என் மலர்
தொழில்நுட்பம்
- நத்திங் போன் 2 மாடலில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த நத்திங் ஒஎஸ் 2 வழங்கப்படுகிறது.
- இந்தியாவில் நத்திங் போன் 2 முன்பதிவு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெறுகிறது.
நத்திங் நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் நத்திங் போன் 2 மாடலினை ஜூலை 11-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. சர்வதேச வெளியீட்டின் போதே, இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், புதிய நத்திங் போன் 2 மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெறுகிறது.
முன்பதிவு துவங்கி இருக்கும் நிலையில், நத்திங் போன் 2 மாடலுக்கான ஆஃப்லைன் ஆஃபர்கள் மற்றும் ஆஃப்லைன் விற்பனை தேதி பற்றிய தகவல்களை டிப்ஸ்டர் இஷான் அகர்வால் வெளியிட்டுள்ளார். நத்திங் போன் 2 மாடலுக்கான முன்பதிவு ஜூலை 12-ம் தேதி துவங்கி ஜூலை 16-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 ஆயிரம் ஆகும். விற்பனை ஜூலை 15-ம் தேதி மாலை துவங்குகிறது. முன்னதாக ரிடெயில் விற்பனையாளர்களுக்கு ஜூலை 13-ம் தேதியில் இருந்து யூனிட்கள் வழங்கப்படும்.

நத்திங் போன் 2 மாடலை வாங்குவோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி நத்திங் இயர் ஸ்டிக் மாடல் ரூ. 4 ஆயிரத்து 250 விலையில் கிடைக்கும். இத்துடன் பல்வேறு அக்சஸரீக்களுக்கு அசத்தல் தள்ளுபடியும், அடாப்டர் வாங்கும் போது 50 சதவீதம் தள்ளுபடி, கேஸ்-க்கு 40 சதவீதம் தள்ளுபடி, ஸ்கிரீன் கார்டுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு ரூ. 3 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனினும், எந்தெந்த வங்கி கார்டுகளுக்கு இது பொருந்தும், அதிகபட்சம் எவ்வளவு சலுகை கிடைக்கும் என்பது பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன.
அம்சங்களை பொருத்தவரை புதிய நத்திங் போன் 2 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 4700 எம்ஏஹெச் பேட்டரி, ௩௩ வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, Full HD+ ரெசல்யூஷன், OLED பேனல் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, EIS, 50MP அல்ட்ரா வைடு கேமரா, மேக்ரோ ஆப்ஷன், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த நத்திங் ஒஎஸ் 2, மூன்று ஆண்டுகளுக்கு ஒஎஸ் அப்டேட்கள், நான்கு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆப்டிக்கல் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.
- சாம்சங் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல்.
- கேலக்ஸி டேப் S9 சீரிசில் ஸ்டான்டர்டு, பிளஸ் மற்றும் அல்ட்ரா வேரியண்ட்கள் உள்ளன.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை ஜூலை 26-ம் தேதி நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z மடிக்கக்கூடிய சாதனங்கள், கேலக்ஸி வாட்ச் 6 சீரிஸ் மற்றும் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீட்டை ஒட்டி புதிய சாதனங்கள் பற்றிய விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இந்த வரிசையில் தற்போது கேலக்ஸி டேப் S9 சீரிஸ் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது. இது ஐரோப்பிய சந்தைக்கான விலை ஆகும். கேலக்ஸி டேப் S9 சீரிசில் ஸ்டான்டர்டு, பிளஸ் மற்றும் அல்ட்ரா என மூன்று வேரியண்ட்கள் உள்ளன.

விலை விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி டேப் S9 ( 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி) 929 யூரோக்கள்
சாம்சங் கேலக்ஸி டேப் S9 ( 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி) 1049 யூரோக்கள்
சாம்சங் கேலக்ஸி டேப் S9 பிளஸ் ( 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி) 1149 யூரோக்கள்
சாம்சங் கேலக்ஸி டேப் S9 அல்ட்ரா ( 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி) 1369 யூரோக்கள்
இந்த விலை விவரங்கள் வைபை மாடலுக்கானது ஆகும். இவற்றில் வரிகள் சேர்க்கப்பட்டு விட்டன. சாம்சங் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் விலை ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப வேறுபடும்.
