search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வித்யாரம்பம்"

    • விஜயதசமி நாளில் திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்த்தனர்.
    • கோவை குருக்கள் ராம் குமார் கணபதி ஹோமம் வளர்த்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    திருப்பூர்:

    விஜயதசமி அன்று எந்த ஒரு காரியத்தை துவக்கினாலும் அது வெற்றிகரமாக முடியும் என்பதன் காரணமாக, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை விஜயதசமி அன்று பள்ளிகளில் சேர்ப்பது வழக்கம். அதன்படி விஜயதசமி நாளில் திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்த்தனர்.

    இதையடுத்து அவர்கள் தங்கள் வாழ்வில் ஏற்றமும், வளமும் பெற்று என்றும் சிறப்புடன் விளங்க பெற்றோர்கள், பள்ளித்தலைவர் மோகன் கே. கார்த்திக், தாளாளர் வினோதினி, பள்ளி முதல்வர் நிவேதிகா, இயக்குனர் ஐஸ்வர்யா நிகில் சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி வரவேற்றனர்.

    திருப்பூர் வீரபாண்டி பிரிவு விருக்சா சர்வதேசப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு பள்ளி தாளாளர் ராஜலட்சுமி மற்றும் பள்ளி நிர்வாக இயக்குனர் கோவிந்தராஜன் முன்னிலையில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை குருக்கள் ராம் குமார் கணபதி ஹோமம் வளர்த்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுடன் அமர்ந்து சரஸ்வதி ஸ்லோகம் கூறியும் அரிசியில் ஓம், அ, A ஆகியவற்றை எழுதியும் புதிதாக தங்கள் கல்வியை வித்யாரம்பம் மூலம் தொடங்கினர்.

    திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் பெருமாநல்லூரில் உள்ள கே. எம். சி. சீனியர் செகண்டரி பள்ளியில் விஜயதசமி தினத்தையொட்டி மாணவர் சேர்க்கை நடந்தது. நவராத்திரியையொட்டி கே.எம்.சி., பொதுப்பள்ளி வளாகத்தில் கொலு அமைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது . விஜயதசமி தினத்தையொட்டி பள்ளியில் நடந்த மாணவர் சேர்க்கையில் புதிதாக சேர்ந்த மழலையர் மற்றும் மாணவ மாணவிகளை நவராத்திரி கொலுவுக்கு முன் பெற்றோர்களுடன் அமர வைத்து, தானியத்தில் அ, ஆ உள்ளிட்ட எழுத்துக்களை எழுத பழகும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பள்ளியில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து விளக்கமாக பள்ளி தாளாளர் மனோகரன் கூறினார். பள்ளித்தலைவர் கே. சி. சண்முகம் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் விழாவில் பள்ளி முதல்வர் சீனிவாசன் கற்றல் இனிது என்பது குறித்து பேசி, மாணவர்களை பாராட்டினார். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உடனிருந்தனர். 

    திருப்பூர் கூலிப்பாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விஜயதசமி மாணவர் சேர்க்கை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பள்ளி பொருளாளர் ராதாராமசாமி, செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன், துணை செயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன் மற்றும் பள்ளி முதல்வர் அனிதா மற்றும் ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். அவினாசி குருக்கள் காமாட்சி தாசர் சாமிகளால் வித்யாரம்பம் பூஜைகள் செய்யப்பட்டு குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    • குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 15-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.

    தென்தாமரைகுளம்:

    அகஸ்தீஸ்வரம் குலசேகர விநாயகர் அறநிலையத்துக்குட்பட்ட பாலசவுந்தரி பத்திரகாளி அம்மன் கோவில் நவராத்திரி விழாகடந்த 15-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. கடைசி நாளானநேற்று விஜயதசமியை முன்னிட்டு ஆலயத்தில் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்ற பின்பு குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை விவேகானந்தா கல்லூரியின்முன்னாள் தமிழ் துறை தலைவர் மரிய ஜூலியட் ஏடு தொடங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஆசிரியை ரேணுகா ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சுமார் 20 குழந்தைகள் கலந்து கொண்டனர். பின்பு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் அறங்காவலர்கள் கே.எஸ்.மணி, பேராசிரியர் கருணாகரன், ராஜசுந்தரபாண்டியன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சரஸ்வதி பூஜை, விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சுற்றுவட்டார பகுதி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில்:

