search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டு உபயோக பொருட்கள்"

    • சுமார் 2 லட்சம் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. பல இடங்களில் தரை தளம் முற்றிலும் மூழ்கியது.
    • மொத்தத்தில் சிட்கோ சிறு நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.2,800 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    மிக்ஜம்... மிக் ரக போர் விமான போல் சுழன்று வந்தது. சென்னையை போட்டு தாக்கி விட்டு சென்றது. அது ஏற்படுத்திய பாதிப்புகள், இழப்புகளில் இருந்து மீள முடியாமல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தவித்து கொண்டிருக்கிறார்கள்.

    சாதாரண மக்கள், வணிகர்கள், தொழில் நிறுவனங்கள் என்று எந்த தரப்பையும் விட்டு வைக்கவில்லை.

    சுமார் 2 லட்சம் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. பல இடங்களில் தரை தளம் முற்றிலும் மூழ்கியது.

    இந்த வீடுகளில் இருந்த பிரிட்ஜ், வாஷிங்மெஷின், தொலைக்காட்சி பெட்டிகள் முதல் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் நாசமாகிவிட்டன.

    சேறும், சகதியும் நிறைந்து கிடக்கும் இந்த வீடுகளை சுத்தம் செய்து, மின் சாதனைங்களை பழுது பார்த்து மீண்டும் குடியேற வேண்டுமென்றால் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை ஆகும். புதிய வீட்டு உபயோக பொருட்களை வாங்க வேண்டும்.

    பல வீடுகளில் கார்கள், இரு சக்கர வாகனங்களும் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன.

    அம்பத்தூர் பகுதியில் 1,800 தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் ரூ.2 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிறு தொழில் நிறுவன சங்க தலைவர் கன்னியப்பன் தெரிவித்தார்.

    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர்ந்த எந்திரங்களும் தண்ணீரில் மூழ்கி பழுதாகி உள்ளன. இனி வெளிநாடுகளில் இருந்து பொறியாளர்கள் வந்தால்தான் இந்த பழுதை சரி செய்ய முடியும் என்கிறார்கள்.


    பெருங்குடியில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்யும் 250 நிறுவனங்கள் உள்ளன. இந்த பகுதியில் ரூ.400 கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சங்க தலைவர் அன்பு செல்வம் தெரிவித்துள்ளார்.

    திருமுடிவாக்கத்தில் 600 நிறுவனங்களில் தண்ணீர் புகுந்தது. 6 அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த பகுதியில் மட்டும் ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதே போல் திருமழிசையில் 200 தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் தண்ணீர் புகுந்ததால் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் சிட்கோ சிறு நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.2,800 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த 4 மாவட்டங்களிலும் டீ கடைகள் முதல் பெரிய ஓட்டல்கள் வரை சுமார் 8 ஆயிரம் ஓட்டல்கள் உள்ளன.

    இந்த ஓட்டல்களை 3 நாட்கள் மூடியது மற்றும் பொருட்கள் சேதம் காரணமாக சுமார் ரூ.700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ரவி தெரிவித்தார்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் வந்து குவிந்த காய்கறிகள் வாங்குவதற்கு ஆள் இல்லாமலும், மழைத் தண்ணீரில் அழுகியும் லாரி லாரியாக குப்பையில் கொட்டப்பட்டது. கொட்டிய காய்கறிகள் மட்டும் ரூ.2 கோடி இருக்கும் என்று காய்கறி மொத்த வியாபாரி எஸ்.எஸ்.டி. ராஜேந்திரன் கூறினார்.


    அழுகிய பூக்களும், பழங்களும் டன் கணக்கில் குப்பையில் கொட்டப்பட்டது. இதன் மதிப்பும் சுமார் ரூ.2 கோடி வரை இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இந்த 4 மாவட்டங்களிலும் சிறிய பெட்டிக் கடை முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை 60 ஆயிரம் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வியாபாரம் பாதிப்பு, பொருட்கள் சேதம் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்று வணிகர் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

    முக்கியமாக வியாபாரிகளுக்கு கிடைக்க வேண்டிய லாபம், அரசுக்கு கிடைக்க வேண்டிய வரிகள் சுமார் ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

    • மேயர் மகேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
    • சுமார் 25 லட்சம் மக்கள் இதை பார்த்து மகிழ்ந்து உள்ளனர்.