அம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், குவாட் ஸ்பீக்கர் செட்டப், ஆப்டிக்கல் கைரேகை சென்சார், AMOLED 2x WQVGA+ டிஸ்ப்ளே, எஸ் பென் சப்போர்ட், IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்படுகிறது. கேலக்ஸி டேப் S9, S9 பிளஸ் மற்றும் S9 அல்ட்ரா மாடல்களில் முறையே 8400, 10,090 மற்றும் 11,200 எம்ஏஹெச் பேட்டரி யூனிட்கள் வழங்கப்படுகிறது.
- ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் அதன் முந்தைய ஐபோன் 14 ப்ரோ வெர்ஷனை போன்றே காட்சியளிக்கின்றன.
- இதே நிறம் கொண்ட ஐபோன் மாடல் ரென்டர்களும் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளன. புதிய ஐபோன் வாங்க ஒவ்வொரு ஆண்டை போன்றே, இந்த வருடமும் பலர் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த சீரிசில், ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் இடம்பெறும் என்று தெரிகிறது.
புதிய ஐபோன் 15 சீரிஸ் விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகிவிட்டன. இதில் புதிய ஐபோன் 15 சீரிஸ் அம்சங்கள், டிசைன் மற்றும் விலை விவரங்களும் அடங்கும். இந்த நிலையில், ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மாடல் புதிய நிறத்தில் கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த மாடல் டார்க் புளூ மற்றும் கிரே டோன் நிறம் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுதவிர இதே நிறம் கொண்ட ஐபோன் மாடல் ரென்டர்களும் வெளியாகி உள்ளது. ஐபோன் 15 ப்ரோ மாடல் டைட்டானியம் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும். இதே நிற வேரியண்ட் ப்ரோடோடைப் சாதனங்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த நிற வேரியண்ட் விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
டிசைனை பொருத்தவரை ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் அதன் முந்தைய ஐபோன் 14 ப்ரோ வெர்ஷனை போன்றே காட்சியளிக்கின்றன. எனினும், சிறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. இந்த மாடலில் மியூட்-ஸ்விட்ச்-க்கு மாற்றாக மல்டி-ஃபன்ஷன் மியூட் பட்டன் வழங்கப்படுகிறது. இத்துடன் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட இருக்கிறது.
ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் பெரிஸ்கோப் கேமரா தொழில்நுட்பம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இத்துடன் இந்த மாடல்களில் ஏ17 சிப்செட்கள் வழங்கப்படுகிறது. இவை மேம்பட்ட செயல்திறன் மற்றும் அம்சங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
- சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S21 FE புது வேரியண்ட் பற்றிய தகவல்கள் வெளியாகி வந்தன.
- புதிய வேரியண்ட் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸருடன் இந்தியாவில் அறிமுகம்.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி S21 FE மாடலின் ஸ்னாப்டிராகன் 888 வேரியண்டை சத்தமின்றி அறிமுகம் செய்தது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியான நிலையில், தற்போது இதன் விற்பனை ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர் வெளியிடப்பட்டு இருந்த நிலையில், கேலக்ஸி S21 FE புதிய வேரியண்ட் வெளியாகி இருக்கிறது. கேலக்ஸி S21 FE மாடல் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 49 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 44 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில், இந்த வேரியண்ட் விரைவில் அறிமுகமாகும் என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

எக்சைனோஸ் பிராசஸருக்கு மாற்றாக குவால்காம் சிப்செட் கொண்டிருக்கும் கேலக்ஸி S21 FE மாடலின் மற்ற அம்சங்கள் அதன் முந்தைய வெர்ஷனில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், கேலக்ஸி S21 FE மாடலில் 6.4 இன்ச் AMOLED Full HD+ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 7.9 மில்லிமீட்டர் தடிமனாக, 177 கிராம் எடை கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 12MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 8MP டெலிபோட்டோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
- அமெரிக்க கருவூலத்துறை மந்திரி சீனாவுக்கு வருவதற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
- OpenKylin என்ற பெயர், பழம்பெரும் சீன புராணங்களில் உள்ள ஒரு புராணக்கதையை குறிக்கிறது.