    தெரிசனங்கோப்பு கவுசிகா பள்ளியில் சரஸ்வதி பூஜை, விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. அழகிய பாண்டியபுரம் ஜெயந்தீஸ்வர உடைய நயினார் கோவில் மேல்சாந்தி ஜெய்ஸ்ரீ மணிகண்ட ஆச்சார்யார் தலைமையில் குழந்தைகள் அனைவரும் நலம்பெற ஆகம விதிப்படி அதற்கான அனைத்து சடங்குகளும் நடத்தப்பட்டு, சிவ ஆகமரத்தினம் ஜெய்ஸ்ரீ நாராயண சுவாமி தலைமையில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. ப்ரி.கே.ஜி.வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை, ஹிந்தி மற்றும் செஸ் வகுப்புக்களுக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவுசிகா பள்ளியின் தாளாளர் செண்பகநாதன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • தங்களது குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பெற்றோர் கோவில்களுக்கு குழந்தையுடன் வந்தனர்
    • வித்யாரம்பம் செய்து குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், பென்சில், ரப்பர் உள்ளிட்ட 11 பொருட்கள் கொண்ட கல்வி உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் அய்யப்பன் கோவில், ஈஸ்வரன் கோவில், குருவாயூரப்பன் கோவில், வாலிபாளையம் முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில், வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. காலையில் எழுந்து நீராடி சுவாமி தரிசனம் செய்து, தங்களது குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பெற்றோர் கோவில்களுக்கு குழந்தையுடன் வந்தனர்.

    குழந்தைகளுக்கு அர்ச்சகர்கள் தங்க வேலால் நாக்கில் எழுதி எழுத்தறிவித்தலை தொடங்கி வைத்தனர். அதுபோல் அரிசியிலும் குழந்தைகளின் கை விரல்களை பிடித்து எழுத வைத்தனர். அதன்பிறகு சிலேட்டுகளிலும் குழந்தைகள் எழுதினர். கோவில்களில் நடந்த நிகழ்ச்சியில், திரளான குழந்தைகள் பங்கேற்றனர். வித்யாரம்பம் செய்து குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், பென்சில், ரப்பர் உள்ளிட்ட 11 பொருட்கள் கொண்ட கல்வி உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

    இதேபோல், திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் சிறப்பு மாணவர் சேர்க்கை (அட்மிஷன்) நடந்தது. ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்க, பெற்றோர்கள், ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர்.

    • திருவனந்தபுரத்தை சேர்ந்த தனது சக ஊழியரின் மகனுக்கு ஒரு சடங்கு செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
    • பொதுவாக விஜயதசமி அன்று இந்த நிகழ்ச்சி நடத்தப்படும்.

    திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் தனது சக ஊழியரான பிரகாஷ் என்பவரின் 2½ வயது மகனுக்கு ஏடு தொடங்கும் நிகழ்ச்சியான வித்யாரம்பம் நடத்திய வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

    அதில் திருவனந்தபுரத்தை சேர்ந்த தனது சக ஊழியரின் மகனுக்கு ஒரு சடங்கு செய்வதாக குறிப்பிட்டுள்ளார். வித்யாரம்பம் சடங்கின்படி ஒரு குழந்தை தனது முதல் எழுத்துக்களை ஒரு தட்டில் அரிசியை நிரப்பி அதில் எழுத தொடங்கும். ஆசிரியர்கள், அறிஞர்கள் போன்றோர் குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைப்பார்கள்.

    பொதுவாக விஜயதசமி அன்று இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். இருப்பினும் ஒவ்வொரு நாளும் கற்றல் நடத்த வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சியை நடத்தியதாக சசிதரூர் குறிப்பிட்டுள்ளார்.

    வீடியோவில் சசிதரூரின் மடியில் அமர்ந்திருக்கும் சிறுவன் அனந்த பத்மநாபனுக்கு அவரது விரலால் ஓம் ஹரி ஸ்ரீ என்பதை எழுத வைப்பதுபோல் காட்சி உள்ளது.

    • கல்வி, கலைகள் என எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது ஐதீகம்.
    • என்னும் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி ஆண்டுதோறும் அய்யப்பன் கோவில்களில் நடைபெறும்.

