டம் பிளாக் மற்றும் கிரீம் நிறங்களில் கிடைக்கிறது.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z போல்டு 5 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை தென் கொரியாவில் நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்தது. இதில் 7.6 இன்ச் இன்பினிட்டி பிளெக்ஸ் டைனமிக் AMOLED 2x ஸ்கிரீன், 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், 4MP அன்டர் டிஸ்ப்ளே கேமரா கொண்டிருக்கிறது.

    இத்துடன் 6.2 இன்ச் HD+ டைனமிக் AMOLED டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பார் கேலக்ஸி பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    சாம்சங் கேலக்ஸி Z போல்டு 5 அம்சங்கள்:

    7.6 இன்ச் 2176x1812 பிக்சல் QXGA+ டைனமிக் AMOLED 2x டிஸ்ப்ளே

    120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட்

    6.2 இன்ச் 2316x904 HD+ டைனமிக் AMOLED 2x கவர் டிஸ்ப்ளே

    120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு

    ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பார் கேலக்ஸி பிராசஸர்

    12 ஜிபி LPDDR5x ரேம்

    256 ஜிபி, 512 ஜிபி, 1 டிபி UFS 4.0 மெமரி

    ஆன்ட்ராய்டு 13 மற்றும் ஒன் யுஐ 5.1.1

    50MP பிரைமரி கேமரா

    12MP அல்ட்ரா வைடு கேமரா

    10MP டெலிபோட்டோ கேமரா

    10MP செல்பி கேமரா

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    வாட்டர் ரெசிஸ்டன்ட் IP68

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளுடூத்

    யுஎஸ்பி டைப் சி

    4400 எம்ஏஹெச் பேட்டரி

    25 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    15 வாட் Qi வயர்லெஸ் சார்ஜிங்

    4.5 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி Z போல்டு 5 மாடல் புளூ, பேன்டம் பிளாக் மற்றும் கிரீம் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் பல்வேறு அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.

    • நாய்ஸ் லுனா ரிங் குறைந்த எடை கொண்டிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட் ரிங்-இல் பைட்டர் ஜெட் தர டைட்டானியம் பாடி, டைமன்ட் போன்ற கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது.

    நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய லுனா ரிங் மாடலை அறிமுகம் செய்தது. இதன் மூலம் நாய்ஸ் நிறுவனம் ஸ்மார்ட் ரிங் பிரிவில் களமிறங்கி இருக்கிறது. பயனர் வாழ்க்கை முறையை மேம்படுத்தும் வகையில், ஏராளமான அம்சங்கள், டிராக்கிங் வசதி உள்ளிட்டவைகளை லுனா ரிங் கொண்டிருக்கிறது.

    சமீபத்தில் போட் நிறுவனம் தனது ஸ்மார்ட் ரிங் மாடலை அறிமுகம் செய்த நிலையில், தற்போது இந்த மாடல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாய்ஸ் லுனா ரிங் மாடல் சவுகரியமாக உணர செய்யும் வகையில் குறைந்த எடையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட் ரிங் 3 மில்லிமீட்டர் அளவில் மெல்லிய டிசைன் கொண்டிருக்கிறது.

     

    பைட்டர் ஜெட் தர டைட்டானியம் பாடி மற்றும் டைமன்ட் போன்ற கோட்டிங் வழங்கப்பட்டு இருப்பதால், நீண்ட கால பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில், ஸ்கிராட்ச்களை தாங்கும் வகையிலும், எளிதில் துரு பிடிக்காத வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேம்பட்ட சென்சார்கள் வழங்கப்பட்டு இருப்பதால், உடல்நல விவரங்களை கச்சிதமாக அறிந்து கொள்ள முடியும்.

    நாய்ஸ் லுனா ரிங் அம்சங்கள்:

    குறைந்த எடை கொண்ட மிக மெல்லிய டிசைன்

    70-க்கும் அதிக உடல்நல விவரங்களை டிராக் செய்யும் வசதி

    BLE 5 தொழில்நுட்ரம்

    நாய்ஸ்பிட் ஆப் வசதி

    மேம்பட்ட சென்சார்கள்

    பில்ட்-இன் அல்காரிதம்கள்

    உடல்நல சென்சார்கள்

    ஐஒஎஸ் 14-க்கு பிந்தைய மற்றும் ஆன்ட்ராய்டு 6-க்கு பிந்தய ஒஎஸ் சப்போர்ட்

    வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி

    60 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப்

    7 அளவுகள் மற்றும் 5 வித நிறங்களில் கிடைக்கிறது

    முன்பதிவு மற்றும் சலுகை விவரங்கள்:

    லுனா ரிங் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு செய்வோருக்கு பிரத்யேக தள்ளுபடி மற்றும் பலன்கள் வழங்கப்படுகிறது.

