என் மலர்
கணினி
வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புதிய அம்சங்கள் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப்பில் அவ்வப்போது புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் தனது பீட்டா செயலியில் 2.20.203.3 அப்டேட்டை வெளியிட்டு உள்ளது.
புதிய அப்டேட்டில் மிஸ்டு கால்களில் இணைவது, பேஸ் அன்லாக் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. தற்சமயம் க்ரூப் கால்களை ஏற்கவில்லை எனில், கால் செய்தவர் முயற்சிக்காமல் பயனர்களால் அதில் இணைய முடியாது.

தற்சமயம், இந்த பிரச்சனையை தீர்க்க மிஸ்டு கால்களில் இணைந்து கொள்ளும் வசதியை வாட்ஸ்அப் சோதனை செய்து வருகிறது. இந்த வசதி க்ரூப் கால் நிறைவுறும் வரையில் செயல்படும். இதனை இயக்க பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை திறந்தாலே போதுமானது. பின் திரையில் அழைப்பில் இணைந்து கொள்ள கோரும் ஆப்ஷன் தோன்றும்.
இத்துடன் செயலியின் பாதுகாப்பை மேம்படுத்த கைரேகை வசதியுடன் பேஸ் அன்லாக் வசதியும் வாட்ஸ்அப்பில் சோதனை செய்யப்படுகிறது. சமீபத்திய ஸ்மார்ட்போன்களில் பேஸ் அன்லாக் வசதி அதிக பிரபலமாகி வருவதை அடுத்து வாட்ஸ்அப் இதனை தனது செயலியில் சேர்ப்பதற்கான சோதனையை துவங்கி இருக்கிறது.
இந்திய சந்தையில் பப்ஜி மொபைல் கேமிற்கு விதிக்கப்பட்ட தடை நீங்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவில் பப்ஜி மொபைல் கேமிற்கு விதிக்கப்பட்ட தடை விரைவில் நீங்கலாம் என இணையத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது. பப்ஜி கார்ப்பரேஷன் இந்தியாவில் இணை மேலாளர் பணிக்கு ஆட்களை தேடுவதாக லின்க்டு-இன் தளத்தில் பதிவிட்டு இருக்கிறது.
இதன் காரணமாக பப்ஜி மொபைல் கேமிற்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை விரைவில் நீங்க வாய்ப்புகள் இருப்பதாக இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பப்ஜி வெளியிட்ட விவரங்களின் படி, கார்ப்பரேட் டெவலப்மென்ட் பிரிவு மேலாளர் பதிவிக்கு தகுதியுள்ளவர்களை தேர்வு செய்வதாக தெரிவித்து இருக்கிறது. இந்த பதவியில் இருப்பவர் இந்திய சந்தைக்கு ஏற்ற வகையிலான முதலீடு, வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கான திட்டமிடல் உள்ளிட்டவைகளை மேற்கொள்வார்.
இத்துடன் இந்த பணியில் சேர்பவர் பப்ஜி இந்தியாவுக்கான கட்டமைப்பு பணிகளை தென் கொரியாவில் செயல்படும் கிராப்டன் தலைமையகத்தின் வழிகாட்டுதலுடன் மேற்கொள்ளவார் என தெரிகிறது.
இந்திய அலுவலகத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருப்பதால், விரைவில் பப்ஜி மொபைல் இந்தியாவில் வெளியாகலாம் என பலரும் கூறி வருகின்றனர். எனினும், லின்க்டு இன் பதிவில் பப்ஜி பிரிவுக்கே ஆட்கள் தேவை என பதிவிடப்பட்டு இருக்கிறது.
மத்திய அரசு கடந்த மாத துவக்கத்தில் பப்ஜி மொபைல் கேமிற்கு மட்டும் தடை விதித்தது. அந்த வகையில் இந்த கேம் தொடர்ந்து கணினி மற்றும் கேமிங் கன்சோல்களில் கிடைக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அசத்தல் அம்சங்களுடன் ஜியோபேஜஸ் வெப் பிரவுசர் சேவையை அறிமுகம் செய்து இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபேஜஸ் பெயரில் வெப் பிரவுசர் சேவையை அறிமுகம் செய்து இருக்கிறது. ஜியோபேஜஸ் குரோமியம் ப்ளின்க் சார்ந்த பிரவுசர் ஆகும். இந்த பிரவுசரில் என்க்ரிப்ட்டெட் கனெக்ஷன் வசதி மற்றும் எட்டு இந்திய மொழிகளில் இயக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
ஜியோபேஜஸ் பிரவுசர் கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது. கூகுள் பிளே லிஸ்டிங்கில் புதிய வெப் பிரவுசர் இந்திய மொழிகளில் உள்ளூர் செய்திகள், ஸ்மார்ட் டவுன்லோட் மேனேஜர், இன்காக்னிட்டோ பிரவுசிங் மற்றும் தீம் உள்ளிட்ட வசதிகளை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் இதில் பின்-லாக் வசதியுடன் இன்காக்னிட்டோ மோட், பில்ட் இன் ஆட் பிளாக் பிளஸ் போன்ற ஆப்ஷன்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் இந்தி, மராத்தி, தமிழ், குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் பெங்காலி போன்ற மொழிகளில் இயக்கும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.