    திருப்பூர் :

    நவராத்திரி விழா கடந்த வாரம் தொடங்கியது. இதையட்டி பொதுமக்கள் கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு நடத்தி வந்தனர். இந்நிலையில் நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமி இன்று கொண்டாடப்பட்டது. இந்த நாளில் கல்வி, கலைகள் என எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது ஐதீகம். இதனால் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், பாட்டு, இசைக்கருவிகள், நடனம் ஆகிய பயிற்சிகள், பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்குவது வழக்கம். இதற்காக குழந்தைகளுக்கு வித்யாரம்பம் என்னும் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி ஆண்டுதோறும் அய்யப்பன் கோவில்களில் நடைபெறும். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இந்த நிகழ்ச்சி நடந்தது. காலை எழுந்து நீராடி சாமி தரிசனம் செய்து விட்டு பலரும் தங்களது குழந்தைகளுக்கு எழுத்து அறிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அய்யப்பன் கோவில்களுக்கு சென்றனர்.

    திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் 9வது ஆண்டு எழுத்து அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை முதலே பெற்றோர்கள் பலரும் தங்களது குழந்தைகளுடன் வந்தனர். குழந்தைகளுக்கு அர்ச்சகர்கள் தங்க வேலால் நாக்கில் எழுதினர். அதுபோல் அரிசியிலும் எழுத வைத்து எழுத்து அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் சிலேட்டுகளிலும் குழந்தைகள் எழுதினர். தொடர்ந்து 9வது ஆண்டாக 1500க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வித்யாரம்பம் செய்து குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்கள், பென்சில், ரப்பர் உள்ளிட்ட 11 பொருட்கள் கொண்ட கல்வி உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டது. இதனால் அய்யப்பன் கோவிலில் கூட்டம் அலைமோதியது. அதே போன்று திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவில், ஈஸ்வன் கோவில், வாலிப்பளையம் முருகன் கோவல், மற்றும் கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் குவிந்தனர்.

    • விழாவின் முதல் நாளான நாளை காத்தாயி அம்மன் ராஜமாதா அலங்காரத்தில் காட்சியளிக்கிறார்.
    • குரு ஓரையில் தங்கள் ஆசிரியர் தலைமையில் வித்யா ஆரம்பம் இசை, நடனம் பயிற்சி தொடங்க உத்தமம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த கோவிலூர் நெல்லித்தோப்பில் காத்தாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவில் பலரின் குல தெய்வமாக விளங்குகிறது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி நவநவமான பூஜா கலாபக் கலை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 16-ம் ஆண்டு நவராத்திரி விழா நாளை (திங்கள்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவை தஞ்சாவூர் பரதநாட்டிய கலைஞர்கள் சங்கம் தலைவி அருணா–சுப்பிரமணியம், புன்னை–நல்லூர் முத்துப்ப–ல்லக்கு விழாக்குழு துணை தலைவர் முருகு.வீரமணி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கின்றனர்.

    விழாவின் முதல் நாளான நாளை காத்தாயி அம்மன் ராஜமாதா அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். காலை 6.45 மணிக்கு அம்மனுக்கு மங்களாபிஷேகம் செய்யப்ப–டுகிறது. பின்னர் சந்தி பூைஜ, தீபாராதனை காண்பி–க்கபடுகிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    மதியம் 11 மணிக்கு சோடஷ உபசாரம், ஸ்வஸ்தி, உச்சிகால பூஜை, தீபாராதனை, பிரசாதம், மாலை 4.15 மணிக்கு விசேஷ அலங்காரம், மாலை சந்திபூஜை, தீபாராதனை, 5.15 மணிக்கு கலை விழா பூர்வாங்க பூஜைகள், மங்கல இசை நடைபெறும்.

    முதல் நாள் கொலு தர்பார் காட்சி நடைபெறும். மாலை 6 மணிக்கு தஞ்சை சிவரஞ்சனி நாட்டிய படன சாலை மாணவ-மாணவிகள் வழங்கும் மங்கள நாட்டிய நிகழ்ச்சி நடைபெறும்.

    27-ந் தேதி காத்தாயி அம்மனுக்கு ஸ்ரீபுவனேஷ்வரி அலங்காரம் செய்யப்படுகிறது. காலை 6.45 மணி முதல் மாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகளும், கொலு தர்பார் காட்சியும் நடைபெறும். மாலை 7.30 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும்.

    28-ந் தேதி அம்மன் ஸ்ரீமாகாதேவி அலங்கா–ரத்தில் காட்சியளிப்பார். மாலை 6 மணிக்கு இசை வாத்திய நிகழ்ச்சியும், நாட்டிய நிகழ்ச்சியும் நடக்கும்.

    29-ந் தேதி காத்தாயி அம்மனுக்கு ஸ்ரீகஜலட்சுமி அலங்காரம் செய்யப்படுகிறது. மாலை 6 மணிக்கு நாத இசை சங்கமும், 7.30 மணிக்கு மாணவ-மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறும்.

    30-ந் தேதி காத்தாயி அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் செய்யப்படுகிறது. மாலை 6 மணிக்கு இசை நிகழ்ச்சியும், 7.30 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    1-ந் தேதி வீரலட்சுமி அலங்காரத்தில் காத்தாயி அம்மன் காட்சியளிக்க உள்ளார். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு பரதநாட்டியம் நடைபெறும்.

    2-ந் தேதி காத்தாயி அம்மன் ஸ்ரீமூகாம்பிகை அலங்காரத்தில் காட்சியளி–ப்பார். மாலை 6 மணிக்கு வீணை கச்சேரியும், 7.30 மணிக்கு பரதநாட்டியமும் நடைபெறும்.

    3-ந் தேதி காத்தாயி அம்மனுக்கு ஸ்ரீசாவித்ரி அலங்காரம் செய்யப்ப–டுகிறது. மாலை 6 மணிக்கு நாதஸ்வரம், 7.30 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறும்.

    4-ந் தேதி காத்தாயி அம்மனுக்கு ஸ்ரீசரஸ்வதி அலங்காரம் செய்யப்ப–டுகிறது மாலை 7.30 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி நடைபெறும்.

    5-ந் தேதி ஸ்ரீபரமேஸ்வரி அலங்காரத்தில் காத்தாயி அம்மன் காட்சியளிப்பார். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மங்கள இசை நிகழ்ச்சி நடைபெறும்.

    விழா நாட்களில் தினமும் காலை 6.45 மணிக்கு அம்மனுக்கு மங்களாபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் சந்தி பூைஜ, தீபாராதனை காண்பிக்கபடுகிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    மதியம் 11 மணிக்கு சோடஷ உபசாரம், ஸ்வஸ்தி, உச்சிகால பூஜை, தீபாராதனை, பிரசாதம், மாலை 4.15 மணிக்கு விசேஷ அலங்காரம், மாலை சந்திபூஜை, தீபாராதனை, 5.15 மணிக்கு கலை விழா பூர்வாங்க பூஜைகள், மங்கல இசை நடைபெறும். கொலு தர்பார் காட்சி நடைபெறும்.

    மேலும் நாளை முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நவராத்திரி கொலு தர்பார் மண்டபத்தில் அம்பிகையின் முன்னிலையில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், ஆர்மோனியம், புல்லாங்குழல், மிருதங்கம், தபேலா, கடம், கஞ்சிரா முகர்சிங், நாதஸ்வரதம், தவில், கிளாரிநெட், கிடார், கீ போர்டு, பியானோ போன்ற கலைகளை சமர்பிக்கலாம். அரங்கேற்றமும் செய்விக்கலாம்.

    10-வது நாள் விஜயதசமி அன்று வித்யாப்பியாசம் தொடங்கலாம். அன்று காலை 9 மணிக்கு மேல் குரு ஓரையில் தங்கள் ஆசிரியர் தலைமையில் வித்யா ஆரம்பம்- இசை, நடனம் பயிற்சி தொடங்க உத்தமம்.

    முன்னதாக இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை சங்கல்பம், புண்யாகவசனம், பஞ்சகவ்ய சுத்தி, பஞ்ச பாலிகா, நெல், எள், கடுகு, பயிறு, உளுந்து, முளைப்பாரி ஈடுதல் நடைபெற்றது. கொலு மண்டபம் அமைக்கப்பட்டது.

    மேலும் விவரங்களுக்கு காத்தாயி அடிமையும் அறங்கா–வலருமான ப.சுவாமிநாதன் முனையதிரியரை 9944889026 என்ற எண்ணில் பக்தர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×