கம்ப்யூட்டர் செயல்பாடுகளில் மிகவும் முக்கியமான பணியை செய்வது இயங்குதளம் (Operating System). கம்ப்யூட்டர் பாகங்கள் உயிர்பெற்று இயங்குவதற்கு இயங்குதளம் அவசியமானது. இந்த தொழில்நுட்பத்தில் உலகம் முழுவதும் விண்டோஸ், மேக்ஓஎஸ் ஆகியவை ஆதிக்கம் செலுத்திவருகின்றன.
இந்நிலையில், சீன அரசு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஓபன் சோர்ஸ் கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. அமெரிக்காவுடனான போட்டி அதிகரித்துள்ள நேரத்தில், வெளிநாட்டு சார்பைக் குறைக்கும் முயற்சியாக இந்த புதிய சிஸ்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க கருவூலத்துறை மந்திரி ஜேனட் யெல்லன் சீனாவுக்கு வருவதற்கு முன்னதாக இந்த புதிய இயங்குதளம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஓபன்கிளின் (OpenKylin) என்று அழைக்கப்படும் இந்த இயங்குதளம், உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கக்கூடிய Windows மற்றும் MacOS அமைப்புகளுக்கு போட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த மென்பொருளின் முந்தைய பதிப்புகள் சில அரசுத் துறைகளின் கம்ப்யூட்டர்களில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Windows மற்றும் MacOS அமைப்புகளின் செயல்பாடுகளை ரகசியமாக வைத்திருக்கும் மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் போன்று அல்லாமல், OpenKylin பயனர்கள் மென்பொருளின் குறியீடுகளை பெற முடியும். அத்துடன், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
OpenKylin என்ற பெயர், பழம்பெரும் சீன புராணங்களில் உள்ள ஒரு புராணக்கதையை குறிக்கிறது. இது பிரபலமான ஓபன் சோர்ஸ் லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் 9-வது ஆண்டு விழா சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது.
- சியோமி ஸ்மார்ட்போன், கேஜெட்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகிறது.
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனது வியாபாரத்தை துவங்கி 9 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடி வருகிறது. இதை ஒட்டி தனது ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச் என ஏராளமான சாதனங்களுக்கு அதிகளவு விலை குறைப்பு, தள்ளுபடி மற்றும் வங்கி சார்ந்த சலுகைகளை அறிவித்து வருகிறது.
அதன்படி சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு அதிகபட்சமாக ரூ. 21 ஆயிரம் வரையிலான விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் ரூ. 79 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்போதைய சிறப்பு விற்பனையின் கீழ் ரூ. 41 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது. இதன் டாப் என்ட் மாடல் விலை ரூ. 44 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கிறது.

விலை குறைப்பு விவரங்கள்:
சியோமி 12 ப்ரோ 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 79 ஆயிரத்து 999-இல் இருந்து தற்போது ரூ. 41 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 38 ஆயிரம் குறைவு ஆகும்.
சியோமி 12 ப்ரோ 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 84 ஆயிரத்து 999-இல் இருந்து தற்போது ரூ. 44 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 40 ஆயிரம் குறைவு ஆகும்.
விலை குறைப்பு மட்டுமின்றி ஹெச்டிஎப்சி மற்றும் ஐசிஐசி வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் போனஸ்-ஆக ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சியோமி 12 ப்ரோ அம்சங்கள்:
- 6.73 3200x1440 பிக்சல் FHD+ AMOLED 20:9 HDR10 + டிஸ்ப்ளே, 120Hz ரிபெஷ் ரேட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர்
- 8GB / 12GB LPPDDR5 6400Mbps ரேம்
- 256GB UFS 3.1 1450MBps மெமரி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13
- 50MP பிரைமரி கேமரா, f/1.9
- 50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
- 50MP ப்ரோடிரெயிட் கேமரா
- 32MP செல்ஃபி கேமரா
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ. வைபை, ப்ளூடூத்
- யுஎஸ்.பி. டைப் சி
- 4600mAh பேட்டரி
- 120 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங்
- பயனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஜூக்கர்பர்க் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
- மெட்டாவின் புதிய செயலி முற்றிலும் கன்ட்ரோல், காப்பி, பேஸ்ட் அடிப்படையிலானது என ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.
மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக 'திரெட்ஸ்' என்ற பெயரில் புதிய சமூக வலைத்தளத்தை அறிமுகம் செய்திருக்கிறார். இதில் உலகம் முழுவதும் பயனர்கள் இணைந்தவண்ணம் உள்ளனர்.
தோற்றத்திலும், பயன்பாடு விஷயத்திலும் டுவிட்டர் போன்றே உருவாகி இருக்கும் திரெட்ஸ் சேவையை மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமின் டெக்ஸ்ட் சார்ந்த உரையாடல் செயலி என்று தெரிவித்து இருக்கிறது. இந்த தளத்தை பயனர்கள் இன்ஸ்டாகிராம் லாக்-இன் விவரங்களை கொண்டே பதிவு செய்து கொள்ளலாம். மக்கள் தங்களின் தகவல் மற்றும் லிங்க் ஆகியவற்றை இந்த செயலியில் பதிவிடலாம். பிறரிடமிருந்து வரும் தகவல்களுக்கு பதிலளிக்கலாம் அல்லது மறுபதிவு செய்யலாம்.
திரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட 7 மணி நேரத்தில் அதில் சுமார் ஒரு கோடி பேர் இணைந்தது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. டுவிட்டர் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய மாற்றங்கள் காரணமாக அதிருப்தியில் உள்ளவர்கள், திரெட்ஸ் சேவையில் இணைவார்கள் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பயனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஜூக்கர்பர்க் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
இந்நிலையில், திரெட்ஸ் சேவை தொடர்பாக டுவிட்டர் தளத்திலும் பயனர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் உள்ளனர். பயனர்களுடன் இணைந்து டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தனது முதல் பதிலை வெளியிட்டிருக்கிறார். ஒரு டுவிட்டர் பயனர் திரெட்ஸ் செயலியை கிண்டல் செய்யும் வகையில் பதிவிட்டிருந்தார். மெட்டாவின் புதிய செயலி முற்றிலும் இந்த கீபோர்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என குறிப்பிட்டிருந்த அந்த பயனர், கீபோர்டு போன்ற ஒரு படத்தையும் பதிவிட்டிருந்தார். அதில் கன்ட்ரோல், காப்பி, பேஸ்ட் பட்டன்கள் மட்டுமே இருந்தன.
இந்த பதிவை பார்த்த மஸ்க், சிரிக்கும் முகத்தின் எமோடிகானை பதிவிட்டு பதில் அளித்துள்ளார். இவ்வாறு மகிழ்ச்சியுடன் மஸ்க் தனது முதல் பதிலை வெளியிட்டதன்மூலம், திரெட்ஸ் செயலியானது, டுவிட்டரின் பிரதி என்று கூறுவதுபோல் தெரிகிறது.
- அதிருப்தியில் உள்ளவர்கள், திரெட்ஸ் சேவையில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- திரெட்ஸ் சேவையில் பயனர்கள் அதிகபட்சம் 500 வார்த்தைகள் அடங்கிய பதிவுகளை பதிவிட முடியும்.
மெட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய சமூக வலைதள சேவையில் சுமார் ஒரு கோடி பேர் இணைந்துள்ளனர் என்று மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார். சேவை துவங்கிய ஏழு மணி நேரங்களில் இத்தனை பேர் இணைந்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எலான் மஸ்க் விலைக்கு வாங்கிய டுவிட்டர் தளத்திற்கு நட்பு ரீதியிலான போட்டியாளர் திரெட்ஸ் என்று மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார். டுவிட்டர் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய மாற்றங்கள் காரணமாக அதிருப்தியில் உள்ளவர்கள், திரெட்ஸ் சேவையில் இணைவார்கள் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திரெட்ஸ் சேவையில் பயனர்கள் அதிகபட்சம் 500 வார்த்தைகள் அடங்கிய பதிவுகளை பதிவிட முடியும். இத்துடன் பல்வேறு அம்சங்கள் டுவிட்டர் தளத்தில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய நபர்களை பின் தொடர்வதற்காக இன்ஸ்டாகிராம் அல்காரிதம் பயன்படுத்தி குறிப்பிட்ட பதிவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
இத்துடன் பாலோவர்-ஒன்லி ஃபீட் அம்சத்தை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இது பயனர்கள் பின்தொடர்வோரின் பதிவுகளை மட்டுமே காண்பிக்கும். திரெட் சேவையில் பயனர்களை ஃபாலோ மற்றும் அன்-ஃபாலோ செய்ய முடியும். இன்ஸ்டாகிராம் போன்றே இந்த தளமும், ப்ரோபைலை பிரைவேட் ஆக வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது.