குரோமியம் சார்ந்த பிரவுசர் என்பதால் இது வேகமாக இருப்பதுடன் பயனர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் என ஜியோ தெரிவித்து உள்ளது. இதில் இணையப்பக்கங்கள் வேகமாக ரென்டர் ஆவதால், வேகமான பிரவுசிங் செய்ய முடியும்.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலில் பிரச்சனை ஏற்படுவதாக பயனர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஆப்பிள் நிறுவனம் தனது குறைந்தவிலை ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலை செப்டம்பர் மாத நிகழ்வில் அறிமுகம் செய்தது. புதிய ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடல் தற்சமயம் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்நிலையில், புதிய வாட்ச் எஸ்இ மாடலில் பிரச்சனை ஏற்படுவதாக பயனர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடல் அதிக சூடாகிறது என பயனர்கள் ரெடிட் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இவ்வாறு ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலில் கோளாறு தெரிவித்தவர்களில் ஆறில் மூன்று பேருக்கு ஆப்பிள் வாட்ச் மாடலுக்கான பணம் திரும்ப வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
வாட்ச் எஸ்இ சார்ஜ் செய்யும் போது அதிக சூடானது என சிலர் தெரிவித்தனர். மேலும் சிலர் கையில் அணிந்திருக்கும் போதே வாட்ச் அதிக சூடானது என தெரிவித்தனர். இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இது தென் கொரிய சந்தையில் உற்பத்தி செய்யப்பட்ட யூனிட்களில் மட்டும் இந்த பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் எஸ்இ வாங்கியவர்கள் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இந்திய சந்தையில் புதிய ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடல் விலை ரூ. 29,990 முதல் துவங்குகிறது.
வாட்ஸ்அப் வெப் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் அம்சத்திற்கான அப்டேட் விரைவில் வெளியாக இருக்கிறது.
உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப், அவ்வப்போது புதிய அம்சங்களை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் வாட்ஸ்அப் தனது வெப் பதிப்பில் புதிய அம்சங்களை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் வாட்ஸ்அப் வெப் பதிப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதிகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப் வெப் 2.2043.7 பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் விரைவில் இந்த அம்சத்திற்கான ஸ்டேபில் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப் ஏற்கனவே தனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் சேவையை வழங்கி இருக்கிறது. அந்த வரிசையில் தற்சமயம் இந்த அம்சம் வாட்ஸ்அப் வெப் தளத்திலும் வழங்கப்பட இருக்கிறது. புதிய அம்சம் வழங்குவது பற்றி வாட்ஸ்அப் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.
எனினும், இந்த அம்சம் தற்சமயம் பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சத்திற்கான ஸ்டேபில் அப்டேட் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் ரூ. 3 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய பிட்னஸ் பேண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி பிட் 2 பெயரில் புதிய பிட்னஸ் பேண்ட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 1.1 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 3டி வளைந்த கிளாஸ் கொண்டிருக்கிறது.
அதிகபட்சம் 5 விதமான நடவடிக்கைகளை கண்டறிந்து டிராக் செய்யும் வசதி, இதய துடிப்பு சென்சார், உடலில் எரிக்கப்பட்ட கலோரி விவரம், ஸ்லீப் டிராக்கிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