    என்.ஜி.ஓ.காலனி :

    நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே உள்ள அனாதைமடம் மாநகராட்சி மைதானத்தில் மதுரை எம்.கே.சி. நிறுவனத்தாரின் ஆழ்கடல் குகை மீன்கள் பிரமாண்ட கண்காட்சி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது.

    திறப்பு விழாவில் எம்.கே.சி. நிறுவனத்தின் உரிமை யாளர்கள் சிட்டிபாபு, கனகராஜ் ஆகியோர் வரவேற்றனர். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் பொருட்காட்சி அரங்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    தொடர்ந்து பொருட்கா ட்சி அரங்கத்தில் வைக்கப்ப ட்டிருந்த செல்பி பாயிண்டுகள், ஆழ்கடல் மீன்கள் கண்காட்சி அரங்கம், வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி மற்றும் கடைகள் பகுதி, பொழுதுபோக்கு ராட்டினம் பகுதி ஆகி யவற்றை பார்வையிட்டார்.

    விழாவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல குழு தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஐவகர், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சதாசிவம், கவுன்சிலர்கள் ஜெயராணி, ரோசிட்டா திருமால், ரமேஷ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    பொருட்காட்சி குறித்து அதன் உரிமையாளர்கள் சிட்டிபாபு, கனகராஜ் ஆகியோர் கூறியதாவது:-

    மதுரை எம்.கே.சி. நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் பொருட்காட்சிகளை பிரமாண்டமாக நடத்தி வருகிறது. இப்போது ஆழ்கடல் குகை மீன்கள் கண்காட்சி மற்றும் பொருட்காட்சியை 10 மாவட்டங்களில் சிறப்பாக நடத்தி உள்ளோம். சுமார் 25 லட்சம் மக்கள் இதை பார்த்து மகிழ்ந்து உள்ளனர்.

    இப்போது முதன்முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோ விலில் பொருட்காட்சி தொடங்கி உள்ளது. தினமும்

    மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் கண்டு கழித்து மகிழலாம். அக்டோபர் 30-ந்தேதி வரை 45 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

    ஆழ்கடல் குகை மீன்கள் கண்காட்சியில் ஆழ்கடலில் குகை இருப்பது போல 200 அடி நீளத்தில் செட்டிங் அமைத்து அதில் 50 வகைகளுக்கும் மேற்பட்ட ஆயிரக்கணக்கான கடல் மீன்கள் சுற்றி வரும் அழகு குழந்தைகள் முதல் அனை வரையும் பார்த்து குதூகலம் செய்யும் வகையில் அமைந்துள்ளது.

    கடலுக்கு அடியில் உள்ள மீன்களை நேரில் பார்த்து ரசிப்பது போல இந்த கண்கா ட்சி அமைக்க ப்பட்டுள்ளது. குகைக்குள் முழுவதும் ஏ.சி. வசதி செய்யப்பட்டுள்ளது.

    பொருட்காட்சி அரங்கிற்குள் ஏராளமான விளையாட்டு உபகரண பொருட்கள் கடைகள், குழந்தைகளை மகிழ்விக்கும் பொம்மை பொருட்கள் கடைகள், பேன்சி கடைகள், வீட்டிற்கு தேவையான பொருட ்களை வாங்கி செல்லும் வகையில் வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

    மேலும் ஜெயண்ட் வீல் ராட்டினம், பிரேக் டான்ஸ் ராட்டினம், கொலம்பஸ் மற்றும் டிராகன் ராட்டினம், குழந்தைகள், சிறுவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் சைனா டோரா டோரா, ஹனி பீ ராட்டினம் சன்மூன் ராட்டி னம் போன்ற வகைகளும், 3டி அரங்குகள், பேய் வீடு அர ங்கம் ஆகிய வையும் பிர மாண்ட அளவில் இடம்பெ ற்றுள்ளன.சுனாமி ராட்டினம் சிறுவர்களை குழந்தைகளை குதூகலப்படுத்தும் மேலும் இங்கே தின்பண்டங்கள் உணவகம், உணவு திருவிழா அரங்கமும், பொழுது போக்கு பூங்கா அரங்கமும் இடம்பெற்று ள்ளன.