- ஜனவரியில் இருந்து புதிய தளம் உருவாக்குவது தொடர்பான பணிகள் நடைபெற்று வந்தன.
- திரெட்ஸ் சேவை இன்ஸ்டாகிராம்-இன் டெக்ஸ்ட் சார்ந்த உரையாடல் செயலி ஆகும்.
மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக புதிய சமூக வலைதளம் 'திரெட்ஸ்' என்ற பெயரில் அறிமுகம் செய்கிறார். இவரின் இந்த போக்கு, எலான் மஸ்க்-க்கு நேரடி சவால்விடும் வகையில் இருப்பதாக தெரிகிறது. கடந்த காலங்களில் எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜூக்கர்பர்க் இடையே காரசாரமான கருத்து மோதல்கள் இருந்ததே இதற்கு காரணமாகும்.
டுவிட்டர் போன்ற சமூக வலைதள சேவைக்கு இன்றும் சந்தை இருப்பதாக மார்க் ஜூக்கர்பர்க்-இன் மெட்டா நிறுவனம் நம்புகிறது. திரெட்ஸ் சேவை கடந்த வாரம் அதன் ஊழியர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தளத்தில் மூத்த பிராடக்ட் பிரிவு அலுவலராக க்ரிஸ் கோக்ஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

திரெட்ஸ் தொடக்கம்:
கடந்த ஜனவரியில் இருந்து புதிய தளம் உருவாக்குவது தொடர்பான பணிகள் நடைபெற்று வந்தன. புதிய சேவையை பயன்படுத்துமாறு உலக பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கோக்ஸ் தெரிவித்துள்ளார். பிரபலங்கள் மட்டுமின்றி கிரியேட்டர்களிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தோற்றத்திலும், பயன்பாடு விஷயத்திலும் டுவிட்டர் போன்றே உருவாகி இருக்கும் திரெட்ஸ் சேவையை மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம்-இன் டெக்ஸ்ட் சார்ந்த உரையாடல் செயலி என்று தெரிவித்து இருக்கிறது. இந்த தளத்தை பயனர்கள் இன்ஸ்டாகிராம் லாக்-இன் விவரங்களை கொண்டே பதிவு செய்து கொள்ளலாம்.

பாடுபடும் டுவிட்டர்:
டுவிட்டர் தளத்தினை உலகம் முழுக்க சுமார் 25 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். எலான் மஸ்க் டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து, இந்த தளம் சரிவை சந்தித்து வருகிறது. டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்க எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளார். டுவிட்டரை விலைக்கு வாங்கியதும், மூத்த தலைமை அதிகாரியில் இருந்து பலரை அதிரடியாக பணிநீக்கம் செய்தார்.
இதைத் தொடர்ந்து எலான் மஸ்க் மேற்கொண்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் காரணமாக ஏராளமான விளம்பரதாரர்கள் டுவிட்டரை விட்டு வெளியேறினர். இதன் காரணமாக டுவிட்டரின் வருவாய் படிப்படியாக குறைய தொடங்கியது. பிறகு வெரிஃபைடு அந்தஸ்தை பெற பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முறை அறிவிக்கப்பட்டு, தற்போது இது அமலில் இருக்கிறது.

மார்க் விருப்பம்:
இதுதவிர ஏராளமான நடவடிக்கைகள் காரணமாக டுவிட்டர் முழுமையாக மாறி போனது. சமீபத்தில் பயனர்கள் நாள் ஒன்றுக்கு எத்தனை ட்வீட்களை பார்க்க முடியும் என்பதை கட்டுப்படுத்துவதாக எலான் மஸ்க் அறிவித்தார். இந்த எண்ணிக்கை வெரிஃபைடு பெற்றவர்கள், பெறாதவர்கள், புதிய பயனர்கள் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளன.