சாம்சங் கேலக்ஸி பிட் 2 சிறப்பம்சங்கள்
- 1.1 இன்ச் 126x294 AMOLED டிஸ்ப்ளே
- 2 எம்பி ரேம்
- 32 எம்பி மெமரி
- பிளாஸ்டிக் ஸ்டிராப்
- ப்ளூடூத்
- ஆக்டிவிட்டி மற்றும் ஸ்லீப் டிராக்கிங்
- 5ஏடிஎம் மற்றும் ஐபி68 வாட்டர் ரெசிஸ்டண்ட்
- 159 எம்ஏஹெச் பேட்டரி
கேலக்ஸி பிட்2 மாடல் பிளாக் மற்றும் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அமேசான் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சியோமி நிறுவனம் தனது 80 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.
சியோமி நிறுவனம் 80வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. சீன சமூக வலைதளமான வெய்போ பதிவு மூலம் புதிய தொழில்நுட்பம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய 80 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் 4000 எம்ஏஹெச் பேட்டரியை 19 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும். வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் தற்போதைய வயர்டு சார்ஜிங் வசதியை மாற்றும் என சியோமி தெரிவித்து உள்ளது.

சியோமி நிறுவனம் மாடிபை செய்த எம்ஐ 10 ப்ரோ மாடலில் 80 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி இயங்கும் வீடியோவை யூடியூப் தளத்தில் பதிவிட்டு இருக்கிறது. புதிய பாஸ்ட் சார்ஜிங் வசதி பேட்டரியை 0 முதல் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 8 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது.
முன்னதாக மார்ச் மாத வாக்கில் சியோமி 40 வாட் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. பின் மே மாதத்தில் 30 வாட் வயர்லெஸ் சார்ஜரை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட எம்ஐ 10 அல்ட்ரா மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
சோனி நிறுவனம் பிஎஸ்5 சீரிஸ் கன்சோல்களின் இந்திய விலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
சோனி நிறுவனத்தின் புதுவரவு கேமிங் கன்சோல் பிஎஸ்5 சீரிஸ் இந்திய விலை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் இரு மாடல்களின் விலை எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் மற்றும் சீரிஸ் எக்ஸ் மாடல்களை விட குறைவு. தற்சமயம் விலை அறிவிக்கப்பட்ட நிலையில், விற்பனை விவரம் தொடர்ந்து மர்மமாகவே உள்ளது.
விலையை பொருத்தவரை பிஎஸ்5 ஸ்டான்டர்டு வேரியண்ட் விலை ரூ. 49,990 என்றும் டிஜிட்டல் எடிஷன் விலை ரூ. 39,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஸ்டான்டர்டு வேரியண்ட்டில் புளூ-ரே டிரைவ் வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் எடிஷனில் இந்த டிரைவ் வழங்கப்படவில்லை.

எக்ஸ்பாக்ஸ் போன்று இல்லாமல், பிஎஸ்5 இரண்டு வேரியண்ட்களின் ஹார்டுவேர் அம்சங்களும் சமமாகவே வழங்கப்பட்டு உள்ளன. ஸ்டான்டர்டு வேரியண்ட்டில் கேம்களை சிடிக்களில் இருந்து லோட் செய்ய முடியும். இரு கன்சோல்களுடன் பல்வேறு கேமிங் அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.
பிளே ஸ்டேஷன் ஹெச்டி கேமரா ரூ. 5,190 விலையிலும், பல்ஸ் 3டி வயர்லெஸ் ஹெட்செட் ரூ. 8,590 விலையில் கிடைக்கிறது. இதேபோன்று பிளே ஸ்டேஷன் மீடியா ரிமோட் ரூ. 2,590 என்றும் டூயல் சென்ஸ் சார்ஜிங் ஸ்டேஷன் கன்ட்ரோலர்கள் ரூ. 2,590 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் சிலிகான் பிராசஸர் கொண்ட மேக் மாடலின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் மற்றும் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், ஆப்பிள் சிலிகான் பிராசஸர் கொண்ட மேக் மாடல்கள் நவம்பர் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இது உண்மையாகும் பட்சத்தில் அடுத்தடுத்த மாதங்களில் புதிய சாதனங்களை ஆப்பிள் முதல் முறையாக அறிமுகம் செய்ததாக இருக்கும். மேலும் அனைத்து நிகழ்வுகளும் விர்ச்சுவல் முறையில் நடைபெறுகின்றன.
முன்னதாக பிரபல ஆப்பிள் வல்லுநர் மிங் சி கியோ ஏஆர்எம் மேக் சாதனம் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடலாக இருக்கும் என தெரிவித்தார். மேலும் ஆப்பிள் அடுத்தடுத்து புதிய சாதனங்களை தொடர்ச்சியாக வெளியிடும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அந்த வகையில் புதிய மேக் மாடலுடன் உயர் ரக ஒவர் இயர் ஹெட்போன் மாடலான ஏர்பாட்ஸ் ஸ்டூடியோவும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் ஆப்பிள் ஐபோன் வெளியீட்டு நிகழ்விலேயே புதிய ஏர்டேக்ஸ் மாடலை அறிமுகம் செய்யும் என கூறப்பட்டது.
சியோமி நிறுவனம் எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2சி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.
சியோமி நிறுவனம் எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2சி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த எம்ஐ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 மாடலின் விலை குறைந்த எடிஷன் ஆகும்.
புதிய இயர்போனில் ப்ளூடூத் 5, டூயல் மைக்ரோபோன்கள், 14.2 எம்எம் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் ஏஏசி கோடெக், என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் கேசை திறந்ததும், எம்ஐயுஐ போனுடன் இணைந்து கொள்கிறது.

எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2சி சிறப்பம்ங்கள்
- ப்ளடூத் 5
- 14.2 எம்எம் டிரைவர்கள்
- தொடிதிரை வசதி
- டூயல் மைக்ரோபோன்கள்
- இன்பிராரெட் சென்சார்
- குறைந்த எடை கொண்ட வடிவமைப்பு
- 5 மணி நேர பிளேபேக்
- யுஎஸ்பி டைப் சி சார்ஜிங்
எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2சி மாடல் வைட் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அமேஸ்பிட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடல் ரூ. 3 ஆயிரம் பட்ஜெட்டில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹூவாமி நிறுவனம் இந்திய சந்தையில் அமேஸ்பிட் பிப் யு ஸ்மார்ட் வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. இதில் 1.43 இன்ச் கலர் டிஎப்டி டச் டிஸ்ப்ளே, 50-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள், 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட், 9 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் மற்றும் ப்ளூடூத் மியூசிக் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் 60-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட், ஹை-பிரெசிஷன் தொடர்ச்சியான இதய துடிப்பு டிராக்கிங் மற்றும் உடல்நலம் கண்டறியும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

அமேஸ்பிட் பிப் யு சிறப்பம்சங்கள்
- 1.43 இன்ச் 320x302 பிக்சல் கலர் டிஎப்டி டிஸ்ப்ளே
- நோட்டிபிகேஷன் வசதி
- 60-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
- இதய துடிப்பு சென்சார்
- மன அழுத்தத்தை டிராக் செய்யும் வசதி
- மூச்சு பயிற்சி அம்சம்
- ப்ளூடூத் 5 எல்இ
- மியூசிக் கண்ட்ரோல் வசதி
- வாட்டர் ரெசிஸ்டண்ட்
- 225 எம்ஏஹெச் பேட்டரி
அமேஸ்பிட் பிப் யு விலை ரூ. 3999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், அமேசான் தளத்தின் சிறப்பு விற்பனையின் போது ரூ. 3499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
100 வாட் பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் தொழிலநுட்பத்தின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களான ஒன்பிளஸ், ஒப்போ, விவோ, சியோமி, சாம்சங் மற்றும் ஹூவாய் சமீப காலமாக பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கின்றன. பாஸ்ட் சார்ஜிங் மட்டுமின்றி வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பமும் பிரபலமான ஒன்றாக மாறி வருகிறது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் வயர்லெஸ் சார்ஜிங்கில் 100 வாட் மின்திறனை வழங்கும் தொழில்நுட்பம் விரைவில் சாத்தியமாகும் என கூறப்படுகிறது. சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 100 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை தங்களின் ஸ்மார்ட்போன்களில் வழங்க 2021 ஆண்டை இலக்காக நிர்ணயித்து இருப்பதாக தெரிகிறது.

இதுவரை எந்த ஸ்மார்ட்போனிலும் 100 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படவில்லை. சியோமி நிறுவனம் தற்சமயம் 55 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்நிறுவனம் விரைவில் 100 வாட் திறனை வழங்க முடியும் என கூறப்படுகிறது.
சியோமி வரிசையில் ஒப்போ நிறுவனமும் இணையலாம் என தெரிகிறது. இந்நிறுவனம் 65 வாட் ஏர்வூக் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. இது 4000 எம்ஏஹெச் பேட்டரியை வயர்லெஸ் முறையில் 30 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிடும். எனினும், இதுவரை இந்த அம்சம் சந்தையில் வழங்கப்படவில்லை.