    - ரூ. 2 ஆயிரம் மட்டும் செலுத்தி Early Access பெற முடியும்

    - வெளியாகும் நாளிலேயே வாங்கும் போது ரூ. 1000 கூடுதல் தள்ளுபடி

    - நாய்ஸ் i1 ஸ்மார்ட் ஐவேர் சாதனத்தை 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 4 ஆயிரத்து 499-க்கு வாங்கிட முடியும்

    - ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள காப்பீடு

    • இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடலுக்கான டீசர் வெளியாகி இருக்கிறது.
    • புதிய இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ மாடல் வித்தியாசமான டிசைன் கொண்டிருக்கிறது.

    இன்பினிக்ஸ் நிறுவனம் தனது GT 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்பதிவு இந்தியாவில் ஆகஸ்ட் 3-ம் தேதி துவங்கும் என்று அறிவித்து இருக்கிறது. மேலும் முன்பதிவு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    முந்தைய தகவல்களின் படி, இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் சைபர் மெக்கா டிசைன் வழங்கப்படும் என்றும் இது எதிர்கால தோற்றம், வித்தியாசமாக காட்சியளிக்கும் என்றும் தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் டிரான்ஸ்பேரன்ட் போட்டோ க்ரோமேடிக் ரியர் பேனல் டிசைன் வழங்கப்படுகிறது.

    இதுவரை உருவாக்கியதிலேயே சக்திவாய்ந்த மெஷின்களில் ஒன்றாக GT சீரிஸ் இருக்கும் என்று இன்பினிக்ஸ் தெரிவித்து உள்ளது. இத்துடன் விளம்பரம் இல்லாத ஒஎஸ் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் வெளியீடு மற்றும் இதர விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட்டு விடும். இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.

     

    முன்பதிவு சலுகைகள்:

    - முதல் 5 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு யுனிவர்சல் ஷோல்டர் ட்ரிகர், கேமிங் ஃபிங்கர் ஸ்லீவ், கார்பன் பாக்ஸ் உள்ளிட்டவை அடங்கிய ப்ரோ கேமிங் கிட் வழங்கப்படுகிறது.

    - ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி அல்லது எக்சேன்ஜ் முறையில் ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி

    - ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகை

    • ஆப்பிள் M3 சிப்செட்-ஐ TSMC உற்பத்தி செய்யும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
    • 2024 மத்தியில் M3 சிப்செட் கொண்ட 14-இன்ச், 16-இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்கள் அறிமுகமாகும் என தகவல்.

    ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை ஆப்பிள் சிலிகான் சிப்செட்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. M2 சிப்செட்களின் மேம்பட்ட வெர்ஷனாக M3 பிராசஸர்களை ஆப்பிள் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மாதங்களில் புதிய M3 சிப்செட் கொண்ட மேக்புக் ஏர் மாடல் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் M3 சிப்செட் கொண்ட டாப் என்ட் மேக்புக் ப்ரோ மற்றும் மேக் மினி மாடல்களை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என்று தெரிவித்து இருக்கிறார். M3 சிப்செட் கொண்ட மேக் மினி மாடல் நிச்சயம் வெளியாகும் எனினும், இப்போதைக்கு இது வெளியாகாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

     

    2024 மத்தியில் M3 சிப்செட் கொண்ட 14-இன்ச் மற்றும் 16-இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அவவர் தெரிவித்து இருக்கிறார். M3 சிப்செட் கொண்ட முதற்கட்ட சாதனங்கள் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் 13-இன்ச் மேக்புக் ப்ரோ, 13 இன்ச் மேக்புக் ஏர் மற்றும் 24-இன்ச் ஐமேக் மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிவித்து இருகிறார்.

    புதிய ஆப்பிள் M3 சிப்செட்-ஐ TSMC உற்பத்தி செய்யும் என்றும் இது 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இது தற்போதைய M2 சிப்செட்களை விட அதிக திறன் கொண்டிருக்கும். தற்போதைய M2 சிப்செட்கள் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×