சமூக வலைதள உலகில் டுவிட்டர் ஏற்படுத்திய தாக்கம், மார்க் ஜூக்கர்பர்க்-ஐ பெரிதும் கவர்ந்தது. 2008-ம் ஆண்டு டுவிட்டரை விலைக்கு வாங்க மார்க் ஜூக்கர்பர்க் விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தான், மார்க் தற்போது திரெட்ஸ் தளத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த சேவையின் முதல் சவால், பயனர்கள் இதில் தங்களின் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்-ஐ பயன்படுத்த விரும்புவார்களா என்பது தான்.

போட்டி நிறுவன சேவைகள்:
புதிய தளத்தில் அதிக பயனர்களை பெற, திரெட்ஸ் தளம் அவர்களுக்கு ஆரம்பத்தில் பல்வேறு வசதிகளை வழங்க வேண்டும். மற்றொரு பெரிய விஷயம் சமீப காலங்களில் டுவிட்டருக்கு போட்டியாக துவங்கப்பட்ட புளூஸ்கை, கடந்த திங்கள் கிழமை அன்று மட்டும் பயனர்கள் எண்ணிக்கையில் 20 சதவீதம் வளர்ச்சியை பெற்றது.
எனினும், அதிக பயனர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் புளூஸ்கை இன்வைட் முறையிலேயே இயங்கி வருகிறது. அதன்படி 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே இந்த சேவையை பயன்படுத்த முடியும். இத்தனை சவால்களை எதிர்கொண்டே மெட்டா நிறுவனத்தின் புதிய திரெட்ஸ் சமூக வலைதளம் பயன்பாட்டுக்கு வருகிறது.
- நார்டு பட்ஸ் 2r மாடலில் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
- இத்துடன் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி மற்றும் 94ms வரையிலான லேடன்சி வழங்குகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நார்டு சீரிஸ் சாதனங்களை அறிமுகம் செய்து இருக்கிறது. ஒன்பிளஸ் நார்டு 3 5ஜி, நார்டு CE3, ஒன்பிளஸ் புல்லட்ஸ் Z2 ANC, ஒன்பிளஸ் நார்டு 2r மாடல்கள் இதில் அடங்கும்.
புதிய நார்டு பட்ஸ் 2r மாடலில் உள்ள குறைந்த விலை ஆடியோ தொழில்நுட்பம் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இதன் இயர்பட்ஸ் சவுகரிமான அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் 12.4mm டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் மாஸ்டர் இக்வலைசேஷன் சிஸ்டம்- போல்டு, பேஸ் மற்றும் பேலன்ஸ்டு போன்ற சவுன்ட் ப்ரோஃபைல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருப்பதால், இந்த இயர்பட்ஸ் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இதில் உல்ள டிராக் ஆடியோ டியுனர் சீரான செயல்திறன், சிறப்பான ஃபிடெலிட்டி வழங்குகிறது.

ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 2r மாடலில் டூயல் மைக் மூலம் சிறப்பான ஆடியோ மற்றும் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படுகிறது. ஏ.ஐ. க்ளியர் கால் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் அழைப்புகளின் போது, பேக்கிரவுன்ட் நாய்ஸ்-ஐ குறைக்கிறது. இத்துடன் ப்ளூடூத் 5.3 மற்றும் 94ms வரையிலான லேடன்சி வழங்குகிறது.
இதில் உள்ள ஃபாஸ்ட் பேர் அம்சம் அதிவேக கனெக்டிவிட்டி வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் எட்டு மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. இத்துடன் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது 38 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ் IP55 தர வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டிருக்கிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 2r விலை ரூ. 2 ஆயிரத்து 199 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் டீப் கிரே மற்றும் ட்ரிபில் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
- இந்த மானிட்டரில் யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி, 40 வாட் 2-வே பவர் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.
- இதில் 3.5mm ஹெட்போன் ஜாக், டூயல் இன்டகிரேடெட் ஸ்பீக்கர்கள், எனர்ஜி ஸ்டார் சான்று உள்ளது.