    பார்க்கிங் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்ப ட்டுள்ளன. பொது மக்கள் சிறுவர், சிறுமிகள், குழந்தை கள் என அனைவரும் ஆழ்கடல் குகை மீன்கள் கண்காட்சியை பார்த்து வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி பயனடை யும் படி எம்.கே.சி. நிர்வாகம் சார்பில் கேட்டு க்கொள்கிறோம்.

    • கைகாட்டிபுதூர் சமுதாயக்கூடத்தில் நடந்த பயிற்சி வகுப்பை பேரூராட்சி தலைவர் தனலட்சுமி துவக்கி வைத்தார்.
    • மக்களை தினமும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு பெற்றிருப் பதால் சந்தை வாய்ப்பை உருவாக்கி கொள்ள முடியும்.

    அவிநாசி : 

    அவிநாசி பேரூராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் துணிக்கழிவுகளில் இருந்து வீட்டு உபயோகப் பொருட்களை மறு உற்பத்தி செய்வதற்கான பயிற்சி முகாம் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. கைகாட்டிபுதூர் சமுதாயக்கூடத்தில் நடந்த பயிற்சி வகுப்பை பேரூராட்சி தலைவர் தனலட்சுமி துவக்கி வைத்தார்.

    திருச்சியை சேர்ந்த கிருஷ்ணவேணி பயிற்சி வழங்கி, கூறியதாவது:- திருப்பூர் போன்ற பனியன் தொழில் சார்ந்த நகரங்களில் வீணாகி வீசியெறியப்படும் பனியன் துணிகளை சேகரித்து அதில் வீடுகளின் அத்தியாவசிய தேவையான மிதியடி, பெண்கள் பயன்படுத்தும் மணி பர்ஸ், மாணவர்களுக்கான பென்சில் பவுச் மற்றும் கலைநயமிக்க அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றை தயாரிக்க பயிற்சி வழங்கி வருகிறோம்.

    வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரிப்பது கொசு ஒழிப்புப்பணியில் ஈடுபடுவது போன்ற பணிகளில் தூய்மை பணியாளர்கள் ஈடுபடுவதால் அவர்களால் மிக எளிதாக தங்கள் தயாரிக்கும் பொருட்களை விற்க முடியும். மக்களை தினமும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு பெற்றிருப் பதால் சந்தை வாய்ப்பை உருவாக்கி கொள்ள முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கண்காட்சியில் 250 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.
    • கண்காட்சி வருகிற 18-ந் தேதி வரை நடக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூரை சேர்ந்த ஸ்மைலி ட்ரிப்ஸ் அண்ட் ஈவண்ட்ஸ் நிறுவனம் சார்பில் 'ஸ்மைலி எக்ஸ்போ' என்ற பெயரில் மாபெரும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கண்காட்சி திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் தொடங்கியது.

    இந்த கண்காட்சியை கே.எம்.நிட் வேர் நிர்வாக இயக்குனர் கே.எம்.சுப்பிரமணியன், துணை மேயர் பாலசுப்பிரமணியம், ஸ்ரீசக்தி சினிமாஸ் நிறுவனர் சுப்பிரமணியம், கிட்ஸ் கிளப் நிறுவன தலைவர் மோகன் கார்த்திக் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

    எம்.எஸ்.ஆர். ஆயில் மில்ஸ் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார், எம்.எஸ்.ஆர்.கிளினிக் டாக்டர் ராஜா, விருக்ஷம் பிரகனன்சி கேர் நிறுவனர் அனுபமா குமார் விஜயானந்த், லக்கி கேர்ள் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் விஜி, ஹே தயா ஆர்ட் கேலரி நிறுவனர் ரமா ராஜேஷ், ஸ்டைல் ஓஷன் மற்றும் லைம்லைட் நிறுவனர் வைஷ்ணவி, குயினோவா நிறுவனர் சாமு ஜெயஸ்ரீ, லைம்லைட் நிறுவனர்கள் குஷ்பு, ரேவதி, தீபா ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள். திறப்பு விழாவுக்கு வந்தவர்களை ஸ்மைலி ஈவண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் அருண் வரவேற்றார்.