வியூசோனிக் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய VP-16 OLED, போர்டபில் டச் ஸ்கிரீன் மானிட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த 15.6 இன்ச் கலர்ப்ரோ மானிட்டர் 1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி ரெசல்யூஷன், பான்டோன் வேலிடேஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டான்டு வழங்கப்படுகிறது. இது மானிட்டரை பல்வேறு கோணங்களில் வைத்து பயன்படுத்த வழி செய்கிறது. இதனுடன் வழங்கப்பட்டு இருக்கும் டிரைபாட் மவுன்ட் மூலம் மானிட்டரை ஐந்து கோணங்களில் வைத்துக் கொள்ள முடியும். இந்த மானிட்டரில் கேமராவை மவுன்ட் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.

இதன் OLED டிஸ்ப்ளே, பரவலான கலர் கமுட், 100 சதவீதம் DCI-P3 கவரேஜ், அதிக காண்டிராஸ்ட் ரேஷியோ உள்ளது. இந்த மானிட்டர் உடன் கழற்றக்கூடிய பாதுகாப்பு கவர் வழங்கப்படுகிறது. இது ஆம்பியன்ட் பிரைட்னஸ் இருந்த போதிலும், ஷேடிங் ஹூட் போன்று செயல்படுகிறது.
கனெக்டிவிட்டியை பொருத்தவரை இந்த மானிட்டரில் யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி, 40 வாட் 2-வே பவர் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு லேப்டாப் மூலம் பயன்படுத்தவோ அல்லது லேப்டாப், மொபைல் சாதனங்களுக்கு சார்ஜ் ஏற்றவோ முடியும். இத்துடன் மினி HDMI போர்ட், 3.5mm ஹெட்போன் ஜாக், டூயல் இன்டகிரேடெட் ஸ்பீக்கர்கள், எனர்ஜி ஸ்டார் சான்று உள்ளது.
புதிய வியூசோனிக் VP-16 OLED மானிட்டர், 15.6 இன்ச் டிஸ்ப்ளே விலை ரூ. 75 ஆயிரம் ஆகும். எனினும், இது ரூ. 49 ஆயிரத்து 999 (வரிகள் சேர்க்கப்படவில்லை) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை அமேசான் வலைதளம் மற்றும் இதர சில்லறை விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.
- ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
- இரண்டு புதிய நார்டு சீரிஸ் மாடல்களிலும் 80 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு 3 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஒன்பிளஸ் நார்டு CE3 மாடலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.74 இன்ச் 1.5K 120Hz AMOLED ஸ்கிரீன், 1450 நிட்ஸ் பிரைட்னஸ், மீடியாடெக் டிமென்சிட்டி 9000 சிப்செட், அதிகபட்சம் 16 ஜிபி LPDDR5X ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 13.1 கொண்டிருக்கிறது. இத்துடன் மூன்று ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் நான்கு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நார்டு 3 அம்சங்கள்:
6.74 இன்ச் 2772x1240 பிக்சல் ரெசல்யூஷன், AMOLED டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் டிமென்சிட்டி 9000 பிராசஸர்
மாலி G710 10-கோர் GPU
12 ஜிபி, 16 ஜிபி LPDDR5X ரேம்
256 ஜிபி, 512 ஜிபி UFS 3.1 மெமரி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர் ஒஎஸ் 13
50MP பிரைமரி கேமரா, OIS
8MP அல்ட்ரா வைடு கேமரா
2MP மேக்ரோ கேமரா
16MP செல்ஃபி கேமரா
இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
80 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

ஒன்பிளஸ் நார்டு CE3 அம்சங்கள்:
6.7 இன்ச் 2412x1080 பிக்சல் Full HD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 782ஜி பிராசஸர்
அட்ரினோ 642L GPU
8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ்
12 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி, 512 ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ்
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர் ஒஎஸ் 13
50MP பிரைமரி கேமரா, OIS
8MP அல்ட்ரா வைடு கேமரா
2MP மேக்ரோ கேமரா
16MP செல்ஃபி கேமரா
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
80 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போன் மிஸ்டி கிரீன் மற்றும் டெம்பஸ்ட் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 என்றும் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 37 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஜூலை 15-ம் தேதி துவங்குகிறது. விற்பனை அமேசான் வலைதளம், ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர், ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.
ஒன்பிளஸ் நார்டு CE3 ஸ்மார்ட்போன் அக்வா சர்ஜ் மற்றும் கிரே ஷிம்மர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 26 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 28 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது.