    கண்காட்சியில் பர்னிச்சர்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், நகைகள், டெக்ஸ்டைல் பொருட்கள், அலங்கார பொருட்கள், உணவு தயாரிப்பு மூலப்பொருட்கள், அலுவலகங்களுக்கு தேவையான பொருட்கள், விளையாட்டு பொருட்கள், மின்சாதன பொருட்கள், கட்டிட பொருட்கள், மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் உள்ளடக்கிய 250 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

    சிறுவர்களுக்கான விளையாட்டு கூடங்கள், குடும்பத்தோடு உண்டு மகிழ உணவு கூடங்கள் இடம்பெற்றுள்ளன. கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு வாடிக்கையாளர்களை குதுகலப்படுத்த விஜய் டி.வி. புகழ் அறந்தாங்கி நிஷா இன்றும் (வெள்ளிக்கிழமை), ராமர் நாளையும் (சனிக்கிழமை) கலந்து கொள்கிறார்கள். கண்காட்சி நேரத்தில் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கு ஒருமுறையும், திறமையான வாடிக்கையாளரை தேர்வு செய்து எல்.ஈ.டி. டி.வி. இலவச பரிசாக வழங்கப்படுகிறது. மாலை நேரங்களில் இசை நிகழ்ச்சிகள், பலகுரல், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தினமும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கிறார்கள். ரோட்டரி உறுப்பினர்கள், பி.என்.ஐ. அமைப்பு உறுப்பினர்கள், ஜெ.சி.ஐ. உறுப்பினர்கள் ஒத்துழைப்பு கொடுத்துள்ளதாக தெரிவித்தனர். இந்த கண்காட்சி வருகிற 18-ந் தேதி வரை நடக்கிறது.

    • கடைகளில் விற்கும் பொருட்களில், ஐ.எஸ்.ஐ., முத்திரை இருக்கிறதா என்று கவனித்து வாங்க வேண்டும்.
    • போலியான முத்திரை என கண்டறிந்து உரிய ரசீதுடன் புகார் செய்யலாம்.

    திருப்பூர்,

    திருப்பூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு மற்றும் இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவன அதிகாரிகள் கடைகளில் ஆய்வு நடத்தினர்.

    மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், பறக்கும்படை தனி தாசில்தார் முருகன், தரக்கட்டுப்பாட்டு அலுவலர் (கோவை) நவீன் ஆகியோர், எலக்ட்ரிக்கல் கடைகள், ெஹல்மெட் கடைகள், குக்கர் கடைகள், வீட்டு உபயோக கடைகளில் ஆய்வு நடத்தினர்.மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் 25 கடைகளில், ஆய்வு நடத்தி, ஐ.எஸ்.ஐ., தரம் வாய்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்தனர். அத்துடன், வாடிக்கையாளருக்கு ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற்ற பொருட்கள் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    கடைகளில் விற்கும் பொருட்களில், ஐ.எஸ்.ஐ., முத்திரை இருக்கிறதா என்று கவனித்து வாங்க வேண்டும். போலியான ஐ.எஸ்.ஐ., முத்திரை செய்தும் விற்க வாய்ப்புள்ளதால், முழுமையாக சரிபார்க்க வேண்டும்.BIS- care என்ற செல்போன் ஆப்பை பதிவிறக்கம் செய்து, பொருளில் உள்ள ஐ.எஸ்.ஐ., நம்பரை பதிவு செய்தால், தயாரிப்பு நிறுவனம், தேதி, தரம் போன்ற அனைத்து விவரமும் கிடைக்கும்.இதுபோன்ற விவரம் எதுவும் கிடைக்காதபட்சத்தில், அது போலியான முத்திரை என கண்டறிந்து உரிய ரசீதுடன் புகார் செய்யலாம் எனஅதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ×